ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
சென்னை: சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முயன்ற மீனவ சமுதாய பெண்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தினந்தோறும் மீனவர்கள் கொலை செய்யப்படுவதைத் தடுக்காமல், நாங்கள் தாலி அறுப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரம் என்று அவர்கள் ஆவேசமாக குற்றம் சாட்டினர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பெண்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர். இலங்கை கடற்படை தொடர்ந்து தமிழக மீனவர்களை கொன்று குவித்து வருகிறது. கடலுக்குள் போகும் மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த செயலைக் கண்டித்தும், தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கண்டித்…
-
- 5 replies
- 1.1k views
-
-
தமிழின விடுதலைக்கு புலிகள் தடை என்றோர் இப்ப என்ன சொல்வர்? “பலஸ்தீனத்தின் கண்ணீருக்கும் ஈழத்தின் கண்ணீருக்கும் ஒரே மதிப்புத்தான். சுற்றியிருக்கும் அரபுலகத்தினால் பலஸ்தீனர்களின் விடுதலைக்கு உதவ முடியவில்லை. அல்லது அவர்களால் பலஸ்தீனியர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. அதைப்போல இந்தியாவில் இருக்கும் தமிழர்களாலோ அல்லது உலகம் ழுவதும் உள்ள தமிழர்களாலோ அல்லது இந்தியாவினாலோ ஈழத்தமிழர்களுடைய விடுதலைக்கு உதவவும் முடியவில்லை. அவர்களுடைய விடுதலையைப் பெற்றுக் கொடுக்க முடியவும் இல்லை” எனக் குறிப்பிட்டுத் தமிழகத்தில் இருந்து ஒரு நண்பர் கடிதம் எழுதியிருக்கிறார். நண்பரைப்பற்றிப் பின்னர் பார்க்கலாம். இப்போது அவர் கூறியிருக்கும் விசயத்தைப் பார்ப்போம். …
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்திய உதவியுடன் வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டத்தின் வீடுகள் யாழ். குடாநாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எச்.எம். அஸ்வர் இந்திய நாடாளுமன்றக் குழுவினரிடமும் வலியுறுத்தினார்.நேற்று முன்தினம் நாடாளுமன்றத்துக்கு பயணம் செய்திருந்த இந்திய நாடாளுமன்றக் குழுவினருடனான சந்திப்பு நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியின் குழு அறையில் இடம்பெற்றது. அதில் அஸ்வர் மேலும் தெரிவித்ததாவது. 48 மணித்தியாலங்களில் யாழ். குடாநாட்டிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். இவர்கள் இன்னமும் சிங்கள கிராமங்களில் தொடர்ந்தும் தங்கியுள்ளனர். இந்த இனச் சுத்திகரிப்புக்கு எதிராக எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் குரல் கொடுக்கவில்லை…
-
- 5 replies
- 700 views
-
-
'இனப்பிரச்சனைக்கு தீர்வு அறிவு பூர்வமாக இருக்க வேண்டும்':விக்னேஸ்வரன் இலங்கை இனப்பிரச்சனைக்கானத் தீர்வு அறிவு பூர்வமாக அணுகப்பட வேண்டுமேயன்றி, உணர்ச்சி பூர்வமாக அணுகப்படக் கூடாது என வட மாகாண முதலமைச்சர் இன்று தெரிவித்துள்ளார். வடமாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரன் உணர்ச்சி பூர்வமாக ஒரு விஷயத்தை அணுகும்போது அது பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும் என விக்னேஸ்வரன் இன்று வட மாகாண சபையில் கூறினார். இலங்கையில் புதிய அரசியல் சாசனத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துவரும் வேளையில், பல கலந்துரையாடல்களுக்கு பிறகு தமது கருத்துக்களை வடமாகாண சபை இன்று வெளியிட்டுள்ளது. மிகவும் கடுமையான உள்நாட்டுப் போரிலிருந்து தமிழ் சமூகம் மீண்டுவ…
-
- 5 replies
- 555 views
-
-
தமிழர் விரோத செய்திகளை வெளியிட்டு வருவதாகக் கண்டித்து, தமிழ் சினிமா இயக்குனர் சங்கத் தலைவர் பாரதிராஜா தலைமையில் தினமலர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழர் நலனுக்கு எதிராக செய்தி வெளியிடுவதை தினமலர் ஏடு உடனடியாக நிறுத்த வேண்டும் என இதன்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அத்துடன், தினமலர் தனது தவறை திருத்திக் கொள்ளத் தவறினால், ஒட்டுமொத்த தமிழர்களும் தினமலரை புறக்கணிக்க நேரிடும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் எச்சரித்துள்ளனர். படங்கள் இணைப்பு http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 5 replies
- 2.1k views
-
-
(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையிலான வேறுபாடு 9 பில்லியன் டொலர்களாகும், இந்த ஆண்டில் 4.2 பில்லியன் டொலர் கடன்களை மீளச்செலுத்த வேண்டியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சபையில் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89520/susil.jpg பாராளுமன்றத்தில் இன்று , 2020 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இம்முறை முன்வைக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு வழக்கமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் முழுமையான வரவுசெலவுத்திட்டம் அல்ல. முன்னைய அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதால் இவ்வாறானதொரு நில…
-
- 5 replies
- 1.1k views
-
-
சந்திரிகா, வெல்கம, அர்ஜுண, சுசில், அநுரவின் பங்கேற்பில் உருவாகின்றது புதிய அரசியல் அணி (ஆர்.ராம்) தென்னிலங்கை அரசியல் களத்தில் புதிய அரசியல் அணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் ஐந்தாம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த அரசியல் அணியில் மையப்புள்ளியாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநயக்க குமாரதுங்க இருக்கவுள்ளதோடு, குமார் வெல்கம, அர்ஜுண ரணதுங்க, சுசில் பிரேமஜயந்த, அநுர பிரியதர்சன யாப்பா ஆகியோரும் ஒருங்கிணையவுள்ளனர். இந்த அணியானது குமார வெல்கம தலைமையில் பதிவு செய்யப்பட்டுள்ள புதிய அரசியல் கட்சியான புதிய லங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்தி பரந்துபட்ட கூட்டணியொன்றை அமைக்கும் வகையில் இந்த அணி செயற்படவுள்ளது. இதுதொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் குமா…
-
- 5 replies
- 789 views
-
-
யாழ். போதனா வைத்தியசாலைக்கு... புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால், 5 மில்லியன் ரூபா அன்பளிப்பு! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கனடா நாட்டு புலம்பெயர்ந்த குடும்பம் ஒன்றினால் 50 இலட்சம் ரூபா பணம் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் உயிரிழந்த சீலா சுகுமார் ஞாபகார்த்தமாக இந்த உதவி சுகுமார் குடும்பத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமார் கருத்து தெரிவிக்கையில் குறித்த உதவி வைத்தியசாலை நலன்புரி சேவைக்கு வழங்கப்பட்டு அதன் ஊடாக இருதய சிகிச்சை பிரிவிற்கு தேவையான இயந்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார். இதன்போது யாழ்ப்பாண போதனா …
-
- 5 replies
- 486 views
-
-
உறங்கிப் போனதா கனடாவில் தமிழினம்?
-
- 5 replies
- 1.3k views
-
-
பழங்குடி மக்கள் மீதான இந்திய அரசின் காட்டு வேட்டைப் போரைக் கண்டித்து சென்னையில் பிரமாண்டக் கூட்டம் நடந்தது. மூன்றாயிரம் பேர் வரைக் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய், டில்லிப் பேராசிரியர் கீலானி, பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், தோழர் தியாகு, ஜவஹர் லால் நேரு பல்கலைக்கழத்தைச் சார்ந்த அமித் பாதுரி. பேராசிரியர் சாய்பாபா, உள்ளிட்டோ கலந்து கொண்டு பழங்குடி மக்கள் மீதான போருக்கு எதிராக தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர்.பழங்குடிகள், மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவதற்கான புறச்சூழலை ஊடகங்களின் உதவியுடன் உருவாக்கிக் கொண்டிருக்கும் முக்கியமான தருணத்தில் நடந்த கூட்டத்தின் பதிவுகள் இங்கே பகிரப்படுகிறது..முதலில் து…
-
- 5 replies
- 1.4k views
-
-
மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு கோட்டபாயவின் தந்துரோபாய காய்நகர்த்தல்! வெளியான பரபரப்பு தகவல் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவந்துள்ளது. தன்னை ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களிடம் கோட்டாபய அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தாக கூறப்படுகிறது. ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியின் வதிவிடம் மற்றும் அலுவலகம் என்பன அமெரிக்காவின் நியூயோர்க்கில் அமைந்துள்ளன. அமெரிக்க குடியுரிமை பெற்றிருந்த கோட்டாபய ராஜபக்ச, கடந்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது குடியுரிமையை இரத்துச்செய்தா…
-
- 5 replies
- 453 views
-
-
இவ்வளவு காலமும் சிவனின் பாதமாக இருந்த சிவனடிபாதம் , திடீரென புத்தரின் பாதமாக மாறியதன் பின்னணி என்ன? இலங்கையில் சிறுபான்மை மக்களின் பாரம்பரியங்கள், கலாச்சார பெருமைகளை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக இன்னொரு நடவடிக்கை குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்துக்களின் பாரம்பரியங்கள் திட்டமிட்ட முறையில் அழிக்கப்பட்டும், இல்லாமல் ஆக்கப்பட்டும் வருகின்றது. இவ்வாறான சில மோசமான விடயங்களால், தமிழர்களின் தொன்மையை யாராலும் மாற்றவோ, அழிக்கவோ முடியாது என்பது தான் வெளிப்படையான உண்மை. அந்த வகையில் கதிர்காம பகுதியில் பல தொன்மையான தமிழ் பாரம்பரிய விடயங்கள் சிங்கள பாரம்பரிய விடயங்…
-
- 5 replies
- 819 views
-
-
மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தியை – இன்று ஆரம்பிக்கின்றார் மைத்திரி!! மயிலிட்டித் துறைமுகம் 425 மில்லியன் ரூபா செலவில் இரண்டு கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. முதல் கட்ட அபிவிருத்திப் பணிகள் அரச தலைவர் மைத்திரி பால சிறிசேனவால் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான அரச தலைவர் செயலணியின் செயலர் வே.சிவஞானசோதி அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-, போருக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையின் மீன்பிடி உற்பத்தியில் 30 சதவீதத்துக்கு மேல் பங்களிப்புச் செய்த ஒரு பிரபல்யமான மீன்பிடி துறைமுகம் மயி…
-
- 5 replies
- 1k views
-
-
நாளை மறுநாள் கொழும்பு வரும் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணமும் செல்வார் JAN 30, 2015 | 15:29by கார்வண்ணன்in செய்திகள் மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டு தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் நாளை மறுநாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளார். இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்டப் பிரமுகர்களை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். போருக்குப் பிந்திய நல்லிணக்கம், மற்றும் பெர்றுப்பக் கூறல் தொடர்பாக கொழும்பில், ஆரம்பக் கட்டப் பேச்சுக்களை நடத்திய பின்னர், அவர், வடக்கு மாகாணத்துக்குப் பயணம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் யாழ்ப்பாணத்தில், வடக்கு மாகாணசபையின் உ…
-
- 5 replies
- 689 views
-
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கு இம்முறை தாம் ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக முற்போக்கு தமிழர் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன்போது கருத்து தெரிவித்த வியாழேந்திரன், கிழக்கு மாகாணத்தில் வலிமையான ஒரு அரசியல் கட்டமைப்பினால்தான் தமிழர்களின் இருப்பினை பாதுகாக்கமுடியும் என்ற அடிப்படை தத்துவத்துடனேயே 2018ஆம் ஆண்டு முற்போக்கு தமிழர் கழகம் ஆரம்பிக்கப்பட்ட…
-
- 5 replies
- 446 views
-
-
இராணுவத்தினருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து தண்டனை வழங்க கோரிக்கை விடுக்கப்படுமாயின், அதேபோல் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடந்த நிகழ்வு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்கத்திற்கான இறுதித் தீர்வு என்பது, நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்குமான நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கும் தீர்வாகும். இதன்மூலம் 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும். எனது அரசாங்கத்தில் முன்வைக்கப்பட்ட அதிகார பரவலாக்க யோசனையில் இருந்து தற்போது பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள உதலாகம அறிக்க…
-
- 5 replies
- 1.1k views
-
-
பலாலியில் நடமாடும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம் சிறப்புச் செய்தியாளர்Sep 17, 2019 | 15:06 by in செய்திகள் பலாலி விமான நிலையத்துக்காக, நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தை கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை இன்று அனுமதி அளித்துள்ளது. இந்த நடமாடும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம், 300 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர் அர்ஜூன ரணதுங்க முன்வைத்திருந்தார். அடுத்த மாத நடுப்பகுதியில் இருந்து பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கான நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக, பலாலி விமான நிலைய ஓடுபாதை …
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யபட மாட்டார் என, தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிமொழி வழங்கியிருந்தாக சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்,....................... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6194.html
-
- 5 replies
- 1.9k views
-
-
Published by T Yuwaraj on 2019-11-06 23:04:59 தமிழீழ விடுதலை இயக்கமான டெலோவின் தலைமைக்குழு வவுனியாவில் கூடி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக தீர்மானித்துள்ளனர். வவுனியாவில் பிரத்தியேகமான இடத்தில் கட்சியின் உபதலைவர் பிரசன்னா தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் தலைமைக்குழு உறுப்பினர்கள் 15 பேர் கலந்து கொண்டிருந்தனர். இவ் விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதில் பலத்த கருத்து நிலைப்பாடுகள் காணப்பட்ட நிலையில் பெரும்பான்மையாக சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க சம்மதம் தெரிவித்திருந்தனர். இதன் காரணமாக அவருக்கு …
-
- 5 replies
- 1.2k views
-
-
அமெரிக்காவில் திரைப்படம் வெளியிட்டதற்கு சம்மாந்துறை நீதிமன்றத்தை தாக்கிய புத்திசாலி தனம் முகமது நபிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதாக கூறி அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது சம்மாந்துறை மாவட்ட நீதிமன்றத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களே இத்தாக்குதலை நடத்தியதாக ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் தெரிவித்தனர். இந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கப்பட்டதால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். இதேபோன்று இரு மாதங்களுக்கு முன் மன்னாரிலும் முஸ்லீம்கள் நீதிமன்றத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியிருந்தனர்.…
-
- 5 replies
- 1k views
-
-
புதுடில்லியில் எரிக்..! இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாராம். [Monday, 2012-10-15 09:46:33] இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரும் அமைச்சருமான ௭ரிக் சொல்ஹெய்ம் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ளார். நேற்று முன் தினம் நோர்வேயிலிருந்து புறப்பட்ட அவர் நேற்று புதுடில்லியை வந்தடைந்துள்ளார். இவர் இந்திய அதிகாரிகளுடன் இலங்கை விவகாரம் குறித்தும் பேச்சுவார்த்தை நடாத்துவாரென தெரிவிக்கப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள நிலையில் ௭ரிக் சொல்ஹெய்மும் அங்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கையில் சமாதானப் பேச்சுவார்த்தை இடம்பெற்ற சமயம் சமாதானத் …
-
- 5 replies
- 866 views
-
-
சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதி தெற்காசியாவிலேயே இல்லை என்கிறார் சாணக்கியன்.! இரா.சம்பந்தன் போன்ற ஆளுமையுள்ள அரசியல்வாதியொருவர் தெற்காசியாவிலேயே இல்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் இடையிலான சந்திப்பு திருகோணமலை அன்புவழிபுரத்தில் இடம்பெற்றது. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உணர்வாளர்கள் இணைந்து இந்த சந்திப்பினை மேற்கொண்டனர். இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை, திருமலை மாவட்டத்தில் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் அரசியல் இடைவெளிகள் உட்ப…
-
- 5 replies
- 663 views
-
-
நா.நவரத்தினராசா யாழ்.மாவட்ட ஸ்ரீ ரெலோ அலுவலகத்தின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இனந்தெரியாதவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்குக்கும் மேற்பட்டவர்களே இத்தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீ ரெலோ அமைப்பின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் சோசூரியர் செந்தூரன் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/75825-2013-07-21-07-13-29.html
-
- 5 replies
- 464 views
-
-
போருக்குப் பின்னான காலத்தில் அநேகவீடுகளில் ஒவ்வொரு தாய்மாரின் உள்ளத்திலும் இந்த ஒப்பாரி மெளனத்திரைக்குள் ஒளிந்து ஒலித்தபடியேதான் இருந்தது. ஏனெனில் போரின் இருளில் எங்களின் இளையதலைமுறையின் உயிர்கள் ஈவிரக்கமின்றி அதிகாரத்தால் காவுகொள்ளப்பட்டிருந்தன. விடுதலைக்காகப் போராடப் போனவர்களை மாத்திரமன்றி, உயிர்ப் பயத்தில் பதுங்கு குழிக்குள் ஒளிந்திருந்த வர்களைக்கூட தப்பிக்க அதிகாரம் அனுமதிக்கவில்லை. மூன்று தசாப்தங்களா எம்மினத்தின் மீது நிகழ்ந்து வந்த இன அழிப்பின் உச்சக்கட்டம் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றப்பட்டிருந்தது. எங்கும் குருதியும், ஓலங்களும், பிணங்களும், தனித்து துடித்தபடி கிடக்கும் உடல் அவயவங்களும் அந்த மணல்வெளியை நிறைத்திருந்திருந்தன. குடியிருக்குமிடமெல்லாம் சவக்கிடங…
-
- 5 replies
- 788 views
-
-
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்திள் ஜி .எஸ்.பீ பிளஸ் சலுகை ரத்துச் செய்யப்படவுள்ளது . இலங்கையின் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரொப்பிய ஒன்றிய நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/ முந்தைய செய்தி : ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இந்த அறிக்கை இன்று கொழும்பில் அரசங்கத்திடம் ஒப்படைக்கப்படும் அதே வேளை இணைய தளத்திலும் பிரசுரிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறீகையினை மையமாக வைத்தே இலங்கைக்கான வரி…
-
- 5 replies
- 1.2k views
-