ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவின் ஆதரவினை இலங்கை முற்றாக இழக்கும் நிலை (லியோ நிரோஷ தர்ஷன்) ஜெருசலேம் விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் கடந்த வியாழக்கிழமை கூட்டப்பட்ட 10 ஆவது அவசர விசேட கூட்டத் தொடரில் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கை வாக்களித்தது. இலங்கை தான் வகித்து வரும் நீண்ட கால பாரம்பரிய மற்றும் கொள்கை நிலைப்பாட்டின் அடிப்படையில் மேற்படி வாக்களிப்பில் வாக்களித்ததாக அரசாங்கம் உத்தியோக பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது. இந்நிலையில் இலங்கை தொடர்பிலான அமெரிக்காவின் நிலைப்பாட்டில்…
-
- 10 replies
- 708 views
-
-
முல்லைத்தீவு நகரிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு புதிய இரு மாடிக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது. மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலின் நிர்வாக சபைத் தலைவர் அப்துல் சலாம் மஹ்ரூபின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடக்கு மாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் கலந்துகொண்டதுடன், மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆப்பள்ளிவாயலின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 1896ஆம் ஆண்டு முல்லைத்தீவு நகரில் நிர்மாணிக்கப்பட்ட மஹ்பூப் சுபுஹானி ஜூம்ஆ பள்ளிவாயலில் காணப்பட்ட இடப்பற்றாக்குறை தொடர்பில் தெளிவுப்படுத்தியதுடன், புதிய கட்டடம் அமைப்பதன் அவசியம் பற்றியும் த…
-
- 10 replies
- 2.2k views
-
-
யாழ். இந்து கல்லூரியை அண்மித்த கில்னர் வீதியில் குடும்பஸ்தர் ஒருவரை இனந்தெரியாத நபர்கள் வாளால் வெட்டி படுகாயப்படுத்தினர். நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, எஸ்.சிவலிங்கம் என்பவரும் அவருடைய மனைவி சி.நிலந்தினியும் யாழ். நகரில் உள்ள தமது வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு இரவு 8 மணியளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இருவரையும் தாக்கி வாளால் வெட்டினர். இதன்போது கணவன் சிவலிங்கம் கையிலும், நெஞ்சிலும் படுகாயமடைந்தார். அவரின் மனைவியான நிலாந்தினி மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. எனினும் நிலாந்தினிக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்கள் நிலாந்தினியிடம் இருந்த கைப்பையை பறித்துச் செ…
-
- 10 replies
- 926 views
-
-
[size=4]வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் நிறைவடைந்துள்ளதை நினைவு கூறும் நிகழ்வொன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, பிரதம அதிதியாக கலந்த கொண்டு முக்கிய உரையினையாற்றினார். அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஜவன், பேராசிரியர் டாக்டர் ஹஸ்புள்ளா ஆகியோரும் உரைகளை ஆற்றினர். இடம்பெயர்வு குறித்து மாணவி நஹ்லா அனீஸ் ஆங்கிலத்தில் காத்திரமான உரையினை இங்கு முன்வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், …
-
- 10 replies
- 691 views
-
-
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மாணிக்கக் கல் தொடர்பில் தகவல்! இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி மாணிக்கக் கல் 200 மில்லியன் அமெரிக்க டொலர் என விளம்பரப்படுத்தப்பட்ட குறித்த மாணிக்கக் கல்லின் உண்மையான மதிப்பு 10,000 அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது (சுமார் முப்பத்தாறு இலட்சம் ரூபாய் ) எனத் தெரியவந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற சுற்றுச் சூழல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு இதை தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த மாணிக்கக்கல் துபாயிக்கு முதலில் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சுவிஸர்லாந்திற்கு கொண்டு செல்லப…
-
- 10 replies
- 957 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்தியா நான்கு முறை இலங்கையை எச்சரித்ததாக இந்திய உயரிஸ்தானிகர் என்னை சந்தித்த போது தெரிவித்ததாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை தெரிவித்தார். தாக்குதல் இடம்பெற்ற கால கட்டத்தில் நாட்டுக்கு சிறந்த தலைமைத்துவம் இல்லாமல் இருந்தமையும் தாக்குதலை முறியடிக்க முடியாமல் போனமைக்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த தாக்குதல் விடயம் குறித்த எச்சரிக்கை ஒன்றினை எவரும் எமக்கு இறுதிவரை தெரிவிக்கவில்லை. அப்படி எனக்கு குறித்த எச்சரிக்கை தகவலை அளித்திருந்தால் அன்றைய உயிர்த்த ஞாயிறு ஆராதனைகள் அனைத்தையும் நிறுத்தி நான் மக்களின் உயிரை காத்திருப்பேன் என்றும் அவர் கூறினார். …
-
- 10 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம முதலாவது குருபீடாதிபதி ஸ்ரீமத் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் சீடனும் மகாதேவா ஆச்சிரமத்தின் இரண்டாவது குருபீடாதிபதியும் ஆன ஸ்ரீமத் தவத்திரு கணேசானந்தா மகாதேவ சுவாமிகள் மகா சமாதி எய்தியுள்ளார். இவர் இன்று நண்பகல் காலமாகியுள்ளார். கிளிநொச்சியில் உள்ள சைவ நிறுவனங்கள் மற்றும் மகாதேவ சைவச் சிறுவர் இல்ல ஸ்தாபகரும் மற்றும் சைவ அன்பர்களை சைவநெறியில் தழைத்தோங்க செய்தவரும் ஆவார். இவரின் அளப்பெரிய சேவைகளின் காரணமாக சைவமும், தமிழும் கிளிநொச்சியில் மேலோங்கி வளர்ந்துள்ளது. மேலும், இவரின் சமாதிக் கிரிகைகள் நாளை கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெற உள்ளது என மகாதேவ ஆச்சிரம நிர்வாக உறுப்பினர்கள் தெரிவிக்கின்…
-
- 10 replies
- 1.5k views
-
-
தற்போது வெளியாகியுள்ளது தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நீர்கொழும்பு ஹரிச்சந்திரா மகாவித்தியாலய மாணவன் தினுக கிரிஷான் குமார இம்முறை புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார். 198 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார். பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பெறுபேறுகளை பார்வையிடலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெற்ற 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 56 ஆயிரத்து 728 மாண…
-
- 10 replies
- 5.6k views
-
-
புலிகளை கருணா அழித்தது போல தமிழரசு கட்சியை அழிக்கிறார் சுமந்திரன் – மகளிர் அணி குற்றச்சாட்டு.! சுமந்திரன் இருக்கும் மட்டும் தமிழ் மக்களை கடவுளாலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்ட உப தலைவர் மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை கருணா அழித்தது போல் தமிழரசுக் கட்சியையும் ,தமிழ் மக்களையும் அழிக்கும் வகையிலேயே சுமந்திரன் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மிதுலை செல்வி ஸ்ரீ பத்மநாதன் மேலும் தெரிவித்ததாவது… சுமந்திரன் தான்தோன்றி தனமான முடிவுகள் எடுப்பதை கட…
-
- 10 replies
- 1.7k views
-
-
தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம் - மஹிந்த.! "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோட்டையாக விளங்கிய வடக்கு, கிழக்கை நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கைப்பற்றிவிட்டோம். கூட்டமைப்பைவிட அதிக ஆசனங்களைப் பெற்றுத் தமிழ் மக்களின் மனதை வென்றுவிட்டோம்." - இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார். பிரதமராக நான்காவது தடவையாகப் பதவியேற்றுள்ள மஹிந்த ராஜபக்ஷ நேற்று முற்பகல் சுபநேரத்தில் அலரி மாளிகையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அதன்பின்னர் வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அதில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "வடக்கு, கிழக்கிலுள்ள தேர்தல் மாவட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை 9 ஆசனங்களை மட்…
-
- 10 replies
- 1.3k views
-
-
பாராளுமன்ற விதிமுறைப்படி கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைமைப்பதவி போக வேண்டுமெனின் அதை தடுக்க முடியாது அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்றின் எதிர்க்கட்சியாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆளும் தரப்பாகவுமே கடந்த காலங்களில் செயற்பட்டு வந்தன. எனினும் தற்போது ஏற்பட்டிருக்கும் தேசிய அரசாங்கத்தின் மூலம் எதிர்க்கட்சியினர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. யார் எதிர்க்கட்சி என்பதற்கு தேசிய அரசில் விடை கிடைப்பது கடினமானதே. இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்தே தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. தேசிய அரசு கலைக்கப்பட்டவுடன் மீண்டும் இரு கட்சிகளில் ஒன்று ஆளும் தரப்பாகவும் எதிர்க்கட்சியாகவும் அமைந்து விடும். ஆனா…
-
- 10 replies
- 941 views
-
-
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க பதவிப் பிரமாணம்! இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அநுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர். நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. h…
-
- 10 replies
- 787 views
- 1 follower
-
-
நடிகர், திரை அரங்கு, தமிழினம் - சாண்டில்யன் இந்தக் கட்டுரையின் நோக்கம் ஒருவரையும் தாழ்வு படுத்துவதற்கல்ல. உண்மைகளை உரித்து விரித்து அழகு படுத்துவதற்கே. நடிகர் - இதற்கு இலக்கணம் வகுப்போமா? இலக்கணம் என்பது - அடையாளம் / அழகு / தான் விவரிக்கும் பொருளின் சிறப்புத்தன்மை கூறல் / முறைமை. (தகவல்; தமிழ் மொழி அகராதி). நடிப்பு என்றால் - விளக்கம்;- கூத்து. நடித்தல் என்றால் - விளக்கம்;- கூத்தாடுதல் நடிகர் என்றால் - விளக்கம்;- கூத்தாடுபவர்கள். அன்றய காலகட்டத்தில் ஒரு சில மக்கள் வருமானத்திற்காக, மக்களை ஆனத்தப் படுத்தி, மகிழ்ச்சிப் படுத்தி, சிரிக்க வைத்து, பணம் சம்பாதித்தார்கள். இது ஒரு தொழிலாக மாறி ஏனோ தானோ வென்று மிகவும் குறுகிய வரும்படியோடு தங்களுடைய வாழ்வை ´டம்…
-
- 10 replies
- 2.8k views
-
-
இலங்கையில் அப்பாவி தமிழர்களை காக்க இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். காரைக்குடியில் உள்ள வடகுடி என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இலங்கை அரசிடமும், விடுதலைப்புலிகளிடமும் மத்திய அரசு தேவையான பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய அவர் தமிழர்களுக்கு இலங்கை அரசு சமஉரிமை தர வேண்டும். இலங்கையில் இருதரப்பினரும் உடனே போர் நிறுத்தம் செய்ய வேண்டும். தமிழர்களுக்ககு இலங்கையில் 2 அல்லது 3 மாநிலங்கள் அமைய வேண்டும் என்றார். நன்றி நக்கீரன் .
-
- 10 replies
- 1.7k views
-
-
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் - கொழும்பு விமான சேவை குறித்து ஆராய்வு - இந்தியத் துணைத்தூதுவர் Published By: VISHNU 15 MAR, 2023 | 08:44 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்பாணம் - கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம் என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொட…
-
- 10 replies
- 792 views
- 1 follower
-
-
-
இந்து நாளிதழுக்கு கண்டனங்கள் !!! இன்றைய தி ஹிந்து நாளிதழில் மாலினி பார்த்தசாரதி எனும் ஊடக விபசாரி தமிழீழ விடுதலைப்போராட்டத்தையும் ,அதற்கு ஆதரவான தமிழக மக்கள், மற்றும் அரசியல் கட்சிகளின் எழுச்சியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்து கட்டுரை எழுதியுள்ளார்... தலைப்பு........ தி டேஞ்சர்ஸ் ஒஃப் தமிழ் சாவினிஸம் . ஏழ்மை காரணமாக பாலியல் தொழில் செய்யும் பெண்ணே பல மடங்கு இத்தகைய ஊடக விபசாரிகளை விட மேலானவர்... இந்து நாளிதழுக்கு கண்டங்கள் அனுப்புவோம் சகோதரர்களே தமிழன் ஒற்றுமை ஓங்கட்டும் ...தமிழர்கள் ஓரணியில் திரள்வது கண்டு ஓனாய்க்கூட்டம் ஓடட்டும்!!! கண்டங்கள் அனுப்ப .... theditor@thehindu.co.in
-
- 10 replies
- 2.9k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இலங்கையை விட்டு இந்தியாவுக்கோ அல்லது இந்தோனேசியாவுக்கோ தப்பிச் செல்லலாம் என்று கூறப்படுவது தவறானது. அவர் எந்த சூழ்நிலையிலும் இலங்கையை விட்டு வெளியேற மாட்டார் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை நிறுவியவரும், அதன் எம்.பியுமான கருணா கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய தளபதியாக விளங்கியவர் கருணா. பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பு தற்போது இலங்கை ராணுவத்தின் பாதுகாப்புடன் புலிகளுக்கு எதிராக உளவு சொல்வது, புலிகள் இயக்கத்தினரின் பலத்தை போட்டுக் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது. கருணா குழுவினரின் உதவிய…
-
- 10 replies
- 4.7k views
-
-
இந்திய மீனவர்கள் விடுதலை! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:36 யாழ். கடல் பிரதேசத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் இவ்வாரம் கைது செய்யப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று மதியம் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இந்திய அரசுத் தரப்பிடம் இருந்து விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வேண்டுகோள், இலங்கை அரசின் ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய விடுதலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 136 பேரையும், கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் 25 ஐயும் கடல் படையினர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர். மீனவர்கள் இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 112 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையும், 24 …
-
- 10 replies
- 1.7k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும்; விவசாயக் கண்காட்சி நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இந்தக் கண்காட்சியை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச் செயன்முறைகளைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகளை விளைவிக்கக் கூடிய முறைகளை விவசாயத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு காட்சிக்கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. …
-
- 10 replies
- 900 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். . "விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று எம்.பி. ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். Tamilmirror Online || ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்”
-
-
- 10 replies
- 908 views
- 1 follower
-
-
[size=4]ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேண்டுமே தவிர தமிழீழம் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்; கனகரத்தினம் விந்தன் இன்று தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நல்லாட்சி பிரிவின் உறுப்பினர்கள் இன்று யாழ். மாநகர சபையில், மாநகர முதல்வர், உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர். அதேவேளை, யுத்தம் முடிவடைந்த பின்னரான 3 வருட காலத்தில் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளை பார்த்து விட்டு, யாழ். மாவட்ட மக்கள் பிரச்சினைகளின்றி இருக்கின்றார்கள் என்று கூற முடியாது. தமிழ் மக்கள் தென்பகுதி மக்களை போன்று சுயாதீனமாகவும், சகல தீர்வுகளுடனும் வாழ வேண்டும் என்று கூறினார். அத்துடன், தமிழ் மக்களுக்கும் …
-
- 10 replies
- 1.4k views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றியடைவுறும் தருணம் தொலைவில் இல்லை எனவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் அடைந்துள்ள வெற்றி குறித்துச் சர்வதேச தமிழர் சமூகம் விரக்தியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுவிரையில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைக் குவிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். www.tamilwin.com
-
- 10 replies
- 3.4k views
-
-
சோரன் பற்று கிராமத்தை தாங்கள் கைப்பற்றிஉள்ளதாக இராணுவம் சார்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 8ம் திகதி மாலை தங்கள் இரணுவத்தின் 55ம் படைப்பிரிவு ஆனையிறவில் இருந்து 9கி.மீ இலும் பளையில் இருந்து 5.2கி.மீ இலும் அமைந்துள்ள சோரன்பற்று கிராமத்திற்குள் நுளைந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சோரன்பற்று ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது எமது போராளிகளின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.
-
- 10 replies
- 3k views
-