ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
தமிழீழத்துக்கு ஒப்பான ஒரு அலகு வேண்டும் என தேர்தலில் நின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் ஆதரவுகொடுக்காததை வைத்தே தாயகத் தமிழர்கள் அதை (தமிழீழத்தை) நிராகரித்துவிட்டார்கள் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் என தமிழர்கள் காதில் பூச்சுற்ற முயல்கிறார் தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். இன்று சிட்னியில் அவுஸ்திரேலியத் தமிழர் பேரவையால் ஒழுங்குபடுத்தப்பட்ட பொதுமக்களுடனான சந்திப்பிலே பொதுமகன் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது மேற்கண்டவாறு தெரிவித்து பலரின் கோபத்துக்கு ஆளானார் சட்டத்தரணியான சுமந்திரன். பத்மினி சிதம்பரநாதன் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் ஏன் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லையென்ற கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது தம…
-
- 4 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பதவி வேண்டாம்: சம்பந்தன் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை அமைச்சுப் பதவியை ஏற்க மாட்டேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும், எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ் வீரசிங்க மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
-
- 4 replies
- 652 views
-
-
தமிழ்த்தேசிய அரசியல் போராட்ட வரலாறு, எனக்கு வகுத்து அளித்திருக்கும் பொறுப்பை நான் தெளிவாக உணர்ந்திருக்கின்றேன்… தமிழ் மக்கள் பேரவை பேரவை செயலகம், பலாலி வீதி, கந்தர்மடம் 31.08.2018 அன்று மாலை 4.30 மணிக்கு இணைத்தலைவருரை எல்லோருக்கும் வணக்கம். ஒரு முக்கியமான கால கட்டத்தில் நாம் இங்கு கூடியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல்கள் வரப் போகின்றன. எமது பதவிக்காலம் முடிந்ததும் ஆளுநர் ஆட்சி நடத்தப் போகின்றார். அவர் ஆட்சியின் போது எமக்குப் பாதிப்பான நடவடிக்கைகள் நடைபெறப்போவதைத் தடுத்து நிறுத்த வேண்டியிருக்கும். முக்கியமாக பௌத்த விகாரைகளைத் திறந்து வைக்க இருப்பது தெரிய வந்துள்ளது. பலரும் உங்கள் இணைத்தலை…
-
- 4 replies
- 1.5k views
-
-
இந்தியா தனது பொறுமையை இழக்கும் ஒரு நேரம் வரும் ஜயந்த தனபால இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவுடன் உறவுகளை சிறிலங்கா பலப்படுத்த வேண்டும். விரும்பியோ, விரும்பாமலோ இந்தியாவின் புவியியல் கட்டுப்பாட்டுக்குள் சிறிலங்கா உள்ளது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என ஐநா சபையின் ஆயுத பரிகரண விவாகாரங்களுக்கான துணைப் பொதுச்செயலாளராக பதவி வகித்தவரும் சிறிலங்காவின் மூத்த ராஜதந்திரியுமான ஜயந்த தனபாலா தெரிவித்திருக்கின்றார். 20 மைல்களுக்கு அப்பால் உள்ள இந்தியாவை நாம் தூக்கி எறிந்து விட முடியாது. புத்திசாலித்தனமாக இந்தியாவுடனான உறவை இறுக்கமாக வைத்து வந்த ஜனாதிபதியிடமிருந்து 2009க்கு பின்னர் அந்தப்புத்திசாலித்தனத்தை காணமுடியவில்லையே’, என்றும் அவர் தெரிவித்துள்ளார். …
-
- 4 replies
- 1.8k views
-
-
அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "வெள்ளிநாதம்" வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
மணல் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பில் சவுக்கு மரங்கள் நடப்பட்டு உள்ளன. அந்த மரங்களில் தீ பிடித்து அது வேகமாக மற்றைய இடங்களுக்கும் பரவி வருகின்றது. சவுக்கு காட்டில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அப் பகுதி மக்கள் , பொலிசார், இராணுவத்தினர் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மணல் காட்டுக்கு சுற்றுலாவுக்கு வந்தவர்கள் சவுக்கு காட்டினுள் சமைத்து சாப்பிட்ட பின்னர் தீயினை உரிய முறையில் அணைக்காமல் சென்றதினாலையே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/123978/language/ta-IN/article.aspx
-
- 4 replies
- 875 views
-
-
பிரேரணை நிறைவேறியிருந்தாலும் ௭மது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் ஐ.நா. தலையிட முடியாது : அமைச்சர் சமரசிங்க திட்டவட்டம் ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ௭திராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் ௭மது உடன்பாடின்றி இலங்கையின் விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் மனித உரிமை ஆணையாளருக்கு இல்லை ௭ன்று பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் மனி த உரிமைகள் விவகாரங்கள் குறித்த ஜனாதிபதியின் விசேட தூதுவருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். இலங்கை அரசாங்கத்தின் உடன்பாடின்றி மனித உரிமை ஆணையாளரினால் தொழில்நுட்ப ஆலோசனை உள்ளிட்ட எந்த உதவியையும் எமக்கு வழங் முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜ…
-
- 4 replies
- 598 views
-
-
போலியான பல பீரங்கிகளைப் பயன்படுத்தி சிறிலங்கா வான் படையினரின் வான் கண்காணிப்பை தமிழீழ விடுதலைப் புலிகள் குழப்பி வருகின்றனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "சண்டே லீடர்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.9k views
-
-
[size=5]"வெளியேறு, வெளியேறு இராணுவமே வெளியேறு"[/size] [size=4]வடக்கு கிழக்கில் காணி சுவீகரிப்பில் இராணுவமும் அரசாங்கமும் ஈடுபடுவதாக தெரிவித்து அவ்வாறான நடவடிக்கைகளை கண்டித்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முறிகண்டி பிள்ளையார் ஆலத்தின் முன்றலில் ஆர்ப்பாட்டமொன்று இன்று பகல் இடம்பெற்றது. எமது இடங்களையும் பொது நிலங்களையும் பொது நிலங்களையும் மீட்டெடுப்பதற்கான கவனயீர்ப்பு போராட்டம் என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘எங்கள் நிலம் எமக்கு வேண்டும்’, எங்களுடைய வீட்டுக்கு செல்லவிடு, வெளியெறு, வெளியேறு இராணுவமே வெளியேறு, முறிகண்டி மக்களுக்கு என்ன நடந்தது, முறிகண்டி மக்கள் எங்கே?, யுத்தம் முடிந்து மூன்றாண்டுகள் இன்னும் எம் முற்றத்தில் இராணுவம், ஆடாதே, ஆடாதே, இர…
-
- 4 replies
- 934 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 40/1, 34/1 மற்றும் 30/1 பிரேரணைகளுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகுவதானது வடகிழக்கு தமிழ் மக்களுக்கும் உலகம் பூராகவும் உள்ள மக்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளதென முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். எனினும் இவ்வாறான முடிவு வியப்படையத்தக்கதொன்றல்ல. தொடர் பத்தாண்டு கால கட்டத்தின் முடிவே ஜெனிவாவில் அமைச்சர் குணவர்தன வெளியிட்ட அறிவிப்பு எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் முன்னாள் வடமாகாண முதலமைச்சரும் நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்…
-
- 4 replies
- 473 views
-
-
ஐ.நா. வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெற்றார் துணைச் செயலர் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டமை தொடர்பில் ஐ.நா பாராட்டி வெளியிட்ட அறிக்கையை வாபஸ் பெறுவதாக ஐ.நாவின் துணைத் செயலாளர் நாயகம் அஜெய் சிப்பர் தெரிவித்தார்.வவுனியா மெனிக்பாம் முகாமை அரசு மூடியதற்கு ஐ.நா வரவேற்று அறிக்கைவிட்டது. ஆனால் மெனிக்பாம் முகாம் மூடப்பட்டு முல்லைத்தீவு கேப்பாபிலவு மக்களை வைத்து சீனியாமோட்டை மற்றும் சூரியபுரம் காட்டுப் பகுதியில் புதிய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.இதனை ஐ.நா எதிர்க்காதது ஏன் என யாழ்ப்பாண சிவில் பாதுகாப்புக் குழுவினர் கேள்வி எழுப்பினர்.அந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள்கூட செய்துகொடுக்கப்படவில்லை எனவும் அவர் கள் தெரியப்படுத்தினர்.இதனைக் கேட்டறிந்த ஐ.நா. துணைச் செயலர் தாம் வெளியிட்ட அ…
-
- 4 replies
- 881 views
-
-
அமைச்சர் றிசாத்தின் பார்வையில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் படிப்பறிவில்லாதவர்களாம் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை இட ம்பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தரக்குறை வாக பேசியுள்ளார் அமைச்சர் றிசாத் இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அரச கட்டடங்கள் சில மக்கள் பிரதிநிதிகளிடம் இருப்பது குறித்து மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்ட கவனத்திற்கு கொண்டு வந்தார். இதன்போது அமைச்சர் றிசாட் பதியுதீன் தன்வசம் வைத்துள்ள அரச கட்டடத்தை (சேக்கிற் பங்களா) விடவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ…
-
- 4 replies
- 489 views
-
-
தினமும் 30 குரங்குகளை பலியெடுக்கும் மத்தல ராஜபக்ச விமான நிலையம்! [Tuesday, 2013-04-30 08:40:19] மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் தென் மாகாணத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பதற்காக, மத்தல ராஜபக்ச அனைத்துலக விமான நிலையத்தை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவின் உதவியுடன் கட்டியுள்ளார். இந்த விமான நிலைய கட்டுமானத்தினால், பறவைகள், மயில்கள், முதலைகள், யானைகள், போன்றவற்றின் வாழ்விடங்கள் இழக்கப்பட்டுள்ளன. அதேவேளை, இந்த விமான நிலையத்தினால் குரங்குகள் நாளாந்தம் பெருமளவில் உயிரிழந்து வருவதாகவும், இதுவரை…
-
- 4 replies
- 716 views
-
-
பிரபாகரனிடம் பேச்சுவார்த்தை நடத்த முயன்றேன்;பலன் கிடைக்கவில்லை:ஸ்ரீரவிசங்கர் இலங்கையில் முல்லைத்தீவு, வவுனியா பகுதிகளில் தமிழர்கள் தங்கவைக்கப்பட்டு உள்ள முகாம்களை பார்வையிட்டு விட்டு நேற்று சென்னை திரும்பிய வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஸ்ரீரவிசங்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இந்திய அரசு எங்களுக்கு உதவும் என்று ரொம்ப நம்பினோம். கைவிட்டு விட்டார்களே என்று வேதனையுடன் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் இந்திய அரசு மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டதாக கருதுகிறோம். தமிழர் பிரச்சினையைத் தீர்க்கும் அளவுக்கு தமிழ் தெரிந்த ஒருவரை தூதராக நியமிக்காததே இந்த பிரச்சினைக்கு முடிவு காணமுடியவில்லை என்று கருதுகிறேன். அத்துடன், இலங்கை பிரச்சினை …
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறீலங்காவில் தஞ்சம் அடைந்துள்ள பாக்கிஸ்தானியர்களை நாடுகடத்த வேண்டாம் என்று ஐ.நா அறிவித்துள்ளது! ஜூலை 4, 2014 சிறீலங்காவில் தஞ்சம் அடைந்துள்ள பாக்கிஸ்தானின் சிறுபான்மை இனத்தவர்களான அகமதியர்களை சிறீலங்கா அரசாங்கம் நாடுகடத்த வேண்டாம் என்று ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த யூன் மாதம் பாக்கிஸ்தானின் சிறுபான்மை இனத்தவர்களான 142போ் சிறீலங்காவில் கைதுசெய்துள்ளார்கள். இவர்களை நாடுகடத்தவுள்ளதாக சிறீலங்கா அரசு அறிவித்துள்ள நிலையில் அவர்களை நாடுகடத்தவேண்டாம் என்று ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் நேற்று அறிவித்துள்ளது.அத்துடன் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.http://www.sankathi24.com/news/43338/64//d…
-
- 4 replies
- 498 views
-
-
ஞாயிறு 30-07-2006 20:41 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] திருமலையில் படைநகர்வு ஆரம்பம் உக்கிர மோதல்கள் புலிகளால் முறியடிப்பு. திருமலை ஈச்சிலம்பற்று மாவியாற்றைக் கைப்பற்றும் நோக்குடன் சிறீலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்கும் படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இன்று பகல் வான்படையினரின் உதவியுடன் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளைப் போட கல்லாறுப் பகுதியிலிருந்து மாவிலாறு பகுதியை நோக்கி பாரிய படை நகர்வை சிறீலங்கா படையினர் மேற்கொண்டுள்ளனர். எனினும் விடுதலைப் புலிகளால் படையினரின் நகர்வு நோக்கியும் இராணுவ முகாங்கள் நோக்கியும் மூர்க்கமான எறிகணைத் தாக்குதி படையினரின் படையினரின் படைநகர்வை சூனியப் பிரதேசத்தில் வைத்து விடுதலைப் புலிகள் முறியடி…
-
- 4 replies
- 1.9k views
-
-
மிகுந்த மரியாதையுடன் அமெரிக்கத் தூதுவருக்கு...! கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் பிளேக் இலங்கை இனநெருக்கடி தொடர்பில் தெரிவித்துவரும் கருத்துகள் அரசியல் அரங்கில் பெரிதும் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. குறிப்பாக இனநெருக்கடிக்கு இராணுவத்தீர்வு காண முடியாது என்ற கருத்தை அண்மைக்காலமாக அவர் மிகவும் அழுத்தம் திருத்தமாக வெளியிட்டுவருவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஒரு மாதகால இடைவெளிக்குள் மூன்று சந்தர்ப்பங்களில் அமெரிக்கத் தூதுவர் இராணுத்தீர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மகாநாடு கடந்த மாத இறுதியில் காலியில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிளேக், இலங்கை நெருக்கடிக்கு இராணுவத்தீர்வு…
-
- 4 replies
- 2.3k views
-
-
கிழக்கு முதல்வர் பதவி குறித்து மைத்திரி, ரணிலுடன் கூட்டமைப்பு பேச்சு JAN 23, 2015 | 2:09by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் கிழக்கு மாகாணசபையில் முதலமைச்சர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு சரியானதே என, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஏற்றுக் கொண்டுள்ளனர். சிறிலங்கா அதிபரை மைத்திரிபால சிறிசேனவையும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினர். நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சந்திப்புகளின் போது, கிழக்கு மாகாணசபையில் இழுபறிக்குள்ளாகியிருக்கும் ஆட்சிமாற்றம், மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேச்சுக…
-
- 4 replies
- 571 views
-
-
இந்தியா ஆயுதம் வழங்கக்கூடாது - பாரதீய ஜனதாக் கட்சி இந்தியா, சிறீலங்காவிற்கு ஆயுதம் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என, பாரதீய ஜனதாக் கட்சியும் கோரிக்கை விடுத்துள்ளது. அகில இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின் செயலாளரும். நாடாளுமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரசர் இந்தக் கோரிக்கை முன்வைத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், இலங்கைத் தீவில் அப்பாவித் தமிழ் மக்கள் சிறீலங்கா அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.1k views
-
-
புதன் 29-08-2007 22:25 மணி தமிழீழம் [தாயகன்] ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்கள் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்களை விழுங்கி வயிற்றுக்குள் எடுத்துச் சென்ற இந்திய பிரசைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்த யுரோ நாணயத் தாள்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. pathivu
-
- 4 replies
- 2.2k views
-
-
ஜே.வி.பி.யின் வேண்டுகோளுக்கு அமையவே ஐக்கிய தேசியக் கட்சி, இனப்பிரச்சனைக்கு தீர்வாக முன்வைத்த இணைப்பாட்சி நிலைப்பாட்டிலிருந்து விலக முடிவு செய்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.7k views
-
-
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ளும் அதேநேரத்தில், காலங்காலமாக பரம்பரை அரசியல் செய்யும் தேவையும் விருப்பமும் எனக்கில்லை என்பதோடு என்னால் எனது சொந்த விடயங்களை கவனிக்க கிடைத்த சந்தர்ப்பமாகவும் இதனை எடுத்துக் கொள்கிறேன் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (15) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த செய்தி குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பாராளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட மக்கள் வழங்கியுள்ள தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதோடு பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ள உறுப்பினர்களுக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். …
-
- 4 replies
- 394 views
- 1 follower
-
-
இராணுவ தளபதிக்கு விதிக்கப்பட்ட தடையை சி.வி வரவேற்றமை தேசத்துரோக செயல்- தயாசிறி by : Yuganthini இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்துள்ள பயணத்தடையை, வட.மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் வரவேற்றுள்ளமை தேசத்துரோக செயற்பாடென ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் தயாசிறி ஜயசேகர மேலும் கூறியுள்ளதாவது, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர 2015 ஆம் ஆண்டு 31/1 பிரேரணயில் கையெழுத்திட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தம…
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ் – கொழும்பு சொகுசு பஸ்ஸில் முதிரைக் குற்றிகள்: பொலிசார் அதிர்ச்சி (Photos) சொகுசு பஸ்ஸில் முதிரை மரக் குற்றிகள் கடத்தப்பட்ட சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது, இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் சிறாட்டிக்குளம் பகுதியில் வைத்து யாழ்ப்பாணம் – கொழும்பு சேவையில் ஈடுபடும் சொகுசு பஸ்ஸில் சட்டவிரோதமான முறையில் முதிரை மரக் குற்றிகள் கடத்தி வரப்பட்ட போது பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. நேற்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் சாரதி கைதாகியதுடன், வாகன உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் அவ்…
-
- 4 replies
- 781 views
-
-
கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண் வன்புணர்வு – வீடு திரும்பிய நிலையில் முறையிட்டார்! யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி எல்லையை ஒட்டிய மாசேரிக்கும் குடத்தனைக்கும் இடையில் கடந்த 8ம் திகதி கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண், வீடு திரும்பிய நிலையில் தன்னை மூவர் வன்புணர்வுக்கு உட்படுத்தினர் என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இருந்து (08.06.2020) தென்மராட்சி – கொடிகாமத்தில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இளைஞர்கள் இருவரை சந்திக்க வந்த பெண்கள் இருவரை குழு ஒன்று வரணி எல்லையை ஒட்டிய மாசேரி பகுதியில் வைத்து கடத்த முயன்றுள்ளது. இதன்போது கடத்த முற்பட்டவர்களிடம் இருந்து 16 வயது சிறுமி ஒருவர் தப்பித்து வந்…
-
- 4 replies
- 651 views
-