Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடமராட்சி கிழக்குப் பிரதேசமான மணற்காட்டு கடற்கரை சந்தைக் கட்டட அபிவிருத்திக்கென ஒருக்கப்பட்ட 3.2மில்லியன் ரூபா நிதி நயினாதீவில் அமைக்கப்பட்டுவரும் 67அடி புத்தர் சிலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. சிலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பிக்குவின் வேண்டுகோளுக்கிணங்கவே குறித்த நிதி நயினாதீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இதே வேளை வடபகுதி கடற்பரப்பில் கடல் அட்டை மற்றும் சங்கு பிடிப்பதனை உடனடியாக தடை செய்து கரை வலை தொழிலை சுதந்திரமாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் யாழ் வந்திருந்த இலங்கை மீன்பிடி அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடபகுதி மீனவருக்கு தற்போதுள்ள மிகப்பெரிய பிரச்சனை…

  2. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு.! கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது. இதேவேளை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப…

  3. ‘தமிழீழ தேசியத் தலைவரின் சிந்தனையில் உருவான ‘சோசலிச தமிழீழம்’ என்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கை விளக்கத்திற்கு மாற்றீடாக தமிழீழ சுதந்திர சாசனம் வரைவது தேவைதானா?’ என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றும் பொழுதே செந்தமிழன் சீமான் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழீழத்தின் அரசியல் வடிவம், பொருளாதாரப் பொறிமுறை, சமூகக் கட்டமைப்பு, மலையக மக்களின் நிலை, சாதி, சமயம், பெண்ணடிமைத்துவம், வர்க்கம் போன்ற விடயங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கையை தெளிவுபடுத்தும் அiனைத்து அம்சங்களையும் 1985ஆம் ஆண்டு வெளியாகிய ‘சோசலிச தமிழீழம்’ கொண்டிருப்பதையும் தனது உரையில் சீம…

    • 8 replies
    • 990 views
  4. வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா -யாழ் நிருபர்- யாழ் தீவகப் பகுதிகளில் சில இடங்களில் பெண்கள் சமூகத்துக்கு விரோதமான நடத்தைகளுக்கு தள்ளப்படுவது மிகவும் வருத்தமளிக்கும் நிலையில், அவ்வாறான பெண்களுக்கு உதவுவதற்கு தயாராக இருப்பதாக, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தீவக பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை சாதாரண பகுதிகளோடு ஒப்பிடுகையில் கஷ்டமானது . இருந்தாலும் சில தீவகப் பகுதிகளில் வாழும் பெண்கள் சமூகத்திற்கு ஒவ்வாத விடயங்களில் ஈடுபடுவது எனது கவனத்திறகு வந்துள்ள நிலையில், இது எமது சமூகத்திற்கு அவமானமாக பார்க்கிறேன். யாழ் மாவட்ட செயலகம் ஊடாக தீவகப் பகுதிகள் தொடர்பான விவரங்களை கேட்டறிந்த நிலையில், அதிலும் பெ…

  5. மாகாணசபையை எவ்வாறு இயக்குவது என்று உதய கம்மன்பிலவிடம், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச. ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகர் உதய கம்மன்பிலவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “வடக்கு மாகாணசபைக்கு ஏன் அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று அமெரிக்காவின் உதவி இராஜாங்கச்செயலர் என்னிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு நான், வடக்கு மாகாணசபைக்கு அதிகாரங்கள் இல்லையென்பது பிரச்சினையல்ல, இருக்கின்ற அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்குத் தெரியவில்லை என்று குறிப்பிட்டேன். மேற்கு மாகாணசபையில், உதய கம்மன் பில எவ்வாறு பணியாற்றுகிறார் என்ற உதாரணத்தையும் சுட…

  6. மட்டக்களப்பு மாவடிவேம்பு பகுதியில் நேற்றிரவு புதன்கிழமை 9.30 மணியளவில் கருணா குழுவினர் இளம் குடும்பத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டத்தில் ஒண்டரை வயது சிறுவன் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு கரவெட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் இராணுவ கட்டுப்பாட்டியில் உள்ள மாவடிவேம்பு 1ல் அமைந்துள்ள வீட்டியில் இருந்த போது வீட்டினுள் புகுந்து இந்த மிருகத்தனமான படுகொலைகளை மேற்கொண்டு உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.ஒண்டரை வயதுடைய குழந்தை நிமலன் நிலுக்ஜன் ஸ்தலத்தில் கொல்லப்பட்டுள்ளார். மற்றும் அவரின் தாய் நிமலன் ஜெயமலர் வயது 19 தந்தை கந்தையா நிமலன் வயது 22 ஆகிய இருவரும் படுகாயங்களுக்குள்ளாகி ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட பின்னர் …

  7. பிரஜாவுரிமையை கைவிடுவதை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார்- தூதரகம் பிரஜாவுரிமையை கைவிடும் சான்றிதழை பெற்றுக்கொண்ட பின்னரே ஒருவர் அமெரிக்க பிரஜாவுரிமையை கைவிட்டவர் என கருதப்படுவார் என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. குறி;ப்பிட்ட சான்றிதழை பெற்றவர் அமெரிக்க பிரஜையாக கருதப்படமாட்டார் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது. பட்டியலில் அவரது பெயர் வெளியாவது வேறு விடயம் எனவும் தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்க தூதரகத்தின் பேச்சாளர் நன்சி வன்கொம் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்க பிரஜாவுரிமைய துறந்தவர்கள் குறித்த பட்டியலில் ஏன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் பெயர் இடம்பெறவில்லை என்ற கரிசனை காணப்படுவது …

    • 8 replies
    • 790 views
  8. கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகள் மீது தாம் தீவிர தாக்குதலை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அதற்காக விடுப்பில் சென்றுள்ள இராணுவத்தினர் அனைவரும் உடனடியாக பணிக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளார். சனிக்கிழமையன்று அநுராதபுரத்தில் கூட்டம் ஒன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களை விடுதலைப்புலிகளிடம் இருந்து நாம் ஏற்கனவே மீட்டுவிட்டதாக அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த, அடுத்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்பதற்கான தாக்குதலை தாம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார். …

    • 8 replies
    • 2k views
  9. The Hindu , a leading Indian newspaper depicted the plight of the Tamil civilians in Wanni in a cartoon published on Wednesday (Jan 28

  10. இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்தியா வருகை - நோக்கம் என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PROF. G L PEIRIS/FACEBOOK இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், இன்று இந்தியாவிற்கு மூன்று நாள் அலுவல்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ள இந்த தருணத்தில், வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியாவிற்கு வருவது, மிக முக்கியமான ஒன்றாக காணப்படுகின்றது. சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகள், இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக வெளி…

  11. குடாநாட்டில் தினமும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதையடுத்து, மக்கள் தமது நகைகளை வங்கிகளில் அடகு வைக்க ஆர்வம் காட்டுவதால் வங்கிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. வங்கிகள் பவுணுக்கு 11 ஆயிரம் ரூபா வழங்கத் தயாராகவுள்ள போதும் மக்கள் மிகச் சிறிய தொகையையே கடனாகக் கேட்பதால் வங்கி அதிகாரிகள் சிக்கலையெதிர் நோக்குகின்றனர். இப்பிரச்சினையைத் தீர்க்குமுகமாக தற்போது பவுணுக்கு 5 ஆயிரம் ரூபாவுக்கு குறைவாக கோர முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வங்கிகளில் நகைகளை அடகு வைத்துப் பணத்தைப் பெறுவோர் அந்தப் பணத்தை சேமிப்புக்கணக்கில் வைப்பிலிட்டு விட்டுச் செல்கின்றனர். குடாநாட்டில் அதிகரித்து வரும் கொள்ளைகளால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர். http://www.thinakkural.c…

  12. இலங்கை கொலைக்களமாக இந்தியாவே காரணம் – வீரமணி சிங்கள ராஜபக்சே ஆட்சிக்கு இந்தியா இதுவரை கொடுத்த உதவிகள் ராணுவ உதவிகளில் தொடங்கி பல்வேறு உதவிகள்தான் இவ்வளவு பெரிய கொலைக்களக் காட்சி சிங்கள அரசால் தங்கு தடையின்றி நடப்பதற்கு மறைமுகமாக உதவியதாகவே அமைந்துவிட்டது என்பது மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுள்ள, 30 கல் தொலைவில் உள்ள அண்டைய நாடான இலங்கையில் தற்போது உள்ள சிங்கள ராஜபக்சே அரசு, பயங்கரவாதத்திற்கு எதிரான தனது போரை நடத்துகிறோம் என்றுகூறி, அந்த மண்ணின் பூர்வீக மைந்தர்களான தமிழர்களின் வாழ்வுரிமையையே பறித்து, அவர்களில் பல லட்சக்கணக்கான அப்பாவி…

  13. தேர்தலில் யாருக்கு வாக்கு போட வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கலாம். ஆனால் யாருக்கு போடக்கூடாது என்பதில் தமிழ் மக்களுக்கு தெளிவு இருக்க வேண்டும். தமிழ்மக்கள் ஜ..தே.க மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி என்பனவற்றுக்கு ஒருபோதும் வாக்கு போடக்கூடாது. மாறி மாறி ஆட்சி புரிந்த இவ்விரு கட்சிகளும் தமிழ் மக்களுக்கு எந்த தீர்வையும் வழங்காது தமிழ் இன அழிப்பை மேற்கொண்டு வந்துள்ளன. யாழ் மாவட்டத்தில் இம்முறை ஜ.தே.க கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கக் கூடாது. ஆம், தமிழ் மக்கள் ஜ.தே.க சார்பில் போட்டியிடும் விஜயகலா மகேஸ்வரனுக்கு வாக்கு போடக்கூடாது. விஜயகலாவுக்கு அளிக்கும் வாக்கு, (1)ஜ.தே.க யாழ் நூலகத்தை எரித்தமையை சரி என்று ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பாகும் (2)ஜ.தே.க 1983ல் ஏற்படுத்திய இ…

    • 8 replies
    • 419 views
  14. சிறீலங்காவைச் சேர்ந்த 93 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (Interpol) பிடியாணையைப் பிறப்பித்துள்ளனர். இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிவிவகாரப் பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், லலித் கொத்தலாவலவின் பாரியார் சிசிலி கொத்தலாவ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனு திலகரத்ன ஆகியோரும் அடங்குவர். பயங்கரவாத நடவடிக்கை, நிதி மோசடி, போலியான ஆவணங்கள் போன்றவை தொடர்பிலே இந்த இலங்கையர்கள் மீது சர்வதேச பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர். http://www.paristamil.com/tamilnews/view-news-MTc2NzIxMTQ0.htm

  15. லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக பிரித்தானியாவில் விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில், விரைவில் கொழும்பு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானியாவின் “தி கார்டியன்“ நாளேடு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் 55ஆவது டிவிசனுக்கும், 59ஆவது டிவிசனுக்கும் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா, பெருமளவு பொதுமக்கள் கொல்லப்படக் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். மருத்துவமனைகள்,. மற்றும் பாதுகாப்பு வலயங்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு தமிழ்மக்களைப் படுகொலை செய்து போர்க்க…

  16. பௌத்தத்தின் நிலை கவலையளிக்கிறது: ‘இரத்த ஆறு ஓடும்’ என்ற தேரர்களின் கருத்து குறித்து சுமந்திரன் by : Litharsan சமாதானத்தின் உச்ச நிலையாக உள்ள பௌத்த சமயத் துறவிகள் ‘இரத்த ஆறு ஓடும்’ என்று கூறியுள்ளதன் மூலம் நாட்டில் பௌத்தம் எந்த நிலைக்குப் போய்விட்டது என்பதை எண்ணி கவலையடைவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில், இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழர்கள் சமஷ்டியை கோரினால் வடக்கு, கிழக்கில் ‘இரத்த ஆறு ஓடும்’ என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், இத்தானந்தே சுகத தேரர், கலாநி…

  17. எமக்காக தன் உயிரை பணயம் வைத்து, இந்திய அரசின் கண்களை திறக்க முயற்சிக்கும் திருமாவின் உண்ணாவிரதப் போரட்டத்திற்கு எமது கோடி நன்றிகள். இவரின் போரட்டமானது உலக தமிழர்களின் உணர்வுகளை மேலும் பற்றி எரிய வைத்துள்ளது. நாமும் இவருடன் சேர்ந்து போராடுவோம். தமிழர்கள் உள்ள எல்லா இடங்களிலும் கவன ஈர்ப்பு போரட்டம் ஓயாமல் ஒலிக்க வேண்டும்.

  18. விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க முடிவு.! விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. விடுதலைப்புலிகள் மற்றும் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆகிய இரண்டு அமைப்புகளையும் தடை பட்டியலில் இருந்து நீக்கவும், அவர்கள் மேல் சுமத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற முத்திரையை விலக்கிக் கொள்ளவும், முதல் தடவையாக ஐரோப்பிய யூனியன் முன் வந்துள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஐரோப்பிய நீதிமன்றத்தின் மூலம் நீதிபதிகளில் ஒருவர் இது தொடர்பான அறிக்கை ஒன்றை ஐரோப்பிய யூனியனுக்கு சமர்பித்தார். இதனை அடுத்து தடை நீக்கம் தொடர்பாக இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு ஏதாவது ஆட்சேபனை உள்ளதா.? என்றும் அப்படி இருப்பின் அதனை எழுத்து மூலம்…

  19. யாழ்ப்பாணத்துக்கு பிரிட்டன் பிரதமர் கேமரூன் வருகை தந்த உற்சாகத்துடன் காமன்வெல்த் மாநாடு நிறைவுறும் அதேநாளில் முதுபெரும் அரசியல் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், கொழும்பில் உள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் ‘தி இந்து’வுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி இது. 1976-ல் வட்டுக்கோட்டை மாநாட்டுத் தீர்மானத்தில் ‘தமிழ் ஈழமே தீர்வு’ என்று பிரகடனம் செய்தீர்கள். இப்போது வடக்கு மாகாணத் தேர்தலில் உங்கள் கூட்டமைப்பு பெருவெற்றி பெற்றபோது, ‘ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு’ என்ற நிலைப்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி என்று வர்ணித்தீர்கள். அப்படியெனில், தனித் தமிழ் ஈழம் என்பதை இலங்கைத் தமிழ் மக்கள் தேர்தலின் மூலம் நிராகரித்துவிட்டார்களா? நாம் 70களுடன் இன்…

  20. எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த றாஜபக்சவின் மகன் நாமல் றாஜபக்சவும் போட்டியிடுவார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது. ஜனாதிபதித் தேர்தல் வெற்றியைக் கொண்டாடும் முகமாக ‘ஜெற்லைனர்’ கப்பலில் நடத்தப்பட்ட விருந்துபசார நிகழ்வில் வைத்தே இந்த முடிவு பகிரங்கப்படுத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது. இதன்படி ஜனாதிபதியின் சகோதரர் பசில் றாஜபக்ச கம்பஹா மாவட்டத்திலும் நாமல் றாஜபக்ச ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடுவார்கள் எனத் தெரிய வருகிறது. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் றாஜபக்சவுடன் மகிந்தவின் மூத்த சகோதரர் சமல் றாஜபக்ச மற்றும் நிருபமா றாஜபக்ச ஆகியோரும் போட்டியிடுவார்கள் எனத் தெரியவருகிறது மூலம் : http://www.eelamweb.com

    • 8 replies
    • 853 views
  21. விடுதலைப்புலிகள் கட்சிக்கு பிரிட்டனில் அங்கீகாரம் விடுதலைப் புலிகளின் அதிகரப்பூர்வ அரசியல் கட்சியான விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி (People’s Front of Liberation Tigers) என்ற கட்சி, பிரிட்டனில் ஒரு அரசியல் கட்சியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அரசியல் கட்சி தொடர்பாகப் பேசிய என் பாலசுப்பிரமணியம், விடுதலைப் புலிகளும், ஈழத் தமிழர்களும் பயங்கரவாதிகள் என்ற கண்ணோட்டம் பிரிட்டனில் மறையும் காலம் உருவாகி இருக்கிறது என்று தெரிவித்தார். விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற கட்சி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால் எதிர்காலத்தில் தேவைப்படலாம் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் அந்தக் கட்சியின் தேவையை சிற…

  22. மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் அலங்கார வளைவு உடைப்பில் ஈடுபட்டவர்களை உடன் கைது செய்யுமாறு மன்னார் மாவட்ட நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த சிவராத்திரி திருவிழாவிற்காக திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்லும் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த அலங்கார வளைவு கத்தோலிக்க மக்களால் உடைத்து அகற்றப்பட்டது உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு இன்று மன்னார் மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. https://newuthayan.com/story/15/அலங்கார-வளைவை-உடைத்தவர்க.html

  23. வடக்கில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி வடக்கின் இன ரீதியிலான விகிதாசாரத்தை மாற்றியமைக்க ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வடக்கில் தமிழ் மக்களின் பெரும்பான்மை காக்கப்படும் என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதில் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நஞ்சுண்டான் குலத்தை புனரமைக்க கோரிய அனுமதியை நான் வழங்கியுள்ளேன். ஏப்ரல் மாதமே அதற்கான அனுமதி வழக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு அபிவிருத்து குறித்த ஜனாதிபதியின் கூட்டத்திலும் நடவ…

    • 8 replies
    • 1.3k views
  24. வயிற்றில் இருக்கும் பிள்ளைக்கும் ரிசாட் பதியுர்தீன் வீடுகளை வழங்கியிருந்தார் என வவுனியா மாவட்ட ஒருங்ணைப்பு குழு தலைவர் தர்மபால செனவிரத்தின தெரிவித்தார். வவுனியா மாவட்ட செயலகத்தில் புதிய அரசின் முதலாவது ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று 17.12 ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் தர்மபால செனவிரத்தின தலைமையில் இடம்பெற்றபோதே அவர் தனது ஆரம்ப உரையில் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலத்தில் அரசாங்கம் இருந்தா இல்லையா என்பது தெரியவில்லை. அவ்வாறான நிலையிலேயே பல செயற்பாடுகள் இடம்பெற்றது. ரிசாட் பதியுர்தீன் முஸ்லீம்கள் மட்டுமே இங்கு இருப்பதாக நினைத்து பல வேலைத்திட்டங்களை செயற்படுத்தியிருந்தார். எனினும் நாம் அவ்வாறு செய்யப்போவதில்லை.…

    • 8 replies
    • 1k views
  25. புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம்! புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலய நிர்வாக சபையினருக்கு எதிராக இன்று பொது மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இன்று முற்பகல் வேலணை பிரதேச செயலகத்திற்கு முன்பாக புங்குடுதீவு மக்களால் இந்த போராடம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள், தற்போதய நிருவாகம் உடன் கலைக்கப்பட்டு புதிய நிருவாகம் அமைக்கப்பட வேண்டும் எனவும் எனத் தெரிவித்திருந்ததோடு, கோவில் ஆன்மீக தலமா வியாபார நிலையமா? எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களால் பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த பிரத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.