Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by அறிவிலி,

    இன்னொருமுறை உனக்கு பிறப்பு வாய்த்தால்....... எங்கள் இனத்தில்.. பிறக்காதே! எனக்கு அப்பா.. நீ தானென்று...... சத்தமிட்டு சொல்வேன்.... அதில் எந்த களங்கமும் என் ... அம்மாவுக்கும் வராது...! ஏன் என்றால்... என் அம்மாவின்.. தாத்தாவுக்கும்.. நீர்தானே அப்பா! உயிரின் தொடக்கம் என்பது... வெறும் பிறப்பு ... உறுப்புக்கள் காறி... துப்பும் சங்கமம் இல்லை..! மானம்....! பிறந்து ..தின்று.. உண்டு ..ஒய்யாரமா.. கதை-பேசி.. சத்தமெழுப்பி... நாளையபொழுதில் .. செத்துப்போனால்... காக்கை கூட... தன் இனத்துக்காய்..... அழும்! ஊருக்காவே...வாழ்ந்து.. போனியே உனக்கு ஏதாச்சும் தந்ததா.. இந்த சனம்? நம்பினவன.. சந்ததியை... …

  2. புலம்பெயர் தேசத்தில் வாழும் என் உறவினர் ஒருவரின் மேடை நிகழ்ச்சி ஒன்றுக்காக என்னால் புனையப்பட்ட வரிகளுக்கு அவரே குரல் வடிவம் கொடுத்துள்ளார். அதன் வடிவம் கீழே இணைக்கப்பட்டுள்ளது. அக்காணொளியில் அவர் பிறந்த மண்ணே பின்னணியாக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் காட்டப்பட்டுள்ள அரசமரம் இன்று எம்மோடு இல்லை. ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ நான் தின்று வழ்ந்த மண்ணது எனைத் தின்னும் பாக்கியம் இழந்திடுமோ எட்ட நின்று ஊர் பார்த்தால் பச்சை கொடியசைக்கும் ஆலமரம் காலாற ஒரு கல் கவ்வுகின்ற தென்றல் முப்பொழுது போனாலும் முகம் சுழிக்கா திண்ணை அது ஒரு முறை என் மண் போக வேண்டும் விடுமுறை தான் ஒன்று தாறீரோ திட்டம் போட்டு அறுந்த விழ…

    • 10 replies
    • 3.5k views
  3. ஊரோடு என் உடல் கரையும்! உன்னோடு நானிருந்து உறங்காமல் விழித்திருந்து கண்ணால் தழுவுவதும், - உன் கவின் பூத்த புன்னகையில் நான் காணாமல் போவதுவும், என்னிரு கை விரித்து உன்னை நான் அணைப்பதுவும், உரிமையோடு ஆண்டு நீயென்னை அடக்குவதும் எப்போது நிகழுமென்று என் நெஞ்சம் ஏங்குதிங்கு! உள்ளங் காலடியில் உன்மேனி உரசும் சுகம் என் காயச் சிலிர்ப்பினிலே கவி எழுதத் தூண்டிலிடும். கள்ளமின்றிக் கொள்ளை கொண்ட கனித்தமிழ் காவிரியே! தள்ளாடும் இதயமடி தவிப்பணைக்க ஏது வழி? உன்னடியில் தளமிட்டு உலக உலா செல்வதற்கு கண்ணடியில் கனவு சேர்த்துக் காத்திருக்கேன் கண்ணாட்டி வேளை வரும் என்று நீயும் வெகுநாளாய் இயம்புகிறாய் காலம் வரும் என்று நானும் காதல் கள்ள…

  4. Started by nunavilan,

    ஊர் நேற்றெம் ஊரிருந்த காற்றில் இதமான குளிரும் நேர்த்தியான சுகமுமிருந்தது சாணிமெழுகிய தலை வாசலில் சந்தனக் காப்பென்னும் புனிதமிருந்தது. வாசலிறங்கக் கோலமிருந்தது. வயலில் நம்பிக்கை விளைந்தது. வெளியே அறியப்படாத எத்தனையோ உள்ளே வெளிச்சம் நல்கின. அரைஞாண் கயிற்றுக் கோவணத்திலும் குறுக்காகக் கட்டிய மாராப்பிலும் நிறையும் மனமிருந்தது. மின்சாரம் மினுங்காத ஒழுங்கைகளில் இருளெனும் எழிலிருந்தது. அள்ளிய ஒரு மிடறு நீரிறக்க சுவாசம் சீராகும் சுகம் தெரிந்தது. ஆலமரம் விசிறிய காற்றின் தாலாட்டில் தேவ நிலை சித்தித்தது. ஊர் நிறைந்த கோயில்மணி நாதமும், கூத்துப் பாட்டும், நாதஸ்வர மங்கலமும் தூக்கித் தட்டாமாலை சுற்றிவிட்டு எங்கே துரத்திப் பிடியென்பதாய் ப…

    • 5 replies
    • 659 views
  5. வெல்ல வையுங்கள் வெட்டி வீழ்த்துகிறோம் வீர வசனம் பேசி இரத்தத் திலமிட்டு வீடுகள் தோறும் தன்னாட்சிக்கு உரிமை கேட்டு உரிமையோடு வர.. மக்களோ அள்ளிக் கொடுத்து நம்பிக் கெட்ட காலம் ஒன்று.. 70 களில் வந்து போனது..! மீள அது மீளாதிருக்க தம்பி வழியில் போர்த் தரையில் இட்ட விதை.. மக்கள் இரத்தம் சொரிந்து மாவீரர் தியாகத்தால் உரமிட்டு வளர்த்து விட்டது தமிழ் தேசிய விருட்சமாகி இன்று.. ஊர் கூடி தேர் இழுக்கும் தேரடியாகி நிற்குது. மீண்டும் “மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” அண்ணல் திலீபனின் நோன்பிரு நாளில் ஓர் வெற்றிச் செய்தி “கோட்டை வீழ்ந்ததாம்” என்றது போல் ஆனது செவிகள் இனிக்க கடந்து போன துயரங்கள் நினைவில் ஆட..! பிபிசி.. ராய்டர் எல்லாம் உற்று நோக்க நடந்து முடிந்திருக்கு தேரோட்டம். “தன்னாட்சிய…

    • 14 replies
    • 2.2k views
  6. கண்ணெதிரே கலையுமா கனவு? மண்ணெனவே உதிருமா மனது? நெஞ்சுக்குள்ளே கோடிட்ட உருவம் ஒப்பேற முன்னரே உருகியா போகும்? இருள் விலகமுன்னமே உருகி அழிந்திட மெழுகுவர்த்தியா எங்கள் சுதந்திர வேட்கை? இது காலச்சுழி சுழற்சியில் சிக்குறுதல் இயல்பு. எனினும் சோரக்கூடாது. சுழலின் வேகம் நீளாது திடீரென்று அடங்கும். தட்டாமாலை சுற்றிவிட்டு தொப்பென்று போட்டுவிடும். நம்பிக்கை இருந்தால் மட்டுமே நாம் பிழைக்க முடியும். மயக்கமின்றி கால்கள் நிலை கொள்ள வேண்டும். மனம் சோர்ந்தால் மயக்கம் மடியேறி மகுடியூதும். உறக்கம் உச்சந்தலையில் உட்கார்ந்து கொள்ளும். இன்றைய பொழுதுகள் எமக்கானவை. ஊர்கூடி இழுத்த விடுதலைத்தேர் முக்காற்சுற்று முடித்துவிட்டது. சில அதிவிவேகிகள் ஆரம்பப் புள்ள…

  7. ஊற்று - தேநீர் கவிதை சக்கையாகிப் போன ஒரு பழைய நினைவின் இடுக்கிலிருந்து உருண்டோடி வருகிறது * காடிருந்த நிலத்தின் வியர்வையாக வழிகிறது * புதையுண்ட தனிமையின் விதையொன்று மரமாகி உதிர்க்கும் முத்து முத்துப் பூக்களாக உதிர்ந்து கொண்டிருக்கிறது மூலம் காண முடியாத ஆழத் துயரில் ஊற்றெடுத்து தளும்பிக் கொண்டிருக்கிறது * கால வெறுமையின் ஊதுகுழல்களால் ஊதப்படும் சாம்பல் பூத்த கங்குகள் எரிவதில் பொங்கிப் …

    • 1 reply
    • 977 views
  8. கருணாநிதிக்கு பல்வேறு தலைப்புகளில் பாராட்டு விழா நடத்தியாகி விட்டது. சமீப காலமாக பாராட்டு விழா நடத்தி நீண்ட நாட்கள் வேறு ஆகி விட்டன. அதனால் என்ன செய்யலாமென்று, திமுகவினர் யோசித்த போது அவர்களுக்கு வந்த திடீர் யோசனைதான், “ஊழல் மன்னன்“ என்ற பட்டத்தை கருணாநிதிக்கு வழங்கலாம் என்ற யோசனை. இதையொட்டி, நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு நம்ப தமிழ்நாடு சினிமா ராஜ்ஜியத்தின் ஆஸ்தான கவிஞர்கள் வைரமுத்துவும் வாலியும் கவிதை வாசித்தால் எப்பிடி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை....இதை நீங்கள் யாரவது கண்டினியூ பண்ணவும்... வைரமுத்து… அன்று சர்க்காரியா சொன்னார். நீ விஞ்ஞான முறையில் ஊழல் செய்பவன் என்று. ஆனால் இன்று விஞ்ஞானத்திலேயே நீ ஊழல் செய்திருக்கிறாய். வானில் உள்ள தேவர்களின் எ…

  9. சாம்பல் மேட்டில் போட்ட .. பூசணி விதை முளைத்து ... கொடிவிட்டு அடர்த்து பரந்து.. நாலு திக்கும் அகல விரிந்து .. தனக்கென ஒரு ராஜ்ஜியம் இட்டு .. பச்சை பசேலென கண்குளிர இருந்த்தது .. அதில் பூத்த பூக்களில் காய்யாகி வந்த .. ஒரு பிஞ்ச்சு மண்ணுக்கு தன்னை கொடுக்க .. மிகுதி இரண்டு எவனோ களவாடி போக .. தேடிய தோட்டக்காரி கிடைக்காது ஏங்க.. கூட இருந்த இளம் பிஞ்ச்சும் சேர்த்து போக .. பார்த்து இருந்த திருடர் தாம் பிடிபடுவம் .... என்னும் பயத்தில் சூழ்ச்சி செய்தனர் ... காணியும் தோட்டமும் உன்னது இல்லை .. அதில் பூசணி கொடியே இருக்க வில்லை .. என்று புரளி கிளப்பி பொய்யர் ஆக்கி .. கொடியை மண்ணுடன் பிஞ்ச்சுடன் சேர்த்து .. பிடிங்கி ஒளித்து வைக்கிறார்கள் அவர்கள் .. அவர்களுக்கு தெரியாது …

  10. வெள்ளவத்தை கொழும்பிலே தமிழர் மிகச் செறிவாக வாழும் - அதிகமாகத் தமிழ் பேசுவோரே வாழும் ஒரு செழிப்பான பகுதி! (கொழும்பு 06) பல பிரபல ஆலயங்கள்,கடைகள்,சந்தை என தமிழரின் முக்கியமான இடங்கள் நிறைந்த இடம். வெள்ளவத்தை பற்றிய ஒரு குறிப்பு இது! கவிதை மாதிரியான ஆனால் கவிதையாக அல்லாத ஒரு பதிவு! நானும் ஒரு வெள்ளவத்தை வாசி என்ற காரணத்தால் ஏனைய வெள்ளவத்தைவாசிகளும் கோபப்படாமல் சிரித்துவிடுங்கள் என்னோடு சேர்ந்து! எங்க ஏரியா வெள்ளவத்தை - ஒரு அறிமுகம் பெயரளவில் இது குட்டி யாழ்ப்பாணம் எனினும் பெருமளவு வெளிநாட்டுப் பணமும் உள்நாட்டில் வாழும் தமிழரில் அதிகம் பணம் உழைப்போரின செல்வாக்கையும் பார்த்தால் இது ஒரு குட்டி லண்டன் அல்லது டொரன்டோ(வேறேதாவது வெள…

    • 0 replies
    • 1.5k views
  11. எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் மருந்து எமக்கு தம்பி-பா.உதயன் 😔 ———————————————————————————————————— wealthy nations have purchased enough doses to vaccinate their entire populations.in the meantime poor countries are suffering to get their corona vaccine.Rich countries just 14% of the world population have bought 54% of the corona vaccines.they have enough vaccines for all.Rich countries have a moral obligation to help poor countries to get enough vaccines.If rich countries shares there will be enough vaccines for all world population.Pls save the poor people to. நாலு காசு கையில் இல்லை தம்பி நம்மை கொரோனா விட்டு போகுதில்லை தம்பி எங்க நாடு ஏழை நாடு …

  12. எங்கட ஊருக்கும் மின்சாரம்...!!!! எங்கட ஊருக்கும் மின்சாரம் - இனி அவுணில சுடலாம் பணியாரம் சும்மா குடுக்கிறாங்களாம் எல்.சி.டி இனி எல்லா வீட்டிலயும் சண் டி.வி படிப்பு தான்ரா எங்கட சொத்து வச்சான்ரா ஆமிக்காரன் அதுக்கு ஆப்பு ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்..!!! தூந்து போன துயிலும் இல்லங்கள் மறந்து போனாலும் மனச்சாட்சி கொல்லும் லாம்பு விளக்கில் மங்கிய இரவுகள் இனி ரியூப்பு பல்ப்பில் பளபளக்கும் கனவுகள்..! அன்றைய இரவில் நிலவும் நச்சத்திரங்களும் கூட இருந்தன மங்கிய வெளிச்சத்திலும் தெளிவாய் நடந்தோம் இரவுகளின் நீளங்கள் தெரியாமல் வாழ்ந்தோம். இனி ஆருக்கு வேணும் தமிழீழம் அதை மறந்து நாங்கள் கனகாலம்...!!! எங்கட ஊருக்கும் மின்சாரம்-இனி அவுணில ச…

    • 8 replies
    • 1.4k views
  13. http://youtu.be/Gj3Fs8IQscE எங்களுக்கும் ஆயிரம் ஆசைகள் உண்டு.. அதில் கட்டுநாயக்கா போய் கடல் கடந்து அந்நியப்பட்டு அந்நிய தேசத்தில் கடவுச்சீட்டொன்றில் வதிவிடம் வாங்கி களித்துப் பின் கலியாணம் கட்டி இசைஞானியின் காதல் இசையில் கருத்தால் மயங்கி கலவி செய்து கலந்திப்பதும் ஒன்று...! ஆனாலும் கால்கள் நகர மறுத்தன. காலம் தடுத்து நிறுத்தின. அன்னை தேசம் அடிமை விலங்கு தாங்கி அழுது புலம்பும் நிலை அனுதினமும் அமைதி குலைத்தது...! கழுத்தில் நஞ்சு கட்டி களமதில் கருவி ஏவி சாவு பல கண்டோம் ஏன்..... கார்த்திகை 27 இல் எமக்கு ஓர் நாள் கழிப்பு கழிப்பீர் என்றோ..???! கல்லறைகள் வரிசையாய் அடிக்கி நிற்கும் கோலம்.. எம்…

    • 109 replies
    • 7.2k views
  14. எங்களுக்காகவும் தீபங்கள் ஏற்றுங்கள்...!!! எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். அட கல்லறைகள் இல்லையென்றால் என்ன...? உங்களின் இதயங்கள் தானே நாங்கள் துயிலும் துயிலும் இல்லங்கள். துயிலும் இல்லங்களை இடித்த போது எங்களுக்கு வலிக்கவே இல்லை. என் இனமே என் சனமே நீ துடித்தாய். அதை நாங்கள் மட்டுமே அறிவோம். எங்கே உங்கள் இதயங்களை கொஞ்சம் திறவுங்கள்-கல்லறைகளில் கண்மூடித்துயிலும் உங்கள் பிள்ளைகள் வந்துள்ளோம். தூரங்கள் அதிகமானாலும் சொந்தங்கள் விட்டுப்போகாது. துயரங்கள் அதிகமானாலும் பாசங்கள் குறைந்து போகாது. நீங்கள் வந்து எங்கள் கல்லறைகளில் விளக்கேற்றா விட்டாலும் உங்கள் விழிகளில் விழிகளில்…

  15. எங்களுக்காய் அஞ்சலிப்போம் - நகுலேசன் கண்ணிலே தூசி என்றால் கைகள் வழக்கு வைத்து கூட்டம் வைத்து கடிதம் எழுதி காத்திருப்பதில்லை இங்கோ வாழும் வயதில் உண்ணா நோன்பிருந்து வாழ்வையே தந்தவன் நினைவெழுத மறுத்தவன் வாசலில் காத்திருப்பு இன்று அவகாசமும் முடிந்தது வசதியாய் ,ஒதுக்கமாய் நேர வரையறையுடன் உண்ணா நோன்பு போராட்ட அறை கூவல் கூடவே வழமைபோல் போட்டி போட்டு அறிக்கைக் கூவல் ’மக்கள் புரட்சி வெடிக்கட்டும்’ என்றபடி மறைந்தவனுக்கு முன்னரேயே மரணித்துப் போனோமா… அனுமதி அவசியமில்லை எங்களுக்காய் அஞ்சலிப்போம்! – நகுலேசன் https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85463/

  16. எங்களுக்காய் வாழ்ந்த எழுமதியே எங்களுக்காய் வாழ்ந்து எங்களுக்காய் மாய்ந்த எழுமதியே ! வணங்குகிறோம். சூரியனாய்ப் பிறப்பெடுத்துச் சுதந்திரத்தின் காவலனாய் கால்நூற்றாண்டையும் கடந்து காடும் மேடும் களவாழ்வுமென வாழ்வையும் உங்கள் வம்சத்தையும் எங்களுக்காய்த் தந்தவரே ! காலப் பெருநதியில் காணாமல் போகாமல் ஓயாமல் பாய்ந்த எரிமலையே ! காலகாலங்களுக்கும் ஆறாத்துயராக – எங்கள் அவதாரனின் துயரில் அனைத்தும் அசையவோ அடுத்து நகரவோ இயலாமல் போட்டு வைத்த பிணங்கள் போல் காலம் காப்பிடமின்றி அலைகிறது. வஞ்சம் கொன்றது எங்கள் வாழ்வைத் தின்றது இதை வரலாறு தன் மடியில் ஒளித்து வைக்க என்ன மர்மம் உள்ளதோ…..? வாழ்ந்தீர் எமக்காக எப்போதும் சொன்னது போல் இ…

    • 0 replies
    • 922 views
  17. கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன் கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன் படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன் பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன் இளகிய மனதது உங்களுக்குள்ளது இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது பச்சை இலையதன் காடுகள் காப்பவர் பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர் விலங்கை விடவும் கேவலமாகிய விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது நினைத்திடாத பல கேவலம் நடக்குது உங்கள் கண்களில் ஏன்படவில்லை உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை எங்கள் இனமது ஏதிலியான எதுவும் அடைந்திட அருகதையற்ற செத்துப் போகவே பிறந்த இனமென்று செய்வத…

  18. எங்களுக்கும் காதலிக்கு கவிதை எழுத வருமல்ல அமேரிக்கன் ஜீண்ஸ் போட்டு பொட்டு வைக்காமல் கியூட் பிகர் போல பூனை நடையில் நீ வரவேண்டும் அந்த அழகை அடுத்த தெரு பிகரும் பெற வேண்டும் பசுபிக் கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு செய்யாத செயல் எல்லாம் செய்வோம் சென்ட் பூசுவோம் கிங்கிலிஸ் பேசுவோம் ஜாலியா யோக்கிங் போவோம் நாம் ஜாலியா ஆடுவோம்

    • 15 replies
    • 1.1k views
  19. எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா? (இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.) பன்னிரண்டு மணி பட்டாடை கட்டி வானம் விழித்துக் கொள்கிறது. கருவானக் கதவுடைத்து கனவு கலைந்து வான வெளி கண்விழித்துக் கொள்கிறது. வண்ண வண்ண ஒளிக்கலவை... அழகின் இருப்பிடமெல்லாம் அகன்ற வானில் அள்ளிக் கொட்டியிருக்க வீதிகளில் புகைமூடி வர்ண ஒளிக்கீற்று வடிவுதான்.... பனித்துளி சொட்டப் பகலைத் தெளித்தது போல் பொழுது பட்டாசுகளால் பல்வர்ணம்.... புத்தாண்டுப் பிறப்பு பகற் சேமிப்பெல்லாவற்றையும் பட்டாசாய் வெ…

  20. எங்களை நாமே கேட்டுக் கொள்வோம்? நிலம் பறிபோகிறது ஆத்திரப்பட்டு அழுகின்றார்கள் அவர்கள் எமக்கென்ன எதுவும் நடக்கட்டுமே புpள்ளைகள் கடத்தப்படுகின்றார்கள் என அலைந்து உலைந்து அரற்றுகின்றார்கள் அவர்கள் நாம் ஏன் கவலைப்படவேண்டும்? பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு படு மோசமான சித்திரவதைக்குள்ளாகின்றார்கள் எமது பிள்ளைகளுக்கு ஒன்றும் நடக்காதுதானே நாங்கள் ஏன் கவலைப்படவேண்டும் வலுக்கட்டாயமாக பிள்ளைகளை இராணுவத்தில் இணைக்க பிடித்துச் செல்கின்றார்கள் என வெந்து நொந்து அவர்கள் அழுகின்றார்கள் எங்களுக்கு என்ன நாங்கள் இங்கே வெளிநாட்டுக்குடியுரிமை பெற்று வசதிகள் எல்லாம் பெற்று வளமாக வாழ்கின்றோம் நாங்களும் அழுகின்றோம்தான் சின்னத்திரைகளில் வெள்ளித்திரைகளில் கதாநாயகனும் கதாநாயகிய…

    • 0 replies
    • 734 views
  21. காற்று அலையில் நெருப்பான இரும்பு மனிதர்கள் தாய் மண் மீது மிகுந்த தாகம் கொண்ட தன் நலம் அற்றவர்கள் தமது சுக துக்கங்களை தமிழனுக்காக இழந்தவர்கள் தானைத்தலைவரின் சிந்தனையின் தலையாய உயிர் ஊற்றுக்கள் முகம் அறியாத உன்னத உயிர் சிற்பங்கள் தமிழனின் வாழ்வுக்காக தம் உயிரையே தந்த மாபெரும் முத்துக்கள் உரிய இலக்கினை உடைத்து எறியும் உயிர் ஆயுதங்கள் பகைவனின் மன பலத்தை உடைத்து எறியும் எரிமலைகள் தமிழனின் முதுகு எலும்பை நிமிரவைத்த சிற்பிகள் நாலடி மண் கூட தமக்காக வேண்டாத சுயநலம் அற்றவர்கள்

  22. உறுமும் அந்தப் புலிக்கொடி தாங்கி வந்த எங்கள் அண்ணாக்கள் எங்கே.. அக்காக்கள் எங்கே..??! களப்பலியாய் போனவர் போகட்டும் அவர்களெம் மாவீரச் செல்வங்களாய் எம்மோடு வாழ்வது உறுதி..! ஆனால்.. சுதந்திர தேச வேட்கை கொண்டு வேங்கைகளாய் உலா வந்த இந்த மானத் தமிழர்கள் தான் எங்கே..???! கவிபாடும் தமிழ் சொல்லாலே புலியெனப் பாய்ந்த புதுக்கவிஞன் புதுவை அண்ணன் எங்கே..??! "ஆழ்ந்து யோசி ஆராய்ந்து பேசு" என்ற சொல்லை வகுத்து ஈரோஸின் பிறப்போடு உறவெடுத்து புலிப் பாசறை புகுந்த அந்த அரசியல் வித்தகன் பாலகுமாரன் அண்ணன் எங்கே..??! திருநெல்வேலி முதற் தாக்குதலின் களப்பலி அவன் பொன்னமான் தம்பி தமிழீழ அரசியல் தத்துவஞானி எங்கள் யாழ் இந்துவின் மைந்தன் யோகி அண்ணன் எங…

    • 11 replies
    • 1.9k views
  23. அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் தாத்தாவும் பாட்டியும் இந்நேரம் முசிறியில் மூச்சோடு இருந்திருப்பார்கள்! அப்பா! எல்லா அப்பாக்களையும் போல் நீயும் இருந்திருந்தால் என் அக்கா அமெரிக்காவிலும் என் அண்ணன் கனடாவிலும் நான் இலண்டனிலும் சொகுசாகப் படித்துக் கொண்டிருப்போம்! என் அப்பாவா நீ இல்லையப்பா நீ நீ நீ எங்கள் அப்பா! எங்கள் என்பது... அக்கா அண்ணன் நான் மட்டும் இல்லை! எங்கள் என்பது... செஞ்சோலை காந்தரூபன் செல்லங்கள் மட்டும் இல்லை! எங்கள் என்பது... உலகெங்கிலும் உள்ள என் வயது நெருங்கிய என் அண்ணன்கள் என் அக்காள்கள் என் தங்கைகள் என் தம்பிகள் அனைவருக்குமானது! ஆம்...அப்பா! நீ எங்கள் அனைவருக்குமான 'ஆண் தாய்' அப்பா! அதனால்தான் சொல்கிறேன்... நான் மாணவனாக இருந…

    • 5 replies
    • 763 views
  24. காங்கேசன் துறைவீதியில் இணுவைப்பதியின் எல்லையை இரு கூறாய் சமமாய்ப் பிரித்தால் ஊரின் நடுவில் உயர்ந்து வளர்ந்திருந்தது அந்த மரம். புதிதாய் எங்கள் ஊர் வருபவர்களுக்கு புரியும்படி சொல்லி வைக்கும் அடையாளம். சீனிப் புளியடி பெயர் சொல்லும்போதே நா இனிக்கும் . எங்கள் பள்ளி கூட புளியடிப் பள்ளியென்றுதான் புவி எங்கும் அறிமுகம் குடை போல விரிந்த மரம் குளிரோடு தந்த நிழலில்தான் இடைவேளையில் அம்மா கட்டித் தந்த இடியப்பமும் முட்டைப் பொரியலும் கவளமாய் களம் இறங்கும். வகுப்பறையில் வராத சங்கீதம் - இந்த மர நிழலில் வரும் என்று லேகா ரீச்சர் எங்களோடு தொண்டை தண்ணி வத்த ச ப சொல்லித் தந்தும் அங்குதான். கண்ணன் பாட்டுக்கு அபிநயம் பழகியதும் அங்குதான் உடற்பயிற்சி வேளை முடிய உற்சாகம் த…

    • 8 replies
    • 675 views
  25. சுவரோரம் சிறுநீர் கழிப்பதைத் தடுக்க தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் பதினெட்டாவது தென்னங்கன்றை நடுகிறார் தலையாரி சுப்ரமணி சிதிலமடைந்த மடப்பள்ளிக்குள் பசித்த எறும்புகளும் கொழுத்த எலிகளும் குடியிருக்கின்றன குதிரை வாகனத்தின் குறியை அசைத்து சிரிக்கும் சிறுவர்கள் செவ்வரளிச் செடிகளின் நிழல் மறைவில் திருட்டுப் புகையூதும் இளவட்டங்கள் பாத்திரங்களில் விழுந்த துளை அடைக்கும் பொருட்டு சிலைகளின் எண்ணெய்ப் பிசுக்கைச் சுரண்ட அபூர்வமாய் வரும் பெண்கள் எதிர்க்கடையிலிருந்து தேநீர் பீடிக்கட்டு வரவழைத்து நந்திக்குப் பின்புறம் வட்டமிட்டு சீட்டாடும் ஆண்கள் என எப்போதும் ஆள் நடமாட்டமுள்ள எங்கள் ஊர் சிவன் கோயிலில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.