ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
கிளிநொச்சி மாவட்டம் விசுவமடு ரெபார்னா பகுதியில் இளங்கோ புரம் கிராமத்தில் இரவு வேளை வீடொன்றினுள் புகுந்த இராணுவத்தினர் அந்த வீட்டில் இருந்த இரண்டு குடும்ப தாய்மார் மீது பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டனர். இரு பிள்ளைகளின் தாய்மார்களான இந்த பெண்கள் அருகில் உள்ள இராணுவ முகாமில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 இராணுவத்தினர் திங்கள் கிழமையன்று கைது செய்யப்பட்டிருக்கின்றார்களாம். செவ்வாய் கிழமை காலை கிளிநொச்சி மாவட்ட நீதவான் முன்னிலையில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்களை விளக்க மறியலில் வைத்து விசாரணை செய்து வரும் 14 ஆம் திகதி திங்கட்கிழமை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருக்கின்றார். பாதிக்கப்பட்ட தாய்மார்கள் இருவ…
-
- 14 replies
- 1.5k views
-
-
பறிக்கப்பட்ட பட்டங்கள் சலுகைகள் அனைத்தையும் மீண்டும் பெறுகிறார்:- மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சுமத்திய அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் இராணுவதளபதி சரத்பொன்சேகா விடுவிக்கப்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பை விடுத்துள்ள ஜனாதிபதி ஊடகபிரிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முழுமையான பொதுமன்னிப்பை வழங்கி உள்ளதாவும் தெரிவித்துள்ளது. அவருக்கு எதிராக முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீருபனமாகி உள்ளதாக இராணுவ நீதிமன்றம் இன்று 2011 இல் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவரது சிவில் உரிமைகள் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115783/language/ta-IN/article.aspx
-
- 14 replies
- 1k views
-
-
புலிக்கொடி பறக்கவிட்ட மயூரன் நடைபயணம் மூலம் பரப்புரை கடந்த உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் தமிழீழத் தேசியக் கொடியைப் பறக்கவிட்ட கனேடிய இளைஞர் மயூரன், ஈழத் தமிழர் துயர் குறித்து விளக்க தற்போது நடைபயணம் மேற்கொண்டுள்ளார். கனடாவில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தனது நடைபயணத்தைத் தொடங்கினார். ரொரன்ரோ சிட்டி அரங்கத்திலிருந்து ஒசாவா அரங்கம் வரையில் 60 கிலோ மீற்றர் தொலைவு நேற்று புதன்கிழமை நடந்துள்ளார். "தனது சொந்த நலன்களுக்காக பெரும்பான்மை இனமானது சிறுபான்மை இனத்தை ஒடுக்கும் "எரோரிசத்தை தடுப்போம்" என்ற முழக்கத்துடன் ஈழத் தமிழரின் துயரை விவரிக்கும் வகையில் இந்தப் பயணத்தை மயூரன் மேற்கொண்டுள்ளார். வழியெங்கும் அவரை பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். …
-
- 14 replies
- 3.1k views
-
-
மன்னாரில் புதிய காற்றாலை திட்டத்தை அமைப்பதற்கான ஒப்பந்தங்களை கோரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது. அதே பகுதியில் 100 மெகாவாட் காற்றாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதை அடுத்து மேற்படி ஒப்பந்தம் கோரப்படவுள்ளது. புதிய காற்றாலை 50 மெகாவாட் திறனை உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார். காற்றாலை தவிர, மொத்தம் 165 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைப்பதற்கான டெண்டர்களையும் அமைச்சு கோரியுள்ளது. நாட்டின் எரிசக்தி ஆதாரங்களை பன்முகப்படுத்தவும், புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுத…
-
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
இராணுவ இணையத்தளம் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.Army point at Thalgasmankada comes under LTTE attack Media Centre for National Security (MCNS) said, an army point at Thalgasmankada, South of Paanama has come under a terrorist' attack this evening. The sources said that the attack has started around 6 p.m. More information will follow...புதினம் இணையத்தளத்திலும் இது தொடர்பான செய்தி வெளியாகியுள்ளது
-
- 14 replies
- 5.5k views
-
-
சிங்கள தேசம் எவ்வாறு தமிழர்களை பற்றிய புரிதலை வைத்திருக்கிறது என்பதற்கு நேரடி சாட்சியாக ஒரு அனுபவத்தை பதிவு செய்கிறார் பாதிரியார் ஒருவர். ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்த குறித்த சம்பவத்தின் மூலம் பிளவுபட்டு நிற்பது தேசங்கள் மட்டுமல்ல அத்தேசத்தில் வாழும் மக்களின் மனங்களும் தான் என்பதை புரிந்துகொள்ளலாம். இதுபற்றி தெரியவருவதாவது மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து 150 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக தென்னிலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். மூன்று நாள் பயணமாக அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் கண்டி கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக விமானதளத்திற்கு சென்றும் எவ்வாறு விமானங்கள் ஏறி இறங்குகிறது என…
-
- 14 replies
- 1.9k views
-
-
புலம்பெயர் இலங்கையர்களை... சந்தித்தார், ரணில். பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்து கொள்ளுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1300128
-
- 14 replies
- 1.3k views
-
-
அவுஸ்திரேலிய மத்திய அரசின் அனுமதியின்றி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக எந்த நாட்டின் எந்த ஒரு நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ய முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இன்று தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் தலைவருக்கு எதிரான இவ்வாறான வழக்குகளை சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி தொடர முடியாது எனவும் அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய பேட்டியில் ஆஸி. பிரதமர் கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கு குறித்து சட்டமா அதிபருக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை இந்த வழக்கு குறித்த எந்த ஆவணமும் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குக் கிடைக்கவில்லை என ஆஸி சட்டமா அதிபர் திணைக்களமும் தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த வழக்கு தொடர்பில் சட்ட…
-
- 14 replies
- 1.4k views
-
-
Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 03:50 PM யாழ்ப்பாணம் - பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பணிபுரியும் வைத்தியர் ஒருவர், வைத்தியசாலை விடுதிக்குள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். குறித்த சம்பவம் இன்று புதன்கிழமை (12) வைத்தியசாலையில் நடந்தது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரே உயிரை மாய்த்துள்ளார். உயிரிழப்புக்கான காரணம் தெரிய வராத நிலையில் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/185925
-
-
- 13 replies
- 960 views
- 2 followers
-
-
த.தே.ம.மு. உறுப்புரிமையில் இருந்து மணிவண்ணன் நீக்கம்?- வெளியான தகவல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்புரிமையில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணனை நீக்கத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகப் பேச்சாளருமாக இருந்த வி.மணிவண்ணனை பதவிகளில் இருந்து நீக்குவதாக கட்சியின் மத்திய குழு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சூம் செயலி ஊடாக கூடி தீர்மானம் எடுத்தது. தீர்மானம் எடுக்கப்பட்டு இரு தினங்களுக்கு பின்னரே தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரால் உத்தியோக பூர்வமாக கடிதம் மூலம் தமது தீர்மானம் குறித்து மணிவண்ணனுக்கு அறிவிக்கப்பட்டது. கட்சியின் பதவிக…
-
- 13 replies
- 2.1k views
-
-
ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
- 13 replies
- 2.4k views
-
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்! சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) என்ற மருத்துவக் கப்பல் நேற்றைய தினம் சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். ‘பீஸ் ஆர்க்’ என்பது 178 மீட்டர் நீளமுள்ள மருத்துவ வசதிக் கப்பல், கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, குறித்த கப்பல், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் ஏற்பாடு செய்யும். அவை ‘பீஸ் ஆர்க்’ மற்றும் இலங்கை கடற்படை மருத்துவ திணைக்களத்தின் மரு…
-
-
- 13 replies
- 1.2k views
- 1 follower
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைப்பு.! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமராட்சி அலுவலகம் சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சி (தமிழ் தேசிய கூடடமைப்பின்) வடமராட்சி காரியாலயம் வடமராச்சியில் தமிழ் தேசிய கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சடடத்தரணியும் ma சுமந்திரனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வடமராட்சி காரியாலய திறப்பு விழாவில் தமிழரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தன் மற்றும் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர். http://aruvi.com/article/tam/2020/09/03/16264/
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கைக்கு அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள கரையோர பாதுகாப்பு கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்காவுக்குச் சென்றவர்களில் 9 பணியாளர்கள் அங்கு தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கப்பலை இலங்கைக்கு கொண்டு வருவதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் அமெரிக்கா சென்றுள்ளனர். இந்தக் கப்பல் இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என கடற்படை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் தலைமறைவான 9 இலங்கையர்கள்! (newuthayan.com)
-
- 13 replies
- 608 views
-
-
Published By: VISHNU 17 AUG, 2023 | 08:03 PM குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை (16) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். இதில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் பீட்டர் இளஞ்செழியன் மற்றும் குருந்தூர் மலை பௌத்த பிக்கு கல்கமூவ சாந்தபோதி, அருண் சித்தார்த் ஆகியோருக்கு எதிராக இந்த இந்த தடை உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் மன்றில் AR அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் பிரிவு 106(1) கீழ் தடை உத்தரவை வழங்கும…
-
- 13 replies
- 1k views
- 1 follower
-
-
ஜனவரி நடுப் பகுதியில் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி! ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது அண்மைய இந்திய விஜயத்தைத் தொடர்ந்து, ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கான உத்தியோகபூர்வ சுற்றுப் பயணத் திட்டத்தை அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த வாரம் சீன மக்கள் குடியரசின் அரசியல் ஆலோசனைக் சம்மேளன (CPPCC) தேசியக் குழுவின் உப தலைவர் கின் பொயோங்கை (Qin Boyong) சந்தித்து, உயரிய முன்னேற்றத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய சில நாட்களுக்குப் பின் சீன விஜயம் தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது. கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது ஜனாதிபதி, எதிர்வரும் ஜனவரி மாதம் நடுப் பகுதியில் தான் சீனாவுக்கு செல்லவுள்ளதாக கூறினார். கடந்த…
-
- 13 replies
- 744 views
- 1 follower
-
-
வன்னிமீதான படை நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டதா?. - லண்டனிலிருந்து வன்னியன் திங்கள், 04 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகப் பிரிவு கடந்த வராங்களில் படையினர் வசம் கைநழுவிச் சென்றுவிட்டது. இப்பிரதேசத்தின் அடர்த்தியான குடிப்பரம்பலும் புலிகளின் கடல்வழி விநியோக ஓடத்துறையையும் கொண்ட விடத்தல்தீவு. படைத்துறையின் மிகப்பெரும் இலக்காக நீண்ட காலமாகக் குறிவைக்கப்பட்டு தற்போது அடையப்பட்டுவிட்டது. இதன்மூலம் மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் கிராமம் தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் முழுமையாக படைகளால் விழுங்கப்பட்டு விட்டது. “யுத்தத்தின் முடிவின் ஆரம்பம்” என இதை சிங்களப் படைத்தளபதி லெப்.ஜென்ரல். சரத்பொன்சேகா. பெருமைடயுடன் குறிப்…
-
- 13 replies
- 3.5k views
-
-
இலங்கையில் வெளியார் தலையிட இந்தியா அனுமதிக்காது! - என்கிறார் சுப்பிரமணிய சுவாமி. [Thursday 2014-08-21 09:00] இலங்கையின் உள்ளூர் விடயங்கள் தொடர்பாக தலையீடுகளை மேற்கொள்ளவோ, இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்தார். இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த நான்காவது பாதுகாப்பு கருத்தரங்கின் இறுதி நாளான நேற்று பிரதான உரை நிகழ்த்திய சுப்பிரமணியம் சுவாமி மேலும் உரையாற்றுகையில், இந்தியாவை பொறுத்த மட்டில் தேசிய மட்டத்திலான நலனை கருத்திற் கொண்டே தனது வெளிநாட்டு மற்றும் தேசிய கொள்கையை வகுக்குமே தவிர ப…
-
- 13 replies
- 725 views
-
-
1980 களில் ராஜபக்ஷ தான் சொன்னதை இன்று செயலால் நிரூபித்திருக்கின்றார். அதாவது இந்தியா தமிழர் பிரச்சனை மூலம் இலங்கையில் நிரந்தரமாகக் காலூன்றி, இலங்கையையும் தனது மாநலங்களில் ஒன்றாக இணைப்பதற்குரிய செயற்பாடே ஐபிகேஎவ். இந்தியாவின் இந்தத் தலையீட்டை இலங்கையிலிருந்து அகற்றப்படவேண்டும் என்ன கனவு இன்று நிறைவேறியுள்ளது. பிரச்சனையை உருவாக்கிய இந்தியாவையே வைத்து அவர்களின் செலவிலும் முழுமனதுடனான பங்களிப்பிலும் அவர்களால் உருவாக்கப்பட்ட தமிழ் குழக்களை எல்லாம் அழித்து, முடிவில் இந்தியாவையே இலங்கையிலிருந்து அப்பால் தள்ளி, இலங்கையின் காலடியில் இந்தியாவை விழவைத்த பெருமை ராஜபக்ஸவைச்சாரும். தமிழர்களுக்குரிய உரிமையையும் சுமுகமாகத்தீர்த்தால் இந்தியாவை இலங்கையிலிருந்து முறறு முழுதாக அப்ப…
-
- 13 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான மைத்திரிபால சிறிசேன அவர்கள் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிலைமைகளை ஆராய்ந்தே முடிவெடுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவரான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். மைத்திரிபால சிறிசேன அவர்கள் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவரது செவ்வியையும் தான் கேட்டதாகக் கூறிய சம்பந்தன் அவர்கள், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாக அவர் கூறிய சில அம்சங்களை வரவேற்ற போதிலும் அவை குறித்தும், யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்தும் தமது கட்சியே ஆராய்ந்து முடிவெடுக்கும் என்றும் கூறினார். இந்த விடயங்கள் குறித்த சம…
-
- 13 replies
- 1.2k views
-
-
போராளிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற இராணுவத்தினரின் கெடுபிடிகளே காரணம் - விநாயகமூர்த்தி 'கடந்த 45 நாட்களில் மட்டும் வடக்கிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாடு சென்றுள்ளனர்.' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார். போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் இராணுவத்தினரின் தொல்லைகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
-
- 13 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை தொடர்ந்து நீடிப்பதற்கு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவில் 2000 ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்தின் பின்னர் பிரித்தானியாவின் உள்துறை அமைச்சின் செயலாளரினால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் ஐரோப்பிய வலய நாடுகள் உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 30 நாடுகளுக்கும் மேல் தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடிக்க பிரித்தானியா தீர்மானம் | Virakesari.lk
-
- 13 replies
- 1.1k views
-
-
நாடு கடந்த அரசு எல்லோருடைய உள்ளக் கருத்துக்களையும் உள்வாங்கிக் கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்து செயற்பட இருக்கிறது, அதனுடைய அடித்தளம் 1976ம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானமாகும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈழவேந்தன் தெரிவித்துள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான கனடிய செயற்பாட்டுக்குழுவின் உத்தியோகபூர்வ ஒலிபரப்பான தமிழீழத்தின் குரல் நிகழ்ச்சியின் போது வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் சில கேள்விகளுக்கான பதிலில் அவர் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் மாதம் வெளியிடப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசுக்கான அறிவிப்பானது இன்றைய காலத்தின் தேவையை நிறைவு செய்வதோடு காலத்தால் சாகாத நல்ல உள்ளடக்கத்தைக…
-
- 13 replies
- 924 views
-
-
இப்படியும் நடந்தது நான் அவுஸ்த்திரேலியாவிற்கு வந்தது முதல் இதுவரையில் தமிழ்ப் படம் பார்க்கத் திரையரங்கிற்குப் போனது கிடையாது. ஆனால் ஓரிரு ஆங்கிலப்படங்களுக்கு மகளைக் கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறேன். இம்முறை எமது நண்பர் ஒருவர் ராவணன் படம் பார்க்கலாம், வருகிறீர்களா என்று கேட்டுக்கொண்டதால், சரி, ஞாயிற்றுக்கிழமைதானே , சரி, என்னதான் மணிரத்திணம் சொல்கிறார் என்று பார்ப்போமே என்று மனைவியையும் மகளையும் கூட்டிக்கொண்டு திரையரங்கிற்குப் போனேன். திரையரங்கின் வாயிலில் கூட்டம் அலைமோதியது. எல்லாம் தமிழ் முகங்கள். 50% வீதம் தமிழ்நாடென்றால் மீதி ஈழத்தைச் சேர்ந்தவர்கள். படம் ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கியது. விசில்கள், கைதட்டல்கள் என்று இனம்புரியாத எரிச்சலைக் கொண்டுவந்தது அப்போழ…
-
- 13 replies
- 3k views
-
-
ஞாயிற்றுகிழமை, அக்டோபர் 31, 2010 போர் முடிந்த பின்னர் நீங்க|ள் சொல்வதனையே நாம் செய்வோமென டில்லிக்கு தமாஸ் காட்டினார் மஹிந்த டில்லியும் போர் முடியட்டும் இப்போ புலிகள் அழிவதுதான் எமது இலக்கு என பேசாமல் இருந்தது. ஆனால் புலிகளை முடித்த பின்னர் தம் அடுத்த திட்டமான இலங்கையினை கையிற்குள் போடும் திட்டம் தடம்புரண்டு போவதனை டில்லி பார்த்துக்கொண்டே பதறுகின்றது. போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து டில்லி முன்னெடுத்து வந்த அபிவிருத்தித் திட்டங்கள் அனைத்தும் தேக்க நிலையை அடைந்துள்ளனவாம். புதுடில்லியின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசு பல்வேறு நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனாலேயே அவை தேக்கத்தை அடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய வெளிவிவகா…
-
- 13 replies
- 3.8k views
-