ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
இலங்கையின் ஏழு மாகாண வைத்தியசாலைகளுக்கு நவீன முதலுதவி வசதிகளுடன் கூடிய 86 அம்புலன்ஸ் வாகனங்களை சுகாதார அமைச்சு வழங்கியுள்ளது . வடக்கு- வடமத்திய- வடமேல்- சப்பிரகமுவ- மத்திய- ஊவா மற்றும் கிழக்கு மாகாண மருத்துவமனைகளுக்கே இந்த அம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்பட்டது. இதனடிப்படையில் வடக்கில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 7 அம்புலன்ஸ் வாகனங்களும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 6 வாகனங்களும், யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 5 வாகனங்களும் மன்னார் மாவட்டத்திற்கு 3 வாகனங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. மேற்படி சுகாதார வாரத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சு வழங்கியுள்ள இவ் அம்புலன்ஸ் வண்டிகள் ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன அமைப்பின் நிதியுதவியில் வழங்கப்பட்டுள்ளது. - See more at: http://onlineuthaya…
-
- 6 replies
- 564 views
-
-
செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் வளர்ந்த மாணவி ஒருவர் தமது தற்போதைய நிலையினை எண்ணியதால் ஏற்பட்ட உளவியல் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். செஞ்சோலை மாணவி இரவீந்திரன் புஸ்மலர் ஜெயந்தி (சாளினி) என்பவரே உயிரிழந்தவராவார். மூன்று வயதாக இருக்கும் போது 1994ஆம் ஆண்டு செஞ்சோலையில் இணைந்து கொண்ட சாளினி தனது இறுதிக்காலம் வரையில் செஞ்சோலையிலேயே வாழ்ந்துவந்தார். செஞ்சோலை மாணவிகளிடையே கல்வி கலை மற்றும் விளையாட்டில் சாளினி முன்னணியில் விளங்கி வந்தார். செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குறித்த மாணவி போர் மற்றும் அதன் பின்னான நெருக்கடிகள் காரணமாக இடம்பெயர்ந்த நிலையில் வவுனியா ரம்பைக்குளத்தில் உள்ள டொன்பொஸ்கோ பெண்கள் சிறுவர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு …
-
- 6 replies
- 1.1k views
-
-
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களின் 13 சங்கிலிகளும் ஒரு தாலிக் கொடியும் திருடர்களினால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனுடன் தொடர்புடைய பெண் ஒரு வரும் ஆண் ஒருவரும் வல்வெட்டித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வரலாற்று புகழ்மிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திரு விழா நேற்று இடம் பெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதுடன் பெருமளவான பறவைக்கா வடிகள், என்பவற்றையும் மேற்கொண்டனர். இவ்வாறு பக்தர்கள் பக்திபூர்வமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர். இவ்வாறு சுமார் 13 தங்கச் சங்கிலிகளும், ஒரு தாலிக்கொடியும் களவு போயுள்ளதாக முறையிடப்பட்டுள…
-
- 6 replies
- 925 views
-
-
யாழ். மாநகர மேயரானார் ஆனோல்ட் யாழ்ப்பாணம் மாநகரசபை மேயராக இம்மானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், யாழ். மாநகர சபையின் பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் 11 மணியளவில் மார்ட்டீன் வீ தியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தி ல் நடைபெற்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/30600
-
- 6 replies
- 743 views
-
-
கொழும்புத் துறைமுகத்தில் புலிகளின் படகுகள் அழிக்கப்பட்டதா? [09 - February - 2007] [Font Size - A - A - A] புலிகள் இயக்க கெரில்லாக்கள் கடந்த வாரம் கொழும்புத் துறைமுகம் தாக்குதல் நடத்திய சம்பவம் பற்றியும் அது சம்பந்தப்பட்ட தகவல்கள் பற்றியும் பல சந்தேகங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேற்படி தாக்குதல் முயற்சிக்காக புலிகளால் ஓட்டிவரப்பட்ட இரண்டு டிங்கிப் படகுகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட்டதாக கடற்படையினர் கூறியிருந்தனர். மேலும், புலிகள் செலுத்தி வந்த மூன்றாவது டிங்கிப்படகே "செலொன்பொனேசியா பிரைட்" எனப்படும் தாய்வான் கொள்கலன் கப்பல் மீது மோதியதாகவும் கடற்படையினர் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலுக்காக புலிகள் ஓட்டிவந்த முதலாவது டிங்கிப் படகை துறைமுகத்த…
-
- 6 replies
- 2.2k views
-
-
21 MAR, 2024 | 08:15 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வடக்கு, கிழக்கில் பௌத்த மரபுரிமைகளை அழித்து அதன் மீது பிற மத அடையாளங்களை வைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சிங்கள பௌத்தர்களின் பொறுமையை கோழைத்தனம் என்று கருத வேண்டாம். இது சிங்கள பௌத்த நாடு என்பதால் தான் தமிழ் பிரதிநிதிகள் சுதந்திரமாக வாழ்கிறார்கள் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (21) இடம்பெற்ற சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்றாம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, சபாநாயகர் மஹிந்த …
-
- 6 replies
- 984 views
- 1 follower
-
-
ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இணைய வேண்டாம்! – பாதுகாப்பு அமைச்சு. சட்டவிரோதமான முறையில் ரஷ்ய மற்றும் உக்ரைன் படைகளுடன் இணைய வேண்டாம் என அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் ரஷ்ய மற்றும் உக்ரேன் படைகளுடன் இந்நாட்டின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்கள் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சுக்கு இது தொடர்பில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் உக்ரேன் இராணுவத்திற்கு சேவையாற்றுவதற்கு இலங்கை இராணுவத்தினரை அனுப்புவதற்கு இலங்கை இராணுவத்திற்கும் ரஷ்ய இராணுவத்திற்கும் இடையில் எவ்வித உடன்பாடும் ஏற்படாத பின்ன…
-
-
- 6 replies
- 584 views
-
-
26 NOV, 2024 | 06:16 PM நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தர பரீட்சை 3 நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் 27, 28 மற்றும் 29ஆம் திகதிகளில் க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறமாட்டாது. இந்த மூன்று நாட்களுக்கான பரீட்சைகள் முறையே எதிர்வரும் டிசம்பர் மாதம் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/199767
-
- 6 replies
- 386 views
- 1 follower
-
-
இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்துள்ள புதிய தீர்மானம்!இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.சிவஞானம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1421674
-
-
- 6 replies
- 676 views
- 2 followers
-
-
[size=4]தஞ்சம் வழங்குவது இப்படித்தானா? - ஏக்கத்தில் உறவுகள் (சிட்னி) கடந்த 2009ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் இராணுவத்தின ரால் பிடிக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் ஒருவர் தற்போது அவுஸ்திரேலியாவில் அகதித் தஞ்சம் கோரியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ் திரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார். [/size] [size=4]ஐ.நா. விசாரணை இன்னும் முடிபுறாத பட்சத்தில் விசாரணை முடிபுறும்வரை இவரை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கு எதிரான சித்திரவதை விசாரணைக்குழு, அவுஸ்திரேலியா அரசினை கேட்டுக்கொண்டுள்ள போதும் அவுஸ்திரேலிய…
-
- 6 replies
- 1.5k views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் எதிர்காலம் தானாகவே இல்லாமல் போய்விடும் -என்.சிறீகாந்தா தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் தேசிய கட்சிகள் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஒன்றுபட வேண்டும் என்றே நாம் விரும்பினோம். அதனையே நாம் வலியுறுத்தி வந்தோம். அந்த அடிப்படையிலேயே தற்பொழுது நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு மாற்றுத் தலைமையை உருவாக்கி உள்ளோம்.தமிழ் தேசிய மக்கள் முன்னணி தான், தாங்களே மாற்றுத் தலைமை என்றும் அதனை மழுங்கடிக்கவே தமிழ் மக்கள் தேசிய கூட்டணி உருவாக்கப்பட்டது என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். அவ்வாறான எந்த தேவைகளும் எமக்கு கிடையாது ஏனெனில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் தா…
-
- 6 replies
- 722 views
-
-
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் பாரஊர்திகளை பெற்றுக்கொண்டுள்ள விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் 20 கிலோ மீட்டர் நீளமான யுத்த அகழிகளை வெட்டியிருப்பதாக வவுனியாவுக்குச் சென்றுள்ள நிவாரணப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர் என சிங்கள இணையத்தளம் கூறியுள்ளது. இந்த வாகனங்களைப் பயன்டுத்தி விடுதலைப்புலிகள் புதிய பாதுகாப்பு வேலிகளை அமைத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். வன்னியில் இருந்து கடந்த13 ஆம் திகதி இறுதியாக அரசசார்பற்ற நிறுவனங்கள் வவுனியாவுக்குச் சென்றுள்ளனர். வன்னியில் உள்ள ஏனைய நிறுவனங்கள் வவுனியாவுக்கு வருவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலோசனைகளைப் பெறும் நோக்கில் இது குறித்து அந்த நிறுவனங்கள் தமது தலைமை பணியகத்திற்கு அறிவித்துள்ளதாக…
-
- 6 replies
- 2.2k views
-
-
கிளி. அக்கராயன்குளம் மற்றும் வன்னேறிக்குளம் பகுதிகளில் இடம்பெற்ற மோதல்களின் போது படையிர் மீது மேற்கொள்ளபட் விஷ் வாயுத் தாக்குலினால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தே.பா.ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடந்த 17ம் திகதி முதல அப்பகுதியில் தொடர்ந்து இடம் பெற்ற மோதல்களை அடுத்து வன்னனேரிக்குளம் முழுவதும் 19ம் திகதி மாலை படையினரால் கைப்பற்றப்பட்டது. இதன்போது இடம் பெற்ற மோதல்களிலலேயே படையினர் மீது விஷ வாயுத்தாக்குதல் நடத்தப்பட்டன. இவ்வாயுத் தாக்குதல்களினால் மூச்சுத்திணறலுக்கு உள்ளான படையினர் யாழ்ப்பாணம், மன்னார், மற்றும் அநுராதபுரம் போன்ற வைத்தியசாலைகளில் அனுமதிக்கடப்டுள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்து. இதே வேளை வன்னேரிக்குளம் மற்றும் அக்கராயன்குளம் பகுத…
-
- 6 replies
- 3.6k views
-
-
கிளிநொச்சி மற்றும் பரந்தன் பகுதிகளில் சிறீலங்காப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மும்முனை முன்னகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இத் தாக்குதலின் போது 41 படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் 102 படையினர் காயமடைந்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 மணியளவில் பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கியும் பன்னங்கண்டி நோக்கியும் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பகுதியிலிருந்து இரணைமடு நோக்கியும் சிறிலங்காப் படையினர் மும்முனை முன்நகர்வுத் தாக்குதல்களில் ஈடுபட்டனர். பெருமெடுப்பிலான எறிகணைச் வீச்சுகள் மற்றும் கனரக சுடுகலன்களின் சூட்டாதரவுத் தாக்குதல்களின் பின்பலத்துடன் படையினர் முன்னகர்வுகளில் ஈடுபட்டனர். இந்த முன்னகர்வுகளுக்கு எதிராக தமிழீழ …
-
- 6 replies
- 2.3k views
-
-
ரவிராஜ் கொலைவழக்கை அறங்கூறுனர் சபையில் நடத்துவதா?27இல் முடிவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கை அறங்கூறுநர் சபை முன் நடத்துவதா, இல்லையா என்ற முடிவை எதிர்வ ரும் 27 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றம் நீதிபதி மணிலால் விஜேதிலக்க தெரிவித்துள்ளார். ரவிராஜ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள 6 பேர் மீதான வழக்கு விசாரணைகளை அறங்கூறுநர் சபை முன் நடத்துமாறு கடந்த மாதம் ஆரம்பத்தில் கோரிக்கை விடுத்திருந்த னர். இந்த கொலை வழக்கில் இரண்டு கடற்படையினர், ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர், கருணா தரப்பை சேர்ந்த மூன்று பேர் என ஆறு பேருக்கு எதிராக குற்றம் சு…
-
- 6 replies
- 455 views
-
-
மாந்தை மேற்குப் பிரதேச மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை கருத்தில் கொண்டு மன்னார் தனியார் போக்குவரத்துச்சங்கம் பாடசாலை மாணவர்களுக்கு இலவச போக்குவரத்து சேவையினை மேற்கொண்டு வருகின்றது. மன்னார் மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற போர் நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து பின்னர் 2010ஆம் ஆண்டு மீள் குடியேறியுள்ளனர். இந்நிலையில் கடந்த நான்கு வருட காலங்களாக அப்பகுதிகளில் கல்வி கற்கும் மாணவர்களின் பெருளாதார நிலையினை கருத்திற்கொண்டு மன்னார் தனியார் போக்குவரத்து துறையினர் கட்டணங்கள் அறவிடாமல் மாணவர்களுக்கு போக்குவரத்து சேவை வழங்குகின்றனர். சேவா கிராமம், மூன்றாம்பிட்டி, தேவன் பிட்டி இலுப்பைக்கடவை ஆகிய கிராமங்கள் ஒவ்வொன்றும் மன்னார் ஏ32 பிரதான வீதியிலிர…
-
- 6 replies
- 497 views
-
-
வடக்கில் வெள்ளியன்று ஹர்த்தால் - எஸ். நிதர்ஷன் அநுராதபுரத்தில் உண்ணாவிரதமிருந்து வரும் தமிழ் அரசியற் கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்திலிருந்து வவுனியாவுக்கு மாற்றுமாறும் தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோரி, வடக்கெங்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை, அரசியற் கட்சிகள், பொது அமைப்புகள் இணைந்து இன்று வெளியிட்டுள்ளன. http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/வடகில்-வெள்ளியன்று-ஹர்த்தால்/71-205279
-
- 6 replies
- 587 views
-
-
தடை செய்யப்பட்ட.. தமிழ் அமைப்புகள் குறித்து, பாதுகாப்பு அமைச்சு விளக்கம்! பல தரப்பினருடன் நடத்திய நீண்ட ஆய்வுக்குப் பின்னர் தடைப்பட்டியலில் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான தடை நீக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்பட்டமை குறித்து பாதுகாப்பு அமைச்சு இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், புலனாய்வு திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் நிதிப் புலனாய்வுப் பிரிவு ஆகியன ஆய்வை மேற்கொண்டுள்ளன. 2021ஆம் ஆண்டு 577 பேரும், 18 அமைப்புகளும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிலையில் த…
-
- 6 replies
- 428 views
-
-
தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே. ராம் – சரி கேள். வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்? ராம் – சரி. வளவன் – இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்? ராம் – பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என…
-
- 6 replies
- 1.5k views
-
-
"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்." By Way of Deception: The Making of a Mossad officer "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்…
-
- 6 replies
- 1.5k views
-
-
25 வருடங்களுக்கு முன்னர் நீங்கள் இடம் பெயர்வதற்கு உடனடிக்காரணமென்ன ?
-
- 6 replies
- 809 views
-
-
கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் இணக்கப்பாட்டினை தெரிவுக்குழுவில் சமர்ப்பித்து அதன் மூலம் தீர்வுகாணப்படுமாயின் தெரிவுக்குழுவில் பங்கேற்கலாம் என கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இன்னிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்க முன்வந்தால் தெரிவுக்குழுவில் தமது கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்களில் 2 ஆசனங்களை கூட்டமைப்பினருக்கு விட்டுக்கொடுக்க ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க தயாராகவுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெரிவுக்குழுவில் தமிழர்களின் பங்களிப்பையும், தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையும் வலுப்படுத்துவதற்காகவே ரணில் விக்ரமசிங்க இந்த விட்டுக்கொடுப்பை மேற்கொள்ள முன்வந்துள்ளதாகவும்…
-
- 6 replies
- 947 views
-
-
http://eelampakkam.blogspot.no/2012/09/blog-post_11.html ஐரோப்பா, ஆசியாவை மையப்படுத்தியிருந்த இலங்கையின் இராஜதந்திர முனைப்புகள் இப்போது ஆபிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா நோக்கித் திரும்பியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, ஆபிரிக்காவில் உள்ள புர்கினா பாசோ, கமரூன், கேப் வேடே, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், ஐவரிகோஸ்ட், டிஜிபோடி, ஈக்வடோரியல் கினியா, காபோன், காம்பியா, மலாவி, மொரிடானியா, நைகர், சியராலியோன், டோகோ ஆகிய 15 நாடுகளுடன் இலங்கை புதிதாக இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தவுள்ளது. இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை முற்றாக மீளாய்வு செய்யப்பட்டதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான செசெல்ஸ் ஜனாதிபதி ஜேம்ஸ் அலிக்ஸ் மிக்கேல் கடந்த வாரம் இலங்கைக்கு பயணம்…
-
- 6 replies
- 859 views
-
-
அவுஸ்திரேலிய காட்டுத் தீயில் இறந்தோருக்காக கதறிய இந்த உலகு; சிங்கள காட்டுமிராண்டியிடம் கொலைபடும் எமது மக்களுக்காக கவலை கூட படவில்லை: யோகி ஆதங்கம் [செவ்வாய்க்கிழமை, 17 பெப்ரவரி 2009, 07:28 மு.ப ஈழம்] [க.நித்தியா] அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் 160 பேர் இறந்த போது, பிபிசி போன்ற செய்தி நிறுவனங்கள் அதனை முதன்மைச் செய்தியாக்கி அழுகின்றன. ஆனால், ஹிட்லரிலும் பார்க்க மிகக்கொடிய ஒரு அரக்கனை - காட்டுமிராண்டியைப் போல மக்களை கொலை செய்கின்ற ஒரு மனிதனை - அந்த மனிதனோடு சேர்ந்து ஒரு சிங்கள இனத்தை நாங்கள் எதிர்கொண்டு நிற்கின்றோம். ஆனால், இந்த உலகம் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவனுக்குப் பின்னால் அது மனசாட்சியற்று நிற்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சமர் ஆய்வு …
-
- 6 replies
- 1.1k views
-
-
தமிழீழமே தீர்வு, பொதுவாக்கெடுப்பு தேவை இவற்றை வலியுறுத்தி தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் மற்றும் திரைதுறையினர் இன்று 19.03.2013 ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது. இயக்குனர் சங்கத் தலைவர் அமீர் தலைமையில் நடந்து வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் இளையராஜா , நடிகர் சிறிகாந்த் ,கௌதம்மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்பட ஏராளமான இயக்குனர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் நடிகைகள் சுகாஷினி, குயிலு என ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரத்தையொட்டி இன்று ஒருநாள் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. {youtube}mB9s0EZmT8{youtube} உண்ணாவிரதத்துக்கு தமி்ழ்நாடு சி்ன்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளதாக…
-
- 6 replies
- 1.2k views
-