கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
தமிழினமே தமிழினமே எங்கே போகின்றாய் அகதியாக வந்து நீயும் உன் மானதை விடுகின்றாய் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்றால் என்ன என்கின்றாய் தமிழ் மொழியை நீயும் ஏளனம் செய்கின்றாய் காதலனை நாளுக்கு நாள் மாத்துகின்றாய் கற்பு என்றால் என்ன என்று கேட்கின்றாய் ஊரை உறவை விட்டு வந்தும் உணராமல் இருக்கின்றாய் பண்பாடு மறந்து நீயும் உன் அடையாளம் மறக்கின்றாய் வெளி நாடு தான்உன் அப்பன் நாடு என்கின்றாய் நாசி அடித்தால் நீ எங்கே போகப் போகின்றாய்???
-
- 1 reply
- 891 views
-
-
என் பிள்ளையை காணலயே..... என் பிள்ளையை காணலயே எவனோ வந்து பிடிச்சானே யாருண்ணு தெரியலயே- அவன் யாருண்ணு சொல்லலையே.... கூட போனவங்க கூடி நின்றவங்க கூட்டத்தோடு காணலயே.... விளையாட போறெண்ணு வீதிக்கு போன புள்ள காணமால் வருவாண்ணு கனவா நான் கண்டேன்.... என்ன ஏதெண்ணு எனக்கேதும் தெரியலயே என் மனசு ஏக்கங்கள் இன்னும் குறையலயே.... ஏன் வந்து பிடிச்சானோ...?? என்ன செய்தானோ...?? எதுவும் அறியாத என் பிள்ளையை பிடிச்சானே.... கண்ணு போலவனை காத்து வந்தேனே கண்ணுhறு... பட்டதுவோ கடத்தி போனாங்களே... வெள்ளை வானென்று வெளியில சொன்னாங்க வேண்டாம் விளையாட்டென்று வேண்டி சொன்னேனே.... எதுவும் இல்லைண்ணு எழுந்தோடி போனானே வர…
-
- 1 reply
- 843 views
-
-
[size=5]எந்தன் வாழ்வு உங்கள் கையில்…[/size] முடியாட்சி அதிகாரதில் முடங்கிய நான் குடியாட்சிக் காலத்தில் குதூகலமடைந்தேன் ஆதிக்க வெறியர் அதிகாரம் ஓங்க ஆளுமையிழந்து அவதிப்பட்டேன். இலங்கைக்கு வந்த அன்னியர் பிடிக்க இழுபட்டுத் தவித்தேன் பல காலம் இனத்துவேசிகளிடம் அவர் விட்டுச் செல்ல இன்னல்கள் பட்டேன் சில காலம் நாடுகள் தோறும் புரட்சிகள் ஓங்க நானும் அங்கே மறுபிறவி எடுத்தேன் விடுதலை என்று நாமம் சூட்டி விருப்புடன் என்னை வளர்த்தனர் மக்கள். சுயநலம் காத்து அரசியல் பேசியோர் சுதந்திரமென்று கோசமிட்டார்கள் தமிழீழம் என்று பெயரை வைத்து தரணியிலே அவர்தம் புகழ் சேர்த்தார்கள். உணர்வுள்ள தொண்டர்கள் ஒருசிலர் சேர்ந்து உணர்ச்சியுடன் என்னைத் தத்தெடு…
-
- 1 reply
- 538 views
-
-
எல்லோரும் அவரவர் மனைவியைப் புரிந்து கொள்ள வேண்டும். உதவி செய்ய வேண்டும். பணத்தால்.. வசதியால் மட்டும் மனிதருக்கு மகிழ்ச்சி வந்து விடாது.. நம் செயல்களால்தான் இல்லறம் இனிக்கும்... பெண்களின உடல் சார்ந்த பலவீனங்கள்.. தொல்லைகள் எத்தனை ஆண்களுக்குத் தெரிகிறது...? “அனாசின் போட்டுக் கொண்டு வேலையைக் கவனி...” என்று சொல்லி விட்டு டி.வி பார்க்கும் என் அன்புக் கணவனே... மாத்திரை எதற்கு...? அலறும் டி.வி சப்தத்தைக் குறைத்து விட்டு நிறையப் போச்சா.. சோர்வா இருக்கா என்று அன்புடன் கேளேன்... உதடு கடித்து.. கண்மூடி சாய கொஞ்சம் உன் தோள் கொடேன்.. வயிறு வலியால் பெருகும் கண்ணீரைத் துடைத்து விடேன்... சுமை இறக்கும் குழந்தையை அலம்பி விட்டு..உடை மாற்றி தொட்டிலாட்டி கொஞ்சம் தூங்க …
-
- 1 reply
- 460 views
-
-
மனைவியை ஒய்ஃப் என்றோம். வாழ்க்கையை லைஃப் என்றோம். கத்தியை நைஃப் என்றோம். புத்தியை புதைத்தே நின்றோம் ! அத்தையை ஆன்ட்டி என்றோம். அவள் மகளை ஸ்வீட்டி என்றோம். கடமையை டுயூட்டி என்றோம். காதலியை பியூட்டி என்றோம்! காதலை லவ்வென்றோம். பசுவை கவ்வென்றோம். ரசிப்பதை வாவ் என்றோம். இதைதானே தமிழாய் சொன்னோம்! முத்தத்தை கிஸ் என்றோம். பேருந்தை பஸ் என்றோம். அளவை சைஸ் என்றோம். அழகை நைஸ் என்றோம் ! மன்னிப்பை சாரி என்றோம். புடவையை சேரி என்றோம். ஆறுதலாய் டோன்ட்வொரி என்றோம். தமிழ் வாயால் ஆங்கிலம் தின்றோம்! மடையனை லூசு என்றோம். வாய்ப்பை சான்சு என்றோம். மோகத்தை ரொமான்ஸ் என்றோம். தமிழை அறவே மறந்த…
-
- 1 reply
- 669 views
-
-
அக்கா நீங்களுமா....? Jul 3, 2013 வாழ்வு வசமாச்சுதென்று பாடிச் சென்றான் ஒருவன் நாசமாப் போச்சுதென்கிறேன் நான் இருதலைக் கொள்ளியாய் எம் தேசம் நம்பிக்கைகள் நரம்பறுந்து போயின எனக்கு ஊமைக்கனவுகள் தொடர்கின்றன. வெள்ளை மாளிகையையும் செங்கோட்டையையும் நம்பி எங்கள் வாழ்வு துக்கத்திலும் ஏக்கத்திலுமாய் கழிகிறது இரவுகள் வெடியோசைகள் கேட்கவில்லை விசும்பல்கள் தொடர்கின்றன. அழுதாலும் புனர்வாழ்வாம் நிமிர்ந்து நிற்றல் குற்றமென்றா சொல்கிறார்கள் உறைந்து கிடந்த ஊத்தைகள் எல்லாம் உன்மத்தம் கொண்டு ஆடுகின்றன. சாதிச் சங்கங்கள் பிரதேசப் பெயர்க் குழுக்கள் மூலை முடுக்கெங்கும் வக்கிரங்கள் என்ன இழிவடா எங்கள் இனத்துக்கு அன்று முளாசியெரிந்த நெருப்பில் இந்தக்குப்பைகள் எரியாமல் போன மாயம் என…
-
- 1 reply
- 691 views
-
-
நெஞ்சில் உறுதிகொண்ட நேரிய பாவை அஞ்சி ஒழியாத அறிவாற்றல் கோவை வஞ்சி என அழைப்பேன் நான்மட்டும் முறைத்து முறுவல் தந்து மறைவாள்! தழும்பாத நடை தணலான குறி கொண்ட நேரான வழி இதுவே அவள்.
-
- 1 reply
- 522 views
-
-
காதலி மலர்களிலும் சிறந்தவளே என் கரம் மறுத்த கனிமொழியே - உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வஞ்சி உன்னிடம் நான் கெஞ்சி நிற்க வெஞ்சினம் கொண்டு வெறுத்து சிவந்;தவளே செவ்வானமும் சிறகடிக்கும் புள்ளினமும் வண்ணிலவும் வருடும் பூங்காற்றும் செந்தணல் மூட்டி என்னைச் சிதறடிக்க உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில் வெண்சங்கு கழுத்தழகி விலையற்ற மணியவளே உன் சொல்லில் உண்மையில்லை உதயம் இனி உலகிலில்லை வெறுத்து நிற்கும் மலரிடம் வெதும்பி நிற்கும் வண்டு இது உயிரற்று விழுமொழிய ஒதுங்கி மட்டும் போய்விடாது என்றாவது உன் உணர்வுகளில் சலனம் என்று ஒன்று வந்தால் உன் கண்ணீரை பூக்களாக தூவி விடு என் கல்லறையில். . . . eelam…
-
- 1 reply
- 998 views
-
-
மெல்லத் தமிழினி மேற்சாகப் போகுதோ மெல்ல ரும் மெளனம் காட்டுமோ வுலகம் வெழுதினான் வல்லவனிருந்தே வெறத்தானுணவை மெல்லக் கதறினேன் மூழ்கினேன் சோகத்தில் மெல்ல முடியா மலே. வெள்ளிப் பனியுறையும் வெள்ளையர் தேசத்தே தெள்ளிய குறிக்கோளாய் தானவர் தரணிக்கு காவுகொள்ளும் தமிழனத்தின் குருதியது வழிந்தோட மேவியே வழிகாட்டும் அரக்கர்களின் கொடுமைதனை சீலத்தன்மையொடு சிந்தனையும் சேர்த்தங்கே காலவன் கைகளுக்கு கைவிலங்கு போட்டிடவே மனிதத்தின் வகையறிந்து மாயுமெங்கள் உறவுகளை கனிவுகொண்டு காத்திடவே கருவாக எண்ணியங்கே பண்பாளன் பார்த்திபனாம் திலீபனென்னும் மறுபெயரான் காட்டிய வழிநெருங்கி கடந்தவீரெட்டு தினங்களாய் ஏட்டிலோரைந்து கோரிக்கை தான் வைத்து …
-
- 1 reply
- 672 views
-
-
'உனையிழந்தெம் தேசம் அழுகிறது..."" நேசத்து உறவாகி எம் தேசமதில் உலவியவன்... தேசத்துரோகிகளால் தெருவினிலே வீழத்தப்பட்டான்.... எம் தமிழர் துடிக்கையிலே பொங்கியவன் எழுந்தவனே.... உலகத்தை தட்டியவன் நீதிதனை கேட்டவனே.... சிங்க கோட்டையுள்ளே சீறி புலியாய் எழுந்தவனே.... அலரி மாளிகையிலும் ஆர்ப்பாட்டம் நடத்டதியவன்... மும்மொழியில் தேர்ச்சி பெற்றான்.... முன்னுதாரணம் பல சொல்வான்... அச்சம் இன்றியவன் அவலங்களை எடுத்து உரைப்பான்... துச்சமதாய் உயிர் மதித்து துனிந்து நின்று குரல் கொடுப்பான்.... எண்ணில்லா பணிகளதை எங்களுக்காய் அவன் அழித்தான்... கதிரவெளியினிலே எம் தமிழர்…
-
- 1 reply
- 712 views
-
-
மூச்சடங்கிப்போன இறுதிப்பொழுதுகள் ஆண்டுகள் ஆறானதோ? எங்கள் உறவுகள் அணுஅணுவாய் வதைபட்டு அல்லல்கள் பலபட்டு துடிதுடித்து சாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? இரசாயன நெருப்புக்குள் வெந்து கருகி மடிந்தும் பச்சிளங்குழந்தைகள் பாழும் குண்டுகளால் பரிதவித்து இறந்தும் ஆண்டுகள் ஆறானதோ? சதிவலை பின்னியநாடுகளை இறுதிவரை நம்பி காத்திருந்து உயிர் பறிக்கப்பட்டு ஆண்டுகள் ஆறானதோ? பதுங்குகுழிகள் வெட்டி உயிரை பாதுகாக்க முடியாத வலயத்துள் பல நூறாயிரம் எறிகணைகள் வீழ்ந்து பதைபதைத்து எம் உறவுகள் துடிதுடித்துசாவடைந்து ஆண்டுகள் ஆறானதோ? நம்பிக்கை வைத்த நாடுகள் தான் கூடிச் சதி புரிந்தது தெரியாமலும் அயல்நாட்டு அரசின் பக்கபலத்துடன்தான் இனவாத சிங்கள அரசு இனப்படுகொலை செய்கின்றது என்பதை அறியாமலும் அன்று எம்உ…
-
- 1 reply
- 639 views
-
-
மரமென்றும் சொல்ல முடியாத தமிழன் ஏ... மரங்களே! ................................ என்ன பார்க்கிறீர்கள்? உங்களை அல்ல... மரங்களைத்தான். உங்களிடம்தான் பதவி மோகம் பஞ்சோத்தித் தன்மை காட்டிக் கொடுப்பு கழுத்தறுப்பு நடவடிக்கை போட்டி பொறாமை பொருள் தேடி அலைச்சல் நெஞ்சில் வஞ்சம் நேர்மையில்லாத் தன்மை சாதி சமய பேதம் சதி நடவடிக்கைகள் இப்படிப் பல... அதனால்தான்... உங்களை அல்ல... நீங்கள் நாட்டுக்கு என்ன செய்தீர்கள்? நம் மக்களுக்குத்தான் என்ன செய்தீர்கள்? அவர்களுக்கு ஒரு நேர உணவுக்கு உதவுங்கள் என்றால் ஓலமிட்டு ஒப்பாரி வைக்கிறீங்கள் அவர்களுக்காக ஆர்பாhட்டம் செய் என்றால் ஐஐயோ... வேலை என்பீர். ஆனால் மரங்கள் அப்படியில்லையே! அதனால்தான் உங…
-
- 1 reply
- 644 views
-
-
வேர்க்கும் குளிர் இரவுகளில் கோர்த்துக்கொள்கிறது விழிகளில் நீர் ....... நிசப்த யுத்த விளைவுகளின் வெப்பம் எரிக்கிறது கணங்களை ................ விரித்த சிறகுகளை மடக்கி திணிக்கப்பட நிகழ்வுகளை சுமந்து நேற்றைய வீற்றிருப்பின் கற்றைகளை சுமக்கையில் நாளைய வரவில் வல்லையில், எந்தநூர் வயல் வெளிகளில் , சந்நிதியில் , உப்பாற்றங்கரைகளில், வல்வைச்சந்தியில் , என்ன நிகழ்விருக்கும்? வரப்புகளில் நடைபோகும் நாரைகள் உரத்துக்கத்தும் ஊளைக்கிடாய் ௬ட்டம் பால்மொச்சையடிக்கும் சிறு குட்டியாடு பருவகால தும்பிகள் வண்ணாத்துப்பூச்சிகள் எல்லாமிருக்குமோ ? முற்றத்து மல்லிகை வேலியோர எல்லைப்பனை நாயுருவி சுமக்கும் தேன் ௬டு அகலபடந்த அறுகி…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
முன்னொரு வேளை முகத்துவாரம் தனில் முத்துப் பல்லக்கில் - சிங்களம் முதுகில் சுமக்க முடிந்தது "நற்காரியம்" சொல்லி.. முக்கியம் பெற்றனர் நம் தமிழர்..! மூடரிலும் கேடாய் மூத்தகுடி வாழ்ந்த மண்ணை மூதேவிகள் சிங்களர் ஆளத் தாரை வார்த்தனர்..! மண்ணின் மைந்தர்கள் என்றோர் மன்னர்களாகி சிங்களச் சகோதரத்துவம் பேசி மகிமை பெற்று சேர்.. பொன்களாகி மணிப் பல்லக்கில் பவனி வர.... மக்களோ இனக்கலவரங்களிடை மரணப் பாடையில் ஏறினர்..! அந்தவொரு வேளை அஞ்சா நெஞ்சன் அருமைத் தமிழ் மைந்தன் அன்னையாம் தமிழீழத் தாயின் இருப்புச் சொல்லி அவள் தலைநகராம் திருமலையில் அருமையாய் சிங்களம் போற்றும் அவர் தம் தேசியக் கொடியாம் அரிவாள் ஏந்திய சிங்கக் கொடி எரித்தான். அன்று அதை …
-
- 1 reply
- 816 views
-
-
தனக்கெனவே வாழ்ந்தும் தகுதியாய் வாழத்தெரியாத மனிதர் முன் நீங்கள் பிறருக்காக வீழ்ந்ததின் வீரத்தின் பதிவுகள் எத்தனை எமக்கு எதையெல்லாமோ எண்ணிக் கொண்டிருந்த-நாங்கள். எதையுமே பெற்றுக் கொள்ளாத நிலையில் நீங்கள் உங்களையே விட்டுக்கொடுத்ததில் நாங்கள் கற்றுக்கொள்ள நிறையவே இருக்கிறது! உங்களது குருதி எமது நிலத்தில் உறைந்து கிடக்கின்றது , உங்களது சுவாசம் நாங்கள் சுவாசிக்கும் காற்றில் கலந்திருக்கின்றது உங்கள் வியர்வை எமது இனத்தின் விடுதலைப் பாதையில் சிந்திக்கிடக்கின்றது உங்கள் வீரத்தின் பதிவுகளை எங்கள் மனதில் நிறுத்தி நிமிர்த்து நிற்கின்றோம் !
-
- 1 reply
- 585 views
-
-
வரவும் வாழ்த்தும் மலர்வும் விதிப்படி உணர்வோம் ஈழமென்போர்க்கு மலரும் நாளை எதிர்பார்க்கும் சூழலாம் தமிழர்க்கு மகிழ்வு கிட்டும் -பிரபாகரனை நெஞ்சில் நினைப்பார்க்கு நினைப்பது கைகூடும் தம்வாழ்வு சிறப்போங்க வாழ்த்தும் அவரை. தமிழர் இடர் தீர சமரும் புரிந்த தமிழர் தலைவனடி நெஞ்சே வாழ்த்து தமிழர்க்கு என்றும் தனிநாடு உண்டு தாழ்ந்தவர் மேலோர் பேதங்கள் நீங்கி சிந்தையியில் என்றும் குறிக்கோள் ஒன்றாய் முந்தையோர் நினைவில் மூழ்கிடும் உறவால் தந்தையாய் வேலுப் பிள்ளையின் கருவால் வந்தவ தரித்தார் பிரபா கரனும் ஆழ்வது கடமை அதையறிந் தவரும் பாழ்படு சிங்களம் எதிர்த்தவர் சமர்க்களம் புகுந்தவர் படைகள் முழங்கிய போரால் எதிரிகள் பலரும் எதிர்க்களம் மாண்டது …
-
- 1 reply
- 761 views
-
-
தணல்ச்செடி, அலைமகன் - தீபச்செல்வனின் இரு கவிதைகள்:- 05 ஜூலை 2016 தணல்ச் செடி சமூத்திரத்தில் மண்டிய மையிருள் போல மறைந்திருந்த முகத்தில் அடுக்கியிருந்த இரகசியங்கள் சொல்லாத எண்ணற்ற கதைகள் கலந்தன தீயில் கருணைமிகு உன் புன்னகை கரைந்த கடலில் எழும் ஒரு பறவையின் சிறகுகளில் ஒழுகுகிறது தணல் நெருப்பை தின்று காற்றில் உறங்குகின்றனர் கரிய வீரர் கரு மேககங்கள் மண்ணில் கரைந்துருக வெடிக்கின்றன விதைகள் கந்தகம் சுமந்து வெடித்துருகிய இடத்தில் தளைத்தது தணல் மலர்களுடன் ஒரு செடி அனல் கமழுமுன் சமுத்திர மௌனத்தால் கோணிற்று உலகு இப் பூமி …
-
- 1 reply
- 1.3k views
-
-
தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம் வினாக்கள். அடுத்ததென்ன? அப்ப நாளை காலையில் செயலாற்றும் இடத்தில் சந்…
-
- 1 reply
- 967 views
-
-
மீட்டுத் தருமா??? இந்திய மண்ணின் மானத்தைக் காக்க கார்கிலுக்குப் புறப்பட்டான் காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன் தடுத்தான் அவனது தம்பி இனமான இளவேள் அண்ணா! நீ புரியும் போர் மீட்டுத் தருமா நம் தமிழர் இழந்த தேவிகுளம், பீர்மேடு, வேங்கட மலை, கோலார் தங்கவயல் கச்ச தீவு போன்றவற்றை ஏன் நம்மின மக்களின் காவிரியாற்று நீரையாவது சிந்திக்கத் தொடங்கினான் கார்கில் வீரன். - இளங்கோ (பிரித்தானியா) வாளை எடுக்கட்டும் கரங்கள்! பாலுக்கு பாலகன் வேண்டி அழுதான் கல்லுக்கு பாலூற்றி தமிழன் தொழுதான் வேலுக்கு முருகன் எம் இனத்தின் தந்தை புல்லுக்கு தம்பியாய் செய்தான் நிந்தை தமிழன் ந…
-
- 1 reply
- 958 views
-
-
கண்ணீரும் குருதியுமாய் ஈழம் ! செந்நீரின் மையெடுத்து நம் கண்ணீரின் கதையெழுதி புண்ணாகிப் போன நெஞ்சின் வலிகொண்டு கவிதை வரைந்தேன் அந்நாளில் நானும் குழந்தையாய் அம்மண்ணில் தவழ்ந்திருந்த ஆனந்தமான பொழுதுகள் அவை போன இடமெங்கே ? என் சொந்தங்கள் தூக்கமின்றி ஏக்கத்தில் வாழ்ந்திருக்கும் எண்ணத்தின் சுமை கொண்டு என் விழிகள் நிறையுதம்மா எரிகின்றது என் ஈழத் தேசமம்மா எண்ணை வார்க்க ஆயிரம் பேர் எவருமில்லை தீயணைக்க, அழுவதின்றி என் செய்வோம் ஆற்றாமையால் நாம் தவிப்போம். தவிக்கின்றார் தம்பி தங்கையர் தமிழர் என்னும் ஒர் காரணத்தால் தமைத் தாமே இழக்கின்றார் தமிழன்னை பாராளோ ? பதிலொன்று கூறாளோ ? சேறும் சகதியுமாய் நன்னிலங்கள் சீரழிந்து போவதுண்டு.…
-
- 1 reply
- 1k views
-
-
சில கவிதைகள் திரைப்படத்துறையில் இருந்து
-
- 1 reply
- 711 views
-
-
செத்துப் போனவர்களெல்லாம் வானத்தில் நட்சத்திரங்களாய் மாறிவிடுவார்களாம்!? அம்மம்மா எனக்குச் சொன்ன சிறுபருவக் கதைகள் இன்னும் ஞாபகம் இருக்கு! என் பேரப்பிள்ளைகளுக்கு சொல்வதற்கு நிறையக் கதையிருக்கு...! அம்மம்மா சொன்னகதை நிறைய இருக்கு...! பாட்டி வடை காகம் நரியிலிருந்து உச்சிக் கொப்பு முனியிருக்கும் புளியமரத்தடி தாண்டி... வைரவருக்கு நாய் வாய்ச்ச கதையோடு, தமிழருக்கு கரிகாலன் கிடைச்ச கதையெல்லாம் அம்மம்மா சொல்லித் தந்தா! அம்மம்மாவை நினைத்துக்கொண்டே இருண்ட வானத்தை அண்ணாந்து பார்க்கின்றேன்... புதிதாய் ஒரு நட்சத்திரம் எனைப்பார்த்துச் சிரிப்பதுபோல் மின்னுகிறது! என் பேரப்பிள்ளைகளின் வானத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் புதிதாய்ச் சிரிக்கும்! வானத்தைப…
-
- 1 reply
- 751 views
-
-
தேயிலை மலைகளின் பாடல். - வ.ஐ.ச.ஜெயபாலன் * மரகத மணிகளின் நடுவே சித்தெறும்புகளாய் யானைகள் ஊரும் பசும்மலை நாடே. ஏழைகளோடு நிலத்தை பகிர்ந்த சமூக நீதியின் தாய்த் திருமண்ணே . * ”செல்விருந்து ஓம்பி வருவிருந்து” நெய்வடியும் செஞ் சோற்றில் கறிமீன் நீந்த உபசரிக்கும் அன்பின் மலையாளிகளே வாழிய. * உலகை இயற்றிய கவிஞன் தனக்கென நூல் பிசகாத நுட்பமாய் அளந்து மலையும் ஆறும் வயலும் காயலும் நீலக் கடலுக்கு நீழ மணல் பூக்கரையும் தைத்த கடவுளின் தேசத்து மக்களே வாழிய; * உன் தேயிலை மலைகளில் ஏலக்காய் குன்றுகளில் கறிக்கோழிக் கூடுபோல் சேரி வீடுகளில் மண்சரிகிற மழைக்கால இரவுகள்தோறும் மதுரையில் இருந்து வந்த கண்ணகி இன்னும் அழுகிற ஓலம் கேட்க்குதே தோழா. காற்ற…
-
- 1 reply
- 650 views
-
-
உன் - வாழ்க்கைப் பயணம் துவங்கட்டும்..! வெறும் வெளிச்சத்தை நோக்கி அல்ல விடியலை நோக்கி ======================= பதவி - இதன்மேல் நீ அமர் உன்மேல் - பதவியை அமரவிடாதே ========================= உதவி - எல்லோரிடத்தும் கேட்காதே! உதவி செய்பவர்களைத் தேர்ந்தெடு.. ========================== மரணத்தின் கர்ப்பப்பையில் கலைந்து போனவனே ! நீ செத்திருந்தால் ஊர் அழுதிருக்கும் சாகவில்லை நீயே அழுகிறாய் கைக்குட்டை இந்தா கண்களைத் துடை உயிரின் உன்னதம் தெரியுமா உனக்கு? மனிதராசியின் மகத்துவம் தெரியுமா? உயிர் என்பது ஒருதுளி விந்தின் பிரயாணம் இல்லையப்பா அது பிரபஞ்சத்தின் சுருக்கம் உன்னை அழித்தால் பிரபஞ்சத்தின் பிரதியை அழிக்கிறாய் பிரபஞ்சத்தை அழிக்க …
-
- 1 reply
- 792 views
-