கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட வேண்டும் உணவை;உணவே மருந்து இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட வேண்டும் கலவியை; நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த பின்னர் ஆன்மீக நாட்டம் கொண்டு இல்லற சுகத்தை விட வேண்டும் இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட வேண்டும் பணத்தை. பணத்துக்கு நீ அடிமையாகி விடுவாய் இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட வேண்டும் மூச்சை. கிடந்து அழுந்தாமல் இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும் இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனித வாழ்க்கை. படித்து சுவைத்தவை . _________________
-
- 4 replies
- 905 views
-
-
இது கம்பன் பாடாத கவிதை.. தீக்குளிக்க சந்தர்ப்பம் இல்லாமலே தீயோடும்.. புதை குழியோடும் தீர்ந்துவிட்ட சீதைகளின் துயர் மறந்தோர் கவிதை இது. வேதனையின்.. கூக்குரல்..! இதுவும் ஒரு வதை தனக்குத் தானே செதுக்கிய.. சிம்மாசனத்தில் இவர்..! சிங்கள அமைச்சரவையில் அவர்...!! குத்தியரின் காசோலை அம்பு பாய்கிறது குடும்பிக்கார மறைவில் இருந்து. வாலி அங்கும் வீழ்கிறான்.. இராமன் இங்கும் வெல்கிறான்..!! அதர்மம் அழித்து தர்மம் வென்றதாய் காட்ட ஒரு காசோலை மட்டும் பரிமாறப்படுகிறது.. மீண்டும் வரலாறு திரித்து எழுதப்படுகிறது...! கம்பனுக்கு அன்று.. வாலி புகழ் திரித்து இராம புகழ் பாட கவி... பாட கள்ளிருந்தது தான் பெருங் கவி எனும் புகழ் விருப்பிருந்தது கூட அகத்தே …
-
- 1 reply
- 905 views
-
-
எனக்காக நான் கடவுளைக் கும்பிட்டதில்லை உனக்காக தான் என்பதை ஏன் நீ உணரவில்லை எனக்காக நான் அழுததில்லை உனக்காக தான் அழுதேன் என்பதை ஏன் நீ அறியவில்லை எதற்காக நான் பிறந்தேன் என்று தெரியவில்லை ஆனால் உன்னைக் காதலிப்பதால் தான் உயிரோடு ஊசலாடுகிறேன் என்று மட்டும் தெரிகிறது
-
- 1 reply
- 905 views
-
-
மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை.. முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம் தம்பியர் தூண்டி விட்ட திரியில் துயருற்றிருந்த - எங்கள் மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது மலரும் எங்கள் தேசம் என்ற மமதையில் நிற்கின்றோம். அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள் அன்னை தமிழகம் இருக்கின்றது சுற்றி வரும் பகை யுடைத்து சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின் வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே விழி திறந்து விடுதலைக்காய் வழி திறந்து விட்டிருக்க வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம் கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம் கலங்கிக் கிடந…
-
- 10 replies
- 905 views
-
-
பட்டினியில் ஓர் உலகம் பகட்டினில் இன்னோர் உலகம். இரண்டிலும்.. மனிதர்களே ஆட்சி. இப்பிரபஞ்சத்தில் இப் பஞ்சத்தை வேறு எங்கினும் காண முடியுமோ..??! தெரியவில்லை..!! சட்டங்களில் எழுத்துக்களில் கோட்டு சூட்டுப் போட்ட மனிதர்கள் எழுதி வைச்ச மனித உரிமைகள் பத்திரமாக... மனித உயிர்களோ.. இப்படிக் கேவலமாக..!
-
- 3 replies
- 904 views
-
-
வெளியினிலும் தெரியும் வெறுங்கால் தடங்கள்...... சடா கோபன் காணி நிலம் வேண்டும் என் சொந்த காணி நிலம் வேண்டும்! உயர் காப்புவலயம் உள்வாங்கிக் கொண்ட என் காணி நிலம் வேண்டும்! பட்டைகட்டி துலா மிதித்து என் பூட்டன், நிலம் செழிக்க நீர் இறைத்த அந்தத் தோட்டத்துக் கிணத்திலே ஒருவாளி தண்ணியள்ளி என்தொண்டை நனைத்திடல் வேண்டும் என் காணி நிலம் வேண்டும்! ஆயிரமாய் சப்பாத்துக்கள் அழுத்திச் சென்றாலும் இலட்சங்களாய் சில்லுகள் உருண்டு திரிந்தாலும் அழியாது சுவடுகள் எந்தனது முன்னோரின் வெறுங்கால் சுவடுகள்.... ! சாகாது இன்னும் பத்திரமாய் அங்கு உயிர்ப்போடு இருக்கிறது…
-
- 3 replies
- 904 views
-
-
1996 இல் சந்திரிக்காவின் வெற்றிக்கு பள்ளி சிறுமியவள் கிருசாந்தி என்ற பிள்ளையை சிங்கள நாய்களுக்கு பரிசளித்துக் கொன்றாயேடா செம்மணியில் அதைப் புதைத்தும் நின்றாயேடா அன்றும் சாட்சியாய் நீயே..!! வேலணையில் வைத்திய சேவகியை தாதியை புங்குடுதீவில் சாரதாம்பாள்,தர்மினியை உன் காலடியில் தின்று கொன்று புதைக்க கூட்டாகி நின்றாயேடா அங்கும் சாட்சியாய் நீயே..! நெடுந்தீவுப் பூமகள் லக்சினியை இளஞ்சிட்டை உன் சொந்தக் கூலியை ஏவித் தின்று கொன்றாயேடா நேற்றும் சாட்சியாய் நீயே..! இப்படி.. ஆயிரம் ஆயிரம் எம் தங்கைகளை அக்காக்களை கண்முன்னே சீரழிதவன் நீ.. அங்கெல்லாம்.. மெளனம் காத்து கொடூரருக்கு உதவி நின்றவன் நீ.. இசைப்பிரியா என்ற மகள் அழிவதை சிதைவதை வேடிக்கை பா…
-
- 2 replies
- 904 views
-
-
மீண்டும் அங்கே! - சத்தி சக்திதாசன் உள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைகிறது என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைப்பது சோக கீதம் என் மண்! என் மக்கள்! என் மொழி! நான் மீண்டும் அங்கே போக வேண்டும் பாதைதான் தெரியவில்லை பயணம்தான் புரியவில்லை சென்று வந்த நண்பனவன் சொன்ன ஒரு செய்தியொன்று கல்லிலே எழுத்துப்போல இளமையில் கல்வி தந்த இனிமையான கல்விச்சாலை இடிபாடுகளுடன் இடர்படுகிறதாம்! நானுதித்து தவழ்ந்த அந்த நினைவகலா இல்லமது தாய்மடியின்றும் தாவி அன்று தவழ்ந்திருந்த முற்றமது மழைபோல வானிலிருந்து மதியற்ற வீணர் தம்மால் வீசப்பட்ட குண்டுகளினால் வளமிழந்து வாடுகின்றதாம்! வாசமிக்க முல்லைய…
-
- 0 replies
- 904 views
-
-
திரும்பக்கிடைக்குமா? சிறு வயது ஞாபகங்களும் எம் மண் வாசனையும்....... மழையின் சத்தம் தவளையின் கத்தல் சில்வண்டின் ஓசை மின்மினியின் வெளிச்சம் ஆலயமணியின் ஓசை ஆந்தையின் அலறல் மாலையில் வானத்தில் மாலை போல் பறக்கும் வௌவால்கள், அவை கொரித்துப் போட்ட கொட்டங்காய்கள் சிறகடித்துப் பறக்கும் சிட்டுக் குருவிகள் பறந்து செல்லும் பச்சைக் கிளிகள், அவை கொத்திப் போட்ட கொய்யாப் பழங்கள் குயிலின் கூவல் மயிலின் அகவல் மல்லிகையின் நறுமணம் பூக்களின் சுகந்தம் பூரணச் சந்திரன் பௌர்ணமி வெளிச்சம் இவை இத்தனைக்கும் ஏங்குது மனசு திரும்பக் கிடைக்குமா??????
-
- 2 replies
- 904 views
-
-
உங்களின் நினைவுகள்.....! காற்தடம் கரைத்து உப்பளக் காற்றிடை மிதந்து போர்த்தடம் தேடி உப்புக்காற்றின் உதைப்பில் உங்களின் நினைவுகள்..... நெஞ்சினில் நிறைந்த நண்பரின் ஞாபக ஊற்றினில் நாட்குறிப்பினில் காற்றழுத்தக் காற்றழுத்தக் கரைதொட்ட அலையின் கரைமணலில் உங்களின் நினைவுகள்..... நேற்று இவ் வெளியினில் நெஞ்சுயர்த்திப் போகிறோம் என்ற என் தோழியர் முகங்களில் பூத்திருந்து அப் புன்னகை அரும்பலில் உங்களின் நினைவுகள்.... காற்றில் நுளைந்து கடலில் கரைந்து - என் மூச்சில் நிறைந்து முகவரி மறுத்துப் பெயருமில்லாப் பொருளுமில்லா மெளனக் கிடக்கையில் மாவீரப் பெருமைகள் குவிய போனவென் தோழமைக் குரல்களில் உங்களின் நினைவுகள்...…
-
- 2 replies
- 904 views
-
-
நிலம்கீறி வெளிவரும் முளையங்களாய் புலன்கீறி விழுமென் வார்த்தைகள் _என்றுமே யாதொன்றினதும் கைதிகள் அல்ல, ஒப்புக்காகவும் ஒப்பனைக்காகவும் அலங்கரித்துக்கொண்டவை என்றோ, கற்பனைகள், சுமந்த கனவுகள் என்றோ, தேவதைகளின் ஆசீர்வாதங்கள் என்றோ, சட்டமிடவும் இயலவில்லை. சில இரவுகளில் நிகழுமிந்த ஒளிப்பகுப்பில்_என் அந்தரங்க நிர்வாணத்தை ரசிக்கமுடிகிறது. அந்த கணங்களில், அம்மணமாய் கிடக்குமென் மனவெளியில் தேவதைகளின் கொலுசுகள் ஒசைலயமிடுகின்றன. ஆழ்ந்த பெருமூச்சுக்களை வெளியேற்றும்_இந்த பிரசவிப்பின் பின்னான வெற்றிடத்தில் குடியேறும் ஆத்மதிருப்தியின் வாசம் அலாதியானது. அமைதியானது. இதுவெல்லாம் எனக்கானது. நீ என் இடத்தில் இருந்தால் உனக்கானது. இப்படி…
-
- 11 replies
- 903 views
-
-
பக்கத்துவீட்டுக்காரன் செத்து புழுத்து மணந்தாலும் எட்டிப்பார்த்து ஏன் எண்டு கேட்கா தேசத்தில் வாழ்ந்தாலும்... இப்போதும் ஈழத்தமிழராய்த்தான் வாழ்கிறோம். எனக்கொண்டெண்டால் பத்துமைலுக்கப்பால் வாழும் என் நண்பன் ஓடி வருவான் அவனுக்கு ஒண்டெண்டால் நான் ஓடிப்போவன் கிழமையில் ஒருநாள் எண்டாலும் அவன் வருவான் இல்லையெண்டால் நான் போவன் பிறந்தநாள் மண்டபத்தில் கதிரை காணாமல் வருது கொத்துரொட்டியும் பாணும் பருப்பும் ரோல்சும் வடையும் உடன் ஆட்டிறைச்சியும் புட்டும் இடியப்பமும் சொதியும் சம்பலும் ஒடியற்கூழும் இன்னும் தமிழ்க்கடைகளில் விற்பனைக்கு இருக்கு கோயில்களும் திருவிழாவும் தேரும் தீர்த்தமும் கும்பாபிசேகங்களும் …
-
- 1 reply
- 903 views
-
-
வர்ணத்தின் நிறம் -சேயோன் யாழ்வேந்தன் முதலில் நிறத்தில் வர்ணம் தெரிகிறதாவெனத் தேடுகிறோம் நெற்றியில் தெரியவில்லையெனில் சட்டைக்குள் தெரியலாம் சில பெயர்களிலும் வர்ணம் பூசியிருக்கலாம் வார்த்தையிலும் சில நேரம் வர்ணத்தைத் தெரிந்துகொள்கிறோம் நான்கு மூலைகளில் மஞ்சள் தடவிய திருமண அழைப்பிதழ்களில் முந்தைய தலைமுறையின் வால்களில் வர்ணங்கள் தெரிகின்றன சிவப்பு பச்சை நீலம் அடிப்படை வர்ணங்கள் மூன்றென்கிறது அறிவியல் நான்காவது கறுப்பாக இருக்கலாம்.
-
- 8 replies
- 902 views
-
-
அண்டப் பெருவெளியில் தனித்துவிடப் பட்ட நிலமொன்றில் மனித வாடையற்ற மிருகங்களினுடே எனக்கான ஏகாந்த இடமொன்றை தேடியலைகிறேன் நாய்களும் நரிகளும் எனை துரத்த இந்த கடுங்குளிரில் வெற்றுடலுடன் சாளரமொன்றின் அணைப்பிற்க்காக அரைப்பித்தனாக ஒடித்திரிகிறேன் நெடுநாளைய கோரப்பசி தீர்க்க மீளமுடியா இப்பெருங் கிணற்றில் குதிக்க எத்தனிக்கிறேன் இங்கே நீருமில்லை நிலமுமில்லை மேலே பகலுமிரவும் சிரிக்கின்றது இப்பெருங்கிணறோ முடிவதாய்த் தெரியவில்லை சுற்றிலும் மையிருட்டு எனக்கோ அழ திரனியில்லை எனக்காய் அழுபவர் யாரோ? ஏனில்லை இதோ என் தெய்வமுள்ளது அம்மா... உன் பிள்ளை வந்துள்ளேன் சொல் இந்த மானிட பேய்களிடம் நானென்றும் அனாதையில்லை யென்று என்னை அழ வைத்து சிரி…
-
- 4 replies
- 901 views
-
-
எழுக தமிழ்- பூவரசம் பூ! தீபச்செல்வன் குருதி நிணம் தீரா மண் பிணங்களும் எஞ்சாத தேசம் சிதைமேடுகள் மீதும்குருதி சிதலுறூம் காயம் இராணுவ சப்பாத்துக்களின் கீழ் எல்லாமும் ஆனாலும் எழுந்தது தேசம் அதனாலும் எழுந்தது தேசம் சிறகுடைத்து வீசப்பட்ட ஒரு பறவையின் சிறகசைப்பைப்போல கால்களற்றவரும் நடந்தனர் கைகளற்றவரும் ஏந்தினர் கொடியை விழிகளற்றவரும் ஏற்றினர் சுடரை சொற்களற்றவரும் எழுதினர் பதாகையை இல்லாதவர்களின் இருதயங்களைச் சுமந்து தொண்டைக் குழிகளில் நெடுநாளுறைந்த பெருங்குரல் காட்டாற்றைப்போலப்…
-
- 1 reply
- 901 views
-
-
ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன் வீதியில் செல்கையில், சலவை தூளால் தோய்த்து உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை, திருடன் என்றோம் மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு. தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை இரண்டு கவளம் அரிசிக்காக குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம். கனிகளை எமக்குப் பரிசளித்தவனை ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி கனிகளை எமக்குப் பரிசளித்தவனின் உடலைக் கிழித்து பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்…
-
- 0 replies
- 901 views
-
-
சாம்பலில் இருந்து மீண்டும்.. எழுத்து பறக்க நான் ஒன்றும்.. பீனிக்ஸ் இல்லை.. என் வலுவை திரட்டி... பாய்ந்து போகக் கூட .. பந்தைய குதிரையும் இல்லை.. சிறுக சிறுக சேர்த்து.. கட்டி எழுப்பிய தேன்கூடு.. என் காதல் வீடு ... நீ ஒற்றையாளாய் கல்லெறிந்து.. போக எப்படி மனசு வந்தது உனக்கு .. வரிகளில் ஆழம் புகுத்தி .. சொல்களில் ஜாலம் காட்டி .. கவிதை புனையக் கூட .. கற்று கொள்ளவில்லை நான் .. உன் உதட்டில் நாண் ஏற்றி .. வார்த்தை அம்பை இழுத்து .. எப்படி குறி தவறாது என் .. இதயத்தில் செலுத்தினாய் நீ .. உயிர் ஊசல் ஆடும்போது கூட .. என் மனவானில் நீ.. ஊஞ்சல் ஆடுகிறாய் காதலே .
-
- 5 replies
- 901 views
-
-
எந்திரமான எண்ணங்களுக்கு தந்திரமாய் வண்ணங் கொடுக்கிறாய்! பத்திரமான மனசுக்குள்ளே சித்திரமாய் சிரிக்கிறாய்! சொல்ல வரும் சேதி... மெல்ல வந்து மோதி... வெள்ளமாய் மேவி... கள்ளமாய்த் தாவி... செல்லமாய் நுழைகிறாய்! வட்ட நிலா வானத்தில் உன் முகமாய்த் தெரியுதடி! கிட்டவந்து முற்றத்தில் வானவில்லும் மிளிருதடி! கதவடியில் நாய்க்குட்டி... காலடியில் பூனைக்குட்டி... அத்தனை தடையும் தாண்டிவந்து கனவுக் கண்ணிகளை என் கண்களுக்குள் புதைத்துவிட்டு... அப்பாவியாய்த் தப்பிக்கிறாய்! கொஞ்சம் நில்லடி கள்ளி..! உன்னிடம் ஒரு கேள்வி...!! என்னிடமிருந்து தூரமாய்... இத்தனை நாளாய் எங்கிருந்தாய்...???
-
- 4 replies
- 901 views
-
-
இணங்கி வாழ்வதிலும் இன்றே இறந்து போ Jun 27, 2013 நான்கு ஆண்டுகள் கழிந்துவிட்டது. பாய்ந்து செல்லும் காலத்திற்குத்தான் எத்தனை வேகம் வைகாசி மாதமென்றால் தார் ரோட்டில் நெருப்பெரியும் நிலவும் சுடும் காற்றில் தேகம் தகிக்கும் இன்றும் தேசக்காற்றில் வெம்மை சொரிகிறது நாலாண்டாய் தவிக்கும் நினைவுகளும் பெருமூச்சுகளும் புழுங்கித் தவிக்கிறது கார்ப்பெற் வீதிகளால் எமது கனவுகளை புதைக்கமுடியவில்லை கைத்தொலைபேசி மணியோசைகளால் கதறல்களை மறைக்கமுடியவில்லை மலைகள் இல்லையென்றோ ஆறுகள் இல்லையென்றோ அந்திரிக்காமல் ஆழக்கிணறு தோண்டி அமிர்தம் உண்ட இனம் இன்று மினரல் வாட்டர் பருகி மீளா உவகை கொண்டோம் அக்கிரமங்கண்டு ஆர்ப்பரிந்த காலம் மலையேறிவிட்டது. உன் அயல் வீட்டில் களவா …
-
- 2 replies
- 900 views
-
-
வள்ளுவனின் காமத்துப்பாலில் ஆறு குறள்களுக்கு வள்ளுவனையும் வாசுகியையும் கதைமாந்தர்களாக்கி முன்னர் எழுதப்பட்ட புனைவுகளோடு இது ஏழாவதாக தரவேற்றப்படுகிறது. வள்ளுவன் காதல் 7 ஆக்கி வைத்த அமுதுண்ணச் செந்நாப்போதன் அன்று வரவில்லைப் பல் அறிஞரோடு போக்கி விட்டுப் பொழுதையெல்லாம் இல்லம் நோக்கி; போகின்றான் வாசுகியாள் தவித்துப் போனாள். வாய்க்கு ருசியாய்ப் பலதும் பார்த்துப் பார்த்து வந்திடுவார் பசியோடு என்று வேர்த்து (அப்) பேய்க்கென்று செய்தேனே எங்கே போச்சு பிசு பிசுக்கு(து) உடம்பெல்லாம் குளிக்க வேணும் போக்கில்லை, பொறுப்பில்லை இவருக்கெங்கும் போய்விட்டால் என் நினைவே வருவதில்லை யார்க்கென்ன நட்டம் வீண் பசியால் காய்வார் நமக்க…
-
- 0 replies
- 900 views
-
-
முடிவின்றி தொடரும் இந்த அவல நிலை என்று மாறும் ??
-
- 0 replies
- 900 views
-
-
-
தமிழீழம்பற்றி கவிஞர் வாலியின் கவியரங்கம். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=N_EkyTVgT8k என்னே வியப்பு! சோழனும் நானும் ஒரே விடயத்தை ஒரே நேரத்தில் பதிவு செய்துள்ளோம்
-
- 3 replies
- 899 views
-
-
மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும் எதுவும் விதைக்கப்படாத வயல்வெளிகள் யாரும் புதிதெடுக்காத தரிசுநிலங்களாக… கண்மூடித் திறப்பதற்குள் கற்சிலையாய் அமைந்துபோன மனிதர்கள் வாழ்தல் எப்படிக் கொடூரமானது? கரடுமுரடான பாதை போல் கடினமானதா என்ன? எதுவுமே புரிவதில்லை… கால் பதிக்க முடியாத சேற்று வயல்வெளிகள் கட்டாந்தரையாகிக் கண்ணீர் வடிக்கக் கண்டேன். ஆற்றுப்படுக்கைகளில் ஆங்காங்கே பிளவுகள்.. வெடிப்புகள். உடைப்பெடுத்துப் பாயும் வெற்றுக்குளங்களில் செத்துக் கிடந்தன நீர்க்காக்கைகள். குளக்கட்டின் மரநிழலில் சிலையாகச் சமைந்திருந்தார் பிள்ளையார்…
-
- 0 replies
- 899 views
-
-
மேஜர் சிட்டு 16ம் ஆண்டு நினைவோடு நாங்கள் காற்றாய் வருகிறாய் தேசக்கனலாய் திரிகிறாய்…! காற்றலையின் இளையெங்கும் கவிதையாய் வாழ்கிறாய்…! ஊற்றாய் இசையின் மூச்சாய் உலகெங்கும் உலவித் திரிகிறாய்….! எங்கள் காதுகளில் உன் கானம் தீமூட்டி எழுவிக்கும் தீர்க்கமாய் ஒலிக்கிறாய்…..! ‘மேஜர் சிட்டுவாய்’ தமிழ் வாழும் உலகெங்கும் தமிழிசை வாழும் திசையெங்கும் தமிழர் வாழும் வரை வாழ்வாய்…..! அரும்பு மீசைக்கனவறுத்து ஆழ்மனக் காதல் நினைவறுத்து ஈழக்காதல் இதயத்தில் சுமந்து இலட்சியக்கனவோடு போன புலியே….! வருவாயொரு பொழுது மீண்டும் பாடியும் பகிடிகள் விட்டும் பல கதைகள் பேசியும் கரைந்த பொழுதொன்றை எதிர்பார்த்து….! இன்றுன் நினைவுகள் கரையும் 16ம் ஆண்டு மீள…
-
- 11 replies
- 899 views
-