ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143538 topics in this forum
-
மைத்திரி அரசு சர்வதேசத்திற்கு மண்டியிடாது : மங்கள முழக்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் எந்தவொரு நாட்டிடமும் மண்டியிடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளுக்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை வெளிநாட்டுத் தலைவர்கள் தேடிவந்து சந்திக்கும் அளவுக்கு சர்வதேச ரீதியில் நாட்டுக்கு வரவேற்புக் கிடைத்திருப்பதாகவும் அமைச்சர் கூறினார். வரவுசெலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான ஒன்பதாவது நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உ…
-
- 9 replies
- 1.3k views
-
-
இலங்கையில் இடம்பெற்று வரும் யுத்த நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவையில் விவாதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் இந்த மூன்று நாடுகளும் அடங்கியுள்ளன. சிறிலங்கா அரசாங்கம் யுத்த சூனிய பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கையை விஸ்தரிக்கப் போவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை, திங்கட்கிழமை நடத்திய அந்தரங்க கூட்டத்தில் செயலாளர் நாயகம் பான்கீ மூனின் தூதுவர் விஜய் நம்பியாரிடமிருந்து அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்வது பற்றி ஆராய்ந்தது. இலங்கை பற்றிய அறிக்கையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரித்தானியா…
-
- 9 replies
- 1.5k views
-
-
"இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற போது அமெரிக்க ஜனாதிபதி, ஐ.நா. செயலாளர் நாயகம், கனேடிய பிரதமர், பிரிட்டன் பிரதமர் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு போரை நிறுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். அவ்வாறான நிலையிலும், ஜனாதிபதி, எதற்கும் அஞ்சாமல் தீர்மானம் எடுத்துப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார். அன்று ஜனாதிபதி தமது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து தளர்ந்திருப்பாரானால் அமெரிக்கர்கள் பிரபாகரனை மீட்டுக் கொண்டு சென்றிருப்பர்" - இவ்வாறு போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரகசியத் தகவலை கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரும், அமைச்சருமான டியூ குணசேகர வெளிப்படுத்தியுள்ளார். காலியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டப…
-
- 9 replies
- 718 views
-
-
முதலமைச்சரால் முழந்தாளிட வைக்கப்பட்ட அதிபர் 7 மணிநேரம் சாட்சியம் ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சமிந்த தசநாயக்கவினால், முழந்தாளிட்டு மன்னிப்புக் கோர வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் ஆர். பவானி ஏழு மணி நேரம் சாட்சியம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பதுளை பெண்கள் பாடசாலை அதிபர் பவானி நேற்று, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டிருந்தார். இதன் போது அவர் சுமார் 7 மணிநேரம் சாட்சியம் அளித்துள்ளார். அதேவேளை, ஊவா மாகாண கல்வி அமைச்சின செயலர் சந்தியா அம்பன்வல உள்ளிட்ட 6 அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணைக்குழு …
-
- 9 replies
- 602 views
-
-
கோழைத்தனமான அரசியல்வாதிகளே நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்-மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தமிதா அபேரத்ன கைது செய்யப்பட்டமை அரசாங்கத்தின் கோழைத்தனமான செயல் எனவும் அதற்கு ஆதரவளித்தவர்கள் கோழைகள் எனவும் மூத்த கலைஞர் பீட்டர் டி. அல்மேடா தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர் நீங்கள் எப்படிப்பட்ட அரசியல்வாதிகள்? தமிதா போன்ற ஒருவரை சிறையில் அடைத்த கோழைகளே! போராட்டத்தை நிறுத்த மாட்டோம்! போராட்டங்களை நடத்துவது தனிமனிதனின் உரிமை எனவும், போராட்டங்கள் ஒருபோதும் நிறுத்தப்படாது எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/207592
-
- 9 replies
- 962 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷவும். விமல் வீரவன்சவும் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குடும்பத்தினர் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்குகொண்டிருந்தார்கள். பௌத்த பிக்குகள் பலரும் இதில் கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளை நடத்தினார்கள். பங்குகொண்டவர்கள் அனைவரும் இவ்வருட புதுவருட அதிஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய விளையாட்டுக்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. http://www.malarum.com/article/tam/2015/04/14/9608/%E0%AE%…
-
- 9 replies
- 1.7k views
-
-
போர்க்குற்ற விசாரணை: படையினரை பலிக்கடாவாக்கும் ராஜபக்ச சகோதரர்களின் இரகசிய திட்டம்! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட 'இலங்கையின் கொலைக்களம்' ஆவணப்படத்தில் குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளையும் விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் ரமேசின் படுகொலையுடன் தொடர்புடையவர்களையும் இனங்காணுமாறு பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு ஆலோசகர் கபில ஹெந்தவிதாரணவும் அவருடைய சிறப்பு பிரிவும் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவினால் பணிக்கப்பட்டுள்ளனர் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவையும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயவையும் போர்க்குற்றச்சாட்டுகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, மேஜர் தரத்திலான மூத்த இராணுவ அதிகாரிகள் உட்பட நூற்றுக்கணக்கான இராணுவத்தி…
-
- 9 replies
- 1.2k views
-
-
சிறீலங்காவின் கெளரவ விஞ்ஞானி சேர் ஆர்தர் சி கிளார்க் தனது 90வது வயதில் சிறீலங்காவில் காலமானார். இவர் விஞ்ஞான நாவல்கள் மூலம் பிரபல்யம் அடைந்தவராவார்..! சமீப காலத்தில் சிறீலங்காவில் பல பிரபல்யங்கள் மரணத்தைத் தழுவிக் கொண்டுள்ளனர். அந்த வரிசையில் இப்போ ஆர்தர் சி கிளார்க்கும் சேர்ந்து கொண்டுள்ளார். Goodbye Sir Arthur The three laws adopted by Sir Arthur C. Clark in his life were (1)When a distinguished but elderly scientist states that something is possible, he is almost certainly right. When he states that something is impossible, he is very probably wrong." (2) "The only way of discovering the limits of the possible is to venture a little way past t…
-
- 9 replies
- 4.2k views
-
-
ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும் என நம்பிக்கை தெரித்தார் பிரபல நடிகர் கமல்ஹாசன். தனது அடுத்த படமான 'உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் குறித்த அறிமுகவிழாவில் இக் கரத்தினைத் தெரிவித்தார். விழாவில் மேலும் அவர்,ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பது உங்களுக்குத் தெரியும். தமிழன் என்பது ஒரு அடையாளம். ஆனால் அது உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. நான் தமி…
-
- 9 replies
- 3k views
-
-
கூட்டமைப்பின் உட்கட்சிப் பூசல்; ஆயர் தலைமையில் பேச்சுவார்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் வளர்ந்துவரும் உட்கட்சிப் பூசல்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான விசேட சந்திப்பொன்று ஆயர் ஜோசப் கிங்ஸ்லி ஸ்வாம்பிள்ளை தலைமையில் நேற்று (11) நடைபெற்றது. கூட்டமைப்பை விட்டு விலக ஈபிஆர்எல்எப் மற்றும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் முடிவெடுத்திருப்பதையடுத்தே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டமைப்பு எடுக்கும் முடிவுகளுடன் ஒத்துப் போக முடியாதிருப்பதைக் காரணம் காட்டியே மேற்படி கட்சிகள் விலக முடிவெடுத்திருப்பதாக அறிவித்திருந்தன. குறிப்பாக, கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதானிகள் தமிழர்களின் நலனைக் கருத்திற்கொள்ள…
-
- 9 replies
- 794 views
-
-
யாழ் மாவட்டத்தில் விவசாயத்தையும், மனித உடல் நலத்தையும், சுற்றுச்சூழலையும் மிக மோசமாகப் பாதித்து வரும் பாதீனியத்தை ஒழிக்கும் பணியில் களைநாசினி விசிறும் பிரிவு ஒன்றையும் உருவாக்கியுள்ளது வடக்கு மாகாண விவசாய அமைச்சு. இந்தப் பிரிவின் நடவடிக்கைகளை அமைச்சர் ஐங்கரநேசன் இன்று புதன்கிழமை ஊரெழுவில் ஆரம்பித்து வைத்தார். ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் உரையாற்றுகையில் தெரிவித்தவை வருமாறு:- செயற்கை உரங்கள், பீடைகொல்லிகள், களைகொல்லி இரசாயனங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு விவசாயத்தில் இவற்றின் பயன்பாட்டை இயன்றளவு குறைக்குமாறே நாம் வலியுறுத்தி வருகிறோம். இதன் அடிப்படையிலேயே பாதீனியம் ஒழிப்பிலும் முதற்கட்ட நடவடிக்கையாக களைகொல்லி இரசாயனங்களை விசிறுவதைத் தவிர்த்துக் கைகளினால் பிட…
-
- 9 replies
- 731 views
-
-
[saturday, 2011-08-27 00:09:46] 1957ம் ஆண்டு தூக்குக் கயிற்றிலிருந்து பாலன் என்பவரை அப்போதைய முதல்வர் காமராஜர் காப்பாற்றியது போல ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தனை முதல்வர் ஜெயலலிதா காப்பாரா என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதியாக நளினி, அவரது கணவர் முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. சோனியா காந்தியின் தலையீட்டின் பேரில் இது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து தங்களுக்குக் கருணை காட்ட வேண்டும் …
-
- 9 replies
- 1.4k views
-
-
மத்தள சர்வதேச விமான நிலையம் இந்தியாவிடம் ஒப்படைப்பு? ஹம்பாந்தோட்டை – மத்தள சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாடுகளை ரஷ்ய – இந்திய கூட்டு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன் சந்திர கூறியுள்ளார். அதற்கமைய, எதிர்வரும் நாட்களில் குறித்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில் மத்தள விமான நிலையத்தின் அனைத்து நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ளது. அங்கு பணியாற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கான சம்பளமும் அந்நிறுவனத்தின் ஊடாக வழங்க திட்டமிட்டுள்ளது மேலும் இந்த திட்டத…
-
- 9 replies
- 1.1k views
-
-
35,000 விமானப்படை வீரர்களின் எண்ணிக்கை 2030 ஆம் ஆண்டளவில் 18,000 ஆகக் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ கூறுகிறார். விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தகவல் தொழில்நுட்பம், ட்ரோன் தொழில்நுட்பம், யுஐபி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பயன்படுத்திதுவதன் விளைவாக விமானப்படை வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நம்புவதாக எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.. “வணிகச் சந்தையில் தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் படையினரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும். உதாரணத்திற்கு. பாதுகாப்பு தளத்தில் துருப்புகளைச் சுற்றி நிற்க வைப்பதை விட கேமராக்கள் போன்றவற்ற…
-
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளுக்கு தீனி போடவும் வேண்டாம் அமைச்சர் ஹக்கீம்- சர்வதேச விசாரணையை மையமாக வைத்து தெற்கின் நாட்டுப்புற சிங்களவர்களை சூடேற்றி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னைய ஆட்சியாளர்களின் கைக்கூலிகளாக செயற்பட்டுவரும் சில கழுகுக் கூட்டங்களின் திட்டங்களுக்கு தீனி போடும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படக்கூடாது. புழைய புண்களை சொறிந்து சொறிந்து இனியும் வங்குரோத்து அரசியலில் ஈடுபட வேண்டாமென நகர திட்டமிடல், நீர்வளங்கள் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று முன்வைக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போத…
-
- 9 replies
- 891 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்படும் பிரேரணையை அமெரிக்காவுடன் இணைந்து இந்தியாவும் ஆதரிக்கும் என நம்புவதாக இந்திய மத்திய பாராளுமன்ற விவகார இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஐநா சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா சமர்ப்பிக்க இருக்கும் மனித உரிமை மீறல்களுக்கெதிரான பிரேரணையை இந்தியா ஆதரிக்குமா என உள்ளுர் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாராயணசாமி இதனைத் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்களுக்கெதிரான தீர்மானத்தை தனிப்பட்டரீதியில் தான் ஆதரிப்பதாகவும் பிரதமரிடமும் இவ்விடயத்தை வலியுறுத்துவேன் எனவும் பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி மேலும் தெரிவித்…
-
- 9 replies
- 1.9k views
-
-
தேசத்தைக் கட்டியெழுப்பவதற்கான அமைச்சர் பசில் ராஜபக்சவும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசநாயக்காவும் பாராளுமன்றத்தில் கோப் தொடர்பான கூட்டத்தின் போது கட்டிப் புரண்டு மோதிக் கொண்டனர். கண்கண்ட சாட்சியங்களின்படி, இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து குத்துச் சண்டை வீரர்கள் போல மோதிக் கொண்டனர். எனினும் அங்கிருந்த ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரையும் பிடித்து பிரித்து விட்டுள்ளனர். இதன்போது ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்கள் விடுதலை முன்னணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் அநுர குமார திசநாயக்காவுக்கு ஆதரவளித்தனர். எனினும் இந்தச் சச்சரவின் போது ஆச்சரியத்தக்க விதத்தில் பசில் ராஜபக்சவுக்கு அரசாங்க …
-
- 9 replies
- 3.3k views
-
-
திருமா, பிரபாகரன் பற்றிதான் எப்போதும் பேசுவான் என் மகன் - தீக்குளித்த தமிழ்வேந்தன் தாயார்! ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற வேறு வழியில்லாததால் தீக்குளிக்கிறேன் என்ற படி கடலூரில் தீக்குளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் பொருப்பாளர் தமிழ்வேந்தன் கடலூர் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில் பத்திரிகையாளர்களிடம் கதறியபடியே பேசிய அவரது தாயார் அஞ்சலைதேவி, “ எம் மவனுக்கு எப்ப பாத்தாலும் ஈழத்துல இருக்கிற சனங்களைப் பத்திதான் பேச்சு. நேத்திக்கு மனித சங்கிலி போராட்டத்துக்கு போயிட்டு வந்தவன் ராத்திரி பூரா பொலம்பிக்கிட்டிருந்தான். ஈழத்துல சனங்க ஆயிரமாயிரமா செத்துகிட்டு இருக்காங்க. என்னால ஒண்ணும் பண்ண முடியலையே புலம்பினான். இன்னைக்கு காலையில அ…
-
- 9 replies
- 1.3k views
-
-
வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை நிறுத்துக…. இராணுவத்தை தண்டிக்க இடமளிக்கபோவதில்லை..! நினைவேந்தல் நிகழ்வுகள் எனற பெயரில் புலம்பெயர் அமைப்புகளை தூண்டிவிடும் வகையில் வடக்கில் அரங்கேற்றும் நாடகத்தை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இராணுவத்தை குற்றம் சுமத்தி மக்களை தூண்டிவிடும் நாடகத்தை இனியும் நடத்தினால் தக்க பாடம் கற்பித்துக்கொடுக்க வேண்டிய வரும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். இராணுவத்தை தண்டிக்க ஒருபோதும் இடமளிக்கபோவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். அரநாயக பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். http://www.virakesari.lk/artic…
-
- 9 replies
- 628 views
-
-
கூட்டமைப்பு எம்.பிக்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் மற்றும் சிவநாதன் கிஷோர், சிறிகாந்தா, சிவாஜிலிங்கம், தங்கேஸ்வரி ஆகியோர் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப் பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் நேற்றுக்காலை வன்னிப்பிர தேசத்தில் மீள்குடியமர்த்தப்பட்ட பிரதேசங்களுக்குச் சென்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளார். மல்லாவி யோகபுர…
-
- 9 replies
- 926 views
-
-
தேர்தல்களில் கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட ஆராய்வு! தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் தனித்தனியாக முகம் கொடுப்பது தொடர்பில் தொழில் நுட்ப ரீதியில் ஆராயப்பட்டுள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று (11) வவுனியா, குடியிருப்பு கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றது. அதன் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், தமிழரசுக் கட்சியின் மத்திய கு…
-
- 9 replies
- 1k views
- 1 follower
-
-
எஸ்.என்.எம்.சுஹைல் ஐரோப்பியரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் இலங்கையில் இலங்கை அரசியல் நிர்வாக முறைமை அறிமுகமானது. 1505 இல் போர்க்கீசர் இலங்கையின் கரையோரங்களை கைப்பற்றினர், அவர்களிடமிருந்து 1658 இல் ஒல்லாந்தர் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆக்கிரமித்துக்கொண்டனர். இவர்கள் இந்நாட்டை ஆக்கிரமித்த போது நாட்டில் பல்வேறு நிர்வாக முறைமை இருந்துவந்தது. குறிப்பாக கண்டி இராஜியம் வலுவான அரசாக இருந்தது. எனினும் 1796 இலங்கைக்கு படையெடுத்த பிரித்தானியர் 1815 இல் முழு இலங்கையையும் கைப்பற்றி ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர். காலனித்துவத்தின் வருகைக்கு முன்னரும் பின்பும் இலங்கையின் ஆட்சியில் முஸ்லிம்கள் பங்…
-
-
- 9 replies
- 803 views
-
-
[size=2][/size] [size=4] (அப்துல் அஸீஸ்) [/size] [size=4]ஜனாதிபதி எவ்வாறு பயங்கரவாதத்தை ஒழித்தாரோ அதேபோன்று தற்போது காணப்படும் பயங்கரவாதத்தையும் அது காவி உடை அணிந்த பயங்கரவாதமாக இருந்தாலும் சரி அதையும் ஒழிப்பதற்கு ஜனாதிபதி முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் கல்முனைத் தொகுதியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைக்கும் கூட்டம் சாய்ந்தமருதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். கே.எம்.ஏ.ஜவாத், ஏ.எம்.ஜெமீல், ஏ.ஆர்.அமீர், துல்கர் நயீம் ஆகிய வேட்ப…
-
- 9 replies
- 521 views
-
-
இலங்கைத் தேர்தலில் நடக்கப்போவது என்ன? ராஜபக்ச அல்லது சரத் இருவரும் ஓரணியில் நின்று தமிழரை உயிரோடு கொழுத்த எரித்தவர்கள் தான். ஒருவர் சொன்னார்.: இது சிங்கள பௌத்தநாடு. இங்கு மற்றவர்களுக்கு இடமில்லை. அடிமைகள் தான். பொர் நடந்த வேளை சொன்னது. மற்றவர் சொன்னார். புலிகள் கதை முடிந்ததது. தமிழர் பிரச்சனையைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம் இனிஆமல் இல்லை என்று மோதகம் கொழுக்கட்டை ஆனால் என்ன? கொழுக்கட்டை மோதகம் ஆனால் என்ன? இரண்டின் சுவையும் ஒன்றுதான். தமிழர்களுக்கு வடிவம் தாக் மாறுகின்றது. சுவை ஒன்றுதான் ஆனால் தமிழர்களின் வாக்கு முக்கியம். தமிழர்கள் தங்கள் வாக்குகளை ஒருவருக்கு ஒட்டு மொhத்தமாக அளிப்பதன் மூலம் பல செய்திகளை உலகுக்கு உணர்த்தலாம். தமிழர் வாக்குகள் தான…
-
- 9 replies
- 1.6k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்க உருவாக்கம் தொடர்பான ஆலோசனைக்குழுவின் அறிக்கையை நோர்வே ஈழத்தமிழர் அவை ஆய்வுக்குட்படுத்தி கோட்பாட்டு ரீதியாக திருத்தவேண்டியவற்றையும்இ நடை முறைரீதியான சிக்கல்களை எவ்வாறு களையலாம் என்பதையும் தனது 13 பக்க அறிக்கையில் 5 தலைப்புகளின் கீழ் ஆராய்ந்து 26 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. தற்போது உருவாக்கம் பெற்று வரும் நாடளாவிய மக்களவைகள் ஒவ்வொரு நாட்டிலும் நாடு தழுவிய ஜனநாயகக் கட்டமைப்பாக உருவாக்குவதற்கு நாடு கடந்த அரசாங்க வேலைத்திட்டத்தில் ஈடுபடுவோரும் சேர்ந்து ஒற்றுமையாகச் செயலாற்றி அதன் அடுத்த கட்டமாக நாடு கடந்த கட்டமைப்பை உருவாக்கவேண்டும் என்றும்இ கட்டமைப்பு ரீதியாகவும்இ யாப்பு ரீதியாகவும் நாடு கடந்த அரசியலில் தேசிய மட்டங்களிலான மக்களவைகளின் வகிபாகம் தொடர…
-
- 9 replies
- 1.2k views
-