கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
என்னோடு வாழும் ஒவ்வொரு நாளும் எனக்கு காதலர் தினம்... உன் கண்கள் காணும் காலை நேரம் எனக்கு காதலர் தினம்... உன் இதயத்திற்கள் நானிருக்கும் இனிய நிமடpமெல்லாம் எனக்கு காதலர் தினம்... உன் இடது பக்த்தில் என் இதயததையு; எனத இடது பக்கத்தில் உனது இதயத்தையும்... நாம் தாங்கும் நாளெல்லாம் எமக்கு காதலர் தினம்.. அப்பாடா ரெம்ப தேடுதல் வேட்டையில் சிக்கியது கலைஞனின் வேண்டுதலுக்காக இங்கே சுட்டு ஒட்டுகிறேன்.. சத்தியமா எனதல்ல.. சுட்டது...இங்கே http://kaathdal.tripod.com/
-
- 1 reply
- 933 views
-
-
[size=5]தமிழ் பெண்ணே நீ தாழ்ந்தது போதுமடி தலை நிமிர்ந்தே நீ வாழ்ந்திட வேண்டுமடி தாரத்தைத் தாயாய் எண்ணிய மண்ணில் தரையில் புழுவாய் நீ தவள்வதும் ஏனோ பெண்ணின் பெருமை பேசி அடிமை ஆக்கிட்டார் பேதைமை கொண்டே நாம் பேச்சற்றிருந்துவிட்டோம் பேரினவாதம் பேதைகளை பேச்சற்று மூச்சறுக்க பேடிகள் போல் இன்னும் பயந்து ஒளியலாமோ உன்னைத் தொடுபவனை உக்கிரமாய் எதிர்த்திடடி உடலைத் தொடுபவனை ஊசி கொண்டு கிழித்திடடி பின்வாசல் வருபவனை பிணமாய் அனுப்பிவிடு முன்வாசல் வருபவனை மூக்கறுத்து அனுப்பிவிடு மோகத்தில் வருபவனை மோதியே கொன்றுவிடு மூடர்கள் வந்தால் முட்டி நீயும் கொன்றுவிடு காமுகன் வந்தால் காதை நீ அறுத்துவிடு சேர்ந்து வருவோ…
-
- 15 replies
- 933 views
-
-
சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்! பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்ட கண்ணுறங்கு..! அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்? ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான் இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்! பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு உய்யாரமாயுலவ உயர்த…
-
- 1 reply
- 933 views
-
-
நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் ... நிறைகுடம்தான் நான் விரக்திகளால் மட்டும் தான் நிறைந்திருக்கிறேன் . ஒளிர்விடும் சுடர்நான் காலடி எங்கும் தனிமை இருளை சுமந்திருக்கிறேன் . நடுவூரில் பழுத்த நல்ல மரம் நான் வேர்கள் இன்னும் எனை தேடிக்கொண்டு .... மாவிலை தோரணங்கள் சூடி சந்தன வாசம் பூசி பூரனப்பட்டவனாய் நிற்க முயலவில்லை நான் உங்களைப்போல் . கண்ணாடிகள் அலங்கரிக்கப்படுவதால் _முக கறைகள்என்றும் மறைவதில்லை . நிழல்களை எடைபோட்டு நிரப்பிக்கொள்ளவும் கனவுகளை கருவாய் சுமந்து திரியவும் ஏக்கதொப்பைகளை ஏற்றிக்கொண்டு நிற்கவும் சம்மதித்ததில்லை _என் மனசாம்ராட்சியம் உங்களை போல் . அரிதாரம் பூசி முகத்தை மறைத்தாலும் முகவரி…
-
- 3 replies
- 932 views
-
-
கனவுகளும் நிஜங்களும் புணர்ந்து கொள்கையில் நம்பிக்கைகளின் பிரசவம் கணக்கு வழக்கின்றி... முன்னொரு போதில் இவை தேர்தல் வாக்குறுதிகளாகவே அறியப்பட்டிருந்தது... ஜனநாயகியோடு படுக்கையை பகிராதவரில்லை! போனவன் வந்தவனெல்லாம் பெற்றுத்தள்ளிவிட்டு போனான்..... தலை ஒன்றுக்கு மூளை இன்னொன்றுக்கு வயிறு வேறொன்றுக்கு அதன்கீழ் ஏதோவொன்றுக்குமாக.... குழந்தைகளோ.... பல்வேறு தேசங்களில் பல்லின மக்களாயின.... நோய் முற்றித்தளர்ந்த விபசாரி வீதிக்கு வந்தாள் பிச்சைக்காரியானாள்.... ராஜ்ய பரிபாலினி ராப்பிச்சையானாள் புடவை கிழிசல்களுக்குள்ளால் தசைப்பகுதி தெரிந்தது..... எஞ்சிய அரசியல்வாதிகளும் இடியாப்பம் வாங்கிக் கொடுத்துவிட்டு இன்பம் அனுபவித்து போனார்கள்.... வயித்தெரிச்சலில் இப்போத…
-
- 1 reply
- 932 views
-
-
சுயநலமற்ற தந்தைக்கு மகனென்பதாலும், வீரப்பரம்பரையின் விழுதென்பதாலும் அவசர அவசரமாக அழிக்கப்பட்டிருக்கிறது உன் தடம்… தனியே பள்ளி செல்லத் தவிக்கும் தமிழ்ப்பிள்ளைகளுக்கு நடுவில், பகைவனிடம் செல்லுகையில் கூட பயப்படவில்லை நீ… அது சரி…., தப்பாமல் பிறந்த தமிழ்மகனல்லவா… ஏதுமறியா அப்பாவியாய் இறுதிக்கணத்தில் இருந்திருக்கிறாய் என்பதை ஏங்கித் தவிக்கும் உன் விழிகள் எமக்குத் தெரியப்படுத்துகின்றன.. வரவேற்று உணவளித்து வாழ்த்தியனுப்புவது தமிழன் பரம்பரை . உணவளித்த பின் உயிரை எடுப்பது சிங்களவன் வரைமுறை ஆயுதபூசைகளுக்கு நடுவில் அவலக்குரல் எழுப்பியிருப்பாய் நீ .. இப்போது தான் உலகக் கடவுள்களில் ஓரிருவர் கண்கள் நீர்த்து நிறைகின்றன…! …
-
- 5 replies
- 931 views
-
-
எங்கு சென்றாலும் எந்த சபையானாலும் என்ன பொருளானாலும் எம்மவரைப் பாட மறந்ததில்லை எவர் மறந்தாலும் எவர் ஒழித்தாலும் எம் அழிவுக்காக வரும் ஒரு இரங்கல் ஆரத்தழுவி மீண்டும் நடக்க தூக்கிவிடும் தமிழரின் தலைவன் பிரபாகரன் தமிழ் இருக்கும் வரை அவனே நாக்கில் பேச்சில் தெளிவாய்ச்சொன்னவன் தமிழரின் சொத்துக்கள் ஒவ்வொன்றாய் போயின இறுதியில் எம் வாலி.... ஒன்று மட்டும் உண்மை நாம் புதிதாக பிறக்கப்போகின்றோம் தேவை அப்படி........ மீண்டும் வருக எம்முள் பிறந்து எம்முள் எழுந்து வழி காட்டுக.... காத்திருக்கின்றோம் ஐயா...
-
- 9 replies
- 931 views
-
-
ஏற்றி வைப்பாய் விளக்கு நாடி வந்தோம் சக்தி உன்னை நல்ல வழி காட்டு நாடு இன்றி அலையும் தமிழர் வாழ்வில் ஒளியேற்று! வாடி நிற்கும் பயிருக்கும் கருணை மேகம் நீதான் வந்து நின்றோம் உன்னடிக்கு எங்கள் துணை தாய் தான்! குங்குமத் தாயே எங்கள் குறை களைய வேண்டும் கும்பிட்டோம் உன் பதமே நிறை அருள வேண்டும் எங்கும் நிறை சக்தியம்மா நீதான் வழிகாட்டி வாழ்க்கைச் சாகரத்தில் கரை சேர்க்கும் படகோட்டி மங்களத்தின் மறுபெயரே மகாலஷ்மி நீதானே சங்கடங்கள் தகர்க்கின்ற சங்கரி நீதானே பொங்குதனம் கொண்டவளே போற்றுகின்றோம் உன்னை பகை எரித்து நாட்டிடுவாய் எம் வாழ்வில் நன்மை! கொடுமை கண்டு கொதித்தெழும் கொற்றவையே தாயே! கொடுக்கும் கரம் கொண்டவளே உமையம்மை நீயே எதிர…
-
- 0 replies
- 930 views
-
-
[size=5] இயற்கை அழகி [/size] காட்டுக்குப் போனாலும் அவள் நினைவு கடலுக்குப் போனாலும் அவள் நினைவு தோட்டத்துக்குப் போனாலும் அவள் நினைவு துரத்துதே எப்போதும் அவள் நினைவு துள்ளிவரும் மானில் அவள் கண்கள். தோகைமயில் நடக்கயிலே அவள் சாயல் பேசும் கிளிமொழியில் அவளின் குரல் பேதையாய் அலைக்குதே என மனதை. மூழ்கி முத்தெடுத்தால் அவள் பற்கள் முன் கிடக்கும் சங்கோ அவள் கழுத்து புடர்ந்து நிற்கும் பவளத்தில் அவள் உதடு பார் மோதும் அலைபோலே என் நெஞ்சு. வெண்டைக்காய் தொடுகையிலே அவள் விரல்கள் வெண் புடலங்காய் பார்த்தாலே அவள் உருவம் பூசணியும் செவ்விழநீரும் பின்முன் அழகுசொல்ல பூரிப்பால் துள்ளுதே என் உள்ளம் நான் மட்டும் அவள் நினைவில் மிதக்கின்றேன். அவள…
-
- 0 replies
- 930 views
-
-
இதயத்தில் காதல் .... தோன்றக்கூடாது ... இதயமாக காதல் .... தோன்ற வேண்டும் ....!!! புற அழகில் காதல் .... தோன்றக்கூடாது .... அக அழகில் காதல் .... தோன்ற வேண்டும் ....!!! காதலியை காதலுக்காக காதலிக்காதீர் .... காதலால் காதலியை காதலி ...!!! ^ கவிப்புயல் இனியவன் காதலால் காதலியை காதலி கவிதை 01
-
- 2 replies
- 930 views
-
-
மெளனங்களாய் உங்கள் நினைவேந்திக் கரைகிறது இந்நாள்….. முப்பதாண்டுத் தவம் முள்ளிவாய்க்காலில் கலை(ரை)க்கப்பட்டு மூச்சறுந்த நிலையில் எல்லாம் உறைந்து போய்க் கிடக்கிறது…… வாழ்ந்த நாளின் பாகங்களையெல்லாம் வரலாறாய் பதித்துவிட்டு வழிசொல்லாத் தொலைவாய்ப் போனவரே வரலாறு உங்களை விடுவிக்கும் நாள்வரையில் இந்த மெளனங்களும் ஊகங்களும் வாழ்ந்து கொண்டேயிருக்கப் போகிறது….. உங்கள் பெயர் சொல்லி வாழும் நரிகள் காட்டில் இப்போ நல்ல மழை பெய்கிறது….. நீங்கள் ஊட்டி வளர்த்த உயிர்கள் வாழ்வை உறிஞ்சிக் குடிக்கிறது இந்தக் கூட்டம்….. உங்கள் சொல்லுக்கு உங்கள் அன்புக்கு உங்கள் நம்பிக்கைக்கு உங்கள் கனவுக்கு உயிர் கொடுக்கப் போனவர்கள் தவிர்க்க முடியா நில…
-
- 3 replies
- 929 views
-
-
அமைதித் தளபதி – தீபச்செல்வன்:- அமைதித் தளபதி அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண் முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து ப…
-
- 0 replies
- 929 views
-
-
கண்கள் அக்கிரமம் கண்டும் மூடிக் கொள்கின்றன....... காட்சிகளைக் கண்களுக்குள் படமாக்கி கண்ணீரில் கழுவிப் பின் உலர்விக்கின்றன தவிப்போடு என் நாவு பேச எழுந்து துடித்துப் பின் துவழ்கிறது.. முறுக்கேறி என் கரங்கள் முயல்கின்றன ஏதோ ஒன்றை..... எல்லாமே தோற்றுப் போகின்றன.. நான் தமிழச்சி என்பதால்... முள்வேலிக்குள் முடங்கிப் போகிறேன்.. பேசினால் ஒருவேளை அது தான் என் இறுதிப் பேச்சு....- இது கோழைத்தனம் என்று எனக்குள் குறுகிப் போகிறேன்....ஆனாலும் இன்றே நான் அழிந்து விட்டால்.. எனக்குள் சேமித்து வைத்திருக்கும் நம்மவர் தியாகங்களும்.. நம் இனத்தின் அவலங்களும் என் சந்ததிக்கு யார் பகிர்வார்... ஆனாலும்.... குமுறி எழுகின்ற யாவையும் கொட்ட முடியா வேதனை... பிரசவிக்க முடிய…
-
- 4 replies
- 928 views
-
-
பிம்பங்களைத் தொலைப்போம் கண்ணாடிச் சுவர்களுக்கு அப்பாலும், இப்பாலும் இருந்து கண்ணாமூஞ்சி விளையாட்டு! ஆயிரம் கோடி அற்புதப்பிரசவங்களின் வலியையும், வலுவையும் வருடி மோகித்துப் பயணிக்க முடியாமல் பிம்ப பேதம் வேதனை செய்கிறது. அடிமனதில் ஆழ அமர்ந்த சமூகக் கோட்பாடுகள் கண்ணுக்குத் தெரியாமல், மனதிற்கு விலங்கிட்டு மானுட நட்பின் விரிதளத்திற்கான கதவை அடைக்கிறது. நட்பின் பரந்த தளத்தில் பயணிக்க எந்தக் கடவுளிடம் கையேந்த வேண்டும்? பிம்பங்களைத் தொலைத்துவிட வழி இருந்தால் கூறு! தொலைத்து விட்டு, இயற்கையோடு இயைவோம் யாராலும் அறிய முடியாத பூமிப்பந்தின் பிரணவ ஒலியை எங்களின் இருப்பிடமாக்கிக் கொள்வோம். மொழிகளுக்குள் முடங்காத மானுடக…
-
- 7 replies
- 928 views
-
-
[size=4]கண்ணுக்குள்ளே சிக்க வைத்தேன் நெஞ்சுக்குள்ளே பொத்தி வைச்சேன் வலையில் மாட்டும் மீனாய் எனை காதல் வலையில் சிக்க வைத்தாய் உடம்பில் பட்ட ரணங்கள் வலிக்குதுடி...[/size]
-
- 2 replies
- 928 views
-
-
வேண்டாம் அம்மா வேண்டாம் !!! ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் ஆழிப் பேரலை கொண்டு வந்து - எம் அன்புச் சொந்தங்களைகடல் காவு கொண்டு ஆண்டுகள் எட்டு ஆகித்தான் போனபோதும் ஆற்றுவார் இன்றி தவிக்கின்றோம் நாம் பட்ட காலிலே படும் என்பது பழமொழி – அது பலதரம் ஈழத் தமிழர் வாழ்வினில் நிகழ்வதேனோ? மணிக்கொருதரம் மரணித்தோர் தொகை மலைபோல உயர உயர – எம் மனம் பட்ட பாடு யார் அறிவார் இயற்கை அன்னையே ஈழத்தமிழன் மீது உனக்கும் என்னம்மா கோபம் சக்திக்கு மீறிய விலை கொடுத்து விட்டு சற்று சமாதானக் காற்றைச் சுவாசிக்க எத்தணித்த வேளையிலே இரண்டு தசாப்தமாய் எதிரியால் முடியாததை இரண்டு நொடிக்குள் அலை கொண்டு வந்து அள்ளிச் சென்றது ஏனம்மா? பாலகன் யேசு ப…
-
- 11 replies
- 927 views
-
-
சிங்காரச் சிறகு விரித்து சிறகடித்த வானம் அழுகிறது.. நர்த்தன நடை பயின்று நடந்து திரிந்த பூமி கனக்கிறது.. சுதந்திர வானில் உயரப் பறந்த நீங்கள் உயிரற்ற உடல்களாய் உடை களைந்து கிடந்தீர் அங்கே... புதையுண்டு போன உண்மைகள் விக்கித்து நிற்கின்றன காட்சிகளோடு.. வினாக்கள் மட்டுமே மிச்சமாய்..! தமிழீழ மண்ணில் சென்ரி போட்டு தாய் நிலம் காத்து நின்று மக்கள் கையெடுத்து கும்பிட்ட வாழ்ந்தீர்..! இறுதியில்.. தாயக பூமியில் பேரினப் பிசாசுகளின் அடிமை விலங்கு உங்களை... விலங்கிலும் கேடாய் நசுக்கிக் கொல்ல கையறு நிலை சென்றோம் நாம்..! இன்று முற்றே கைவிட்டு விட்டோம் தப்பியோர் உம்மில் பலரை நட்டாற்றில்..! தேச விடுதலை என்றும் மகளிர் விடுதலை என்றும் அடுப்படிக்கு ராரா எ…
-
- 14 replies
- 927 views
-
-
வசந்தகாலம் கலைகிறதுன் வரவில்லாமல் _என் இளமைகோலம் சிதைகிறது இளமயில் உனை சேராமல். எதிர்கால முகவரியாய் யுன்பெயர் எழுதிடமுனைகையில், முற்றுப்புள்ளியோடு முடிக்க முனைகிறாய் இறந்தகாலம் என்றே. பெண்ணே ,_காதல் பயணப்பாதையின் சருகுகளல்ல, பாடைவரை வருமென் உணர்வுகள் !! நேரிடும் பொழுதெல்லாம் எதோ வேரிடுகிறது_நீ கூறிடும் வார்த்தைகளெல்லாம் நெஞ்சை கீறிடுகிறது _இருந்தும் காதல் பீறிடுகிறது அணைக்கப்படுவதற்காய் காத்திருக்கும் விளக்கு நான் அணையாமல் பார்த்திருக்கிறாய் விடியலின் பின்னும், ஓடம்தெரிந்த மாலுமி நீ அலையிலாடும்படகு நான் கரைசேராமல் அல்லாடுகிறது காதல் ! உனைப்பெற எதையும் இழக்கலாம் எனையிழந்து உனை பெற்று என்ன செய்வேன் _என…
-
- 3 replies
- 927 views
-
-
லண்டன் வீதியிலே மின் விளக்குகளில் அவள் அழகு வதனம் பள பளக்கிறது.. காதுத் தூக்கங்கள் மின்னி மிளிர்கின்றன.. நட்ட நடு நிசியில் தவிப்புடன் அவள்.. முகமெங்கும் ஏக்க ரேகைகள்.. நகப்பூச்சுக்களால் அழகு பெற்ற கைவிரல்கள் தொடுகை அலைபேசியை நோண்டியபடி.. எதற்கோ அவசரப்படுகிறாள் பாவம் என்று இரங்குகிறது இந்தப் பாவி மனம்..! அடுத்த சில வினாடிகளில்.. பறந்து வருகிறது ஒரு பி எம் டபிள்யு.. சாலை ஓரம் அவள் பாதத்தின் அருகே அமைதியாகி நிற்கிறது.. நாலு வார்த்தையில் பேரம் முடிகிறது.. எட்டிப் பாய்த்தே காரில் ஏறிப் பறக்கிறாள்.. பாவம் என்று ஏங்கிய மனம் இப்போ கொஞ்சம் பதறுகிறது... அடுத்த சில வினாடிகளில்.. சைரன் ஒலிக்க ஓடுகின்றன பொலிஸ்கார்கள்.. விரட்டிச் சென்று விராண்டிப் ப…
-
- 7 replies
- 927 views
-
-
உருப்பெற்று உருப்பெற்று வார்த்தைகள் வரிசைகட்டி நிற்கின்றன பேறுகாலநிலை; பேரவஸ்தை! ஞாபகங்களின் தொடர்பறுந்து விடாமல், கண்ணாடிக் குவளையை கை பற்றுதல்போல் தாள்களில் பிரசவிக்கும் கணம்வரை கவனம் வேண்டியிருக்கிறது! கைதவறி வைத்துவிட்ட கைத்தொலைபேசி, மருமகள் மீதான அம்மாவின் வசைபாடல், மூன்றுநாள் காய்ச்சலோடு மூத்தவளின் முனகல், அடுக்களைக்கும் அறைகளுக்குமாய் அந்தரித்து திரியும் மனையாள்…. கவனத்தை சிதைத்த காலைநேர களேபரங்களோடு கருக்கொண்ட கவிவரிகளும் கட்டறுந்து விடுகின்றன. அடிக்கடி சிணுங்கும் அலுவலக தொலைபேசிகள், கணினிக்குள் தொலைந்துபோன கணக்கியல் பதிவுகள், முகாமையாளரின் மேலாண்மை சிடுசிடுப்புக்கள் கூட்டங்கள் கொதிநிலை …
-
- 2 replies
- 927 views
-
-
Leave me alone. என்னை தனியாக இருக்கவிடு. கட்டிக்கட்டியாய் இரத்தம் சுரந்து சட்டை எல்லாம் நனையும். மாமிசம் கழுவிய நீர் போல் உதிரப்போக்கு அதிரப்போகும். வலிக்கும் தாங்கிக்கொள்வேன். சங்கடமாகும் சமாளித்துக்கொள்வேன். சஞ்சலமாகும் நெஞ்சுறுதிகொள்வேன். வயிற்றுக்கு கீழ் தசை பிடிக்கும் மசையமாட்டேன். மார்பு வீங்கி தலைவலிக்கும் சோர்வு கொள்ளமாட்டேன். உணர்ச்சியுண்டாகும் உணர்ந்து நடந்துகொள்வேன். தோள்மூட்டு வலிக்கும் தோற்றுவிடமாட்டேன். வெறுப்பேறும் பொறுத்துக்கொள்வேன். அருவருப்பாகும் அலட்சியப்படமாட்டேன். சோ…
-
- 1 reply
- 927 views
-
-
இதன் கேள்வி வடிவிலான உள்ளடக்கம் எனக்குப் பிடித்திருந்தது. அதனால் ஏனையவர்களும் படித்து ரசிக்க இங்கு இணைக்கிறேன். அனுராதபுரத்தில் உயிர்க்கொடை தந்து உலகதிரத் தமிழர் தலைநிமிரச் செய்த தற்கொடை வீரர்களின் தாக்கத்தில் உதித்ததாய் இருக்கலாம் இக்கவிதை... என்றே நான் நினைக்கிறேன். முட்கள் அ.பாலமனோகரன் முட்கள் எப்போது தோன்றின? முதலில் தோன்றியவை முட்கள்தானா? இல்லையென்றுதான் எனக்குத் தோன்றுகின்றது. ஏதோ ஒன்றைப் பாதுகாக்க வேண்டியே முட்கள் முதலில் தோன்றியிருக்க வேண்டும். தன்னைப் பாதுகாக்க இயலாத உயிர்க் கலம் ஒன்று தான் தாக்கப்படுகையில் ஏதோவோர் வகையில் எதிர்க்கவே செய்யும். இறக்குமட்டிலும் இந்த எதிர்ப்பு இருக்கவே செய்யும். இந்த எதிர் முனைப்பு …
-
- 1 reply
- 927 views
-
-
இதழில் மட்டுமல்ல உன் இறப்பிலும் மொழியுண்டு. "தீபன்" என்ற பெயர் ஓராயிரம் தீப்பொறிகளின் அடையாளம். தளபதியாய் தலைவனின் பெறுமதியாய் எல்லாமுமாய் எங்கள் வல்லமை நீ. பலங்கொண்டு வந்தவர்கள் எவரெனினும் பலம் திரட்டிப் படைநடத்திப் படைத்தவை விரல்களுக்குள் எண்ணி முடித்திட முடியாத வரலாறு நீ. களமாடி வெல்ல முடியாப் பலம் நீங்கள் என்பதறிந்தோர் நச்சுக்காற்றனுப்பிக் களக்கொலை புரிதலில் வெல்வதே வென்றியென்று முழக்கமிட்டுப் புலம்புகின்றார். வீரங்களே எங்கள் விடுதலையின் ஆழங்களே....! இது வீழ்ச்சியல்ல எழுச்சி. வண்ணப்படங்கள் காட்சியிட்ட உங்கள் முகம் இன்றும் எங்களுக்கு வரலாற்றுக் காட்சிகள் தான். புலிவீழ்ச்சி புலிவீழ்ச்சியென விட்டத்தை அ…
-
- 2 replies
- 927 views
-
-
வரலாற்றுப்பழி ஏற்காதீர் இரா. செம்பியன் மகேந்திரன் எட்டப்பராசன் எழுதியது சற்றெண்ணிப் பாருங்கள் தமிழ்ச்சான் றோரே! சரிதானா கோவையிலே மாநா டின்று? வெற்றிடமா யாக்கிவிட்டே ஈழ நாட்டை வெற்றிவிழாக்கொண்டாடப் போகின் றீரா? வெற்றார வாரத்தில் மிதப்போ ரெல்லாம் விலைகொடுத்து வாங்குகின்றபொருளா நீங்கள்? மற்றவர்க்கு வழிகாட்டும் மாண்புள் ளோரே வரலாற்றுப் பழி ஏற்றுக் கொள்ளா தீர்கள்! குன்றனைய குறையுடலார் முள்வே லிக்குள் கொட்டிவைத்துக் கிடக்கின்றார் தமிழீ ழத்தில் சென்றங்கே கண்டவர்கள் இங்கு வந்து சிறப்பாக நடத்துவதாய்ச்செப்பு கின்றார்! என்னையடா கொடுமையிது! சொல்லக் கூசும் இழிநிலையில் நடத்துவதை மறைக்கு மிந்…
-
- 0 replies
- 926 views
-
-
இனியவனே உனக்காக நீ இருக்கும் போதும் என்னைப் போல் யாரும் உன்னை நேசிக்கவில்லை நீ இறக்கும் போதும் யாரும் உன்னுடன் இறக்கப் போவதில்லை ஆனாலும் அவர்களுக்கெல்லாம் பயந்து கொண்டு உன்னை நேசிக்கும் என்னை எப்போதும் ஏமாற்றிவிடுகிறாய் நீ உன்னை நான் துரோகி என்று சொல்லவில்லை.... பாவி என்றும் சொல்லவில்லை..... அந்தளவுக்கு என்னிடம் தைரியம் இல்லடா..... மறக்கத்தான் நினைக்கிறேன் ஆனால் முடியவில்லை சொல் தாங்கமாட்டேன் கல் இல்லை என் இதயம் கசக்காதே உன் வார்தைகளால் வலிக்குதடா...... பலர் வாழும் உலகம் இது... நீயும் வாழனும் தானேடா எங்கேனும் நீ சந்தோசமாய் வாழ்ந்திடு...
-
- 2 replies
- 926 views
-