ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
தேசியத் தலைவரின் பணிப்பின் பேரில் பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தம் சிங்கள இனவெறி அரசின் ஆக்கிரமிப்புப் போரினால் தமிழீழ மக்கள் துயருரும் இந்த வேளையில் தனது பிறந்த நாள் நிகழ்ச்சிகள் எதனையும் நடத்த வேண்டாம் என தமிழீழ தேசியத் தலைவர் பணித்ததற்கு அமைய பிறந்த நாள் வாழ்த்து நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழீழ தனியரசுக்கான விடுதலைப் போராட்டத்தை தலைமை ஏற்று வீச்சாக முன்நகர்த்திக் கொண்டிருக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் இன்று 54 ஆவது அகவை காண்கிறார். வழமையாக அவரது பிறந்த நாள் வாழ்த்து நிகழ்வுகள் மக்களாலும் போராளிகளாலும் முன்னெடுக்கப்படுவது உண்டு. ஆனால், இம்முறை அந்த வகை வாழ்த்து நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என தேசியத…
-
- 12 replies
- 2.3k views
- 1 follower
-
-
மகிந்த வரவில்லை: வீணாகின நீலச்சேலைகள் வடக்குக்கு பயணம் செய்யவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திலுள்ள பாடசாலைகளுக்குச் செல்லவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சில பாடசாலைகளின் ஆசிரியைகள் கட்டாயம் நீலநிற சேலைகள் அணிந்தே வர வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் சேலைகளையும் ஆசிரியைகளின் பணத்தில் கொள்வனவு செய்தனர். எனினும் யாழ்ப்பாணத்தில் உள்ள மகளிர் பாடசாலை ஒன்றிலும் ஜனாதிபதி மகிந்தோதய ஆய்வு கூடத்தை திறந்து வைப்பார் என்று கூறப்பட்டது.அதையடுத்து அங்குள்ள ஆசிரியைகளும் கட்டாயம் நீலச் சேலைதான் அணிய வேண்டும் என்று பணிக்கப்பட்டது. ஆசிரியைகளின் சொந்தப் பணத்தில் சேலையை வாங்க வேண்டும் என்றும் அதுவும் 2,500ரூபா பெறுமதியான நீலச்சேலைகளைத் தான் வாங்க வேண்டும…
-
- 30 replies
- 2.3k views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தனது இறுதி மூன்று நாட்களில் செய்மதி தொலைபேசி ஊடாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 4பேருக்கு பல தடவைகள் அழைப்புகளை மேற்கொண்டு பேசியுள்ளமை தெரியவந்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதி மூன்று நாட்களில் இந்தியா, மலேசியா, சிங்கபூர் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளார். இந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளித்தவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குகின்றனர். இந்த உறுப்பினர்கள் இலங்கை திருப்பிச் செல்ல முடியாமல் அந்த நாடுகளில் தங்கியிருப்பதாகவும் அந்த பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். போரை நிறுத்த சர்வதேச ரீதியில் அழுத…
-
- 1 reply
- 2.3k views
-
-
அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு பொருள் உதவி வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட கனடாவைச் சேர்ந்த தமிழர் ஒருவர் அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோவை வசிப்பிடமாகக் கொண்ட ரமணன் மயில்வாகனம் என்பவர், 2006ம் ஆண்டில், விடுதலைப் புலிகளுக்கு நீர்மூழ்கி வடிவமைப்பு தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் இரவுப்பார்வை கருவிகள் போன்றவற்றை பெற்றுக் கொடுக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தார். இவர் நேற்று நியுயோர்க் புறூக்லின் மாவட்ட நீதியாளர் முன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து ஆகக்கூடியது 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று கருதப்படுகிறது. கனேடிய குடியுரிமை பெற்…
-
- 1 reply
- 2.3k views
-
-
-
- 2 replies
- 2.3k views
-
-
திரு கருணாகரன் கிளீநொச்சியில் தாக்கப்பட்டதாக முகநூலில் செய்திகள் வெளீயாகி உள்ளான உண்மையா?
-
- 5 replies
- 2.3k views
-
-
சண்டையை நிறுத்த இலங்கை அரசு, புலிகளுக்கு இந்தியா கோரிக்கை டெல்லி: இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்தி விட்டு, பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். இன்று காலை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை நிலவரம் கவலை தருகிறது. இலங்கை அரசு தான் பிடித்து வரும் வினோதப் பிடிவாதத்தைக் கைவிட வேண்டும். அதேபோல விடுதலைப் புலிகளும் தங்களது சண்டைய நிறுத்த வேண்டும். இரு தரப்பும் இந்தியாவின் கோரிக்கையை காது கொடுத்துக் கேட்க வேண்டும். இலங்கையில் நடந்து வரும் நிகழ்வுகள் மத்திய அரசுக்கு கவலையை அளிப்பதாக உள்ளது. இந்திய அரசு தனது செல்வாக்கைப் பயன்படு…
-
- 5 replies
- 2.3k views
-
-
அனுராதபுரத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் சடலங்கள் இரகசியமாக எரிப்பு: ஐக்கிய தேசியக் கட்சி யாழ். சமரில் கொல்லப்பட்ட சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்களை இரகசியமாக எரித்து வருவதாக சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய தேசியக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றில் வடக்கு-கிழக்கு பிரச்சனை குறித்து கடந்த புதன்கிழமை நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல பேசியதாவது: அனுராதபுரம் விஜயபுர மயானத்தில் பெரும் எண்ணிக்கையிலான சிறிலங்கா இராணுவத்தினரின் சடலங்கள் இரகசியமாக எரிக்கப்பட்டு வருகின்றன. சமரில் கொல்லப்பட்ட படையினர் குறித்த விவரங்களை அவர்களது குடும்பத்தினருக்கு அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டும். அச்சத்தின் காரண…
-
- 9 replies
- 2.3k views
-
-
இந்தச் செய்தி எந்தளவுக்கு உண்மை என்று தெரியாது, ஆனால் srilankaguardian எனும் இலங்கையில் இருந்து வரும் ஆங்கில இணையம் முக்கிய செய்தியாக இதனை இப்போது பிரசுரித்துள்ளது சாராம்சம்: மகிந்த தேர்தல் முடிவுகள் தனக்கு எதிராகப் போய்விடும் என்று அஞ்சி இந்தியாவின் இராணுவ தலையீட்டைக் கோரி இன்றிரவு விசேட விமானத்தின் மூலம் டெல்லி நோக்கி பயணமாகின்றார். ஆனால் இதனை மகிந்தவின் வட்டாரங்கள் மறுத்து அவர் விசேட பூசை ஒன்றுக்காகவே டெல்லி போகின்றார் என்று குறிப்பிட்டனர் President Mahinda fly to Delhi (January 25, Colombo, Sri Lanka Guardian) According to information reaching through reliable sources confirm, President Mahinda Rajapakse is now flying to Delhi in a special jet. It is u…
-
- 12 replies
- 2.3k views
-
-
அந்த இரவு, விடியவே இல்லை! கடந்த வெள்ளிக்கிழமை விடியலை உற்சாகமாக எதிர்கொண்டார் நளினி. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும் நளினிக்கு, வேலூர் பெண்கள் சிறையே பளிச்செனத் தெரிந்தது. சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனு மீது அன்றுதான் விசாரணை. தமிழக அரசு தனக்குச் சாதகமான முடிவை நிச்சயம் அறிவிக்கும் என்று எதிர்பார்த்தார் நளினி! சகோதரர் பாக்கியநாதனின் இரண்டு வயது மகளை வேலூர் சிறைக்கு அழைத்து வரச் சொல்லிஇருந்தார். குட்டி மருமகளின் மழலைக் குழைவை அதிகமாகவே ரசித்தார். ''அரித்ராவைத்தான் (நளினியின் மகள்) பார்த்து ரெண்டரை வருஷமாச்சு. ஆனா, சீக்கிரமே அவகூடவே இருக்கிற மாதிரி தீர்ப்பு வந்துரும்'' என்றவரின் கண்களில் ஒளி! ஆனால், அந…
-
- 2 replies
- 2.3k views
-
-
சிறீலங்கா சமாதானச் செயலகப் பிரமுகர் தெகிவளையில் சுட்டுக் கொலை..! மேலதிக விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. Kethesh Loganathan shot dead [TamilNet, August 12, 2006 16:21 GMT] Kethesh Logananathan, Deputy Secretary General of the Secretariat for Coordinating the Peace Process, (SCOPP), and a former member of EPRLF, shot and injured by unknown gunmen near Vandervet place in Dehiwela Colombo at 9:30 p.m. Saturday, died on the way to Kalubowila Hospital, sources in Colombo said. Mr. Ketheshwaran Loganathan resigned from the Board of Directors and as Head of the Peace and Conflict Analysis Unit of the Center for Policy Alternatives (CPA) 1st April 200…
-
- 3 replies
- 2.3k views
-
-
கருணாவை வழியனுப்பி வைக்கும் ராஐபக்ச அரசு கேணல் கருணா என அழைக்கப்பட்ட முரளிதரனின் முறைகேடான வாழ்க்கை முறையால் அவரின் அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிட்டதாக டெய்லி மிரர் பத்திரிகை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ’The Decline and Fall of Colonel Karuna’ எனும் தலைப்பில் எழுதப்பட்டுள்ள அதன் ஆசிரியர் தலையங்கத்தில் கருணாவின் அரசியல் அதன் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டதாக எழுதப்பட்டுள்ளது. இவ் ஆசிரியர் தலையங்கத்தின் முழுவிபரம் வருமாறு: கருணா தனது சொந்த மாவட்டத் தேர்தலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளதுடன் தேசியப் பட்டியலின் ஊடாக தன்னை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யும்படி அரசாங்கத்தைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தேர்தலில் போட்டிய…
-
- 9 replies
- 2.3k views
-
-
நிஜமான புலி நேரில் வரும்போது.... உலகெங்கும் நடைபெறுகின்ற விடுதலைப்போராட்ட நிகழ்வுகளில் துரோகங்கள் இடம்பெறா விட்டால் அந்த போராட்டத்தின் வரலாறு நிறைவு பெறாது. கிறித்துவ வரலாறாகட்டும் அல்லது பௌத்த வரலாறாகட்டும், சமணர் வரலாறாகட்டும், திராவிட வரலாறாகட்டும். அதில் துரோகங்களின் பக்கங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அதை கடக்காமல் நாம் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்படி துரோகங்கள் அலை அலையாக எழுந்து, நமது போராட்டத்தின் ஓசையை முடக்க பெரும் எழுச்சியோடு எதிரிக்கு பக்கத்தில் நின்றது. நம்மை, நமது விடுதலையை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த துரோகக் கூட்டங்கள் செய்த அளவிடமுடியாத மாந்த நேயமற்ற இனதுரோக நடவடிக்கைகளை நாம் இந்த நேரத்திலே புரிந்…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஜனாதிபதி செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற தேசிய சாகித்திய விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, திடீரென தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவத்தில் தனது முதுகில் ஏற்பட்ட ஊபாதை காரணமாக, பிரதான உரையை நிகழ்த்தவிருந்த ஜனாதிபதி சிகிச்சைக்காக அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். முன்னதாக சம்பிரதாய முறைப்படி குத்துவிளக்கேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, தனது ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர சென்ற போது, அவரது ஆசனம் பின்பக்கமாக சரிந்துள்ளது. உடனடியாக ஜனாதிபதி தூக்கிய அவரது பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் வேறு ஒரு ஆசனத்தில் அமரச் செய்துள்ளனர். இந்த நிலையில், ஊடகவியலாளர்கள் மற்றும் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களிடம…
-
- 10 replies
- 2.3k views
-
-
நீதிபதி இளஞ்செழியனை சந்தித்த முன்னாள் இராணுவ ஜெனரலான தேரர் முன்னாள் இராணுவ ஜெனரல் ஆனந்த வீரசேகர என்று அழைக்கப்படும் ஆனந்த தேரர் யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனை இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ். மாவட்ட மேல்நீதிமன்ற கட்டடத்தொகுதிக்குச் சென்ற ஆனந்த தேரர், அங்கு வைத்து நீதிபதி இளஞச்செழியனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழ்.மாவட்ட நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தையடுத்து அவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் பிரிவை தாங்கமுடியாது யாழ்.மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி அனைவர் முன்னிலையிலும் கண்ணீர் விட்டு அழுதிருந்தார். …
-
- 35 replies
- 2.3k views
-
-
யாழ்ப்பாணத்தில் காணாமல் போனவர்களை விடுவிக்குமாறு கூறுவதைவிட தன்னால் வேறு என்ன சொல்ல முடியும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் காணாமல் போயுள்ள லலித் குமார வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அவர்கள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றில் கூறப்பட்டதை கேட்டிருக்கிறேன். காணாமல் போயுள்ளமை தொடர்பில் எனக்குத் தெரியாது. கடத்தப்பட்டிருந்தால் விடுவ…
-
- 1 reply
- 2.3k views
-
-
ஆரோ ஒருத்தன் இன்ரநெற்றில யாழ்ப்பாணத்துப் பொம்பிளைப் பிள்ளைகள் சீரழிகிறதைக் காட்டுறான் என்டு கன பேர் சொன்னதைக் கேட்டு கேள்விப்பட்டு ஓடிப் போய் இன்ரநெற் கபேல லைன்ல நின்டு அந்த இன்ரனெற் வெப் தளத்தைப் பார்த்தால் அதில எந்த ஒரு அறுப்பும் இல்லை. நான் கொச்சையா எழுதிறன் என்டு ஒருத்தரும் கோவியாதையுங்கோ இரண்டு பெட்டையல் சந்தோசமா கான்போன் கதைச்சுக் கொண்டு நின்டிச்சுதுகள். மற்றச் செய்தில ஏதோ கிடக்குது என்று பார்த்தால் அதுலையும் சும்மா செய்திதான் போட்டிருக்கிறாங்கள் வேற ஒன்டையும் கானேல. எனக்கு சப்பென்று போச்சுது. ஒன்றுக்கும் சம்மந்தமில்லாமல் ஒரு நல்ல படமும் போடாமல் இப்படி பேய்க்காட்டி விட்டானே என்ற கோவத்தில எனக்கு ஒன்டும் செய்யேலாமல் போச்சுது. எனக்கு சொன்னவன…
-
- 5 replies
- 2.3k views
-
-
மிகுந்த மரியாதையுடன் அமெரிக்கத் தூதுவருக்கு...! கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் இலங்கை இனநெருக்கடி தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துகள் அரசியல் அரங்கில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. குறிப்பாக இனநெருக்கடிக்கு இராணுவத்தீர்வு காண முடியாது என்ற கருத்தை அண்மைக்காலமாக அவர் மிகவும் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று சந்தர்ப்பங்களில் அமெரிக்கத் தூதுவர் இராணுத்தீர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு கடந்த மாத இறுதியில் காலியில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிளேக், இலங்கை நெருக்கடிக்கு இராணுவத்தீர்வு…
-
- 4 replies
- 2.3k views
-
-
உண்மையாகவே பெரிதும் வருத்தப்படுகிறேன்..! நிச்சயமாக இந்தச் செய்தி தவறானது என்பதில் நான் நூறு சதவிகிதம் நம்புகிறேன்..! எனக்கு சீமானுடன் நேரடி பழக்கமில்லை. கை குலுக்கியிருப்பதோடு சரி..! இருந்தாலும் நான் இப்போதும் உறுதியுடன் சொல்கிறேன்.. விஜயலட்சுமி என்னும் இந்த நடிகை சொல்லியிருப்பது அபாண்டமானது..! ஒரு பெண்ணி்ன் நடத்தையை வைத்து அவரை எடை போட முடியுமா..? அல்லது ஒரு சம்பவத்தினாலேயே அவரை பலி கடாவாக்க முடியுமா..? முன்பு அப்படியிருந்திருக்கலாம். ஆனால் இப்போது திருந்தியிருக்கலாமே..? ஏன் சீமானே மாறியிருக்கலாமே.. ஒரு நிமிடத்தில் அப்படி நடந்திருக்கலாமே..? இப்படியெல்லாம் பகுத்தறிவோடு சிந்திக்காமல் இந்தச் செய்தியைப் படித்த காலை பொழுதிலேயே நான் உணர்ந்துவிட்…
-
- 4 replies
- 2.3k views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடி ஏந்தியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சுதந்திர ஊடகக் குரல் என்ற அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்க…
-
- 14 replies
- 2.3k views
-
-
புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் - அரசாங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை வீரகேசரி இணையம் 5/5/2008 11:47:01 PM - விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் உள்ளிட்ட இராணுவ தளபாடங்கள் கிடைப்பதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என அராசங்கம் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாயுதங்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் அரசாங்கத்திற்கு எதிராகவும், சிவிலியன்களுக்கு எதிராகவும் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஐ.நா.வின் கூட்டத்தில் ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். பயங்கரவாத செயற்பாடுகளையும் தாக்குதல்களையும் கட்டுப்படுத்த வேண்டுமானல் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதங்கள…
-
- 6 replies
- 2.3k views
-
-
-
- 1 reply
- 2.3k views
-
-
காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் மூடப்பட்டிருந்த முஸ்லிம் கடைகளுடைய பூட்டுக்களில் மனித மலம் பூசப்பட்டிருப்பதாகவும்,நாய்கள் படுகொலை செய்யப்பட்டு அப்பகுதிகளில் வீசப்பட்டிருப்பதுடன், நாய் இரத்தமும் அங்குள்ள கடைகள் மீது தெளிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காலி மாவட்டத்தில் பெந்தர எல்பிட்டிய பகுதிகளில் முஸ்லிம்களின் கடைகளில் சிங்களவர்கள் பொருட்கள் வாங்குவதை நிறுத்துமாறும் முஸ்லிம்கள் கடைகளை மூடிவிட்டுச் செல்லுமாறும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிமிருந்த நிலையிலேயே இந்த அசிங்கம் நிறைந்த தகவல்களும் வெளியாகியுள்ளன. இச்சம்பவங்களுக்கு சிங்கள பேரினவாதிகள் காரணமாக இருக்கலாமென நம்பப்படுகிறது. தம்மை சிங்கள தேசப்பற்றாளர்கள் எனக்கூ…
-
- 21 replies
- 2.3k views
- 1 follower
-
-
யாதும் ஊரே யாவரும் கேளிர் என உலகப் பொது நீதி பாடித் தமிழ் இனத்தின் பண்பை உலகின் செவிகளில் பறை சாற்றிவர்; சங்க காலப் புலவர் கணியன் பூங்குன்றனார். அதையே இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் தனது செயலில் காட்டி உலகை விழி பிதுங்க வைத்துள்ளது. அன்றாடம் தனது பிராந்தியத்தில் உள்ள பொது மக்களின் குடியிருப்புக்கள் மீது கடந்த பல மாதங்களாகக் காலை மாலை இரவு பகல் பாராது இலங்கை அரசு குண்டு மழை எறிகணை வீச்சுக்களால் போர் நடத்தி அழிப்புகளைச் செய்து வருகின்றது. நாலா புறமும் போர்க் கள முனைகளைத் திறந்து எதிரி படைகளின் முழு முற்றுகையைப் பல மாதங்களாக நில வன்பறிப்பும் இன அழிப்பும் செய்து வருகிறது. இத்தகைய நெருக்கடி நிலையிலும் ஆசியப் பிராந்திய அரசுகளின் உச்சி மகாநாட்டை இலங்கையில் அமைதியாக ந…
-
- 8 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் கவசவாகன அணி தாக்கப்பட்டுள்ளது வவுனியா தெற்கு பகுதியில் சிறீலங்கா பவள்கவச அணிமீது பூவரசங்குளத்திற்கும் செட்டிக்குளம் பகுதிக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பவள்கவசவாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஐந்து இராணுவத்தினர் காயமடைந்துள்ளதாகவும் பவள்கவச வாகனம் பாரம்தூக்கி வாகனம் ஒன்றில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. pathivu
-
- 2 replies
- 2.3k views
-