துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
641 topics in this forum
-
சிறந்த நடிகனுக்குரிய இலக்கணம் சிவாஜியின் ஃப்ளாஷ்பேக் பேட்டி 1928 அக்டோபர் ஒன்றாம் தேதி நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் பிறந்த நாள். புராணக் கதைகளாலும் பாடல்களாலும் மட்டுமே நிரப்பப்பட்ட தமிழ் சினிமா சிவாஜி வந்த பிறகே புதுத் தோற்றம் கொண்டது எனலாம். நடிகர் திலகத்தின் பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில், நம் குழுமத்தில் வெளியிட்ட மலர் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டி ஒன்றின் சில பகுதிகளை இங்கே உங்களுக்கு ஃப்ளாஷ்பேக் பொக்கேவாகத் தருகிறோம். * இதுவரைக்கும் உங்களுக்கு கிடைத்த விருதுகளிலேயே நீங்கள் பெரிதாக மதிக்கும் விருது எது? "வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துக்காக கெய்ரோவில் (Afro-Asian Film Festival) அளிக்கப்பட்ட விருதைத்தான் நான் இன்றும் பெரிதாக மத…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படையணியின் தளபதிகளில் ஒருவரான பல்லவன், அமுதாப் ஆகியோரின் புகைப்படங்கள் எங்கு எடுக்கலாம் அல்லது தங்களிடம் இருந்தால் தந்து உதவுங்கள்,
-
- 1 reply
- 1.1k views
-
-
யேர்மன் பிறேமனில் உள்ள அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தின் தலைவரும் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்துப் பல்வேறு தளங்களிலே உரைத்தவரும், மிக அரிதாகச் சிங்கள இனத்திலே இருந்து தமிழீழ விடுதலைக்காகக் குரல் கொடுத்தவருமான திரு.விறாஜ் மென்டிஸ் அவர்கள் இயற்கையெய்திவிட்டார். அவருக்கு எமது ஆழ்ந்த இரங்கல். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
-
- 12 replies
- 1.1k views
-
-
வாகன விபத்தில் போராளி சாவடைந்துள்ளார் மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், போராளி ஒருவர் சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீமன் என்றழைக்கப்படும், திருமலை மூதூர் இறால்குழி பகுதியை சொந்த இடமாகக் கொண்ட நடராஜா அன்பழகன் எனப்படும் இந்த மாவீரரின் வித்துடல், இன்று பகல் கொக்கட்டிச்சோலை இராமக்கிருணமி~ன் பாடசாலையில், மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இன்று மாலை தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மாவீரரின் வித்துடல், முழுமையான வீர மரியாதைகளுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-
-
மண்ணைவிட்டு விண்ணுற்ற வண்ணையெனும் மலரவனே வண்ணமலர்ப் பொன்னடியில் வெண்மலரை வைப்பதற்கு எண்ணரிய புண்ணியனே அம்மலரும் வாடுமெனக் கண்ணனைய எம்நெஞ்சைக் காணிக்கை ஆக்குகின்றோம் இந்துமா கடலின் முத்தாய் இலங்கிடு ஈழநாட்டில் சுந்தர வடிவுகொண்டே சுதந்திர தாகம் மேலாய் செந்தமிழ் வீரத்தோடு சிறந்திடு யாழ் மண்மீது விந்தை கொண்டிலங்கு மெங்கள் விழுமிய வண்ணைநகர் சரித்திரம் பலவுங் காட்டி செந்நெறி ஒழுகிநின்று பாரினில் கற்றோர்போற்ற பகர்பெரும் அறிஞனான அண்ணனாம் வண்ணையாரை அடியேனு மறிந்தவாறு கண்ணீரைச் சொரிந்துநின்று கழிவிரக்கச் சொன்மாலை சாற்றுதற்குப் பேறுபெற்று உலகமே மதித்த நின்னை கொண்ட நன்றிக் கடன் கூட்டுவிக்க வண்டுதாச் சொன்மலர்கள் கொண்டு ஆக்குகிறேன் நான் மனையறப…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழத்தின் பிரபல நாடகக் கலைஞரும் ஊடகவியலாளருமான டேவிட் ராஜேந்திரன் கடந்த 19-ம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சில் வசித்து வந்த டேவிட் ராஜேந்திரன், ஓரிரு மாதங்களுக்கு முன்னரே லண்டனில் குடியேறி சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இலங்கை வானொலி என்ற பெயரில் இயங்கி வந்த 1960-களின் பிற்பகுதியில் அந்த நிறுவனத்தில் தொழில் நுட்ப பொறுப்பாளராகப் பணியாற்றத் தொடங்கிய டேவிட் ராஜேந்திரன், அன்றைய நாட்களில் நேயர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்ற கிராமியப் பாடல்கள் நிகழ்ச்சியின் தொழில்நுட்பப் பொறுப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாள…
-
- 11 replies
- 1.1k views
-
-
மரணஅறிவித்தல் திருமதி தங்கம் தருமன். பிறப்பு: 02.04.30 இறப்பு:19.07.09 தாயகத்தில் கரவெட்டி மேற்கு, ஆண்டார்வளவு பிறப்பிடமாகவும். புலத்தில் டென்மார்க் வயன் நகரினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி தங்கம் தருமன் அவர்கள் இன்று காலை (19.07.2009) ஞாயிற்றுக் கிழமை அன்று டென்மார்க்கில் காலமானார். அன்னார் காலம் சென்ற சின்னத்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அமரர் இராசு, அமரர் சீனியர், அமரர் அம்மா, அப்புத்துரை ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார். அன்னார் தர்மகுலசிங்கம் பிரபல எழுத்தாளர், டென்மார்க் அரசியல்வாதி, மொழிபெயர்ப்பாளர்(டென்மார்க்) , தர்மதேவி (இலங்கை), தர்மராணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், பவானி(டென்மார்க்), அமரர்குலசிங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
தீபாவளி கண்ணீர் அஞ்சலிகள்! HOSPITAL MASSACRE BY INDIAN ARMY ON DEEPAVALI DAY, OCTOBER 1987 கடமையின் போது உயிர் நீத்த ஊழியர்கள் Dr A. Sivapathasuntheram, Dr M.K. Ganesharatnam, Dr Parimelalahar, Mrs Vadivelu, Matron, Mrs Leelawathie, Nurse, Mrs Sivapakiam, Nurse, Mrs Ramanathan, Nurse, Mr Shanmugalingam, Ambulance Driver, Mr Kanagalingam, Telephone Operator, Mr Krishnarajah, Works Supervisor, Mr Selvarajah, Works Supervisor 21-22 October 1987 "The Indian Army came firing into the Radiology Block and fired indiscriminately at this whole mass of people huddled together. We saw patients dying. We lay there without moving a finger pretending to…
-
- 0 replies
- 1.1k views
-
-
இந்திய அமைதிப்படையின் காலத்தில் EPRLF துரோகக் கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட யாழ் பரி. யோவான் கல்லூரி மாணவர் அகிலன் அண்ணாவின் 25வது நினைவு நாள் இன்றாகும். அன்னாருக்கு இதயம் நெகிழந்த கண்ணீர் வணக்கங்கள்.!!!
-
- 6 replies
- 1.1k views
-
-
அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் காண்டீபன் லண்டனில் காலமானார். On Nov 14, 2022 தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் , தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் தலைவரும், இலங்கையின் முதலாவது தமிழ் எதிர்கட்சித்தலைவருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மூத்த புதல்வர் அமிர்தலிங்கம் காண்டீபன் லண்டனில் இன்று (13) காலமானார். தமிழீழ விடுதலைப் போராட்டங்களில் முன்னின்று செயற்பட்டது மட்டுமல்ல தமிழீழ இராணுவம் என்ற அமைப்பையும் இவர் கட்டமைத்து இருந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த மூன்று தசாப்தங்களாக அரசியலில் இருந்து முற்றாக ஒதுங்கி இருந்தார். ஈரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இயற்கை எய்தியதாக தமிழீழ விடுதலைக் கூட்டணி நண்பர்கள் தெரிவித்தனர்.…
-
- 2 replies
- 1.1k views
-
-
மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவாக... - இன்று எட்டாவது சிரார்த்த தினம் [saturday January 05 2008 05:52:47 PM GMT] [யாழ் வாணன்] மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள் நினைவுமலர்கள் தமிழிலும் வெளிநாடுகளில் ஆங்கிலத்திலும் வெளியாகியிருப்பதை பலர் அறிவார்கள். ஆனால், ஆங்கில நினைவு மலர்களில் வெளியானவற்றை பலர் அறியாமல் இருப்பார்களென நினைத்து சிலவற்றை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. குமார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மாபெரும் குரல் மௌனிக்கச் செய்யப்பட்டது. (கரென் பார்கர் - பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேய சட்டக் கருத்திட்டம்) சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் எனும் எமது அமைப்பா…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரபல ஓவிய மேதையும், விடுதலைப்புலிகளின் இலச்சினையை வரைந்தளித்து தலைவர் பிரபாகரன் அவர்களின் நன்மதிப்பும் நட்பையும் தேடிக் கொண்ட திரு.நடராஜா அவர்களின் மறைவு குறித்த கண்ணீர் அஞ்சலி கண்ணெடுத்துப் பார்த்தவுடன் கலைக்குள்ளே கலைஞனாகி காண்கின்ற காட்சியெல்லாம் கவர்ந்திழுக்கும் வகையினிலே கையிலே தூரிகையை கனிவுடனே தானெடுத்து உயிரான ஓவியத்தை உருகாட்டி வைத்தவரே வாழைகீழ் வாழையென வளர்கின்ற கலைஞர்க் கெல்லாம் மழைகாணும் பயிரினம் போல் ஓவியரே நீரெங்கே! கலைஞனாய் கரையிலா நிறைவு கண்டு விலையிலா வித்தகனாய் விளங்கியதை ஊரறியும் பலநிறங்கள் நீர் சேர்த்து பலவகையாய் ஓவியங்கள் உலகுவக்கும் உத்தமரும் ஊர்சார்ந்த அறிஞர்களும் நுட்பங்கள் ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
-
வன்னியின் மனிதாபிமான நிலவரங்களை நல்லதொரு கண்ணோட்டத்தில வெளியுலகிற்கு கொண்டுவ வர உதவிய மயில்வாகனம் 24.01.2009 காலமாகிவிட்டார். புலம்பெயர்ந்து பின்னர் தாயகத்திற்கு சேவை செய்ய திரும்பி சென்றிருந்தார். அந்தவகையில் போராட்டம் இன்று மற்றும் எதிர்வரும் காலங்களில் எதிர்கொள்ள இருக்கும் பாரிய சவால்களை பொறுத்தவரை புலம்பெயர்ந்தவர்களிற்கு ஒரு சிறந்த வழிகாட்டி. Mr. K. Mylwaganam,who had been contributing many articles to Sangam.org during the last few years, with the very latest on August 28, 2008, passed away in his sleep in Puthukudiyirruppu hospital on 24-01-2009 all alone. He leaves behind his wife, sons and daughters far away from home. Our sympathies to them. Maybe,…
-
- 5 replies
- 1.1k views
-
-
அஞ்சலி: கி.ராஜநாராயணன் May 18, 2021 கி.ரா மறைந்ததாக இணையத்தில் செய்தி. சமஸ் உட்பட பலர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளம் ஏற்க மறுக்கிறது. சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றித்தன இருந்தார். தசைகளின் இயக்கமும் குறைந்து வந்தது. ஆனாலும் பெரியவர், சாவே இல்லாதவர் என்று நம்பத்தான் உள்ளம் விரும்புகிறது. நோய்க்காலம், எவரும் சென்று சந்திக்கவேண்டாம் என்று நண்பர்களிடம் சொல்வேன். எனக்கே சந்திக்கவேண்டுமென ஆசையிருந்தது. ஆனால் கி.ரா இளையவர்கள், வாசகர்கள் சந்திக்க வருவதை விரும்பினார். உற்சாகமாகி நினைவுகளை பெருகவிட்டு பேசிக்கொண்டிருப்பார். அவருடைய விருப்பப்படி கோபல்லகிராமம் மலையாள மொழியாக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தோம். இப்போது இச்செய்தி. வணங்கு…
-
- 4 replies
- 1.1k views
-
-
-
சென்னை: தினத்தந்தி அதிபர் பா சிவந்தி ஆதித்தன் வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் காலமானார். அவருக்கு வயது 73. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி பா ஆதித்தனாரின் மகன் சிவந்தி ஆதித்தன். ஆதித்தனாரின் மறைவுக்குப் பிறகு தினத்தந்தி நாளிதழின் அதிபராகப் பொறுப்பேற்று நிர்வாகத்தை நடத்தி வந்தார். இதழியல் துறையில் சிறப்பான இடம் வகித்தவர். கடந்த 2008ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராகவும், ஆசிய ஒலிம்பிக் சங்கத் துணைத் தலைவராகவும் திகழ்ந்தவர் சிவந்தி ஆதித்தன். சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் மூலம், பல்வேறு நலத்திட்ட உதவிகளை எளியோர்க்கு வழங்கியவர். கல்விப் பணியில் மிகச் சிறந்த இடம் வகித்தவர் சிவந்தி ஆதித்தன். தூத்துக்குடி மற்றும் திருச்செந்…
-
- 4 replies
- 1.1k views
-
-
யாழ் இந்துக்கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் கப்டன் சோமசுந்தரம் இன்று அதிகாலை காலமானார்.
-
- 14 replies
- 1.1k views
-
-
இள வயதில் மனதை மிகவும் பாதித்த படமிது... ஜூலை '83 கலவரத்தில் பலியான அனைத்துயிர்களுக்கும் நினைவு அஞ்சலிகள். .
-
- 14 replies
- 1.1k views
-
-
மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்
-
-
- 22 replies
- 1.1k views
- 2 followers
-
-
தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று காலை இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன. ஆனாலும் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இவர் இறந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தி…
-
- 7 replies
- 1.1k views
-
-
நாதஸ்வரமேதை இசைப்பேரறிஞர் சாவகச்சேரியூர் கே.எம்.பஞ்சாபிகேசன் 26.06.2015 இன்று அதிகாலை 12.20 மணியளவில் கொழும்பில் காலமாகிவிட்டார். இறக்கும் போது அவருக்கு வயது 91. அவரது இறுதிக்கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை சாவகச்சேரியில் நடைபெறவுள்ளன. ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இருந்து சாவகச்சேரிக்குப் பூதவுடல் எடுத்துவரப்படவுள்ளது. திங்கட்கிழமை அவரது சாவகச்சேரி சங்கத்தானையில் உள்ள வீட்டில் இறுதிக்கிரியைகள் இடம்பெறவுள்ளன. தென்மராட்சியின் இசை முகவரியாகத் திகழும் இசைப்பேரறிஞருக்கு எங்கள் இதயபூர்வமான அஞ்சலி உலகளாவிய ரீதியில் புகழடைந்த பஞ்சாபிகேசன் அவர்கள் 01.07.1924 ஆம் ஆண்டு தவில்வித்துவான் முருகப்பாபிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதியினரின் மூத்த புதல்வராய்ப் பிறந்தார். இவரது சகோதரன் நடராஜ சு…
-
- 4 replies
- 1.1k views
-
-
10 FEB, 2024 | 03:14 PM வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி உடல் நலக் குறைவு ஏற்பட்டு தனது 72வது வயதில் இன்று சனிக்கிழமை (10) அதிகாலை காலமானார். அல்வாய் தெற்கைச் சேர்ந்த அவர், ஆரம்ப கல்வியை வதிரி தேவரையாளி இந்து கல்லூரியிலும், இடைநிலை கல்வியை நெல்லியடி மத்திய கல்லூரியிலும் கற்று யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைப் பட்டதாரி ஆனார். யாழ். பல்கலைக்கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராக இணைந்து கலைப்பீட விரிவுரையாளர் ஆனார். மேலும், உயர் கற்கைகளை மேற்கொண்டு கலாநிதி பட்டத்தை பெற்றுக்கொண்ட அவர், யாழ். பல்கலைக்கழகத்தி…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் பாலாண்ணாவின் நினைவு நிகழ்வு. தேசத்தின் குரல் மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு கூரல் நிகழ்வுகள், கிளிநொச்சி - முல்லைத்தீவு மாவட்டங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளன. நேற்று கிளிநொச்சி பரந்தன் முரசுமோட்டை கோரக்கன்கட்டு, முல்லைத்தீவு சிலாவத்தை, மல்லாவி வடகாடு ஆகிய இடங்களில், தேசத்தின் குரலின் நினைவு கூரல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இதன்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்கள், போராளிகள், கல்வியாளர்கள், கல்விமான்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு, தேசத்தின் குரலை நினைவு கூர்ந்தனர். முல்iலைத்தீவு சிலாவத்தை பகுதியில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவு மா…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-