நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை தேசிய பாடசாலையாக மாற்றும் விவகாரம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எங்களின் இன்றைய கல்வி முறை எப்படியான மனிதர்களை உருவாக்குகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின். இவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் கல்வி என்னவென்று சொன்னால் ஏதோவொரு நிறுவனத்தின் கொத்தடிமையாக வாழ்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தையும் பெறுமானத்தையும் இழந்து உழைக்கின்ற மிருகமாக இருந்து கொண்டு தருகிற பணத்துக்கு வேலை செய்ய தான் இந்த கல்வி முறை உள்ளது. ஒரு விழுமியம் மிக்க வாழ்க்கையை கட்டி …
-
- 3 replies
- 836 views
-
-
எல்லையில் ஊடுருவல், எல்லை அருகே சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு என அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகள், இந்தியாவும், சீனாவும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளன. மொழி,கலாச்சாரம்,அறிவியல்,வரலாறு உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் ஒன்றிக் கலந்த உறவைக் கொண்ட நாடுகள் தற்போது போர் அபாயத்தில் இருக்க காரணம் நிறைய இருக்கிறது என்றாலும் அவற்றில் அடிப்படையானது வணிகப் போட்டியே. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இருந்து உப்பு, உணவு, எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் முன் எப்போதைக் காட்டிலும் அண்மைக் காலத்தில் அதிகமே. அதிலும் இந்தியக் கள்ளச் சந்தையில் சீனா வலுவாகவே காலூன்றியிருக்கிறது. இதனையும் தாண்டி தற்போது சீனா, இந்தியா…
-
- 3 replies
- 3k views
-
-
சூழ்நிலைக் கைதி என்று வி.உருத்திரகுமாரன் உள்ளடங்கலான தனது விசுவாசிகளால் இதுகாறும் வர்ணிக்கப்பட்டு வந்த கே.பி ஒரு கைதி அல்ல என்று சிங்கள அரசு விடுத்துள்ள அறிவித்தல் 2009 மே 18 இற்குப் பின்னர் அவரது குழுவினரால் அரங்கேற்றப்பட்டு வந்த பல்வேறு குழப்பங்களுக்கான முடிச்சை அவிழ்த்து விட்டுள்ளது. மலேசியாவில் தங்கியிருந்த வேளையில் சிங்கள - மலேசிய புலனாய்வுப் பிரிவினர் நிகழ்த்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் கே.பி கைது செய்யப்பட்டதாக இதுவரை அவரது கையாட்களால் பரப்புரை செய்யப்பட்டு வந்த பொழுதும் அது ஒரு கைது நாடகம் என்பதை நாம் அடித்துக் கூறி வந்தோம். இதனை மெய்யுண்மையாக்கும் வகையிலேயே இப்பொழுது கிளிநொச்சியில் குடியமர்ந்து சுதந்திரமாக கே.பி செயற்படுவதும், தனது கையாட்களை கொழும்புக்கு அழ…
-
- 3 replies
- 951 views
-
-
ஏழை இலங்கையர்களுக்கு சீனா வழங்கிய பரிசாகும் இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் இல்லையால் யாரும் செல்வதில்லை. இல்லை, விமானப் போக்குவரத்து மையம் தற்போது முற்றிலும் செயலிழந்து விட தினசரி அல்லது இரண்டு விமானங்கள் மட்டுமே உள்ளன, மேலும் அங்கு செல்பவர்கள் நடுவில் உள்ள அதிர்ச்சியூட்டும், முழு நவீன விமான நிலையத்தைக் காண அருகிலுள்ள வனவிலங்கு பூங்காக்களிலிருந்து ஒரு பக்கப் பயணத்தை மேற்கொள்கின்றனர் இலங்கையின் தெற்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள HRI க்கு நான் அதிகாலையில் வந்து சேர்ந்தேன், அதன் பயணிகள் முனையத்தின் முன் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று குவிந்திருப்பதைக் கண்டேன். வெற்று விமான நிலையத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று நான் அவர்களிடம் க…
-
- 3 replies
- 474 views
-
-
சீனாவின் கடனினூடான ஆக்கிரமிப்பினை எதிர்க்கும் மாலைதீவு புதிதாகப் பதவியேற்றிருக்கும் மாலைதீவுகளின் சனாதிபதி நஷீட், முன்னைய அரசாங்கத்தினால் சீனாவுடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் திறந்த வர்த்தக உடன்பாடு சமநிலையானது அல்ல, சீனாவுக்கே அதிகளவு அனுகூலமானதென்று தெரிவித்திருக்கிறார். தனது நாட்டினை பாரிய கடந்தொகைகள் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சீனாவுக்கு வாய்ப்பளித்த இந்த வர்த்தக உடன்பாட்டிலிருந்து தாம் விலகப்போவதாக அவர் அறிவித்திருக்கிறார். பிரஸ்த்தாப வர்த்தக உடன்பாட்டின்படி மாலைதீவுகளின் பல தீவுகளை முழுமையாக 50 ஆண்டு 100 ஆண்டு குத்தகைக்கு எடுத்திருக்கும் சீன நிறுவனங்கள் பெருமளவு பணத்தினை முதலீடு செய்திருக்கும் நிலையில் மாலைதீவின் புதிய தலைவர் இவ்வாறு அறிவித்திருப்ப…
-
- 3 replies
- 1k views
-
-
கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும். சமுகநீதி, மாநில சுயாட்சி, தமிழ் மொழிக்கான அடையாளம், பகுத்தறிவு, பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட மக்கள் பிரிவினருக்கான சீர்…
-
- 3 replies
- 1.9k views
-
-
இசைப்பிரியா எனும் ஓர் அபலைக்கான மனித இதயம்…! -எஸ்.ஹமீத் அந்த இளம் பெண்ணின் மரணம் எல்லோரையும் போலவே என்னையும் நிலைகுலைய வைத்திருக்கிறது; உணவில் பிடிப்பின்மையையும் உறக்கத்தில் நிம்மதியின்மையையும் தந்து விட்டிருக்கிறது; நடையின் வேகத்தையும் செய்கின்ற வேலைகளில் இயல்பாகவே இருக்கும் அக்கறையையும் வெட்டி வீசியிருக்கிறது; எப்போதாவது கிடைக்கும் சந்தோஷத்தின் மீதும் அபூர்வமாக உதிக்கும் புன்னகையின் மீதும் கவலைகளையும் விரக்திகளையும் போர்த்தி விட்டிருக்கிறது. சிந்தனைகளின் விஸ்தாரங்களைச் சுருக்கி மீண்டும் மீண்டும் அவளின் மரணமென்ற அந்த ஒரு புள்ளியில் மட்டுமே மனத்தைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சொந்த வாழ்க்கையின் துயரங்களுக்கு மேலாக அவள் மீதான துக்கமும் அனுதாபமும் …
-
- 3 replies
- 776 views
-
-
ஆழ்கடலில, படகுப் பயணம். நடுநிசியில் பெருவிபத்து. இருளில் கடலில் வீசப்படுகின்றோம். ஏதொ ஒன்று தட்டுப்பட அதையே பிடித்து அலைகளின் நடுவே நீந்துகின்றோம். அடித்துத் தூக்கும் அலைகளின் மேலாய் தூரத்தே ஒரு சிறு வெளிச்சம். யாரோ எவரோ ? ஏதோ ஓர் இடம் இருக்கிறதென்னும் நம்பிக்கையில் அலைகளை எதிர்த்து நீத்துகின்றோம் அந்த வெளிச்சம் இருக்கும் திசையில். இப்படித்தான் இன்று புலம் பெயர்ந்த ஈழத்துத் தமிழர்களின் இயல்புநிலைப் போராட்டம். ஆனால் நீந்திச் செல்லச் செல்ல தூரத்தில் தெரியும் சிறு வெளிச்சம் மெல்ல மெல்ல பெரிதாகின்றது. சோர்ந்து போன மக்களுக்கு நம்பிக்கை தருகின்றது. இன்னும் சில தினங்களில், மணித்தியாலங்களில், இலங்கையில் பயங்கரவாதம் முடிந்துவிடும் என அறிக்கை மேல் அறிக்கையாக வ…
-
- 3 replies
- 1.9k views
-
-
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்குலிருந்து பிச்சை வேண்டம் நாயை புடி வரை. சரி... விடுதலை போராட்டம் ஒரு நிச்சயமான முடிவை நோக்கி போய்கொண்டிறுக்கிரது. எக்கேடாவது கெட்டுபோகட்டும் என மனம் மாறிக்கொண்டொருக்கிரது... எனிவேய்... தெடங்கினா.. பந்தி பந்தியா அறுக்கலாம்.. அத்ற்க்காக இதை நான் தொடங்கவில்லை... சிறைவைக்கபட்டிரும் எமது கால் மில்லியனுக்கும் அதிகமான, தினமும் நூற்றுக்கனக்கில் செத்துப்போய்கொண்டிருக்கும் மக்களின் நிலமை என்னவாவது.. இதற்க்கு தனியார்களோ........ கண்ட கண்ட நாட்டு கொடியலொட அமைதி போராட்டம் நடத்துர கூட்டத்துகோ......... தமிழ்நாட்டு கட்சிகளுக்கோ.... தமிழ் நாட்டு அரசுக்கோ...... குறிப்பாக சொன்னால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது... அட்லீஸ்…
-
- 3 replies
- 1.6k views
-
-
கோத்தாவை போத்தாவாக மாற்றுதல் 000000000 மறுசீரமைப்புத் திட்டத்திற்கான கதவுகளைத் திறக்க முடிந்தால், அதைஅமுல்படுத்த தென்னாப்பிரிக்காவைப் போன்று ஒருதுணைச் சட்டத்தை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய சமூக நெருக்கடிநிலைமையில் கோத்தாவை போத் தாவாக மாற்றினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும் 0000000 ”தென்னாபிரிக்காவில்இடம்பெற்றிருந்த இந்த வரலாற்றுரீதியான பரி சோதனையிலி ருந்து இலங்கையில் நாங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையில் எதிர்கொள்ளும் தடைகளை வழக்கமான மற்றும் பழக்கமான முறைகளால் கடக்க முடியாத தருணங்கள் இருக்கலாம். தென்னாப்பிரிக்காவில் மாற்றத்தை தோற்றுவிக்கும் திட்டத்திற்காக முதலில் மண்டேலா…
-
- 3 replies
- 914 views
-
-
கருணாநிதியின் உலகப் புகழ் பெற்ற... காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் இடையில் நிகழ்த்திய மூன்று மணித்தியாலம்... மெரினா கடற்கரையில் உண்ணா விரதம் இருந்த நாள். 27.04.2009.
-
- 3 replies
- 268 views
-
-
தேசிய அடையாளத்தைக் காப்பாற்ற 'சிவாஜி" திரைப்படம் பார்க்க...? -பரணி கிருஸ்ணரஜனி- கடந்த யூன் மாதம் முதலாம் நாள் மாலை, இனிமையான பழைய நினைவுகளை அசை போட்டபடி ஒருவித ஆத்மார்த்த நிலைக்குள் எனது ஆழ்மனம் அமிழ்ந்திருந்த தருணத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு. மறுமுனையில் அறிமுகமில்லாத ஒரு நபர், 'சிவாஜி" திரைப்படத்திற்கு ஒரு விமர்சனம் எழுதித்தரும்படியும், அதை ஒரு ஊடகத்தில் வெளியிட இருப்பதாகவும், தாங்கள்தான் அப்படத்தை சில ஐரோப்பிய நகரங்களில் திரையிட இருப்பதாகவும், முதல் காட்சிக்கு எனக்கு இலவச அனுமதி வழங்குவதாகவும், என்னைத் தொடர்ந்து பேசவிடாமல் ஏதேதோ உளறிக்கொண்டிருந்தார். யாரோ என்னை சினிமா விமர்சகர் என்று கிளப்பிவிட்ட வதந்தியின் அடிப்படை அவர் பேச்சில் அப்படியே எதிரொலித்தது.…
-
- 3 replies
- 3.8k views
-
-
கொரோனா வைரசும் உள்ளூர் அறிவு முறைமைகள் குறித்த அக்கறைகளும் – கௌரீஸ்வரன்… March 29, 2020 இலங்கைத்தீவில் வாழும் மனிதர்களுக்கு அனர்த்தங்கள் புதியவையல்ல வரலாற்றில் பல்வேறு அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்து வாழ்ந்த அனுபவங்கள் பெற்றவர்கள். இயற்கையான அனர்த்தங்கள் ஏற்பட்ட போதும் , செயற்கையான அனர்த்தங்கள் உருவான போதும் பாரதூரமான பட்டினியை எதிர்கொள்ளாததுடன் அதனால் வரும் போசாக்கின்மையால் பாதிக்கப்படாதவர்களாகவும் இலங்கைத் தீவின் மக்கள் கடந்த கால வரலாற்றில் இனங்காணப்பட்டுள்ளனர். தசாப்தகால உள்நாட்டுப் போர் நடைபெற்ற உலகின் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் போசாக்கின்மையால் பாதிக்கப்படாத மக்களைக் கொண்ட நாடாக இலங்கைத் தீவு தன்னை அடையாளப்படுத்தியது. இவ்வாறு கடந்த காலத்தி…
-
- 3 replies
- 350 views
-
-
இலங்கை தமிழரை புரிந்துகொள்ளுதல். மேயர் மதன்மோகனுக்கு - வ.ஐ.ச.ஜெயபாலன் * மேஜர் மதன்மோகன் அவர்களுக்கு வணக்கம். 1.) 2000 ஆண்ண்டின் முன்னும் பின்னும் . விடுதலைப்புலிகளை சீனா சிங்கபூரில் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்கள். விடுதலைப் புலிகள் என்னை அழைத்து ”இந்தியாவுடனான உடைந்த உறவை மீழ ஒட்டும் விருப்பத்தோடு சீனாவின் அழைப்பை நாங்கள் ஏற்கவில்லை” என்பதை இந்தியாவுக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொண்டனர், நான் இந்திய தூதுவர் நண்பர் நிருபம் சென் ஊடாக அதனை இந்தியாவின் கவனத்துக்குக் கொண்டுவந்தேன். அதுபோல இந்திய தூதரகமும் தகவல் பரிமாற என்னை அழைத்துள்ளது. உயிரை பணயம் வைத்து பணியாற்றியுள்ளேன். 2.) உங்களுக்கு ஒன்று தெரிய வேணும். இலங்கை தமிழர்கள்தான் இதுவரை சீனா வடகிழக்கு பகுதியில் நுழ…
-
- 3 replies
- 416 views
-
-
https://www.youtube.com/watch?v=E4jmN0ucdoQ
-
- 3 replies
- 522 views
-
-
GTV நேரடி ஒளிபரப்பு http://www.tubetamil.com/view_video.php?viewkey=e524005bc1a8e8101fa3&page=33&viewtype=&category=
-
- 3 replies
- 1.2k views
-
-
தனித் தேசமாக கருதப்படுவதற்கு தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களுக்கு உண்டு -விக்னேஸ்வரன் விளக்கம் 100 Views ஒரு தனித் தேசமாக கருதப்படுவதற்குத் தேவையான சகல குணாதிசயங்களும் தமிழர்களான எங்களுக்கு உண்டு என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாராந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் மக்களின் தற்போதைய அவலநிலை பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், தமிழர்கள் ஒரு பண்டைய இனத்தவர். தமிழ் பேசும் மக்களே இலங்கையின் பூர்வீகக் குடிகள். முதலில் சை…
-
- 3 replies
- 542 views
-
-
பொங்கல் தொடர்ந்தாலும் நன்றி மறந்தாயிற்று இன்று தைப்பொங்கல். பூமியில் பயிர்கள் விளைந்து மானிடர் உள்ளிட்ட ஜீவராசிகள் பசியாறுவதற்கு மூல காரணனாய் நிற்கின்ற சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகத் தைப்பொங்கல் அமைகிறது. நிலத்தை உழுது பயிரை விளைவித்த விவசாயிகள் தங்களின் வேளாண் செய்கைக்கு உதவிய சூரியபகவானுக்குச் சர்க்கரைப் பொங்கல் செய்து முக்கனிகளும் பசும் பால், நெய், தேன் வகைகளும் சேர்த்துப் படையல் செய்து, சூரியபகவானுக்குத் தமது நன்றியைத் தெரிவிக்கின்ற நாளாகத் தைப்பொங்கல் திருநாள் அமைகிறது. தமிழர் திருநாள் என்று போற்றப்படுகின்ற தைப்பொங்கல் தட்சணாய காலம் கடந்து, உத்தராயண காலம் தொடங்கும் தைமாதத்தை வரவேற்கின்ற பொங்கலாகவும் அமைகிறத…
-
- 3 replies
- 1.2k views
-
-
பெட்ரோல் விலை..அமெரிக்காவின் இன்னொரு ஆயுதம்! கடனை திருப்பிச் செலுத்த முடியாதவர்களுக்கு எல்லாம் அமெரிக்க வங்கிகள் அடித்துப் பிடித்து கடன் கொடுத்துவிட்டு அதற்கான பெரும் விலையை இப்போது தந்து கொண்டிருக்கின்றன. 'சப்-பிரைம்' லோன்கள் என்ற பெயரில் தரப்பட்ட கடன்கள், குறிப்பாக வீடுகள் வாங்க தரப்பட்ட கடன்கள் திரும்பி வரவில்லை. இப்படி வராமல் போன பல நூறு பில்லியன் டாலர் மதிப்பிலான கடன்களால் அமெரிக்காவின் பல வங்கிகள் நடு்த் தெருவுக்கு வந்துவிட்டன. அத்தோடு சேர்ந்து கொண்டது அமெரிக்க பொருளாதார தேக்கம். அதன் அடுத்த விளைவு டாலர் மதிப்பின் வீழ்ச்சி. உலக அளவில் பல நாட்டு கரன்சிகளுக்கு எதிரான டாலரின் விலை 20 முதல் 30 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுவிட்டது. இதனால் அமெ…
-
- 3 replies
- 1.5k views
-
-
இலங்கை ஈரானுக்கு பெற்றோல் வாங்கிய கடன்காசு வாற ஜனவரியில இருந்து கட்டோணுமாம்.. அந்த காசை தேயிலையா குடுத்து கழிக்க போகுதாம்.. ஈரானுடன் வர்த்தகம் செய்ய ஜநா தடை இருந்தாலும் இது தேயிலை உணவுப்பொருள் வகைக்கே வருவதால் மனிதாபிமான அடிப்படையில் அவற்றை ஏற்றுமதி செய்ய தடை இல்லையாம்.. யார் சொன்னது மோட்டு சிங்களவன் எண்டு.. ஒரேகல்லில ரெண்டு மாங்காய் அடிச்சிருக்கு இலங்கை.. ஈரானிட்ட எண்ணெய் குறைஞ்ச விலைக்கு எண்ணெய்வாங்கினதும் ஆகுது இப்ப வெளிநாட்டு டொலர் குறைவான நிலையில் டொலர சேவ் பண்ணினதும் ஆகுது தடை செய்யப்பட்ட ஈரானுடன் வியாபாரம் செஞ்சதும் ஆகுது..
-
- 3 replies
- 411 views
-
-
தூத்துக்குடியைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜோசப் ராஜன் அவர்களின் பதிவு.. எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து அரசியல் கட்சி ஆதரவாளனாக, அதன்பின் ஒரு பத்திரிக்கையாளனாக நூற்றுக்கணக்கான அரசியல் கூட்டங்களிலும், மாநாடுகளிலும், கருத்தரங்குகளிலும் செய்தி சேகரிக்க அல்லது ஆதரவாளனாக கலந்து கொண்டிருக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற நாம் தமிழரின் இன எழுச்சி மாறாட்டில் கலந்து கொண்டேன். மற்ற எந்த கட்சிகளையும் விட முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் அமைப்பாகவே இக்கூட்டத்தை காண முடிந்தது. விசில் அடித்து ஆட்டம் போட்டுக்கொண்டு ஆரவாரம் இல்லை.... ஒரு சொட்டு மது இல்லை.... எவரும் குடித்து விட்டு வரவில்லை.... அதனால் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையில் ஒரு குவ…
-
- 3 replies
- 359 views
-
-
ஞாயிறு இரவு சனல் 4, No Fire Zone விவரணத்தினை ஒளிபரப்பியது. முன்னர் இதே பெயரில் விவரணம் வந்ததால் பலர் இது ஒரு மறு ஒளிபரப்பு என கருதியிருந்தனர். எனினும், இசைப்பிரியாவை உயிருடன் பிடித்துச் செல்லும் காட்சி தவிர ஏனையவை முன்னர் வந்தவை தான். ஆனாலும், மிகத் தெளிவான வகையில் ஆவணங்கள், தொகுக்கப் பட்ட நிலையில், சிறப்பாக விவரணம் இருந்தது. இம்முறை இதனைப் பார்கையில், இது அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தகவல் ஒன்றை சொல்லும் அல்லது புரிய வைக்கும் வகையில் தயாரிக்கப் பட்டதாக சொல்ல முடியும். இளவரசர் சார்லஸ், டேவிட் கமொரோன், வில்லியம் கெய்க் போன்றோர், இதைப் பார்த்து விட்டு, எவ்வாறு மகிந்த ராஜபக்ஸவுடன், குற்ற உணர்வு இன்றி சாகவாசமாக கைகுலுக்கி உரையாடலாம் என நெளிய வைக்கும் விதமாக அமைக்க…
-
- 3 replies
- 612 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைவராக சுமந்திரன்.? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய அரசியலமைப்புப் பற்றிய விவாதங்கள் பல இடங்களிலும் அமர்க்களமாக நடந்தன. ஒற்றையாட்சி, ஒருமித்த நாடு என்ற வார்த்தைப் பிரயோகங்களுக்குள்ளிருக்கும் அபாயத்தைப்பற்றிய கடுமையான – சர்ச்சைக்குரிய விவாதங்கள் அவை. தமிழரசுக் கட்சி மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தலைவர்களே தடுமாறும் அளவுக்கு அந்த விவகாரம் அதிக சங்கடத்தைக் கொடுத்திருந்தது. ஏனென்றால் அந்த அரசியலமைப்பு விவகாரம் நிறைவேற்றப்படாத ஒரு சரக்கு என்பதை மறைப்பதற்கு இட்டுக்கட்டப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உண்மைபோலாக்குவதற்காக ஒரு சீரியஸ் தன்மையைக் கூட்டமைப்பு உருவாக்கியிருந்தது. இதற்காக நடந்த விவாதங்களில் சும…
-
- 3 replies
- 615 views
- 1 follower
-
-
- பாகம் மூன்று வட மாகாண முதலமைச்சர் திரு சி வி விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் தமிழ் மக்களின்அன்புக்கும் மரியாதைக்கும் உரியவர். அப்பேற்பட்டவரை தப்புக்கணக்கிட்டு சிறீலங்காஅரச கைக்கூலி, துரோகியென்றெல்லாம் எப்படி வர்ணிக்கிறார் கஜேந்திரகுமார் என்றுபாருங்கள். https://www.dropbox.com/s/gfhbm6mqaafnr21/Gajendrakumar%20Ponnampalam%20%26%20TNPF%20Accuse%20Hon%20C%20V%20Wigneswaran%20-%20Chief%20Minister%20Northern%20Province%20Sri%20Lanka%20of%20Betraying%20Tamils.wmv?dl=0 இப்படியாக தப்புக்கணக்கு போடக் கூடியவர் எப்படியப்பா எமது உரிமைகளையும் விடுதலையையும் பெற்றுத்தரப்போகிரார்? யாருக்காவது தெரியுமா த.ம.தே.மு. யின் அரசியல் வேலைத்திட்டம்தான் என்னவென்று? கீழே தரப்பட்டுள…
-
- 3 replies
- 313 views
-
-
விஷயம்: தமிழ் வரி வடிவத்தை (script. அதாவது ‘அ, ஆ, இ, ஈ’) தூற எறிந்துவிட்டு ஆங்கில வரி வடிவத்தையே (அதாவது a, b, c,d) தமிழ் எழுத உபயோப்படுத்தலாமே என வில்லேஜ் விஞ்ஞானி ஜெயமோகன் 'இந்து-தமிழில்’ எழுதியிருக்கிறார். அதில் அவர் செய்த கர்ண கொடூரமான தவறுகள்: 1) வரி வடிவம் எனக் குறிப்பிடுவதற்கு பதில் எழுத்துரு என எழுதியிருக்கிறார். வரி வடிவடிவம் என்பதுதான் script. எழுத்துரு என்றால் font! 2) ஆங்கில எழுத்...துரு (வரி வடிவம்) என்று இல்லாத ஒன்றை குறிப்பிடுகிறார். ஆங்கிலத்திற்கென்று சொந்த வரி வடிவம் கிடையாது. லத்தீன் வரிவடிவம் தான் ஆங்கில வரி வடிவம். என் எதிர்வினை: 1) இந்து தமிழ், ”எதுக்குடா தமிழ்-ஆங்கிலம் என இரண்டு எழுத்துருக்கள் வைத்து இரண்டு தனித்தனி ப்ரஸ் வைத்து நடத்த வேண்ட…
-
- 3 replies
- 955 views
-