ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
நான் நிதியை திருப்பி அனுப்பினேனா? மஹிந்தவின் கருத்தால் பொங்கி எழுந்த விக்கி! by : Jeyachandran Vithushan மத்திய அரசாங்கத்தின் கையாட்களாக இருந்தவர்களே வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை திருப்பி அனுப்பியிருப்பார்கள் என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை விக்னேஸ்வரன் சரியாகப் பயன்படுத்தவில்லை என்றும் திருப்பி அனுப்பிவிட்டார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் தெரிவித்த கருத்து தொடர்பாக வாரம் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவில் போய் எங்களைக்…
-
- 6 replies
- 1.7k views
-
-
மன்னாரில் இருந்து 3 இளைஞர்கள் இன்று அகதிகளாக இராமேஸ்வரம் சென்றுள்ளார்கள். ஈழப்போர் முடிந்து 4 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில் ஈழத்திலிருந்து அகதிகள் வரத் தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா படையிற்கும் இடையே நடந்த மோதலால் அப்பாவி தமிழர்கள் லட்சக்கணக்கானோர் படையினரால் கொல்லப்பட்டனர். இதனால் உயிர் பிழைக்க வேண்டி 2009ம் ஆண்டு வரை ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக இராமேஸ்வரம் வந்தனர். இறுதி போர் முடிவுற்ற நிலையில் அகதிகள் வருகை முற்றிலும் நின்று போனது. இந்தநிலையில் சாவகச்சேரி முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் 3 பேர் இன்று அதிகாலை தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்திறங்கினர். புதுகுடியிருப்பு வல்லிபுனம் பகுதியை சேர்ந்த பி…
-
- 6 replies
- 792 views
-
-
மனநலம் பாதிப்படைந்ததாகக் கூறப்படும் தாயொருவரால் அவரது மூன்று பெண் பிள்ளைகளும் கிணற்றில் வீசப்பட்டு கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவமொன்று வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தின் போது குழந்தைகளை கிணற்றில் வீசிய மேற்படி தாய், பின்னர் தானும் கிணற்றில் குதித்துள்ள போதும் அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாண்டிக்குளம் பாடசாலை வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அழுகுரல் கேட்பதை அடுத்து அயலவர்கள் இன்று காலை ஓடிச்சென்று அவ்வீட்டின் கிணற்றை பார்த்தபோது தாயொருவர் மூன்று பிள்ளைகளை கிணற்றில் போட்டுவிட்டு தானும் கிணற்றில் வீழ்ந்து கிடந்ததை அவதானித்துள்ளனர். இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக தாயாரை மீட்டெடுத்துள்ளனர். எனினும் வி. லதுர…
-
- 6 replies
- 796 views
-
-
செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் August 14, 2021 செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு படுகொலையானவர்களுக்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். வல்வெட்டித்துறையில் உள்ள தனது அலுவலகத்தின் முன்பாக இன்றைய தினம் காலை சுடரேற்றி , மலர் தூபி அஞ்சலி செலுத்தினார். குறித்த அஞ்சலிக்கு காவல்துறையினா் ர், இராணுவத்தினர் தடைகளை ஏற்படுத்திய போதிலும் , அவற்றினையும் மீறி படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியிலிருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமான படையினர் மேற்க…
-
- 6 replies
- 781 views
-
-
மயிலிட்டி மக்களுக்கு வாழ்வாதார உதவி -ரொமேஸ் மதுசங்க, செல்வநாயகம் கபிலன் 27 வருடங்களுக்குப் பின்னர், அண்மையில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி பகுதி மீனவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தும் முகமாக, புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சினால், 100 மீனவ குடும்பங்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. அத்துடன், அமைச்சினால் இரண்டு படகுகள், இரண்டு வெளியிணைப்பு இயந்திரங்கள் என்பனவும் மயிலிட்டி கடற்றொழில் சமாசததுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், யாழ். மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன், தெல்லிப்பளை பிரதேச செயலாளர்…
-
- 6 replies
- 325 views
-
-
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு அழைப்பு By VISHNU 02 FEB, 2023 | 04:53 PM வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் பெப்ரவரி 4ம் திகதி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை (02) யாழ்ப்பாணப் பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ஊடக சந்திப்பின் போது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரம் வருமாறு: யாழ் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினராகிய நாம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுடன் ஒன்றிணைந்து சிறிலங்காவின் ச…
-
- 6 replies
- 803 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மிருசுவில், கரம்பகம் பகுதியில் தந்தையை வெட்டி படுகொலை செய்த குற்றத்தில் இரு மகன்களும், மேலும் ஒருவரும் என மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமது தந்தையை தாமே கொலை செய்ததாக பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்த பாடசாலை மாணவர்களான கொலையுண்டவரின் இரு மகன்கள் மற்றும் அவர்கள் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த அவர்களது நண்பர் ஆகிய மூவருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கரம்பகத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிவசோதி சிவகுமார் (வயது 43) என்பவர் இன்று (31) காலை கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு வருடங்களாக குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த இவர், தனது தோட்டத்தில் குடில் ஒன்றின…
-
- 6 replies
- 962 views
-
-
நாகர்கோவிலில் சிறிலங்காப் படைமுன்னகர்வு முயற்சி முறியடிப்பு யினரின் ஜசனிக்கிழமைஇ 17 மார்ச் 2007இ 16:19 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னரண்களை நோக்கி இன்று சனிக்கிழமை அதிகாலை 5.50 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்பின் போது படையினர் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கிகள் - 2இ ரவைக்கூடுகள் - 4இ ரவைகள் 100 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தாக்…
-
- 6 replies
- 1.8k views
-
-
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரன் பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டவை. சட்டத்துறையினை சார்ந்தவர் என்ற வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை எவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்? பாராளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வர்த்தமாணி அறிவிப்பினை வெளியிட்டிருப்பது வெளிப்படையாகவே நாட்டின் அரசியல் அமைப்பிற்கு முரணான நடவடிக்கையாகும். பாராளுமன்ற கலைப்பானது எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஜனாதிபதியின் சட்டத்தரப்புகள் பாராளுமன்றத்தை கூட்டுவது, கலைப்பது மற்றும் ஒத்திவைப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்தை கூறும் உறுப்புரை 33 இரண்டு சியை க…
-
- 6 replies
- 3k views
-
-
இலங்கைக்கு எதிரான யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அமெரிக்க கிளை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சுமார் 200 மில்லியன் டாலர்களை வழங்கியிருந்தது என்று தெரிவித்துள்ள ஐ. நாவின் இலங்கைக்கான பிரதி வதிவிட நிரந்தரப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா, இதுபோன்று மேலும் பல இரகசியங்களைத் தாம் அம்பலப்படுத்தப் போவதாகவும் சூளுரைத்துள்ளார். . மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா தெரிவித்தார் எனக் கூறி இன்றைய திவய்ன பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் கூறுப்பட்டுள்ளதாவது, . அமெரிக்காவில் தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கின் பிரதான சூத்திரதாரியாகச் செயற்படுபவர் ருத்திரகுமாரனே. பிரபாகரனின் சட்ட ஆலோசகராக விளங்கிய ருத்திரகுமாரனும் புனர்வாழ்வ…
-
- 6 replies
- 1.3k views
-
-
எங்கள் தமிழ் அரசியல் வரலாற்றை ஒரு கணம் எட்டிப் பார்க்கின்றேன். அடங்காத் தமிழன் சுந்தரலிங்கத்தின் ஜனநாயக வீரம் புரிகிறது. இரும்பு மனிதன் நாகநாதனின் வலிமை தெரிகிறது. கோப்பாய்க் கோமகன் வன்னியசிங்கத்தின் நேர்மை தெரிகிறது. காவலூர்க் காவலன் பண்டிதர் கா.பொ. இரத்தினம் அவர்களின் அறிவுடைமை பளிச் சிடுகிறது. இவற்றுக்கு மேலாக, ஈழத் தமிழினத்தின் தந்தையாக செல்வநாயகமும் தளபதியாக அமிர்தலிங்கமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் நாகரிகம் தமிழினத்தின் உன்னதத்தை உயர்வு படுத்தி நிற்கிறது. இன்று அந்த நிலைமைகள் ஏதும் உண்டா என்று கேட்டால் இல்லவே இல்லை. தமிழ் அரசியல் தரப்புகளைப் பார்த்து நக்கலும் நையாண்டியும் செய்கின்ற அளவிலேயே முகநூல் பதிவுகள் உள்ளன. இந்த உண்மைகளைக்கூட எங்கள் தமிழ…
-
- 6 replies
- 1.4k views
-
-
வடக்கில் காணி விடுவிப்பு: பொன்சேகா எச்சரிக்கை June 28, 2025 2:35 pm “சிங்கப்பூர் மற்றும் சுவிட்சர்லாந்தில் இருக்கும் நிலை இங்கில்லை. எனவே, வடக்கில் படை முகாம் அகற்றல் மற்றும் காணி விடுவிப்பின்போது பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படாத வகையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அரச தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின்போது, வடக்கு, கிழக்கு காணி விடுவிப்பு சம்பந்தமாக எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் மேலும் கூறியவை வருமாறு ‘வடக்கு, கிழக்கில் புலிகளின் மனோநிலையில் வாழும் சிலரும் இருக்கவே செய்கின்றனர். புலிகளின் நிகழ்ச்சி நிரல் குறித்து கனவு காணும் தரப்பினரும் உள்ளனர். அனைத்து மக்களும் அல்லர். ஒரு 7 ஆயிரம் முத…
-
-
- 6 replies
- 428 views
-
-
இலங்கை முழுமையான அதிகாரப் பகிர்வுக்குட்பட்ட சமஸ்டி நாடாக உருவாக்கப்பட வேண்டும் - சிறீதரன் (சுகு): ஒலிச் செய்திகள் http://www.globaltamilnews.net/tamil_news....=2489&cat=1 இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்கள் அமைதியாக வாழ்வதற்கு ஏற்ப ஒரு தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்பதில் பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர முன்னணி உறுதியாக உள்ளது. அந்த வகையில் இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று இல்லாமல் முழுமையான அதிகாரப் பகிர்வுடன் கூடிய ஒரு சமஸ்டி முறையிலான நாடாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையைக் கொண்டிருப்பதாக அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் சுகு எனப்படும் சிறீதரன் ற்கு வழங்கிய செவ்வியில் தெரிவிக்கிறார். அதன் ஒலி வடிவத்தை நீங்கள் இங்கு கேட்கலாம்.
-
- 6 replies
- 1.4k views
-
-
தனி ஈழம் வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார் ஆனால் தற்போது தனி ஈழம் கேட்க வில்லை. தமிழர் தாக்கப்படுவது தொடர்ந்தால் தனி ஈழம் கோரிக்கையை மீண்டும் எழுப்புவோம் என திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக மக்களவையில் விவாதம் தொடங்கியது. இலங்கை தமிழர் விவாதம் மற்றும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்து மக்களவையில் விவாதிக்க பட வேண்டும் திமுக, அதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் வலியுறுத்தியது. இலங்கை விவகாரம் பற்றி அவை விதி 193ன் கீழ் விவாதிக்க மக்களவைத் தலைவர் மீராகுமார்…
-
- 6 replies
- 952 views
-
-
5ம் தரப் புலமைப் பரீட்சையில் இரு மாணவர்களுக்கு அதிக புள்ளி! 507 மாணவர்கள் பரீட்சையில் சித்தி! தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளதாக சிறீலங்கா பரீட்டைத் திணைக்களம் அறிவித்துள்ளது. தடுப்பு முகாமில் இருந்தவாறு 5ம் தரப் புலமைப் பரீட்சை எடுத்த மாணவர்களில் 507 பேர் சித்தியடைந்துள்ளனர். இதில் இரு மாணவர்கள் 175 புள்ளிகளைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை வகிக்கின்றனர். கிளிநொச்சி மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த பத்மசிறி கீர்த்திகன், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையைச் சேர்ந்த செலசிறின் சதுர்ஷயா ஆகிய இரு மாணவர்களுமே அதிக புள்ளியைப் பெற்று மாவட்ட ரீதியில் முதல் நிலை அடைந்த…
-
- 6 replies
- 807 views
-
-
வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும் தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான அதிகளவு பணிகளை செய்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முல்லைத்தீவு, முள்ளியவளை நீராவிப்பிட்டியில் மீள்குடியேற்ற விசேட செயலணி ஊடாக வீடமைப்புக்கான நிதி உதவிகள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் கலந்து கொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் யாசீன் ஜவாகிர், மீள் குடியேற்ற செயலணியின் பணிப்பாளர் யாசீன், மீள் குடியேற்ற செயலணியின் மாவட்ட இணைப்பாளர் றிபாய் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் கூறியதாவ…
-
- 6 replies
- 788 views
-
-
அவுஸ்ரேலியாவுக்கு கடந்த வருடம் 254 இலங்கையரை சட்டவிரோதமாக அழைத்து செல்லமுயன்ற கப்டன் பிராம் என்று அறியப்படும் ஏபிரகாம் லவுகேன பெஸ்லி என்பவருக்கு இந்தோனேசிய நீதிமன்றம் 25 மில்லியன் ரூபியாவை தண்டப்பணமாக அபராதம் விதித்துள்ளது கப்பல் பயண சட்டத்தை மீறியதாக 18 மாதங்களை நன்நடத்தை காலமாகவும் அறிவித்துள்ளது. ஜாயா லெஸ்ரறி என்ற கப்பலுக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் பணியாளர்களை நியமித்த குற்றச்சாட்டும் இவர் மேல் சுமத்தப்பட்டுள்ளது; இந்தோனேசியத் தீவான பாட்டமிலிருந்து 254 தமிழர்களை அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு கப்பலில் கொண்டு செல்ல முற்பட்டபோது இந்தோனேசிய கடற்படையால் கப்பல் பிடிபட்டது;இவர் கடந்த 10 ஆண்டுகளில் ஏறத்தாள 1500 க்குமேற்பட்ட புகலிடம் கோருவோரை அவுஸ்ரேலியாவுக்கு …
-
- 6 replies
- 853 views
-
-
புத்தூரில், கோல் கம்பத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டுள்ளார் என வைத்திய அறிக்கை கூறியுள்ளது. இதே வேளை தனது மகனுக்கு பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரால் அச்சுறுத்தல் இருந்தது என்று பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார் இறந்த இளைஞரின் தந்தை. . எனது மகன் சற்குணநாதன் காதலித்த முஸ்லிம் பெண்ணின் உறவினர் ஒருவர் சி.ஐ.டியில் இருக்கிறார். எனது மகனுக்கும் எனக்கும் தொலைபேசி மூலம் அவர் கொலை அச்சுறுத்தலும் விடுத்திருந்தார்.சம்பவம் நடப்பதற்கு பத்து நாள்களுக்கு முன்னர் யாழ். நகரில் உள்ள ராணுவ முகாம் ஒன்றுக்கு தன்னை அழைத்துச் சென்று விசாரித்தனர் என்று எனது மகன் என்னிடம் தெரிவித்திருந்தார்.அன்று முதல் சில நாள்கள் அவர் மனச் சோர்வுடனேயே இரு…
-
- 6 replies
- 778 views
-
-
யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போது, இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்; பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய மீனவர்களுடன் படகொன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டுள்ளது. இந்திய மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர் முயற்சித்ததாகவும் இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு மீனவர்களின் படகு தப்பிச்செல்ல முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. இதனையடுத்து, ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையின…
-
-
- 6 replies
- 336 views
- 1 follower
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரட்டை வேடமிடுவதாக அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் சம்பந்தன் மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் உரையாற்றும் போது சம்பந்தன், சுயாட்சி குறித்து பேசுவதாகவும், பின்னர் ஐக்கிய இலங்கைக்குள்ளான தீர்வுத் திட்டம் பற்றி பேசுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ள கெஹலிய, காலையில் ஒரு கருத்தும் மாலையில் ஒரு கருத்தும் வெளியிடும் சம்பந்தனுக்கு பதிலளிக்க அரசாங்கம் தயாராக இல்லை என தெரிவித்துள்ளார். எவ்வாறான தீர்வுத் திட்ட யோசனை முன்வைக்கப்பட்டாலும் அது நாடாளுமன்றத்தெரிவுக்குழுவினால் அங்கீகரிக்கப்பட வேண்டியது அவசியமானது என …
-
- 6 replies
- 1.1k views
-
-
கறுப்பு ஜூலை... காய்ந்துபோன ரத்தம்! - ஜூனியர் விகடன் இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்து விட்டன. இதற்கிடையே பூமிப்பந்தில் எவ்வளவோ மாற்றங்கள். ஆட்சிகளில் மாற்றம், நாடுகளின் எல்லைகளில் மாற்றம், உணவில், உடையில், பண்பாட்டில் மாற்றம்... ஆனால், மாறாமல் தொடர்கிறது அந்தக் கதறலும், கண்ணீரும். இலங்கை வீதிகளை நிறைத்த அந்த ஓலக் குரல்கள், நம்முடைய காற்றில் கலந்து பேரோசையாய்ப் பெருகுகிறது. இருபத்தைந்து ஆண்டுகள்... கறுப்பு ஜூலை என வர்ணிக்கப்படும் அந்த இனப்படுகொலை நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்! வாகனங்களில் சென்ற தமிழர்களை வழிமறித்து உயிரோடு எரித்துக் கொன்று நடனமாடிய சம்பவங்கள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள்; வாக்காளர் பட்டியலை வைத்துத் தமிழர்களை அடை யாளம் கண்டு வீடுகளிலிருந்து இழுத்…
-
- 6 replies
- 1.5k views
-
-
வெள்ளவத்தையில் ஹெரோய்ன்: மூவர் கைது ஒரு கிலோகிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப்பொருடன், மூவரை வெள்ளவத்தையில் வைத்து இன்று புதன்கிழமை கைதுசெய்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், அந்த போதைப்பொருளை கடத்திய அதிசொகுசு கார்கள் இரண்டையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தனர். அத்துடன், அவர்களிடமிருந்து 7 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளின் பெறுமதி ஒருகோடி ரூபாவாகும் என்றும் தெரிவித்தனர். - See more at: http://www.tamilmirror.lk/175277/வ-ள-ளவத-த-ய-ல-ஹ-ர-ய-ன-ம-வர-க-த-#sthash.BZyI0nPb.dpuf
-
- 6 replies
- 478 views
-
-
இந்திய அரசின் பூரண ஆதரவைப்பெற்றதன் பின்னரே நாம் யுத்தத்தை ஆரம்பித்தோம்: பசில் ராஜபக்ச திகதி: 02.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை இலக்கவைத்து தாக்குதல்களுக்கான திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளை இங்கு பல முக்கிய கேந்திர நிலையங்களும் வெளிநாட்டு தூதுவராலங்களும் இருப்பதனால் இது வெளிநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக்கூறி அவர்களின் பூரண ஆதரவைப்பெற்றதன் பின்னரே நாம் யுத்தத்தை முன்னெடுத்தோம் என சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஸ்ர ஆலோசகருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரி…
-
- 6 replies
- 1.4k views
-
-
கபொத உயர்தர பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த முடிவுகளின் படி கணித , விஞ்ஞான பாடங்களில் தமிழ் மாணவர்கள் முதலாம் இடத்தினை பெற்றுள்ளனர். விஞ்ஞானபாடத்தில் கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலயத்தினை சேர்ந்த மைதிலி சிவபாத சுந்தரம் என்ற மாணவி பெற்றுள்ளார். கணித பாடத்தில் அன்ரன் கிற்ஸ்ரல் ஜோன்ராஜ் என்ற ஹாட்லி கல்லூரி மாணவர் பெற்றுள்ளார். இதே வேளை கலை, வர்த்தக பாடங்களில் சிங்கள மாணவர்கள் பெற்றுள்ளனர்.
-
- 6 replies
- 996 views
-
-
தமிழீழ தாயகத்தில் தமக்கு எட்டிய வழிகளில் எதையாவது பெறுவோம் அல்லது தம்மால் இயன்ற வழிகளில் எதையாவது செய்வோம் என்ற தொனியில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் மக்களிற்கு போதிக்கின்றன. இதற்கு மூலதனமாக கடந்த கால போரின் போதான இழப்புக்களை கூறி, இனி தமிழினம் இப்படியான அழிவினை எதிர்கொள்ள முடியாது, தாங்காது என பயமுறுத்தப்படுகின்றார்கள். அல்லது ஒருபடி மேலே சென்று இவ்வளவு காலமும் புலிகள் என்ன பிடுங்கினார்கள் என்றும் கேட்கப்படுகின்றது. இப்படியான கறாரான வசனங்கள் ஊடகங்களுக்கு வராமல் பார்த்து கொள்வதிலும் ஜாக்கிரதையாக இருக்கின்றனர். ஊர்களில் சின்ன சின்ன கூட்டங்களில் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் சேர்ந்து இயங்கும் குழுக்கள் என்னென்ன சொல்கின்றார்கள் என்பதன…
-
- 6 replies
- 910 views
-