ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142598 topics in this forum
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஜே.ஆர்.ஜெயவர்தன 1988ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணமாக இணைத்தமையினால் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது. அத்துடன் கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் வடகிழக்கு மாகாணத்தை பிரிக்கவேண்டும் என்று கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலதிக விபரங்கள் விரைவில்... http://www.tamilwin.com/article.php?artiId...&token=dispNews
-
- 39 replies
- 6.8k views
-
-
விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலுக்கு தயாராகின்றனர்: கண்காணிப்புக்குழு [புதன்கிழமை, 17 சனவரி 2007, 05:46 ஈழம்] [கொழும்பு நிருபர்] கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் மிகப்பெரும் தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர். தென்னிலைங்கையின் நிலமையைப் பொறுத்து அவர்களின் தாக்குதல்கள் ஆரம்பமாகலாம் என இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக்குழு தெரிவித்துள்ளது. தென்னிலங்கையில் பெரும் சம்பவங்கள் நடைபெறும் போது கிளிநொச்சி பதற்றமாக காணப்படுகின்றது. எதிர்வரும் வாரங்களில் பெரும் சமர்கள் மூளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. இது தென்னிலங்கையில் ஏற்படும் முன்னேற்றகரமான சூழ்நிலைகளைப் பொறுத்து அமையும் என அது மேலும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கொழும்பில் உள்ள கண்காணிப்புக்குழுவின் ப…
-
- 35 replies
- 6.8k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மரணமடைந்தது உண்மையே என அந்த அமைப்பின் சர்வதேச உறவுகளுக்கான பிரிவின் தலைவர் செல்வராசா பத்மநாதன் ஒப்புக்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் கூட, அந்த மரணத்தின் சர்ச்சைகள் நீடிக்கின்றன. காரணம்..? முதலில் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம் அறிவித்தது முதல் இன்று வரையிலான முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்... மே 18 : "இலங்கை ராணுவ முற்றுகையில் இருந்து (வெள்ள முள்ளிவாய்க்கால் பகுதி) பிரபாகரன் தனது தளபதிகளுடன் குண்டு துளைக்காத ஒரு கவச வேனில் வட பகுதியை நோக்கி தப்பிச் செல்ல முயன்றனர். அப்போது, ராணுவத்தினர் வீசிய ராக்கெட்டில் பிரபாகரன் சென்ற வேன் சிதறடிக்கப்பட்டது. பின்னர், அந்த வேனுக்கு…
-
- 13 replies
- 6.8k views
-
-
உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல் "சமாதானம் 2005' புலிகள் பாவிப்பு பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. "சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. "சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை. …
-
- 24 replies
- 6.8k views
-
-
நான் இருக்கிற இடத்தில பரபரப்பு கிடைக்காது, யாராவது என்னவாம் எண்டு பாத்துச் சொல்லுங்கோவன்.
-
- 26 replies
- 6.8k views
-
-
TIME magazine is once again holding a poll with nominees for the Time 100,which is a list of the most influential people in the world. The poll asks you to “ “Cast your votes for the leaders, artists, innovators, icons and heroes that you think are the most influential people in the world. The winner will be included in the TIME 100.” The war crimunal MAHINDA'S name has been added to that list. Please, click on the link below and vote "NO". voting closes tomorrow(14/04/2011) Please hurry! http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html இதுவரை சிங்களவர்கள் வாக்களிப்பில் முன்னயில் இருக்கிறார்கள் Results …
-
- 85 replies
- 6.8k views
- 1 follower
-
-
சர்வதேச உளவு நிறுவனங்களின் முக்கிய வேவு மற்றும் கொலைத் தாக்குதல்களைப் பரீட்சிக்கும் ஒரு யதாhத்தமான களமாக கொழும்பு நகரம் மாறியுள்ளது. இன்று (1-12-2006) ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலும் இந்த வகையில் நோக்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், பாரம்பரியமாகவும், ஏற்கனவே தமது அதிகார வர்க்கத்தினரால் வெற்றிடங்கள் இடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைகளுக்கு தேவையான எழுத்துக்களையிட்டு, புலிகள் மீது ஸ்ரீலங்கா அரசு உட்பட உலகக்கனவானும் குற்றஞ்சாட்டியுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட மௌனமாக இந்தத் தாக்குதலை புலிகள் செய்திருப்பார்கள் என்று முணுமுணுப்பது இங்கு தெரிகிறது. எனினும், கொழும்பின் புலனாய்வுச் செய்தியாளர்கள…
-
- 29 replies
- 6.8k views
-
-
தமிழீழத்தை கைவிட்டுவிட்டோம் என்று சொல்கின்ற யோக்கிய அருகதை தகுதி தமிழ் உலகத்தில் எவனுக்கும் கிடையாது நேற்று கொழும்பில் முழைத்து இன்று யாழ்ப்பாணத்தில் தளைவிட்ட விக்னேஸ்வரன் இவருக்கு எந்த உரிமையும் கிடையாது நீதியே இல்லாத தேசத்தில் நீதிபதியாக இருந்தவர் வாயடிக்கின்றார் கடும்தொனியில் காசியானந்தன்(காணொளி) வடமாகாண தேர்தல் முடிந்து அங்கே விக்னேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார் இதனை பெரிதாக ஊடகர்கள் அலசி ஆய்ந்துகொண்டிருக்கின்றார்கள். அங்கிருந்து கொண்டு தமிழர்களின் விடுதலைஉணர்வினை மழுங்கடிக்கும் முயற்சியினை நாலுபக்கத்திலும் நஞ்சர்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இந்த தேர்தல் மகிந்த அரசிற்கு பெரிதும் உதவி புரிந்திருக்கின்றது மகிந்தவின் அரசு ஒருநேர்மையான அரசு ஜனநா…
-
- 111 replies
- 6.8k views
-
-
பிரபாகரனின் தொடர் தோல்விகளின் பின்னணியில் அமெரிக்க எவ்.பி.ஐ.! விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சர்வதேச ஆயுதக் கொள்வனவுகள், கடத்தல்கள் சம்பந்தப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய அமெரிக்காவின் எவ்.பி.ஐ. எனப்படும் சமஷ்டிப் புலனாய்வுக் குழுவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எடுத்த நடவடிக்கைகளும் பிரபாகரனின் தாக்குதல் திட்டங்களுக்குப் பாரதூரமான பின்னடைவையும் தோல்வியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் புலிகள் அமைப்பு மேற்கொண்ட தாக்குதல் திட்டங்கள், செயற்பாடுகள் பற்றி ஆராய்ந்து பார்த்தால் அவ்வாண்டில் பிரபாகரனின் அனைத்து நடவடிக்கைகளிலும் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக தோல்விகளை அடைந்திருப்பதாகக் கருத முடியும். இந்த வகையில் கடந்த …
-
- 36 replies
- 6.8k views
-
-
கடந்த தீபாவளி தினத்தை கனடாவில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜேர்மனியில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் கொண்டாடியதாக செய்திகள் வெளியாகியிருந்தது யாவரும் அறிந்ததே. இன்னும் சில நாடுகளில் அவை நடைபெற்றதும் அதற்கான புகைப்படங்கள் வெளியாகியிருந்தது. ஆனால் லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தீபாவளி நிகழ்வுகள் எதனையும் செய்யவில்லை என்ற செய்திகள் கொழும்பு ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதனை சில தமிழ் இணையங்களும் பிரதிபலித்தன. தமிழர்கள் செறிந்து வாழும் லண்டனில் அவ்வாறு ஒரு நிகழ்வை இலங்கை அரசால் வெளிப்படையாகச் செய்ய முடியாது என்ற கருத்துக்களும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இலங்கைத் தூதரகமானது பிற இடங்களில் மண்டபத்தை எடுத்து தீபாவளி நிகழ்வை நடத்தியது போல இல்லாமல், லண்டனில் அது தனது தூதுவராலயத…
-
- 58 replies
- 6.8k views
-
-
வலிந்து போரை ஆரம்பித்தது சிறீலங்கா அரசு - திருமலையில் கிபிர் விமானங்கள் பாரிய குண்டு வீச்சு - பாண்டியன் - வுரநளனயலஇ 25 யுpசடை 2006 18:44 இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு திருகோணமலை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களான சம்புூர் அதனை அண்டிய பிரதேசங்களின் மீது சிறீ லங்கா வான் படையின் கிபிர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக் குதலை ஆரம்பித்துள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணியளவில் இருந்து இந்தச்செய்தி பதிவு செய்யும் 6-45 மணிவரை தாக்குதல்கள் நீடித்தவண்ணம் உள்ளது. இது வரை மிகவும் சத்தத்துடன் மேற்படி சிறீ லங்கா வான்படைக்கு சொந்தமான 'கிபிர்' விமானங்களால் இது வரை 6 குண்டுகள் வீசப்பட்டுள்ளது இதுவரை சேதவ…
-
- 42 replies
- 6.8k views
-
-
சாந்தனின் உடலை இலங்கைக்குக் கொண்டு வர நடவடிக்கை! சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அண்மையில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், கல்லீரல் செயலிழப்புக் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்தார். இந்நிலையில், சாந்தனின் உடலை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் தலைமை வைத்திய அதிகாரி தேனிராஜன் தெரிவித்து…
-
-
- 74 replies
- 6.8k views
- 3 followers
-
-
இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்துக்கு மாறிய மகன் மீது கத்தியால் வெட்டி காயப்படுத்தி தனது கோபத்தினை வெளிப்படுத்திய சம்பவம் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் நேற்று முன்நாள் இடம்பெற்று உள்ளது. முதுகு மற்றும் கைகளில் படுகாயம் அடைந்த நிலையில் மகன் யாழ். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். யாழ்ப்பாணம் பிறவுண் வீதி கலட்டிச் சந்தியைச் சேர்ந்த பிரபாகரன் பிரதீபன் (வயது 28) தற்போது அப்துல்லா என்று அழைக்கப்படும் இளைஞரே சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பாக பிரதீபன் தெரிவித்தவை வருமாறு: யாழ். நகரில் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றேன். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி நான்கு வருடங்களுக்கு முன்னர் முஸ்லிம் மதத்துக்கு மாறினேன். அத்துடன், என…
-
- 65 replies
- 6.7k views
-
-
விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தின் ரி௫5 ரக டாங்கிகள்: கொழும்பு ஊடகம் முகமாலைச் சமரின் போது தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சிறிலங்கா இராணுவத்தினரின் ரி௫5 ரக டாங்கிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சொக்கோஸ்லோவேக்கியா தயாரிப்பான ரி௫5 ரக யுத்த டாங்கி ஒன்று இருப்பதை இராணுவம் அண்மையில் உறுதி செய்துள்ளது. இருவேறு யுத்த நடவடிக்கைகளில் புலிகளால் கைப்பற்றப்பட்ட மூன்றில் ஒன்றாக அவை இருக்கக்கூடும். 1993 நவம்பர் மாதம் பூநகரியில் இரு ரி௫5 ரக டாங்கிகளையும் 1997 ஆம் ஆண்டு ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஒரு டாங்கிகையும் சிறிலங்கா இராணுவம் இழந்தது. இந்த ரி௫5 ரக டாங்கிய…
-
- 23 replies
- 6.7k views
-
-
அம்பாறை மாவட்டம் அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக சென்றுவிட்டு கொழும்பு திரும்பிக்கொண்டிருந்த சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பயணம் செய்த உலங்குவானூர்தி மீது தமிழீழ விடுதலைப் புலிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் உலங்குவானூர்தி சேதமடைந்துள்ள போதும் மகிந்த ராஜபக்ச நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பில் அம்பாறையிலிருந்து விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை அறுகம்பை பாலத்தை திறந்து வைப்பதற்காக பலத்த பாதுகாப்புடன் இன்று முற்பகல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அங்கு சென்றிருந்தார். அவரது பயணத்தினை ஒட்டி சுமார் 8,000-க்கும் அதிகமான படையினர் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந…
-
- 49 replies
- 6.7k views
- 1 follower
-
-
என்று மின்னஞசலில் கிடைக்கப்பெற்ற இணைப்பு http://www.yarl.com/forum3/uploads/mp3/nagulan.mp3
-
- 33 replies
- 6.7k views
-
-
கொழும்பு விடுதிகளிலிருந்து 500 தமிழர்கள் கட்டாய வெளியேற்றம் சிறிலங்கா தலைநகரான கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் விடுதிகளில் தங்கியிருந்த 500-க்கும் மேற்பட்ட தமிழர்களை சிறிலங்கா காவல்துறையினர் பலவந்தமாக வெளியேற்றி உள்ளனர். வெள்ளவத்தையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட விடுதிகளை இன்று வியாழக்கிழமை காலை 6 மணியளவில் சுற்றிவளைத்த சிறிலங்கா காவல்துறையினர் அங்கு தங்கியிருந்த குழந்தைகள், முதியவர்கள் என அனைவரையும் வெளியேற்றினர். அதன் பின்னர் அனைவரையும் வெள்ளவத்தை சிறிலங்கா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து 7 பேரூந்துகளில் ஏற்றி கொழும்பு புறநகர் பகுதியான பேலியகொடவில் இறக்கிவிட்டனர். சிறிலங்காவின் இந்த கொடூர நடவடிக்கைக்கு மேலக மக்கள் முன்னணியின் கொழும்ப…
-
- 70 replies
- 6.7k views
-
-
புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்! நாங்கள் எதிர்பார்த்தது போலவே, நாங்கள் எதிர்வு கூறியதைப் போலவே சிங்கள தேசத்தின் புலம்பெயர் தமிழர்கள் மீதான தாக்குதல்கள் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்திலும் வேகமாக, கொடூரமாகத் தீவிரமாகி வருகின்றது. முள்ளிவாய்க்காலில் வீழ்த்தப்பட்டது மனித உயிர்கள். இங்கே வீழ்த்தப்படுவது மனித மனங்கள். புலம்பெயர் தமிழர்களின் பலத்தைச் சிதைக்கும் முயற்சிகள் யுத்தம் முடிவுக்கு வந்த சில வாரங்களிலேயே ஆரம்பமாகிவிட்டது என்றாலும், தற்போது அதன் வேகம் அச்சம் கொள்ளத்தக்க வகையில் அதிகரித்துச் செல்கிறது. விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டு, எஞ்சிய மூன்று இலட்சம் தமிழர்கள் சிறைப்பிடிக்கப்பட்…
-
- 60 replies
- 6.7k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் உடைய உடன் பிறப்புக்கள் இலங்கை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தாய் பார்வதி அம்மாள் உடல் நலக் குறைவால் யாழ்.வடமராட்சியில் உள்ள வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். ஆயினும் அவரின் உடல் நிலை மிகவும் மோசம் என்று கூறா விட்டாலும் நம்பிக்கை ஊட்டக் கூடிய விதத்தில் இல்லை. அவர் பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்கிற பேரவாவை வெளிப்படுத்தி வருகின்றார். இது அவரின் இறுதி ஆசை என்று நம்பப்படுகின்றது. தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பியுமான கே.சிவாஜிலிங்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை வைத்தியசாலையில் பார்வதி அம்மாளை நேரில் போய…
-
- 15 replies
- 6.7k views
-
-
அநுராதபுரம் கெக்கிராவ தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட கெக்கிராவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 29840 ஐக்கிய தேசிய கட்சி 15457 ஜே.வி.பி.751 அநுராதபுரம் கிழக்கு தொகுதி: ஐ.ம.சு.கூ வெற்றி வடமத்திய மாகாணம் அநுராதபுர மாவட்ட அநுராதபுரம் கிழக்கு தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன் பிரகாரம் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 31099 ஐக்கிய தேசிய கட்சி 18726 மக்கள் விடுதலை முன்னணி 2759 http://www.virakesari.lk/art…
-
- 72 replies
- 6.7k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைக்காக போராடி இதுவரை 22 ஆயிரத்து 114 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளதாக மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982 முதல் 31.10.2008 வரையான காலப்பகுதியில் இந்த மாவீரர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். இவர்களில் 17,305 ஆண் மாவீரர்களும், 4809 பெண் மாவீரர்களும் அடங்கியுள்ளனர். 2008ம் ஆண்டு இதுவரை 1974 போராளிகள் விடுதலைக்காகப் போராடி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு தாயக விடுதலைப் போரில் வீரகாவியமான மாவீரர்களின் பெற்றோர்கள் மதிக்களிக்கப்பட்டு வருகின்றனர். வட்டக்கச்சி கோட்டத்திற்குட்பட்ட மாவடி வட்டத்தில் மதிப்பளிக்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை இர…
-
- 37 replies
- 6.7k views
- 1 follower
-
-
பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கை வதந்திதிங்கள்கிழமை, ஜனவரி 12, 2009, 18:14 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மன் சரணடைந்ததாக இலங்கையில் வதந்தி கிளப்பப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தலைவர் பொட்டு அம்மன். இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் வலதுகரமாக திகழ்பவர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரனுடன் சேர்த்து இவரும் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர். இந்த நிலையில் நேற்று ராணுவத்திடம், பொட்டு அம்மன் சரணடைந்து விட்டார் என 'லங்காவெப்' என்ற இணையதளம், 'எல்லாளன்ஃபோர்ஸ்' என்ற பிளாக்கை மேற்கோள் காட்டி வதந்தி கிளப்பியது. அந்த பிளாக்கில், விடுதலைப் புலிகள்…
-
- 21 replies
- 6.7k views
-
-
பிரான்ஸ் பிரஜைகளான தமிழ்ச் சிறுமியும், தாயும் நேற்றுக் காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் விடுமுறையில் இலங்கை சென்றிருந்த சிறுமியும் தாயும் நேற்றுக் காலை பிரான்ஸ் நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் சென்றிருந்தனர். அவர்கள் இருவரும் விமானநிலையத்தில் பயணிப்பதற்கான சூட்கேஸ்களை ஒப்படைத்து விட்டு, போர்டிங் எடுப்பதற்கென அவர்களது கடவுச்சீட்டுக்களைக் கொடுத்தபோது விமான நிலையத்திலுள்ள புலனாய்வுப் பிரிவினரால் குறித்த தாயும் மகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான தாய் பகீரதி என்றும், மகள் பகல்வி (8 வயது) என்றும் தெரிய வந்துள்ளது. h…
-
- 79 replies
- 6.7k views
-
-
சதீஸ் செத்துக் கொண்டிருக்கிறான். 2008ம் ஆண்டு கொழும்பில் கைதாகி சயனைட் உட்கொண்டு உயிர் தப்பவைக்கப்பட்ட சுந்தரம் சதீஸ் வழக்கிற்காக கழுத்துறைக்கு 21.08.2012 கொண்டு செல்லப்பட்டான். காரணம் தெரியாது காயங்களுடன் மரணப்படுக்கையில் கிடக்கிறான். அவனுக்கு என்ன நடந்ததென்றது புதிராகவே இருக்கிறது. சுயநினைவை இழந்து போயிருக்கிறான். வழக்கிற்காக வளமையாக காலிக்கு போய் வருகிறவனுக்கு என்ன நடந்தது ? அவனை நம்பிய அவனது மனைவி கவிதா அவனது குழந்தை சாகித்தியன் இருவரினதும் கண்ணீர்க்குரல் சதீசின் கண்களிலிருந்து கண்ணீரை மட்டுமே சிந்த வைக்கிறது. ஒரு காலத்தின் வரலாறு ஒரு இனத்தின் விடுதலையை நேசித்தவன் கடமைக்காகவே குடும்பம் என்ற கூட்டைக் கட்டியவன். இன்று அனாதையாய் எல்லாம் இழந்து 4வருடங்கள் ச…
-
- 32 replies
- 6.7k views
-
-
கடந்த திங்களன்று (நேற்று) அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் பிரதேசத்தில் நடந்த மோதலில் விடுதலைப்புலிகள் பாவித்த கண்ணீர் புகையை ஒத்த புகைக் குண்டுகள் என்று கருதத்தக்க புகைக் குண்டுத் தாக்குதலால் 16 படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டத்தாகக் கூறியுள்ள வன்னிப் படைத்தரப்பு... விடுதலைப்புலிகளின் இரசாயன ஆயுதங்களைச் சமாளிக்க தன்னைத் தயார்படுத்தி வருவதாக அரசை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. இது உண்மையில் விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பாவிக்கின்றனரா அல்லது அரசு தான் வன்னி மீது இரசாயன ஆயுதங்களைப் பாவித்து தாக்குதல் நடத்த திட்டுமிடுகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதற்கிடையில் இவ்வாறான தாக்குதல் நடந்ததாக அரசு உத்தியோகபூர்வமாகச் சொல்லாதவிடத்தும்.. இது தொட…
-
- 42 replies
- 6.7k views
-