ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143640 topics in this forum
-
முல்லைத்தீவில் விமானதாக்குதல் நிஷாந்தி (வீரகேசரி) முல்லைதீவில் சிலாவத்துறையில் ஸ்ரீலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் வெள்ளிக்கிழமை விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளன. சிலாவத்துறையிலுள்ள வடுதலைப்புலிகளின் கடற்படையின் தளமொன்றை தாக்கியழித்துள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடகமத்திய நிலையம் தெரிவித்துள்ளது எனினும் தாக்க்குதலின் போதான சேத விபரம் இன்னும் தெரியவரவில்லை.
-
- 0 replies
- 1.2k views
-
-
கடந்த ஆண்டு வன்னியில் நடைபெற்ற யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டிருந்ததும்,சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கில் சுட்டுக்கொல்லப்பட்டதுமான செய்திகள் ஏற்கனவே வெளிவந்திருந்தது.ஆனால் அண்மைக் காலமாக அந்தக் கொடூரங்கள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டது என்பதற்கான பல ஆதாரங்கள் புகைப்படங்களாகவும், காணொளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் மேலும் 4 புகைப்படங்கள் இலங்கை இராணூவத்தினரின் போர்க்குற்றத்தினை நிரூபிக்கும் முகமாக வெளிவந்திருக்கின்றது. நேற்று முன்தினம் சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான கொடூர இனப்படுகொலையை பார்த்து அதிர்ச்சியில் இருந்து மீளது இருக்கும் உலகத் தமிழர்களுக்கு இவை மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. …
-
- 0 replies
- 1.2k views
-
-
உலக பயங்கரவாதத்திற்கு எதிரான நாடுகள் ஒன்றிணைண வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச கோரியுள்ளார். அணிசேரா மாநாட்டில் பங்கேற்ற அவர் நேற்று மாலை ஆற்றிய உரையின் போது இலங்கையில் பயங்கவாதத்தினால் மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். அத்துடன் பொருளாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். சிறுவர்களை படைகளில் சேர்ப்பது பாரிய உரிமை மீறல் சம்பவம் என்றும் அவர் தெரிவித்தார் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 2 replies
- 1.2k views
-
-
சுவீடன் நாட்டு வெளியுறவு அமைச்சருக்கு இலங்கை வீசா மறுப்பு: இவருடன் செல்லும் மற்ற பிரித்தானிய, ப்ரென்ச் அமைச்சர்களுக்கு வீசா வழங்கப்பட்டுள்ளது. காரணம் : பல முக்கிய பிரமுகர்களை ஒரே நேரத்தில் கவனிக்க முடியாதாம். http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8022190.stm
-
- 0 replies
- 1.2k views
-
-
புதன் 17-10-2007 21:15 மணி தமிழீழம் [தாயகன்] ஜால சரணாலயத்தில் மற்றொரு குண்டுவெடிப்பு - மூவர் காயமடைந்தனர் ஜால சரணாலயப் பகுதியில் சிறீலங்காப் படையினர் தேடுதல் நடத்திவரும் நிலையில் மற்றொரு குண்டு வெடித்து சரணாலய அலுவலர்கள் இருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் ஹம்பாந்தோட்டை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். இன்றைய குண்டுவெடிப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் கிடைக்கவில்லை என அரச தரப்பு கூறுகின்றது. ஜால சரணாலயப் பகுதியில் அமைந்திருந்த சிறீலங்காப் படையினரின் முகாமொன்று கடந்த திங்கட்கிழமை விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டதில் 6 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். கொல்லப்பட்ட படையினரின் உடலங்களை மீட்கச்சென்ற அணியினரின் வாகனம் நேற்று அம…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாடசாலை மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர் மன்றம்! தீபாவளி, புதுவருட நாட்களில் சினிமா கதாநாயகர்களின் திரைப்படம் வெளியாகும் போது ரசிகர்கள் வழமையாக பாலபிஷேகம் செய்து வெடி கொளுத்தி ஆரவாரங்களில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் விஜயின் தெறி திரைப்படம் வெளியான இன்றைய புத்தாண்டு நாளில் விஜய் நற்பணி மன்றத்தினரால் யாழ்.செல்லா திரையரங்கில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள். வறுமைகோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு காலணி,புத்தகப்பை மற்றும் வறுமை கோட்டிலுள்ள இரு குடும்ப தலைவிகளுக்கு இரண்டு தையல் இயந்திரங்களையும் வடமாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் வழங்கி வைத்தார். சினிமா கதாநாயகர்களி…
-
- 24 replies
- 1.2k views
-
-
வரலாற்றில் ஒருமுறை கூட ஈழத்தமிழர்கள் மத்தியிலிருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்படுகிறார்களே அதை நாங்கள் கண்டிக்கிறோம் என்ற குரல் வந்ததே கிடையாது என்று நேற்று சென்னையில் நடைபெற்ற தமிழக இளைஞர் எழுச்சிப்பாசறை பொதுக்கூட்டத்தில் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இவர் உரையின் காணொளி [media=] http://www.periyarth...ikkal-3rd-year/
-
- 12 replies
- 1.2k views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தின் சர்வதேச உறவுகள் தொடர்பான குழுவை நேற்று சந்தித்த ஜனாதிபதி ராஜபக்ஷ, பயங்கரவாதத்தை ஒழிக்கும் விடயத்தில் நாட்டுக்கு நாடு வேறுபடக்கூடாது எனத் தெரிவித்துள்ளார்."பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முழு உலகும் பொதுவான இணக்கப்பாடு ஒன்றிற்கு வருதல் வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக வழங்கப்படும் ஒத்துழைப்பு மற்றும் செயற்பாடுகள் என்பன நாட்டுக்கு நாடு வேறுபடலாகாது. உலகின் எந்தப் பாகத்தில் இருந்தாலும் பயங்கரவாதத்தின் மூலம் துன்பப்படும் மக்களுக்காகக் குரல் கொடுக்கப்படும்போது ஒரே விதமான கொள்கையைக் கடைப்பிடிப்பது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பெரிதும் துணைபுரியும். ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் வாழும் அனைத்து இன …
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின்குரலின் சேமிப்பு ஏழல் சிறப்பு ஒலிபரப்பு இறுதிநாள் ஒலிபரப்பு நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
நாமல் ராஜபக்ஷ, ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணத்தையடுத்து நாளை 10 மணியவில் புதிய அமைச்சரவை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சத்திய பிரமாணம் செய்து கொள்ளப்படவுள்ளது. இதன் போது கடந்த நடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜே. ஸ்ரீரங்கா, உபேஷ்கா சுவர்ணமாலி மற்றும் மனுஷ நாணயக்கார.ஆகியோர்க்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை. மூத்த அமைச்சர்களின் மனக்கசப்பு, மற்றும் எதிரணிகளில் இருந்து பிரிந்து மஹிந்தவிடன் இணைந்தவர்கள் ஆகிய…
-
- 4 replies
- 1.2k views
-
-
"தேசிய நூதன சாலையில் துட்டகைமுனுவின் அஸ்தி" என்ற செய்திக்கான எதிர்வினையினை சிந்தனைக்கூடம்-யாழ்ப்பாணம் எனும் ஆய்வு அபிவிருத்தி நிறுவனத்தின் இயக்குனரும் தமிழரசுக்கட்சி முக்கியத்தவருமான பேராசிரியர் இரா.சிவசந்திரன் வெளியிட்ட ஊடக அறிக்கை. கொழும்பு தேசிய நூதன சாலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் தேசிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக பார லங்கா கண்காட்சியை திங்களன்று ஆரம்பித்து வைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர் கிறீஸ்துவுக்கு முன்னர் முதலாம் நூற்றாண்டில் ஆட்சி செய்த துட்டகைமுனு மன்னனின் அஸ்தியை புதிய கலசத்தில் இட்டு காட்சிப்படுத்தியே நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளார். இது ஒரு தேசிய பாரம்பரிய கண்காட்சி என கூறப்படுகின்றது. இலங்கை தேசிய பாரம்பரியம் எனும் ப…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜோன் ஸ்நோ சொல்கிறார் முரளி காமெரனுக்கு சொன்னாராம் வடக்கின் நிலமை நீங்கள் சந்தித்தவர்கள் சொன்னது போலே மோசமாக இல்லை என்று. இதோ ட்விட்டரில் இருந்து Jon Snow @jonsnowC46h Sri Lanka cricket icon Murali tells Cameron he is wrong about the North :Things are not as bad as he's been told அநாகரிகமான முறையில் இடப்பட்ட தலைப்பு மாற்றப்பட்டுள்ளது.
-
- 6 replies
- 1.2k views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்டால் அதனை தாம் ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் இணையதளத்தில் இந்தியா வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது. அதை விடுத்து மாறாக தனிப்பட்ட ரீதியில் நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமாக அமையாது.குறிப்பிட்ட சில நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் பிரேரணைகளினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை…
-
- 2 replies
- 1.2k views
-
-
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார். வெளிநாடொன்றுக்குச் செல்வதற்காக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த விமல் வீரவன்சவை, குடிவரவு - குடியகல்வு அதிகாரிகள் தடுத்து வைத்திருந்ததை அடுத்து அவரை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகவும் இரு கடவுச் சீட்டுக்களை வைத்திருந்த குற்றச்சாட்டிலேயே அவரை கைது செய்ததாகவும் கூறிய பொலிஸ் பேச்சாளர், விமல் வீரவன்சவை நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் கூறினார் - See more at: http…
-
- 3 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதலை தடுக்கும் விதத்தில் மனிதக்கழிவகற்றல் திட்டம் ஒன்று 2015 ஆம் ஆண்டு பங்குனி மாதமளவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சமூக அணிதிரட்டல் அலுவலர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். யாழ்ப்பாண தரைக்கீழ் நீர் மாசடைதல் பிரச்சனைக்குத் தீர்வு தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் கருத்தரங்கு இன்று காலை 10 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார். யாழ்ப்பாணத் தரைக்கீழ் நீர் மாசடைதலுக்கு முக்கிய காரணமாக வன்னீர் பிரச்சனையே காணப்படுகின்றது. அதாவது தண்ணீர் ஏனைய இடங்களை விட வன்னீராக இருக்கின்றது. காரணம் சுண்ணாம்புப் படிவுகள் நீரில் காணப்படுதல்,மலசலகூடங்கள் மூலம் நீரில் ஈகோலி அ…
-
- 6 replies
- 1.2k views
-
-
ராஜபக்ஷே இந்தியாவை ஏமாற்றுகிறார்..! - கொதிக்கும் நெடுமாறன் நிதி வசூல், நிவாரணம் என இலங்கை விவகாரத்தில் புதிய திசை நோக்கி கவனம் ஈர்த்திருக்கிறது தமிழக அரசு. ''இதேபோன்ற நெருக்கடியான சூழ்நிலை ஒரு வருடத்துக்கு முன்பு ஏற்பட்டபோது, இதே ஈழத் தமிழர்களுக்காக சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவு, மருந்துப் பொருட்களைத் திரட்டி இலங்கைக்கு அனுப்ப முயற்சித்து, தோற்றுப் போனாரே எங்கள் அய்யா... அவருக்கு என்ன பதில்?'' என்று பழ.நெடுமாறன் ஆதரவாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்திருக்கிறது. நாம் நெடுமாறனையே சந்தித்தோம். நிதி வசூல் பற்றி உங்கள் கருத்தென்ன?'' ''2006-ம் ஆண்டின் இறுதியில், தமிழகம் முழுவதிலுமிருந்து உணவு மற்றும் மருந்துப் பொருட்களைத் திரட்டினோம். அவற்றை பாதிக்கப்…
-
- 1 reply
- 1.2k views
-
-
எம்.சி.சி, எக்ஸா, உள்ளிட்ட நாட்டுக்கு பாதகமான சகல ஒப்பந்தங்களையும் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் வைத்து அவற்றை கிழித்து எறித்துவிட வேண்டுமென முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கோரிக்கை விடுத்தார். களுத்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், நாட்டுக்கு அவசியமற்ற ஒப்பந்தங்களை கைசாத்திட வேண்டாம் என்பதை கூறியே 69 இலட்சம் பேர் புதிய ஜனாதிபதிக்கு வாக்களித்தனர் எனத் தெரிவித்த அவர், அந்த மக்கள் ஆணைக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார். அதேபோல் ஐக்கிய தேசிய கட்சியினர் சகலரும், அடுத்த நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக ஒன்றுபட வேண்டியது அவசியமென தெரிவித்த அவர் அக்கட்சிக்குள் பிரதமர் வேட்பாளர் என்ற புதியதொரு பதவி அந்தஸ…
-
- 6 replies
- 1.2k views
-
-
பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலில் கொழும்பு வந்திருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர் பதுமன், கொழும்பு வந்திருந்த நிலையில், ஒருவார காலமாக காணாமல் போயுள்ளதாக கொழும்பின் செய்தி முகவர் நிறுவனத் தகவல் ஒன்று தெரிவிக்கிறது. இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது; விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதப் படைப் பிரிவின் முன்னாள் தலைவரான கேர்ணல் பதுமன் என்ற சிவசுப்ரமணியம் வரதநாதன் தலைமையில் புலிகளை மீண்டும் உருவாக்க பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இரகசிய திட்டம் தீட்டி வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்திருந்தன. பதுமன் - கோத்தபாய ராஜபக்ஷ இரகசியத் திட்டம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வந்த நிலையில், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக…
-
- 13 replies
- 1.2k views
-
-
இலங்கைத் தீவில் �ஈழத்தமிழர் மீது நடந்தேறுவது ஒர் இன அழிப்பே� என பிரான்சின் முக்கியதொரு உயர்கல்வி மாணவ சமூகத்தின் கருத்துருவாக்கச் சிந்தனை மையமொன்று கருத்தினை வெளியிட்டுள்ளது. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கான அரச பிரதிநிதித்துவமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை நோக்குவதாகவும் இந்த மையம் தெரிவித்துள்ளது. பிரென்சு தேசத்தின் உள்ளக விவகாரம் மற்றும் சர்வதேச விவகாரம் தொடர்பில் பிரான்சின் அரச மற்றும் அரசியல் உயர்மட்டங்களுக்கான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி வருகின்ற உயர்கல்வியாளர்களை பிரதிநிதிகளாக் கொண்ட கருத்துருவாக்கச் சிந்தனைமை மையமொன்று கடந்த சனிக்கிழமை பிரென்சு பாராளுமன்ற வளாகக் கூடமொன்றில் கருத்தரங்கொன்றினை நடாத்தியிருந்தது. சர்வதேச விவகாரம் தொடர்…
-
- 3 replies
- 1.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 13 JUN, 2023 | 11:49 AM ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை நான் பாராட்டுகிறேன். முதன்முறையாக நாட்டின் தலைவர் இலங்கை தீவின்“தமிழ் பெளத்த வரலாற்றை” பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார். இலங்கையின் வரலாற்றில் தமிழ் பெளத்த வரலாற்றுக்கு உரிய இடத்தை ஏற்றால், அது இன்று நாம் எதிர்கொள்ளும் அநேக பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் சாவியாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது, தமிழரசு கட்சியினருடனான கலந்துரையாடலின் போது தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சில பணிப்புரைகளை விடுத்துள்ளார்…
-
- 19 replies
- 1.2k views
- 1 follower
-
-
வடமாகாணசபை ஆட்சியை கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவுடன் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான 13 மாகாணசபை உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து அவர் தலைமையிலான ஆட்சியை கவிழ்த்து விட்டு சிவாஜிலிங்கத்தை முதலமைச்சராக நியமிப்பதற்கு அரசுத்தலைவர் மகிந்த ராசபக்ச சிவாஜிலிங்கத்திற்கு வாக்குறுதி வழங்கியுள்ளார் என்றும் அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரெலோ, ஈ,பி.ஆர்.எல்.எவ், புளொட் ஆகிய ஒட்டுக்குழுக்களை சேர்ந்த 13 மாகாணசபை உறுப்பினர்க…
-
- 5 replies
- 1.2k views
-
-
யாழ்.மாநகரசபையின் ஈபிடிபி அங்கத்தவரான மனுவல் மங்கள நேசன் இன்று மாலை இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்துள்ளார். இன்று மாலை யாழ்.நகரின் நாவலர் வீதி மற்றும் கஸ்தூரியார் வீதி சந்திக்கும் சந்திப்பகுதியினில் வைத்து அவர் தாக்கப்பட்டுள்ளார். மூன்று மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த கும்பலொன்றே தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளது. காயமடைந்த மனுவல் மங்கள நேசன் வீதியால் பயணித்த சிலரால் மீட்கப்பட்டு யாழ்..போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மைக்காலமாக தான் சார்ந்த கட்சியுடன் முரண்பட்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். http://www.globaltam...IN/article.aspx
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்திள் ஜி .எஸ்.பீ பிளஸ் சலுகை ரத்துச் செய்யப்படவுள்ளது . இலங்கையின் மனித உரிமை மீறல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐரொப்பிய ஒன்றிய நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார். இணைய இணைப்பு http://www.globaltamilnews.net/ முந்தைய செய்தி : ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை அறிக்கை இன்று மாலை வெளியிடப்படும். இந்த அறிக்கை இன்று கொழும்பில் அரசங்கத்திடம் ஒப்படைக்கப்படும் அதே வேளை இணைய தளத்திலும் பிரசுரிக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறீகையினை மையமாக வைத்தே இலங்கைக்கான வரி…
-
- 5 replies
- 1.2k views
-
-
புதுக்குடியிருப்பு நகர் மீது சிறிலங்கா வான்படை குண்டுத்தாக்குதல்: 5 கடைகள் முற்றாக அழிவு [செவ்வாய்க்கிழமை, 09 செப்ரெம்பர் 2008, 06:13 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நகர் மற்றும் பாடசாலை ஆகியனவற்றின் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று அதிகாலை குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. புதுக்குடியிருப்பு நகரப்பகுதி மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4:30 முதல் 5:00 மணிவரை சிறிலங்கா வான்படையின் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. மூன்று தடவைகள் அடுத்தடுத்து வீசப்பட்ட குண்டுகளில் புதுக்குடியிருப்பு நகரில் உள்ள சிறீ சுப்பிரமணிய வித்தியாசாலை சேதமடைந்துள்ளது. நகரில் உள்ள ஐந்து கடைகள் முற்றாக அழிந்துள்ள…
-
- 4 replies
- 1.2k views
-
-
கொழும்பு: யாழ் பகுதியில் உள்ள பெண்களை வேலை வாங்கித் தருவதாக மலேசியாவுக்கு அனுப்பி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக அந்த நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது குற்றம் சாட்டியுள்ளது விக்கிலீக்ஸ். பல நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரங்கள் தமது தலைமைக்கு தாம் அறியும் அந்நாட்டு ரகசியங்களை பாதுகாப்பாக அனுப்பிவைப்பது வழக்கம். இவ்வாறு அனுப்பப்படும் ரகசியங்கள் கேபிள் மூலமாக அமெரிக்க தலைமைக்கு செல்லும். அத்தகவல்களை இடைமறித்து ரகசியங்களை வெளியிட்டு வருகிறது விக்கிலீக்ஸ், அந்தவகையில், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், தமது தலைமைக்கு அனுப்பிய நம்பிக்கையான சில் ரகசியத் தகவல்களை தற்போது The telegraph நாளிதழுக்கு வழங்கி அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்ஸ். அதில், அப்பாவி பெண்களை வைத்து மலேச…
-
- 7 replies
- 1.2k views
-