ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவரும் அமைச்சருமான ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்களால் புத்தர் சிலையொன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்த புத்தர் சிலைக்கு அண்மையாக மற்றொரு ஆளும் கட்சி வேட்பாளரின் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவ்விடத்துக்கு வந்த ஜனக பண்டார தென்னகோனின் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் இந்த புத்தர் சிலை முழுமையாக நொறுங்கியுள்ளது. பௌத்த கலாச்சாரத்தைக் காப்பாற்றுவதற்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதைக் கூட எதிர்த்து வரும் ஆளும் கட்சியின் பௌத்த வெறியர்கள் இது விடயத்தில் மௌனம் சாதிப்பது குறித்து விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடைந்த புத்தர் சிலையின் படத்தைப் பார்வையிட: http://www.eelamweb.com/
-
- 5 replies
- 2k views
-
-
முதலில் அரசியல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டும் ‐ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி அறிவித்துள்ளது. இனங்களுக்கு இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு முன்னர் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் ரீதியான தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பது மிகவும் அவசியமானதென கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமரர் ரிச்சர்ட் பத்திரன தொடர்பான இரங்கல் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உரிமைதாரர்கள் என்ற அடிப்படையில் சிறுபான்மை மக்கள் உள்வாங்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டம் மு…
-
- 5 replies
- 394 views
-
-
வேலணை வைத்தியசாலையில் பணியாற்றிவந்த கைதடி தெற்கு கைதடியைச் சேர்ந்த சரவணை தர்சிகா (வயது 27) என்ற இளம் தாதி வழமைபோல கடமைக்குச் சென்றிருந்த வேளை அவரது அறையில் தூக்கிட்டு உயிரிளந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே அவரது தங்கும் அறையில் கழுத்தில் சுருக்கிடப்பட்ட நிலையில் சீரு டையுடன் சடலமாக மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக யாழ். சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறும்போது இவ்வாறான சம்பவமொன்று வேலணை வைத்தியசாலையில் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான விசாரணைகள் நீதிவான் நீதிமன்றால் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினார். இதேவேளை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் ஆர்.சபேசன் ஊர்காவற்று…
-
- 5 replies
- 1.4k views
-
-
பெரிய அளவிலான தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழலும் அமைவிடமும் யாழ்ப்பாணத்தில் காணப்படுகின்றது. எனவே வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து தொழில்முயற்சிகளை மேற்கொள்ளலாம் என யாழ்.மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதுவர்கள் இன்று காலை 10 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரச அதிபரை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலின் பின் கருத்து தெரிவித்த யாழ். அரச அதிபர், வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர்ந்தோர் பெரிய அளவிலான முதலீடுகளுடன் தொழில் முயற்சிகளை மேற்கொள்வதற்கான நல்ல சூழல் யாழ்ப்பாணத்தில் நிலவுவதாக யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வெளிநாடுகளுக்குப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதர்களிடம்…
-
- 5 replies
- 605 views
-
-
’அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வருவதற்கு போட்டியிடுகின்றனர்’ - சித்தார்த்தன் தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்ற போட்டியில் இருக்கின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்தார். வவுனியா கோவில்குளத்தில் நேற்று (16) இடம்பெற்ற தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 33ஆவது வீரமக்கள் தினத்தில் கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய மக்களை பொறுத்த மட்டில் இந்த பொருளாதார கஷ்டம் என்பது புது விடயமல்ல. இது ஏற்கனவே எமது மக்கள் அனுபவித்த விடயம். எங்களுடைய மக்கள் நீண்ட க…
-
- 5 replies
- 462 views
-
-
இலங்கைக்கு... பலமான, ஆதரவை வழங்குவோம் – ஐ. நா. வில்... சீனா. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு பலமான ஆதரவை வழங்கும் என ஐ.நா.விற்கான சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் நல்லிணக்கத்தை பாதுகாக்க இலங்கை மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை சீனா பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சமூக ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், இறையாண்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இலங்கைக்கு பலமான ஆதரவு வழங்கப்படும் என கூறியுள்ளார். https://athavannews.com/2022/1298841
-
- 5 replies
- 631 views
-
-
மட்டக்களப்பு தரவைப்பகுதியில் கிபிர்த் தாக்குதல். மட்டக்களப்பு பிரதேச வான் பரப்பினுள் நுழைந்த சிறிலங்கா விமானப்படைக்குச் சொந்தமான கிபிர் விமானங்கள் தரவைப்பகுதியில் இன்று காலை 10:00மணியளவில் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து தடவைகள் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இதன் போது ஏற்பட்ட சேதவிபரம் பற்றித் தெரியவரவில்லை. www.sankathi.org
-
- 5 replies
- 1.6k views
-
-
மலையகத்திற்கு தனி உளவுப் பிரிவு ஜபுதன்கிழமைஇ 7 மார்ச் 2007இ 17:30 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ "மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து கண்டறியும் முகமாக சிறப்பு உளவுப் பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளதாக" ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரி.ஜே.மிஸ்கின் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: "ஊவா மாகாணத்தின் அனைத்து காவல்துறை பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்த பிரிவின் மூலம் தற்போது மலையகப் பகுதிகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து பல தகவல்களைப் பெறக்கூடியதாக உள்ளது. உளவுப் பிரிவினரின் தகவல்கள் அடிப்படையிலேயே அண்மையில் மலையகப் பகுதிகளில் பல ஆயுதங்களைக் கைப்பற்ற முடி…
-
- 5 replies
- 1.5k views
-
-
பாராளுமன்றத் தேர்தலொன்றை இப்போது நடத்தினால் தேசிய அரசாங்கத்தின் 100 நாட்கள் திட்டத்தை செயற்படுத்த முடியாது போகலாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்தோடு, 100 நாட்கள் திட்டத்தை அமுல்படுத்த பாராளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் அவசியமானது. முன்னதாக இது புரியவில்லை. சில திட்டங்களை அமுல்படுத்த முயற்சித்த போதே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் அவசியத்தை உணர்ந்து கொண்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதற்தடைவையாக நேற்று சனிக்கிழமை தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “பாரா…
-
- 5 replies
- 572 views
-
-
Published By: VISHNU 09 FEB, 2024 | 09:13 PM உலகின் பலமான நாடுகள் தமது தலைவிதியைத் தீர்மானிக்கும் வரை காத்திருக்காமல், தமக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் இயலுமை இந்து சமுத்திர வலய நாடுகளுக்கு உள்ளதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். இந்து சமுத்திர வலய நாடுகளின் நம்பிக்கையையும் விழிப்புணர்வையும் மேம்படுத்துவதன் மூலம் பாதுகாப்பான இந்து சமுத்திரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 2050 ஆண்டளவில் இந்தியா, இந்தோநேசியா போன்ற நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி 8 மடங்காக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் வகையில் நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்தும் உ…
-
- 5 replies
- 535 views
- 1 follower
-
-
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி என்ற பயணத்தை ஆரம்பிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். ஆனால் ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்கள் தாம் அடிபணிந்த சமூகம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில் அதிகாரங்களை அவர்களுக்கும் வழங்கி தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. ஐக்கிய இலங்கை என்பதே மஹிந்த -ரணில் இருவரதும் நோக்கமாகும். ஆனாலும் அதனை அடைய முயற்சிக்கும் வழிமுறை வேறு எனவும் அவர் குறிப்பிட்டார். புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு, வீடமைப்பு நிர்மாணத்துறை …
-
- 5 replies
- 1.2k views
- 1 follower
-
-
பிரகீத்தை கடத்திய சத்யா மாஸ்டர், நகுலனுக்கு விளக்கமறியல்AUG 08, 2015 | 5:48by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள இருவரையும், விளக்கமறியலில் வைக்க ஹோமகம நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சத்யா மாஸ்டர் எனப்படும் கணபதிப்பிள்ளை சுரேஸ், நகுலன் எனப்படும் சுமதிபாலன் சுரேஸ் ஆகிய இருவருமே, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்திச் சென்ற சிறிலங்கா இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தனர். இவர்கள் இருவரும், வவுனியாவில் கைது செய்யப்பட்டனர். நேற்று ஹோமகம நீதிமன்றத்தில் இவர்கள் நிறுத்தப்பட்டு, ஒரு மாதம் விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி பெறப்பட்டுள…
-
- 5 replies
- 838 views
-
-
கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலைக்கு எரிபொருள்கொண்டு செல்லும் நிலக்கீழ் குழாயில் சேதம் ஏற்பட்டதால் விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் பெருமளவு எரிபொருள் கசிந்துள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்தனர். களனி பாலத்திற்கு அருகிலேயே இக்கசிவு ஏற்பட்டுள்ளது. சுமார் அரைமணித்தியாலம் இக்கசிவு இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தமிழ் மிரருக்குத் தெரிவித்தனர். நேற்று பிற்பகல் 3 மணியளவில் இக்கசிவு ஆரம்பித்தது. பெருமளவு எண்ணெய் கசிந்து நிலத்தில் வழிந்தோடியபோதிலும் இக்கசிவு ஏற்பட்ட சரியான இடத்தை நேற்றிரவு வரை கண்டறிய முடியவில்லை எனவும் அவ்வதிகாரிகள் தெரிவித்தனர். இக்கசிவினால் ஏற்பட்ட இழப்பின் அளவும் இன்னும் மதிப்பிடப்படவில்லை. துறைமுகத்திலுள்…
-
- 5 replies
- 760 views
-
-
மரணத்தின் பின்னும் மன்னிக்கத் தயார் இல்லாத தமிழ் மக்கள் உலக வரலாற்றில் அரசியல், இராணுவத் தலைவர்கள் உயிரோடு இருக்கும் பொழுதோ அல்லது அவர்களின் மரணத்தின் பின்னரோ அவர்களுடைய பட்டங்கள், பதவிகள், கேடயங்கள், பரிசு பொருட்கள் என்பவை தண்டனையாக பறிக்கப்படுவது நிகழ்ந்துகொண்டே இருக்கிறன. இத்தகைய தண்டனை என்பது மக்களின் விருப்புக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்டு வரலாற்றில் நிகழ்ந்திருக்கிறது. எனினும் பெரும்பாலும் மக்களின் விருப்புக்கு உட்பட்டதாகவே இத்தகைய தண்டனைகள் நிகழ்ந்ததை வரலாறு எங்கிலும் காணமுடியும். அத்தகைய ஒரு தண்டனையாகவே தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவருமாய் இருந்த இரா. சம்பந்தனின் மரணக்கிரியை மக்கள் புறக்கணித்ததை எடுத்துக்கொள்ள வே…
-
-
- 5 replies
- 840 views
-
-
சிறிலங்காவிற்கான படைத்துறை உதவிகளை வழங்கும் 2008 ஆம் ஆண்டிற்கான சட்ட ஆவணத்தில் அமெரிக்கா அரச தலைவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் கைச்சாத்திட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.7k views
-
-
ஜெனீவா மனித உரிமைப் பேரவையில் அமெரிக்க பிரேரணைக்கு இந்தியா ஆதரவளித்ததால் இந்தியாவை பழிதீர்க்கும் செயற்பாடுகளை மகிந்த அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடுத்த கட்டமாக இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் (IOC) செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தை ரத்துச் செய்வதற்குத் தேவையான ஆலோசனைகள் பெறப்பட்டு வருகின்றன. இந்தியாவைப் பழிதீர்க்கும் நோக்கில் இந்தியாவிற்கிடையிலான வர்த்தக உறவுகளில் இடைவெளியை அதிகரித்துக் கொள்வதற்கு மகிந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கமையேவே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிறிய ரக மோட்டார் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை…
-
- 5 replies
- 1.3k views
-
-
ஜெயானந்தமூர்த்தி தொடர்பாக கனடா நக்கீரனின் கருத்துக்கு தாயகத்திலிருந்து தமிழ்மாறன் பதிலடி. கிழக்கு மாகாணசபைத் தேர்தலை முற்றாகப் புறக்கணிக்க வேண்டுமென மட்டக்களப்பு மாவட்டததின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் விடுத்த வேண்டுகோள் இன்றைய காலத்திற்கும் எமது கொள்கைக்கும் முற்றிலும் பொருத்தமானது என்பதை என்னைப்போன்ற பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதிலும் கிழக்கு மக்களில் பலர் இந்தத் தேர்தல் மூலம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையோ அல்லது உண்மையான தீர்வையோ பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் உணர்ந்துள்ளனர். நான் எமது கொள்கைக்காகவும் எமது தேசத்திற்காகவும் பதினேழு ஆண்டுகள் என்னை அன்பணித்ததுடன் இறுதிவரை நின்று இன்றும் அதில் அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் கிழக்கு …
-
- 5 replies
- 981 views
-
-
பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை திகதி: 15.12.2008 // தமிழீழம் // [சங்கிலியன்] பொன்னாலை வரதராஐப் பொருமாள் ஆலயத்திற்கு அருகில் படையினரால் புதிய பௌத்த விகாரை ஒன்று நிறுவப்பட்டு வருகிறது. உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இப்பகுதியில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. படையினரால் நிறுவப்பட்டு வரும் இப்பௌத்த விகாரை வரதராஐப் பெருமாள் ஆலயக் காணியில் நிறுவப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சங்கதி
-
- 5 replies
- 2k views
-
-
இலங்கைப் பிரச்னை தொடர்பாக நாட்டையே உலுக்கும் முடிவை முதல்வர் கருணாநிதி எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும், தமிழர் பிரச்னைக்கு அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவரது உண்ணா விரதம் சனிக்கிழமை மூன்றாவது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கட்சித் தலைவர்கள் திருமாவளவனை நேரில் சந்தித்து ஆதரவு தந்து வருகின்றனர். உண்ணாவிரதப் பந்தலில் டாக்டர் ராமதாஸ் பேசியது: இலங்கைத் தமிழர் பிரச்னை 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது எனவும், அதற்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையிலே சமர்ப்பிக்கப்படும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கையில் காணப்படும் வலுவற்ற வாசகங்களை எதிர்த்து உண்ணாவிரதப் போராட்டத்திலே குதித்துள்ள தமிழ் நாட்டு மாணவர்களுடன் இணைந்து அவுஸ்திரேலியா இளையோர்கள் 21.03.2013 வியாழக்கிழமை பி.ப 6.00 மணிக்கு Prince Alfred Park, Parramatta எனும் இடத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளார்கள். சுதந்திரமான தமிழீழத்தை அமைப்பதற்காக அடிப்படை உரிமையும் நீதியும் வேண்டிப் போராடும் தமிழ் நாட்டு மாணவருடன் நாமும் தோளோடு தோள் சேர்ந்துள்ளோம். என்பதை எமது உண்ணாவிரதப் போராட்டம் உணர்த்துவதாக இருக்கின்றது. சிறிலங்காவில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் வெறும் மனித உரிமை மீறல்களுக்கும் போர்க்குற்றங்களுக்கும…
-
- 5 replies
- 770 views
-
-
ஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை. எமது கோரிக்கை நியாயமானதும், நீதியானதும் என்பதை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்கிறது. எமக்கான தீர்வ கிடைக்கம் காலம் வெகுதொலைவில் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். எமது கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்கள் எம்மை நேசிக்கின்றனர். எங்களுக்கு தீர்வைத் தர தயாராக உள்ளனர். ஆனால் அரசியல் தலைவர்கள் தமது சுயநலனுக்காகவும், தமது பதவிகளுக்காகவும் எமது உ…
-
- 5 replies
- 1k views
-
-
பிரச்சாரநடவடிக்கை என நிராகரித்துள்ள இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சர்வதேச குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார் இலங்கை வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியதாக தெரிவிக்கப்படுவதை நிராகரிததுள்ள அமைச்சர் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் நிராகரிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள்விடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதுஅந்த அறிக்கையில் முன்னொருபோதும் இல்லாத பிரச்சார நடவடிக்கை காணப்படுகின்றது.மூன்று தசாப்தகால யுத்தத்தின் பின்னர் இலங்கையின் வீரமிக்க படையினர் விடுதலைப்புலிகளை செயல் இழக்கச்செய்தனர்இலங்கை அரசாங்கம் நாட்டின் ஒருமைப்பாடு இறைமை ஆள்புல ஒருமைப்பாடு ஆகியவற்றை…
-
- 5 replies
- 875 views
-
-
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மௌனம் அதிர்ச்சியளிக்கின்றது என்று இந்தியாவில் உள்ள பிரபல சமூக சேவகி மேதா பட்கர் தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பாக தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு சென்ற அவர், நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இலங்கையிலும் ஈராக்கிலும் குழந்தைகள், குடிமக்கள் மீது நடைபெற்ற வன்முறைத் தாக்குதலை தடுத்து நிறுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபை இன்னமும் செயற்படாமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்தாலும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள், நிவாரண முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னமும் குற்றுயிரும், குலை உயிருமாக வாழ்வுக்குப் போராடும் நிலையில் தவிக்கின்றனர். …
-
- 5 replies
- 930 views
-
-
வணங்காமண் பொருட்கள் இன்று காலை கொழும்பு நோக்கி செல்கிறது காப்டன் அலி கப்பலில் வந்த வணங்காமண் நிவாரணப்பொருட்கள் இன்று(07.07.2009)காலை சென்னையிலிருந்து கொலராடோ கப்பல் மூலம் கொழும்பு நோக்கி புறப்படுகிறது. நாளை இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐரோப்பிய தமிழர்கள் அனுப்பிய நிவாரணப் பொருட்களுடன், கொலராடோ கப்பல் சென்னை துறைமுகத்தில் இருந்து இன்று இலங்கை புறப்படுகிறது. இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு, ஐரோப்பிய தமிழர்கள் உணவு, உடை, மருந்து என 884 டன் நிவாரணப் பொருட்களை வணங்காமண் கப்பலில் அனுப்பினர். அந்த நிவாரணப் பொருட்களை சிறிலங்கா அரசு ஏற்காமல், கப்பலை திருப்பி அனுப்பியது. இதையடுத்து வணங்காமண் கப்பல், ஜூன் 12ம் தேதி செ…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் வழங்கப்பட்டு வரும் வரிச் சலுகை (ஜி.எஸ்.பி. பிளஸ்) நிறுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் குறைவு என இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் ஏற்றுமதித் துறைக்கு வழங்கப்பட்டு வரும் சலுகையை நீடிப்பதற்கே ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகின்றது. ஆனால், மனித உரிமை விடயத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனில் சலுகை ரத்துச் செய்யப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்படும் என்று அந்த இராஜதந்திர வட்டாரங்கள் ரொய்ட்டர் நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளன. ‘எதிர்மறையான சிபாரிசுடன் அந்தச் சலுகை தொடர்ந்து வழங்கப்படும் என்றே தெரிகிறது” எனப் பெயரை வெளியிட விரும்பாத அந்த இராஜதந்திர …
-
- 5 replies
- 879 views
-