Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு அசுர வேகத்தில் குறைவு – அரசு உதவி கோரல் சிறீலங்காவின் அன்னியச் செலாவணி இருப்பு வெகு விரைவாக குறைந்து செல்வதால், அச்சமடைந்துள்ள சிறீலங்கா அரசாங்கம் அனைத்துலக நாணய நிதியத்திடமும் ஏனைய நிதி நிறுவனங்களிடமும் உதவி புரியுமாறு கோர ஆரம்பித்துள்ளது. சிறீலங்காவிற்கு பிரதான அன்னியச் செலாவணி வருவாயைப் பெற்றுக்கொடுக்கும் சுற்றுலாத்துறை மற்றும் பெருந்தோட்டத் தொழில் என்பனவற்றின் ன்னியச் செலாவணி வருமானம் முன்னரைவிட குறைவடைந்துள்ளன. இதேவேளை, சிறீலங்கா அரசு மிகப்பெரும் பாதீட்டை ஒதுக்கீட்டுடன் தமிழர் தாயகத்தின் மீது போர் தொடுத்துள்ளதாலும், அதற்காக முற்று முழுதாக நாட்டின் உள்நாட்டு இருப்புக்களை பயன்படுத்துவதாலும் இந்த நிலை ஏற்பட்டுள்ள…

    • 5 replies
    • 1.4k views
  2. இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை? கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக சிறிலங்கா தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இவர்களுக்குப் பதிலாக இலங்கை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும…

  3. யாழ்ப்பாண மாவட்டத்தில் 14,565 பேர் தொழில்வாய்ப்புக்களை தேடுவதாக புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றது என யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம. பிரதீபன் தெரிவித்துள்ளார். திறன்கள் அபிவிருத்தி, தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய மட்டத்தில் நடைபெறுகின்ற மூன்றாம்நிலை, தொழில்நுட்ப கல்வி மற்றும் தொழில் பயிற்சித் துறையினை அபிவிருத்தி செய்வதற்கான மாவட்ட செயலக கூட்டம் மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன் தலைமையில் இன்று (25) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தேசியரீதியாக செயற்படுத்தப்படுகின்ற மூன்றாம் நிலை, தொழில்நுட்பக்கல்வி மற்றும் தொழில்துறையினை அபிவிருத்தி செய்வதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் அங்கமாக யாழ்ப்பாண ம…

    • 5 replies
    • 569 views
  4. யாழில் தமிழையும், சிங்களத்தையும் புறந்தள்ளிய சீன மொழி 35 Views சாவகச்சேரியில் ‘China State Construction Engineering Corporation’ என்ற சீனாவின் அரச நிறுவனத்தில் சீன மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டும் பெயரிடப்பட்டுள்ளது. அலுவலக பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டிடம் முழுமையாக இரு மொழிகளிலும் எழுதியுள்ளதோடு தனியான பெயர் பலகைய்யும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையின் அரச கரும மொழிகளான சிங்களமும், தமிழும் முழுமையாக புறக்கணிக்கப்பட்டு பெயரிடப்பட்டுள்ளது. காத்தான்குடியில் அரபி மொழியில் எழுதப்பட்டுள்ளதை புத்த பிக்குகளும் ஆளும் கட்சியும் அரபி என்ன இலங்கையின் ஆட்சி மொழியா என்று கேட்டு போராடியவர்கள், இன்…

  5. வாகரைக்கு அனுப்பப்பட்ட உணவுகள் இராணுவத்தினால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது -BBC சிங்களசேவை Food supplies sent back from FDL The security forces in Sri Lanka have sent back food supplies sent to refugees in the LTTE-held areas in the east. Civil administrators in Batticaloa said the civilians are caught in the increasing fighting in the Vakarai area. Food and medicine supplies are rapidly running out for nearly 30,000 residents and refugees, they said. Essential supplies were earlier prevented as the Forward Defence Line (FDL) at Mankerny has not received authorisation though the Defence Ministry authorised District Secretary to provide supplies. …

  6. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டை மீட்டெடுத்து அபிவிருத்திமிக்க நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனக்கு மலர்மாலைகள் விழுவதைப் போன்று கற்களால்தாக்குதல்களும் நடத்தப்படுகின்றன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கையர்களை சந்தித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது, அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் மற்றும் அந்நாட்டில் இருக்கின்ற இலங்கை கலாசார அமைப்புகள் 7 இணைந்து ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் ஜனாதிபதி நேற்று மாலை கலந்து கொண்டார். இந்த சந்திப்பு மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைக்கழக வின்துரோப் கேட்போர் கூடத்தில் நடைபெற்…

  7. சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது ஐகிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கனே அம்மையார் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பினை புறக்கணித்திருப்பது குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அஞ்சலா கனே அம்மையாருக்கு தனது விசனத்தை தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

  8. பொலன்னறுவை அருகே விழுந்த விண்கல்லில் பல அரிய உலோகங்கள் காணப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகளும் பொலன்னறுவைக்கு படையெடுத்துள்ளனர். கடந்த 2012ம் ஆண்டு பொலன்னறுவை திம்புலாகல பிரதேசத்தில் விண்கற்கள் விழுந்திருந்தது. இதனை சேகரித்திருந்த வானியல் ஆய்வாளர்கள் ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு மையம் ஒன்றுக்கு மேலதிக ஆராய்ச்சிகளுக்காக அனுப்பி வைத்திருந்தனர். குறித்த ஆராய்ச்சியில் விண்ணிலிருந்து விழுந்த கற்களில் டைட்டானியம், தோரியம், யுரேனியம் போன்ற அரிய வகை உலோகங்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் அடையாளம் காணப்படாத நுண்ணுயிர்கள் மற்றும் இரண்டு வகையான பக்டீரியாக்களும் குறித்த விண்கற்களில் உயிர்வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடு…

  9. யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு! 23 February 2026 யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, 'திட்ட வரைபு அறிக்கை' ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ தெரிவித்தார். மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத்…

  10. வடக்கில் முதலீட்டாளர் மாநாடு சர்வதேச நாடுகளின் பங்குபற்றுதலுடன் வடக்கில் முதலீட்டாளர்கள் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். குறித்த முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பில், விரைவில் புலம்பெயர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். யாழ்.நல்லூர் உற்சவம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த உற்சவத்திற்கு வரும் புலம்பெயர் சமூகத்துடன் இதுகுறித்து கலந்துரையாடவுள்ளதாக குறிப்பிட்ட வடக்கு ஆளுநர், இதன்போது யாழ்ப்பாணத்தில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் குறித்து தெளிவுபடுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். …

  11. வடக்கில் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இராணுவத்தின் அலுவலகம்.. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் தலா மூன்று இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கில் அனைத்து கிராம சேவகர் பிரிவிலும் இராணுவ அதிகாரியுடன் கூடிய இராணுவ அலுவலகம் ஒன்றும் ஏற்படுத்தப்பட உள்ளளதுடன் இரண்டு படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிரதேசத்தில் ஏதேனும் குற்றச் செயல் அல்லது போதைப் பொருள் தொடர்பான சம்பவங்கள் நடந்தால், சம்பந்தப்பட்ட கிராம சேவகர் முதலில் பிரதேசத்தில் உள்ள இராணுவ அலுவலகத்தில் உள்ள அதிகாரிக்கு அறிவிக்க வேண்டும். இதனையடுத்து கிராம சேவகரின் உதவியுடன் அந்த இராணுவ அதிகாரி தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். இராணுவ அதிகாரி மற்று…

    • 5 replies
    • 1.1k views
  12. சிறுநீரகம் அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்படும் தமிழர்கள் - தமிழின அழிப்பின் இன்னொரு வடிவம்! புதன்கிழமை, 08 மே 2013 16:28 யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் இயங்கும் மருத்துவனைகள் சிலவற்றில் சிகிச்சைக்காக செல்லும் தமிழர்களின் சிறுநீரகங்கள் அறுக்கப்பட்டு அவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வாரம் யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருபத்தொன்பது அகவையுடைய தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இவரது உடலத்தை உறவினர்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்ற பொழுது, இடிப்பிற்கு மேல் உள்ள பகுதியில் அறுவை சிகிசைக்கு உட்படுத்தப்பட்டமைக்கான தடயங்கள் காணப்பட்டுள்ளன. இதேபோன்று இவ்வாரம் கொழும்பில் உள்ள மருத்துவமனை ஒ…

  13. தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கிருந்தாலும் இந்த மண்ணுக்கு மீண்டும் வரவேண்டும் என வடக்கு மாகாண மீன்பிடித்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற பட்டம்விடும் போட்டி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், சில மாதங்களுக்கு முன்னர் வல்வெட்டித்துறையில் கால் பதித்தபோது தனியாக சென்று அவருடைய வீட்டினை பார்த்திருந்தேன், அவருடைய வீட்டை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்திருந்தேன். அந்த வகையில், எதோ ஒரு மூலையில் உலகத்தில் எங்கு இருந்தாலும் நல்ல நிலையில் வாழ வேண்டும், எமது மக்களு…

  14. இலங்கைத் தமிழர்களைக் கைவிட்ட தரப்புகளுக்குத் தமிழகத்தில் உரிய பாடம் புகட்டுவோம் என்ற எழுச்சியுடன் புறப்பட்டிருக்கின்றது தமிழக சினிமாத்துறை.இந்திய அரசியலில் குறிப்பாகத் தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்குச் செலுத்தும் சக்தியாக விளங்கி வருவது சினிமா. தமிழகத்தில் அகில இந்திய காங்கிரஸின் ஏகோபித்த ஆட்சியுரிமையை அடியோடு வீழ்த்தி அதனைக் கைப்பற்றி, நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அதனைத் தக்க வைத்திருக்கும் திராவிடக் கட்சிகள் இரண்டுமே தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. இரண்டுமே திரையுலக செல்வாக்கை வைத்தே மக்கள் மத்தியில் ஊடுருவி வளர்ந்து தம்மை நிலைநிறுத்திக் கொண்டன என்பது எல்லோருக்கும் புரிந்த விடயம். அவ்வாறு தமது பிரபலம் மூலம் அரசியலில் அதிக செல்வாக்குச் செலுத்தும் திறமையும், தகைமையு…

    • 5 replies
    • 1.4k views
  15. ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பினில் ஈபிடிபி மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் ஆகியவையும் இணைந்து வடக்கு மாகாணசபை தேர்தலினில் போட்டியிடுமென அமைச்சரும் பொது செயலாளருமான சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தினில் இன்று சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்தினில் கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பினில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகையினிலேயே இத்தகவலை வெளியிட்டிருந்தார். இதன் மூலம் தனித்துப்போட்டியிடுவது தொடர்பாக முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஈபிடிபி வட்டாரங்களிடையே நிலவி வந்த ஊகங்கள் முடிவுக்கு வந்துள்ளன. இதனிடையே இன்றைய கூட்டத்தினில் ஜக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் சார்பினில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.அத்துடன் குடாந…

  16. இந்தியாவில் ரணில் விக்கிரம சிங்க ஐக்கிய தேசிய கட்சின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தனிப்பட்ட விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் நேற்றைய தினம் இந்தியா சென்றுள்ளார். தனிப்பட்ட காரணங்கள் காரணமாகவே இவர் தென்னிந்தியாவுக்கு சென்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளையில் ஐக்கிய தேசிய கட்சியை மீளக்கட்டியெழுப்பும் குழு கடந்த வாரம் நியமிக்கப்பட்டு நேற்று முன்னதினம் அதன் முதலாவது கூட்டம் நடைபெற்றது. இந்த குழுவினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை கட்சியின் தலைவரிடம் இன்றைய தினம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்திருந்தபோதும் அது திங்கட்கிழமையே சமர்ப்பிக்கடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://meenakam.com/?p=15926

  17. காங்கேசன்துறையில் இருந்து முருகண்டி வரை சேவையில் ஈடுபடும் யாழ் ராணி தொடருந்து இன்று முதல் புதியதொடருந்து பெட்டிகளுடன் தனது சேவைகளை ஆரம்பித்துள்ளது. யாழ் ராணி தொடருந்தானது ஆரம்பம் முதல் இன்று வரை பழைய பெட்டிகளுடனே தனது சேவையை மேற்கொண்டுவந்தது. இந்நிலையில், இந்தியாவின் உதவியுடன் யாழ் ராணி தொடருந்து புதிய பெட்டிகளுடன் தனது பயணத்தை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. இதேவேளை, யாழ் ராணி தொடருந்தானது காங்கேசன் துறையிலிருந்து அதிகாலை 6.00 க்கு தனது பயணத்தை தொடங்கி முறிகண்டி வருகை தந்த தொடருந்து மீண்டும் முருகண்டியில் இருந்து காலை 8.30 க்கு காங்கேசன்துறையை சென்றடையும். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நேரத்திலும் யாழ் ராணி தொடருந்து அரச உத்தியோகத்திருக்கும் ப…

  18. படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது By VISHNU 26 JAN, 2023 | 04:05 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) படகொன்றின் மூலமாக 49 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் முவரும் கடந்த 25 ஆம் திகதி அதிகாலைவேளையில் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் படகொன்றின் மூலமாக பயணித்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களிடம் மேற்கொண்ட சோதனையிட்டுள்ளனர். இந்த சோதனையையடுத்து, அவர்கள் 49 கிலோ கிராமும் 906 கிராமு…

  19. இராணுவத்தினரை புலிகள் சுட்ட காட்சிகளே சனல் 4 வீடியோவில் காட்டப்படவை! இந்துவிடம் ஜனாதிபதி மஹிந்த மறுப்பு. [saturday, 2011-07-23 22:21:16] பிரிட்டனின் சனல் 4 தொலைக்காட்சியால் வெளியிடப்பட்டு இருக்கின்ற இலங்கையின் கொலைக்களம் என்கிற வீடியோவில் இராணுவத்தினரை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்கின்ற காட்சிகள்தான் காட்டப்பட்டு இருக்கின்றன என்று தெரிவித்து உள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்தியாவின் இந்திய பிரபல பத்திரிகைகளில் ஒன்றான இந்துவுக்கு வழங்கிய விசேட பேட்டி ஒன்றிலேயே மேற்கண்டவாறு கூறி இருக்கின்றார். அக்காணொளி குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையின் கொலைக்களம் ஒரு திரைப்படம் மாத்திரம், உண்மையான ஆவணம் அல்ல, உண்மையில் இதில் உள்ள வீடியோவின்…

  20. அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் - டக்ளஸ் எனது பையன்களை கவனிக்கச் சொன்னால் அக்கறையற்று பேசாமல் இருக்கிறார்கள். இனியும் பொறுத்திருக்க முடியாது. நானே நேரில் போய் இரண்டு தட்டு தட்டினால் தான் இவர்கள் திருந்துவார்கள் போல என திருவாக்கு மலர்ந்துள்ளார் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாந்தா. இன்று மாலை தனது சிறீதர் திரையரங்கில் யாழ்.மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளில் சிலரை சந்தித்து உரையாடினார். அவ்வேளை அங்கு சமூகமளித்திருந்த வடக்கு மாகாண ஆளுநரது செயலாளரான எல்.இளங்கோவன் எனும் அதிகாரி பத்திரிகையில் வெளிவந்த ச…

  21. சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும்: டி.எம்.ஜயரட்ண வீராப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதாவது நிறைவேற்றப்படுமானால் அது நாட்டு மக்களின் சடலங்களிலேயே நடைபெறும் என சிறிலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ண தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் சிறிலங்கா தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டுவரப்படவிருப்பதை எதிர்த்து கம்பளை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்குகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். "அமெரிக்கா உட்பட சில மேற்குலக நாடுகள் சிறிலங்காவுக்கு எதிராக மேற்கொள்ளும் சூழ்ச்சியை தோற்கடிக்க அனைவரும் வீத…

  22. சனல் 4 இன் விவரணம் குறித்து இலங்கை அரசு கருத்து வெளியிடுவதைத் தவிர்த்தது. பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள்: தண்டிக்கப்படாத போர்க் குற்றங்கள் என்ற விவரணம் குறித்து இல்ஙகை அரசு இதுவரை அதிகாரபூர்வமாக கருத்து எதனையும் வெளியிடவில்லை. அது தொடர்பாக இன்று கொழும்பில் உள்ள உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பலர் தொலைபேசியில் இலங்கை அமைச்சர்களைத் தொடர்பு கொண்டு கருத்து அறிவதற்கு முற்பட்டபோதிலும், அமைச்சர்கள் எவரும் பதிலளிக்க விரும்பவில்லை. இறுதி யுத்தத்தின்போது வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சியில் முன்னர் காண்;பிக்கப்பட்ட விவரணம் போலியானதென இலங்கை அரசு …

    • 5 replies
    • 1.2k views
  23. உலகத் தமிழர்களின் நன்றி: தமிழக முதல்வர் மகிழ்ச்சி- ஒரணியில் திரள அழைப்பு [வியாழக்கிழமை, 09 ஒக்ரோபர் 2008, 06:59 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வே தமிழ்ச் சங்கம், வட அமெரிக்க தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட உலகத் தமிழர்களின் ஆதரவுக்கு தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சென்னையில் இன்று வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: ஓரணியில் திரளக் கூடாதோ? சரித்திரம் படைத்த தமிழர் சாகிறார் என்ற செய்தி செவியினில் எட்டியவுடன் கதவு திறந்தது - மத்தியப் பேரரசு - நம் கதறல் கேட்டு; கண்ணீர் துடைக்க கரமும் நீட்டியது. நாடு கடந்து வாழ்கின்ற நார்வே தமிழ்ச் சங்க நண்பர்களும்; நம்பிக்கை துளிர்த்தி…

  24. ஒரு அப்பாவித் தமிழன் : "இலங்கையிலை யுத்த நிறுத்தம் ஏற்பட இலங்கை அதிபருடன்தானே பேசவேண்டும் அல்லது கடிதமெழுத வேண்டும்? கலைஞருக்கு கடிதமெழுதி என்ன பயன்?" கொஞ்சம் விவரமான தமிழன் : "கலைஞருக்கு கடிதமெழுதினால் யுத்த நிறுத்தம் வரவே வராது என்டது நிச்சயம். ஸ்ரீலங்கா அதிபருக்கு கடிதம் எழுத அவரும் பகிடி வெற்றி விளங்காமல் யுத்தத்தை நிறுத்தீட்டா....

  25. தமிழ் மக்­களின் நீண்­ட­கால பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கு முன்­வைக்­கப்­படும் அர­சியல் தீர்­வா­னது வடக்­கையும் தெற்­கையும் இணைக்கும் இன ஒற்­று­மையைக் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய தீர்­வாக இருக்க வேண்­டுமே தவிர வடக்கு, -கிழக்கை இணைக்கும் இன­வாதத் தீர்­வாக அமை­யக்­கூ­டாது என ஜே.வி.பி.தெரி­வித்­துள்­ளது. வடக்கு, கிழக்கை இணைக்கும் தீர்­வுக்கு கடு­மை­யாக எதிர்ப்பை வெளிப்ப­டுத்­து­வ­தா­கவும் அக்­கட்சி சுட்­டிக்­காட்­டி­யது. புதிய அர­சியலமைப்பு தொடர்பில் மக் கள் விடு­தலை முன்­ன­ணியின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே கட்­சியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­நா­யக மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், இலங்­கையின் இனப்­பி­ரச்­சினை மற்றும் நீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.