கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
இந்திய தமிழச்சியின் கண்ணீர்வாக்குமூலம் அம்மா.. உன் கடைசிப்பயணத்தில் என் கண்ணீர் வாக்குமூலம். என்னை மன்னித்துவிடு. நான் விரும்பினாலும் நான் விரும்பாவிட்டாலும் என்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தியன் என்ற அடையாளத்தினை கிழித்து எறியும் எந்த ஆயுதங்களும் இல்லாமல் நிராயுதப்பாணியாக களத்தில் நிற்கும் என்னை.. அம்மா மன்னித்துவிடு. கசாப்புக்கு கூட உயர்நீதிமன்றம உச்ச நீதிமன்றம் கதவுகள் திறந்திருக்கின்றன பலகோடியில் பராமரிப்பு செலவு இத்தனையும் செய்து இந்திய முகத்தைக் காப்பாற்றத் தெரிந்த எங்கள் நீதிதேவதைக்கு அன்னையே.. சக்கரநாற்காலியில் நீ சாய்ந்தக்கோலத்தில் மருத்துவம் நாடி வந்தப்போது மட்டும் கறுப்புத்துணியால் கண்களை…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதியசூரியன் பூமிக்கு வந்த பொன்னான நன்னாள் சிங்கள இனவெறி அரசின் கோரத்தாண்டவத்தால் எங்கள் தமிழினம் வதைக்கப்பட்டு சிதைக்கப்பட்ட பொல்லாத காலமதில் புதியசூரியன் பூமிக்கு வந்த பொன்னான நந்நாள் நவம்பர் இருபத்தியாறு தவித்த தமிழினம் இனித் தலைநிமிர்ந்தே வாழவேண்டுமென இதயத்தில் உறுதிபூண்டு போராடப் புறப்பட்ட தமிழர்தலைவன் ப+மிக்கு வந்த புனிதநாள் நவம்பர் இருபத்தியாறு அடக்குமுறைக்குள் அவதியுற்று ஆழ்மனதுள் துயரை அடக்கவைத்து விடிவே இல்லை என வெதும்பிய பெண்ணினத்தை புதுமைப்பெண்ணாக, படைநகர்த்தும் திறனில் வல்லமை மிக்கவராக, அவனிக்கு அறியவைத்த தமிழப்பெண்ணின் ஆற்றல்கண்டு தரணியைத் திகைக்கவைத்த, புரட்சிவிஞ்ஞானி பிறந்தபொன்னாள் நவம்பர் இருபத்தியாறு ‘ஆணும் பெண்ணும் இணைந்தே அடிமைப்பூட்டை உடை…
-
- 7 replies
- 975 views
-
-
முகடு இதழ் (பிரான்ஸ்) இதுவே எனது கன்னி கவிதை(அச்சில்). இதுநாள் வரை என்னை மெருகேற்றிய யாழ் உறவுகளுக்கும் அச்சில் கொண்டு வந்த முகடு இதழுக்கும் எனது நன்றிகள்.
-
- 19 replies
- 1.5k views
-
-
எங்கள் தலைவிதியை நாமே சிங்கமும் கருநாகங்களும் குள்ளநரிகளும் ஒருபுறம், பொல்லாத மலைப்பாம்புகளுடன் இன்னுமொரு சிங்கம் மறுபுறம், என்ன செய்வோம் நாம்? எங்கள் குரல்வளையை நெரிக்க, எங்கள் விழிகளை குத்திக்கிழிக்க, எங்கள் வாழ்விடங்களை பறித்தெடுக்க இந்த கொடிய மிருகங்களில் ஒன்றை நாங்கள் தேர்ந்தெடுக்க வேண்டுமாம். தெரிவு செய்ய நாங்கள் செல்லாவிடில் எமக்காக அதையும் அந்த குரூர விலங்குகளே செய்துவிடும். இந்த அவலத்திலிருந்து மீட்க, எவருமே எமக்காக இல்லை. எங்கள் விதியை நாங்கள் தீர்மானிக்க முடியாதாம். இந்த உள்நாட்டு விலங்குகளும் வெளிஉலக வல்லூறுகளும் ஓநாய்க் கூட்டங்களும்; தான் எங்கள் வாழ்வை பற்றி தீர்மானம் எடுப்பார்களாம் அப்படியானால் நாம் யார்? எமக்காக பேச எவருமில்லையென்றால் எங்களை…
-
- 7 replies
- 713 views
-
-
நம்பிக்கை நண்பா! மேற்கில் மலரும் சூரியன்-மீண்டும் கிழக்கில் உதயமாவதில்லையா? ஒருநாளில் வாடிப்போகும் பூ கூட சிரிக்கவில்லையா? மேலிருந்து விழுந்த நீர்வீழ்ச்சி-மீண்டும் எழுந்து அருவியாய் ஓடுவதில்லையா? வண்ணங்களை காட்டி மகிழ்விக்கும் வானவில் கூட தோன்றியவுடன் மறையும் ஆனால் திரும்பவும் தோன்றும் தானே அது போல் தோல்வியென்று எண்ணாதே நம்பிக்கை வை நீ உயர்வாய் வசந்தம் உன் வாசல் தட்டும்!
-
- 3 replies
- 1k views
-
-
ஈழபாரதியின் சருகுகள் என்ற கவிதைத் தொகுப்பில் இருந்து சில கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் * வெடிகுண்டு சப்தம் தாலாட்டுகிறது ஈழக் குழந்தைகளை...! * குடித்த பின் குடும்பச் செலவானது குவளைகள்...! * மைல்கள் சாமியானது சந்தோஷம் பூசாரி! * காந்தி ஜெயந்தி கனவு கலைந்தது `குடி' மகனுக்கு! * மரண அறிவித்தல் தவளையின் சப்தம் * சாலையோர மரம் சாமியானதும் சரியாமல் நின்றது!
-
- 5 replies
- 1.3k views
-
-
வள்ளுவன் காதல் - 2 காம்பரிந்த மலர் சொரிந்த மஞ்சம் - அங்கே கட்டழகி வாசுகிக்கோ காதல் நெஞ்சம். தாம்பத்ய சுகம் தேடிச் செந் நாப்போதன் தாவுகிறான் மருவுதற்கு அவள் மறுத்தாள். தேம்புகிறாள் "சீ! தூரப் போம்!" என்கின்றாள் திகைத்தவனோ "ஏனடி நீ பிணங்குகின்றாய்? நான் புரிந்த கொடுமையென்ன? சொல்!" என்கின்றான் நங்கையவள் "தும்மிய(து) ஏன்?" என்று கேட்டாள். "தும்முதற்கும் விம்முதற்கும் தொடர்புண்டோடி? துரோகமென்ன நான் புரிந்தேன்?" என்றான் காளை. "உம் மனதில் என்னைவிட யாரோ உள்ளார், உதனாற்தான் அவள் நினைவாற் தும்மல்." என்றாள். "வழுத்தினாள் தும்மினேனாக - அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீரென்று (திருக்குறள்-காமம்)" "அடி போடி பைத்தியமே! எனக்கு உன்றன் அழகைவிட …
-
- 1 reply
- 961 views
-
-
எழுச்சி பொறிகக்கும் விழியோடு புறப்பட்டு விட்டோம்! போராட நாள் குறித்தோம்! எறிகுண்டு பாய்ந்தாலும் இருகைகொண்டேற்போம்! எதற்கும் நாம் துணிந்துவிட்டோம்! நெறிகெட்ட பகைவரின் முறைகெட்ட வாழ்வால் நெருப்பாக மாறிவிட்டோம்! வெறிகொண்டு தாவினோம்! வீரத்தின் மடியில் விளையாடத் தொடங்கிவிட்டோம்! திசையெட்டும் அதிரயாம் பறைகொட்டி நின்றோம்! தெய்வத்தை வணங்கி வந்தோம்! தசையெலாம் முறுக்கேறி நின்றோம்! எழுந்தோம்! தாயின் மேல் ஆணையிட்டோம்! வசைகெட்டு வாழாத வரலாறு கொண்டோம்! வல்லமை நூறு கொண்டோம்! இசை பெற்ற மிளிர்கின்ற எதிர்காலம் ஒன்றை இப்போதே செய்து வைப்போம்! கடல் பொங்கினாற்போல் உடல்பொங்கி வந்தோம் களத்திலே ஆட வந்தோம்! படைகொண்டு மானத்தின் நடைகொண்டு வந்தோம் பழி தீர்க்…
-
- 4 replies
- 5.9k views
-
-
ஆடிக்கலவரம்- கறுப்பு ஜீலை ஓடி ஓடிச் சிங்களம் ஈழத்தமிழரைக் கொன்று குவித்த நாளாம் அம்மா சொன்னாள்! கண்டதில்லை கலவரத்தின் நிலவரம் ஆனால் கண்டவர் உணர்ந்தவர் யாவரும் சொன்னார் "வாழை" போலே வெட்டிச் சாய்த்தார்களாம் நம் உறவுகளை தலைமுறைத் தளிர்களை" நாவினை அறுத்தால் கோஷங்கள் அடங்கலாம் தமிழீழம் எனும் உணர்வுகள் அடங்குமா?! கைகளை அறுத்தால் வேறு கதி இன்றி அடங்குவோம் என்று நினைத்தால் நம்பிக்கை அறுபட்டுப்போகுமா? அடிபட்டுப் போகுமா?! ஆண்ட பரம்பரை நாங்கள் என்று சொல்லித் திரிந்தால் போதுமா? மீண்டும் ஆளவேண்டும் என்று நினைப்பது தமிழனே தவறென்று ஆகுமா? கொன்று குவிப்பவன் காலைப் பிடித்தொரு கோழை பிழைப்பு இங்கு வேண்டுமா?! வென்று எங்கள் கொடி நாட்டுதல்…
-
- 3 replies
- 1.1k views
-
-
மலர்போல் வந்து ....முள்ளாய் போன காதலும் உண்டு....!!!முள்போல் வந்து ....மலராய் மலர்ந்த ...காதலும் உண்டு....!!!காதலை காதலால் ...காதல் செய்தால் ...முள்ளும் ஒருநாள் ...மலராகும் ....!!!^முள்ளும் ஒரு நாள் மலரும் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
மௌனித்த வெளியில் நின்று முனகும் குரல் - வெற்றி துஷ்யந்தன் அச்சப் பிராந்திய இரவுகளோடு நகர்ந்த நரக நாள்களின் நினைவுகளால் சூழ்ந்து கிடக்கின்றது இந்த காற்று மண்டலம். யாரெனத் தெரியா உடலங்களின் மீது பாதங்களை பதிந்து பாதைகளை தேடிய -எங்கள் ஆற்றாமைகளும் இயலாமைகளும் அரங்கேற்றம் கண்ட பெருவெளியில் எல்லாவற்றையும் தொலைத்தோம். உருப்பெற முடியா உணர்வுகள் அனைத்தையும் அடக்கி கொண்டு உள்ளுக்குள்ளே புதைத்து வெடித்தோம். விதைகளின் கனாக்களை விழிகளில் சுமந்தபடி விடுதலை பற்றிய சொல்லாடலின் பெரும் அர்த்த புஷ்டியை உணர்துகொண்டோம். ஒரு இனத்தின் பெரும் கனவின் சாத்தியம் பற்றியும், ஒரு இனத்தின் தனித்த தேசத்தின் வல்லமை பொருந்திய சுய வாழ்வுரி…
-
- 0 replies
- 689 views
-
-
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! http://www.worldtamilnews.com/ - Kural vadivam ingee. Kavithai Kelungal (new)-20.10.2008 உங்களைச் கொஞ்சம் உலகம் தேடும் முத்தமிழ் சிவப்பாகும் போர் மேகங்கள் சூழும் உங்களுக்கும் வலிகள் புரியும் இயந்திரப் பறவைகள் எதிரியாகும் ஆமிக்காரன் இயமன் ஆவான் உயிர் வெளியேறிய உடல்களை காகம் கொத்தும் விழிகளிலே குருதி கசியும் ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்! தொப்புள் கொடியில் பலமுறை தீப்பிடிக்கும் பார்த்துக் கொண்டே இருப்பீர்களா? ஒரணியில் திரண்டு ஒரே முடிவு எடுப்பீர்களா? உங்கள் அரசியல் விளையாட்டில் எங்களைத் தோற்கடிக்காதீர்கள்! எந்த இனத்தவனும் உங்களை மன்னிக்கமாட்டான் சொந்த இனத்தவனைக் நீங்கள் காத்திட …
-
- 22 replies
- 5.3k views
-
-
காற்றின் சுழிகளில் திருகி வெற்றிட நிறையில் தோற்று நீரின் பாயத்தில் பயணிக்கும் உதிர்ந்த பழுப்பு நிறச்சருகின் புறப்பரப்பின் கீழே நிறப்பிரிகையடையும் சூரிய பிரவாகத்தின் ஒளிக் கீற்றில் மெல்லப் படரும் வைகறையின் நிறத்தில் நெளியும் மஞ்சள் நதியின் இரு கரைகளிலும் வானேகி வளர்ந்த தென்னைமரங்கள் கடந்து தொடுவா னளவு பச்சையம் விரித்துக் கிடந்த பூமியின் உழவு மாடுகளை விற்ற கோடை நாளொன்றில் அப்பாவின் முகத்தில் வழிந்த மூதாதையரின் கண்ணீரை கழுவிச் சென்ற மழையில் முதன் முதலாய் நனைய பிடிக்க வில்லை..... ~ராஜன் விசுவா 10.4.16
-
- 5 replies
- 1.6k views
-
-
சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவும் ”நிவர் புயல்” பற்றிய கவிதை நிவர் புயல் உருவாகியதில் இருந்தே அது விவாதப் பொருளாகவே இருக்கிறது. இருக்கையின் நுணியிலேயே இருக்க வைக்கும் நிவர் புயல் பற்றி பொதுமக்கள் பேசாத நேரம் கிடையாது என்று சொல்லலாம். பொதுவாக மழைக்காலங்களில் மீம்ஸ்களுக்கு பஞ்சம் இருக்காது. இந்த காலமே மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடுவதாக இருக்கும். ஆனால் நிவர் புயல் உருவெடுத்த பின்பு டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதுதொடர்பான மீம்ஸ்களே பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன. அந்தவகையில் நிவர் புயல் பற்றிய அடுக்குமொழி கவிதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது வலைதளவாசிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த கவிதை வருமாறு:- …
-
- 0 replies
- 761 views
-
-
பாவி.................மாபாவி.........நீ மனிதனா இல்லை இராட்சதனா சூரனா இல்லை இராவணனா இடும்பனா இல்லை பெரும் பூதமா காடையனா இல்லை காட்டேரியா யாரடா நீ.......... கிராதகா........ கொலைகாரா........ இரக்கமில்லா பாதகா........... இலிவான சிறுமனத்துக்காரா இலங்கைத்தீவே கடலில் மூழ்கிவிடும் போல் உள்ளதே..... மூர்க்கனே நீ செய்யும் பாவங்களால். மகிந்த எனும் பேயே.... கிட்லரே மடிந்து போ.........நீ..... மடிந்து போ...................
-
- 0 replies
- 831 views
-
-
எழுந்திருங்கள் எழுந்திருங்கள் சோர்வதற்கான நேரமல்ல இது உறுதி கொள்ளுங்கள் சபதமெடுங்கள் மரணித்துப்போன மாவீரர்கள் மீது மாண்டுபோன மக்களின் மீது அவர்களின் தியாகத்தின் மீது சபதமெடுத்துக்கொள்ளுங்கள் உயிருள்ளவரை தமிழீழம் காண உழைப்போமென்று போராடுவோமென்று அழுதது போதும் விம்மியது போதும் துடித்தது போதும் துவண்டது போதும் இழந்தது போதும் நம்பிக்கை இழக்காதீர்கள் தலை நிமிருங்கள் புலியாக மாறுங்கள்............. முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள் தமிழீழம் காணவேண்டும் இப்போது விட்டால் எப்போதும் இல்லை எம் விடிவு புறப்படுங்கள் நீதி கேளுங்கள் ஐநாவிடம் உலகநாடுகளிடம் பார்க்கவில்லையா? உணரவில்லையா? இவர்கள் என்ன செய்தார்களென்று எம்மினத்தை…
-
- 0 replies
- 2k views
-
-
தமிழக பெண்ணியல் கவிதையாளினி குட்டி ரேவதி, மரபுகளை உடைப்பவர், ஆணுக்கான கட்டமைத்த தமிழ் வாழ்வை தன் கவிதைகளால் கேள்வி கேட்பவர். அவரின் சில கவிதைகளை இங்கு இணைக்கின்றேன். சூல் பாம்போடு பாம்பு பிணையும் அவை புன்னகைக்கச் சந்தனம் மணக்கும் வயிறு புடைக்க முட்டைகள் சுமக்கும் உயரக் கிளை தொங்கும் நிலவு நழுவ முட்டை மீது முட்டையடுக்கி அவயம் காக்கும் மார்பில் பால்முட்டும் குட்டிகளுக்கு உடல் விரித்து ஆனந்திக்கும் உயிரிழுத்துப் போட்ட பின்னும் கண் துஞ்சாமல் சூல் கொள்ளும் பசியென்றால் ஈனும் குட்டியுண்ணும் உறுப்பெல்லாம் கருப்பையாய் மாறிச் சுமக்கும் ஆணொன்று விரட்டிப் புணர உடலெல்லாம் கருக்கொள்ளும் வயிறு கிழித்துக் குட்டிகள் முதுகேறத் தாய் மரிக்கும் உ…
-
- 7 replies
- 15k views
-
-
ஒரு மார்கழி இருபத்தாறில்தான், பேராறுபோல் பெருக்கெடுத்தாய்.... எம் ஊருக்குள்ளே! பொறுமையாய் பொறுத்தாழ்ந்த பூமித்தாயை... நீ கண்ணீரால் நனைத்தது அன்றைக்குத்தான்! சொல்லாமல் கொள்ளாமல் வந்து, எங்களையெல்லாம் கொன்று போட்டாய்..! இத்தனைநாளாய் உன்னில் அள்ளியெடுத்த செல்வத்தையெல்லாம், ஒற்றைநாளில் மொத்தமாய் நீ அள்ளியெடுத்தாய்..!! கடல்தாயே... மறந்துவிட்டாயா? சுனாமியென்றால் எமனின் பினாமியென்று அன்றைக்குத்தான் தெரியும்! என்றுமே...இயற்கையைப் போற்றினோம்...! அன்றுதான் உன்னைத் தூற்றினோம்...!! என் பாட்டன் உன்மேல் வலைவீசினான், என் அப்பன் உன்னில் தூண்டில் போட்டான், எம் பிஞ்சுக்குழந்தை.... உனக்கு என்ன செய்தது? நீ அலையலையாய் அடிக்க... நுரைக்குமிழி பிடித்து விளையாடிய பிஞ்சுக…
-
- 14 replies
- 1.8k views
-
-
இரணைமடுத்தாயே ஏனம்மா? ------------------------------------------------- ஏனம்மா தாயே நீரோடு ஏனின்று நிலம் பிரிந்து நிற்கிறது யாரோடு யாருக்குப் புரிதலற்ற புதிதான புயலொன்றை உருவாக்கி யாழென்றும் வன்னியென்றும் ஏனையா கதைக்கின்றீர் போதாதா பெற்ற வலி தீராத துயரமுடன் மாறாத எங்கள் நிலை மாற்றிடத்தான் வேண்டாமோ! தேசியமாய் ஒன்றிணைந்து தாயகமாய் வாழ்ந்தோரை நீர்கொண்டு பிரிக்கின்ற நிலைமைதனை உணராமல் வாதங்கள் புரிந்திங்கு வளர்க்கின்றார் வேற்றுமையை யாரையா அது யாரையா! தமிழினத்தின் குருதியாற்றில் குளிர்காய நினைப்போரை சரியாக இனங்கண்டு எம் சந்ததிகள் தழைத்தோங்கச் சிந்திக்க வேண்டமோ! மோடையன் என்று சொல்லி விண்ணனர்கள் அடிபட்டு பலகூறாய் நின்பதொன்றே சிங்களத்தின் பெருவெற்றி சிரிப்பினிலே தெரிகிறது வேண்டா…
-
- 2 replies
- 698 views
-
-
மகிழ்ச்சியாய் வாழ அழகாய் வழிகாட்டுகிறது அன்பு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 938 views
-
-
எல்லாருக்கும் வணக்கம் கலியாணச் சடங்கு எண்டு சொல்லிப் போட்டு எங்கடை புரோகிதர்மார் பண்ணுற அட்டகாசம் இருக்குதே, சீயெண்டு போயிடும். ரெண்டு பேரையும் இருத்திவைச்சுப் போட்டு ஒருத்தருக்கும் விளங்காத (அவையளுக்கே விளங்குமோ தெரியாது) மந்திரங்களைச் சொல்லுறதென்ன, அதை இங்கை போடுங்கோ இதை அங்;கை போடுங்கோ அப்பிடிப் பாருங்கோ இப்பிடிப் பாருங்கோ, மூண்டு தரம் சுத்துங்கோ ஆறுதரம் இருந்தெழும்புங்கோ .. . . . அப்பப்பா .. . . கலியாணம் பேசேக்குள்ளையும் அந்தப் பொருத்தம் , இந்தப் பொருத்தம் எண்டு பாக்கிற ஆக்கள் மனப் பொருத்தம் எண்ட ஒண்டையும் பாத்தால் நல்லா இருக்குமெண்டு நினைக்கிறன். நான் என்ன சொல்ல வாறனெண்டால் ஆம்பிளையும் பொம்பிளையும் நான் கீழை சொல்லிற மாதிரி ஒருத்தருக்கொருத்தர் தங்கடை விர…
-
- 24 replies
- 4.5k views
-
-
நிகழ்காலமும் நிகழ்ந்த காலமும்... பெற்றவரை பிள்ளைகள் பேணிவந்த காலமது பிள்ளைகளால் பெற்றவர்கள் கூணுகின்ற காலமிது சொற்ப பணமிருந்தால் சொர்க்கம் தான் அந்தக்காலம் மெத்த பணமிருந்தால் நரகம் தான் இந்தக்காலம் அவதியுடன் வாழ்ந்தாலும் ஆண் உழைக்கும் காலமது சவுதிக்கும் சென்று பெண் உழைக்கும் காலமிது உயிர்காப்பான் தோழன் என்பர் உண்மைதான் அந்தகாலம் உயிர்கேப்பான் தோழன் இதை உணருகின்றோம் இந்தக்காலம் கட்டுப்பாட்டுடன் மனிதன் காதலித்த காலமது இஸ்டபடி இளைஞன் எதையும் செய்யும் காலமிது பூஞ்சோலைக்குள் மட்டும் புனித காதல் அந்தக்காலம் மிருகத்தின் சாலைக்குள்ளும் மீதமில்லை இந்தக்காலம் இன்றையதை விட நேற்றயது நல்ல காலம் நேற்றயதை விட நாளையது எப்படியோ???
-
- 6 replies
- 1.4k views
-
-
யாழிலை எவ்வளவோபேர் வவந்து கவிதைகள் எழுதி தள்ளினம் அதை பாத்த எனக்கும் ஒரு ஆசை கவிதைதஒண்டு எழுதவேண்டும் என்று அதுவும் காதல் கவிதை கண்ணைமுடிஎன்ரை முனியம்மாவை நினைச்சன் கவிதையா வந்து கொட்டிச்சுது அதிலை நீங்களும் நனைந்து கருத்தை சொல்லுங்கோ அப்பதான் அடுத்த கவிதைஎழுதுவன்* கோதுமை மா நீ கொதி தண்ணி நான் இருவரும் சேர்ந்தால் ஆசையயாய் சாப்பிடும் தோசையாகலாம் உள்ளி நீ மல்லி நான் இருவரும் சேர்தால் இரசம் ஆகலாம் மிதுவான தேங்காய்் பூ நீ மிளகாய் செத்தல் நான் சேர்த்தரைத்்தால் சம்பல் ஆகலலாம் வழிப்பான புளி நீ வாடல் மரக்கறி நான் வா சேர்ந்து சாம்பாறு ஆகலாம்
-
- 26 replies
- 4.2k views
-
-
மழை பின்னிப் பெருமழையெனப் பொழிகிறது மரங்களும் இலையுதிர்த்தலுக்காய் வண்ணம் பூசத் தொடங்கிவிட்ட இம்மண்ணில் இருத்தலுக்காய் இயந்திரமாகாவிடின் அன்னியமாகி தொலைந்தேவிடுவோம் என்னும் துயராய் வாழ்வு அசைகிறது சலனமின்றி மழையை ரசித்தலில் காற்றில் துகள்களாகி கரைந்துபோகும் தேசம் அது ஒரு கோடைத் துலம்பலில் பிரிந்துவந்த என் மண்ணில் இன்னமும் புதைந்திருக்கிறது மௌனத்துள் மழை தடுமாறிக் கருக்கொள்ளும் மேகங்களும் காற்றள்ளப் போய்த் தொலைகிறது... வெள்ளிகள் முளைக்காத இருண்ட இரவுகளில் கடந்துபோகிறது துயர நிலவு தடுமாறி உயிராகும் வார்த்தைகளை கண்களில் நீர் அள்ள, கடந்துபோகும் காலத்துடன் மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன். ஆழக்கடலில் கலந…
-
- 4 replies
- 650 views
-
-
தேசத்தின் குரல் பாலா அண்ணா புலிகளின் குகையில் வாழ்ந்த ஒருசிங்கம் பேராசான் அண்ணன் அன்ரன் பாலசிங்கம் அழுகுரல் ?#8220;யவில்லை உலகம் எங்கும் அண்ணாவின் பிரிவினைத் தாங்கவில்லை நெஞ்சம் தனக்கென வாழாத தியாக உள்ளம் தமிழ்மண் வாழவேண்டும் என்பதே எண்ணம் இனத்தின்மேல் எப்போதும் அளவற்ற பாசம் இதனால்தான் தவிக்கின்றார் தேசமெல்லாம் சோகம் தேசத்தின் தியாகிகளை துதிக்கின்ற நாளில் திரள்திரளாய் தேடியே வந்திடுவார் கூடம் தேசத்தின்குரல் பேச்சில் வேடிக்கை இருக்கும் தேசியத்தின் கொள்கைகளும் கடமைகளும் நிறைக்கும் கற்றதினால் கூறிவைத்தார் கலாநிதி என்று மற்றவர்கள் கூறிவைத்தார் மதியுரைஞர் என்று சுற்றமெல்லாம் கூறுகின்றார் பிதாமகன் என்று பற்றுவைத்தோர் கூறுகின்றார் அவதா…
-
- 4 replies
- 1.4k views
-