ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல்களை முறியடித்து அவற்றினை வெற்றித் தாக்குதல்களாக்கிய தளபதிகள், பொறுப்பாளர்கள் மற்றும் போராளிகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
நாட்டின் ஒரு பகுதியை பிரித்துக் கொடுக்க தென்னிலங்கை மக்கள் ஒரு போதுமே விரும்பமாட்டார்கள். இந்த நாட்டில் சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும். அதற்காக அரசு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க அம்பாந்தோட்டையில் 150 வீடுகளை கடல்கோளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு கூறினார். சர்வதேச `கெயர்' நிறுவனம் இந்த வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்துள்ளது. பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்க தொடர்ந்து பேசுகையில்; "சமாதானப் பேச்சுவார்த்தைகளை குழப்பியது யார்? அரசாங்கமா விடுதலைப் புலிகளா என்பதை நாடு அறியும். அரசாங்கம் சமாதானப் பேச்சுகளுக்கு எப்போதுமே தயாராகவுள்ளது. ஆ…
-
- 0 replies
- 1.2k views
-
-
புலஸ்தினியின் மரபணு பொருந்தவில்லை! [Tuesday 2020-01-21 18:00] ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து, சாய்ந்தமருதில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணுக்கள், அவரின் குடும்ப உறவுகளின் மரபணுவுடன் பொருந்தவில்லை என்று விசேட குற்றவியல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற விசாரணையின்போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான 12 பேர் கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று …
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரித்தானிய விஜயம் வெற்றிகரமாக அமைந்துள்ளது என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சர்வதேச சமூகத்தில் பிழையான தகவல்களை வெளியிடும் தமிழர் தரப்பினருக்கு ஜனாதிபதி மஹிந்தவின் பிரித்தானிய விஜயம் சிறந்த பதிலடியாக அமைந்தது என அவர் சுடடிக்காட்டியுள்ளார். இலங்கை தொடர்பான சரியான நிலைப்பாட்டை வெளிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் பல உயரதிகாரிகளை ஜனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமகள் குறித்து பிரித்தானிய அதிகாரிகள், ஜனாதிபதியிடம் திருப்தி வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமது ஜனா…
-
- 16 replies
- 1.2k views
-
-
(ஆர்.யசி) இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கைக்கு வரவழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும், இலங்கையில் அவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கிக்கொடுக்க இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. 2019 ஆம் ஆண்டு புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அரசாங்கம் கொண்டுவந்துள்ள நிலையில் இந்த சட்டத்தின் பிரகாரம் மத ரீதியில் துன்புறுத்தப்பட்ட அகதிகள் தவிர்ந்து ஏனைய அனைவரும் இந்திய பிரஜைகள் அல்ல என்ற நிலைப்பாட்டினை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இலங்கை அகதிகள் …
-
- 8 replies
- 1.2k views
-
-
கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும் 26 மார்ச் 2012 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா: “ ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.” - உவிந்து குருகுலசூரிய. “இங்கே கொள்கைகள் இருக்கின்றன இங்கே உண்மைகளும் இருக்கின்றன. கொள்கைகள் மாறுபடலாம் ஆனால் எப்படியிருப்பினும் உண்மைகள் மறுக்கப்பட…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு தேசிய முன்னனி அமைக்க ஜே.வி.பி முடிவு வீரகேசரி நாளேடு பதவியில் உள்ள அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பிவிட்டு புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஜே.வி.பி. அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு புதிய தேசிய முன்னணியொன்றை உருவாக்கவுள்ளது. இந்த முன்னணியில் இணைந்துகொள்ளுமாறு நாட்டின் தொழிற் சங்கப் பிரதிநிதிகள், தொழில் நிபுணர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், இலக்கியவாதிகள் மற்றும் நாட்டை நேசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம் என்று ஜே.வி.பி. யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க தெரிவித்தார். முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரையும் இணைந்துகொள்ளுமாறு கோரிக்…
-
- 0 replies
- 1.2k views
-
-
2000 மில்லியன் ரூபா செல்வழித்தும் 2018 பொது நலவாய விளையாட்டுப்போட்டியினை நடத்தும் போட்டியில் சிறிலங்கா தோற்றுள்ளது. அம்பாந்தோட்டை 2018 திட்டத்தினை நாமல் இராஜபக்ஷவே பொறுப்பாக இருந்து செயற்படுத்தியுள்ளார். . இந்த திட்டத்திற்காக 2000 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளது. வாக்கெடுப்பில் பங்குபற்றும் நாடுகளின் பிரஹ்டி நிதிகளுக்கு மேற்கிந்தியதீவில் பல்வேறு விருந்துகள், பரிசுப்பொருட்கள், பெண்கள் ஆகியவற்றை கொடுத்து நாமல் இராஜபக்ஷ குஷிப்படுத்தியதாகவும் ஆனாலும் எல்லா நாடுகளும் நன்றாக அனுபவித்துவிட்டு வாக்கினை மட்டும் அவுஸ்ரேலியாவிற்கு போட்டுவிட்டனர் என குறைப்பட்டுள்ளார் சிறிலங்கா அணியில் சென்ற ஒருவர். . நாமல் இராஜபக்ஷவுடன் 200 பேர் மேற்கிந்திய தீவிற்கு சென்றுள்ளனர். இதி…
-
- 3 replies
- 1.2k views
-
-
ஆளில்லா உளவு விமானமொன்று இலங்கையில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ளது. மொறட்டுவ பல்கலைக்கழ பொறியியல் பீடத்தினாலேயே இந்த விமானம் ஆளில்லா உளவு விமானம தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொறட்டுவ பல்கலைக்கழக பேராசிரியர் சுதத் ரோஹன முனசிங்கவும் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களும், இணைந்து தயாரித்துள்ளனர்.என்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 200 மீற்றர் உயரத்தில் பறந்து 12 நிமிட நேரத்திற்கு உளவுப் பணியில் ஈடுபட்டு தகவல்களை வழங்கக் கூடிய வகையில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/69595-2013-06-…
-
- 5 replies
- 1.2k views
-
-
த.தே.கூட்டமைப்பால் தாக்கல் செய்யப்பட்ட மனு உயர்நீதிமன்றம் நிராகரிப்பு. 21.01.2008 / நிருபர் எல்லாளன் கிழக்கு மாகாணத்தில் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்; இடைநிறுத்தப்படவேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை இந்தமனு தொடர்பாக சிறிலங்கா உயர்நீதிமன்றம் இந்த நிராகரிப்பை வெளியிட்டது. தேர்தலை இடைநிறுத்தக்கோருவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல எனவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இத்தேர்தலில் கலந்துகொள்வதாக இருந்தால் அவர்களுக்கான பாதுகாப்பை சிறிலங்கா அரசிடம் கோரலாம் என்று நீதிமன்றம் தெரிவித்ததாக தெரியவருகிறது. sankathi
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசின் இராணுவ நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றது என்றும் இந்தியா தெரிவிக்கும் எதிர்ப்பை விட இது அதிகமானது என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சரின் மூத்த அதிகாரி ஒருவா தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் இந்தியாவிலும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு நிறுத்த வேண்டும் என்று பிரசாரம் செய்து வருகின்றனர் என்றும் அந்த அதிகாரி கூறினார். சிறிய பயங்கரவாத குழு ஒன்றின் அழுத்தத்துக்கு பணிந்து போக இந்தியா சிறிய நாடு அல்ல என்றும் தெரிவித்த அந்த அதிகாரி, பெரும்பான்மை சிங்களவர்களினால் தமிழர்கள் ஒடுக்கப்படுபவர்களாகவே ஐரோப்பிய ஒன்றியம் பார்க்கிறது என்று கூறினார். …
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்னை தங்கம்மாவின் மறைவு சைவ உலகுக்குப் பேரிடியும் பேரிழப்பும் நல்லை ஆதீன முதல்வர் இரங்கல் சைவத்தை வளர்ப்பதில் தன்னை இணைத்து இறுதி மூச்சு வரை அறப்பணியை முன்னெ டுத்த அன்னை தங்கம்மா அப்பாக்குட்டி புதிய சமய பாரம்பரியத்தை அமைத்தவர். அவரது மறைவு சைவ உலகுக்கு பேரிடி யாக, பேரிழப்பாக வந்துள்ளது. நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந் தர பரமச்சார்யா சுவாமிகள் சிவத் தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு குறித்து மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி யில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தை மையமாகக் கொண்டு அறப் பணியாற்றிவந்த அன்னை, எங்கு சென்றாலும் சைவத்தையும், தமி ழையும் வளர்ப்பதற்க்கு தன்னாலான பணிகளை முன்னெடுத்தார்…
-
- 2 replies
- 1.2k views
-
-
முல்லை, சிலாபம் மக்கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல் Written by Ravanan - Aug 13, 2007 at 11:05 AM முல்லைத்தீவு சிலாவத்துறைப் பகுதி நேற்றிரவு சிறிலங்கா கடற்படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இரவு 10.30 மணியளவில் இப்பகுதி மீது நடத்திய தாக்குதலையடுத்து சிலாவத்தைப் பகுதி மக்களும் அளம்பில் பகுதி மக்குளும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் முள்ளியவளைப பகுதி நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை நேற்றுக் காலை 9.15 மணியளவில் அளம்பில் கடற்கரையில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதலினை மேற்கொண்டனர். இதனால் கரைவலைத் தொழிலாளர்கள் வலையினைக் கடலில் விட்டு விட்டு …
-
- 0 replies
- 1.2k views
-
-
அடுத்த தேர்தல் வருகிறது. மீண்டும் மீண்டும் மக்கள் இயலாமையில் அதையும் எதையும் சொல்லும் தலைவர்களியே தெரிவு செய்கிறார்கள். மக்களுக்கு வேறு தலைமை தேவை. என்ன செய்யலாம்?
-
- 10 replies
- 1.2k views
-
-
இளம் யுவதிகளிடம் சேட்டை புரியும் படையினர். - பண்டார வன்னியன் Wednesday, 28 March 2007 17:11 மருதனார்மடம் இராமநாதன் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளிடமும் பாடசாலை செல்லும் மாணவிகளிடமும் இப்பகுதியில் வீதி ரோந்தில் ஈடுபடும் படையினர் பாலியல் ரீதியான சேட்டைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மாணவிகளின் புத்தகங்களையும், கைப்பைகளையும் சோதனையிடும் படையினர் பாலியல்ரீதியான சேட்டைகளில் ஈடுபடுவதாகவும், உடற்சோதனைகளை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறி மறைவான பகுதகளுக்கு வருமாறு அழைப்பதாகவும் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளாலும் பெண்களிடம் சேட்டைகளில் ஈடுபடுவதுடன் உடற்சோதனைகளையும் சிறிலங்காப் படையினர் அநாகரிகமான முறையில் ஈடுபட்டுவருவதாக இப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவுசெய்யப்பட்டதற்கு ஒரு சில தரப்பலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22658
-
- 4 replies
- 1.2k views
-
-
சிறீலங்கா அரசுக்கு எதிராக ஐ-நா பேரவையில் தீர்மானம்? சிறீலங்கா அரசுக்கு எதிராக தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் பாதுகாப்பபு பேரவையால் இம்மாதம் 15ம் திகதி நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஐ-நா சிறப்புத் தூதுவர் அலன் றொக் முன்வைத்த கருத்துக்கள் அடிப்படையில் இத் தீர்மானம் நிறைவேற்ற தயாராகி வருவதாக அறியமுடிகிறது. சிறீலங்கா துணைப்படை கருணா குழுவால் மேற்கொள்ளப்பட்டு வரும் பலவந்த சிறுவர் ஆட்சேர்ப்புக்கு சிறிலங்கா படையினர் ஒத்துழைப்பு வழங்கி வருவதாக அலன் றொக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இது குறித்து சிறீலங்கா அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் எனவும் இதனை ஆராய அதிபர் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
Aljazeera English will be running a news story every hour starting from 0200 GMT on Wednesday, 10 November 2010 covering some of the alleged war crimes committed in Sri Lanka. Father Emmanuel of GTF has contributed a short sound bite along with Amnesty International and others. Dr. Sampavi of ATC is also scheduled to be interviewed live during the day as this report is scheduled to run every hour. We anticipate that the Sri Lankan High Commissioner to Malaysia who was a General in the Army previously and possibly even the Foreign Minister G.L.Peries will be interviewed at some point during the day. It is also possible that the report may be postponed …
-
- 2 replies
- 1.2k views
-
-
சம்பந்தன்- பான் கீ மூன் சந்திப்பு – கடைசிநேரத்தில் கைவிடப்பட்டது ஏன்? Thursday, November 3, 2011, 16:43 ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் நடைபெறவிருந்த சந்திப்பு கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்றுமுன்தினம் நியுயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. பான் கீ மூனுடனான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டதால், ஐ.நா பொதுச்செயலரின் அரசியல் விவகாரச் செயலர் லைன் பாஸ்கோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது போருக்குப் பிந்திய …
-
- 1 reply
- 1.2k views
-
-
போக்கு மாற்றம் - சேனாதி - மாவிலாற்றில் தொடங்கி இரு வருடங்களுக்கும் மேலாக நீடித்துச்செல்லும் நாலாம் கட்ட ஈழப்போரின் பிந்திய நிலைவரப்படி, இரு தரப்பும் கைவசம் வைத்துள்ள தேர்வுகளின் அடிப்படையில் போரின் போக்கை ஆராயும்போது, புதிய பரிமாணங்கள் தென்படுகின்றன. கிழக்கு மாகாணத்தில் இருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்றுவதற்காக நிறுத்தப்பட்ட படைகளை 'எக்காரணம் கொண்டும் அகற்றமாட்டோம்" என்று சிறிலங்கா தரைப்படைத் தளபதி லெப். ஜெனரல் சரத்பொன்சேகா பலமுறை சத்திய வாக்குத் தந்திருந்தபோதும், அங்கே அண்மைக்காலத்தில் நடந்த நிகழ்வுகள், வேறுவிதமான யதார்த்தத்தைச் சொல்கின்றன. வன்னிப்போர் அரங்கிலே, கால அட்டவணை மற்றும் படைய வளங்களின் அடிப்படையில் கொழும்பின் கையை மீறிச் சென்று கொண்டிருக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
திங்கள் 04-06-2007 18:24 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவு தேவை - றோஹித போகொல்லாகம விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அனைத்துலக ஆதரவைக் கோரிவரும் சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோஹித போகொல்லாகம, போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து தமது அரசு வெளியேறாது என முரண்பட்ட தகவலை வெளியிட்டுள்ளார். சிங்கப்பூரிற்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள வர்த்தகர்களையும், அரசையும் சிறீலங்காவில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்து வருகின்ற போகொல்லாகம, றொயிட்டர்ஸ் செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் கருத்தினை வெளியிட்டார். விடுதலைப் புலிகளை பேச்சு மேசையில் சந்திப்பதற்கு தயாராக இருப்பதாகவும், பேச்சு உடனடியாக ஆரம்பிக்கப்பட்டாலும் அதனை வரவேற்பத…
-
- 2 replies
- 1.2k views
-
-
அமெரிக்கா தமிழர்களையும் நிரந்தர இராணுவ பதவிக்கு நியமிக்க முடிவு [ திங்கட்கிழமை, 16 பெப்ரவரி 2009, 11:17.35 AM GMT +05:30 ] அமெரிக்க இராணுவத்தில் பல்வேறு மொழிகள் தெரிந்தவர்களை சேர்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளனர். மற்ற நாட்டு கலாச்சாரம், மொழிகள் தெரிந்தவர்களும் இராணுவத்தில் இருப்பது நல்லது என்று அமெரிக்க இராணுவம் நினைக்கிறது. அமெரிக்க இராணுவத்துக்கு பல்வேறு நாடுகளிலும் முகாம் உள்ளது. இவை தவிர பல நாடுகளுக்கும் சென்று பணிகளை செய்கிறது. அப்போது அந்த நாட்டு மொழி மற்றும் கலாச்சாரம் தெரிந்தவர்கள் அவர்களுக்கு தேவைப்படுகிறார்கள். இதற்காக தற்காலிகமாக ஆட்களை நியமித்து கொள்வது வழக்கம். ஆனால் இது சரியான முறையில் பலன் தருவது இல்லை. இதனால் நிரந்தரமான ஆட்கள…
-
- 1 reply
- 1.2k views
-
-
Nov 23, 2010 / பகுதி: செய்தி / 10 கோடி தமிழர்களுக்கு தனி தமிழ் தேசம் வேண்டும்- தொல்.திருமாவளவன் உலகம் முழுவதும் 10 கோடி தமிழர்கள் உள்ளனர். இந்தத் தமிழ் இனத்துக்கு என தனியாக ஒரு நாடு கூட இல்லை. தமிழ் தேசம் ஒன்று உருவாக வலியுறுத்தி சென்னையில் அடுத்த மாதம் இறையாண்மை மாநாடு நடத்தப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். சேலம், நாமக்கல், தர்மபுரி, வேலூர், கோவை, திருப்பூர், ஈரோடு உள்பட 8 மாவட்டங்களை உள்ளடக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழர் இறையாண்மை மாநாடு விளக்கக் கூட்டம் சேலத்தில் நடந்தது. அதில் பேசிய திருமாவளவன், தமிழ் இனத்திற்காக தமிழ்தேசம் ஒன்று உருவாக வேண்டும். அதை சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்க வேண்டும். உலகம் முழுவதும் 1…
-
- 4 replies
- 1.2k views
-
-
மீண்டும் சிக்கலில் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் [ஞாயிற்றுக்கிழமை, 24 டிசெம்பர் 2006, 17:47 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாகவும் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பினாலும் சிறிலங்கா ஏயர்லைன்ஸ் நிறுவனம் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அண்மையில் கூடிய சிறிலங்கா ஏயர்லைன்சின் பணிப்பாளர் சபை இந்த சூழ்நிலை காரணமாக இந்த ஆண்டுக்கான மிகை ஊதியத்தை அடுத்த ஆண்டு மார்ச்சில் வழங்கத் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சிறிலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் தொடர்பாடல் இணைப்புத் தலைவர் சந்தன டி சில்வா, மிகை ஊதியக் கொடுப்பனவு தொடர்பாக வருட இறுதி அறிக்கையிலேயே தீர்மானிக்கப்படும். தவறான பிரசாரங்களும் எரிபொருள்…
-
- 0 replies
- 1.2k views
-
-
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமனம் – மக்கள் கொண்டாட்டம்! கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முழு அதிகாரம் கொண்ட கணக்காளர் நியமிக்கப்பட்டதற்கு கல்முனையில் மகிழ்ச்சி தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று(வியாழக்கிழமை) பிரதமர் ரணில் விக்ரமசிங்க முழு அதிகாரம் கொண்ட பிரதேச செயலகமாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுப்பதாக கூட்டமைப்பிடம் தெரிவித்தார். இதன் முதல்கட்டமாக சகல அதிகாரமும் கொண்ட நிதிப்பிரிவு உருவாக்குவதற்கான நடவடிக்கையினை எடுத்துள்ளதுடன் சகல அதிகாரம்கொண்ட கணக்காளரை நியமிக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். அதனை வரவேற்று நேற்று மாலை கல்முனை மாநகரில் இளைஞர்கள் ப…
-
- 5 replies
- 1.2k views
-