ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
நினைவுத்தூபியை அமைப்பதற்கு நிதி உதவி கோருகின்றனர் மாணவர்கள் 4 Views சிறீலங்கா அரசினாலும், யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தினாலும் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை மீள அமைப்பதற்கு தமிழ் மக்கள் அனைவரும் தம்மால் இயன்ற நிதி உதவிகளை வழங்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த 13 ஆம் நாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அறிக்கையின் முழுமையான வடிவத்தை நீங்கள் கீழே காணலாம். https://www.ilakku.org/?p=39574
-
- 34 replies
- 3.9k views
-
-
யாழ்.ஊர்காவற்றுறைப் பகுதியில் தன்னை திருமணம் செய்யும்படி பெண்ணொருவரை தொந்தரவு செய்த நபரை திங்கட்கிழமை இரவு (26) கைது செய்ததாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர். ஊர்காவற்றுறை கரம்பன் மேற்கினைச் சேர்ந்த கந்தையா லிங்கேஸ்வரன் (34) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் அதே பகுதியினைச் சேர்ந்த 33 வயதுடைய பெண்ணொருவரை, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி அடிக்கடி தொந்தரவு செய்ததுடன், குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்று பொருட்களையும் உடைத்துள்ளார். இது தொடர்பாக தொந்தரவுக்குள்ளாகிய பெண் ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்தில் ஒரு மாத காலத்திற்கு முன்னர் முறைப்பாடு செய்திருந்தமையால் குறித்த நபர் தலைமறைவாக இருந்துள்ளார். இந்நிலையில் த…
-
- 2 replies
- 3.9k views
-
-
தமிழ்செல்வன் அண்ணாவின் வாகனம் கிளைமோரில் சிக்கியதாகவும் அதில் 4 பேர் உயிரிழந்ததாகவும் தமிழ் செல்வன் அண்னா வாகனத்தில் இல்லாததால் தப்பித்ததாகவும் சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டு இருகின்றது வழமையான பொய்களை சிங்கள பத்திரிகைகள் அவிழ்துவிடுவதால் உறுதிப்படுத்த கேட்கின்றேன் http://www.elakiri.com/forum/showthread.php?t=30732
-
- 5 replies
- 3.9k views
-
-
யாழ்குடாவில் மூடப்படும் படை முகாம்கள் திகதி: 28.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக பெரும் முயற்சிகளை மேற்கொண்டுவரும் சிறிலங்கா இராணுவம் களமுனையில் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் யாழ்குடாவில் இருந்து படையினரை மீளப்பெற்று வன்னிக்கு அனுப்பி வருகின்றது. அண்மையில் அராலி, பருத்தித்துறை, அச்சுவேலி ஆகிய பகுதிகளில் இருந்து முகாம்களை மூடி படையினரை வன்னிக்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் வலிகாமம் சண்டிலிப்பாய் பகுதியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த பெரியளவிலான படைமுகாம் நேற்று நள்ளிரவுடன் மூடப்பட்டு, தற்போது அப்பகுதியில் சிறிய காவல் அரண்கள் இரண்டை மட்டும் படையினர் நிறுவி வருகின்றனர். சங்கதி
-
- 4 replies
- 3.9k views
- 1 follower
-
-
-
- 49 replies
- 3.9k views
-
-
Published By: DIGITAL DESK 3 25 OCT, 2023 | 09:39 AM ஆர்.ராம்- இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் அவருடைய முதுமை காரணமாக செயற்பாட்டு அரசியலில் பங்களிப்புச் செய்யமுடியாதிருப்பதன் காரணமாக அவர் தனது பதவியைத் துறக்க வேண்டுமென அக்கட்சியின் பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக கோரியுள்ளார். தனியார் தொலைக்காட்சியொன்றில் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றபோது, 288 பாராளுமன்ற நாட்களில் வெறுமனே 39 நாட்களில் தான் பாராளுமன்றத்துக்கு இரா.சம்பந்தன் வருகை தந்திருக்கின்றார் என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பெறப்…
-
- 50 replies
- 3.9k views
- 2 followers
-
-
சரத் பொன்சேகா இந்தியாவுக்கு அவசர விஜயம். 01.03.2008 / நிருபர் சங்கிலியன் சிறிலங்காப் படைத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா அவசர விஜயமாக நாளை இந்தியாவுக்குச் செல்லவுள்ளார். ஒருவார காலம் அங்கு தங்கியிருக்கும் அவர் சிறிலங்கா இந்திய இராணுவ ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவார். சிறிலங்கா இராணுவத் தளபதி மிக உயர்மட்ட இந்திய பாதுகாப்பு உயர் அதிகாரிகளை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடக்கம் சந்தித்துப் பேசுவார் என்றும் அதனைத் தொடர்ந்து முக்கிய விடயங்கள் குறித்து பல தரப்பினருடனும் கலந்துரையாடி இந்தியாவின் இராணுவ உதவியையும் ஒத்துழைப்பையும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை ஆராய்வார் என்றும் பாதுகாப்பு வட்டாரங…
-
- 32 replies
- 3.9k views
-
-
திகதி: 25.07.2010 // தமிழீழம் சங்கதி இணையத்தள முகவரி தனிநபர் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பதிவுக்குரியவர் அதனைக் கையகப்படுத்தி தவறானவர்களின் கைகளில் ஒப்படைக்க முனைந்துள்ள நிலையில், அவ் இணையத்தளத்தின் ஆசிரியர் குழுமம் முழுமையாக வெளியேறி www.sangathie.com என்ற புதிய இணையத் தளத்தில் இயங்கவுள்ளது. இவ் இணையத்தளமே கடந்த காலங்களில் இயங்கிவந்த இணையத்தள செய்தியாளர்களால் இயக்கபடவுள்ளது என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். அத்துடன், கடந்த காலங்களில் நீங்கள் தொடர்புகொண்ட இலத்திரனியில் முகவரியில் sankathireaders@gmail.com உங்கள் தொடர்புகளை மேற்கொள்ளலாம் என்பதையும் அறியத்தருகின்றோம். நன்றி சங்கதி நிர்வாகம் http://www.sangathie.com/index.p…
-
- 20 replies
- 3.9k views
-
-
உலக சமுதாயம் உதவ வேண்டும் - எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூடத் தெரியவில்லை: அனோமா திகதி: 10.02.2010 // தமிழீழம் கைது செய்யப்பட்ட சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா ஏபிசி நிறுவனத்துக்கு தெரிவிக்கையில், எனது கணவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக நான் அஞ்சுகிறேன். நான் மிக மிக கவலையுடன் இருக்கிறேன். தற்போது அவரை எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று கூடத் தெரியவில்லை. அவரை அழைத்துச் சென்றவர்கள், எங்கே கொண்டு சென்றுள்ளோம் என்பதைக் கூட எனக்குத் தெரிவிக்கவில்லை. எனது கணவரை இந்த அரசு கைது செய்யவில்லை. மாறாக கடத்திச் சென்றிருக்கிறது. எனது கணவரைக் கண்டுபிடிக்க உலக சமுதாயம் உதவ வேண்டும். எனக்கு யாரிடம் போய் குமுறுவது என்று கூட…
-
- 47 replies
- 3.9k views
-
-
சுழிபுரம் முருகன் கோவிலும் பௌத்த மயமாகும் அபாயம்! adminAugust 3, 2023 யாழ்ப்பாணம் சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த அரச மரம் தொல்பொருள் சின்னமாக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் அரச மரத்தை தொல்பொருள் திணைக்களத்தினர் ஆக்கிரமித்து புத்தர் சிலைகளை நிறுவி , முருகன் ஆலயத்தை ஆக்கிரமித்து விடுவார்களோ எனும் அச்சம் அப்பகுதி மக்களிடம் எழுந்துள்ளது. அதேவேளை கடந்த வருடம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி பிக்குகள் சிலர் ஆலயத்திற்கு வந்து சென…
-
- 41 replies
- 3.9k views
- 1 follower
-
-
தமிழ்.னெற் இணையத் தளத்தில் வெளியாகி இருக்கும் Chinese identify Tamils conducive in breaking up India, என்னும் கட்டுரை நான் இது நாள் எழுதி வந்த விடயத்தையே கூறி இருக்கிறது.இந்தியாவைப் பலமிழக்க அல்லது இந்தியாவுடன் பேரம் பேச சீனா இந்தியாவின் காலனிய ஆதிக்கத்தில் இருந்து விடுதலை பெறப் போராடும் தேசியனங்களின் விடுதலைப் போரட்டங்களை ஊக்குவிக்கும்.இதனைத் தமிழர்கள் பயன்படுத்த வேண்டும். TamilNet, Tuesday, 11 August 2009, 04:36 GMT] A recent article appeared in a Chinese strategic think tank saying “If China takes a little action, the so-called Great Indian Federation can be broken up,” and its argument that China in its own interest and the progress of whole Asia, sh…
-
- 15 replies
- 3.9k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் முல்லைத்தீவில் பதுங்கியிருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து உயிருடன் பிடிப்பதே எங்களது நோக்கம் என்று இலங்கை ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார். கிளிநொச்சி மற்றும் ஆணையிறவை ராணுவம் பிடித்துள்ள நிலையில் தற்போது முல்லைத்தீவை குறி வைத்துள்ளனர். புலிகளின் கடைசி புகலிடமாக இது கருதப்படுகிறது. முல்லைத்தீவில்தான் தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. முல்லைத்தீவு வனப்பகுதியில் மிக மிக பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ள 30 அடி ஆழ பதுங்கு குழியில் சகல பாதுகாப்புடன் பிரபாகரன் தங்கியுள்ளார். அவரது இடத்தை அவ்வளவு எளிதில் யாரும் அறிந்து கொள்ள முடியாதபடி …
-
- 14 replies
- 3.9k views
- 1 follower
-
-
ஊர்காவற்துறையில் இளைஞரின் சடலம் மீட்பு யாழ் ஊர்காவல்துறை பருத்தியடைப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. வெட்டுக் காயங்களுடன் இந்த இளைஞர் சடலம் மீட்க்கப்பட்டு யாழ் போதனா மருத்துவ மனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சடலம் பருத்திடைப்பு ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 24 அகவையுடைய தம்பு கோகுலன் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தகவல்:சங்கதி
-
- 24 replies
- 3.9k views
-
-
ஒன்றிணைந்த தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோறளைப்பற்று பிரதேச மக்களால் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய சந்தியில் போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது வாழ விடு வாழ விடு நிம்மதியாக வாழ விடு, குழப்பாதே குழப்பாதே நாட்டை குழப்பாதே, அரசியல் சுயநலத்திற்கு தமிழ் மக்கள் பகடைக்காய்களா?, மேட்டுக்குடி அரசியல்வாதிகளே எம் மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள், நாம் ஹர்த்தாளை எதிர்க்கின்றோம், நாம் ஒரே நாடு ஒரே தேசம் என்று ஒன்றுபட்டு வாழ்வோம், தேர்தலில் மக்கள் கற்பித்த பாடத்தினை மறந்து விட்டீர்களாக என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடன் மக்கள் கலந்து கொண்டனர். சமகால அரசாங்கத…
-
- 32 replies
- 3.9k views
-
-
கிபீர் விமானம் விழுந்து நொறுங்கியது [திங்கட்கிழமை, 16 ஒக்ரொபர் 2006, 18:25 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா விமானப் படையின் கிபீர் விமானம் கொழும்பு புறநகர் பகுதியில் இன்று விழுந்து நொறுங்கியது. "நீர்கொழும்பு பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்துள்ளது. இது தாக்குதலினால் வீழ்ந்ததா? அல்லது தொழில்நுட்பக் கோளாறால் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்துகிறோம்" என்று விமானப் படையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரிலிருந்து 30 கிலோ மீற்றர் தொலைவில் இச்சம்பவம் நடந்துள்ளது. http://www.eelampage.com/?cn=29335
-
- 15 replies
- 3.9k views
-
-
பார்வையிட இங்கே கிளிக் செய்க நன்றி காவலன்.கொம்
-
- 4 replies
- 3.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்றாக விரட்டியடிக்கப்படும் வரை திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனக் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவேனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிள்ளையான் இதனைக் குறிப்பிட்டதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 18 replies
- 3.9k views
-
-
கிளிநொச்சி புதுமுறிப்பு நோக்கி இரு முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெரும் எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 40 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். படையினரின் 12 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 3.9k views
- 1 follower
-
-
தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 திருச்சி: இலங்கையைச் சேர்ந்த ஷாயாமாபோலி மஹன்னிகயா அஸ்கிரியன் என்ற அமைப்பு தமிழகத்தின் திருச்சி, நெல்லை திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்டவுள்ளது. திருச்சி அருகே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. புத்தரின் 2500வது ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்ட இந்த சிங்கள அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திருத்தணி கோவில் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. திருச்சி கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இன்று திருநெல்வேலி கோவிலுக்கான பூமி பூஜை நடக்கிறது. திருச்சி அருகே பேரூரில் இந்தப்…
-
- 22 replies
- 3.9k views
-
-
-
- 28 replies
- 3.9k views
-
-
யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள சங்கிலியன் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் கொகோ கோலா விளம்பர பதாகையொன்று பொருத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட இறுதி மன்னான சங்கிலியனின் சிலையானது யாழ். மாநகர சபையால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு கடந்த 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் கௌரவமிக்க மன்னரான சங்கிலியனின் சிலையானது போற்றப்படக் கூடிய வகையில் இருக்கும் நிலையில், சிலையை கேலிக்குள்ளாக்கும் வகையில் சிலையின் கைகளில் ஏந்தியுள்ள வாளில் இவ்வாறு விளம்பர பதாகை பொருத்தப்பட்டுள்ளது. மாநகர சபை அனுமதி பெறப்பட்டு இது பொருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மாநகர சபை நிர்வாகத்துடன் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அவ்வாறு பொருத்த…
-
- 18 replies
- 3.9k views
-
-
-
புலிகளின் விமானங்கள் வன் சண்டைகளுக்கு ஏற்றதா? வான் சமர்களை நடத்தமுடியுமா? -கேசவன்- விடுதலைப்புலிகளிடம் விமனத் தாக்குதல் நடத்துகின்ற அளவுக்குப் பலம் கிடையாது அப்படித் தாக்குதல் நடத்த வந்தால் கூட அடுத்த நொடியிலேயே சுட்டு வீழ்த்திவிடுவோம். என அரசாங்கம் முன்னர் கூறியிருந்தது ஆனால் இப்போது புலிகள் வான் வழியாக வந்து தாக்குதல் நடத்திவிட்டுப் பத்திரமாகச் சென்று தரையிறங்கியிருக்கின்றனர் இந்தத் தாக்குதல் புலிகளின் வான்படைப்பலம் குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முன்னர் புலிகளிடம் இருக்கும் விமானங்கள் எந்த ரகத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்ற கேள்வி இருந்து வந்தது. ஆனால் கட்டுநாயக்கா தாக்குதலுக்குப் பின்னர் புலிகளிடம் இருப்பது செக் நாட்டுத் தயாரிப்பான ணுடுஐ…
-
- 7 replies
- 3.9k views
-
-
'பேசாலை கொலைகள்; கடற்படை, போலிசார் மீது நேரில் பார்த்தவர்கள் குற்றச்சாட்டு'-- போர் நிறுத்தக்கண்காணிப்புக் குழு இலங்கையில் மன்னார் மாவட்டம் பேசாலையில் கடந்த வாரம் நடந்த சம்பவங்களில் இலங்கை கடற்படையினர் மற்றும் போலிஸார் பொதுமக்களை சுட்டுக்கொன்றதாக நேரில் பார்த்தவர்கள் கூறுவதாக இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் கூறுகின்றனர். இது குறித்து தமிழோசையிடம் பேட்டியளித்த போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்காகப் பேசவல்ல அதிகாரி, தோர்ஃபினூர் ஒமார்சன் , மன்னார் அருகே பேசாலை தேவாலயத்தில் கையெறிகுண்டை வீசியவர்கள் ராணுவத்தை சேர்ந்தவர்கள் போலத்தான் தெரிகிறது என்றும் இது ஒரு கவலையளிக்கும் சம்பவம் என்றும் கூறினார் ராணுவத்தின் மீது எந்த அடிப்படையில் நீங்கள் குற்றம…
-
- 18 replies
- 3.9k views
-
-
தமிழ் மக்கள் ஆவலுடன், பெரும் எதிர்பார்ப்புடன் தற்போது காத்து நிற்கும் விடையம் என்னவென்றால், அது சனல் 4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள கொலைக்களங்கள் பாகம்- 2 தான். இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது. இது தமிழ் மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் தேசிய தலைவரின் இருப்பு அல்லது இறப்புக் குறித்து தமிழ் …
-
- 48 replies
- 3.9k views
- 1 follower
-