ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143649 topics in this forum
-
சிறிலங்காவுக்கான தரைவழிப்பாதை திட்டம் விரைவில் சாத்தியமாகும்- இந்திய அரசு நம்பிக்கைAUG 04, 2015 | 2:44by இந்தியச் செய்தியாளர்in செய்திகள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும் என்று இந்திய மத்திய அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான ராஜ்யசபையில் நேற்று எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு இதுதொடர்பாக பதிலளித்துள்ள இந்திய மத்திய நெடுஞ்சாலைகள் மற்றும் போக்குவரத்து இணை அமைச்சர் பொன் இராதாகிருஸ்ணன், “தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தையும், சிறிலங்காவின் தலைமன்னாரையும் இணைக்கும் தரைவழி மற்றும் தொடருந்துப் பாதை இணைப்பு விரைவில் சாத்தியமாகக் கூடும். சிறிலங்க…
-
- 4 replies
- 741 views
-
-
வணக்கம் நாதம்செய்திகள் : சனல்-4 தொலைக்காட்சியின் புதிய ஆவணப்பட நேரஞ்சல்..... தொடர்ந்து ஒளிபரப்பில்...... http://naathamnews.com/?p=4425
-
- 4 replies
- 1.5k views
-
-
மீண்டும் வருவேன் என்று புறப்பட்டார் ஹுஸைன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல் ஹுஸைன், மீண்டும் இலங்கைக்கு வருவேன் என்று கூறிவிட்டு, இன்று (10) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறினார். இன்று அதிகாலை 3 மணியளவில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அவர், டுபாய் நோக்கிப் புறப்பட்டார் என விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துரைத்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர், “வெகு விரைவில் மீண்டும் இலங்கைக்கு வருவேன்” என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது …
-
- 4 replies
- 427 views
- 1 follower
-
-
வீரகேசரி இணையம் யாழ். குடாநாட்டில் அரிசியின் விலை நாளுக்கு நாள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிகரித்துச் செல்கின்றது. தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை நூற்றி முப்பது ரூபாவினைத் தாண்டியுள்ளது. ஆயினும், அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அரிசிக்கான நியம விலை நடைமுறை பற்றி எவருமே கண்டுகொள்வதில்லையென நுகர்வோர் நலன்புரி அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. குடாநாட்டில் விலைக் கட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் எவருமே கடமையில் இல்லையெனவும் அவை கேள்வி எழுப்புகின்றன. குடாநாட்டின் உள்ளூர் உற்பத்தி அரிசி கையிருப்புக்கள் தீர்ந்து வருகின்ற நிலையில் அதன் விலையும் அதிகரித்துச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனால், கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் அரிசியே யாழில் நிவாரணக் கொடுப்பனவுகள் உள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
தன்னையும், தனது கைக் குழந்தையையும் கைவிட்டு, விவாகரத்துப் பெற வேண்டாமென மன்றாடினாள் மனைவி. ஆனால் விவாகரத்துப் பெற்று, மற்றொரு பெண்ணை மீண்டும் மண முடிப்பேன் என அடம்பிடித்தான் கணவன். நான் தவறு செய்திருந்தால் பகிரங்கமாக இங்கு மன்னிப்புக் கோருகிறேன் எனவும் கெஞ்சிப்பார்த்தாள். கல்நெஞ்சுக் கணவனோ சிறி தும் நெகிழ்ந்து கொடுக்கவில்லை. பொறுமையின் எல்லைக்கே சென்றாள் மனைவி, தான் கொண்டுவந்திருந்த கத்தி ஒன்றை தன் கைப்பையிலிருந்து எடுத்து ஆவேசத்துடன் கணவனைக் குத்தி விட்டு தன் கைக்குழந்தையுடன் அங்கிருந்து சென்று விட்டாள். இது கற்பனைக் கதையல்ல, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் காதி நீதிமன்றத்தில் நடந்த உண்மைச் சம்பவம். இந்தச் சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது: நிந்தவ…
-
- 4 replies
- 876 views
-
-
15.12.08 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேர்ண் Helvitia Platz இல் இருந்து சுவிஸ்சில் உள்ள இந்தியத்தூதரகம் நோக்கி இந்தக் கவனயீர்ப்போராட்டம் நடைபெற்றது. இந்திய அரசே உனக்குக் கண்ணில்லையா உன்தாய் வயிற்றுப்பிள்ளை நாமல்லவா! என்ற வேண்டுகோலுடன் பதாதைகளும், மெழுகுவர்த்திகளையும் ஏந்தியவாறு ஊர்வலமாக மக்கள் சென்றனர். தூதரகத்தின் முன்பாக ஊர்வலமாக சென்றடைந்த மக்கள் ஒன்று கூடி உணர்வுகளை வெளிப்படுத்தினர். ஆங்கு ஈகைச்சுடரை சுவிஸ் சமுக சேவைகள் அமைப்பை சேர்ந்த திருமதி.Anor Anna ஏற்றினார். தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ஜெயானந்தமுர்த்தி, திருமதி.பவானி, செல்வி.கீர்த்தனா ஆகியோர் உரைநிகழ்த்தினர். இந்தியத்…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா அரசின் இணையத்தளங்கள் மீதான தொடரும் தாக்குதல்கள்! இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் செயலிழந்துள்ளன Posted by Nilavan on February 10th, 2013 சிறிலங்கா அரசின் இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவருகின்றன. இதுவரை சிறிலங்கா அரசின் 50 இணையத்தளங்கள் வரை சைபர் தாக்குதலுக்கு இலக்காகி செயலிழந்துள்ளன. ஆகப்பிந்திய தாக்குதல் நல்லிணக்க ஆணைக்குழுவின் இணையத்தளம் மீது நடத்தப்பட்டுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது அமர்வு ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இணையத்தளங்கள் மீதான சைபர் தாக்குதல்களால் கணினிகளில் சேமிக்கப்பட்டிருந்த சிறிலங்கா அரசின் அதிகாரபூர்வ ஆவணங்கள், தகவல்களும் அழிந்து போயுள்ளன. ஊழியர் சேமலாப நிதியம், நீ…
-
- 4 replies
- 785 views
-
-
கிளிநொச்சி உதயன் அலுவலகம் மீது தாக்குதல் 03 ஏப்ரல் 2013 கிளிநொச்சியில் அமைந்துள்ள உதயன் பத்திரிகையின் அலுவலகம் மீது இன்று அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தபட்சம் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் கட்டடத்திற்கும், வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பத்திரிகைகளை விநியோகத்திற்காக அனுப்பும் நோக்கில் வானிலிருந்து இறக்கிய தருணத்தில் இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் காமயடைந்த இரண்டு பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தெரிவிக்கப்படுகிறது, இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து …
-
- 4 replies
- 602 views
-
-
அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் இல்லை! - சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நீதியரசர் விக்னேஸ்வரன்!! 'தற்போதைக்கு அரசியலுக்குள் பிரவேசிக்கும் உத்தேசம் எனக்கு இல்லை. வடக்கில் முதலமைச்சர் பதவியை விரும்பியதுமில்லை. சமூகப் பணிகளில் ஈடுபடவே நான் விரும்புகின்றேன். எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வேண்டிய அறிவுரைகளை வெளியிலிருந்து நான் வழங்கிக்கொண்டிருப்பேன்' என முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் அரசியலுக்குள் பிரவேசிக்கவுள்ளார் எனவும், அவரை வடமாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆலோசித்து வருகின்றது எனவும் அண்மை நாட்களாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நி…
-
- 4 replies
- 807 views
-
-
இவர்களை நேரடியாக தேர்தலில் போட்டியிட வைப்பதா? அல்லது பிரசாரப் பணிகள், தேர்தல் செயல்பாடுகளில் ஈடுபடுத்துவதா? என்பது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/archives/20153
-
- 4 replies
- 846 views
-
-
வடக்குப் பாதை வலையமைப்பை விருத்தி செய்வதில் டில்லி ஆர்வம் நேரில் வந்து ஆராயவுள்ளார் அமைச்சர் நிதின் கட்கரி ‘வடக்கு மாகாண பாதை வலையமைப்பை அபிவிருத்தி செய்வதில் இந்தியா வெகு ஆர்வமாக உள்ளது. இந்தியாவின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இது தொடர்பில் யாழ்ப்பாணத்துக்கு வந்து ஆராயவுள்ளார்’ இவ்வாறு தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ‘பலமிக்கதோர் இலங்கை’ பொருளாதாரக் கலந்துரையாடலின் தலைமை உரை நிகழ்த்தும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது நான் அண்மையில் இந்…
-
- 4 replies
- 406 views
-
-
போர்க்குற்ற விசாரணைகளில் சிறிலங்கா மாட்டியிருப்பது எவ்வாறு?: விளக்கமளிக்கும் சட்டவல்லுனர்கள் தரப்பு ..போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ரோம் சாசனத்துக்கு கட்டுப்படதேவையில்லாத நாடாக சிறிலங்கா காணப்படுகின்றபோதும் சர்வதேச குற்றவிசாரணைகள் நீதிமன்றத்தில் ஏறியாகவேண்டிய பாரிய சிக்கலுக்குள் சிறிலங்கா மாட்டக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக போர்க்குற்றங்கள் தொடர்பான சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:- சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்க தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கிடைக்கப்பெற்றால், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்யும்படி சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தின் பிர…
-
- 4 replies
- 1.5k views
-
-
காணாமற்போனவர்கள் தொடர்பாக விசாரணைக்குழு அமைக்கப்படுமென்று சர்வதேசத்திற்கு இலங்கை அரசு கூறி வருவது மக்களை ஏமாற்றும் செயல் என்று வடமாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவை மாநாடு இடம்பெறவுள்ளது. இதற்கு இலங்கை அரசு விசாரணைக்குழு அமைப்பதாக கூறுகின்றது. இது கண்துடைப்பு வேலையாகவுள்ளது. இவ்வாறான பல விசாரணைக்குழுக்கள் முன்னர் அமைக்கப்பட்டு இது வரையில் எதுவித தீர்வுகளும் வழங்கப்படவில்லை' என்றார். 'ஆகையால் சர்வதேசம் இதில் நேரடியாகத் தலையிட வேண்டுமென்றும் அதன் மூலமும் மக்கள் அச்சமி…
-
- 4 replies
- 541 views
-
-
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின் பொதுகூட்டம் இன்று மூதூரில் திருமலை நிருபர் வெள்ளிக்கிழமை, மார்ச் 19, 2010 gajen தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணியின்” திருகோணமலை மாவட்டத்துக்கான பொதுக்கூட்டம் இன்று வெள்ளி கிழமை காலை மூதூர் பிரதேசத்து மக்களைச் சந்தித்து, நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தமிழ் காங்கிரசின் சின்னத்தில் “தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி” போட்டியிடுவற்கான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து மாலை 3.00 மணிக்கு நியூ சில்வெர் ஸ்டார் விடுதியில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சந்திப்போது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட உள்ளதாக, திருக்கோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளர் …
-
- 4 replies
- 417 views
-
-
http://www.nitharsanam.com/?art=19959
-
- 4 replies
- 1.7k views
-
-
கவலைப்படாத தம்பி.... நான் இருக்கிறன்...
-
- 4 replies
- 441 views
-
-
தமிழ் கூட்டமைப்பு எம்.பி யோகேஸ்வரனுக்கு ஒரு சபாஷ்! வெள்ளி, 25 பெப்ரவரி 2011 20:31 மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மன் ஆலயங்களில் நேர்த்திக் கடன்களின் பொருட்டு மக்களால் வழங்கப்பட்ட நிலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக் கணக்கான சேலைகளை அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட எம்.பியுமான சீனித்தம்பி யோகேஸ்வரன் கோரிக்கை விடுத்து உள்ளார். இவர் இவ்வாலயங்களின் தர்ம கர்த்தாக்களுக்கு இக்கோரிக்கையை வலியுறுத்தி கடிதம் அனுப்பி உள்ளார். இவர் இக்கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பவை வருமாறு:- "இந்து சமயம் சனாதன தர்…
-
- 4 replies
- 997 views
-
-
தலைமன்னாரில் 3 மாணவிகள் கடத்தல் முயற்சி : அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டப்பட்ட சந்தேக நபர்கள் 19 May, 2023 | 07:05 AM தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில் மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர். தலைமன்னார் கிராமம் பகுதியில் மூன்று சிறுமிகளை வெள்ளை வேனில் கடத்த முற்பட்டதாக இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான வழக்கு விசாரணை மீண…
-
- 4 replies
- 408 views
-
-
செம்மணிப் படுகொலை நினைவேந்தல்!! யாழ்ப்பாணம் செம்மணிப் படுகொலையின் 22 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று நடைபெற்றது. செம்மணிப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிரிசாந்திக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. கிரிசாந்தியுடன் படுகொலை செய்யப்பட்ட ஏனைய மூன்று பேர் உட்பட,படுகொலை செய்யப்பட்டு செம்மணியில் புதைக்கபட்டவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் ஆரம்ப பிரிவு மாணவர்கள் பலருக்கு கற்றல் உபகாரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பாடசாலை மாணவர்கள், கிரிசாந்தினயின் உறவினர்கள், அயலவர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். …
-
- 4 replies
- 1k views
-
-
யாழ். விவசாயியால் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு! வெங்காயச் செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். குறித்த விவசாயி லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களைக் குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார். இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை நடுகை செய்து வெற்றி கண்டுள்ளார். இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக…
-
- 4 replies
- 575 views
- 1 follower
-
-
வித்தியாவின் கொலை சந்தேகநபரான குமார் சுவிஸ் ரஞ்சன் அல்ல ; புளொட் அறிவிப்பு புங்குடுதீவு மாணவி வித்தியாவில் படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட சுவிஸ் குமார் என்பவர், எமது அமைப்பைச் சேர்ந்த சுவிஸ் ரஞ்சன் அல்ல என்று புளொட் அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதனுடைய கொலையுடன் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தில் கைதாகியிருப்பவர், சுவிஸில் பிரகாஸ் என்றும் புங்குடுதீவில் குமார் என்றும் அழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் என்பவராவார். ஆயினும், வித்தியாவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பிரகாஸ் அல்லது குமார் என்பவரின் புகைப்படம்…
-
- 4 replies
- 807 views
-
-
அடுத்த சில தினங்களில் வெளியிடப்பட உள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கையில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி ஒளிப்பரப்பிய இலங்கையின் கொலைக்களம் விவரணப்படத்தில் காணப்படும் இலங்கை இராணுவத்தினரை கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறு பரிந்துரை ஒன்று அடங்கியுள்ளதாக நம்பதகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் உலக தமிழர் பேரவை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பின் தளபதிகளில் ஒருவரான கேர்ணல் ரமேஷிடம் விசாரணை நடத்தும் விடியோ படத்தில் உள்ள இராணுவத்தினரை அடையாளம் கண்டு, அவர்களையும் கைதுசெய்து, சட்டத்திற்கு முன் நிறுத்துமாறும் ஆணைக்குழு பரிந்துரை செய்ய உள்ளது. பாதுகாப்பு செயலாளர…
-
- 4 replies
- 1.3k views
-
-
ஐ.தே.க. தலைவராக ரணில் மீண்டும் தெரிவு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவர் மற்றும் ஏனைய நிர்வாகிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையிலேயே கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தெரிவாகியுள்ளார். தலைவர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரிய ஆகியோர் போட்டியிட்ட நிலையில் ரணில் விக்கிரமசிங்க 72 வாக்குகளையும் கரு ஜயசூரிய 24 வாக்குகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/32922-2011-12-19-10-21-56.html
-
- 4 replies
- 1k views
-
-
ஜெனிவா மாநாட்டில் தமிழ்க் கூட்டமைப்பு கலந்துகொள்ளாமை குறித்து கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிக்கப்பட்ட பின்னர் தான் கட்சியின் தீர்மானம் பகிரங்கப் படுத்தப்பட்டது. இது ஓரிருவர் எடுத்த முடிவல்ல. இவ்வாறு நேற்று யாழ் உதயனுக்குக் கருத்துத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். கூட்டமைப்பின் ஜெனிவா பயணம் இடைநிறுத்தப்பட்டது. தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு, ஜெனிவா மாநாட்டில் கலந்து கொள்ளாமைக்கான காரணங்களை விளக்கி கட்சி விரிவான அறிக்கையொன்றை விடுத்தது.இந்த அறிக்கை விடப்படுவதற்கு முன்னர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர இதர அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் …
-
- 4 replies
- 1.3k views
-
-
பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்கள் இன்று பதவி விலகல் – புதிய பிரதமராக ஹாிணி அமரசூாிய? புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டதை அடுத்து, பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று (23) பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய பிரதமர் மற்றும் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைச்சர்கள் சபையும் இன்று அமைச்சர் பதவியை விட்டு விலகவுள்ளனர். எவ்வாறெனினும், புதிய ஜனாதிபதி தனது கடமைகளை ஆரம்பித்த பின்னர் அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குரியவர்கள் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தற்போது அமைச்சுப் பதவிகளில் கடமையாற்றும் அமைச்சர்களும் அவரது தனிப்பட்ட ஊழியர்களும் வெளியேறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன. …
-
- 4 replies
- 530 views
- 1 follower
-