Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. முடிவுறாத யுத்தம் (The Unfinished War) - சிறப்பு இணைய பக்கம் வெளியீடு 02 அக்டோபர் 2014, கொழும்பு, இலங்கை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் நடாத்தப்படும் பிரஜைகளுக்கான ஊடகவியலை நோக்காகக் கொண்டு இயங்கும் மாற்றம் இணையதளம் ‘முடிவுறாத யுத்தம்’ என்ற தலைப்பில் இலங்கையில் முதல் தடவையாக, குறிப்பாக இணையதளத்துக்கு ஏற்ற வகையில் பிரஜைகள் ஊடகவியலை வலுப்படுத்தும் முகமாக நவீன முறையிலான இணையதள சிறப்புப் பக்கமொன்றை வெளியிட்டுள்ளது. இணையதளம் மூலம் நவீன முறையில் ஊடவியலை கையாளும் விருதுகள் வென்ற New York Times, Al Jazeera, The Global Mail மற்றும் ஏனைய முன்னணி தளங்களால் ஈர்க்கப்பட்டு இந்த ‘முடிவுறாத யுத்தம்’ பக்கம் அமைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு புதிய browser மூலமாகவும், smartphones…

  2. குத்துவிளக்கு திரைப்படம் 1970 களில் உருவான சூழல் மிகவும் முக்கியமானது. டட்லி சேனா நாயக்கா தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி படுதோல்வியடைந்து ஸ்ரீமா ( ஸ்ரீலங்கா .சு.க) - என். எம். பெரேரா (சமசமாஜி) - பீட்டர் கெனமன் (கம்யூனிஸ்ட்) கூட்டணியில் அரசு அமைந்த பின்னர் பல முற்போக்கான திட்டங்கள் நடைமுறைக்கு வந்தன. உள்நாட்டு உற்பத்திக்கு மிகவும் முக்கியத்துவம் தரப்பட்டது. வடக்கில் வெங்காயம் - மிளகாய் பயிர்செய்கையாளர்களின் வாழ்வில் வசந்தம் வீசியது. உள்நாட்டு ஆடைத்தொழிலுக்கு ஊக்கமளிக்கப்பட்டது. இந்தியாவிலிருந்து தரமற்ற வணிக இதழ்கள் மீதான கட்டுப்பாடு வந்தது. உள்நாட்டுத்திரைப்படங்களை ஊக்குவிப்ப…

  3. ஒபரோய் தேவனின் நாட்குறிப்பிலிருந்து… தமிழ் ஈழம் என்ற முழக்கத்தின் கீழ் தலைமறைவு இராணுவ இயக்கங்களை ஆரம்பித்தவர்களுள் ஒபரோய் தேவனும் ஒருவர். எண்பதுகளில் ஒபரோய் தேவனைத் தெரியாதவர்களைக் கண்டிருக்க முடியாது. தமிழ் ஈழ விடுதலை இராணுவம் (Tamil Eelam Liberation Army(TELA ) என்ற இயக்கத்தை ஆரம்பித்து வழி நடத்தியவர் தேவன். தமிழ் ஈழ விடுதலைப் புலிகளைப் போன்றே இராணுவ அமைப்பு ஒன்றைத் தோற்றுவித்து அதனைச் சுற்றி ஆதரவாளர்களையும், நடவடிக்கைகளுக்குப் பொருள் கூறுபவர்களையும் உருவாக்கிவிட்டால் விடுதலை கிடைத்துவிடும் என்று நம்பியவர்களில் ஒபரோய் தேவனும் ஒருவர். கொழும்பில் ஒபரோய் ஹோட்டலில் நிர்வாகியாக வேலை பார்த்ததால் ‘தேவன்’ ஒபரோய் தேவனானர். ஒபரோய் தேவனது இயற்பெயர் குலசேகரம் தேவசெகரம். …

  4. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் கலந்துகொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. /////////// யாழில் இருக்க கூடிய அரசு அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் மகிந்த மாமாவின் பார்வை ஓன்று பட்டாலே போதும் என்று நினைக்காமல், கூட்டத்தில் வைக்கப்படும் வடையையும் வாய்ப்பானையும் திண்டிட்டு வருவதே தங்க கடமை என்று நினைக்காம.... மகிந்தா மாமாக்கு முன்னாடி எப்பிடி பேசுவது என்று நினைத்து பேந்த பேந்த முழிக்காமல் யாழ்ப்பான மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.... யாழ்ப்பாண அபிவிருத்திக்கு தேவையான நிதிகள், வள பற்றாக்குறைகள்..... யாழின் சில பகுதிகள் எதிர் கொள்ளும் குடிநீர் பிரச்சனைகள் போன்றவற்றை மகிந்தாவுடன்…

  5. அபிராமியின் வலது கையும் சில கிபிர் விமானங்களும் ப்ரதீப் குணரட்ணம் படம் | Wikipedia முன் கதை - 01 சமீபத்தில் நண்பன் ஒருவன், “தங்கச்சிக்கு சாமத்திய வீடு செய்யிறம். வாடா…” என்று அழைத்தான். நான் ஏன்டா? என்றேன், அவன் நான் ஏதோ பகிடிக்கு கேக்கிறன் எண்டு நினைச்சு, பதில் ஒண்டும் சொல்லாம போட்டான். பின் கதை - 01 2008ஆம் ஆண்டு வன்னில நடந்த கதை இது. அப்ப நாங்கள் சின்ன பெடியள். வீட்டு கவலை, நாட்டுக் கவலை எத பற்றியும் எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் அப்ப நாட்டு பிரச்சினை எண்டு கவலை பட்டது ஒண்டே ஒண்டுக்கு தான். அது கிபிர் விமானம். உங்களுக்கு எத்தின பேருக்கு கிபிர் விமானம் தெரியும்? சண்டை நடந்த காலத்தில வன்னில இருந்த சின்ன பெடியள கேட்டா கிபிர் பற்றி கதைகள் ஏராளம் …

  6. https://www.dropbox.com/s/nqr9fdpzupko3y9/ACTIVE%20SOLAR%20RESEARCH%20STUDENTS.pdf?dl=0 Solar Reseach students wanted… Students/lecturers wanted to participate in the solar energy research projects. Who am I? Who am I looking for? Final year Science faculty students or 3rd year Engineering students or A/Level School students Good at solid works or thermodynamics or energy systems or electrical systems or Physics and optics. (Don’t worry just need to be good at one thing and ability to understand the theory behind it). What can we do? We can together design a solar systems which is most suitable for Sri Lanka (I will give initial technical support). We can …

  7. “நான் உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கின்றேன்” ஜெரா படம் | ஜெரா வன்னிக்குள் வீதி புனரைமப்புக்காகத் தறிப்பதற்குக் காத்திருக்கும் பாலை மரத்துடனான நேர்காணல். வணக்கம் பாலையே, வணக்கம் என் வாழ்வில் முதல் தடவையாக மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சம நேரத்தில் ஆறுதலாக அசைகின்றன). உங்களைப் பற்றிய சிறு அறிமுகத்தைத் தர முடியுமா? நான் பாலை. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன் நிலவிய சங்க காலம் எனும் பண்பாட்டு ஆக்க காலத்தில் எனக்குப் பெயர் கிடைத்ததாகக் என் பாட்டனார் சொல்லித் தந்திருக்கின்றார். அதாவது, அந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தாம் வாழ்ந்…

  8. சுதந்திரமாகச் சிந்திப்போம்; ராஜனியைப் போல்… பேராசிரியர் தயா சோமசுந்தரம் படம் | Dbsjeyaraj “பல ஆண்டுகளுக்கும் மேலாக, துப்பாக்கியின் நீண்டதொரு நிழலின்கீழ், எந்தவிதமான அர்த்தமோ நோக்கமோ இல்லாமல், சகல முனைகளிலிருந்தும் எழும் வன்முறையின் ஆதிக்கத்திலிருந்து நம் குழந்தைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகுந்த ஆதங்கத்துடன் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னொரு பக்கத்தில் ஒதுங்கி நின்று இவை எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வாழ்கின்ற மக்களின் முகங்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இன்றைய சூழ்நிலையில் தெளிவாகச் சிந்தித்து ஆராய்வதென்பது நோய்வாய்ப்பட்ட நேரத்தில் நாங்கள் மேற்கொள்ளும் செயற்பாட்டை ஒத்ததாக இருக்கின்றது. எப்போதெல்லாம் நாம் எழுத நினைக்கிறோமோ அப்போதெல்லாம் இந்த யதார்த்…

  9. அந்தக்காலம் நன்றாக தான் இருந்தது...... புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்பாணமும் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் இருந்த சந்தோஷமும்..... இரவு 12 மணிக்கு கோயில் திருவிழாக்கள் முடிந்து எந்த பயமும் இல்லாமல் வீதிகளில் நடமாடியதும்..... இடம் பெயர்வுகளும்...... குண்டு போடும் விமானத்தை கண்டவுடன் சைக்கிளை போட்டிட்டு படுத்து எழும்பியதும்....... இராணுவ ஆக்கிரமிப்பில் மாபெரும் கட்டிடத்தை விட்டு மருதானர்மடத்தில் கொட்டைகைகுள் இயங்கிய மகாஜனாவின் படித்ததுவும் ....., தமிழீழம் கிடைத்தால் எப்பிடி அமையும் என்ற புலிகளின் கண்காட்சிகளும்....... மாவீரர் நாள் கொண்டாட்டங்கங்களும் அலங்கார வளைவுகளும் .... நாச்சிமார் கோவில் திருவிழாவில் இருந்து நல்லூர் திருவிழா வரை மாறி…

  10. தமிழனுக்கு முக்கியமானது கல்வி, ஆனால் சுதந்திரம் காலம் தொட்டு தமிழனின் கல்வி வளம் அழிக்கப்பட்டது, ஒரு காலத்தில் 50% மாணவர்கள் தமிழராகவே இருந்தனர் ஆனால் இப்பொது இது நன்றாகவே குறைந்து விட்டது இதற்கு நாம் என்ன செய்யலாம், நிச்சயமாக தமிழரின் கல்விக்கு சிங்களவன் துணை நிற்கப் போவதில்லை, தமிழ் மாணவர் எவ்வளவு படித்தாலும் அவர்கள் கல்வியில் தொழிலில் முன்னேறாமல் இருக்க சிங்கள தேசம் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளும், அதானால் சிறீலங்காவில் இருக்கும் அரச கல்வி முறையில் இருந்து கொண்டு தமிழன் முன்னேற முடியாது, அதானால் நாம் இப்படி செய்தால் என்ன? புலம் பெயர் தமிழர் எல்லாம் சேர்ந்து தமிழ் மாணவர்களுக்காக தனியார் பல்கழைகழகம் ஒன்றை தொடங்கினால் என்ன? புலம் பெய்ர்ந்தவர்களிடம் பண வசதி இருக்கி…

    • 17 replies
    • 1.8k views
  11. அன்புடையீர், புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒன்றுபடுவோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் புங்குடுதீவின் அபிவிருத்திக்காக ஒரு புதிய நிர்வாகம் ஒன்றை தெரிவு செய்வது பற்றி கலந்துரையாடப்பட்டது. இதற்காக பின்வரும் கூட்டம் இடம்பெறவுள்ளது. தவறாது சமூகம் கொடுக்கும்படி அன்புடன் கேட்டு நிற்கிறோம். இடம்: தூய சவேரியார் ஆலய மண்டபம். காலம்: 12.09.2014 வெள்ளிக்கிழமை மாலை 2.௦௦ ஆரம்பம். 2.1௦ இறைவணக்கம் 2.20 தலைமையுரை – பங்குதந்தை. 2.30 பிரதேச வளர்ச்சியில் சமூக அமைப்புக்களின் பங்களிப்பு - திரு குகபாலன் பேராசிரியர் அவர்கள். 2.50 “கல்வி வளர்ச்சியே, பிரதேச வளர்ச்சி” திரு குயின்ரஸ் – தீவக கல்விப்பணிப்பாளர் 3.30 தேநீர் இடைவேளை 3.45 அமைப்புக்கான பெயர…

    • 41 replies
    • 4.3k views
  12. மலரம்மா: நீயொரு சாட்சி ஜெரா படம் | Photito போர் தாக்கிய கிராமங்களின் ஒன்றினூடாக அந்தப் பேருந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. மர நிழலில் காத்திருந்த சிலர் பேருந்தை வழிமறித்து ஏறுகின்றனர். அந்தக் கூட்டதிலிருந்து கடைசியாய் ஒரு பயணி ஏறுகிறார். கிட்டத்தட்ட 60 வயதைத் தாண்டிய உடல்தோற்றம் கொண்ட அவர், பேருந்து வாசலுக்குள்ளால் தவழ்ந்து ஏறுகிறார். நடத்துநரும், சிலரும் உதவிசெய்து, ஒரு ஆசனத்தில் அமர வைக்கின்றனர். யாரையும் நிமிர்ந்து பார்க்காத அந்த அம்மா, யன்னலுக்கு வெளியாக, வேகமாகக் கடந்துபோகும் வெட்டைவெளியைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். கண்ணீரின் கறையேறி கருப்பு வளையங்கள் கொண்ட கண்கள், மங்கி சுருங்கியிருக்கின்றன. வர்ணங்கள் நீர்த்துப் போன வாழ்வின் குறியீடாக அந்தத் தாய் தெரிகி…

  13. வர்மக்கலை =========== ஆதித் தமிழன் படைத்த அற்புதமான கலைகளில் ஒன்று .இன்று உலக நாடுகள் எதிரியை அழிக்க கோடிகளைக் கொட்டி அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருக்கும் வேலையில், இருக்கும் இடத்தில இருந்து 1000 கிலோமீட்டர் அப்பால் உள்ள எதிரிகளை எந்த ஆயுதமும் இல்லாமல் தாக்கக் கூடிய அபூர்வக் கலைகள் படைத்தவர் நாம் என்பது உங்களுக்கு தெரியுமா ? இந்த வர்மக் கலை ஒரு கடல் இதை பற்றி எழுத ஒரு பக்கம் போதாது..அதனால் சுருக்கமாக சிலவற்றை மட்டும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த கலையை உருவாக்கியவர் சித்தர்களில் தலை சிறந்தவரான " அகத்தியர் " . இது உருவான இடம் பொதிகை மலை ( இன்றைய குற்றால மலை ) . "தென் பொதிகை நாதன் துணையால் பாடி வைத்தேன் முறை நன்றமே ". என்ற கி.மு வில் எழுதப்பட்ட ஒரு ஓலைச் சுவடி வரியே இ…

  14. புங்கை மண்ணின் மைந்தர்களே ..! புங்குடுதீவு வட்டாரம் கொண்ட ஒரு சிறிய தீவு இப்பொழுது அங்கு ஒரு ஐயாயிரம் மக்கள் இருப்பார்களோ தெரியவில்லை ஆக உலகில் 194 நாட்டில் 1108 சங்கம் ...ஒன்றியம் ..அபிவிருத்தி குழு ..பழைய மாணவர் அமைப்புக்கள் ..என்று எல்லாம் இயங்கி வருவதை பார்த்தா இப்ப புங்குடுதீவு ஒரு ஐரோப்பாக்கு நிகரா நிக்க வேணும் ஆனாலும் அன்றில் இருந்து இன்றுவரை நாம் பார்த்த அதே புங்குடுதீவா தான் இருக்கு ... தண்ணியே இல்லா கிணற்றை சுற்றி வெள்ளை பூசுவதும் ..சும்மா இருக்கும் வயல் பிள்ளையாருக்கு கலர் அடிப்பதும் தான் முன்னேற்றம் என்று புரியவில்லை.. இங்கு மாதா மாதம் கூடும் நிர்வாகம் எல்லாம் ஒரு டீயும் வடையுடன் பேசிட்டு போவதால் என்ன செயல் திறன் கண்டார்கள் என்றும் தெரியவில்லை ... …

  15. தமிழர்களும்...... சாதி ஏற்றத்தாழ்வும்...! ============================= நேரிடையாகப் போர் புரியும் எதிரியை வெல்லலாம்.... ஆனால் சூழ்ச்சியினால் முதுகில் குத்துபவனை எவ்வாறு அறிவது? பிராமணர்களின் முழு செல்வாக்கினைப் பெற்ற விசய நகரப் பேரரசு தமிழகத்தினைக் கைப்பற்றுகின்றது. தமிழர்களின் நிலை அடிமை நிலைக்குச் செல்லுகின்றது. கோவில்கள் பிராமணர்களின் கைகளுக்கு மாற்றப்படுகின்றன... "அபிசேகப் பண்டாரம் என்னும் பார்ப்பனர் அல்லாத சாமியார் நிர்வாகத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இருந்து வந்தது. பார்பனர் தம் பாதம் தாங்கியான திருமலை நாயக்கன் அப்பண்டாரத்தை அச்சுறுத்தியும் நிலம் பணம் முதலியன கொடுத்தும் மீனாட்சி அம்மன் கோவில் ஆளுகையினைப் பறித்துக் கொண்டான். பரிதாபத்துக்குரிய பண்டாரமு…

    • 0 replies
    • 1.7k views
  16. சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி நல்லை நகர் ஆறுமுக நாவலர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்படுத்திப்போன சமய மறுமலர்ச்சி, மிசனரிமாரின் பாடசாலைகளைவிடவும் சிறப்பான ஆங்கில பாடசாலைகளை யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும் ஸ்தாபிக்கும் ஒரு இயக்கத்தை குடாநாட்டில் உருவாக்கி விட்டது. இவற்றில் முதன்மையானவர்களில் ஒருவர் கனகரத்தினம் முதலியார். இவர் சுழிபுரம் இந்து ஆங்கில பாடசாலையினை 1876ம் ஆண்டினில் ஸ்தாபித்தார். பாடசாலையில் 1880 எனப்பொறிக்கப்பட்ட ஒரு மணி இன்னமும் இருக்கின்றது. இந்த சுழிபுரம் இந்து ஆங்கிலப் பாடசாலையே இன்று விக்ரோறியாக் கல்லூரியாய் வளர்ந்து நிமிர்ந்து நிற்கின்றது. 1892ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அரச உதவிபெறும் ஆங்கிலப் பாடசாலையாக இது பதிவுசெய்யப் பெற்றது. இலங்கையில் முதலாவது அ…

  17. கரி ஆனந்தசங்கரி பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி – அவர்மீது வாரா வாரம் சேறு அடித்து வந்த உலகத்தமிழர் ஏட்டுக்கு – அதன் ஆசிரியருக்கு – ரூச் பார்க் மக்கள் பெரிய பட்டை நாமம் போட்டுள்ளார்கள். ஏதோ தன்னைப் பெரிய அரசியல் ஞானி போல நினைத்துக் கொண்டு “இனப்படுகொலையை ஏற்காதவரை தமிழ் மக்கள் ஆதரிப்பார்களா?” என்ற கேள்வி எழுப்பி ஆனந்தசங்கரி அவரது தந்தையாரி்ன் வார்ப்பு என்ற கருத்துப்பட இரண்டு பேரது புகைப் படங்களையும் முன்பக்கத்தில் சென்றவாரம் உலகத்தமிழர் ஏடு பிரசுரித்திருந்தது. உலகத்தமிழர் வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி. உலகத்தமிழரின் கேள்விக்குத் தெளிவாகவும் தீர்க்கமாகவும் உரக்கவும் தமிழ்வாக்காளர்கள் பதில் அளித்துள்ளார்கள். ரூச் பார்க் தொகுதிக்கு நடந்த நியமனத் தேர்தலில் மக்கள் 1,…

  18. https://www.youtube.com/watch?v=R-2FZk2j2mU&feature=youtu.be https://www.facebook.com/gowripal.sri

  19. வறட்சி: சில மைல்களில் அபாயம்… ஜெரா படங்கள் | கட்டுரையாளர் அது ஒரு சிறு தனித்தீவு. சுற்றியும் உப்புக்கடல் அந்தத் தீவைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. அதற்குள் ஒரு மூலையில் மக்கள் வாழும் கிராமம் இருக்கின்றது. ஆங்காங்கே வீடுகள். வசதி படைத்த மக்கள் குடியிருப்புகள், சில இடங்களில் நெருக்கமாகவும், இன்னும் சில இடங்களில் ஐதாகவும் இருந்தமைக் கான எச்சங்கள் உண்டு. கடந்த 100 வருடங்களுக்குள் வரும் ஏதாவது ஒரு ஆண்டில் அங்கு மனிதர்கள் வாழ்ந்திருக்கக்கூடும். செல்வச் செழிப்புடனும், சீருடனும்தான் அவர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதற்கு இங்கு சிதைந்து கிடக்கும் வீடுகளும், மாடி மனைகளும் தக்க சாட்சி. தீவுக்குள்ளால் வரும் முட்புதர்களையும், எஞ்சிய மிருகங்கள் நீருக்காகவும், உணவுக்காகவு…

  20. யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக…

    • 0 replies
    • 1.4k views
  21. வணக்கம் உறவுகளே, தாயகத்தில் ரியூசன் உருவானது எப்படி? நீங்கள் எல்லோரும் ரியூசன் சென்றதற்கான காரணம் என்ன? இன்றைய காலகட்டத்தில் அங்குள்ள மக்களுக்கு மிகவும் அதிகமான செலவாக ரியூசனே உள்ளது. தாயகத்தில் பிள்ளைகள் அதிகம் பெறாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என நினைக்கிறேன். நாம் நினைத்தால் இந்தச் செலவைக் குறைக்கலாம். நாளடைவில் ரியூசனை இல்லாமல்கூடச் செய்து விடலாம். ரியூசன் பற்றிய உங்களின் அனுபவங்களைக் கருத்துக்களை கூறுங்கள். இந்த விடயத்தில் உங்கள் அனைவரின் உதவியையும் மிகவும் எதிர்பார்க்கிறேன். அங்குள்ள மாணவர்களின் எதிர்காலம் உங்களின் கைகளிலேயே தங்கியுள்ளது.

    • 19 replies
    • 2.1k views
  22. நினஞ்சலா: கல்விக்காக ஏங்குபவள்! ஜெரா படம் | கட்டுரையாளர் சங்குப்பிட்டிப் பாலம், வடக்கில் நடைபெற்றுவரும் அபிவிருத்தியின் குறியீடாக நிமிர்ந்து, வளைந்து நிற்கின்றது. மாலைப் பொழுதொன்றிலோ, காலைப் பொழுதொன்றிலோ அந்தப் பாலத்தடியில் நிற்கும் ஒருவர் வடக்கின் அழகை முழுவதுமாக உய்த்து அனுபவிக்க முடியும். பிரமாண்டமான அலைகள், பெருஞ்சாலையில் அடித்துத் தூறலாக நனைக்கும். மெல்லிய ஈரம் தொட்டிருக்கின்ற இதமான வேளையில் ஒரு பக்கம் நீண்டு நிமிர்ந்த யாழ்ப்பாணத்துப் பனைகளும், இடையிடையே முளைத்திருக்கும் கட்டடங்களும், மறுபுறம் ஆனையிறவின் பெருவெண் உப்பு வெளியும், மறுபுறம் வன்னிக் காட்டின் குளிர்ச்சியும், எல்லாவற்றையும் குறுக்கே பிரித்து நிற்கும் கடலின் அழகும், கடலுக்குக் குறுக்கான தார் வீதியு…

  23. முல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனத்தில் 'செஞ்சோலை' சிறுமிகள் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட விமானக் குணடுவீச்சில் 62 மாணவிகள் படுகொலை செய்யப்பட்டதன் எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படுகிறது. கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி காலை 7 மணியளவில் நடத்தப்பட்ட இந்த வான் தாக்குதலில் 62 பாடசாலை மாணவிகளின் உயிர்கள் பறிக்கப்பட்டன. அத்துடன் அங்கு பணியாற்றிய 3 ஊழியர்களும் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தின் போது 155 இற்கும் அதிகமான மாணவிகள் படுகாயமடைந்தனர். http://seithy.com/breifNews.php?newsID=114925&category=TamilNews&language=tamil நினைவஞ்சலிகள்

  24. மடக்கும் கம்மாறீசும் Author: வந்தியத்தேவன் வழக்கம் போல பிள்ளையார் கோயில் ஆலமரத்தடி இளந்தாரிப் பொடியளினால் களைகட்டியது. ஒரு பக்கம் ஆடு புலி ஆட்டம் விளையாடும் பொடியள் இன்னொரு பக்கம் தாயம் எறியும் கூட்டம், இன்னொரு பக்கம் 304 கடதாசிக் கூட்டம் விளையாடும் கோஷ்டி என அமளிதுமளிப்பட்டது. வழக்கமாக 12 பேர் விளையாடுகின்ற 304 இண்டைக்கு சில வழமையான கையள் வராதபடியால் 8 பேருடன் தொடங்கியது. "கேள்வி" என அழகன் தொடங்க பிரபா "உதவி" என்றான் அழகனும் உதவிக்கு மேலே என தன்ரை பக்க மாறனை கேட்கச் சொன்னான். மாறன் ஒரு தொன்னூறு என இழுக்க எதிர்க்கோஷ்டியினர் அனைவரும் மேலே என மாறனுக்கே விட்டுவிட்டார்கள். "உவன் உப்பிடித்தான் தாள் இல்லாமல் சும்மா கேட்பான் " என அழகன் மாறனைப் பேசியபடியே "ச…

    • 20 replies
    • 6.4k views
  25. படம் | கட்டுரையாளர் இலங்கையின் பண்டைய வரலாற்றைச் சொல்லும் கதைகளில் இயக்கர், நாகர் என்கிற இரு இனங்களைப் பற்றிய குறிப்பு வரும். அதாவது, இலங்கைக்கு விஜயன் இந்தியாவிலிருந்து வருகின்ற வேளையில் இங்கு சுதேச குடிமக்களாக இயக்கரும், நாகரும் வாழ்ந்தனர். அந்த இனத்திற்கு நூல் நூற்கும் தொழில் செய்யும் குவேனி தலைவியாக இருந்தாள், என்கிற கதை இலங்கை வரலாறு படித்த அனைவருக்குமே நினைவிருக்கலாம். அதில் நாகர் வழிவந்த இனத்தின் மிச்ச சொச்சங்களும், நாகர்களின் பண்பாட்டைப் பின்பற்றுகின்ற கலாசார தொடர்புகளும் உள்ள ஓரிடம் 2014 இன் பின் அரைப் பகுதியில் எப்படியிருக்கின்றது? நாகர்கோவில், யாழ்ப்பாணத்தையும், வன்னிப் பெருநிலப்பரப்பையும் நிரந்தரமாகவே பிரித்துவைத்திருக்கும் ஏரிப் பகுதியின் ஓரத்தில் அமை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.