வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
எஸ்.ஜே.சூர்யா - நம்மை ஏமாற்றிய பிரபலங்கள் வரிசை ’100 செக்யூரிட்டியை இறக்கு. மீடியாக்காரன் உட்பட எவனையும் உள்ள விடாத..படத்தோட ஒரு ஸ்டில்லு கூட வெளில போயிடக்கூடாது’என்று நிறைய டைரக்டர்ஸ் ஏகப்பட்ட பந்தா செய்வது கோடம்பாக்க வழக்கம். இதெல்லாம் எதற்காக என்றால் படத்தின் கதை வெளியே தெரிந்து விடாமல் காப்பாற்ற! (படம் ரிலீஸ் ஆன பின், இந்தக் கதைக்கா அப்படி பந்தா பண்ணாங்கன்னு நாம நொந்து போவோம்!) அந்த மாதிரி டைரக்டர்களுக்கு மத்தியில தான் ஆர்ப்பாட்டமா நுழைந்தார் எஸ்.ஜே.சூர்யா. தன்னோட படங்களின் கதையை பூஜையன்றே வெளியில் சொல்லி விடுவது அவர் வழக்கம். ‘முடிஞ்சா அவங்க இந்தக் கதையை சுட்டுக்கட்டும்’ என்று ஒரு பேட்டியில் சொன்னார். யாரும் தன் கதையில் கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்…
-
- 3 replies
- 2.8k views
-
-
அஜித் அவதாரமாயிட்டார்னு ஊரெல்லாம் பேச்சு. நல்ல மனுஷனாச்சே எப்படி இந்த மாதிரி கெட்டுப் போனார்னு ஓடிப்போய் அடிச்சுப் பிடிச்சு ஆழ்வார் படத்துக்கு டிக்கெட் வாங்கி உள்ளப் போனா... ஏண்டா வந்தோம்னு ஆகிப் போச்சு. என்ன வெவகாரம்னுதானே கேட்கிறீங்க? கொஞ்சம் விலாவரியா சொல்ல வேண்டிய சமாச்சாரம் இது. ஆழ்வார்ல அஜித்துக்கு 'களை' பிடுங்கிற வேலை. அதாவது சமுதாயத்துல களையா இருக்கிற ரவுடிகளை போட்டுத் தள்றது. அதுவும், ராமர் கிருஷ்ணர்னு விஷ்ணுவோட அவதார மேக்கப் போட்டு சைக்கிள்ல காத்து பிடுங்கிற மாதிரி ஆயுசை பிடுங்கிடறார். அஜித்தை இப்படி எமதர்மனா மாத்துனதுக்கு இயக்குனர் ஷெல்லா அழகா ஒரு கதை சொல்றார். கதாகாலேட்சபம் பண்ற சாது ஒருதரம் தெரியாதத்தனமா, எல்லா பயப்புள்ளைகளும் கடவுள்தான்டான…
-
- 3 replies
- 1.4k views
-
-
கணவர் பிறந்த நாளில் விவாகரத்து என செய்தி பரப்புவதா? - குமுறும் ரம்பா. சென்னை: என் கணவருடன் விவாகரத்து என்று தப்புத் தப்பாய் தகவல் பரப்புகிறார்கள். நான்குமணி நேரத்துக்கு முன்புதான் என்னிடம் சொல்லிவிட்டு ஆபீஸ் போனார். அதற்குள் விவாகரத்து என்கிறார்களே.., என்றார் நடிகை ரம்பா. பிரபல நடிகை ரம்பாவும் கனடா தொழிலதிபர் இந்திரனுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. இப்போது இருவருக்கும் ஒன்றரை வயதில் லாவண்யா என்ற மகள் இருக்கிறாள். கணவர் இந்திரன், மகள் லாண்யாவுடன் கனடாவில் உள்ள டொராண்டோ நகரில் வசித்து வருகிறார் ரம்பா. இந்த நிலையில், ரம்பா, தனது கணவர் இந்திரனை விவாகரத்து செய்துகொண்டதாக இணையதளங்களில் தகவல் பரவியது. தகவல் அறிந்ததும் பதறிய ரம்பா அளித்து…
-
- 3 replies
- 1.6k views
-
-
நடிகை கோபிகாவுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது. லண்டனில் வசிக்கும் கேரளத்தைச் சேர்ந்த டாக்டர் அகிலேஷை மணக்கிறார். கேரளாவில் கோத்தமங்கலத்தில் உள்ள செயின்ட் மேரீஸ் சர்ச்சில் இருவருக்கும் வரும் ஜூலை 17ம் தேதி திருமணம் நடக்கிறது. திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிக்க மாட்டேன் என்றும், லண்டனிலேயே குடியேறிவிடப் போவதாகவம் கோபிகா அறிவித்துள்ளார். சேரனின் ஆட்டோகிராப் மூலம் தமிழில் அறிமுகமானவர் கோபிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டுவிட்டார். நிறைய வாய்ப்புகள் வந்தாலும், கனா கண்டேன், எம் மகன் என தேர்ந்தெடுத்துப் படங்களை ஒப்புக் கொண்ட கோபிகாவின் கடைசி தமிழ்ப் படம் வெள்ளித்திரை. இடையில் தெலுங்கிலும் நடித்தார். மலையாளத்தில் அண்…
-
- 3 replies
- 1.9k views
-
-
-
தேடித் தேடிக் கேட்ட விருப்பப் பாடல்கள் எல்லாம் பழையதாகிக் கொண்டிருக்கையில் புதியதாய் காதுவழி புகுந்து இதயம்.. உயிர்.. என உணர்வு மொத்தமுமாய் தமிழின பற்றின் காரணமாக நிறைகிறது அந்த சீனத்து மொழிப் பாடலொன்று. ஒரு தாயிற்கு தாங்கயியலாத இழப்பென்று சொன்னால் அது தான் பெற்றெடுத்த தன் குழந்தையின் இறப்பன்றி வேறொன்று இருக்காது என்பதை நாமறிவோம்; அதே குழந்தை மீண்டும் உயிர்பெற்று வந்தால் அந்த தாயின் நன்றியுணர்வு எப்படி கண்ணீரின் வழியே’ தான் விட்டுப்பெற்ற உயிரென பூக்குமென்பதை ஒரு புதிய கட்டத்திற்குள் காட்டுகிறார் ஏ.ஆர். முருகதாஸ். ஒவ்வொரு முறை என் தமிழன் அடிப்பட்டப் போதெல்லாம் தனியே நின்று அழுத என் உணர்விற்கு ஒரு காலங்கடந்த ஆறுதலாய் அமைந்திருந்தது அந்தக் காட்சி. எதிரி என்று எண்ணி ஆரம்பத்…
-
- 3 replies
- 1.2k views
-
-
சென்னை: பாடகி பி.சுசீலாவின் பெயரில் துவக்கப்பட்டுள்ள அறக்கடளை சார்பில் பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகிக்கு, ரூ. 1 லட்சம் ரொக்கப் பரிசு அடங்கிய 'பி.சுசீலா தேசிய விருது' வழங்கப்படுகிறது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய, குறிப்பாக தமிழ் மனங்களில் ரீங்காரமிடும் பெயர் பி.சுசீலா. அவர் திரை உலகில் பாட வந்து இந்த ஆண்டுடன் 57 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதுவரை 40 ஆயிரம் பாடல்களை அவர் பாடியுள்ளார். தற்போது, பி.சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த அறக்கட்டளை மூலம் இசைத் துறையில் வெற்றி பெற்ற கலைஞர்களுக்கு விருதும், நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவியும் செய்ய உள்ளார். மேலும், இசைத்துறைக்கென தனி நூலகம் ஒன்றையும் தொடங்க திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து பா…
-
- 3 replies
- 1.3k views
-
-
தனுஷ் ஆச்சர்யக்குறி ராஞ்சனாவின் தமிழ்ப் பதிப்பான அம்பிகாவதி பார்த்தேன், தனுசைப் பற்றி சிறிது பேச ஆசை, தனுசைப் பற்றிய முதல் அறிமுகம் எனக்கு கிடைத்தது தின முரசு பத்திரிகை மூலம் ,தின முரசு பத்திரிகை ஈ பி டி பி யின் பத்திரிகை ,அரச சார்பானது ,ஆனால் அந்தப் பத்திரிகையை கடும் புலி ஆதரவாளர்கள் ,தேசப் பற்றாளர்கள்,உணர்வாளர்கள் என அனைவருமே வாங்குவார்கள்,வாங்கி ஒளிவு மறைவாகப் படிப்பார்கள் காரணம் சிம்பிள் பத்திரிகை கொஞ்சம் கொஞ்சம் அஜால் குஜாலானது ,இந்தியாவில் இருப்பது போல செக்ஸ் கதைகளுக்கு என சரோஜா தேவி போன்ற புத்தகங்கள் ஈழத்தில் திரைகடல் ஓடினாலும் கிடைக்காது ,இன்டெர் நெட்டில் அறிவை வளர்க்கலாம் என்றால் கிரகம் …
-
- 3 replies
- 2.1k views
-
-
ஒளிப்பதிவாளர் இயக்குனர் கே.வி.ஆனந்த் காலமானார் மின்னம்பலம் புகைப்பட கலைஞர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் கொண்ட கே.வி.ஆனந்த், திடீர் மாரடைப்பு காரணமாக இன்று(ஏப்ரல் 30) அதிகாலை 3மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மரணமடைந்தார்.அவருக்கு வயது 54. கே.வி.ஆனந்த் 90களில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பயணத்தை துவக்கினார். ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்து கோபுர வாசலிலே, மீரா, திருடா திருடா, தேவர் மகன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் பணியாற்றினார். பின்னர் 1994ஆம் ஆண்டு மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்து’ படத்தில் முதன்முதலாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த ஒளிப்பதிவாளருக்…
-
- 3 replies
- 1.1k views
-
-
தமிழ் சினிமாவின் மேலுமொரு மோஸ்ட் எலிஜிபிள் பேச்சிலர் சம்சார சாகரத்தில் இணைகிறார். 'ரோஜாக்கூட்டம்' படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்துக்கு அவரது பெற்றோர் பெண் தேடி வந்தனர். வழக்கம்போல, எனக்கு இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என டபாய்த்து வந்தார் ஸ்ரீகாந்த். இவரது நழுவலுக்கு நங்கூரம் பாய்ச்சியிருக்கிறார் வந்தனா. அண்ணாநகரை சேர்ந்த துபாய் தொழிலதிபர் சாரங்கபாணி. இவரது மகள் வந்தனா. எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் குடும்பமும் ஸ்ரீகாந்த் குடும்பமும் ஏற்கனவே அறிமுகமானவர்கள். இரு குடும்பத்தினரும் இணைந்து ஸ்ரீகாந்த், வந்தனா திருமணத்தை நிச்சயித்துள்ளனர். "இது காதல் கல்யாணம் இல்லை. பெற்றோர்கள் பார்த்து நிச்சயித்த திருமணம். வந்தனாவை ஏற்கனவே எனக்கு தெரியும். படித்தவர், அழகானவர், குடு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை தமிழ் சமூகத்தில் வாழும் திருநங்கைகள் தொடர்பாக கனடிய தமிழ் இயக்குநர் லெனின் எம் சிவம் இயக்கிய (கனடிய) தமிழ் சினிமா 'ரூபா' வில் Lead role லில் நடித்து இருக்கும் திருநங்கையின் உரை
-
- 3 replies
- 451 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக ரசிகர் மன்றம் சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தின் பின்னணியில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என விஜய் கூறியுள்ளார். தமிழ்நாடு முழுவதும் 37 இடங்களில் விஜய் ரசிகர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். சென்னையில் நடந்த உண்ணாவிரதத்தில், விஜய் கலந்து கொண்டு ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். இதற்காக சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகில் பந்தல்கள் போடப்பட்டிருந்தன. 'புத்தர் கடவுளாக உள்ள நாட்டில் யுத்தம் நிற்க உண்ணாவிரத போராட்டம்' என்று எழுதப்பட்ட பேனர்கள் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு பிணங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது, அதைப்பார்த்து பெண்கள் கதறி அழுவது போன்ற படங்களும் வைக்கப்பட்…
-
- 3 replies
- 1.6k views
-
-
பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை சென்னையில் காலமானார் அண்ணாமலை ‘வேட்டைக்காரன்’, ‘சகுனி’, ‘ஈட்டி’, ‘பிச்சைக்காரன்’ உட்பட பல படங்களில் பாடல்கள் எழுதிய பிரபல பாடலாசிரியர் அண்ணாமலை உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 49. ‘கும்மாளம்’ என்ற படத்தின் மூலம் 2003-ம் ஆண்டு பாடலாசிரியராக அறிமுகம் ஆனவர் அண்ணாமலை. அதைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நூற்றுக்கும் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார். கும்மாளம் படத்தில் ‘திமுசு கட்ட’, வேட்டைக்காரன் படத்தில் ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குதே’, சகுனி படத்தில் ‘போட்டது பத்தல மாப்புள’, நினைத்தாலே இனிக்கும் படத்தில் ‘பனாரஸ் பட்டு கட்டி’, சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன…
-
- 3 replies
- 506 views
-
-
உறக்கத்தைக் கலைத்த “The Lamp of Truth” – “பொய்யா விளக்கு” திரைப்படம் இலங்கை ஈழமண்ணில் யுத்த இறுதி நாட்களில் நடைபெற்றவை போர்க்குற்றங்களே என வலுவான ஆதாரமாக இருப்பவைகளில் மிக முக்கியமானது சேனல் 4 வெளியிட்ட காணொலிக் காட்சிகள், பிறகு நேரில் கண்ட சாட்சியங்கள். பொதுவாக, ஹேக் ஒப்பந்தம், ஜெனிவா ஒப்பந்தம், ரோம் சட்டம் ஆகியவற்றின்படி இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் என்று, என்னென்ன குற்றச் செயல்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவோ, அவற்றைவிடப் பல மடங்கு குற்றங்கள் ஈழமண்ணின் யுத்த இறுதிக் காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானது, இறுதி நேரத்தில் அரசு மருத்துவர்களை அங்கிருந்து …
-
- 3 replies
- 1.7k views
-
-
போனகிழமைதான் 'Rules Of Engagement' இந்தப் படத்தை பார்த்தேன்.2000ம் ஆண்டளவில் இந்தப் படம் வெளிவந்திருக்கு.இவ்வளவுநாளும் கண்ணிலை படாமல் சனிக்கிழமைதான் தொலைக்காட்சியில் போட்டபோது பார்த்தேன்.சாமுவெல் ஜக்சன் ஒரு அமெரிக்க படை அதிகாரியாக இதில் மிகஅற்புதமாக வெளிப்பட்டிருக்கிறார்.போர்க்குற்றங்களும் அவை அணுகப்படும் முறைகளும் அதற்குள்ளான அதிகார சண்டைகளும் பலியாகும் மனிதமும், தனி வீரர்களும் என்று மிக அழகான கதை அமைப்பு.இராணுவ நீதிமன்ற விசாரணையும் அது எடுத்து எறிந்துவிட்டுப் போகும் உயிர்விலையும்,விவாதங்களும்,சம்பிரதாயங்களும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.மூலக்கதையின் கருவும் செய்தியும் எங்களால் ஏற்கமுடீயுதோ இல்லையோ தெரியவில்லை.ஆனால் படம் பார்த்து இன்னும் ஏதோ நெஞ்சுக்குள் ஊர்வது போல ...…
-
- 3 replies
- 2k views
-
-
நடிகர் ரஜினிகாந்த் “ராணா” படத்தொடக்க விழாவில் கலந்து கொண்டபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருந்ததால் டயாலிசிஸ் செய்யப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்றார். அங்கு குணம் அடைந்து சென்னை திரும்பினார். வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். நேற்று ரஜினிகாந்த் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடை கல்கண்டு காணிக்கையாக வழங்கினார். அவருடன் மனைவி லதா, மகள்கள், மருமகன்கள், பேரக்குழந்தைகள் உள்பட 16 பேரும் சென்று தரிசனம் செய்தனர். நடிகர் ரஜினிகாந்த் தற்போது பூரண குணம் அடைந்து விட்டார். பழைய பொலிவுடன் இருக்கிறார். தலை முடியை ஒட்டிவெட்டி முகத்தில் லேசாக தாடி வைத்திருந்தார். எப்ப…
-
- 3 replies
- 1.2k views
-
-
வைரமுத்துவிடம் 52 கேள்விகள். தமிழில் உங்களுக்கு மிகவும் பிடித்த வார்த்தை? தமிழ் இப்போது 50kg. தாஜ்மகால் யார்? சானியா மிர்சா காதல் என்பது? காமனின் அம்பு அல்லது ஹார்மோன்களின் வம்பு. பிடித்த நிறம்? வெள்ளை பச்சையப்பன் கல்லூரி? மாணவனாய்ச் சேர்த்துக் கொண்டு, மாப்பிள்ளையாய் அனுப்பியது. கண்ணதாசன் _ வாலி ஒப்பிடுக? பாடலை ஷனரஞ்சகமாக்கியவர் கண்ணதாசன்; ஷனரஞ்சகத்தைப் பாடலாக்கியவர் வாலி உங்கள் இளமையின் ரகசியம் என்ன? மனசு நரைக்காமல் பார்த்துக்கொள்வது இளையராஜா _ பாரதிராஜா? மேற்குத் தொடர்ச்சி மலையை இமயமலைக்கு அறிமுகம் செய்தவர்கள். வேட்டி பிடிக்காதா? காலைப் பிடிக்கும். தம்பி...? உடைய…
-
- 3 replies
- 2.5k views
-
-
அண்மையில் பார்த்த ஒரு ஆங்கிலத் திரைப்படம்.. அமெரிக்க ராணவ நீதிமன்றத்தை தளமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 1992 ல் வெளியானது. நேரமிருப்பவர்கள்/ ஆர்வம் உள்ளவர்களுக்காக இங்கே இணைகிறேன்.. In this military courtroom drama based on the play by Aaron Sorkin, Navy lawyer Lt. Daniel Kaffee (Tom Cruise) is assigned to defend two Marines, Pfc. Louden Downey (James Marshall) and Lance Cpl. Harold Dawson (Wolfgang Bodison), who are accused of the murder of fellow leatherneck Pfc. William Santiago (Michael de Lorenzo) at the U.S. Navy base at Guantanamo Bay, Cuba. Kaffee generally plea bargains for his clients rather than bring them to trial, which is probably why he was assi…
-
- 3 replies
- 1.6k views
-
-
சும்மா சொல்லக்கூடாது... உண்மையிலேயே புயல்தான்! 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' மீண்டும் ஹீரோவாகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் பெயரை கேட்டால் பெரிய நடிகர்களுக்கே பொறாமை வரும். இம்சை அரசனுக்குப் பிறகு ஹீரோவாக நடிக்கலாமா வேண்டாமா என வடிவேலுக்கு டபுள் மைன்ட். அதை சிங்கிளாக்கியவர் ரஜினி. தொடர்ந்து ஹீரோவாக ஜாமாய்ங்க என்று ரஜினி சொன்னதை வேதவாக்காக எடுத்திருக்கிறார் வடிவேலு. 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'. இதுதான் அடுத்து வடிவேலு நடிக்கப் போகும் படம். புராணத்தையும் நவீனத்தையும் இழுத்து கோர்த்திருக்கும் கதைதான் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்'! முதல் படத்தில் இரண்டு வேடத்தில் வடிவேலு. இந்தப் படத்தில் அதை முறியடிக்கிறார். புதிய படத்தில் அவருக்கு நான…
-
- 3 replies
- 1.8k views
-
-
இனிய யாழ்கள உறவுகளுக்கு வணக்கம். அத்தி பூத்தால் போல் அவ்வப்போது வந்து அசத்தத் தான் இப்ப நேரம் கிடைக்குது. உங்களோடு கதைத்து கன நாட்கள் ஆகிவிட்டது. எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றேன். உங்கள் கண்களுக்கு நிழற்பட விருந்து அளிக்கின்றேன் பார்த்து மகிழுங்கள். நாளை சினிசவுத்.கொம் பாருங்கள் மீண்டும் திரைப்படம் பற்றிய தகவல்கள் வெளியாகும். இதோ "காதல் கடிதம்" திரைப் படத்தின் நிழற்படங்கள் உங்களுக்காக.... திரைக்கு வரும் வரை காத்திருங்கள். காதல் கடிதம் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பதில் இன்பங்கள் பல கோடி. http://www.indiaglitz.com/channels/tamil/m...llery/8685.html
-
- 3 replies
- 1.8k views
-
-
Chicken a la Carte வெறும் ஆறே நிமிடங்கள் எடுக்கும் இந்த குறும் படம் ,எல்லோரின் மனதையூமே குலிக்கி எடுக்கிறதாம். ஒரு புரம் உலகமாயமாக்கலில் வெளிச்ச விளக்கு, மறுபுரம் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழை மக்கள். வறுமை வறுமை என்று பேசி அந்த வார்த்தைக்கே வலிமை இல்லாமல் போய்விட்டது. 3.600 குறிம்படங்கள் கலந்து கொண்ட இடத்தில் இதுவே முதல் இடத்தை பிடித்திருக்கிறது. வறுமை, ஏழ்மையின் கோரப்பிடி, அநியாயம், அடிமை, வேதனை. இந்த வார்த்தைகளை அர்தமற்றதாக்கி விட்டது, இலைங்கை அரசு. அவர்கள் அனுபவக்கும் கொடுமைகளை இந்த வார்த்தைகளால் வரையருக்க முடியது. இப்படத்தைக் குறித்து ஒரு சஞ்சிகை இவ்வாறு எழுதியது. "கல்லும் கரையும் இந்தக் குறும்படம் நி…
-
- 3 replies
- 1.8k views
-
-
எந்த தகப்பனும் செய்யாததை நான் செய்தேன் : சேரன் கண்ணீர் திரைப்பட இயக்குநர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சேரன், அவருடைய மகள் தாமினி, சந்துரு ஆகியோர் கலந்து கொண்டார்கள். விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் சந்துருவை போலீசார் அனுப்பி வைத்தார்கள். தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நிலையில் சேரனும், அவருடைய மனைவி செல்வராணியும் சென்னையில் நிருப…
-
- 3 replies
- 2k views
-
-
விஜய், அஜீத் என் நண்பர்கள்: விக்ரம் எனக்கு போட்டியாளர்கள் என்று அழைக்கப்படும் சக ஹீரோக்கள் உண்மையில் என் நெருங்கிய நண்பர்கள் என்கிறார் சியான் விக்ரம். அவர் அளித்த சுவையான பேட்டி இதோ. நான் இதுவரை எடுத்த சிறந்த முடிவுகளுள் ஒன்றாக, ஆஸ்பத்திரியில் நான் இருந்த போது எனக்கு கவுன்சிலிங் கொடுத்த அந்த பெண் உளவியல் நிபுணர் காதலிக்க முடிவெடுத்ததைக் கூறலாம். அவர் வேறு யாரும் அல்ல என் மனைவி ஷைலாவேதான். கடந்த காதலர்தினத்தின் போது நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தேன். இருந்தாலும் மனைவி மீது என் அன்பை வெளிப்படுத்தும் விதமாக, ஒரு பூங்கொத்து வியாபாரியை ஒரு மணிக்கு ஒரு தடவை என் சார்பில் ஷைலாவிடம் பூங்கொத்துக்களையும், பழங்களையும் கொடுக்க ஏற்பாடு செய்தேன். முன்பே காதல் ரசம் சொட்…
-
- 3 replies
- 1.7k views
-
-
மலேசியா, ரஜினியின் ‘கபாலி’ வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆனது. இதை அவரது ரசிகர்கள் திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தனர்.இந்நிலையில் மலேசியாவில் திரையிடப்பட்டுள்ள ‘கபாலி’ திரைப்படத்தின் இறுதிக் காட்சி அந்நாட்டு விதிமுறைகளை ஒட்டி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் கலைப்புலி தாணு கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள படம் கபாலி. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தியா மட்டுமல்ல உலகம்முழு வதும் ரஜினியின் கபாலிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 50 நாடுகளில் ரசிகர்களின் கொண்டாட்டம் களை கட்டியது. தமிழ்நாட்டில் இதை திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்ந்தார்கள். ரசிகர்களிடம் மட்ட…
-
- 3 replies
- 400 views
-
-
சந்தானத்தை கலாய்க்க தயாராகும் கவுண்டமணி ..! காமெடியனாக இருந்து தற்போது நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் நடிக்க இருக்கும் படத்தில், கவுண்டமணியை நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் தனக்கென்று தனி பாதையை உருவாக்கியவர்களில் கவுண்டமணி முக்கியமானவர். சக காமெடி நடிகர்களிலிருந்து கதாநாயகர்கள் வரை அனைவரையும் கலாய்த்து தள்ளுவது கவுண்டமணியின் பாணி. அவருக்கு பின்னால் அதே பாணியை கையில் எடுத்தவர் சந்தானம். வடிவேலு திரைத்துறையில் இருந்து விலகிய காலகட்டத்தில் சந்தானத்தின் இந்த பாணி வரவேற்பு பெற்றது. காமெடி நடிகராக வலம் வந்த சந்தானம் தற்போது கதாநாயகனாக நடித்துவரும் நிலையில் அவர் நடிக்கும் புதிய படத்தில் கவுண்டமணியை நடி…
-
- 3 replies
- 973 views
-