Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஆட்டம் காண்கிறதா சிறி லங்கா-பா.உதயன் அன்னியச் செலாவணி கையில இல்லையாம் அத்தியாவசிய பொருளும் வாங்கவும் முடியாதாம் எல்லாப் பொருளும் இப்போ தங்கத்தின் விலையாம் பண வீக்கம் கூடி பாணுக்கும் பாலுக்கும் பஞ்சமாம் நாட்டில ரோட்டில நிற்கினம் சனங்கள் இப்போ சரியான பொருளாதாரக் கொள்கையும் இல்லை நாட்டில இப்போ கால் ஊண்டிப் போட்டான் சீனாக் காரான் சிறி லங்காவில அரைவாசியை வேண்டியும் போட்டான் இவன் வட்டிகள் எல்லாம் குட்டி போட்டு கடனைக் கட்டவும் காசும் இல்லை லங்காவிடம் எடுத்த கடனும் இப்போ கூடிப் போச்சு இனி எடுக்கவும் முடியாது கொடுக்கவும் முடியாது மத்திய வங்கியும் சொல்லியும் போட்டுது கையில இப்போ…

  2. கதையைக் கேட்டியேடி கமலா மாமி கந்தையற்ற பொடியன் கணக்கில பெயிலாம் பொன்னையா வாத்தியின் கடைசிப் பொட்டை பொடியனைப் பிடிச்செண்டு ஓடிற்றாளாம் யாருக்குத் தெரியும் இவ்வளவு காசு எப்படி வந்ததெண்று இந்தப் பெரிய வீடு கட்டுகினம் மல்லிகா டீச்சரின் மகள் இத்தினை வயசாப் போச்சு இன்னும் இருக்கிற கட்டாமல் ஏழிலை செவ்வாயாம் என்னமோ நடக்குது ஒன்றும் சொல்லுகினம் இல்லை கன பேர் வந்து போகினம் அவளுக்கு வாய் கூட விட்டிட்டு இருக்கிறாளாம் வெளியில தெரியாமல் ஏதோ பெரிசா கதைக்கினம் எப்ப வந்தது இவைக்கு எல்லாம் இவை எந்த ஊர் எந்தப் பேர் வழி என்று எங்க போய் விழுந்தவை எங்களுக்கு தெரியாதா அடுத்த வீட்டு அம்பிகா …

  3. ஐந்திணை விக்ரமாதித்யன் குறிஞ்சி கண்ணில் தெரிவதெல்லாம் மலை முகடுகள் ஒரு நறுஞ்சுனை தொலை தூரத்தில் சிற்றாறு மரம் செடி கொடிகளில் கனி சுமந்த கிளைகள் உச்சியில் கொம்புத் தேன் கூடுகள் அதிசயமாய் துலங்கும் அருவிகள் மெளனமே இருப்பான சித்தர்கள் முன்னை பழங்குடிகள் வானம் தொடும் மஞ்சுக்கூட்டம் தண்ணீர் பட்டுத் தெறிக்கும் தேக்குகள் மூங்கில்கள் பக்கத்திலேயே பாக்குமரங்களும் ஏலக்கொடிகளில் எச்சமாய் மணம் சிந்திக் கிடக்கும் மலை முந்திரி படர்ந்து தழுவும் மிளகுக் கொடிகள் வேரில் பழுத்துக் கிடக்கும் பலாக்கள் தேன் கதலிகள் வேட்டுவ வள்ளியின் விழிப்பார்வைக்கும் எச்சில் முத்தத்துக்கும் யாசித்து நிற்கும் வடிவேலன் …

  4. நான் ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியக் குடியரசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் எனக்கும் எந்திரத் துப்பாக்கிகளுக்கும் பெண்களை இருட்டறையில் பூட்டுவதற்கும் அமெரிக்க டாலர்களுக்கும் கல்லால் அடித்துக்கொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் இறைவனை நம்புகிறவன் அதனாலேயே கருணையை நம்புகிறவன் கடவுளினால் நீதி மறுக்கப்பட்டால் அந்தக் கடவுளை சந்தேகிக்கவும் தயங்காதவன் சமாதானத்திலும் சுதந்திரத்திலும் இறைவனை தொட்டு உணர்கிறவன் மசூதியை இடித்தவனை எப்படி வெறுக்கிறேனோ அவ்வாறே புத்தரின் சிலையை வெடிவைத்து தகர்ப்பவனையும் வெறுக்கிறேன் எல்லா பழங்கால தண்டனைமுறைகளும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன் நா…

  5. அம்மாவின் சேலை நினைவலைகள்.... அருமையான வரிகள். மறைந்து போன சிறப்பான குரல்... 😰 https://m.facebook.com/story.php?story_fbid=10220735760246759&id=1319608745&wa_logging_event=video_play_open

  6. புலிகளை வாழ்த்துவோம் புத்தெழில் கொஞ்சும் தமிழீழத்தில் தித்திப் பளிக்கும் முஸ்லீம் சிறுவரின் முத்தம் வாங்கி முழங்கு போர்க் களத்தே இத்தமிழ் விடுதலைப் புலி எழுகின்றான்…. எங்கள் சிறிய பிள்ளைகள் எழுச்சி பொங்கிப் படைக்கும் புலிகள் தோளில் தொங்கி ஆடத் துடிக்கும் காலம்… மதங்கள் வேறுதான் மனங்கள் நூறு விதங்களா? இல்லை! தமிழினம் ஒன்றே! கற்றவர் மலிந்த கலையாழ் மண்ணும் அற்புத மீனிசை அமைந்த தேனாடும் நெற்கதிர் குலுங்கும் வன்னி நிலமும் நற்றமிழ் முதுபுகழ் மாந்தை நன்னாடும் உற்ற கோணமா மலையும் மக்கள் பற்றிவாழ் காத்தான் குடிப்பட்டணமும் கற்குடாக் கடலும் நாட்டுக் கவிதை முற்றிப் பழுத்த அக்கரைப் பற்றும் விற்பனை மடுவின் விரிந்த காடும் பற்றி…

  7. <iframe src="https://www.facebook.coவெலிm/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fthamilarivu%2Fposts%2F4136726713041863&show_text=true&width=500" width="500" height="414" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share"></iframe> https://www.facebook.com/sithiravelu.karunanandarajah/videos/10153465194516950

    • 11 replies
    • 1.9k views
  8. என்ட வாழ்க்கையில நான் கன தடவை திரும்பத் திரும்பக் கேட்ட ஊர்ப் பாட்டு இதுதான் (இயக்கப் பாடல் தவிர்த்து).... மயங்கீட்டென் இசையில.

  9. குழந்தைகளுக்கு மட்டுமே மழையின் மொழி புரியும் மழையே வா வா மழையே வா பூக்களின் மேலே வந்து உன் புன்னகையை கொட்டிப் போ ஒரு கவி சொல்லக் காத்திருக்கிறேன் நீ பூவோடு பேசிய காதலை மௌனமாக வந்து என் காதோடு பேசி விட்டுப் போ வா மழையே வா . -பா.உதயன்

    • 2 replies
    • 787 views
  10. கட்டிலில் நான் கன்னியிடம் கண்ட சுகம் கடைசிவரை வருமா கனவு மெய்பட கடவுள் அருள் தர வேண்டும்😂

  11. பக்கத்து வீட்டு பரமசிவன் மாஸ்ரர் மகனை விட மார்க்கு கூட நீ எடுத்தா அடுத்த முறை படம் பார்க்க விடுவேன் பத்தாம் வகுப்பு பாஸ் பண்ணினா பரிசா உனக்கு சைக்கிள் வேண்டி தருவன் பன்னிரண்டாம் வகுப்பு பாஸ் பண்ணி டாக்டருக்கு எடு பட்டா கட்டாயம் காரோடு சீதனம் கேட்டு கலியாணம் பண்ணி வைப்பேன் இது ஒன்றும் நடக்காட்டி ஒரு மாடு வேண்டி மேய்க்க விடுவேன் தானாக சிந்திக்கும் பிள்ளையின் மூளையை வீணாக்கிய கதை போல் அப்பனுக்கும் பிள்ளைக்கும் அப்ப தொடக்கம் நடக்கும் சண்டை இது இப்பவும் இப்படித் தான் யாழ்ப்பாணத்தான் ஆனாலும் ஆயிரம் தான் குறை சொன்னாலும் அடித்து வீழ்த்தி எரித்து புதைத்தாலும் ஏதோ விதை …

  12. தனி ஒருவனுக்குள்ளே உள்ளே, ஒரு பிரபஞ்ஜமே மறைந்திருக்குமா?? இவன் மனவெளி ரகசியம், அதை நாசா பேசாதா?? க்ரகங்களை கைப்பந்தாட விரும்பிடுவானே, கருங்குளிக்குள்ளே சென்று திரும்பிடுவானே... --இது ஒரு வில்லனைப் பற்றிய பாடல் என்றாலும் பிரபஞ்சம் பிச்செறிஞ்ஜேன் என்ற வைரமுத்துவின் வரிகள் ஞாபகத்துக்கு வருகிறது...

  13. தமிழ் ஈழக் காற்றே - புலம்பெயர் தமிழர்களின் வலியை பதிவு செய்த வைரமுத்து.! சென்னை: இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பலாக தமிழ் ஈழக் காற்றே என்ற பாடலை கவிபேரரசு வைரமுத்து எழுதியுள்ளார். இந்த பாடலை விடியோவாக தயாரித்து வைரமுத்து வெளியிட்டுள்ளார். இப்பாடலுக்கு இசையரசன் இசைமைத்துள்ளார். பாடலில் ஈழத்தில் தமிழ் இனத்திற்கு நடந்த அநீதி குறித்து நெருப்பை போல் வரிகள் மூலம் சுட்டிக்காட்டியுள்ளார் வைரமுத்து. ஈழத்தின் வன்னிக்காடுகளையும், வல்வெட்டித்துறையயையும், முல்லைத் தீவையும் நந்திக்கடலையும்ட, நல்லூர் முருகனையும் குறிப்பிட்டு வைரமுத்து பாடல் வரிகளை எழுதி உள…

    • 4 replies
    • 986 views
  14. இந்த கவிதை 2016ம் ஆண்டு வைரமுத்து முள்ளிவாய்க்கால் போய் வந்து கவிதை எழுதிய நேரம், அதற்கு சாட்டையடி பதிலாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது. மீண்டும் வைரமுத்துவுக்கு ஆதரவாக நமது மக்கள் கெம்பி திரியும் இந்நாட்களில் இதை மீள பதிவது சாலப்பொருத்தமாய் இருக்கும். எழுதியவர் யாரெனெத்தெரியவில்லை முள்ளிவாய்க்கால் போனவரே முள்ளிவாய்க்கால் போனவரே தமிழ் முத்து வைரக் கவியரசே இன்னல் நிறைந்த எம்வாழ்வை இரு கண் கொண்டு கண்டீராம் குலுக்கக் கையே இல்லையென கல்மனம் கலங்கி நிண்டீராம் தெள்ளுத் தமிழில் இனிதாக - நீர் தெளித்த கவிதை கண்ணுற்றேன். உம்மைப் பார்த்து ஒருவார்த்தை இளம் ஈழக்கவி நான் கேட்கின்றேன் கண்ணை மறைத்து இதுகாற…

    • 4 replies
    • 735 views
  15. சேர் , உங்கள் zoom அழைப்பு கிடைத்தது ஆனால் passcode தான் கிடைக்கவில்லை. பணம் கட்டினால் தான் அது கிடைக்குமாமே, பகலுணவுக்கு வழியில்லை பாதை வியாபாரம் செய்யும் அப்பா பாதுகாவலனுக்கும் பயந்து பயந்து மறைந்து மறைந்து செய்யும் வியாபாரம் ஒரு வேளை உணவுக்கே போதாதாம் சேர். ஆயிரம் ரூபா தேட பாதையில் பல பாயிரம் ஓத வேண்டுமாம். ஒரு நாளில் அதை உங்களுக்கு வைப்பிலிட ஒரு கிழமை எமது அடுப்புக்கு ஓய்வு கொடுக்க வேண்டுமே சேர். நான்கு சகோதரர்கள் நாம் டேட்டா போடுவதற்கே எமது அப்பாவின் பல பாட்டாக்க…

    • 12 replies
    • 1.3k views
  16. படித்ததில் பிடித்தது. ஆனாலும் பல கேள்விகள் மனதில்.. அதனால் பகிரப் பிடித்தது.

  17. *.மனம் சுமக்கு’மே ‘ வலிகள். * (மே பதினெட்டு - கவிதை) ******************************************* *இருளும் -ஒளியும் இரவும் -பகலும் என்பதுபோல், இழப்பும் -ஏற்பும் கொண்டோம் இதனால் எம் வாழ்வில் என்பதுண்டு! – இதில் சில எண்களும் உண்டு! “அவ் வெண் பதினெட்டு!” *பதினெண்கீழ் கணக்கு” - பதினெட்டு நூல்களின் தொகுப்பு! தமிழுக்கு இதனால் சிறப்பு! *பதினெட்டு ‘மே’ என்பதிலோ எண்ணற்ற கணக்கு!.... - இங்குண்டு தமிழரின் இறப்பு! தமிழுக்கும் இழப்பு!.... *வைகாசி, புத்தம் ஞானம் பெற்ற மாதம் ! - இருந்தும் சுத்தம், மொத்தமாக மதம் இழந்த மாதம் - நித்தம் யுத்தம் செய்த மாதம்! … *நாமோ,.. சுற்றம் த…

  18. மேதினியில் உயிர்களது மேன்மை பற்றிப் பேசுகின்ற மேற்பூச்சுப் பூசிய மேலான நாடெல்லாம், காதிருந்தும் செவிடனாக கண்முன்னே இனஅழிவை வாய்மூடிப் பார்த்திருந்த வரலாற்றுத் துயரநாள். பூர்வீக நிலம்தனிலே பூச்சரம் போல்வாழ்ந்த மக்கள் தார்மீக நெறிகளற்று தரக்குறைவாய் அழித்தநாள். கோணிகளை அவிழ்த்துக் குப்பைகளைக்கொட்டுதல்போல் வானிருந்தும் நிலமிருந்தும் வளம் கொழிக்கும்கடலிருந்தும் குண்டுகளைக் கொட்டிக் கொலை புரிந்த கரிநாள் குஞ்சென்றும் கிழவியென்றும் கொஞ்சுமிள நங்கையென்றும் இஞ்சித்தும் இரக்கமின்றி வஞ்சம் கொண்டு அழித்தநாள் மே பதினெட்டு மேதினியில்…

  19. புனித நிலம் அவனது தொழுகைக்கான உரிமை மறுக்கப்படுகிறது அவனது வாழ்வுக்கான உரிமை பறிக்கப்படுகிறது அவனது நிலங்கள் இன்னொருவனால் ஆக்கிரமிக்கப்படுகிறது அவனும் அவனது குழந்தைகளும் கொல்லப்படுகிறார்கள் கொல்லப்படும் குழந்தைகள் அமெரிக்கக் குழந்தைகளோ அல்லது ஐரோப்பிய குழந்தைகளோ இல்லை அவர்கள் எல்லாம் பாலஸ்தீன குழந்தைகள் அதனால் யாரும் கண்டுகொள்வதுமில்லை எந்தப் பிராத்தனைகளும் செய்வதும் இல்லை அன்று ஒரு நாள் மியன்மார் ரோகிங்காவிலும் ஈழத்திலும் கொல்லப்பட்ட குழந்தைகள் போலவே ஒலிவ் மரக் கிளையில் இருந்து ஒவ்வொரு இலைகளாக உதிர்ந்து கொண்டிருக்கின்றது சிலுவையில் அறையப்படும் ஜெருசலேத்தின் குருதி …

  20. உன்னை பார்த்து உலகம் குரைக்கும்

    • 0 replies
    • 694 views
  21. பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று 60 Views பாவேந்தரின் 131 பிறந்தநாள் இன்று ************** கம்பீர தோற்றம், கர்வமில்லா போர்குணம், எழுத்தின் வீச்சு, எரிமலையாய் வெடிக்கும், பகுத்தறிவு பாதையில் சாதிகளை நொறுக்கும், பெண்ணடிமை வேரறுத்து பேரருமையின் உச்சம், பேச்சில் இடி முழக்கம், சமத்துவ பாதையில் கர்ஜித்தக் குரல், விதவை மனம் ஏற்பு, மனுதர்ம கழுத்தறுப்பு, ஏற்றத்தாழ்வு இடிப்பு, சமத்துவமே இவரின் உயிர்த்துடிப்பு, அடிமை விலங்கை உடைத்தெரிந்த ஆயுத நெருப்பு, ஆரியத்தின் தோலை உரித்த …

  22. தியாக தீபம் அன்னை பூபதி – மாரீசன் 80 Views இன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது. சிங்களப் படைகள் கொடுமைகள் கண்டனள் அங்கம் நெகிழ்ந்திட வெகுண்டு எழுந்தனள் எங்கும் எழும்பிய அவலக் குரல்களால் பொங்கியெழுந்திடும் எரிமலையாகினள் அகிம்சை வழியைக் காட்டிய பாரதம் அனுப்பிய படைகள் இம்சைகள் கண்டனள் புலிகளைத் தேடி அழித்திட அலைந்ததை வாலிபர், இளைஞரைக் கொன்று குவித்ததை கண்டனள், அன்னையின் விழிகள் சொரிந்தன இதயம் குமுறிட எரிமலை வெடித்தது சிலையெனப் பிள்ளையார் முன்றலில் அமர்ந்தனள் முந்…

  23. அம்மாவுக்கு வயசாகிவிட்டது மறதியும் வந்துவிட்டது ஆனால் அவள் நான் எப்ப போனாலும் சாப்பிட்டியா என்று கேட்கவும் பின் போகும் போது பத்திரம் பார்த்து போ என்று சொல்வதையும் ஏன் இன்னும் மறக்காமல் இருக்கிறாள் என்பது மட்டும் தெரியவில்லை. பா.உதயன்

    • 5 replies
    • 736 views
  24. செந்தமிழ்த்தாயி நாதவடிவானவளே செந்தமிழ்த்தாயி – எந்தன் நாவில் உறைபவளே செந்தமிழ்த்தாயி ஆதிமுதலானவளே செந்தமிழ்த்தாயி – நாவில் அமிழ்தூறச் செய்பவளே செந்தமிழ்த்தாயி. மன்னாதி மன்னரெல்லாம் செந்தமிழ்த்தாயி – உன்னை வழுத்திடவே வாழ்ந்தவளே செந்தமிழ்த்தாயி பொன்னான இலக்கியங்கள் செந்தமிழ்த்தாயி – புவி போற்றிடவே தந்தவளே செந்தமிழ்த்தாயி வெம்பாடு பட்டு உன்னைச் செந்தமிழ்தாயி –பலபேர் வீழ்த்திடவே எண்ணுகிறார் செந்தமிழ்த்தாயி அம்பா நீ…

    • 0 replies
    • 821 views
  25. எங்க நாடு ஏழை நாடு மல்லி எப்ப வரும் மருந்து எமக்கு தம்பி-பா.உதயன் 😔 ———————————————————————————————————— wealthy nations have purchased enough doses to vaccinate their entire populations.in the meantime poor countries are suffering to get their corona vaccine.Rich countries just 14% of the world population have bought 54% of the corona vaccines.they have enough vaccines for all.Rich countries have a moral obligation to help poor countries to get enough vaccines.If rich countries shares there will be enough vaccines for all world population.Pls save the poor people to. நாலு காசு கையில் இல்லை தம்பி நம்மை கொரோனா விட்டு போகுதில்லை தம்பி எங்க நாடு ஏழை நாடு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.