Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இணையத்தளம் மூலம் அனைத்துப் பரிமாற்றங்களையும் உடனுக்குடன் செய்யக்கூடியதும் தகவல்களை இரகசியமாக வழங்கக் கூடியதுமான மிக நவீன முறையில் வடிவமைக்கப்பட்டு இயங்கி வந்த வலையமைப்பு மத்திய நிலையமொன்றை நீர்கொழும்பு, குடாப்பாடு பிரதேசத்தில் பொலிசார் கண்டு பிடித்துள்ளனர். தமிழீழ விடுமலைப் புலிகள் ஜெர்மனியில் இயங்கும் அமைப்புடன் இந்த வலையமைப்பின் மூலம் தொடர்புகளைப் பேணி வந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக யாழ்ப்பாணத்தை; சேர்ந்த மூவரைக் கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். படம் இணைப்பு ஆனால் இது இது ஒரு (ஒலி)ஔடிஒ பதிவுக்கூடம், இதை போய், அதி நவீன இணையத்தள மத்திய நிலையம் என்று.... http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

    • 1 reply
    • 3.2k views
  2. [Tuesday, 2011-10-11 20:41:32] பிரித்தானியாவின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களில் 3 தாலிக்கொடி அறுப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக சில சம்பவங்கள் பட்டப்பகலில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பவுனின் விலை முன்னெப்போதும் இல்லாது உயர்வடைந்துள்ளது. இதனை சர்வதேச தொலைக்காட்சிகள் பலவும் நாளாந்தம் ஒளிபரப்பி வருகின்றது. பல தமிழ் பெண்கள் தமது தாலிக்கொடியை எந்நேரமும் அணிந்திருப்பது இல்லை. கோயில் அல்லது நல்ல காரியங்களுக்குச் செல்லும்போதே அதை அணிவது வழக்கம். ஆனால் சில பெண்கள் தாலிக்கொடியை எப்போதும் அணிவது வழக்கம். அவர்கள் அன்றாட தேவைகளுக்கு வெளியே செல்லும் போது கூட அதனை அணிந்தே செல்கிறார்…

    • 18 replies
    • 3.2k views
  3. கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 02 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! கூடிப்பேசும் (சம்பாசணை) கருத்துப்படம் 01 ஐ பார்க்க இங்கே அழுத்தவும்! * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 11 replies
    • 3.2k views
  4. முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க சி.ஐ.டி.யினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்கவே அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பகுதியில் நடைபெற்ற விபத்தொன்றை அடிப்படையாககொண்டடே, சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனையின் பிரகாரமே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/71337

    • 30 replies
    • 3.2k views
  5. இராணுவ மயமாகும் அம்பாறை மாவட்டம். Click here to read more!

    • 6 replies
    • 3.2k views
  6. ஜப்பானிய வாகனங்களின் புதிய விலை தொடர்பில் வௌியான தகவல். ஜப்பானிய வாகனங்களின் விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம், அந்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆண்டிலிருந்து 5 அல்லது 7 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக 2 ஆண்டுகள் பழமையான வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்ததே என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார். இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கி, இன்று (1) முதல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே மெரென்சிகே இந்தக் கருத்தை வௌியிட்டார். அரசாங்கத்தின் இந்த முடிவால், இந்த நாட்டின் ஒரு சாதாரண குடிமகனால் ஒரு கோடி ரூபாய்க்குக் குறைவாக …

  7. யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் சமாதானத்திற்கு சாவு மணி அடிப்பதில் சர்வதேசத்தின் பங்கு பெரும்பான்மை சிங்கள மக்கள் போரை விரும்புகின்றனர். கருத்துக்கணிப்பின் படி 87.3 வீதமான மக்கள் போரை விரும்புகின்றனர் என்று கூறப்படுகின்றது. வாழ்க்கைச் செலவுகளின் அதிகரிப்பு உச்சகதியில் இருக்கும் இத்தருணத்தில் போருக்கான ஆதரவு என்பது எவ்வாறு சாத்தியம் என்று கேள்வி எழுகின்றது. வாழ்க்கைச் செலவுகள் உச்ச கதியில் இருப்பதே போருக்கான ஆதரவாக மாறுகின்றது என்பதும் ஒரு உண்மை. அரசு மீதான மக்களின் விசனத்தை போருக்கான ஆதரவாக மாற்றுவதே சிங்களத்தலைமையின் கெட்டித்தனமாக உள்ளது. வாழ்க்கை செலவுகள் அதிகரிப்பு என்பது மக்களின் இழப்பாக கருதப்படுகின்றது இருந்தும் கிழக்கு வெற்றி என்…

    • 5 replies
    • 3.2k views
  8. புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையின் 17 டோறாப் படகுகளைக் கொண்ட பெரும் அணிமீது கடற்புலிகள் நடத்திய தீவிர தாக்குதலில் சிறிலங்கா கடற்படையினரின் இரு டோராப் படகுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் மேலும் ஒரு டோராப் படகு சேதமடைந்துள்ளது. மேலும் வாசிக்க

  9. ஆயுததாரி முதலமைச்சர் பிள்ளையானின் காரியாலயம் கருணா குழுவால் சூரையாடல் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் இயங்கிவந்த கூலிக்குழு முதலமைச்சர் பிள்ளையானின் காரியாலயம் இன்று கருணா குழு கூலிப்படையால் முற்றுகையிடப்பட்டுச் சூரையாடப்பட்டது. இதன்போது அங்கிருந்த பிள்ளையான் ஆயுதக்குழுவின் 13 பேர் கருணா குழுவால் சிறைப்பிடிக்கப்பட்டதோடு அவர்களிடமிருந்த டி - 56 ரக தானியங்கித் துப்பாக்கிகளும் தாக்குதல் நடத்தியவர்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. நன்றி தமிழ்நெட். கிழக்கு நல்லாத்தான் வெளிக்குதுபோல !?

    • 16 replies
    • 3.2k views
  10. http://www.yarl.com/videoclips/view_video....6cc0879c71b5db5 http://www.yarl.com/videoclips/view_video....80943e5c3cd9ca2 தமிழீழத்தின் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் வரை சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பழ. நெடுமாறனை தமிழகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வாசிக்க

  11. முதல் பக்கம் » தமிழ் » செய்திகள் » தமிழகம் ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த நடவடிக்கை எடுக்க முயற்சிப்பேன்-ஜெயலலிதா வெள்ளிக்கிழமை, மே 13, 2011, 17:12 [iST] Save This Page Print This Page Comment on This Article A A A Free Newsletter Sign up Jayalalitha Ads by Google Indian Take Away Order Indian, Chinese, Sushi or Thai Food Online. Home Delivery! www.thuisbezorgd.nl Ads by Google Zakelijk Fiber Power Zakelijk.UPC.nl Goede service, Gratis installatie. Meer snelheid voor maar € 42,50 pm. சென்னை போர்க்குற்றம் புரிந்த, இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை போர்க்குற்றங்களுக்கான கோர்ட்டில் இந்திய அரசு நிறுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று முதல்வர் பதவ…

    • 25 replies
    • 3.2k views
  12. சிறீலங்கா விமானப்படைக்கு உயர் தொழில்நுட்ப மிக் 29 ரக விமானங்கள் விரைவில் கிடைக்க உள்ளதாகவும் அதற்கான பூர்வாக பேச்சுவார்த்தைகள் ரஷ்சியாவுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறீலங்கா தெரிவித்துள்ளது. இந்த கொள்வனவின் கீழ் 4 மிக் 29SM வகை போர் விமானங்களும் 1 மிக் 29UB போர் விமானமும் பெறப்பட உள்ளன. இரவிலும் பகலிலும் தாக்குதலில் ஈடுபடக் கூடியதும் தரை மற்றும் வான் இலக்குகளை தாக்கும் சக்தியும் இவ்விமானங்களுக்கு உண்டு. இந்தியா போன்ற நாடுகளின் பிரதான தாக்குதல் விமானங்களாக இவை விளங்குகின்றன. தற்போது சிறீலங்கா மிக் 27 ரக போர் விமானங்களையும் இஸ்ரேலிய கிபீர் விமானங்களையும் கொண்டு தமிழர் தாயகப் பிரதேசங்கள் மீது குண்டு மழை பொழிந்து வரும் நிலையில் இந்த மிக் 29களின் வரவு அமைய…

  13. யாழில் வயல் உழுத ஜனாதிபதி கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடைபெற்ற 'தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி ' திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வயலில் இறங்கி இயந்திரத்தின் மூலம் நாற்றுக்களை நாட்டி வைத்தார். இன்றைய தினம் பாதுகாப்பான உணவு மற்றும் நிலையான விவசாயம் என்ற எண்ணக் கருவின் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இரணைமடுவிலிருந்து தொடக்கப்பட்டது. இதில் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இலங்கை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இதுவே சிறந்த தருணம். இலங்கையில் வறுமையை ஒழிப்பதற்கும், போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பத…

    • 4 replies
    • 3.2k views
  14. புலித்தலைமை எவ்வளவு கொடூரமானது என்பது என்னுடன் முரண்பட்ட பின்னரே எனக்குத் தெரிந்தது. மகிந்தவும், கோத்தபாயவும் எவ்வளவு கொடூரமானவர்கள் என்று புலிகளின் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் பின்னரே எனக்குப் புரிந்தது. இருந்தாலும் மகிந்தவும் கோத்தவும் என்னுடன் நட்பாகப் பழகியதாலும், பிரபாகரன் எனக்கு செய்த துரோகத்தாலுமே எனக்கு மகிந்தவும், கோத்தாவும் செய்தது பெரிதாகப்படவில்லை. எனது அண்ணனையும் தமிழீழத்திற்காக உயிரைக் கொடுக்கவும் தயங்காது பிரபாகரனுடன் சேர்ந்து போராடிய கிழக்குப் போராளிகளையும் என்னுடன் சேர்ந்து இருந்ததற்காக கொடுமையான முறையில் புலிகள் கொன்றார்கள்.வெருகல் பகுதியில் தங்களது சகோதரிகள் போல் இருந்த பல பெண் போராளிகளை புலிகளின் வன்னிப் படையணி கொடூரமாக கற்பழித்துக் கொன்றது. இ…

    • 24 replies
    • 3.2k views
  15. (8ம் இணைப்பு) பிலியந்தலையில் குண்டு வெடிப்பு.-( 17 க்ம் சொஉதெஅச்ட் ஒf Cஒலொம்பொ, ) : 23 பேர் பலி- 40 பேர் காயம் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான பிலியந்தலையில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் இன்று மாலை குண்டு வெடித்ததில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 40 பேர் காயமடைந்துள்ளனர். இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6:55 மணியளவில் நிகழ்ந்துள்ளதாக சிறிலங்காவின் பிரதி காவல்துறை மா அதிபர் இலங்கக்கோன் தெரிவித்துள்ளார். சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய பேருந்தின் உட்புறத்திலேயே இக்குண்டு வெடித்திருப்பதாகவும் அதிசக்தி வாய்ந்த இக்குண்டு வெடிப்பில் பலர் சிக்கியிருப்பதாகவும் தெரிகிறது. பிலியந்தலையில் இருந்து ககபொல செல்வதற்காக பேருந்த…

    • 17 replies
    • 3.2k views
  16. 'தமிழக அரசோடு முழு மனதுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம்': சு.ப.தமிழ்ச்செல்வன் "எத்தனை முறை தேவைப்பட்டாலும் தமிழக அரசோடு நாங்கள் முழு மனதோடு ஒத்ழைக்கத் தயாராக இருக்கிறோம். சம்பந்தப்படாதவர்கள் மீது வீணாகப் பழிசுமத்தி தப்பித்துப்போக வாய்பளித்து விடக்கூடாது." தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சுப.தமிழ்ச்செல்வன் மேற்கண்டாவறு தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டியின் முழு விபரம் வருமாறு: "குமரி மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரை புலிகளுக்குச் சொந்தமான 'மரியா' என்ற படகில் வந்து சுட்டுக் கொன்றதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை கடத்திச் சென்று தங்கள் முகா…

  17. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக விடுதலைப் புலிகள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் இராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது. இதற்கு துணைபுரியும் வகையிலேயே http://www.ltteir.org என்ற இந்த இணையத்தளம் …

  18. கிழக்கு மாகாண தேர்தல் முடிவுகள் மட்டக்களப்பு மாவட்ட இடம்பெயர்ந்தவர்களுக்கான வாக்களிப்பு முடிவு ஈபிடீபி 51 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 48 வாக்குகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 19 வாக்குகள் மூலம் : சிரச வானொலி

    • 9 replies
    • 3.2k views
  19. வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்திய இழுவைப் படகுகளும் அவற்றிலிருந்த 90 மீனவர்களும் வடமராட்சி கடற்றொழிலாளர்களால் சுற்றிவளைக்கப்பட்டு வடமராட்சி கரைக்கு கொண்வரப்பட்டுள்ளனர். வடமராட்சியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இந்தப் படகுகள் பிடிக்கப்பட்டிருக்கின்றன. இம்மீனவர்கள் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக வடமராட்சிக் கடற்றொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ள இந்திய மீன்பிடிப் படகுகளின் நடமாட்டம் தொடர்பாக மீனவ அமைப்புகள் போர்க்கொடி தூக்கிய நிலையில் இன்றைய தினம் உள்ளுர் மீனவர்கள் இந்திய மீனவப் படகுகளை சுற்றிவளைத்துள்ளனர். http://www.tamilmirror.lk/2010-07-14-09…

  20. சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி

    • 1 reply
    • 3.2k views
  21. வான் புலிகளை எதிர்கொள்ள அரசு வகுக்கப் போகும் வியூகம் என்ன? வான் புலிகளின் மீள் வருகைக்காக காத்திருந்த படையினரால் வான் புலிகள் மீண்டும் வந்தபோது எதுவும் செய்ய முடியவில்லை. வான் புலிகளின் தாக்குதல் ஆற்றலை முறியடிப்பதற்காக வன்னியில் விமானப் படையினர் தொடர்ச்சியாக நடத்தி வந்த தாக்குதல்களும் படைத் தளங்களில் பொருத்தப்பட்டிருந்த வான் பாதுகாப்பு பொறி முறையும் பலனளிக்கவில்லை. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீது அதிரடித் தாக்குதலை நடத்தியது போல் பலாலி கூட்டுப் படைத்தளம் மீதும் வான் புலிகள் இரவு நேரத்தில் பலத்த தாக்குதலை நடத்திவிட்டு பாதுகாப்பாக தங்கள் தளத்திற்கு திரும்பியதுடன், கட்டுநாயக்கா விமானப்படைத்தளம் மீது மீண்டுமொரு தாக்குதலை நடத்த முயற்சித்ததாகவும் கூறப்படு…

  22. புலம் பெயர் தமிழ்மக்களின் குழப்பங்களுக்கும் எதிர்கால நகர்வுகளுக்கும் பதிலளிக்கும் ஜெகத் கஸ்பார் அடிகளார் தெளிவான விபரமான ஒரு நேர்காணல் 1. தேசியத் தலைவர் பற்றிய குழப்பம் 2. நமக்குள் உள்ள தெவையற்ற முரண்பாடுகள் 3. நாடுகடந்த தமிழீழ அரசு 4. மற்றும் சமகால நகர்வுகள் நிச்சயமாக அனைத்துத் தமிழர்களும் கேட்டு தெளிவு பெறவேண்டும் நன்றி குமுதம் இணைப்புக்கு தமிழ்த்தேசியம்

    • 15 replies
    • 3.2k views
  23. ஐ.நாவின் அமைதிப் படையை உடனடியாக அனுப்பி தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்றுக! கொழும்பு, மார்ச்.5 ஐ.நா. அமைதிகாக்கும் படை ஒன்றினை உடனடியாக இலங் கைக்கு அனுப்பி இலங்கைத் தமி ழர்களின் உயிர்களைக் காப்பாற்றுங் கள் அதன் மூலம் அமைதியை நிலை நாட்ட உறுதிப்படுத்துங்கள். இவ்வாறு வற்புறுத்திக் கேட் டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் கட்சி யின் தலைவர் அப்பாத்துரை விநா யகமூர்த்தி ஐ.நா. செயலாளர் நாய கம் பான் கி மூனுக்கு அனுப்பி வைத் துள்ளார். வடக்கு, கிழக்கு, கொழும்பு மற்றும் மலையகத்திலுள்ள தமி ழர்கள் சட்டவிரோதமாகக் கொல் லப்படுவது, கைது செய்யப்படு வது மற்றும் கடத்தப்படுவது போன்ற சம்பவங்கள் நாளாந்தம் நடை பெற்று வருகின்றன. இவ்வாறு கடத்தப்படுபவர்கள் பூஸா என்ற தட…

  24. நெல்லியடியில் சம்பவம் யாழ்ப்பாணம் நெல்லியடியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் உணவுக்கு வழியின்றி பசியால் துடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நெல்லியடி புலோலியைச் சேர்ந்த முத்தையா சந்திர பாலா (வயது 60) என்பவரே இவ்வாறு பட்டினியால் பரிதாபமாக உயிரிழந்தவராவார். நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் இவர் பட்டினியால் மரணமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்ட இவரது சடலத்தின் பிரேத பரிசோதனையை மாவட்ட வைத்திய அதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரியும் பதில் நீதிவானுமாகிய ந.தங்கராசா ஆகியோர் நடத்தினர். யாழ். குடாநாட்டில் கடும் உணவுப் பஞ்சம் நிலவி வரும் நிலையில் ஒரு வேளை உணவுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.