கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
மே 1 தொழிலாளர் தினம் உழைப்பவன் காவும் இந்த உலகத்தில் இல்லாமை என்றோர் காலம் இல்லாது இருக்க வேண்டும் எங்குமே சமத்துவமாய் வாழ்வு வேண்டும் எப்போதும் சுரண்டல் ஒழிய வேண்டும் உழைப்பவனுக்கே உலகமதாக வேண்டும் எல்லோர்க்கும் இவ்வுலகில் உணவு வேண்டும் ஒரு போதும் யுத்தம் இல்லா உலகு வேண்டும் இனி எப்பவுவே தர்மமாய் நீதி கொண்டு உலகு சுழல வேண்டும் எங்குமே குழந்தைகளின் பாடல் அது இசைக்க வேண்டும் எப்போதும் ஒரு பூ பூப்பதோடு உலகமது விடிய வேண்டும். பா. உதயன் சக்தி படைத்த முதலாளித்துவவாதிகள் உழைக்கும் ஏழை மக்களின் உழைப்பை சுரண்டுகின்றான். Dominant capitalists group within society exploit the proletariat social group. …
-
- 6 replies
- 491 views
-
-
ஆறு வருடங்கள் ஆறுமோ? சொற்கேளாப்பிள்ளையெனினும் ஏறிக் கூரையில் ஏந்திய பொறி ஏற்றாதா சுடர் ஏங்கியமக்கள் நெஞ்சிலும் விழுந்தன தணல்கள். அகம் அழிந்து திரிந்ததும் அறம்பிறழ்ந்ததும் களத்தில் ஆயிரம் கணைகள் பறந்ததும் மறவர்மடிந்ததும் கையறுந்ததும் கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் தீய்ந்தது காடு படர்ந்தது நெருஞ்சி திறமென்றதுஉலகம் தீராது பிணக்கு வராது வழக்கு வரினும் பிழைக்கும் கணக்கு கால ஆற்றில் கண்ணீரா செந்நீரா? படகுகள் பார்ப்பதில்லை போகட்டும் உணர்வழியாது நினைவழியாது என்பிள்ளை தன்பிள்ளைக்குச் சொல்லும் இச்சாவின் கதை எழுதும்: ஈழம் அரும்கனவு. தேவ அபிரா வைகாசி 2015 http://www.globaltamilnews.net/GTMNEd…
-
- 0 replies
- 516 views
-
-
விளக்கு கம்பங்கள் விடுமுறை இன்றிரவிற்கு இரவுக்காவலாளி வேலை ஞாயிறு வர காத்திருந்த திங்கள் குளமும், எரியும் நிறைந்த கார்காலம் முடிந்த முன்பனிக்காலம் குளத்தில் அன்னம் ஏற்படுத்திய நீர்த்திவலை தொடமுன் கரையை தொட நீந்தியதிலோன்று அகாலத்திலிருந்து காத்திக்கிடந்தவனின் நீர்த்திட்டில் வடக்கே பலமைல் பிரயாணம் சென்று நடுநிசியில் வீடு திரும்பிய குடியானவன் மனம்போல் ஆரவாரமின்றி அமைதியாய் சூரியகாந்தி ஆதவன் வரவைநோக்கி சரக்கு ரயில் தண்டவாளத்தை கடந்து வெகுநேரம் கழிந்த பின்னும் கையசைத்தபடி காலைக்கடன் முடிக்க சென்ற சிறுவர்குழாம் ஓட்டமும் நடையுமாய் வரப்பில்போகும் அன்னம்மா இடையில் மோதும் தூக்குவாளியின் ஓசைகேட்டு நிமிர்ந்த நடவுச்சிலைகளின் ச…
-
- 0 replies
- 978 views
-
-
செய்தி : அமெரிக்காவில் இருந்து கொழும்பு நோக்கிய பயணம் செய்த சிங்கப்பூர் கப்பல் அமெரிக்க தேசிய கீதத்தை எழுதிய கவிஞர் பிரான்சிஸ் ஸ்காட் கீ அவர்களின் பெயர் கொண்ட பாலத்தில் மோதியது. பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் இன்று ஒரு கப்பலால் காணாமல் போனது ஒரு கப்பல் பாலத்தை இடித்தது ஒரு கப்பல் அவசர நிலையைப் பிரகடனம் செய்தது ஒரு கப்பல் அமெரிக்க தேசிய கீதம் பாடிய கவிஞன் பெயரை தண்ணீரில் வீழ்த்தியது ஒரு கப்பல் இலட்சம் பேரின் வேலையை கேள்விக்குறி ஆக்கியது இன்றைய குளிர் இரவில் அந்தப் பயங்கரம் நடந்தது இரும்புச் சட்டங்கள் காற்றில் பறந்தன பயணிகள் பலர் நீரில் மூழ்கினர் ஒரு நாட்டின் அடையாளம் நதியில் மூழ்கியது ஒரு கப்பலால் அதைச…
-
-
- 12 replies
- 931 views
-
-
கௌதம புத்தருடன் - ஒரு கவிதா நேர்காணல் ஜெ.கி.ஜெயசீலன் நான்: தார்மீகப் பெரு நெறியைத் தக்கபடி போதித்து யார் மீதும் பகையில்லா யாகத்தைச் செய்தவனே! உனதடியை வணங்கி வரும் உன்னரிய புத்திரர் தாம் மனதறியச் செய்துவரும் மா கொடுமை அறியாயோ! ஊருறங்கும் நள்ளிரவில் ஊளைவிடும் 'ஷெல்' நரிகள்! போருறங்காப் பூமியிதில் பொழுதெல்லாம் குண்டு மழை நீ வளர்த்த கருணையினை நெஞ்சத்திற் பேணாமல் தீ வளர்த்த தென்னிலங்கை திருந்த வழி சொல்வாயா? புத்தர்: அன்பார்ந்த தமிழ் மகனே! அவலத்தின் உள்ளே மண்பாய்த்து அழிகின்ற மடமை பல கண்டேன்! போதி மர ஞானமதைப் போதித்தும் என்பக்தர் நீதி தரவில்லையெனும் நீசத்தாற் துடிக்கின்றேன்! கொல்லாமை பேரறமாம்; குரலெடுத்துக் கூறிய என் சொல்லாலே ஏமாற்றிச்…
-
- 1 reply
- 606 views
-
-
நட்போடு வாழ்தல் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்னும் தொடுவானில் கையசைக்கும் மணக்கோலச் சூரியன். கீழே படுக்கையில் பொறுமை இழந்த பூமிப் பெண் வெண்முல்லைப்பூ தூவிய நீல மெத்தைவிரிப்பை உதைக்கிறாள். எப்படியும் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். என் இரு கண்களிவை என்ற துடுப்புகளை கரையில் வீசிவிட்டுச் செல்கின்றான் மாலுமியும். வழித்துணையை போற்றினும் புணரினும் எப்படியும் ஒருநாள் வந்துவிடுகிறது விடைபெறும் நேரம். தோழி உடன் இருக்கிற இன்பங்களும் பிரிகிற துன்பங்களும் அடுக்கிய நினைவு நிகழ்வு நூலகம் அல்லவா நம் வாழ்வு. பறவைகளாக உதிர்ந்து உதிர்ந்து ஆர்ப்பரித்த வானம் இனி வீதியோரப் பசும் மரங்களுள் அடைந்துவிடும். என் தலைக்குமேல் இன்று நிலா முளைக்குமா …
-
- 6 replies
- 1.9k views
-
-
அள்ளி எடுப்ப தூஉவும் இன்பம் எள்ளித் தடுப்ப தூஉவும் இன்பம் பள்ளி கொடுப்ப தூஉவும் இன்பம் தள்ளிப் படுப்ப தூஉவும் இன்பம் (பெண்ணே உன்னை அள்ளி எடுத்து அணைக்கும் போது இன்பமாகின்றது, அவ்வேளை நீ எள்ளி நகைசெய்து தடுப்பது இன்பமாகின்றது, பள்ளியறையில் நீ கொடுக்கின்றதெல்லாம் இன்பமாகின்றது, இருந்தும் ஊடலுற்று நீ தள்ளிப் படுப்பது கூடவும் அல்லவா இன்பமாகின்றது!) -அன்பு மனைவிக்காக 14பெப்பிரவரி2016-
-
- 0 replies
- 1.1k views
-
-
அப்பா என்றால் அன்பு……. எம் முகவரிகளுக்கு முதலெழுத்து எம் அகரங்களுக்கு தலையெழுத்து நாம் முந்தி நின்று முகம்காட்ட தன்னை தந்து உருவாக்கிய சிற்பி குடும்பச் சுமைகளில் அன்னைக்கு ஊன்று கோல் இடுக்கண் சமயங்களில் இவரின் சொல் ஆறுதல் மனம் நோகும் வேளையிலோ இவர் வாய் மொழி மயிலிறகு குடும்ப வட்டத்திற்குள் உலகத்தையே உற்று நோக்கிய தத்துவ ஞானி இசை இவரது உயிர் இனிமை இவரது குணம் மௌனம் இவர் தரும் தண்டனை மனமெல்லாம் மழலைகள் சிந்தனை அன்பு இவரது மந்திரம் இவரிடம் இல்லை என்றும் தந்திரம் கல்விக்கு இவர் வாழ்வில் முதலிடம் கடமைதான் இவரது புகலிடம் இறைவனுடன் உறவாட விருப்பம் ஏராளம் இவரின் கை மட்டும் கொடுப்பதில் தாராளம் ஏம் தந்தை எமைப்பிரிந்து ஆண்டுகள் பதினாறாகு…
-
- 11 replies
- 17.7k views
-
-
1)என் இனத்தின் சில மனிதங்கள்..... போராட்டம் வீறு கொண்டு பயணித்த நாட்களில் விடுதலை கனவினை உன் உரிமைக்காக தங்கள் வாழ்வினை அர்பணித்த புலிகள் மேல் நீ துரோகத்தின் காலில் கிடந்தது ஆயிரம் ஆயிரம் இழிநிலை வதை சொற்கள் வீசினாய் என் இனத்தின் சில மனிதங்கள்..... * சிறுவர்களை பிடிபதாகவும் * காணிகளை பறிப்பதாகவும் நடக்காதவற்ரை நடந்ததாக சித்தரித்த என் இனம் ஈழத்திலும் / புலத்திலும் ஆயிரம் ஆயிரம் ஊடகத்துக்கு செல்விகள் வழங்க்கினீர்களே ? ஆனால் இன்று கண் முன்னே வயது வேறுபாடு இன்று பிஞ்சுக் குழந்தை கூட இனவெறியனாலும் சில துரோக காடையர்களாலும் சிதைக்கபட்டு எம் இனதின் ஆணிவேர்களே அறுக்கபட்டும் செல்கிறதே எங்கே உங்களின் வாய்மையின் வீச்சு ?... இன்று எங்கே உங்கள் ஊடக பற்று ! .... புத்த…
-
- 125 replies
- 7.6k views
-
-
-
- 9 replies
- 787 views
-
-
உள்ளிருந்து ஒரு குரல் நில்லுங்கள் மனிதர்களே! வண்ணங்கள் கொண்டு எங்கள் வாழ்க்கையை வனைய வேண்டாம் நிறையப் புனைகதை புனைந்து எங்களுக்கு அனுதாபம் தேடித்தரவும் வேண்டாம் நாங்கள் தொலைத்ததில் கொஞ்சத்தையும் சுமப்பதில் கொஞ்சத்தையும் அங்கங்கே எழுத்துப்பிழைகளோடாவது எழுதினால் போதும் நாங்கள் மீண்டும் உயிர்பெறுவோம். நம்புங்கள் மனிதர்களே! முள்ளுக்கம்பிகளுக்குள் முளைத்து நிற்பவை எங்கள் கனவுகளின் சமாதிகளே மீட்பின் பெயரால் நடந்துகொண்டிருப்பது அழிப்பின் அதி உச்சமே இங்கு வசந்தம் என்பது வாடகைக்கு கூட இல்லை மறுவாழ்வு என்பது மருந்துக்கும் இல்லை ஒரு இரவுக்கும் பகலுக்கும் இடையில் பல …
-
- 4 replies
- 1.1k views
-
-
அவர் அப்படி ஒன்றும் திறமில்லை அவருக்கு யாரும் இணையில்லை அவருக்கு இளமையில்லை ஆனால் அது ஒரு குறையில்லை அவர் பெரிதாக சட்டம் படிக்கவில்லை அவரை நாம் படிக்கவில்லை அவர் பிடித்த சிங்க கொடி பிடிக்கவில்லை இருந்தும் கவனிக்க மறுக்கவில்லை அவருக்கு ஈழம் பிடிக்கவில்லை அவருக்கு தேசியம் பிடிக்கவில்லை அவருக்கு மாகாணசபை பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை புலம்பெயர் தமிழனை பிடிக்கவில்லை அவனின் துட்டு பிடித்திருக்கு அது ஒரு குறையில்லை வாக்குகளை கூட்டமைப்புக்கு போடுவதில் தப்பில்லை
-
- 13 replies
- 1k views
-
-
ARM INAS வாகனத்தில் பெரிதாய் நாங்கள் மாஷாஅல்லா ஒட்டினோம் அவர்கள் புதுசரணய் ஒட்டினார்கள் நாங்கள் லாஹிலாஹஇல்லாவை ஒட்டினோம் அவர்கள் தெருவன் சரணய் ஒட்டினார்கள் நாங்கள் Proud to be a Muslim என்று ஒட்டினோம் அவர்கள் சிங்கலே ஒட்டினார்கள் நாங்கள் கஃபா பொம்மையை வைத்தோம் அவர்கள் புத்தர் சிலையை வைத்தார்கள் நாங்கள் மூளை முடுக்கெல்லாம் பள்ளி கட்டினோம் அவர்கள் சந்திகளில் எல்லாம் சிலை வைத்தார்கள் நாங்கள் ஊருக்கே கேட்க பயான் போட்டோம் அவர்கள் உலகத்துக்கே கேட்க பண போட்டார்கள் நாங்கள் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பித்தோம் அவர்கள் பூமிபுத்ரா கட்சியை ஆரம்பித்தார்கள் நாங்கள் S….TJ…
-
- 0 replies
- 863 views
-
-
மேமாதம் எங்களின் சா மாதமாய்..... முள்ளிவாய்க்கால் ஓராண்டு நினைவுகளோடு ஒலிவடிவில் கேட்க இந்த இணைப்பை அழுத்துங்கள்.
-
- 0 replies
- 835 views
-
-
உலகின் அத்தனை தட்டுக்களிலும் சம்மணம்போட்டு உட்கார்ந்திருந்த அத்தனை கிண்ணங்களும் பலவித எண்ணங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தன! வாழ்வெனும் விருந்துக்கு அங்கிருந்த அனைவரும் கட்டாய விருந்தாளிகள்! பித்துப் பிடித்து தேடியலையும் சுயநல விரல்களுக்கு... அப்படியொரு வெறி! போட்டிபோட்டு முண்டியடித்து... ஏந்திக்கொள்கின்றன கிண்ணங்களை! சில வாய்கள் சிரித்தபடியே செங்குருதியை பருகிக்கொண்டிருக்கின்றன! வேண்டாமென ஒதுங்கிப்போகும்... ஒவ்வொரு நொடியிலும், எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியிலும், மானிட விரல்களுக்குள்... திணிக்கப்படுகின்றன கிண்ணங்கள்! எந்தக் கிண்ணம்...? எப்பொழுது...?எவர் கரங்களில்...? என்பதெல்லாம்....... எவருக்கும் தெரிவதில்லை! அவசியமுமில்லை...!! எதை ஏந்துகிறோமோ…
-
- 9 replies
- 1.4k views
-
-
காதலித்ததற்கு பிறகு காத்திராமல் கால் வலிக்கும்-- கதைத்திராமல் கண்கள் பேசும்-- தூக்கம் தூரத்திலிருக்கும்-- நினைவுகள் மலர்ந்திருக்கும்-- தேங்கித் தேங்கி அன்பு ஊற்றெடுக்கும்-- வானம் வெளித்திருக்கும் பூமி நனைந்திருக்கும்-- தினம் தோறும் ஆவாரம் பூ மலரும்-- காணும் முகமெல்லாம் காதலனைப் போலிருக்கும்-- பொல பொல வென்று பாசம் பெருக்கெடுக்கும்-- தூங்காமல் கனவு வரும்-- ஆக மொத்தத்தில் பைத்தியம் பிடித்து விடும்--. நன்றி :P
-
- 9 replies
- 1.9k views
-
-
காதல் கவிதைகள் செய்யத் தேவையான பொருட்கள்: ஒன்றிரண்டு இதயம் மூன்று நான்கு வேதனை ஒரு சிட்டிகை விழிகள் ஒரு தேக்கரண்டி அழகு ஒரு தேக்கரண்டி உயிர் உளறல் - தேவைக்கதிகமான அளவு இது இருந்தால் போதும். சுவையான காதல் கவிதைகள் தயார் எனது பெப்ரவரி 14 - காதலர் தின காதல் கவிதைகள் எழுத எனக்கு 5 நிமிடங்கள் கூட ஆகவில்லை. அவ்வளவு எளிது இந்தக் காதல் கவிதைக்ள். நீங்களும் ஒருமுறை முயற்சி செஞ்சு பாருங்க..
-
- 16 replies
- 2.8k views
-
-
வேதனையின் ஈரம்... தினசரி இப்படித்தான் அழிக்க நினைக்கின்ற உன் நினைவுகள்-என் மனத்தோட்டத்தில் செழித்து கிளைபரப்ப விழியின் ஓரம் வரை வியாபிட்த்து நிக்கிறது வேதனையின் ஈரம்!
-
- 5 replies
- 1.6k views
-
-
சங்கம் வளர்த்து தமிழ் வளர்த்த குடி ... சங்கள் தொடங்கி வயிறு வளர்க்கிறது .. மாதம் மாதம் கூடுகிறார் சேர்கிறார் .. டீயும் ..வடையும் ..ரோலும் கட்டியபடி .. ஒரு குடும்பம் அதில் நாலுபேர் நாங்களே .. எல்லாம் மாமன் மச்சான் சித்தப்பன் .. நீ இன்று தலைவர் நான் நாளைய தலைவர் .. எங்களுக்குள் எடுக்கும் தீர்மானம் இது .. கணக்கும் இல்லை வழக்கும் இல்லை .. கேள்விகேட்க பத்து ரூபா கொடுக்கணும் .. பதில் சொல்ல செக் கொடுக்கணும் போல .. சிட்டைகள் வந்து விழுகுது சிரமதான வேலையாம் .. சீரழிந்து கிடக்கும் உறவு பாணுக்கு காசில்லாமல் ஊரில் .. சீட்டு காசும் வட்டிகாசும் வெள்ளையா ஆகுது சங்கத்தில் .. சின்னவீடு எல்லாம் பெரியவீடு ஆகுது லோனில் .. சின்னக்கடை சூப்பர் மார்கெட் ஆனது ஊரான் காசில்…
-
- 3 replies
- 818 views
-
-
மழைத்துளியின் சோகங்கள் மண்ணுக்குத்தெரிவதில்லை மழலையின் இனிய மொழி மற்றவர்க்குப் புரிவதில்லை மலர்களின் வாசம் தன்னை மலர்க்கூந்தல் அறிவதில்லை மங்கையின் மன ஆழத்தை மன்மதனும் அறிந்ததில்லை இதயத்தின் உணர்வுகளை இதயங்கள் உணர்வதில்லை தந்தையின் சுமைகள் இளமையில் புரிவதில்லை தாயின் அன்புதன்னை தானிருக்கும்போது புரிவதில்லை கண்ணீரின் ஈர வலியது கண்களுக்குப்புரிவதில்லை வானவில்லின் வர்ண ஜாலம் சந்திரனுக்குத்தெரிவதில்லை உடலின் முடிவுதன்னை உணர்வுக்குப்புரிவதில்லை காலனின் வருகைதன்னை காலத்துக்கும் தெரிவவதில்லை காதலின் வலிகள் காமுகர்க்குப்புரிவதில்லை நட்பின் இலக்கனம் நயவஞ்சகர்க்குப்புரிவதிலை இலக்கியனின் உணர்வுகள் இங்கு உங்களுக்குப்பு…
-
- 23 replies
- 2.9k views
-
-
""]""புலியாகி போறேன் நான் எல்லை....காக்க..."" அழுதழுது தினம் களைத்து அழுவதற்கு கண்ணீரில்லை.... அவலம் என்ற வாழ்வியலும் அழிவதாக தெரியவில்லை... ஓடி ஓடி ஒழிந்து நின்றோம் இனி ஒடுவதற்கு ஊரில்லை... எம் உயிரை நாம் காக்க எமக்கு வழி தெரியவில்லை.... பட்டினியால் தவிக்கின்றோம் பசி போக்க முடியவில்லை... நின்மதியாய் உறங்கியெழ நித்தம் இங்கு முடியவில்லை... நித்தமொரு சாவீட்டை தவிற்க்க எம்மால் முடியவில்லை... என்ன செய்வோம் ஏது செய்வோம்... எமக்கு வழி தெரியவில்லை.... நாள் தோறும் வந்து பகை தருகுதெமக்கு தொல்லை... அதனாலே போறேன் நான் காப்பதற்கு எல்லை...!!! - வன்…
-
- 2 replies
- 1.1k views
-
-
சத்திய சோதனை-பா.உதயன் கொடிய இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டு இருந்தது முள்ளிவாய்க்கால் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவை பார்த்தோம் இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் எங்களின் வீட்டில் யூதர்கள் வந்தனர் ஜேசுவை கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் உயிர்த்து இருந்தவர்களை இன்னும் ஒரு முறை புதைத்தனர் கனவுகள் உடைந்து கல் அறைக்குள் ஒழித்து கொண்டன முள்ளிவாய்க்கால் முழுமையாக மூச்சு இழந்தது மிஞ்சி கிடக்கும் சாம்பலில் இருந்து எலும்பை எண்ண அங்கு யாரும் சாட்சிக்கு இல்லை …
-
- 2 replies
- 646 views
-
-
பல்லவி தமிழன் தமிழன் ஒருவன் தங்கத் தமிழன் ஒருவன்-எங்கள் தலைவன் தலைவன் மறவன் தமிழர் படைத்த பிரமன்- அண்ணன் பிரபா பிரபா பிரபாகரன் பிரபா பிரபா பிரபாகரன் சரணம் 1 தமிழ்த்தாய் கண்ட கனவுஇவன்-அந்தக் கனவோடு முளைத்த நனவுஇவன் அன்னை தமிழால் சிகரமிவன்-எங்கள் அன்பை மதிக்கின்ற தலைவன்இவன் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 2 பார்வையிலே தமிழ்ப்பூமியிருக்கும் பண்டார வன்னியனின் ஆசியிருக்கும் பாயும் விழிகளிலே தீயிருக்கும் படை விரட்டும் திறன் நெஞ்சிலிருக்கும் பகலில் அண்ணன் சூரியனே இரவில் அண்ணன் சந்திரனே சரணம் 3 நாட்டை நம்மை நேசிப்பவன் தமிழ்விடுதலையை என்றும் யாசிப்பவன் போரிலே செந்தமிழைப் பேசுபவன்- அ…
-
- 3 replies
- 1.3k views
-
-
அன்னியத்து சிங்களங்கள் அரியாசனம் ஏறி விட்டு எம் தமிழை அழிக்கின்ற இன்னலதை காணலயோ...??? வந்தேறு குடிகளென்று- பகை வாய் விட்டு சொல்லையிலே எங்களது தமிழ் நாடு ஏனென்று கேட்கலயே.... உண்மையதை கண்ட பின்னும் ஊமையாகி நிற்கையிலே தன் மானம் உள்ளயவன் தலை நிமிர்தி கேட்கையிலே... குற்ற வாளி யென்றவனை கூண்டிலேற்ற முனையலாமோ...?? சட்டங்கள் என்று வந்து சங்கடங்கள் கொட்டலாமோ....?? கதிரையது ஏறிவிட கட்சி மாறும் கூட்டங்களே மனு நீதி விற்று விட்டு மன்றிலேறி என்ன செயவீர்....?? கொல்லர்கள் ஆழ்கின்ற கோட்டையது போலும்...??- அங்கு தமிழர்கள் அழிகையிலே தம்பட்டம் அடிக்கின்றீர்.... ''பாரதத்தின் மந்திரிக்கு பாதையிலே அடித்தவனை தூக்கி வைத்து தாளாட…
-
- 3 replies
- 1.4k views
-
-