கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
வணக்கப்பாடலும் மாவீரர் வணக்கமும் எம் தலைவரின் சிந்தனையும் திருவள்ளுவர் ஆண்டும் மாதமும் திகதியும் நேரமும் கூடவே பண்பலை வானலையில் .. என்ன வேலை இருப்பினும் வானொலி அருகிருக்கும் மறவர் வீரம் பாடி அரசியல் அலசும் தாமரை தட்டாகம் பின்னர் ஒரு குறு நாடகம் ஒலிவடிவில் .. உண்மை வந்திடும் என்னும் பயத்தில் தேடி வந்து தாக்குவார் சிங்களம் கோபுரத்தில் சேதம் வரும் ஆனாலும் கொள்கையில் சிறிதும் வராது ... செய்திகள் இனிதே வரும் வெற்றிகள் சொல்லி எப்படி முடியும் என்பார் அதிர்ச்சியில் பலர் கோபுரம் சாய்ந்ததால் என்ன பற்றி எரிந்தால் என்ன பனையிலும் பாலை மரத்திலும் அண்டனா இருக்கும் .. தவபாலன் குரல் வருமா இனி எமக்கு புதுவையின் கவி வருமா வீரரை போற்றி அண்ணனின் உரைவருமா மாவீர…
-
- 10 replies
- 797 views
-
-
முள்ளிவாய்க்கால் முழங்கிய போது மெளனித்துக் கிடந்தாரே... முத்துக்குமார்கள் தீப் பிடித்து எரிந்த போதும் சும்மா கிடந்தாரே.. பூமிப்பந்தில் புனிதராம் மனித உரிமை காப்பவராம்.. வெள்ளாடு வேடம் போட்டு சமாதானம் பேசியே கழுத்தறுக்க அலையும் அந்தக் குள்ள நரிகள் அவர் தம் கொட்டம் அடக்க வெடித்தேன். வன்னி மக்களை சொந்த உறவுகளை விடுதலை.. எரிமலை என்று உசுப்பேத்தி.. போர்க்களம் ஏவிவிட்டு அவர் தம் கதை முடித்து தாம் அசைலம் அடித்து.. இன்று... எதிரி வானில் அவன் விமானத்தில் உல்லாசம் போக நினைத்த ஈனத்தமிழர்களின் ஈவிரக்கமற்ற செயல் கண்டு நெஞ்சு குமுறி வெடித்தேன்.. போட்ட ரிக்கட்டுகளுக்கு பொக்கட் காசு கூட கிடைக்கக் கூடாதென்றே. பூமி …
-
- 4 replies
- 1.1k views
-
-
பூக்கள்...! ------------- பூக்கள் மலர்கிறது கார்த்திகைப் பூக்கள் மலர்கிறது! காவிய நாயரைப் போற்றிட மலர்கிறது மானிட மனங்கள் மலர்ந்திடுமா தமிழ் மானிட மனங்கள் மலர்ந்திடுமா மறவரைத் தொழிதிடவே வல்லமை சூழுமன்றோ வானில் உயர்ந்திடுமே எம் தேசியக்கொடியது வானில் உயர்ந்திடுமே!
-
- 11 replies
- 5k views
-
-
கலோ புத்தா.. கவ் ஆர் யூ கலோ அல்கா கவ் ஆர் யூ.. புட்டும் தேங்காய்வும் புழுத்து மணக்குது புத்தனும் அல்காவும் குத்துப்படுவமே... பார்வைக்குத் தான் இது வெளிக் குத்து உள்ள இருக்கு நல்ல உள் குத்து..!! முள்ளிவாய்க்கால் இரத்த சகதியில் பால்சோறு பொங்கினம்.. ஐநா சபையேறி புத்தனின் கோரப் பற்களை கழுவியும் விட்டம்.. பாகிஸ்தான் வரை பறந்து மல்டி பரலும் டபக்கென்று அனுப்பச் சொன்னம்.. நாடு முழுதும் காட்டிக் கொடுப்பில் காலமும் கழித்தம்.. கூட்டு அழிப்பில் கூலிப் படைகளை தந்தும் வந்தம்.. ஊர்காவல்..ஜிகாத் என்று கூடவும் அலைஞ்சம்.. …
-
- 0 replies
- 943 views
-
-
மறக்க முடியுமா....??? வடு தந்த வரலாறு மறக்க முடியுமா...?? எங்கள் வாழ்வழித்த பகையதுவை மறக்க முடியுமா....??? கண்ணீரிலே கரைந்த வாழ்வை மறக்க முடியுமா....?? அந்த கனத்த நெஞ்ச சோகமதை இறக்க முடியுமா...?? உடனிருந்த உயிர் உறவு கொடுக்க முடியுமா...?? அந்த ஊன பகை செய்த செயல் மறக்க முடியுமா....??? காலம் கடந்து போனால் என்ன கழிக்க முடியுமா...?? அந்த கயவர் செய்த கோரமதை மறக்க முடியுமா....?? நவற்குழி படு கொலைகள் மறக்க முடியுமா...?? அந்த நாடு புரா செய்த கொலை மறைக்க முடியுமா...?? டாங்கி ஏற்றி செய்த கொலை மறக்க முடியுமா...?? அதில் நசுங்கி செத்த மக்களைதான் மறக்க முடியுமா...?? கற்ப்பழித்து கொலை ச…
-
- 3 replies
- 1.1k views
-
-
மாவீரர் நாள் கவிதைகள்!!! (புதுவை இரத்தினதுரை) மாரிமழை பொழியும். மண்கசியும் ஊர்முழுதும் வாரியடித்து வெள்ளம் வான்பாயும் கார்த்திகையில் பூமி சிலிர்த்துப்போய் பேறடையும். துயிலுமில்லச் சாமிகளுக்கான சந்தனநாள் வந்தடையும். மாவீரச்செல்வங்கள் மண்கிழித்து வெளிவந்து சாவீரச்செய்தி சாற்றி உறவுரைத்து பேசும் நாள். விழியில் பொலபொலன்று நீர்த்தாரை வீசும் நாள். தமிழீழம் விடியும் என நம்பி பாடும் நாள். விதைத்த பயிர்கள் நிமிர்ந்தழகாய் கூடும் நாள். தமிழர் குலம் குதிக்கும் நாளிதுதான். குன்றிக் குரல் நடுங்கி குற்றேவல் செய்த இனம் இன்றிந்த நிமிர்வுக்கு இட்ட முதல் விதைப்பு. …
-
- 4 replies
- 14.4k views
-
-
பல்லவி உயிராய் என்னை வளர்த்தவள் நீ கருவில் என்னை சுமந்தவள் நீ நீ தந்த உயிரில் பாடுகின்றேன் -உன் கனவுகள் சுமந்தே வாழுகின்றேன் பூமிக்கு என்னை அறிமுகம் செய்தாய் பூவாய்த் தானனே எனை வளர்த்தாய் அம்மா...அம்மா...அம்மா...அம்மா... இடையிசை ராப் பாடல் குரல்: சையின் சுதாஸ் (நோர்வே) சரணம் 1 கடவுளை கண்முன் பார்த்தது இல்லை உன் வடிவில் நான் பார்த்தேன் உண்மையை நேராய் உணர்ந்தது இல்லை உன் விழியில் நான் பார்த்தேன் உயிராய் ஒளியாய் இருப்பவள் நீ சுமைகளை இமைகளில் சுமப்பவள் நீ ஆயிரம் உறவின் வாசல் நீ அன்புக்கு இணையாய் எதைக் கொடுப்பேன் நிலவா நினைவா நீ கை காட்டும் திசைதான் உயிரா உணர்வா நீ பண்பாடும் இசைதான் உயிராய் என்னை வளர்த்தவள் நீ …
-
- 4 replies
- 1.4k views
-
-
மின்னலிடை தேடி பெண்களிடை நாடி பொருத்தமதின்றி பொறுமையிழந்தேன்..! (எதிர்பார்த்து.. சந்தித்த..முதலாவது பெருத்த ஏமாற்றம்) பிறை நுதல் தேடி வீதி வழி ஓடி கண்டதில்லை வானத்து மூன்றாம் பிறை..! (கிரமமான இயற்கை நிகழ்வைக் கூட ரசிக்க நேரமில்லாத தேடலின் தொடர்ச்சி) காந்தளது தேடி கரங்களது நாடி களைத்தேன் ஓவியமாய் காணும் வரை..! ( காந்தளைக் (அழகான மலர். அருகிய மலர்) காண வேண்டும் என்ற ஆசை.. ஓவியத்தில் நிறைவடைகிறது) கொவ்வையிதழ் தேடி கோதையிதழ் நாடி கேவலம் கண்டேன் மைப் பூச்சு..! (கொவ்வை தெரியும்.. கொவ்வை இதழ்.. தெரியாமல்.. தேடல் செய்து ஏமாற்றமடைதல்.. போலியை செயற்கையைக் கொண்டு.. மெரு கூட்டிய பெண்கள் வாழும் உலகு என்பது அர்த்தப்படுகிறது..!) பருவமும் …
-
- 37 replies
- 5k views
-
-
தூவனம் தூவத் தூவ மழைத்துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிர் கரைவதை நானே கண்டேன் கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் குயில் என மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புழுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் யார் தீங்கு செய்தாலும் மன்னிக்கத் தோன்றும் நீ தந்த என் மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே . இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை முகம் பார்க்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரீங…
-
- 1 reply
- 1.3k views
-
-
நீ வீசும் காற்றுக்காய் காதலால் துளைக்கப்பட்ட குழலே என் இதயம் * நீ எனக்குக் கொடுத்த தண்டனை எது தெரியுமா..? கடலில் வாழ்ந்த என்னைக் காப்பாற்றுகிறேன் என தொட்டிக்குள் கொண்டு வந்ததுதான் * நீ என்னில் முளைத்ததும் நான் உன்னில் முளைக்காமல் போனதிலும் தெரிந்து கொண்டது ஒரே விதையென்றாலும் வேர்விட எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை என்பதுதான் * உன்னால் புகைக்கப்பட்ட சிகரட் நான் என்றாலும் உனக்கு முன்னே இறந்துபோன பாக்கியசாலி நான் * என் வாழ்க்கை எனும் பேருந்தில் இறங்கிப் போன மறக்க முடியாத சாரதி நீ -யாழ்_அகத்தியன்
-
- 9 replies
- 1.8k views
-
-
-
[size=3] ஒரு அலாதியான அனுபவம்[/size] [size=3] பிம்பங்கள் அனைத்தும் மங்கலாக[/size][size=3] ஏதோ ஏதோ உருவ அசைபாடுகள்[/size][size=3] செவிப்பறைகளில் மட்டும்[/size][size=3] ஓயாத சப்தம்[/size] [size=3] கண்ணு கோளாறா[/size][size=3] காது கோளாறா[/size][size=3] ஆஸ்பத்ரிக்கு அழைத்து போக வேண்டும்[/size][size=3] அந்த வார்த்தைகள் மட்டும்[/size] [size=3] நீண்ட சப்தத்தின் இடையில்[/size][size=3] வெள்ளம் என பாய்ந்தது[/size][size=3] ஒரு பெரு மூச்சு[/size][size=3] தங்கு தடையில்லாமல் வருகிறது[/size] [size=3] கைகளையும் கால்களையும்[/size][size=3] ஒழுங்கு படுத்திக் கொண்டு[/size][size=3] இருப்போம் என்று இருக்கையில்[/size][size=3] படுக்கையின் விளிம்பில்[/siz…
-
- 1 reply
- 701 views
-
-
-
பெண்ணே உனக்கே உனக்காய் அடங்கி அடங்கி ஆண்டாண்டு காலமாய் அடுப்பங்கரையே உன் உலகமென்று முடங்கிக் கிடந்தது போதும். புதுமைகள் அறிந்து பழமைகள் களைந்து பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் சாதனை படைக்க - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா நதியென்றும் மலரென்றும் நிலவென்றும் அமுதென்றும் போகம் தரும் காதற் பொருளாய் கவிஞர் உன்னைக் கண்டது போதும் சரித்திரம் படைக்கும் புயலாய் அறியாமை களையும் தீயாய் அகிலம் உனைக்காண அடங்காத வேகத்துடன் - பெண்ணே துணிந்து நீயும் எழுந்து வா பின் தூங்கி முன்னெழுந்து தலை கோதி அடி வருடி அருகிருந்து தூங்க வைத்து தேவைகள் அறிந்து சேவைகள் செய்யும் துணைவியாய் மட்டும் நீ வாழ்ந்தது போதும் அடக்கு முறைகளை உடைத்து எறிந்து…
-
- 13 replies
- 9.1k views
-
-
இரசியப் புரட்சியை காளியின் கடைக்கண் பார்வை எனவும் யுகப் புரட்சி எனவும் போற்றிப் பாடியதால் புரட்சிக் கவிஞன் ஆனவன் ஒவ்வொரு கவிக்கும் இசையோடு தாளமும் கொடுத்து ஓசையோடு நயம் கொடுத்து எழுதி வைத்ததால் இசைக் கவிஞன் ஆனவன் பெண்ணடிமையை எதிர்த்ததால் பாஞ்சாலி சபதத்தில் மனுதர்ம சாஸ்த்திரத்தை திரிபு படுத்திய சாஸ்த்திரம் என்றதால் புதுமைக் கவிஞன் ஆனவன் கோகுலத்துக் கண்ணனைத் தன் காம வேட்கை தீர்க்கும் காதலனாக்கிப் பாடியதால் தன்னினச் சேர்க்கைக் கவிஞன் ஆனவன் இன்னும் குழந்தையாக்கிப் பார்த்ததனால் paedophile கவிஞன் ஆனவன் தமிழர் ஆண்ட மண்ணை மறவர் வீரம் படைத்த நிலத்தை சிங்களத் தீவென்றழைது அறியாமையை வெளிப்படுத்தியதால் அறிவிலியான கவிஞன் ஆனவன். …
-
- 13 replies
- 1.9k views
-
-
இளமையை தொலைத்த தலைமுறை இளமையை புதைத்துவிட்டு விடுதலைகையில் ஏந்திஉலகை உலுப்பியவர்கள்எம் இளையேர். தொலைக்காட்சி பெட்டியிலே கிரிகட்டைப் பார்துவிட்டு மைதான்ம் போய்நின்று பந்தடிக்க இவனுக்குஎங்கே நேரம். தாயைப் பார்பானோ தங்கயை நினைப்பானோ நம் ஊரின் அலறல்களை உடல் பிளந்த உறவுகளை தொலைக்காட்சி பெட்டியிலேதினம் பார்தவன் துடுப்பாடப் போவானோ துயர் துடைக்கப் போவானோ அடிவாங்கி இடிவாங்கி தமிழன் சாகும் நாளில் ஆடு களம் ஒன்றில் மட்டும் ஆட்டமிளக்காமல்ஆடவேண்டும் அது அரசியல்க் களம் - பொன் பாலராஜன் -
-
- 1 reply
- 783 views
-
-
-
பூங்குயில்களே-உங்கள் முகாரியைக்கொஞ்சம் முடக்கிப்போடுங்கள் காற்றில்கலந்த கந்தகநெடியிலே -என் வெற்றிச்சேதியை விட்டுச்செல்கிறேன் அப்போதுபாடுங்கள்-புதிய பூபாள ராகங்கள். எனை வளர்த்தபாசறையில் நான்வளர்த்த பூஞ்செடியே நாளைய சேதிகேட்டு புதிதாய் மொட்டுவிடுவாயா-இலயேல் உயிர்பட்டு விடுவாயா? நாணல்களே....ஏன்.. கோணல்களானீர்கள் பனித்துளி என்ன உங்களுக்குப்பெருஞ்சுமையோ தலைநிமிர்ந்துநில்லுங்கள் ஆதவனின் அனல்க்கரங்கள் அள்ளிச்செல்கயிலே அறிவீர்கள் நீங்கள் சுமந்தது வைரக்கிரீடமெண்று. வீரதேசத்தின் விடுதலைக்காற்றே-என் மண்ணின் மணம்சுமந்து உயிர்க்கூண்டில் நிறைந்து …
-
- 10 replies
- 1.8k views
-
-
கனவுகள் கொல்லப்பட்ட குழந்தைகள் ------------------------------------------------------------------ அவர்கள் நித்திரை கொண்டு கொண்டிருந்த சிறு பிள்ளைகள் மீது டாங்கிகளையும் ஏவுகணைகளையும் ஏவிக் கொல்கின்றனர் இறக்கும் போது அக் குழந்தைகள் எதை கனவு கொண்டு இருந்திருக்கும்.. வெடிகுண்டு சத்தம் கேட்காத ஒரு இரவை அதுகள் கற்பனை செய்து கொண்டு தாயின் மடியில் தலை வைத்தும் அப்பாவின் மடியில் கால் நீட்டியும் படுப்பதாய் கனவு கொண்டிருக்கும் ஒரு சின்ன பொம்மையுடன் கட்டிப்பிடித்து நித்திரை கொண்டு இருந்திருக்கும் தங்கள் வளர்ப்பு நாயின் குட்டிகள் மழையில் நனைந்துடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்ந்திருக்கும் தெருவில் தொலை தூரத்தில் வரும் ஐஸ் கிறீம் காரனின் பாம் பாம் …
-
- 12 replies
- 1.3k views
-
-
வருக புத்தாண்டே... வரும் புத்தாண்டே வசந்தங்களோடு வாழ்த்துக்களையும் சுமந்துவரும்-உன் வரக்கரங்கள் தாய்மொழியை மறந்து தன்மானம் இழந்து வரலாற்றைத்தொலைத்து வளைந்து போன எம் மக்களின் கூன் விழுந்த முதுகுகளை நிமிர்த்திப்போடட்டும் சந்திகளில் நின்று சதிராட்டம் போடும் எங்கள் இளைஞர்களின் மூளைகளில் தன்மானச்சுடரெழுப்பும் தாய்நிலப்பற்றமைக்கும் அக்கினி விதைகளை அள்ளித்தூவி-அந்த உக்கிர வெம்மையிலே உன்கரங்கள் உலகைப்புடம்போடட்டும் கஞ்சிக்காய் கையேந்தும் ஏழைகளின் கரம்பற்றி அஞ்சக என்றழைத்து அவர்களுக்கோர் வழியமைத்து உன்கரங்கள் வஞ்சனையற்ற அவர் வயிறுகளில் சிறிதமிழ்தத்தை வார்த்துச்செல்லட்டும் உறவுக…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஓடுமீன் ஓடுமோ....... உறுமீன் வருமோ.......... வாடி நிற்குமாம் கொக்கு.......... வயிறு காய காய! கூரிய முள்ளு தொண்டை............... கிழித்தால் - கொக்கும் செத்துபோகும்! ஏர் கொண்டு உழுத நிலமல்ல......... எலும்புகூடுகளின்மேல் எழுகின்ற பூமி... அத்திவாரத்தின் கீழிருந்து..... அவசரமாய் நீர் அதிர்ந்தால்....... அழிந்து போவது........... யாருமல்ல- நாமேதான்!! (இது மட்டுறுத்தினர் - யாழ்பிரியாவுக்கு)
-
- 1 reply
- 968 views
-
-
-
செல்வண்ணை! உன் பெயரை உச்சரித்துவிட்டு கண் கலங்குவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. சிரிக்கும் புலி நீ சீறும் சினத்தை சின்னச் சிரிப்புக்குள் அடக்கிவைத்திருக்கும் பேராற்றல் உனக்கு. நெருப்பு வானத்தில் ஒரு குளிர் நிலவு நீ உனக்குள்ளும் நெருப்பாறுகள் ஆனாலும் அதை பக்குவப்படுத்தி பயன்படுத்தத் தெரிந்தவன். பத்திரிகைகளுக்கூடாகத்தான் உன்னோடு பழகியிருக்கிறேன். தீயாக தினேசாக சுழன்றடித்த சூறாவளியாய் உன்னோடு பழக்கமில்லையென்றாலும் உன் வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் பனிபூசிய அனல்கள் பறக்கக் காண்பேன். ஒரு தவறிப் பிறந்தவனின் காட்டிக்கொடுப்புக்கு தமிழன் இழந்து நிற்பது "ஒரு பிரிகேடியரை". எதிரியின் எத்தனை பிரிகேடியர்களை கொன்றொழி்த்தாலும் ஈடாகுமா உ…
-
- 4 replies
- 1.8k views
-
-
எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! சத்தியமே செத்துவிட்ட பார் இது பூவே...! நித்தமும் நீ தேடுவது என்ன இங்கு உத்தமர்கள் ஆயிரம் நாவளவில் பூவே..! உனக்கு இது புதியதன்றே வித்தகர்கள் பலர் வியந்திடும் பூவே...! குந்தகம் மனதிற்குள் குழிபறிக்க ஆசை எத்தனை மனிதர்கள் பூவே...! இன்றும் எம் அருகினிலே விந்தை அது விந்தை பூவே...! எந்தன் வாழ்க்கையது அவருடனே நன்றிகள் ஆயிரம் பூவே...! கபடம் மறந்த உன் வாசனை அழகிற்கே மனதில் ஒலிக்கும் கவியோசை பூவே...! உந்தன் வாசமுடன் கலந்து இங்கு எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! உனைப்போல் துன்பம் மறந்திருக்க எழுதுவது இதயநிலா.. "உள்ளங்களே உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்…
-
- 5 replies
- 1.3k views
-
-
இன்று இணையப்பக்கங்களில் மேய்ந்து கொண்டிருந்த பொழுது http://veyililmazai.blogspot.com என்கிற வலைப்பூவில் ஒரு கவிதையை படித்தேன் பிடித்திருந்தது. நமக்குத்தான் சொந்தமாய் எழுதவராதே அதனாலை நீங்களும் படித்துப்பார்க்க இங்கு இணைக்கிறேன்.நன்றிகள். தீக்குச்சி இரவுகள்... பௌர்ணமி இரவில் நிலவைத் தொலைத்திருந்தது வானம்... உலக வெப்பமயமாதலின் விளைவென்கிறார்கள், எங்கள் உயிர் குடித்தத் துப்பாக்கிகளின் முனையிலிருந்து எழுந்தப் புகைமூட்டத்தில் கருகிவிட்டதென்பதை அறியாமல்... நாளை மாந்தோப்பில் சந்திக்கலாமென்று கையசைத்துச் சிறகுமுத்தம் கொடுத்தனுப்பிச் சென்ற காதலி, சீர்கெட்டச் சீருடைக்காரர்களின் குதம்து…
-
- 2 replies
- 1k views
-