ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் பௌத்த துறவிகள் சிலர் எதிர்மாறான செயற்பாடு [25 - February - 2008] * இன்றைய அவலத்திற்கு இதுவே காரணம்; கலாநிதி விக்கிரமபாகு கௌதம புத்தர், விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயற்படுமாறே தமது சீடர்களுக்கு போதித்தார். ஆனால், எமது நாட்டிலுள்ள சில பௌத்த துறவிகள் இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் மாறாக செயற்படுவதே இன்றைய நிலைமைகளுக்கு காரணம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை திராவிட இயக்கத்தின் தலைவர் ஈ.மா. அருமைதாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த புதன்கிழமை கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்ரமபாகு …
-
- 3 replies
- 1.8k views
-
-
வழக்கிலிருந்து மகிந்த விடுதலை சுனாமி அனர்த்தத்தின்போது அம்பாந்தோட்டையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைப்பதற் காக வழங்கப்பட்ட யஹல்பிங் அம் பாந் தோட்டை நிதி மோசடி வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் அடிப்படை மனித உரிமை மீறப் பட்டதாகவும், அவருக்கு 5 ஆயிரம் டொலர் நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.அம்பாந்தோட்ட
-
- 4 replies
- 1.8k views
-
-
புலம்பெயர் நாடுகளில் சிறீலங்கா அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாகவும், தமிழ் மக்களிற்கு எதிராகவும் பரப்புரைகளில் ஈடுபட்டுவந்த சிங்களவர்கள் தற்பொழுது வன்முறை நடவடிக்கைகளிலும் ஈடுபட ஆரம்பித்துள்ளனர். நியூசிலாந்தின் பல பாகங்களிலும் (ஒக்லாந்து, வெலிங்டன், கிறைஸ்சேர்ச்) தமிழ் மக்களால் ஒழுங்கு செய்யப்படும் கவனயீர்ப்பு நிகழ்வுகள், அமைதிப்பேரணி ஆகியனவற்றிற்கு எதிராக ஒவ்வொரு தடவையும் நியூசிலாந்த்தில் உள்ள சிங்களவர்கள் எதிர்செயற்பாடுகளை மேற்கொள்வதுடன் அங்கு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ் மக்களை நிழற்படங்கள் எடுப்பதும், அவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் வழமையான செயற்பாடாக இருந்து வருகின்றது. கடந்த சனிக்கிழமை (21.03.2009) நியுசிலாந்து தமிழ் இளையோரால் ஒழுங்கு செய்யப்பட்ட “உ…
-
- 7 replies
- 1.8k views
-
-
இந்து சமுத்திரத்தின் ஆதிக்கத்திற்கு அடித்தளமிடும் சீனா அண்மை நாட்களாக ஸ்ரீலங்கா அரசாங்கம் வெளிப்படையாகவே தனது சீன சார்பு நிலையை அறிவித்து வருகின்றது உலக இயங்கியல் விதிகளின் கீழ் மேற்குலகம் என்று சொல்லப்படுகின்ற முதலாளித்துவ பொருளாதார சார்பு நிலை நாடுகள் எதிர் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு எதிரான போக்குடைய நாடுகள் என்ற இரு பெரும் பிரிவுகள் காணப்படுகின்றன. முதலாளித்து சார்பு நிலை நாடுகள் அமெரிக்காவின் கீழ் அதன் கொள்கைகளுக்கு ஆமாம் சாமி போடும் வகையில் அணிவகுத்திருக்க எதிர் முகாம் சீனாவை தலைமையாக கொண்டதாக எழுச்சி பெற்று வருகின்றது. ஆசியாக் கண்டத்தின் பலம் மிக்க நாடாக விளங்கும் சீனா அனைத்து துறைகளிலும் அமெரிக்க சார்பு கூட்டணிக்கு சவால் விடுத்து வருகின்றது சீனாவ…
-
- 1 reply
- 1.8k views
-
-
விடுதலைப்புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்லராஜா பத்மநாதனினால், இலங்கைக்கு வெளியில் அமைக்க உள்ளதாக கூறப்படும் தமிழீழ அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளும் கொள்ளும் நாடுகளுடன் தூதரக உறவுகளை முறித்து கொள்ள போவதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. தமிழீழ அரசாங்கத்iதை அமைப்பது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சட்ட நிபுணர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் தலைமையில் குழுவொன்று அமைக்கப்படும் என பத்மநாதன் மின்னஞ்சல்கள் மூலம் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தர். அத்துடன் இதற்காக இலங்கை உள்ளிட்ட உலகில் உள்ள தமிழ் அமைப்புகளின் ஆதரவையும் அவர் கோரியிருந்தார். இந்த மின்னஞ்சல்கள் நோர்வேயில் இருந்தே அனுப்பபட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கு வெ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஆடத்தொடங்கியிருக்கும் அத்திவாரம் !!! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்- உலகம் பூராகவும் பெரும் பரபரப்பு. இங்கு நான் உலகம் என்பது ஈழத்தமிழ் உலகத்தை, அண்மையில் வெளிவந்த அஜித்தின் 'வேதாளத்திற்கு' நிகராக, சுமந்திரனுக்கு முதலமைச்சர் எழுதிய பதிலறிக்கை, ஈழத்தமிழுலகம் எங்கும் பரபரப்பாய்ப் பேசப்படுகிறது. 'குடுத்தார் பார் ஒரு குடுவை', 'உடஞ்ச மூக்கைத் தேடுறார் சுமந்திரன்', 'மனுசன் சொன்னது அத்தனையும் சரி', இப்படியாய்க் கட்சி பிரிந்து முதலமைச்சருக்கு வால் முறுக்குவோர் சிலர், கொண்டாடிக் குதூ…
-
- 12 replies
- 1.8k views
-
-
யாழில் எம்.ஜி.ஆர். சிலைக்கு தார்பூசி சேதப்படுத்தியது சிங்கள இராணுவம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு பெரும் பங்காற்றிய தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருந்த உருவச்சிலைகளை சிங்கள இராணுவத்தினர் தார்பூசி அடித்து சேதப்படுத்தியுள்ளனர். தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்க பெரும் பங்காற்றிய எம்.ஜி.ஆருக்கு மதிப்பளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை மக்களால் அவருக்கு உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டது. இந்தச் சிலை கடந்த ஆண்டு இந்திய சிற்பக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. யாழில் ஊரடங்குச் சட்டத்தினை கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக சிங்கள இராணுவத்தினர் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஊர…
-
- 5 replies
- 1.8k views
-
-
-
- 9 replies
- 1.8k views
-
-
சமஷ்டி ஆட்சி முறைக்கு ஆதரவளிக்கத் தயார் - ஜே.வி.பி வெள்ளிக்கிழமை, 11 பிப்ரவரி 2011 01:01 நாடு பிரிவுபடாத வகையிலான சமஷ்டி ஆட்சி முறைக்கு தமது கட்சி பூரண ஆதரவளிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இன்று திடீர் அறிவிப்புச் செய்துள்ளது. ஜே.வி.பியின் ஆறாவது வருடாந்த மகாநாடு இன்று கொழும்பில் நடைபெற்றபோது கட்சியின் தலைவரான சோமவன்ச அமரசிங்க இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர், சமஷ்டி என்பதற்கு இந்த நாட்டில் இரண்டு கருத்துகள் உள்ளன. பிரிவினையுடனான சமஷ்டி, ஒன்றுபட்ட சமஷ்டி என்பனவையே அவை. இவற்றில் இரண்டாவது முறையை நாம் ஆதரிப்போம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. பிளவுபடாத ஒன்றுபட்ட நாட்டுக்குள் சமஷ்டி ஆட்சிமுறை ஒன்று உருவாக்கப்படுமாயின் அதனை நாம்…
-
- 1 reply
- 1.8k views
-
-
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக்கொள்வது குறித்து இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சுதர்சன் செனவிரட்ன, இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயை சந்தித்துள்ளார்.புதுடெல்லியில் அமைந்துள்ள ராட்சரபதி பவனில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் நிலவி வரும் தொடர்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110101/language/ta-IN/article.aspx
-
- 33 replies
- 1.8k views
-
-
இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் கொண்டுவரும் திட்டத்துக்கு மாற்றீடாக கடல் நீரைக் குடிதண்ணீராக்கும் திட்டம் குறித்து உயர்மட்டக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்தது. வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திட்ட நிதி வழங்குநர்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சு, நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகள் மற்றும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வட மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களான குருகுலராஜா, சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர். இரணைமடுவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிதண்ணீர் எடுத்துவரும்…
-
- 28 replies
- 1.8k views
-
-
சிங்கள பிரதேசத்தில் பிரபாகரனின் தகப்பன் கட்டிய இந்துக் கோவில்! சாட்சியத்தில் சுட்டிக் காட்டுகின்றார் கருணா செவ்வாய், 14 டிசம்பர் 2010 01:28 "தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் தந்தை கொழும்பின் புறநகர்ப் பகுதியான பாணந்துறைப் பிரதேசத்தில் இந்துக் கோவில் ஒன்றை கட்டி இருக்கின்றார். அக்கோவில் இன்றும் உள்ளது. அதைச் சிங்களவர்கள் இடித்து விடவில்லை. இந்நாட்டில் ஆரும், எந்த இடத்திலும் வழிபாட்டுத் தலங்கள், வாழிடங்கள் போன்றவற்றை அமைக்க முடியும். " தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று கொழும்பில் சாட்சியம் வழங்கியபோது மேற்கண்டவாறு தெரிவித்தார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மட்டு. மாவட்ட முன்னாள் இராணுவ தளபதியும், மஹிந்த அரசின் இந்நாள் மீள…
-
- 2 replies
- 1.8k views
-
-
சீனாவிடம் 1 பில்லியன் டொலர் கடன் பெறுகிறது சிறிலங்கா மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின், ஒரு பகுதியை நிறைவேற்றுவதற்கு, சிறிலங்கா அரசாங்கத்துக்கு 1 பில்லியன் டொலர் கடனை வழங்க சீனா முன்வந்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் கடவத்த தொடக்கம் மீரிகம வரையான, பகுதியை அமைக்கவே, சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியே (எக்சிம் வங்கி) இந்தக் கடனுதவியை வழங்கவுள்ளது. இந்த திட்டத்துக்கு 1.1 பில்லியன் டொலர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதில், 85 வீதத்தை, சீனாவிடம் கடனாகப் பெறவும், 15 வீதத்தை, உள்நாட்டு வங்கிகளிடம் அரசாங்கம் திரட்டவும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மத்திய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் முதலாவது கட்டமாக, 37.09 கி.மீ தூரமுள்ள …
-
- 15 replies
- 1.8k views
-
-
தானே தலைவர் என்கிறார் மகிந்த – உடைகிறது சுதந்திரக் கட்சி JAN 11, 2015 | 16:49by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவு தனக்கே உள்ளதாகவும், தானே கட்சியின் தலைமைப் பதவியை வகிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச. கொழும்பு டர்லி வீதியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற மத்திய குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், ”என்னுடன் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர் என்று எண்ணிப் பாருங்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் நானே என்று 42 மத்திய குழு உறுப்பினர்கள் மீள உறுதி செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டார். இதேவேளை சிறிலங்க…
-
- 22 replies
- 1.8k views
-
-
படகுதுறை பொதுமக்கள் படுகொலை ஐ.நா.கண்டனம். சமாதான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு கோரிக்கை. (ஆங்கிலத்திலான அறிக்கை தமிழ் மொழிபெயர்ப்பு) மன்னார் படகுத்துறை கிராமத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் தாக்குதல் நடத்தி 14பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை ஐ.நா.சபை வன்மையாக கண்டித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா.சபையின் உதவிச்செயலாளரும் மனிதாபிமான அலுவல்கள் மற்றும் இடர்கால உதவி வழங்கும் பிரிவின் இணைப்பாளருமான மார்கிரட் வேல்ஸ்ரேம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இன்று நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறு குழந்தைகள் உட்பட 14பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறித்து ஐ.நா.சபை ஆழ்ந்த கவலையடைந்திருப்பதாகவும் இலங்கை மக்கள் போரினால் தங்கள் வாழ்வை இழந்து தவிக்…
-
- 3 replies
- 1.8k views
-
-
தெற்கில் பாணந்துறைக்கு அருகாமையில் மூழ்கிவரும் கப்பலிலிருந்து கசியும் எண்ணெய்யை கொழும்பு, காலிமுகத்திடலிருந்து 4 – 10 கடல் மைல் தொலைவில் பரவி வருகின்றது.. இந்த எண்ணெய்க் கசிவு நீர்கொழும்பு கடலை நோக்கி பரவிவருவதாகவும் ஊறப்படுகின்ரது. சுமார் 20 – 30 தொன் எரிபொருளுடன் பாணந்துறை கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலொன்று மூழ்கிவருவதாக மேர்சன்ட் ஷிப்பிங் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் செனவிரட்ன கூறியுள்ளார். வழக்கொன்றின் காரணமாக நான்கு வருடங்களாக இக்கப்பல் நிறுத்தப்பட்டிருந்தது. எஸ்.எஸ்.தேர்மோபிலே சியெரா எனும் இக்கப்பல், கிரேக்க நாட்டிலுள்ள கப்பல் நிறுனவமொன்றுக்கு சொந்தமானதாகும். கொழும்பு மேல்நீதிமன்றத்தின் உத்தரவின்கீழ் பாணந்துறை கடற்பகுதியில் இக்கப்பல் நிறுத்த…
-
- 29 replies
- 1.8k views
-
-
* இந்தோனேசியா அறிவிப்பு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் இலங்கைத் தமிழ் அகதிகள், இந்தோனேசியாவில் தங்க அனுமதிக்கப்படாது உடனடியாகவே இலங்கைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் அகதிகள் அந்தஸ்து கோரி அண்மையில் படகொன்றில் சென்ற 83 தமிழர்கள், கிறிஸ்மஸ் தீவுக்குச் சமீபமாக அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர்கள் தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் அகதிகள் அந்தஸ்து வழங்கி அவுஸ்திரேலியாவினுள் தங்க அனுமதிக்குமாறு அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் உட்பட பல சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் கோரிக்க…
-
- 5 replies
- 1.8k views
-
-
ரசாயன ஆபத்து... இல்லாமல் போகும் இலங்கை? உலகம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்கள் ஒருசேரக் குரல் கொடுத்தும் சிங்கள அரசின் யுத்த வெறியாட்டத்துக்கு முடிவு கட்ட யாரும் முன்வரவில்லை! ''இன்னும் பத்தே நாட்களில் புலிகளைப் பூண்டோடு அழித்து விடுவோம்!'' எனக் கொக்கரித்திருக்கும் கோத்தபய ராஜபக்ஷே, ராணுவ நடவடிக் கைகளை உக்கிரமாக முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறார். இதுநாள் வரை பதிலடித் தாக்குதல்கள் நடத்தாமல் தற்காப்பு போர் முறைகளையே பின்பற்றி வரும் புலிகள் தரப்பு, கல்மாடுகுள அணைத் தகர்ப்பைப் போல் அதிரடியாக ஏதோ நடத்தும் முடிவில் இருப்பதாகவும் இலங்கையில் இருந்து தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. பொய்யாகிப் போன போர்நிறுத்தம்! சிங்கள ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்…
-
- 8 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா இராணுவத் தளபதி மீதான கொலை முயற்சிக்குப் பின்னர்தான் விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதாக மகிந்த அரசாங்கம் கூறுவது பொய் என்றும் அமைதிப் பேச்சுக்கள் காலத்திலும்கூட புலிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழை வளர்த்தோம் என்று கூறிவரும் கருணாநிதி, இலங்கைத் தமிழர்களுக்கு எந்த பாதுகாப்பும் கொடுக்கவில்லை. ஈழத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் மேற்கொள்ளும் கண்மூடித்தனமான தாக்குதல்களை நிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இலங்கைக் கடலில் சிங்கள இராணுவத்தின் கண்மூடித்தனமான தாக்குதல்களால் தமிழர்கள தினமும் செத்து மடிகின்றனர். கச்சதீவு நம்மிடம் இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது. இலங்கையில் தமிழர்கள் படும் அவலங்களையும், இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றமையும் கண்டும் காணதது போல் இருக்கிறார். தமிழர்களுக்கான பாதுகாப்பை வழங்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை அவர். என்று நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையில் ந…
-
- 2 replies
- 1.8k views
-
-
வன்னிப் பிரதேசத்தில் புலிகளின் இரும்புக் பிடியில் சிக்கித் துயருறும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுத்கும் மனிதாபிமான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க மஹிந்த உறுதி பூண்டுள்ளார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கேஹெலிய தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் சந்திப்பு நேற்று பிற்பகல் தேசியப் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதெ அதைத் தெரிவித்தார். மேலும் போர்நிறுத்த உடன்படிக்ககையைத் தொடர்ந்து அமுல்படுத்த புலிகள் விரும்பம் தெரிவித்துள்ள போதிலும் அதிலிருந்து விலகுவதென்று அரசு எடுத்த முடிவில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த 25 வருட கால அனுபத்தைக் கருத்திற் கொண்டே …
-
- 6 replies
- 1.8k views
-
-
மணலாற்றின் ஆண்டான்குளம் பகுதியில் நேற்று மாலை 6.00 மணியளவில் உழுவூர்தியில் பயணித்த படையினர் மின்னலின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். இதன்போது நான்கு படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயங்களிற்கு இலக்காகியுள்ளனர். இதேவேளை ஆண்டான் குளம் பகுதியில் நடைபெற்ற வௌ;வேறு மோதல்களில் மேலும் நான்கு படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக படைத்தரப்பினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
- 4 replies
- 1.8k views
-
-
புலிகளின் விமானம் நாத்தாண்டியாவில் வீழ்ந்தது என்ற தகவலையடுத்து அங்கு தீவிர தேடுதல் [29 - March - 2007] கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது தாக்குதலை மேற்கொண்ட புலிகள் இயக்கத்தினரின் விமானம் கல் அஹமுல்ல, பன்னறே பிரதேசங்களினூடாக தென்னை மரங்களை உரசுவது போல் மிகத் தாழ்வாகப் பறந்து சென்றுள்ளது. கல் அஹமுல்ல, பன்னறே பகுதிகள் நாத்தாண்டிய மானிங்கல பிரதேசத்திலுள்ள பரந்த வயல் பகுதிகளை அண்டிய பிரதேசமாகும். இவ்வாறு புலிகளின் விமானம் மிகத் தாழ்வாகச் சென்றது பற்றி மேற்படி வயல் பிரதேசத்தில் நெல் தூற்றிக்கொண்டும் வைக்கோல் போர்களை அமைத்துக்கொண்டுமிருந்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை அடுத்துள்ள விமானப்படையினரின் முகாம்கள் மீது தாக்குதலை நடத்திய புலிக…
-
- 4 replies
- 1.8k views
-
-
பயங்கரவாத அழிப்பும் வறுமை ஒழிப்புமே எம்முன்னுள்ள சவால்கள் சுதந்திரதின செய்தியில் ஜனாதிபதி மஹிந்த 2/3/2008 9:05:13 PM வீரகேசரி நாளேடு - பயங்கரவாதத்தை பூண்டோடு அழிப்பதும் வறுமையினை ஒழிப்பதுவுமே எம்முன்னுள்ள சவால்களாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 60 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 2500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றையும் நாகரீகத்தையும் கொண்ட ஒரு நாட்டுக்கு 60 வருடங்கள் என்பது ஒரு சிறிய கால இடைவெளியாகும். இருந்தபோதிலும் இந்த 60 ஆவது ஆண்டு சுதந்திர வைபவமானது நாம் சுமார் 500 ஆண்டுகள் பின்னர் காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரத்தை…
-
- 4 replies
- 1.8k views
-
-
மகிந்தவுக்கு மனைவி வீசும் மரணக்கயிறு - வி.சேந்தன் - தமிழினத்துக்கு எதிராக கடும்போர் நடைபெற்று வந்ததால் இவ்வளவு காலமும் வெளியில் புலப்படாமல் இடம்பெற்றுவந்த இன்னொரு போர் சிறிலங்காவில் தற்போது மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது. அதுதான் மகிந்த குடும்பத்துக்குள் இடம்பெறும் அதிகாரப்போட்டி. குடும்பத்துக்குள் நடைபெறும் இந்த குடுமிப்பிடி சண்டை. இது நாளையே மகிந்தவுக்கு மரணக்கயிறாக மாறப்போவது நிச்சயம் என்று மகிந்தவின் குடும்ப வட்டாரங்களே முணுமுணுக்க தொடங்கிவிட்டன. இந்த குடும்ப உட்பூசல் எவ்வாறு ஆரம்பித்து ஆரோகணித்தது என்பதை ஆராய்ந்தால், அங்குதான் மகிந்தவின் மனைவியின் அரசியல் ஆசையும் அவரது உள்வீட்டு நடவடிக்கைகளும் தெரியவரும். மகிந்தவின் அரசியல…
-
- 0 replies
- 1.8k views
-