Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழில். 35 ஆண்டுகளின் பின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட வீதி! யாழ்.வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது கடந்த 1990ஆம் ஆண்டு முதல் மக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வடக்கு பிரதேசத்திற்கு செல்லும் மக்கள் காங்கேசன்துறை சென்று அங்கிருந்தே பலாலி வடக்கிற்கு செல்லும் நிலைமை காணப்பட்டு வந்த நிலையில் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்திற்கு அனுமதிக்குமாறு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் சுமார்…

  2. பர்மாவில் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிராக இலங்கை குரல் கொடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் கோரியுள்ளது. பர்மாவின் அராகன் மாநிலத்தில் ரொகின்கியா முஸ்லிம்கள் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் இது தொடர்பில் அந்நாட்டு அரசாங்கத்துடன் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது, குறித்த முஸ்லிம்கள் இன ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதனை இலங்கை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. அண்மையில் நாட்டை விட்டு தப்பிச் சென்ற குறித்த முஸ்லிம்களுக்கு இலங்கை கடற்படையினர் அடைக்கலம் வழங்கியிருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. 2012 ஜூன் மாதம் முதல் பர்மா அதிகாரிகள் குறித்த முஸ்லிம்களுக்கு எதிராக…

  3. Published By: VISHNU 19 FEB, 2024 | 02:30 AM இந்தியா மீனவர்களின் எல்லை தாண்டிய அத்துமீறிய மீன்பிடி தொடர்ச்சியாக அதிகரித்து வரும் நிலையில் தமக்கான தீர்வை பெற்றுத் தருமாறு கோரி யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தை செவ்வாய்க்கிழமை (20) முற்றுகையிட மீனவ அமைப்புகள் முடிவு செய்துள்ளன. யாழ்ப்பாண மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், எமது கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்களில் அத்துமீறல் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. எமது வளங்கள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாகச் சூறையாடப்படும் நிலையில் எமது வாழ்வாதாரங்களும் …

  4. வைக்கோவும் நெடுமாறனும் தமிழ்நாட்டு மக்களின் குரலாக ஒலிக்கவில்லை: என்கிறார் சுப்பர் சுப்பிரமணியம் சுவாமி பாதுகாப்பு காரணமாகவே இந்திய பிரதமர் மன்மோன் சிங் அவர்களின் சிறீலங்காவிற்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டது எனத் தெரிவித்த சுப்பிரமணியம் சுவாமியின் கருத்துக்கள் பின்வருமாறு: விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் இந்திய பிரதமரின் பெயரும் அடங்கியிருக்கின்றது. இந்தியாவின் பிராந்திய செயற்பாட்டை விடுதலைப்புலிகள் ஏற்கவில்லை. அதேவேளை சிறீலங்கா அரசு தமிழ் மக்களை பாகுபாடாக நடத்தும் அணுகுமுறையை கைவிடவேண்டும். சிறீலங்கா அரசினது தற்போதைய தவறான அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதபட்சத்தில், அரசு தனிமைப்படுத்தும் அபாயத்தை எட்டும். கடந்த காலம் போன்று இனவாத தளத்திலிரு…

  5. [size=3][size=4]மட்டக்களப்பை சேர்ந்த 75 சைவ தமிழ் குடும்பங்கள் அம்பாறையில் உள்ள முஸ்லீம் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் முஸ்லீம்களாக மதம் மாற்றப்பட்டுள்ளனர். வறுமை நிலையை பயன்படுத்தி இவர்கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர். அம்பாறையில் மாவட்டத்தில் அரிசி ஆலை மற்றும் ஆடைவிற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வேலை செய்யும் சித்தாண்டி, முறக்கொட்டாஞ்சேனை, செங்கலடி, கிரான், கோரகல்லிமடு ஆகிய கிராமங்களை சேர்ந்தவர்களை அவர்களின் முதலாளிகள் வற்புறுத்தி மதமாற்றம் செய்துள்ளனர் என்றும் இவர்களின் வறுமை நிலையை பயன்படுத்தி இந்த மதமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் பொது அமைப்புக்கள் தெரிவிக்கின்றன.[/size][/size] [size=3][size=4]மதமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு தனியான பள்ளிவாசல் மற்றும் ஒரு கிராமமும் உருவாக…

  6. வட, கிழக்கு சுவீகரிப்பைத் தடுப்பதற்கு த.தே.கூவுக்கே வல்லமையுள்ளது’ ஆர்.ஜெயஸ்ரீராம், எம்.எம்.அஹமட் அனாம் வடக்கு, கிழக்கிலே தமிழ் மக்களின் வாழ்விடங்களை சுவீகரிப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்தான் இருப்பதாக, கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார். பல தமிழ்க் கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைப்பதற்க்காக அரசாங்கத்தால் களமிறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார். …

    • 8 replies
    • 1.5k views
  7. யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகை தந்ததுடன் கைலாசபதி அரங்கத்திற்கு முன்னால் உள்ள நினைவுத்தூபியினையும் சுற்றிப்பார்த்து விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து உடனடியாக பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் குறித்த சீருடையிரிடம் வளாகத்திற்குள் ஏன் நுழைந்தீர்கள் என்று கேட்ட போது மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தாங்கள் வந்ததாக கூறிவிட்டு சென்ற…

    • 8 replies
    • 1.3k views
  8. தான் தற்போது தனது பெற்றோர் தனக்கு வழங்கிய சொத்துக்களை விற்றே வாழ்க்கை நடாத்துவதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குறிப்பிடுகிறார். எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற கூடமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். வாழ்க்கை முழுதும் பதவியில் நிலைகொள்ளுமாறு தான் யாப்பை மாற்றவில்லை எனவும், யாரோ அவ்வாறு செய்திருப்பதனால் தனக்கு மீண்டும் அரசியலில் நுழைவதற்குரிய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்துள்ளார். தான் பதவி விலகும்போது மிகவும் ஏழையாக இருந்ததாகவும் அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார். www.ilankainet.com

    • 8 replies
    • 851 views
  9. சர்வதேச நாணய நிதியத்திடம் எந்த உதவியையும் இலங்கை எதிர்பார்க்க முடியாது - ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் (நா.தனுஜா) இலங்கை அதன் அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீளும் வரையில் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார உதவிச்செயற்திட்டம் இலங்கைக்குக் கிட்டப்போவதில்லை என்று ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டெபோரா ப்ரோட்டிகம் தெரிவித்துள்ளார். 'நாட்டின் அனைத்து விடயங்களும் தொடர்ந்து நெருக்கடி நிலையில் இருக்கும்போது சர்வதேச நிதியத்தினால் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை நடாத்தமுடியாது. எனவே ஸ்திரமான அரசாங்கம் அமைக்கப்பட்டு, நிதியமைச்சரொருவர் நியமிக்கப்படும் வரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு யாரும் இருக்கப்ப…

  10. சிறிலங்கா நாடாளுமன்றத்திலிருந்து நா.உ. கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டாராவினால் வெளியேற்றப்பட்டார். நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் தொடர்பாக கஜேந்திரன் ஆற்றிய உரை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கஜேந்திரனின் உரையை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடுமையாக எதிர்த்திருந்தார். கஜேந்திரனின் உரையானது நாட்டின் 6 ஆவது யாப்பு விதிகளை மீறியுள்ளதாக கூறிய சபாநாயகர், கஜேந்திரனை சபையிலிருந்து வெளியேற்றினார். ஜே.வி.பியின…

    • 8 replies
    • 2.1k views
  11. கார்த்திகை 27, தமிழ்மக்களின் விடுதலைக்காக தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய உன்னதமான மாவீரர்களை நினைவு கூர்ந்து உறுதியெடுக்கும் தேசியநாள். அந்நாளில், ஒவ்வொரு வருடமும் மாவீரர்துயிலும் இல்லங்களுக்குச் சென்று, மடிந்த வீரர்களின் கல்லறைகளில் கண்ணீருடன் நிற்கும் பெற்றோர்களின் கரங்களைப் பற்றி, மாவீரர்களின் கனவு நனைவாகும் என்ற ஆறுதல் வார்த்தைகளைக்கூறி, கனத்த மனங்களுடன் திரும்பும் வேளை, இன்னும் உங்களின் கனவை நனவாக்கவில்லையே என்ற உறுத்தல் மனதைக் குடையும். இன்றைக்கு முப்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களை, உங்களின் கனவை நனவாக்குவோம் என்றே விதைகுழிகளுக்குள் விதைத்துவிட்டோம். ஈழத்தமிழ்மக்களின் சுபீட்சமான எதிர்காலம் என்ற உன்னத இலட்சியத்திற்காக, கொள்கைக்காகப் போராடி மடிந்த இந்த மாவ…

  12. 30 Sep, 2025 | 03:01 PM இனவாதத்தை கிளப்பும் பிசாசுகள் மீண்டெழுந்துள்ளன. அதிகாரத்துக்காக சதி குறித்தும், சூழ்ச்சி பற்றியும் அவை மந்திராலோசனை நடந்துகின்றன. இந்த பிசாசுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்திய நிலையத்தின் மீள் ஆரம்பிப்பு நிகழ்வு மட்டுவிலில் செவ்வாய்க்கிழமை (30) காலை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இள…

      • Haha
      • Thanks
      • Like
    • 8 replies
    • 555 views
  13. தெற்கில் தமிழர் தொகை அதிகரிக்கின்றது : பிரதமர் வடக்கில் தமிழ் மக்களின் சனப்பரம்பல் தொகை குறைவடைந்து வருகின்றது உண்மைதான் எனினும் மேல்மாகாணத்திலும் கண்டி, மாத்தளை ஆகிய பகுதிகளிலும் தமிழ் மக்களின் தொகை அதிகரித்து வருகின்றது என பிரமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். விகிதாசார தேர்தல் முறைமையில் விளைவாக வடக்கில் அதிகமான தமிழர் பிரதிநிதித்துவங்களும் தெற்கில் அதிகமான சிங்கள பிரதிநிதித்துவங்களும் உருவாகின எனவே சுமூனமான அரசியல் சூழல் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவையும் உருவாகி உள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். கொழும்பு பம்பலபிட்டி ஹோட்டலில் யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பிரதம …

    • 8 replies
    • 905 views
  14. 'பாடசாலையில் அரங்கேற்றும் நாடகத்திற்கான ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டும்' வடக்கில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருப்பது அரை இராணுவ ஆட்சி. அனைத்திலும் இராணுவம் தலையிட்டுக் கொண்டிருக்கின்றது. வன்னியில் திருமண வீட்டிற்கு கூட படையினரது அனுமதி பெறப்பட வேண்டியிருக்கின்றது. பாடசாலையில் மாணவர்கள் அரங்கேற்றும் நாடகத்தின் ஸ்கிரிப்ட்டினை அருகிலுள்ள படைமுகாமில் ஒப்படைத்து முன் அனுமதி பெறவேண்டி இருக்கின்றது. இந்நிலையில் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக வந்தால் என்ன டக்ளஸ் தேவானந்தா முதலமைச்சராக வந்தால் என்ன சிலவேளைகளினில் நாமல் ஜனாதிபதியாக வந்தால் என்ன எதுவுமே நடக்கப்போவதில்லை என தெரிவித்தார் ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரசேகர…

  15. கனடாவில் வசிக்கும் யாழ். இளைஞர் ஒருவர் யாழ் - மல்லாகத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவரை திருமணம் செய்து அவரிடமிருந்து 15 லட்சம் ரூபாவை சீதனமாகவும் பெற்றுக்கொண்டு ஒரே மாத காலத்தில் அவரை விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது. யாழ். மல்லாகத்தைச் சேர்ந்த குறித்த யுவதிக்குப் பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த மேற்படி இளைஞனின் சாதகம் பொருந்தியுள்ளது. இளைஞனின் தந்தையும் பொறுப்புமிக்க நிதி நிறுவனம் ஒன்றில் தொழில் பார்த்தவர் என்ற நிலையில் திருமணம் இரு வீட்டாரின் பரிபூரண சம்மதத்துடன் பேசி முடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார்…

  16. உங்கள் பாதுகாப்பை நீங்களே உறுதிப்படுத்துங்கள் - துணைவேந்தர் யாழ்பல்கலைக்கழகத்தில் நேற்று கைலாசபதி கலையரங்கில் நடந்த சுட்டுக்கொல்லப்பட்ட மாணவன் சிவரஞ்சனுக்கான நினைவுக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த துணைவேந்தர் பேராசிரியர் குமாரவடிவேல் நீங்களே உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி கொண்டு இவ் இக்கட்டான சூழ்நிலையிலும் உங்கள் கல்வியை தொடர்ந்து கற்கையை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேற்று கைலாசபதி கலையரங்கில் காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்நினைவுக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பல்கலைக்கழக சமூகத்தினர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/

  17. இறுதி போரில் வெள்ளை கொடியுடன் சரணடைந்த நடேசன் உட்பட ஏனைய போராளிகள் தொடர்பாக சவேந்திர சில்வாவே பொறுப்புக்கூற வேண்டுமென தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியும், ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலளார் நாயகமுமான அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், போர்க்குற்றவாளியாக முன்னிறுத்தப்பட்டுள்ள சவேந்திர சில்வாவிற்கு உயர்பதவி வழங்கியிருப்பது தமிழ் …

    • 8 replies
    • 1.6k views
  18. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பகூடாது - சரிகா திராணகம தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பகூடாது என ரஜனிதிராணகமவின் மகளும் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தின்மனிதவியல் ஆய்வாளருமான சரிகா திராணகம இந்திய செய்தித்தாள் ஓன்றிற்கு கருத்து தெரிவித்துள்ளார். இலங்கையின் அகதிகள் மற்றும் இடம்பெயர்வுகள் குறித்த ஆய்வுகளிற்காக தென்னிந்தியாவிற்கு விஜயம் செய்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவில் உள்ள இலங்கை தமிழ் அகதிகளை திருப்பியனுப்புவதற்கான முயற்சிகள் இடம்பெற்றுவரும் வேளையில் அவ…

    • 8 replies
    • 2.3k views
  19. தமிழீழத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள "உயிரம்புகள்" திரைப்படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி. இத் திரைப்படம் விரைவில் புலம்பெயர் நாடுகளில் திரையிடப்பட உள்ளது.

  20. அரசாங்கம் உறுதியளித்த மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகள் மந்த கதியிலேயே முன்னெடுக்கப்படுவதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க நடவடிக்கைகள் குறித்து ஆராயும் வகையில், அமெரிக்க காங்கிரஸின் ஏற்பாட்டில், வொஷிங்டனில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்விலேயே, சுமந்திரன் இதனைத் தெரிவித்தார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் சொற்ப அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், உண்மையான மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு, அரசாங்கம் வழக்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென சுமந்திரன் இதன்போது தெரிவித்தார். குறிப்பாக காணி விடுவிப்பு, தமிழ் அரசியல் கைதிகளின…

  21. சிறிய நாடுகளை அமெரிக்கா தண்டிக்கிறது : ஜனாபதி மஹிந்த ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியம் கொண்டு வந்துள்ள தடைகளின் தாக்கங்கள் வெளித்தெரிய ஆரம்பித்துள்ளதால் இலங்கை போன்ற சிறிய நாடுகள் பெரும் கவலையடைந்துள்ளன. இலங்கையிலுள்ள ஒரேயொரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமான சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஈரானிய மசகு எண்ணெயை மட்டுமே சுத்திகரிக்க முடியும் என்பதால் இலங்கையானது எண்ணெய்க்கு ஏறத்தாழ ஈரானிலேயே தங்கியுள்ளது. எமக்கு ஒரு மாற்று வழி தேவை. இறுதியில் அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் ஈரானையன்றி எம்மை சிறிய நாடுகளையே பாதிக்கின்றன என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கி ஈரானுக்கு டொலரில் கொடுப்பணவுகளை செய்யக்கூடாது…

    • 8 replies
    • 1.4k views
  22. பலாலி விமான நிலைய அபிவிருத்தி பணிகள் ஜூலை 5இல் ஆரம்பம் கார்வண்ணன்Jun 29, 2019 | 5:53 by in செய்திகள் பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணிகள், வரும் ஜூலை 5ஆம் நாள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்காவின் போக்குவரத்து, சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார். நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “பலாலி விமான நிலையத்தை அனைத்துலக விமான நிலையமாக தரமுயர்த்துவதற்கான பணிகள் ஜூலை 05ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்காக, பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்படாது. பலாலி விமான நிலையம் மற்றும் விமானப்படைக்கு சொந்தமான காணிகளைக் கொண்டே, விமான நிலையத்தின் வி…

    • 8 replies
    • 1.5k views
  23. ஏப்ரல் 09, 2013 at 5:31:18 PM தமிழர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாவிட்டால், இலங்கையில் மீண்டும் உள்நாட்டு போர் வர வாய்ப்புள்ளதாக, இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது. மேலும், மனித உரிமை விவகாரத்தில், இலங்கைக்கு எதிரான அனைத்து வழிமுறைகளும் பரிசீலிக்கப்படும் என்று, இலங்கைக்கான அமெரிக்க தூதர் சைசன் தெரிவித்துள்ளார். மறுவாழ்வு மற்றும் பொறுப்பேற்பு பிரச்னைகளை சரியாக அணுகாத சமூகங்கள் மீண்டும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் அதே போர்ச் சூழலைச் சந்தித்த வரலாறுகள் உள்ளதை அவர் சுட்டிக் காட்டினார். மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சிரமமானது என்றாலும், இலங்கை நிலைத்திருக்க இது அவசியம் என்றார். மனித உரிமை விவகாரத்தில், இலங்கைக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொ…

  24. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வலியுறுத்தி சென்னையில் ம.தி.மு.க. அலுவலகத்தில் சாகும் உண்ணாவிரதம் இருந்து வரும் பெண்களுக்கு கவிஞர் கனிமொழி எம்.பி. நேரில் சென்று கண்ணீர் மல்க ஆறுதல் கூறினார். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிரான பெண்கள் அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான 'தாயகம்' வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் நேற்று 8-வது நாளாக நீடித்தது. தொடர்ந்து நாட்களாக சாப்பிடாமல் இருந்து வருவதால் அவர்கள் மிகவும் சோர்வாக காணப்பட்டார்கள். 11 பேரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. இந்த சூழ்நிலையில். நேற…

  25. இனப் பிரச்சினைக்கான தீர்வு: மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தம் தேவையில்லை – எரிக் சொல்ஹெய்ம் இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு தாம் மத்தியஸ்தம் வகிக்கப் போவதில்லை என ஜனாதிபதியின் சர்தேச காலநிலை ஆலோசகரும் நோர்வையின் முன்னாள் விசேட சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.. இனப்பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தைக்கு நோர்வே மாத்திரமல்லாமல் வேறு எந்தவொரு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தமும் தற்போது தேவை இல்லை என எரிக் ஹொல்ஹெய்ம் குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினைக்கு உள்ளக ரீதியில் தீர்வு காண்பதற்கான சூழ்நிலைகள் தற்போது உருவாகியுள்ளதாகவும் அதன்படி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்ள முடியும் என அவர் …

    • 8 replies
    • 602 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.