கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கவிதைகளால் மலர் தொடுத்துன் கழுத்தினிலே மாலையிட்டேன் கனிவான வார்த்தைகளாலுன் காதுகளில் இசை படித்தேன் காதல் மேவ காரிகையுன் கனியிதழில் இதழ் பதித்தேன் காலமெல்லாம் நீயே என்றுன் கரம் பற்றி நான் இருந்தேன் செந்தமிழில் செல்லமா யுனை செல்லக் கண்ணம்மா என்றேன் உந்தன் செல்லக் குறும் பையெல்லாம் உயிரோ டணைத்து உவகை கொண்டேன் உந்தன் தூக்க சந்தம் கேட்டு எந்தன் தூக்கம் நா னடைந்தேன் ஜென்ம மெத்தனை யெடுத்தாலுமினி உன் னோடு தான் வாழ்ந்திடுவேன்
-
- 8 replies
- 954 views
-
-
வந்தோரை வாழவைத்து வீட்டிலே தூங்கவைத்து வாசலில் படுத்தறங்கும் இனம் எம்மினம் சண்டை என்று வந்தாலும் சமாதானம் என்று சொன்னாலும் சமனாக மதிப்பளித்து இன்று போய் நாளை வா என இன மானம் காத்த இனம் உலக வரைபடத்தில் யேசு கேட்டதை காந்தி கனாக்கண்டதை வள்ளுவன் சொன்னதை அரங்கேற்றி அரசமைத்த இனம் நரிக்குண நாட்டவனின் நடிப்பில் மயங்கி சுற்றி வந்த வர்த்தகஅரக்கர்களின் பிடிக்குள் சிக்காது செய் அல்லது செத்துமடியென செய்து காட்டிய இனம் முள்ளிவாய்க்காலில் தன்னை தானே பெட்டியடித்து சர்வதேசத்துக்கு குறிவைத்த தலைவன் சொல்லிய செய்தி கொன்றால் விடுதலை விட்டாலும் அது தான்.. தீர்க்க தரிசனம் அவனது ஆயுதம் இனி போராட்டம் உங்கள் கையில் அவன் கை காட்டியது வெளியில் எல்லாம…
-
- 26 replies
- 2.6k views
-
-
என் வணக்கம் தீஞ்சுவைத் தமிழால் உனைப் பாட வந்தாரே அரசமகனார் யாழே, உனைப் பாட வந்தாரே!!! எட்டுத்திக்கிலும் பட்டி தொட்டியெங்கிலும் உன் கால் பதித்து, தமிழால் ஒன்றிணத்தாய் எனைப்போல் பல தமிழரை . இன்று, நீ வாலைக் குமரியென்றும் கட்டிளங்காளையென்றும் அணிபிரிந்து அளக்கின்றனர் உனைப்பற்றி ....... செந்தமிழ் மொழியாள் உனக்கேது பால் ?? மொழிக்குமுண்டோ ஆண்பால் பெண்பால்?? எனைகேட்டால் , தமிழ்மொழிப்பாலே உன்பால் என்பேன் ........ நித்திரையிலும் எனைத் தட்டி செல்லக்கதை பேசும் என் இனத்து யாழ் நீ .... உன் நரம்புகளை மீட்டியே நாளும் ஒரு இசை படிப்பேன் உன் மீது தூசு விழவும் நான் விடேன் என் யாழே !!!!!!! நீ ........ வாழிய வாழியவே பல்லாண்டு ந…
-
- 17 replies
- 2.2k views
-
-
அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்கமுடியாது தவிக்கும் போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்... பனைவெளிகளின் ஊடாக சைக்கிள் பாரில் எனை வைத்து கதை சொல்லிய பொழுதுகள்.... பெரும் குளக்கட்டின் ஓரம் தடுக்கி விழாமல் இருக்க விரல்கள் இறுக்கி நடந்த நேரங்கள்... பெரும் மழை சோ என்று கொட்ட நனைதலின் சுகம் சொல்லித் தந்த தருணங்கள்... இப்பதான் நடந்ததாய் தெரியும் பொழுதுகளெல்லாம் எப்பவும் தொட முடியாத திக்கில் உறைந்து விட்ட சித்திரங்களாய்... ஆற்றாத் துயர் அணை மேவினும் நெருங்க முடியாத தூரங்களாய்.... பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுத…
-
- 19 replies
- 129.1k views
-
-
பதினைந்து வயது வாலைக் குமரியடி பார்ப்போரை மயக்கும் பருவ மங்கையடி அதனாலோ அத்தனை பேர் உன் அழகில் கண்மயங்கி உனைக் காண உச்சிப் பொழுதிலும் உனைத்தேடி வருகின்றார்???? ஒரு முறை உனைக் கண்டார் உன்மத்தம் கொண்டு உன் பின்னே வருகின்றார் ஊனின்றி உறக்கமின்றி உன்னில் மதிமயங்கி உன்னைப் பார்த்திருப்பார் உள்ளத்தெழும் உணர்வை உரைத்திட அனைவரும் முத்தமிழால் உனக்கு முத்தாரம் சூட்டிடுவார் சொக்குப் பொடிபோட்டு சொக்க வைப்பதில் நீ சுந்தரி சொல்லாடல் செய்து சூரர்களைக் கூட சுணங்க வைப்பதில் சூத்திரி சோலை மலர்விழியாள் உன் சோபை கண்டதனால் சொற்களால் உனைச் செம்மையாக்கிச் சுற்றி வருகின்றோம் கதைக்கள், கட்டுரைகள், கவிதைகளாக்கி கண்குளிரக் காண்கின்றோம் பதினைந்து ஆண்டுகள் முன் உ…
-
- 25 replies
- 2.3k views
-
-
சப்த ரிஷிகளை ஏற்றிச் செல்ல ஒரு சிறு படகு பாற்கடலில் வரும் வரும் என்று சொன்னதெல்லாம் பொய். அதிசயங்கள் அற்புதங்களுக்காக காத்திருந்த காலமெல்லாம் வீண். கண்ணியமில்லாத யுத்தம் தலைப்பிள்ளைகளைக் கேட்டது. மரணம் பதுங்குகுழியின் படிக்கட்டில் ஒரு கடன்காரனைப்போல காத்திருந்தது பராக்கிரமசாலிகளின் புஜங்கள் குற்றவுணர்ச்சியால் இளைத்துப்போயின கள்ளத் தீர்க்க தரிசிகளும் கலையாடிகளும் ஏற்கனவே சரணடைந்து விட்டார்கள் நன்றியுள்ள ஜனங்களோ பீரங்கித் தீனிகளாய் ஆனார்கள். ரத்தத்தால் சிந்திப்பவர்கள் மட்டும் சரணடையாதே தனித்து நின்றார்கள். ஓரழகிய வீரயுகம் அதன் புதிரான வீரத்தோடும் நிகரற்ற தியாகத்தோடும் கடற்கரைச் சேற்றில் புதைந்து மறைந்தத…
-
- 2 replies
- 742 views
-
-
சிந்தனையில் தீ வை...!!! தமிழகம் என் தாய் வழி உறவடா...!!! தம்பிகளா நீங்களெல்லாம் எங்களின் தொப்புள்கொடி உறவடா...!! வேண்டாம் இந்த தீக்குளிப்பு போதும் இதுவரை கண்ட இழப்பு இனியும் தாங்கமுடியாது இனியொரு உரியிழப்பு..!! முத்துக்குமார் இட்ட தீயை - உன் நெஞ்சினில் ஏந்து உன் மேனியில் அல்ல..!!! உன் மேனியில் இட்ட தீ ஒரு வீரத்தமிழனை அழிக்கும்... உன் கண்களில் தீயை வை உன் நெஞ்சினில் விடுதலை தீயை பற்ற வை -அது ஆயிரம் தமிழனை வாழவைக்கும். உயிரை விடாதே உன் உணர்வை தா...!!! என் சகோதரா தீக்குளிக்க வேண்டியவன் நீயல்ல...!!! நில் சிந்தனையில் தீ வை...!!! உனக்கே புரியும் எரிக்க வேண்டியது உன்னையல்ல...!!! தமிழ்ப்பொடியன் 23.03.20…
-
- 3 replies
- 808 views
-
-
-
ஆதாம், ஏவாளாய் வாழ்ந்த காலத்தில், ஆண்டவன் உனக்குக் கட்டளையிட்டானாம்! அந்தக் கனியை மட்டும் புசித்து விடாதே, என்று! ஆசை உன்னை விட்டுவிடவில்லை, கனியிலேயே உன் கண்ணிருந்தது, கடவுள் மறைந்ததும் கனி உன்னிடமிருந்தது! இராமன் ஒரு சிறு குழந்தை, மண்ணுருட்டி விளையாடுகிறான்,, உன் கூனல் முதுகில் பட்டு விட்டது! உலகமா அழிந்துபோய் விட்டது? ஓடோடிப்போய் கைகேயிக்கு உருவேற்றினாய்! காடேகினான் ராமபிரான், மாயமானாகி மாரீசன் வந்தான், மயங்கிப் போய் நின்றாள் சீதாதேவி, மணாளா, எனக்கு அந்த மான் வேண்டும், மானைத் தேடிப்போனவனைக் காணவில்லை,, காவலிருந்த இலக்குவனைக் கலைத்தாள, அண்ணன் திரும்பி வருவான், கவலை விடு, அண்ணன் இறந்து போன பின்னர், என்னை அடைய நினைக்கிறாயா, இலக்குமணா? பேதலித்துப்ப…
-
- 16 replies
- 2.1k views
-
-
ஆகாசவாணி... டெல்லியின் குரலாய் தமிழ் ஈழ மண்ணில் ஒளிவு மறைவு வாழ்வில் சந்துபொந்தில் நடந்த அந்த ஓரிரு நிகழ்வுகள் கூட ஒளிப்பு மறைப்பின்றிச் சொன்னது ஓர் காலம்..! காலை மதியம் மாலை என்று முறுக்கிவிட்ட வானொலிகள் மத்திய மாநிலச் செய்திகள் காவி வர களத்தில் நின்ற வீரனும் நிகழ்வின் விளைவறிவது அங்கு தான்..! அமைதிப் படை என்று அரக்கர் படை ஒன்று வந்து சேர ஆகாசவாணியும் அண்டப்புளுகிற்கு அடிபணிந்து கொண்டது. லங்காபுவத்தோடு காதலொடு கூடலும் கண்டு கொண்டது..! அன்று தொற்றிய வியாதி இன்றும் ஆறவில்லை. இத்தனை ஆயிரம்.. தமிழர் சாவுகள் கண்டும் இரங்கவில்லை... அண்டப்புளுகொடுதான் அதன் அந்தியக்காலம் என்று அடம்பிடிக்குது..! இந்தியாவின் இந்துக்கள் கட்சியாம் ஈழ ம…
-
- 4 replies
- 1k views
-
-
தீயினை கண்களில் கொழுத்து உன் மேனியில் அல்ல...!!! --------------------------------------- ”மக்கள் புரட்சி வெடிக்கும் சுதந்திர தமிழீழம் மலரும்” அண்ணன் திலீபன் உயிர் கருகும் போது சொன்ன வார்த்தை... இன்று தமிழகமெங்கும் ஓங்கி ஒலிக்கும் நேரம் மாணவர் புரட்சி வெடிக்கும் தருணம்... தொப்புள்கொடி உறவுகள் தோள் கொடுக்கும். எப்போதும் உங்களை எங்களின் இரத்த உறவுகளாய்த்தான் பார்க்கிறோம் எப்போதும் உங்களின் மேல் வைத்த நம்பிக்கையையும் விட்டதில்லை. தம்பிகளா உங்களின் எழுச்சி ...!! தங்கைகளே உங்களின் கோபங்களின் வீரியம்..!! தம்பிகளா உங்களின் ஒற்றுமை..!! தங்கைகளே உங்களின் கொள்கையின் நம்பிக்கை..!! இதில் எதுவுமே சோரம் போகாத யாருக்கும் அடிபணியாத எவனுக்கும் விலைபோகாத உற…
-
- 10 replies
- 1.1k views
-
-
தமிழா ! தமிழா ! இன்னும் என்னடா எதிர்பார்ப்பு..?!! உன் உறவுகள் அழிந்தது போதாதா..??! அதனால் நீ இரவுகள் தொலைத்ததும் போதாதா..?!! உடமைகள் இழந்தாய்..! இருப்பிடம் தொலைத்தாய்..! உறவுகள் கதற காதுகேளாதவனாய் தமிழ்..! தமிழ்..! தமிழன் என்றாய்..! இன்று உன் கண்முன் உன் உறவுகளின் ஒப்பாரி..! எல்லாம் இயலும் என்ற உன் நம்பிக்கைகள், ஊனமாய் எதுவும் இயலாது முள்வெளிகளுக்குள் கண்ணீருடன் இன்று ..! நாங்கள் இன்னுமொரு பிணம் ரசிக்கவா..?? நீ இன்னும் அங்கு நின்றுகொண்டு தமிழன்..! தமிழன்..! என்கிறாய்..! உன் சுவாசம் தவணை முறையில் தரப்படுகிறது. தீர்ந்துபோகும் கொடுத்த கேடு என்று ஆவேசமாய் நீ உள்ளிழுக்கும் காற்றில் எல்லாம் இன்னும் தீர்ந்து போகாத பிண வாடை ..! ஆடைய…
-
- 2 replies
- 902 views
-
-
என் தேசப்பெருநிலமெங்கும் குவிந்து கிடக்கும் வெண் சாம்பல் மேடுகள் புன்னகைக்கின்றன....... தோழர்களே நன்றி. காலநீட்சியின் கனவுகள் சுமந்த வாழ்தலை ஈழமீட்சிக்காய் உதிர்த்துவிட துணிந்த வீரம் கண்டு, உமிழ முடியாத பெருவெப்பம் சுமந்து உறங்குமவர்கள் விழிகள் பனிக்கின்றன............ உங்களுக்காக............ தொண்டைமான் நீரேரியும் வழுக்கியாறும் -அழகிய சப்ததீவுக்கூட்டங்களும் தசாப்த உறக்கம் கலைத்து நோக்குகின்றன, சோழமண்டல உறவுகளே உங்களின் எழுச்சியை, வல்லைமுள்ளி வெளிகளுக்கும் பகைபணிந்த ஆனையிறவுக்கும், வலசைவரும் ஆயிரமாயிரம் பறவைகளிடம் வாழ்த்துக்களை பகிர்கின்றனர் கண்களால் எம்மவர்கள் -அவை நாளையாவது உங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில். கருக்கொண்ட மேகங்கள் எழத்தொடங்கிவிட்டன-…
-
- 2 replies
- 744 views
-
-
அகிம்சை. ஒரு சில தசாப்தங்களுக்கு முதல் வரை அகிம்சை என்றால் காந்தி என்றனர். அதனையே உலகும் காந்தியம் என்றது. காந்தி நாடு என்று பாரதத்தை கொண்டாடியது. உண்மை அகிம்சைஎது என்று உலகுக்கு சொல்லி பாரதத்தின் முகமூடி கிழித்தான் பார்த்தீபன் பாரதம் பார்த்திருக்க பசியில் பிள்ளை நீர்த்து பன்னிரண்டாம் நாள் வீர சுவர்க்கம் சென்றான் அகிம்சை தீயை உலகில் ஏற்றிய தீபச் சுடர் திலீபன். பௌத்தத்தை அகிம்சை மதமென்றனர் மதங்கொண்ட பௌத்தார் மனட்சாட்சி இல்லாமல் கொலைக்காட்சியை உலகிற்கு காட்டினர் முள்ளிவாய்க்களில் அந்த ஆ.. கிம்சையாளருக்கு அரவனைப்பு கொடுத்தது கிம்சையாளர் ஆளும் ஹிந்தியா தமிழன் என்ற உணர்வு தலை தூக்கிய பொழுதெல்லாம் தரங்…
-
- 2 replies
- 743 views
-
-
முள்ளிவாய்க்கால் தனில் அழித்திட்டோம் புலிக் குகை கலைத்திட்டம் தமிழ்க்குடி.. எக்காளமிட்டது துட்டகைமுனு வம்சம்..! கலைத்திட்டது தமிழ் குடியல்ல தேன்கூடு.. தமிழ் உலகெங்கும் - அது கட்டுது வதைவதையாய் பெரும் கூடு..! தேடி வந்து அழித்த பகை திகைத்து நிற்கும் தருணங்கள் பல காத்திருக்குது..! வெற்றி முழக்கமிட்ட சிங்களம் விழி பிதுங்க முழங்குது விடுதலைக் கோசம் தமிழ் மாணவர் பாசறையெங்கும்..! செம்மொழியாம் தமிழ் மொழியில் தாய் நிலமாம் தமிழகத்தில் மையம் கொண்டு....! வீழ்த்திவிட்டோம் சோழப் பெருங்கொடியாம் புலிக்கொடி..! மமதையில் நின்ற மகிந்த கூட்டம் முன்னிலையில் பறக்குது மீண்டும் புலிக்கொடி சர்வதேசம் எங்கும்..! உச்சரிக்கக் கூட முடியாது.. பிரிவினை…
-
- 4 replies
- 1.2k views
-
-
மாணவர்களுக்கு அரசியல் தேவையா ...? ஊழல்வாதிகள் அடிப்படை வாதிகள்... மாறாச் சமூகை உறுதி படுத்த வைக்கப்படும் கேள்வி... வாக்குப்போட மட்டும் உங்கள் தேவையை கேட்பர்... கூட விரலில் கருப்பு மையை வைத்து ஜனநாயக கடமை முடிந்ததாக சொல்லுவர்... வெள்ளையனின் ஓட்டத்தில் மாணவர்களின் பங்கிலாத அரசியல் உண்டோ? மொழிக்காக்க தீயாய் எரிந்த போரில் தீயே நீங்கள் அல்லவா.... மநூவின் நீதியை குலத்தொழிலை மறுத்த போர் இளைஞர்களின் போரல்லவா.... தந்தைச் செல்வாவின் வெற்றி வாக்கரசியலை சிங்களம் மிதித்ததாலேயே.... எழுதுகோல் ஏந்திய கைகளில் துவக்கு ஏந்திய அரசியலை உலகம் அறியாததா? சோவியத்தில் செஞ்சீனத்தில் பொலியாவில் வியட்நாமில் தத்துவ பலத்தை அரசியலாக்கியதில் இளைஞர்களில் பாதையை…
-
- 1 reply
- 903 views
-
-
-
- 9 replies
- 782 views
-
-
மரணத்தறுவாயிலும் மறக்கோம் உங்களை.. முள்ளிவாய்க்காலோடை எல்லாம் முடிஞ்சுது - இனி முதுகு சொறியும் நிலைதான் தமிழர் நிலை என்றிருந்தோம் தம்பியர் தூண்டி விட்ட திரியில் துயருற்றிருந்த - எங்கள் மனங்களில் மத்தாப்பு பூக்கின்றது மலரும் எங்கள் தேசம் என்ற மமதையில் நிற்கின்றோம். அள்ளி அணைத்து ஆதரிக்க எங்கள் அன்னை தமிழகம் இருக்கின்றது சுற்றி வரும் பகை யுடைத்து சுதந்திரத்தை பெற்றுத்தர - திலீபனின் வழியில் பல்லாயிரம் தம்பிகள் அங்கே விழி திறந்து விடுதலைக்காய் வழி திறந்து விட்டிருக்க வார்த்தைகள் ஏதுமின்றி மகிழ்கின்றோம் கந்தகக் களஞ்சியத்துள் வீழ்ந்திட்ட சிறுபொறிபோல் - அகிலத்தை கலங்கடிக்கும் அருஞ்செயல் கண்டு மீள நாம் துளிர்க்கின்றோம் கலங்கிக் கிடந…
-
- 10 replies
- 901 views
-
-
நன்றி சொல்லவார்த்தை இல்லை நண்பனே உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை தானாடாவிட்டாலும் தசை ஆடும் உன் போராட்டம் உலகையே ஆட்டும் கொடியவன் சிங்களன் கொடுமைகளை ஈழத்தமிழனைக் கொன்ற கொடுங்கோலரை வெளிக் கொணரும் உன் போராட்டம் உளி போல உனக்கு நான் ஒளிபோல எனக்கு நீ தமிழன் நீயடா தலை நிமிரடா; வெளியேறும்சிங்களம் ஒருநாள் தெளிவாகும்தமிழீழம் மறுநாள் தனியாக நீயில்லைத் தமிழா என்னோடு தரணியெங்கும் தமிழன் உன்னோடு முகம் தெரியா முத்தமிழா உனக்கு என் வீரமுத்தங்கள்; ;
-
- 9 replies
- 1.8k views
-
-
ஈழமண் என்றோர் நாடொன்று இருந்ததாம் இனிமையாய் தமிழினம் அதனிலே வாழ்ந்ததாம் உரிமையைப் பெற்றிட உறுதியாய் நின்றதால் உலகமே சேர்ந்ததந்த இனத்தினை அழித்ததாம் ஆண்டுகள் ஐம்பது கழிந்திட்ட பின்னதாய் அபலைகள் எம்கதை ஏட்டினில் மட்டுமோ ஏங்கியே நிற்கிற புலம்பெயர் தமிழரின் ஏக்கத்தைப் போக்கிட துணிந்திட்ட வீரரே மகிழ்ச்சியால் வாழ்ந்திடல் மங்கையைக் கவர்ந்திடல் மதுவினை ருசித்திடல் மட்டுமே மாணவர் மனதிலே இருப்பதாய் மட்டிட்ட மடையரே மடையெனத் திரண்டஎம் மைந்தரைப் பாரடா ஏழைகள் பணத்தினை எளிதினில் சுருட்டிட ஏற்றதே அரசியல் என்பதாய் எண்ணிய அராஜகர் கைகளில் சிக்கிய எம்விதி அகற்றிடக் கங்கணம் கட்டிய தீரரே! ஆண்டவர் மருண்டிட ஆள்பவர் கலங்கிட அலையெனத் திரண்ட எம் சோதரர் உங்களின் அன்பி…
-
- 14 replies
- 771 views
-
-
தூங்கி கிடந்தீர்கள்.. புன்னகைத்தார்கள் அரசியல்வாதிகள்.. பின்னால் நின்று உங்கள் கன்னங்களை வருடிவிட்டார்கள்.. இன்னும் என்ன வேண்டும் என்று இனமானத்துக்கு விலை பேசினார்கள்.. முன்னால் உங்கள் கன்னங்களை தடவிவிட்டு பின்னால் உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்.. செம்மரிகளாய் இருப்பார்கள் என்றெண்ணி தமிழரை செருப்பாய் தேய்த்தார்கள்.. இருப்பை உணர்த்த ஒரு தீ பிறாக்காதோ என்று தமிழ்க்கரு சுமந்த மனங்கள் தவித்தன.. உள்ளே குமைந்து கொண்ட உணர்ச்சித்தீயை மோதி அணைத்துக்கொண்டே இருந்தது சாப அரசியல்... பழுத்த கிழம்கள் எல்லாம் பாழும் அரசியலில் இருந்து உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி உருவேற்றி வெளுத்ததெல்லாம் பாலென்று தொழுது நிற்கும் தொண்டர்களின் வேர்வைகளில் கொழுத்துப்போய் தம் குடும்பம் வளர்க்க..…
-
- 13 replies
- 914 views
-
-
ஆண்ட இனம் அடிமைப்பட்டுக் கிடக்க அது அரசிழந்து ஆட்சி இழந்தது மட்டுமா குற்றம்..?! அது சக்தி இழந்து கிடப்பதும் குற்றமே..! எழுச்சி கொள் மாணவ இனமே குமுறும் இந்தக் குரல்களுக்கு.. சக்தி கொடு ஈழ தேசமதில் ஒரு விடுதலைப் பூப் பூத்திட...! அதிகார வர்க்கத்தின் பேசும் மொழி அடக்குமுறை.. காக்கிச் சட்டைகள் அதன் ஏவு இயந்திரம்.. அவை எதிர்த்து நில் அமைதி வழியில்..!! வரும் துயர் தாங்கி நில் சக்தி காட்டி நில்... மாணவர் ஒற்றுமையில்..! பொங்குவோம் நாம் தமிழராய் தரணியெங்கும் நீதி செப்பி மானுடம் போற்றும் தமிழினம் காக்கும் தமிழீழ தேசம் மீட்டிட...! போஸ்டர் மீளமைப்பு :- நெடுக்ஸ். இணைப்பு நன்றி:- முகநூல்.
-
- 5 replies
- 768 views
-
-
வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே..! ******************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* எரிமலையின் தீப் பிளம்பை எமது உறவுகளின் கண்களில் கண்டேன்.. கல்லூரி மாணவர்களா இவர்கள்..? இல்லை வல்லூறாம் சிங்களவரை விரட்ட வந்த நம்மூரின் நாயகர்கள்..தமிழ்ச் சொல்லூறும் எம்மினத்தின் போர்க் குயில்கள்! சின்னத் தளிருடல் வாடுதையா-உங்கள் சோர்வில் எம்மீழம் தோன்றுமையா..! உண்ணா விடுதலை நோன்பில் உங்களை ஆகுதி ஆக்கிக்கொண்ட எங்கள் திலீபர்களே..! வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே.. நாளை மலரும் எம்மீழ வரலாற்று நூலில் தோளை நிமிர்த்தி நிர்ப்பீர்கள் ...திண்ணம் இது!…
-
- 3 replies
- 823 views
-
-
கடந்துவிட முடிந்தாலும் தொடர்கின்றன ஒருபகல் நிலவைப்போல இறந்துபோன நேசிப்புகளும் காயங்களும், சப்தங்களை பிரிந்த சங்குகளாய் வெதும்புகின்றன இன்றைய பொழுதுகளில் - இந்த இதயத்தின் துடிப்புக்கள்.. விழிகரைந்துருகி விடை கொடுத்தும், கரைந்துமழிந்திடாத நதிக்கரை படுக்கைகளாய் உள்நிறைந்து போகிறது நேசிப்புக்கள். நல்ல நிலக்காலங்களிலும், சில அதிகாலைகளிலும், தேவதைகள் இறங்கிஅலங்கரிக்கின்றனர் நேசிப்பு மீதான கனவுகளை, நேசிப்பின் கொடிமரங்களில் அலங்கரிக்கப்பட்ட கனவுகள் அறைந்துகொள்கின்றன தங்களை, நிதர்சனங்களின் வலிகளை சுமந்து மௌனமாக, இந்த மௌனங்கள் திரண்டொரு பெரும் ஒலிக்குறிப்பாய் எழும்! அது ஒரு, நேசிப்புக்கான மரணத்தை உங்கள் முகங்களில் அறையும்.
-
- 7 replies
- 950 views
-
-
தொட்டுவிட்டவள் தொற்றிவிட்டவள் என்றிரண்டு பொண்டாட்டிங்க எனக்கு..! எங்களுக்க விவாகமுமில்ல விவாகரத்துமில்ல சண்டையுமில்ல சச்சரவுமில்ல கூவத் தெரிந்த நான் கூனியதுமில்ல.. கொண்டை வைச்ச நான் தலை சாய்த்ததுமில்ல..! இவ்வளவைய கட்டிமேய்க்கிறேன் கனகாலமாய்..! நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். Spoiler (இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்) படம்:முகநூல்
-
- 51 replies
- 7.4k views
-