கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
அழகா அழகா வான் மதிதான் அழகா பூமியில் பெண்மதி அவள்தான் அழகா வானத்து விண்மீன்கள் ஒளிதான் அழகா மங்கை அவள் கண் சிமிட்டல்தான் அழகா மேகத்தில் தோன்றுகின்ற வானவில்தான் அழகா மங்கை அவள் தாவணியின் வர்னங்கள்தான் அழகா கீழ்வானம் சிவக்கின்ற சூரியன் தான் அழகா வெக்கத்தால் சிவக்கின்ற அவள் கன்னங்கள்தான் அழகா பூமியை நனைக்கின்ற மழைத்துளிகள்தான் அழகா க்ண்களைக் கழுவும் அவள் குறும்பு அழுகைதான் அழகா கூவுகின்ற குயிலின் குரல்தான் அழகா அவள் பேசுகின்ற தமிழ்தான் அழகா
-
- 20 replies
- 3k views
-
-
லண்டனுக்குள் என் வீடு... என் வீட்டுக்கு முன்பாக...ஒரு பேரூந்து தரிப்பிடம்.. நான் வேலைக்கு செல்லும் நேரங்களில்.. அந்த சோதரி.. அங்கே.. பேரூந்துக்காக காத்திருப்பாள்.. ஒழுக்கமான.. உடை.. நீறிட்ட நெற்றி.. மண்வாசனையோடிருப்பாள்... ஒரு காத்திருப்பின் போது சில காலிப்பையன்கள்.. சுற்றிக் கலாட்டா.. கலங்கிக்கொண்டிருந்தாள்.. நானும்..என் நண்பனும்..அவர்களை... விரட்டியதும்.. நன்றி அண்ணாவென்றாள்.. தினசரி சிரிப்பாள்.. வணக்கம் சொல்லுவாள்... காலம் போய்க்கொண்டிருந்தது.. ஆடை மாறிக்கொண்டிருந்தது.. அலங்காரம் கூடிக்கொண்டிருந்தது... நவநாகரீக நங்கையானாள்.. ஒருபோது..வைபத்தில்.. மது அருந்திக்கொண்டிருந்தாள்.... அருவருப்பையும்... முகம் சுளிப்பையும்.…
-
- 125 replies
- 13.7k views
-
-
''வந்தேறு குடியா தமிழன்....???'' கலங்குது கலங்குது என் மண்டை கலங்குது..... ஆய்வுகள் வரலாறு ஆயவே கலங்குது... எம் தமிழ் வரலாறு அறியவே துடிக்குது.... ஜயோ படிக்கையில் என் மண்டை குளம்புது.... திராவிட மக்களே எம் தமிழ் என்குது.... திறம்பட்ட வீரர் என்றவரை சொல்லுது.... கண்டி. களனி அனுராதபுரம் வரை ஆண்டதாய் சொல்லுது..... வன்னியில் இருந்து எம் படை போயே கண்டியை காத்ததாய் கதைகளும் சொல்லுது..... எம் தமிழ் ஆட்சியை உயர்வதாய் செப்புது.... இலங்கையின் அரசனே இராவணண் என்கிது.... குறு மன்னர் ஆட்சியை குலவியே சொல்லுது.... அவர் நேர்மை திறனை நெகிழ்ந்தே சொல்…
-
- 7 replies
- 1.6k views
-
-
கதிரவன் கதிர்களைத் தூரிகையாக்கி வானில் வண்ணம் தீட்டுகிறான் சித்திரமாய் வானம் சிவப்பின்றி வசந்த காலத்தை விரட்டியபடி சோர்வுடன் சொல்லிழந்து நிற்கின்றது புள்ளினங்கள் கூடப் புதர்களில் மறந்துவிட புரிந்துகொள்ள முடியாக் கோடுகள் பார்க்குமிடமெங்கும் பரவிக்கிடக்கிறது பகட்டாய்க் கிளை பரப்பி நின்ற பாதையோரத்து மரங்கள் கூடச் பச்சை தொலைத்த இலைகளுடன் செருக்கிழந்து நிற்கின்றன பாதை நிறைத்துக் கிடக்கும் பழுத்துப் பழுப்பான இலைகள் பரிதவித்து நிலை மறந்து பக்கம் பக்கம் கிடக்கின்றன குளிர் கலந்து வீசும் காற்று என் குதூகலம் கொஞ்சம் கலைத்து கூதல் கொள்ளும் உடலசைத்து குளிர் உதற முனைகிறது கண்மூடி ஒருகணம் காலக் கணக்கை வியந்தபடி கனக்கும் மனம் சுமந்து கால்வீசி நடக்கின்றேன்
-
- 11 replies
- 1.4k views
-
-
வான் வெளியில் வண்ண நிலா பொட்டு வைத்த வட்ட நிலா சேயைத்தாலாட்டும் தங்கத்தாய் அவளா கார் இருளில் விண் தாரகையா கண் சிமிட்டும் பெண் காரிகையா காதலன் விழிகளில் காதல் பைங்கிளியா வான வில்லின் வர்ண ஜாலங்களா கண்களில் அவள் காமா பாணங்களா மேகத்தில் தீட்டிய மேனகைதான் அவளா பொறுமையில் அவள் பெண் பெட்டகமா உயிர் கொடுத்த உன்னத சித்திரமா சுமைதாங்கும்-அந்த தூண்கள் அவள்தானா கவிதைகளில் அவள் காதல்க் கற்பனையா இனிக்கின்ற தமிழ் தேன் சுவை உச்சமமா பேசும் மொழிகளின் தாயும் அவள்தானா அவள் என்கின்ற தலைப்பில் முத்தமிழ்மன்றத்துக்காக புனைந்த கவி இது
-
- 25 replies
- 3.5k views
-
-
அலங்காரக் கந்தனே ! அஞ்சற்க, என்று அறிவித்த பொருளே!! அஞ்சுக அருகில் வந்திருப்பது பேய்களென்பதை அறிக!! வங்காளப் பேய்களுடன் கூடிநின்ற "பெருமாளின்" பின்னவர்கள் , மஞ்சள் துண்டுக்கே கழுத்தறுக்கும் கும்பல்கள் விடுதலை கேட்டு வயிறு வளர்க்கும் முகமூடிகள் ஜனநாயகத்தின் விபச்சாரிகள் எல்லாமே இப்போது உன்னருகில் வந்துள்ளன. குப்பையள்ளும் பதவி பெற்று குப்பையெல்லாம் உன் தெருவில். எப்படி முருகா நிம்மதியாய் உறங்குகின்றாய்? உன் கழுத்தில் உள்ளவற்றில் தங்கத்தை அகற்றிவிடு. இல்லையென்றால் ... உன் கழுத்தும் களவாடப்படலாம். வேலெடுத்த வேலவனே ! வேலை விட்டெறி - உன் பன்னிரு கரங்களில் ஒன்றால் "ஆட்லெறியை" கையிலெடு!! பதினொரு க…
-
- 6 replies
- 1.5k views
-
-
காட்டை அளித்து வீட்டை கட்டியவன் காரும் சோறும் கடையில் தின்றவன் மூட்டை கட்டி முதலீடு செய்தவன் நாட்டை காக்க மறந்துவிட்டான்...... சொகுசும் பவுசும் போதுமென்று சொக்காய் போட்டு திரிந்தவன் பரம்பரை வழக்கத்தை மாற்றவே பவுடர் பூசி வாழ்கிறான்.... கோடி கோடி சேர்க்கவே குற்றம் நிறைய செய்கிறான் கணினி யுகம் மாறியும் கடமை மறந்து வாழ்கிறான் சுமைகள் கோடி இருந்துமே சுகமாய் வாழ தெரியாமல் பகைமை கொண்ட நோக்கிலே பார் உலகை மறந்துமே வேறுலகில் சென்றுமே வேண்டிய வசதி பெற்றுமே நாசம் கொண்ட ஆசையால் நாடும் வீடும் மறந்துமே நன்மையெல்லா தொலைத்துமே பாதி உயிர் போகவே மீதி உயிர் மண்ணிலே சேரும்போது சொர்க்கமே... இனியாவது திருந்திட இமயம் வென்று காட்டடா! ஹிஷாலீ http://w…
-
- 0 replies
- 762 views
-
-
-
புரட்சி -----------இனி ஆயிரம் கவிஞர்கள் தோன்றினாலும் ...ஆயிரம் ஆயிரம் கவிதைகள் பிறந்தாலும் ....ஓராயிரம் பாராட்டுகள் கிடைத்தாலும் .....பல்லாயிரம் ரசிகர்கள் வந்தாலும் ........................................................................அத்தனை அத்தனை புகழ் வந்தாலும்..... ................................................................அஃது ஒன்றும் பயனே இல்லை...... ................................................................உலக விடுதலைக்காய் போராடிய......................................................................எழுச்சிமிகு புரட்சி கவிஞர்களின் ......................................................................தீப்பொறி பறக்கும் வரிகளுக்கு முன் ...................…
-
- 2 replies
- 992 views
-
-
மரண வீடு எல்லா செத்த வீடுகளிலும் என் மனம் என் சாவுக்காக அழுகின்றது, தான் செத்த பின் தனக்காக அழ முடியாத் துயரம் அதுக்கு, பாவம். வளர்த்தப்பட்ட உடலில் தன் உடலை ஒட்டி அழும் மனிதர்களில் தன் மனிதர்களை ஒட்டி வேவு பார்க்கின்றது கள்ள மனசு ஒவ்வொரு சாவு வீடும் தனக்கான ஒரு ஒத்திகை பார்க்கும் இடம் என்று சொல்லுது மனம் எல்லாச் சாவுகளின் செய்திகளின் போதும் எல்லா மரணம் பற்றிய தகவல்களின் போதும் விக்கித்து தன் சாவை நினைத்து ஒரு கணம் தடுமாறுகின்றது எல்லா வீதி விபத்துகளும் என்னை அச்சுறுத்துவன போன்றுதான் எல்லாச் சாவுகளும் என்னை அச்சுறுத்துகின்றன செத்தவருக்காக அழும் கண்ணீர் துளிகளில் பல எனக்காக அழுவன என கண்க…
-
- 21 replies
- 21k views
-
-
வெற்றியின் சரித்திரம் முழங்குது பார் தேன் சுவை ஊறும் செந்தமிழ் ஈழம் வான் புகழ் கொண்டு வளருது பார் எழிலது பொங்கிடும் எம்முயிர்த் தமிழால் எங்கணும் மங்களம் பொங்குது பார் ஈழமண் மீட்பில் எரிகின்ற தீபம் எட்டுத்திக்கும் சுடர் வீசுது பார் மங்களமாய் மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் மாண்புறு ஈழமண் மகிழுது பார் செங்களம் ஆடிடும் செங்குருதிப் புனல் எங்கள் உணர்வினில் தெறிக்குது பார் எத்தனை எத்தனை வேங்கைகள் மண்ணில் ஈகம் செய்த உயிர் எழுகுது பார் விதைகளாய் விழுந்த உயிர்களின் தாகம் விருட்சமாய் இங்கு வளருது பார் தேசத்தின் நேசம் நெஞ்சில் நிறுத்திய புhசத்தில் தமிழினம் பொங்குது பார் வடக்கிலும் கிழக்கிலும் வளமது பெருகி வறுமைகள் இன்றுடன் ஒழியுது பார் கனவுகள் மெய்…
-
- 3 replies
- 1.4k views
-
-
[size=5]தமிழன் என்று சொல்லித் தலை நிமிர்ந்தென்ன தரணி முழுவதும் பரந்திருந்தென்ன தனக்கென நாடு தரணியில் தமிழனுக்கு இல்லையே பரணி பாடிப் பகை முடித்தென்ன போர்க்களம் கண்டு பகை முடித்தென்ன பொட்டல் வெளிகூட எமக்கென இல்லையே அடிமை விலங்கை அறுத்திட எண்ணி அத்தனை வீரரும் ஆகுதியாயினர் சுற்றம் துறந்து சுகங்கள் துறந்து சூளுரைதே சூழ்பகை வெல்ல தேசம் காக்க தம்மை ஈந்தனர் எத்தனை எத்தனை ஆயிரம் வேங்கைகள் நித்தமும் தம்மை நெக்குருக்கியே நேசத்துடன் தம் தேசம் காத்திட நெருப்பாற்றில் நீச்சல் போட்டனர் தற்க்கொடையாளராய் தம்மை ஈந்து தரணியில் தமக்கெனத் தடம் பதித்திட கடற் புலிகளாய் கரும்புலிகளாய் காரிருளிலும் காவியம் படைத்தனர்[/size] [size=5]எத்தனை ஆண்…
-
- 13 replies
- 1.3k views
-
-
பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீரும் முன்னே இறக்க வைக்காதே பாவத்திற்கு கூலிதன்னை நிறுத்தி வைக்காதே இவனைப்போல் பாவிகளை இனியேனும் படைத்து வைக்காதே வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வர வேண்டாமோ வாய் நிறைந்த பொய்யனுக்கு மூலம் வர வேண்டாமோ கால் அழுகி கை அழுகி காடு செல்ல வேண்டாமோ காதகனைக் கண்டு மக்கள் காறித்துப்ப வேண்டாமோ கோடி வகை நோய் கொடய்யா சாகும் வரை அழ விடய்யா இப்பிறவி முடிவதற்குள் இவன் கணக்கை முடித்திடய்யா உச்சி மரக்கிளையில் நின்று உயிர் வேரை அறுத்தவன் இவன் பச்சை இளங்கொளுந்தைக்கிள்ளி பாழ் நெருப்பில் எறிந்தவன் இவன் பாவி இவனை மறுபடியும் பிறக்க வைக்காதே ! முகநூல்
-
- 4 replies
- 4.3k views
-
-
ஈழம் எங்கள் தாயகம் என்றும் வாழும் ஆலயம் வாழும் காலம் யாவும் எங்கள் உயிரைத் தந்தும் காத்திடுவோம் வீரர்கள் என்றும் சாவதில்லை சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை தோல்வியைக் கண்டு துவள்வதுமில்லை தமிழ் இனம் வெற்றியின் படியில் ஏறுகின்றோம் எங்களின் தியாக வித்துக்கள் நிட்சயம் ஒரு நாள் பயிராகும் எங்களின் கனவுகள் நனவாகும் ஈழத்தில் எங்கள் கொடி பறக்கும் தடைகள் கோடி என்றாலும் சிங்கள படைகள் தேடி வந்தாலும் விடைகள் எங்கள் தோள்களிலுண்டு விடியும் ஒரு நாள் வாருங்கள் நாளை மலரும் ஈழத்திலே சுதந்திர மலர்கள் மொட்டவிழும் இன்றைய எங்கள் போராட்டம் முடிவாய் இதற்கொரு பதில் சொல்லும். ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்..அதை நாம் தினம் பாப்போம்
-
- 3 replies
- 1.3k views
-
-
எழுக தமிழ்- பூவரசம் பூ! தீபச்செல்வன் குருதி நிணம் தீரா மண் பிணங்களும் எஞ்சாத தேசம் சிதைமேடுகள் மீதும்குருதி சிதலுறூம் காயம் இராணுவ சப்பாத்துக்களின் கீழ் எல்லாமும் ஆனாலும் எழுந்தது தேசம் அதனாலும் எழுந்தது தேசம் சிறகுடைத்து வீசப்பட்ட ஒரு பறவையின் சிறகசைப்பைப்போல கால்களற்றவரும் நடந்தனர் கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து தொண்டைக் குழிகளில் நெடுநாளுறைந்த பெருங்குரல் காட்டாற்றைப்போலப்…
-
- 1 reply
- 901 views
-
-
ஒரு கரும்புலியின் நினைவாக தினம் தீயில் நீ குளித்தாய் தியாகத்தின் பொருள் விளக்க புலியே நீ புகழ் வெறுத்தாய்..... இதயத்தில் நீ சுமந்த இலட்சிய நெருப்பதிலே உன்னுயிரை முடிந்து வைத்தாய் என்னொடியும் உன்னுயிரை உதறிவிட நீ துணிந்தாய்.... விழியுறக்கம் நீ மறந்து விளக்காகி ஒளிதந்து எங்கள் விடியலின் கிழக்காகி சூரியனை வலம் வந்தாய் பகை வாசலிலே போய்த்திரிந்தாய்....! உன் இலக்கு உன்னை எட்ட முன்னம் உயிர்ப்பூ வாடியுதிர உடற்கணுக்கள் துடிப்பிழந்து ஓ...எங்கள் உடன்பிறப்பே உறங்கி போனாயோ ? உன் முகமறியேன் உன் குரலும் கேட்டறியேன் அவன் வரமாட்டான் உன் கூட நின்றவன் உறுதிப்படுத்திய செய்தியது.....! விழி கண்ணீர் மாலையிட வீரனே....! விக்கித்து …
-
- 2 replies
- 536 views
-
-
என் ''சின்ரெல்லா'' சிறு தேவதையே...! கவிதை - இளங்கவி சோர்வு ...அரைத்தூக்கம்..... என் மனதில் பல கலக்கம்.... கண்ணிமைகள் தான் மூட கனிவான ஓர் குரல்.... மாமா....மாமா.. தூக்கமா? என் அரைத்தூக்கம் கலைந்து யாரது...? என பார்க்கிறேன்...! என் பக்கத்துவீட்டு குட்டிச்செல்லம்..? கையில் இரத்தக் கறைபடிந்த கரடிப் பொம்மையொன்று...? என்னடா செல்லம் ...? ஓடோடிச் சென்று அவளை அணைக்கிறேன்... ஆமி அடிச்ச செல்லில் என் அம்மா செத்திட்டா.... அப்பாவும் தான் மாமா...! நீங்கள் தந்த ''ரெடி பியர்'' ம் இரத்தத்தில் நனைஞ்சிட்டுது....! ''பெட் ரைம்'' கதைகள் சொல்லி என்னை படுக்கவைத்து ரசித்தீரிகள்.... ''சின்ரெல்லா'' கதையும் சொல்லி என்னை சிந்திக்கவும் வைத்தீர…
-
- 12 replies
- 2.5k views
-
-
Windows வழியே பார்வை Walls இன் மேலால் பேச்சு உன் கண்கள் எனும் Icons Double click இல் திறக்கும் என் மன file. Snail-mail எனும் கடிதம் Encryption பலவும் கொண்டு Firewalls சிலதைத் தாண்டி அடையும் என்னவள் Inbox இதயம் எனும் Hard-Drive இல் Hidden-File போல் அழியாமல் அப்பப்போ pop-up செய்யும் Dynamic web-Page முதற்காதல்
-
- 1 reply
- 534 views
-
-
மூடிய சிறையில் கவிதை - இளங்கவி....... குடிசைக்குள் ஓர் கூடல்..... கொஞ்சும் நிலவின் ஒளியின் கீழ் மனதால் கூடி நிற்கும் ஓர் காதல்...... அவன் அடிக்கும் செல் இங்கேயும் வரப்போது இந்த நேரத்தில் இது தேவையா.... உனக்கு இப்போ இப்படியொரு ஆசையா..... அவன் தொடுதலில் கிறங்கி அவள் உதடுகள் புலம்ப....... அவள் புலம்பலில் மயங்கி அவன் உணர்வெல்லாம் மழுங்க...... சில்லென்ற குளிர் தாங்கும் சுகமான தென்றல்...... இருள் வானின் நட்சத்திரம்...... ஒளிந்து பார்க்கும் பிறை நிலவு.... ஆட்காட்டிச் குருவியின் ஆள் காட்டும் ஒலியோசை..... ஊளையிடும் நரியோசை... வியர்வையில் ஒட்டிய மேலாடை.... அதை ஓரங்கட்டும் அவனின் இரு கைகள்..... களி மண் தரையிலே …
-
- 0 replies
- 529 views
-
-
உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? சந்தனம் கமழ, செந்தமிழ் குழைய மங்கலம் இழைய "வருக என் பொன்னாண்டே" என்று வரவேற்கும் இங்கிதம் தொலைந்து போன உள்ளம் உன் வரவில் குளித்தாடுமா வெல்லம்? வருக புத்தாண்டே. அழைத்தாலும், விட்டாலும் அகலக்தடம் விரித்து - எங்கள் வாழ்வின் வாசலில் வினையாற்றத் தொடங்கிவிட்டாய். அழைத்தென்ன? விட்டென்ன? அனுமதி கேட்டா வருகின்றாய்? வந்தது வந்துவிட்டாய் வலிய வந்த சீதேவியே! எங்கள் வாழ்வின் வாசலில் கோலமிடு. நேற்றுன் சோதரி வந்தெடுத்துப் போனாள். ஒப்பாரி ஓலங்களை மட்டுமே எங்களதாய் மிச்சப்படுத்தி, கண்மூடித் திறக்குமுன்னே களவாடிப் போய்விட்டாள். எங்களுக்கென்று பத்திரப்படுத்த, செல் விழுந்த சிதைவிடையே உயிர் காவி …
-
- 4 replies
- 1.1k views
-
-
இன்று உலகெலாம் காதலர் தினத்தை கொண்டாடுகிறது. உங்களில் பலர் காதலை உணர்ந்திருக்கக் கூடும். என்னுடன் சேர்ந்து கவிதையை அனுபவிப்பீர்கள் என நினைக்கிறேன். காதல் என்ற மூன்றெழுத்தை கண்டு சொன்ன கடவுள் யார்? மந்திர வித்தை கொண்டிந்த சொல்லை செய்த சிற்பி யார்? சீறும் புலியாய் இருந்தவர்கள் பெட்டிப்பாம்பாய் போன கதையென்ன ! கையால் எழுதா, காதால் கேளா வாயால் பேசா மொழி இதுவே இரு இதயம் மட்டும் பேசுகின்ற கடவுள் தந்த அன்பு மொழி ஒன்றை ஒன்று விட்டகலா ஈர் உயிர்கள் சேர்ந்து கட்டுகின்ற அன்பு என்னும் ஆலயத்தின் அர்ச்சனை மந்திரம் காதல் மொழி எத்தனை ஆண்டு, எத்தனை தூரம் எத்தனை ஜென்மம் பிரிந்திருந்தும் அத்தனை நாளும் என்னிதயம் உன்னை நினை…
-
- 9 replies
- 1.3k views
-
-
எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! காப்பினைத் தந்திடா... உலகமும் விழிக்கட்டும்! தூக்கிய பொருளினால் துயர் துடை! களங்களில் நின்று கலிகளை வெல்! வெல்! புதுப்பலம் படைத்துப் பெண்சினம் சொல்! சொல்! வெஞ்சினம் கண்டு வேற்றுவர் ஓட... பிஞ்சுகள் பிய்த்தவர் பிணமாய் வீழ... நஞ்சினை அணிந்தவர் வாகை சூட... வஞ்சியர் வீரம் வான்வரை ஆள... எழு! எழு! பெண்ணே!! எழு! எழு! எதிரிகள் மனபலம் உன்னடி விழ விழ எழு! எழு! பெண்ணே!! எழு! எழு!! கனல் விழி வீசு! கவிஞனின் கோல்கள் கர்வம் ஏற்றி எழுதட்டும்! புனலாய்க் கிடந்தவள் கனலாய்ச் சிவந்திட காலம் காட்…
-
- 26 replies
- 6.3k views
-
-
ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன் வீதியில் செல்கையில், சலவை தூளால் தோய்த்து உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை, திருடன் என்றோம் மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு. தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை இரண்டு கவளம் அரிசிக்காக குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம். கனிகளை எமக்குப் பரிசளித்தவனை ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி கனிகளை எமக்குப் பரிசளித்தவனின் உடலைக் கிழித்து பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்…
-
- 0 replies
- 901 views
-
-
என் நிலை... ஆயிரம் கனவுகள் என்னுள் ஆயிரம் ஆசைகள் என்னுள் ஆயிரம் எதிர்பார்ப்புகள் என்னுள் ஆயிரம் வேதனைகள் இவைகளால் கனவுகள் பல கண்டேன் என்னவனை அடைவதற்கு கனவுகள் நிஜங்களாகமலே போய்விட்டன...கனவாகவே என்னவனுடன் வாழ ஆசை அதுவும் நிராசையாகவே போய்விட்டது....ஆசைகள் என்னவனுடனான எதிர்காலம் பற்றி எதிர்பார்ப்புகள் வைத்திருந்தேன் அவையும்...எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை தருமாயின் அந்த ஏமாற்றத்தை எதிர்பார்க்க கூடாது என்று அவையும் ஏமாற்றங்களாகின இவை அனைத்துக்கும் பதிலாக என்னவன் எனக்கு வேதனை துன்பம்....தூக்கமின்மை... உண்விருந்தும் உண்ணா நிலை இப்படி பலதை பரிசாக தந்து சென்று விட்டான் பல தூரம்...
-
- 4 replies
- 1.2k views
-
-
22ம் திகதி வருதாமோ? இறக்கை முளைக்கிறதா? தங்க ரதத்தில் தாய் நிலத்தை வைத்தா இழுத்தோம்? சொல்லி வைத்தவர் யாரோ விடிந்தால் சொர்க்கபுரியென்றே உன்மனசை சீரழித்தே போன அந்த செம்மல்தான் யாரோ? சிங்க தேசத்துக்கு உன் வாயாலே உணவளிக்கிறாய் கவனம்... இரத்தவாடை உன் நாவில்.... இதை உனக்கு சொல்லாமல் விட்டது யாரோ? வெட்டவெளியை ஒரு துளி மழை நனைத்தால்... பொட்டல்காடெல்லாம்... புஸ்பனவனமாகுமென்றே சொல்லி வைத்தது யாரோ? அமைதியில் நாட்டமில்ல.. போர் அவர் பிறவிக்குணம்... ஆவிபிரிப்பதே அவர் தொழில்.. அடுக்கடுக்காய் புலிக்கு அவப்பெயராம்....! இந்த நாளில் போரென்றே கொள்வாயா? இருந்த கூட்டுக்கு நீயே இடியாய் ஆவாயா? சொல்லி வைத்தது யாரடா... …
-
- 1 reply
- 907 views
-