ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
ஆயுததாரி கருணாவின் விசுவாசியும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளருமான ஆயததாரி இனியபாரதி தலைமறைவு என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதலுடன் இனியபாரதிக்குத் தொடர்பு இருப்பதாகவும்இ கட்சிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளின் உச்சகட்டத்தில் கருணா மூர்க்கத்தனமாக பாரதியை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. கடந்த ஞாயிறு காரைதீவில் நடைபெற்ற திறப்பு விழாவின் பின்னர் ஆயததாரி இனியபாரதியை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக அரசபயங்கரவாதத்திற்கு எதிராக பிள்ளையான் கருத்துக்களை ஊடகங்களினூடாக வெளியிட்டு வந்த நிலையில் கோத்தபாயவின் கடுமையான எச்சரிக்கைக்கு ஆயுததாரி பிள்யையான் உட்படுத்தப்பட்டிருந்தா…
-
- 10 replies
- 3.6k views
-
-
ஓயாமல் கிளம்புமா அலை? - கொழும்பிலிருந்து விதரன் 'கிளிநொச்சி வீழ்ந்துவிட்டது!' 'முல்லைத் தீவில் பிரபாகரன் பதுங்கியிருக்கிறார். அவரைப் பிடித்துவிடுவோம்' என ராணுவத் தரப்பில் கசிந்த செய்தியை, உலகம் முழுவதும் உள்ள ஈழ ஆதரவாளர்கள் கவலையோடும் கண்ணீரோடும் கேட்டுக்கொண்டு இருந்தபோது வந்தது செய்தி! கடந்த 10 ஆண்டுகளாக புலிகளின் பூரணக் கட்டுப்பாட்டில்தான் இருந்தது கிளிநொச்சி. 1990-களில் இந்திய அமைதிப்படையின் வெளியேற்றத்துக்குப் பிறகு, புலிகளின் கைகளுக்கு வந்தது கிளிநொச்சி. அதன் பிறகு, அவ்வப்போது அரசுப் படைகள் நகருக்குள் முன்னேறுவதும், பின்வாங்கி ஓடுவதுமாக இருந்தன. 'கிளிநொச்சியைக் கைப்பற்றுவதுதான் முதல் சவால்' எனப் பல வியூகங்களை வகுத்துக்கொண்டே இருந்த சிங்கள ராணு…
-
- 10 replies
- 3k views
-
-
ஜனாதிபதித் தேர்தலானது தமிழர் களாகிய நமது வாழ்வில் மட்டு மல்ல எமது எதிர்காலத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தவல்லது. ஆகவே இந்த தேர்தலை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இந்த வரலாற்றுக் கடமையை நாம் தவற விடக் கூடாது. தவறிழைத்தால் அதற்காக வருந்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ் தேசியக் கூட் டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித் தார். ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை தீர்மானிக்கும் ஆற்றல் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருந்தால் கடந்த 4 வருடங்களில் அனுபவித்த துன்பங்கள் எமக்கு ஏற்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார். திருகோணமலை நகர சபை மண்டபத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து நேற்று முன்தினம் நடைபெற்ற க…
-
- 10 replies
- 1k views
-
-
ஊடகச் செய்தி இலங்கையில் எங்கும் எவரும் வாழலாம் என்ற போர்வையில் யாழ்ப்பாணத்தில் சிங்களக் குடியேற்றம் திட்டமிட்ட முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்க அதிபருக்கோ, அங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கோ தெரியாமல் இரவோடிரவாக இராணுவம் இக்குடியேற்றங்களை தொடங்கியுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தவர்கள் என்ற காரணத்தை காட்டி ஏறத்தாழ 150க்கு மேற்பட்ட சிங்கள மக்கள் திட்டமிட்ட வகையில் 06.10.2010 அன்று யாழ்ப்பாணம் அனுப்பி வைக்கப்பட்டார்கள். அவர்கள் யாழ்ப்பாணம் போகும் முன்பே அவர்களுக்கான மலசல கூட வசதி எல்லாம் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் செய்யப்படிருந்தது. அவர்களும் நேரடியாக புகையிரத நிலையத்திற்கு சென்று அங்கே தங்கினார்கள். அவர்களை உடனடியாக அமைச்சர்கள் ச…
-
- 10 replies
- 940 views
-
-
Published By: VISHNU 14 DEC, 2023 | 07:00 PM (நா.தனுஜா) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரித்தானிய இளவரசி ஆன் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார். பிரித்தானிய அரச குடும்பத்தின் அங்கத்தவரான அவர், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஒரேயொரு புதல்வியும், மூன்றாம் சார்ள்ஸ் அரசரின் சகோதரியும் ஆவார். அதன்படி இளவரசி ஆன் மற்றும் அவரது கணவர் பிரதி அட்மிரல் டிம் லோரன்ஸ் ஆகியோர் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதுடன், அவர்கள் 13 ஆம் திகதிவரை நாட்டில் தங்கியிருப்பர் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்…
-
- 10 replies
- 868 views
- 1 follower
-
-
பரந்தன் சொத்துகளுக்காக கோத்தபாயவினால் கொல்லப்பட்ட கணடா வாழ் தமிழர் மகேந்திரராசா அண்மையில் தனது பரந்தன் சொத்துக்களைப் பார்வையிடச் சென்ற கணடா வாழ் தமிழரான மகேந்திரராசா என்பவர் பரந்தன் காஞ்சிபுரம் ஒழுங்கையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது அனைவரும் அறிந்த செய்தி. அப்படுகொலையை நேரில் கண்ட சாட்சியங்களின் அடிப்படையில் தமிழ்நெட் நடந்த சம்பவத்தை விபரித்திருக்கிறது. பரந்தன் கண்டி யாழ்ப்பாணம் வீதியில் மகேந்திரராசாவுக்கு 8 ற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இருக்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பு இராணுவத்தால் பலாத்காரமாக பாவிக்கப்பட்டு வரும் நிலையில் மீதமிருந்த கட்டிடங்களை கோத்தபாயவின் கட்டளைக்கமைய கார்கில் ஃபூட் சிட்டி நிறுவனத்துக்கு இராணுவம் வழங…
-
- 10 replies
- 4k views
-
-
[size=3][size=4]தமிழ்நாட்டுக்கு மதவழிபாட்டுக்காக சென்றிருந்த இலங்கையர்கள் வன்முறையான முறையில் பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்டதை கண்டித்து இலங்கை தலைநகர் கொழும்பு வர்த்தகர்கள் வியாழன்று கண்டனப் பேரணி நடத்தினார்கள். இதன் ஒருபகுதியாக தங்கள் வர்த்தக நிறுவனங்களையும் இவர்கள் திறக்கவில்லை.[/size][/size] [size=3][size=4]பேரணியின் முடிவில் இலங்கைக்கான இந்திய தூதரிடம் வர்த்தகர்கள் சார்பில் கோரிக்கை மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.[/size][/size] [size=3][size=4]அந்த மனுவில் இலங்கையிலிருந்து சென்ற விளையாட்டு அணியினர் தமிழ்நாட்டிலிருந்து பலவந்தமாக திருப்பியனுப்பப்பட்டதையும், இலங்கையிலிருந்து மத வழிபாட்டுக்காக சென்ற 184 யாத்திரிகள் வன்முறை கலந்த ஆர்பாட்டங்கள் காரணமாக பலவந்தமாக …
-
- 10 replies
- 864 views
-
-
புதுக்கோட்டை:விடுதலைப் புலிகள்இயக்கத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பது நம்மை விட இந்தியா, இலங்கை அரசுகளுக்கு நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குநருமான சீமான். புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார் சீமான். அப்போது அவர் கூறுகையில், நான் பிரபாகரனை சந்திக்க முடிவெடுத்த போது பலரும் என்னை பயமுறுத்தினார்கள். பழ.நெடுமாறன், கொளத்தூர்மணி,காசி ஆனந்தன் ஆகிய மூவர் மட்டும்தான் எனக்கு தைரியம் கொடுத்தார்கள். இது வரலாற்றில் இடம்பெறும் சந்திப்பு. முன் வைத்த காலை பின்வைக்காதே என்று நம்பிக்கை கொடுத்தார்கள். எனக்காக என் அண்ணன் பிரபாகரன் 7 நாட்கள் காத்திருந்தார். அவரை சந்தித்து திரும்பினேன். பிரபாகரனை…
-
- 10 replies
- 2.5k views
-
-
செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் மதியுரைஞர் வன்னி சென்றுவர அரசு ஹெலி வசதி வழங்குமாம் நோர்வே அனுசரணைக் குழுவின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எதிர்வரும் 25ஆம் திகதி விடுதலைப் புலி களின் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சிக்குச் செல்கின்றார். ஆனால், அங்கு அச்சமயம் விடுதலைப் புலிகளின் மதி யுரைஞர் அன்ரன் பாலசிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல் வெளியிட்டன. இதற்கிடையில் தற்போது லண்டனில் தங்கி இருக்கும் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்காகக் கொழும்பு வருவாராயின், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு அவர் சென்று வருவத…
-
- 10 replies
- 2.5k views
-
-
இலங்கைக்கு சமஷ்டி பொருந்தாதாம்! - கோமின் தயாசிறி கூறுகிறார் [Sunday 2016-03-06 09:00] சமஷ்டி ஆட்சிமுறை இந்தியா போன்ற பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளுக்கே பொருந்தும் என்றும், இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்குப் பொருத்தமற்றது என்றும் தெரிவித்துள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவரும், அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் சட்டநிபுணருமான கோமின் தயாசிறி. ''ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கும் போது அந்நாட்டுக்கு சமஷ்டி முறை அரசியலமைப்பு ஒன்றை அறிமுகம் செய்துவிட்டே சுதந்திரம் வழங்கியிருந்தனர். ஏனெனில் இந்தியா பல்வேறு மொழிகள் பேசப்படும் பாரிய நிலப்பரப்பைக் கொண்ட ஒருநாடாகும். அந்நாட்டுக…
-
- 10 replies
- 586 views
-
-
ஆட்சியை விட்டுப் போனாலும் நான் கட்சியை விட்டுப் போகமாட்டேன். நாட்டைவிட்டுத் தப்பியோடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. நேற்று தனது தங்காலை 'கால்ட்டன் ஹவுஸ்' இல்லத்துக்கு வருகை தந்திருந்த பொதுமக்கள் முன்னிலையில், வீட்டின் மேற்தளத்திலிருந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார். ஹம்பாந்தோட்டை, மெதமுலனவில் உள்ள தமது இல்லத்திலிருந்து தங்காலை வீட்டுக்கு காரில் சென்ற மஹிந்த ராஜபக்ஷவை வழி எங்கும் மக்கள் சூழ்ந்து நின்று வரவேற்றனர். தங்காலை இல்லத்தில் தம்மைத் தேடிவந்து சந்தித்த பௌத்த குருமார் மற்றும் பொது மக்களுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தினார். அதன்பின்னர் அங்கு திரண்டிருந்த பொது மக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார். “நாட…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும் சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். . இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி பச்சையான தமிழர் விரோத நடவடிக்கையும் ஆகும்.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து …
-
- 10 replies
- 1.5k views
-
-
ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம்: கைவிடக்கோரினார் கருணாநிதி - மாணவர்கள் கொந்தளிப்பு 09 மார்ச் 2013 இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 9 பேர் 2வது நாளாக இன்றும் உண்ணாவிரதம் இருக்கின்றனர். போலீஸ் கெடுபிடியை அடுத்து கோயம்பேட்டில் உண்ணாவிரதத்தை மாணவர்கள் இன்று தொடர்கின்றனர். இலங்கை இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணை மற்றும் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லயோலா கல்லூரி மாணவர்கள் மேற்கொண்டு வரும் சாகும் வரை உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியிருக்கிறார். கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தாய்த்தமிழகமே ஒன்றாகத் திரண்டுள்ளது என்பதை நிரூபிக்கும…
-
- 10 replies
- 658 views
-
-
விபத்தில் வைத்தியர் பலி!!! கிளிநொச்சி - பூநகரி பகுதியில் பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் அரச வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முழங்காவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A32 யாழ் - மன்னார் பிரதான வீதி, மண்டக்கல்லாறை அண்மித்த பகுதியில் அதிக வேகமாக சென்ற வாகனம் கட்டுப்பாட்டை மீறி மரமொன்றுடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மன்னார் வைத்தியசாலையில் கடமையாற்றும் யாழ் கரவெட்டி பகுதியை சேர்ந்த 41 வயதான அரவிந்தன் எனும் வைத்தியரே உயிரிழந்துள்ளார். சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/31370
-
- 10 replies
- 980 views
-
-
கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்தது மகா துரோகம் ! November 10, 2024 கடந்த தேர்தலில் கருணா செய்தது தவறு. அவர் தெரியாமல் அதை செய்தார்.ஆனால் இம் முறை தமிழருக்கான ஒரேஒரு பிரதிநிதித்துவம் ஊசலாடுகிறது என்று தெரிந்தும் இங்கு வரிந்து கட்டிக் கொண்டு சங்கு போட்டியிடுவது மகாதவறு. எனவே அம்பாறைத்தமிழர்களுக்கு கருணா செய்த துரோகத்தை விட சங்கு செய்கின்ற துரோகம் மகா துரோகம் ஆகும். இவ்வாறு காரைதீவில் தனது பிரச்சார அலுவலகத்தை நேற்று (9) சனிக்கிழமை மாலை திறந்து வைத்து பேசிய அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சி வேட்பாளருமான ஏ.கே. கோடீஸ்வரன் தெரிவித்தார் . இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 60 ஆயிரம் வாக்குகளை பெற்று…
-
- 10 replies
- 966 views
-
-
சிறீலங்காவின் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமல் வெளிநாடுகளில் பட்டம் பெறுபவர்களின் பட்டங்கள் சிறீலங்காவில் எனிமேல் அங்கீகரிக்கப்படமாட்டாது என்று சிறீலங்கா அரசு அறிவித்துள்ளது. பல மேற்குலகப் பல்கலைக்கழகங்கள் கணணி சார் மற்றும் வர்த்தகம், முகாமைத்துவம் சார்ந்த பட்டப்படிப்புக்களை எந்தவித உயர்தர பரீட்சைப் பெறுபேறையும் அடிப்படைத் தகுதியாகக் கோராமல் வழங்கி வருவதுடன்.. ரஷ்சியா போன்ற நாடுகளில் உயர்தரப் பரீட்சையில் சித்தியடையாமலே மருத்துவப் படிப்பைக் கூட தொடரக் கூடிய நிலை இன்றிருக்கிறது. A/Level qualification imperative - Warnapala The Ministry of Higher Education will never recognize the foreign degrees obtained by students who do not have the basic Advance …
-
- 10 replies
- 2k views
-
-
வடபோர்முனையில் இந்திய "றோ"வின் உளவு வானூர்திகள்: கொழும்பு ஊடகம் [புதன்கிழமை, 07 சனவரி 2009, 06:01 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு நிறுவனமான "றோ"வின் வானூர்திகள் கண்காணித்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி நகரம் சிறிலங்கா படையினரால் கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வானூர்திகளில் பொருத்தப்பட்ட அதிநவீன ஒளிப்பட சாதனங்களின் மூலம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை இந்திய உளவு வானூர்திகள் கண்காணி…
-
- 10 replies
- 1.7k views
-
-
இலங்கை முழுமையாக முடக்கப்படுமா?- நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் ஜனாதிபதி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, இன்று (வெள்ளிக்கிழமை) விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார். குறித்த உரையில், நாட்டை முடக்குவதா? இல்லையா? என்பது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து அவர் தெரியப்படுத்துவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த உரையினை நிகழ்த்துவதற்கு முன்னதாக, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் தலைமை பீடாதிபதிகளை இன்று காலை சந்திக்கும் ஜனாதிபதி, இலங்கையின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடவுள்ளார். இதேவேளை அரசாங்கத்தின் 10 பிரதான பங்காளிக் கட்சிகள், ஏனைய சில கட்சிகள், சமூக…
-
- 10 replies
- 520 views
-
-
தற்போதைய அரசாங்கத்தை எதிர்வரும் 20 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்கம் தற்போது வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதாகவும், எதிர்வரும் தேர்தலில் அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என்றும் தற்போது எதிர்கட்சிகள் கூறுகின்றன. எனினும் இவை அனைத்தும் அடிப்படையற்ற கருத்துக்கள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஒன்பது வருடங்களாக ஆட்சியில் இருந்ததைப் போலவே, எதிர்வரும் 20 வருடங்களுக்கும் நிலையாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=97954&category=TamilNews&language=tamil
-
- 10 replies
- 765 views
-
-
Published By: DIGITAL DESK 5 06 MAY, 2023 | 11:13 AM யாழ்பாணம் வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் கொடியிறக்க திருவிழாவின் இந்திரவிழா உற்சவம் வெள்ளிக்கிழமை (05) இரவு 07 மணியளவில் மிகசிறப்பாக இடம்பெற்றது. இதில் முத்துமாரியம்மன், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களை முத்துப்பல்லாக்கில் பக்தர்கள் சுமந்தவண்ணம் வீதி உலா வந்தனர். இதில் முக்கிய வீதிகளிலும் வர்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மின்விளக்குகள், கலைநிகழ்ச்சிகள், நடன ஆற்றுக்கைகள், கவியங்கங்கள், சொற் பொழிவுகள், புகைக்குண்டு ஏற்றல், வான வேடிக்கைகள் இடம்பெற்று இன்று அதிகாலையில் முத்துமாரி அம்மன்,சமேதராக ஆலயத்தின் வந்தடைந்தனர். …
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
ஒலுவில் பாலம் உடைந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு அம்பாறை, ஒலுவில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் உடைந்து விழுந்ததன் காரணமாக அக்கரைப்பற்று-கல்முனை பிரதான போக்குவரத்துப்பாதையின் போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் ஒலுவலில் கழியோடைக்கு அருகில் உள்ள பாலம் இன்று அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளதன் காரணமாக அதன் ஊடான போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. வெள்ள நீரோட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரு…
-
- 10 replies
- 794 views
- 1 follower
-
-
வெளிவிவகார அமைச்சிடம் இந்திய தூதரகம் கவலை தெரிவிப்பு 05.08.2008 / நிருபர் வானதி கொழும்பில் நடைபெற்ற 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் போது இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனுக்குனின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு தொடர்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது கவலையை வெளிவிவகார அமைச்சிடம் தெரியப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம். கே. நாராயணனுக்கு சார்க் மாநாட்டின் போது விசேட பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை வெளிவிவகார அமைச்சை கேட்டிருந்தது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை 15 ஆவது சார்க் உச்சி மாநாட்டின் ஆரம்ப வைபவத்தில் கலந்து கொள்ளச் சென்ற எம். கே.நார…
-
- 10 replies
- 2.2k views
-
-
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நேபாள இராணுவ தளபதி ஜங்பஹதூர்ரணாவும் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார். யாழ். சென்ற அவர் யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி உதய பெரேராவை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பினை அடுத்து நல்லூர் கந்தசுவாமி கோயில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார். அத்துடன் யாழ். கோட்டை மற்றும் யாழ். பொது நூலகம் ஆகியவற்றிற்கும் நேபாள இராணுவ தளபதி விஜயம் செய்தார். இந்த விஜயத்தில் அவரின் பாரியார் ரோகினி ரணாவும் கலந்துகொண்டார். (படங்கள்:சுமித்தி தங்கராசா, செல்வநாயகம் கபிலன்) http://tamil.dailymirror.lk/--main/98794-2014-02-02-08-42-15.html
-
- 10 replies
- 783 views
-
-
மஹிந்த ராஜபக்ஷ: "இலங்கையில் இடைக்கால அரசாங்கம் அமைந்தால் நானே தலைவன்" 26 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மஹிந்த ராஜபக்ஷ, இலங்கை பிரதமர் இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கையை அந்நாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை நிராகரித்தார். "மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு நானே தலைவன் என்றும்…
-
- 10 replies
- 640 views
- 1 follower
-
-
கதிர் இந்தியா தனது உள்ளூர்த் தயாரிப்பான டோர்னியர் உளவு விமானம் ஒன்றை இலங்கைப் படைகளுக்கு வழங்கவுள்ளது. இதற்கான பேச்சு இடம்பெற்று வருவ தாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு இன்று சீன உளவு கப்பலான யுவாங் வாங் 5 வருவதற்கு இந்தியா எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், இந்த டோர்னியர் உளவு விமானத்தை இலங்கைக்கு இந்தியா வழங்கவுள்ளது. பெரும்பாலும் இந்த விமானம் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை தனது கடல் கண்காணிப்பு மற்றும் பிற நோக்கங்களுக்காக இந்த உளவு விமானத்தைப் பயன்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்…
-
- 10 replies
- 627 views
- 1 follower
-