ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
வடக்கினில் நிலவிவரும் அண்மைய குழப்பகரமான சூழல் தொடர்பினில் மேற்குலகு கூடிய அக்கறை கொண்டுள்ளது.அவ்வகையினில் இலங்கைக்கான லண்டன் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டயுரிஸ் யாழ்ப்பாணத்திற்கு நேற்று புதன்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்தார். அந்த விஜயத்தின் போது, வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். அந்த சந்திப்பின் பின்னர் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகனை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார். குறிப்பாக இலங்கையின் நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பினில் மக்கள் மனமாற்றம் கொண்டுள்ளனராவென்பதை கண்டறிய அவர் முற்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. http://www.pathivu.com/news/40428/57//d,article_full.aspx
-
- 6 replies
- 736 views
-
-
நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் ;முல்லைதீவில் மனோ சில அதிரடி தீர்மானங்கள் முல்லைதீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இந்து சமய அலுவல்கள் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன் , சிவசக்தி ஆனந்தன்,யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினர் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் மூன்று இராணுவப் படைவீரர்கள் நேற்றிரவு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். ஸ்ரீ முருகன் கோயில் ஒன்றில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைவீரர்களே இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த படைவீரர்களின் பெயர் விபரங்கள் பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் இவர்கள் தனிப்பட்ட பிரச்சிரனை காரணமாக தம்மை தானே சுட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது http://www.virakesaridaily.lk/2012/03/
-
- 6 replies
- 1.1k views
-
-
வடமராட்சி கடற்பரப்பில் கடற்புலிகள் தாக்குதல்: டோறா பீரங்கிப் படகு, கூகர் படகு மூழ்கடிப்பு; நீருந்து விசைப்படகு சேதம்; 20 படையினர் பலி [சனிக்கிழமை, 01 நவம்பர் 2008, 09:29 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அணியின் தாக்குதலில் சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகும் கூகர் படகும் தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளன. நீருந்து விசைப்படகு கடுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளது. மேலும் படகுகள் சேதமாகியுள்ளன. 20 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற…
-
- 6 replies
- 1.5k views
-
-
முல்லைத்தீவில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கிக் கப்பல் ஐரோப்பிய நிறுவனம் ஒன்றால் தயாரிக்கப்பட்டது என போக்குவரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். “மீட்கப்பட்ட அந்த நீர்மூழ்கிக் கப்பலின் சில பாகங்கள் சுவிஸ்லாந்தின் பேஸ்லி நகரிலுள்ள ஹொஸ்லர் எனும் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை” என்றார் அமைச்சர். 2002ஆம் ஆண்டு பேச்சுவார்த்தை காலப் பகுதியில் விடுதலைப் புலகிளின் உயர்மட்டக் குழுவினர் வெளிநாடுகளுக்குச் சென்றிருந்த போதே இவற்றுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார். “விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் இந்த நகரில் மூன்று நாட்கள் தங்கியிருந்துள்ளார்” என அமைச்சர் கூறினார். இதேவேளை, நோர்வ…
-
- 6 replies
- 2.5k views
-
-
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்: ரணகளமாய் மாறியுள்ள வன்னிப்பகுதியிலிருந்து வவுனியாவை நோக்கி மக்கள் சிறிது சிறிதாக இடம்பெயர ஆரம்பித்து விட்டனர். கிளஸ்ரர் குண்டுகளிலிருந்து வான் தாக்குதல்கள் எறிகணைத் தாக்குதல்கள் என பலவிதமான கொடூரத் தாக்குதல்களில் இன்றுடன் 800க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டு 3000 வரையான மக்கள் காயமடைந்து யுத்தத்தின் அகோரத்தை தாங்க முடியாத மக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி நகருகின்றார்கள். சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனங்கள் ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச நாடுகள் என பல தரப்பினரும் மக்களை மனிதக் கேடயங்களாகப் பாவிக்காது புலிகள் அவர்களை விடுவிக்க வேண்டும் எனக் கோருகின்றனர். இருப்பினும் விடுத…
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கை தமிழர்களை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசி அருகே உள்ள காமராஜர்புரம் காலனியை சேர்ந்தவர் மாரிமுத்து (60). என்ற காங்கிரஸ் தொண்டர் தீக்குளித்து மரணம் அடைந்தார். மாரிமுத்து இலங்கை தமிழருக்காக தீக்குளிப்பது தொடர்பாக எழுதிய உருக்கமான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=5489
-
- 6 replies
- 1.2k views
-
-
ராஜபக்ச அரசாங்கம் அரசமைப்பின் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த செய்வதன் மூலம் தசாப்தகால இலங்கை தமிழர் விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த இந்தியா திட்டமிடுகின்றது- இந்திய ஊடகம் இந்து சமுத்திரத்தில் சீனா ஆழமாக கால்பதிப்பதால் இலங்கையுடனான உறவுகள் குறித்து இந்தியா மறுபரிசீலனை வருவதாக பல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என தி பிரின்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து தி பிரின்ட் மேலும் தெரிவித்துள்ளதாவது. கடந்த மாதம் இலங்கை சர்ச்சைக்குரிய 1.4 பில்லியன் திட்டமான கொழும்பு துறைமுகநகர திட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இதற்கு சீனா நிதியுதவி வழங்குகின்றது. ராஜபக்ச அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் கொழும்புடனான உறவுகளிற்கு புத்த…
-
- 6 replies
- 541 views
-
-
யாழ்ப்பாணத்தை அழகுபடுத்த ரூ. 120 மில்லியன் ஒதுக்கீடு நாட்டில் 100 நகரங்களை பல் பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் 6 பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக் கருவுக்கு அமைய பெரு நகர அபிவிருத்தி அமைச்சு குறித்த செயற்திட்டத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம் நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் போன்ற பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. நாட்டில் நூறு நகரங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்…
-
- 6 replies
- 878 views
-
-
வடமாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியிலேயே அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு விக்னேஸ்வரன் கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார். கொழும்புக்கு திரும்பிகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனின் வாகன சாரதி வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையத்தில் வாகனத்தை எரிபொருள் ந…
-
- 6 replies
- 868 views
-
-
இரு கனேடிய தமிழர்களுக்கு கடும் சிறைத்தண்டனை ஆயுதக் கொள்வனவு நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு அமெரிக்க நீதிமன்றம் கடும் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நியூயோர்க் மாநிலத்தின் கிழக்கு மாவட்ட நீதவான் ரெய்மன்ட் ஜே. டியாரியினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான சதாஜன் சராசந்திரன் மற்றும் 50 வயதான நடராசா யோகராஜா ஆகியோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, சராசந்திரனுக்கு 26 ஆண்டுகால சிறைத்தண்டனையும், யோகராஜாவிற்கு 14 ஆண்டுகால சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கனரக ஆயுதங்களை விடுதலைப் புலிகளின் சார்பில் கொள்வனவு முயற்சி மேற்கொண்ட குற்றத்திற்காக இந்தத் தண்டனை விதிக்கப்பட்ட…
-
- 6 replies
- 1.5k views
-
-
கடந்த வருடம் 05.09.2013 அன்று தமிழீழ விடுதலையை உயிரினும் மேலாக நேசித்து தமிழீழத் தேசியத் தலைவர் மீது தீராத பற்றுக் கொண்டு தமிழீழ விடிவிற்காய் போராடிய இரத்தினசிங்கம் செந்தில்குமரன் என்ற தமிழ்த் தேசிய உணர்வாளர் தமிழீழ விடுதலை என்ற உயர்ந்த இலட்சியத்திற்காக ஜெனிவாவில் தீயினில் தன்னையே ஆகுதியாக்கினார் .http://youtu.be/2cVbbTDjIkw சுவிஸ் சிசன் நகரில் வசித்து வந்த 35 அகவையுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையாரான இரத்தினசிங்கம் செந்தில்குமரன் சுவிஸ் நாட்டுக்கு வந்திருந்த காலந்தொட்டு இவர் எந்தவொரு ஒரு தமிழர்கள் நடத்திய போராட்டத்தையும் தவறவிட்டதில்லை. அவரிடம் எந்த நேரத்திலும் தலைவரின் படமும், தேசியக் கொடியும் எப்பொழும் இருக்கும். அவர் தீக்குளிப்பதற்கு முன்னதாக தந்தையுடன் கைபேசியில் …
-
- 6 replies
- 460 views
-
-
கீற்று இணையத்தளத்தில் மினர்வாவால் எழுதப்பட்ட கட்டுரை புதிய உரையாடல்களை முன்னெடுப்பதாக அமைந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. விடுதலைப் புலிகளை பாசிசவாதிகள், சாதி வெறியர்கள், பிள்ளை பிடிகாரர்கள், பயங்கரவாதிகள் என்றெல்லாம் சித்தரிப்பதில் புலியெதிர்ப்பாளர்கள் வெகுவாக முயன்று அதில் ஓரளவு வெற்றியுங் கண்டிருக்கும் இக்காலகட்டத்தில் இத்தகைய உரையாடல்கள் அவசியமாகின்றன. புலிகள் தங்கள் மீதான விமர்சனங்களை எதேச்சாதிகாரப் போக்குடன் எதிர்கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து புலியெதிர்ப்புத் திருவிழாவை கோலாகலமாகக் கொண்டாடி வந்த புலம்பெயர்ந்த, பெயராத “அறிவுஜீவிகள்” புலிகளின் வீழ்ச்சியுடன் அதை நிறுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், ”ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்கமாட்டா”என்பதற்க…
-
- 6 replies
- 2.9k views
-
-
ரணில் சொல்வது போல இலங்கை இன பிரச்னைக்கு 75வது சுதந்திர தினத்துக்கு முன்பு தீர்வு கிடைக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD SRI LANKA இலங்கையின் 75வது சுதந்திர தினத்துக்கு முன்னர், இனப் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டிற்கு வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக இனப்பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக பொது இணக்கப்பாட்டை எட்டும் நோக்கில் ஜனாதிபதி சர்வ கட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.…
-
- 6 replies
- 531 views
- 1 follower
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவிசெனிவிரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளில் தான் மாத்திரம் கொலை முயற்சியை எதிர்கொண்டவர் என்ற போதிலும் ஏன் ஏனைய ஜனாதிபதிகளிற்கு 100 முதல் 240 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை வழங்கியுள்ளீர்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். விடுதலைப் புலிகளால் தான் எதிர்கொண்ட அச்சுறுத்தல்களை சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை தான் எதிர்கொள்வதா…
-
-
- 6 replies
- 335 views
- 1 follower
-
-
வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்! வட மாகாணத்தில் 120 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தற்போது கடமையாற்றும் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலிருந்து மாகாணத்துக்குள் வேறு பிரிவுகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணத்திலிருந்து தென் மாகாணத்துக்கு இடமாற்றம் பெற்றுச் செல்லும் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனநாயக்கவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், வாள்வெட்டு வன்முறை உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருடன் தமிழ் பொலிஸ் …
-
- 6 replies
- 1.2k views
-
-
அமெரிக்க வர்த்தகக் குழு இலங்கைக்கு விஜயம் வியாழக்கிழமை, 07 பெப்ரவரி 2013 10:11 பல்துறை அமெரிக்க வர்த்தகக் குழுவொன்று இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இம்மாதம் 8ஆம் அல்லது 9ஆம் திகதிகளில் கொழும்புக்கு வருகின்றது. இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் முதன்முதலில் இக்குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்றனர். கல்வித்துறை, வடிவமைப்பு ஆலோசனைச் சேவைகள், மற்றும் பொறியியல், உணவு தொழில்கள், சுகாதாரம், விமானசேவை ஆதரவு மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆகிய கம்பனிகளை உள்ளடக்கிய 3சி வர்த்தகக் குழுவே இலங்கைக்கு வருகின்றது. இக்குழுவினர் முன்னர் இந்தியாவின் சென்னை மற்றும் கொச்சிக்கான விஜயத்தை மேற்கொண்டனர். அமெரிக்க தூதரகம் இருதரப்பு வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கு முயல…
-
- 6 replies
- 483 views
-
-
போர் நிறுத்தம் குறித்து புலிகளின் மெளனம் வியப்பளிக்கிறது: அன்பழகன்வெள்ளிக்கிழமை, ஜனவரி 30, 2009, 17:13 [iST] சென்னை: இலங்கை அரசு 48 மணி நேர போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக விடுதலை புலிகள் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது வியப்பளிப்பதாக தமிழக நிதியமைச்சரும் திமுக பொதுச்செயலாளருமான அன்பழகன் தெரிவித்துள்ளார். இன்று சட்டசபையில் நடந்த ஆளுநர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசுகையில், இலங்கை அரசு 48 மணி நேரம் போர் நிறுத்தம் அறிவித்துள்ளது. ஆனால், விடுதலை புலிகள் இது குறித்து இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்தியாவின் தலையீட்டின் பேரில் அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்ற கிடைத்த வாய்ப்புக்கு அவர்கள் ஏன…
-
- 6 replies
- 1.6k views
-
-
லண்டன் கூட்டத்தில் உரையாற்றும் முதல்வர் (நமது நிருபர்) லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நாளை ஞாயிற்றுக்கிழமை ரெய்னர்ஸ் லேனில் ஏற்பாடாகி உள்ள மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். 'இரட்டை நகர்' உடன்படிக்கை கடந்த செய்வாய்க்கிழமை கைச்சாத்தான பின்னர் பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபட்டுவரும் முதலமைச்சர் தாயகம் திரும்புவதற்கு முன்னர் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆர்வமாக இருப்பதால் இந்த கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டம் 440 Alexandra Ave, Harrow HA2 9TL எ…
-
- 6 replies
- 783 views
-
-
யுத்தம் நிறைவடைந்த பின்னர் வடக்கின் வசந்தம் ஆரம்பிக்கப்பட்டு தமிழ்‐முஸ்லீம் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படும் போது, உரிய முறையில் தகவல்களை ஆராய்ந்து, நியாயத்தை கருதி யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களில் தாமும் குடியேற சந்தர்ப்பத்தை வழங்குமாறு யாழ்ப்பாணத்தில் பல காலங்களுக்கு முன்னர் வாழ்ந்த சிங்கள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் இது குறித்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளனர். வடக்கில் வசித்த சிங்கள மக்கள் அக்கரைப்பற்றில் தம்மைச் சந்தித்த போது, இதனை குறிப்பிட்டதாக சிங்கள நாளிதழ் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளிடம் இருந்து முழுநாட்டை மீட்க இன்னும் சிறிது காலமும் சிறிய நிலப்பரப்புமே எஞ்சியுள்ளது. இதன் பின்னர் வட…
-
- 6 replies
- 1.4k views
-
-
The American Association for the Advancement of Science (AAAS) Tuesday issued a preliminary analysis of commercial high-resolution satellite imagery of the conflict zone in northern Sri Lanka that shows craters from the use of heavy weapons and the removal of thousands of likely structures used by internally displaced persons (IDPs) between May 6 and May 10. May 6 imagery analysis reported on possible evidence of shelling, in the form of likely shell impact craters and adjacent destroyed structures. These possible shell impact craters are found throughout the conflict zone, in close proximity to and intermingling with IDP shelters and other structures. The report po…
-
- 6 replies
- 3.1k views
-
-
சிறிலங்காவுடன் தனது அணு தொழில்நுட்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு இந்தியா முன்வந்திருப்பதாக சிறிலங்காவின் விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் திச விதாரன தெரிவித்திருக்கின்றார். தோரியத்தைப் பிரதான மூலப் பொருளாகப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வதற்கே இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பான சாத்திய ஆய்வு ஒன்றை மேற்கொள்வதற்கு வருமாறு இந்திய அணுசக்தி விஞ்ஞானிகளுக்குத் தான் அழைப்பு விடுத்திருப்பதாகவும் தெரிவித்த அவர், சிறிலங்காவின் தென் கரையோரப் பகுதிகளில் தாராளமாகக் காணப்படும் தோரியத்தைப் பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாகவே இந்தியத் தரப்பினருடன் ஆராய இருப்பதாகவும் தெரிவித்தார். இது தொடர்ப…
-
- 6 replies
- 834 views
-
-
99.38 விகிதமான அவுஸ்திரெலியாத் தமிழர்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் மொத்த வாக்குகள் - 8272 நிராகரிக்கப்பட்டவை - 67 நிராகரிக்கப்படாதவை - 8205 ஆம் என வாக்களித்தோர் - 8154 (99.38%) இல்லை என வாக்களித்தோர் - 51 (0.62%)
-
- 6 replies
- 950 views
-
-
ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, சிறிலங்கா அரசாங்கத்தை வடகொரியாவுடன் ஒப்பிட்டுள்ளதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் தற்போதைய கூட்டத்தொடரில், தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் யுன் பியுங் சே வை சந்தித்த போதே, நவநீதம்பிள்ளை இவ்வாறு ஒப்பிட்டுக் கூறியுள்ளார். தென்கொரிய குழுவுடனான சந்திப்பின் போது, நவநீதம்பிள்ளை சிறிலங்காவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறின. இந்த உயர்நிலைக் கலந்தாய்வின் போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசும் கூட ஜெனிவாவில் தங்கியிருந்தார். வரும் வியாழக்கிழமை சிறிலங்காவுக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் விவாதத்துக்கு எடு…
-
- 6 replies
- 547 views
-
-
இலங்கையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். '100 நாட்களில் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும்': மைத்திரிபால முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரணதுங்க உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் சிறிசேன இந்த முடிவை அறிவித்தார். அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, எம்.கே.டி.எஸ்.குணவர்தன, துமிந்த திசாநாயக்க, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜிவ விஜேசிங்க, வசந்த சேனாநாயக்க ஆகியோரும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டனர். 'குடும்ப ஆ…
-
- 6 replies
- 1k views
-