Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அபிவிருத்திக்காக நாங்கள் செயற்பட வேண்டு மென்பதற்கு முற்று முழுதாக நான் இணங்குகிறேன். அரசில் தீர்வொன்று எப்பொழுது வருமென சொல்ல முடியாது. ஜனநாயக சூழலில் காத்திருந்த பேச்சுவார்த்தை மூலம்தான் பெற முடியும். போர்ச்சூழல் என்றால் அடித்து பறிக்கலாம். இது அப்படியல்ல. அதற்கு எவ்வளவு காலம் எடுக்குமென சொல்ல முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், அரசாங்கத்துடன் இணைவதா இல்லையா என்ற தீர்மானம் பின்னர் எடுக்கப்படுவதாக இருந்தாலும், எற்கனவே சில தீர…

  2. கருணா தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு விசாரிக்க வேண்டும் - வியாழேந்திரன் மட்டக்களப்பு , கிழக்கு மாகாணத்தில் கருணா எனப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் உள்ளதால் இவர் மீதான விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் என. இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் மட்டக்களப்பு வில்லியம் மண்டபத்தில் முற்போக்குத் தமிழர் அமைப்பின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரனின் பிறந்த நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை 15.11.2020ம் திகதி இடம்பெற்ற இரத்ததான முகாமில் இரத்ததானம் வழங்கிய பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், வினாயகமூர்த்தி முரளிதரன் என்பவரை…

  3. வடமாகாண கல்வி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவில்லை – ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்காது சென்றதாக தெரிவிப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண கல்வி அமைச்சர் தனது பதவியை செவ்வாய்க்கிழமை மதியம் வரை இராஜினாமா செய்வில்லை என தெரியவருகின்றது. அது தொடர்பில் அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை பதிலளிக்காது சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.மார்ட்டீன் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற கட்சி கலந்துரையாடலை முடித்துக்கொண்டு வெளியே வந்த கல்வி அமைச்சர் த.குருகுலராஜாவிடம் இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்து விட்டீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய வேளை அதற்கு பதிலளிக…

  4. 20.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பிலும், மாதல் கடற்பரப்பிலும் வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு, மேஜர் கீர்த்தி, கப்டன் செவ்வானம் மற்றும் சிவா ஆகியோரின் 15ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். கடற்கரும்புலிகள் மேஜர் கீர்த்தி மற்றும் கப்டன் சிவா ஆகியோர் காங்கேசன்துறைத் துறைமுகக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதும் கடற்கரும்புலிகள் மேஜர் அன்பு மற்றும் கப்டன் செவ்வானம் ஆகியோர் மாதல் கடற்பரப்பில் வைத்து கடற்படையின் வழங்கல் கப்பலான “லங்கா முடித” மீதும் தமது வெடிமருத்து நிரப்பப்பட்ட படகுகளை மோதி வெடிக்க வைத்தனர். கடற்கரும்புலிகளின் இத்தாக்குதல்களின்போது குறித்த இரு கலங்களும் கடுமையாகச் சேதமடைந்ததுடன் கடற்படையினர் பல…

  5. ஞாயிற்றுகிழமை, நவம்பர் 14, 2010 இந்த மாத இறுதியில் வருகைதரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் எதனையும் கொடுக்கமாட்டார் என்று தெரிகிறது. இந்தப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நாட்டுக்குள்ளேயே காணப்பட வேண்டும் என்று தமிழ்த் தலைமைகளிடம் இந்தியா ஏற்கனவே வலியுறுத்தி உள்ளது. இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே கிருஷ்ணாவின் பயணம் அமையும் என்று புதுடில்லிச் செய்திகள் தெரிவித்தன. எதிர்வரும் 25ஆம் திகதி கிருஷ்ணா இலங்கை வருகிறார். அந்தப் பயணத்தில் அரச தலைவர்களைச் சந்திக்கும் கிருஷ்ணா, இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து நேரடியாக எந்த அழுத்தங்களையும் வழங்கமாட்டார் எனப் புதுடில்லி வட்டாரங்கள் கூற…

  6. பேதங்களை மறந்து ஒன்றிணைந்தால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் : அமைச்சர் மனுஷ! இன மத கட்சி பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மாத்திரமே நாம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் முத்தவெளிப் பகுதியில் நாளை ஆரம்பிக்கப்பட உள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பில் அமைச்சர் மனுஷ நாணயக்கார இன்று கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “க்லோகல் பெயார் 2023′ கண்காட்சியின் முதலாவது வேலைத்திட்டத்தை நாங்கள் யாழில் ஆரம்பிக்கி…

    • 6 replies
    • 271 views
  7. பிரான்ஸ் நீதவான் தங்காலை கடலில் மூழ்கி மரணம்! Published on July 23, 2011-2:07 am பிரான்ஸ் நாட்டு நீதவான் ஒருவர் தங் காலை கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையினால் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி மரண மடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சுற்றுலாவிற்காக இலங்கை வந்திருந்த மேற்படி நீதவான் கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயம் அலையில் அடித்துச் செல்லப்பட்டே இவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் கூறினர். மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் சுற்றுலாவுக்காக இலங்கை வந்திருந்த மேற்படி பிரான்ஸ் நாட்டு நீதவான் தன் குடும்பத்தாருடன் இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த சமயத்திலேயே அலையினால் அடித்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.saritham.com/?p=27239

  8. இனப்பிரச்சியை தீர்க்க அரசாங்கம் முனையவில்லை - ஐரோப்பிய ஒன்றியம் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைளை தீர்க்க முனைப்பு காட்டவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் டேவிட் டேய்லி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில், இதனைத் தெரிவித்துள்ளார்.பதிவு இணைய செய்தி யுத்தம் நிறைவடைந்து ஆறு வருடங்கள் ஆகின்றன. இனப்பிரச்சினையை தீர்க்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இனிவரும் காலத்திலேனும் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். பதிவு இணைய செய்தி அதேநேரம் முரண்பாடுகளுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்றும…

    • 6 replies
    • 693 views
  9. பிரிட்டனின் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸ் சிறிலங்கா விடயம் தொடர்பில் நன்றாக மாட்டிக்கொண்டுள்ளார். மஹிந்த இராஜபக்‌ஷவுடனான கள்ளக்காதல் தொடர்பு இப்போது சூடு பிடித்துள்ளது. ஒரு மாஜி செயலரை வைத்து தனது நரித்திட்டங்களை சிறிலங்காவிற்காக செய்துவந்த பல திட்டங்கள் பிரித்தானியாவில் கொன்சர்வேட்டிவ் கட்சிக்குள்ளேயே பல பிரச்சினைகளை தோற்றுவித்திருக்கின்றது.. நேற்றுவரை லியாம் பொக்ஸ் சிறிலங்காவிற்கு ஆயுத கொள்வனவு தொடர்பிலான பேரம், சிறிலங்காவிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் திட்டங்கள் ஆகியவற்றை செய்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்படுகின்றார். ஆனால் இந்த விசாரணைக்குழு நம்பகத்தன்மை பற்றி எதிர்க்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.. ஆனால் இன்று மேலும் மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டு…

  10. மனைவியை அடித்து போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. யாழ். மேல் நீதிமன்றில் இன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம் திகதி ஆணைக்கோட்டை பகுதியில் யோகராசா அமுதவர்த்தினி என்பவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த நபர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி எஸ். சுகுந்தன் யாழ். மேல் நீதிமன்றில், மனைவியை போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் என சாட்சியமளித்துள்ளார். …

  11. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை இந்தியாவின் பிராந்தியத் தலைமைத்துவத்திற்கு விடுக்கப்பட்ட சவால் என ஜனாதிபதியின் சகோதரரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தெற்காசிய பிராந்திய வலய நாடுகளில் பல என இந்தியாவிற்கு முரனான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. அமெரிக்காவிற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. எனினும், மாலைதீவு மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில் பாகிஸ்தானும் இலங்கைக்கு ஆதரவை தெரிவித்திருந்தது. இத்தகைய சூழலில் பிராந்தியத்தின் தலைமைத்துவத்திற்கான தகுதியை இந்தியா இழந்து வருவதாகவும் இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணை, இந்தியாவிற்கு பாதக விளைவுகளை ஏற்ப…

    • 6 replies
    • 1.5k views
  12. தமது பதவிக்காலத்தில் இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தை முடிவுறுத்த முடியாமைக்காக வருந்துவதாக பிரித்தானியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் தெரிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் டேவிட் மில்லிபாண்ட் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. யுத்தத்தின் போது பெருமளவான மக்கள் உயிரிழந்ததாகவும், அதனை தடுத்து நிறுத்த முடியாமை வருத்தமளிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2009ம் ஆண்டு இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறியமை மிகவும் வருந்தத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.seithy.co...&language=tamil

    • 6 replies
    • 609 views
  13. இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகள் இந்திய இராணுவ சீருடையை அணிந்திருந்தனர் என்று முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பாலச்சந்திரன் உடல் என்று வெளியிடப்பட்ட புகைப்படத்தில் இலங்கை வீரர் என்று சொல்லப்படும் நபர், இந்திய இராணுவத்தினர் அணியும் சீருடையில் உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் 12 வயது மகனான பாலச்சந்திரன் மரணம் குறித்து இறுதிக் கட்டப் போரின்போது தலைமைத் தளபதியாக இருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இந்தியாவிலிருந்து வெளியாகும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் கூறுகையில், "பாலசந்திரன் சுட்டுக் கொல்லப்படும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் புகைப்படத்தில் இராணு வீரர் ஒருவ…

  14. முல்லைத்தீவு நகரில் திரும்புமிடமெல்லாம் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்- அச்சத்தில் உறைந்துள்ள மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முல்லைத்தீவு கடற்கரை வளாகத்தில் 2009க்கு முன்னர் கடற்புலிகளின் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த வளாகத்தில் கடந்த வருடங்களில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் பிரமாண்டமாக இடம்பெற்றன இம்முறை நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவை தொடர்ந்து குறித்த இடத்தில் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிசார் நீதிமன்ற கட்டளையை மீறி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவிடாது தடுக்கும் முகமாக குறித்த பகுதி வீதியெங்கும் கடமையில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பகுதியை விடவும் முல்லைத்தீவு நகருக்குள் திரும்பும் …

    • 6 replies
    • 874 views
  15. '13" ஆதரவுத் தீர்மானங்களால் அதிகாரங்கள் கிடைத்துவிடாது; வடக்கு கிழக்கு இணைப்பும் சாத்தியமில்லை என்கிறது அரசு "மாகாணசபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டா. 13ஆவது திருத்தத்தை பலப்படுத்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதனூடாக இந்த அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியாது'' என்று அரசு நேற்று அறிவித்தது. வடக்கு கிழக்கு இணைப்பு இனி மேல்சாத்தியம் இல்லை என்றும் அது தெரிவித்தது. காணி அதிகாரம், வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புகள், 18ஆவது திருத்தம் ஆகியவற்றைக் கோடிகாட்டி கருத்து வெளியிட்டபோதே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான சுசில் பிரேம ஜயந்த மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது திருத்தத்ததை பலப்படுத்…

    • 6 replies
    • 987 views
  16. இன்று... ரணசிங்க பிரேமதாசவின், 29ஆவது நினைவு தினம் நாட்டின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியான அமரர் ரணசிங்க பிரேமதாசவின் 29 ஆவது நினைவு தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை ) கொழும்பு புதுக்கடை பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு அருகாமையில் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஹேமா பிரேமதாச, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் நிகழ்விடத்திற்கு வந்திருந்தமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1279381

    • 6 replies
    • 623 views
  17. ராமநாதபுரம் தொகுதியின் எம்.எல்.ஏ.,வாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஹசன்அலி உள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் கார் உட்பட பொருட்கள் திருட்டு போனது. குற்றத்தில் ஈடுபட்டதாக வீரா என்பவரை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் ஏசுவடியான் என்பவர் கோர்டில் சரணடைந்தார். திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ., சார்பில் அறிக்கை ஒன்று ராமநாதபுரம் நிருபர்களுக்கு அனுப்பபட்டது. அவ்வறிக்கையில், ‘’எனது வீட்டில் களவு போன பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு உதவிய துணை முதல்வர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் வாசனுக்கும், எப்.3 போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளுக்கும் நன்றி. டெலிபோன் மூலம் என்னை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவி…

  18. "பாரதத் தாயின் பாதத்தில் பள்ளம் விழப் போகிறது!" சீமான் சொல்லும் ஐந்து ஆபத்துக்கள்! ப.திருமாவேலன் முள்ளி வாய்க்காலை முன்வைத்து உலகமே இன்று இரண்டாகப் பிளவுபட்டு நிற்கிறது. இலங்கையில் நடந்திருக்கும் போர்க் குற்றங்களை விசாரிக்க ஐக்கிய நாடுகள் ஒரு குழுவை அமைக்க... அதை அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் ஆதரிக்க... ரஷ்யாவும் சீனாவும் எதிர்த்து நிற்க... இந்தியா இன்னமும் கருத்துச் சொல்லாமல் மௌனமாக இருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததாகச் சொல்லப்பட்ட நிலையிலும், இன்னமும் கொடூரங்களும் கொடுமைகளும் தொடர்வதாகவே செய்தி கள் தெரிவிக்கின்றன. இதுபற்றி 'நாம் தமிழர்' கட்சித் தலைவர் சீமானிடம் பேசினோம். "இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை விசாரிக்க, ஐ.நா. அவை மூவர் குழுவை நியமி…

  19. There would be a demonstration organized by the National Council of Canadian Tamils (NCCT) calling for the arrest of war criminal Mahinda Rajapakse who is on a private visit to the United States of America. We call upon our members to attend this emergency rally. Date: Friday January 21st Venue: US Consulate 360 University Ave Time: 2 pm to 7 pm Regards Raj Suthan "Lets voice for Tamil Freedom" <suthan777@yahoo.com> ---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Rajapaks…

  20. வவுனியா, புதூரில் தப்பி ஓடிய ஆயுதாரியை தேடி சுற்றி வளைப்பு… January 2, 2019 வவுனியா, புதூர் பகுதியில் ஆயுதங்களுடன் சென்ற ஒருவரை சோதனையிட முற்பட்ட போது, அவர் தப்பியோடியமையால் குறித்த பகுதியினை இராணுவத்தினர் சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் சந்தேகநபர் விட்டுச்சென்ற பையிலிருந்து கைத்துப்பாக்கி, நான்கு கைக்குண்டுகள், கைத்துப்பாக்கிக்கான ரவைகள் உட்பட மேலும் சில பொருட்களை இராணுவத்தினர் மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதூர் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவரின் நடமாட்டம் காணப்படுவதாக புளியங்குளம் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அப்பகுதியில் பதுங்க…

  21. சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவினால் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவாகாரங்களுக்கான அமைச்சகம் இன்று ஞாயிற்றுக் கிழமை (25-12-2011 ) செய்திக் குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையினை நா.த.அரசாங்கம் விரிவாக ஆய்வு வருவதாக தெரிவித்துள…

  22. பொங்குதமிழில் இரண்டு செய்தித் துணுக்குகள் காணப்படுகிறன. நான் எனது நிரையில் அவற்றை பதிகிறேன். உங்கள மனத்திலும் இது தாமிராவின் சேவையாக இருக்கலாமா என்படுகிறதா ? http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=a2a3cbdb-f6a0-4a55-a0b4-81c51d32f421 ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளுக்கு சிறிலங்கா கண்டனம்! - தீர்மானம் கொண்டு வருவது ஆபத்தான முன்னுதாரணமாம்! சிறிலங்காவின் அரசியலமைப்பு வரையறைக்குள் நிறுவப்பட்ட உள்ளகப் பொறிமுறை ஒன்றினை ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள முற்படுவது ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என ஐ.நா மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கான சிறிலங்காத் தூதுவர் தமரா குணாந…

    • 6 replies
    • 1.8k views
  23. சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர், தேசியப் பிரச்சினைக்கான அரசியல்தீர்வு மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துடன் பேச்சு நடத்தியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கும், சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்தியக் குழுவுக்கும் இடையில் இன்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது தொடர்பாக எந்தக் கருத்தும் முன்வைக்கப்படவில்லை. இது தொடர்பாக கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், “நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் அதற்கு சிறிலங்கா அரசு கொடுக்கும் முன்னுரிமை பற்றி அவர்களுக்கு விளக்கினோம். இ…

  24. டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை நாட்டில் டெங்கு மற்றும் எலிக் காய்ச்சல் நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொற்று நோய் விஞ்ஞான பிரிவு குறித்த எச்சரிக்கையினை விடுத்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலப்பகுதியில் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து காணப்பட்டபோதிலும் தற்போது அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. http://athavannews.com/டெங்கு-மற்றும்-எலிக்-காய/

    • 6 replies
    • 546 views
  25. கூருகல பள்ளியில் இந்த அரசாங்கம் கைவைக்குமானால் இன்னும் 40 நாட்களுக்குள் சின்னாபின்னமாகுமென முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத்சாலி தெரிவித்தார். கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு இந்த அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்கள் யாரும் இல்லை. நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே போகின்றன. இந்த நிலையில் தொல்பொருள் ஆய்வுக்காக கூருகல பள்ளிவாசல் இருக்கும் பிரதேசம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இவ்விடத்தில் அரசாங்கம் கைவைக்குமானால் 40 நா…

    • 6 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.