நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
இலங்கையில் அடுத்து என்ன நடக்கும்? [ செவ்வாய்க்கிழமை, 02 பெப்ரவரி 2010, 01:14.57 மு.ப | ஊடகப் பணிமனை ] இலங்கையில் அடுத்து என்ன நடக்கும் என தமிழர்கள் காத்திருக்கிறார்கள் என்கிறது அமெரிக்க ஏடு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி, குடியரசு அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி எனத் தொடர்ந்து வெற்றிப் பாதையிலேயே சவாரி செய்து கொண்டிருக்கும் மகிந்த ராஜபக்ச - தற்போது, தலைமுறை தலைமுறையாகப் பற்றி எரியும் இனப் பிரச்சினையைக் கையாள்வதில் கொஞ்சம் அழுத்தங்களுக்கு உள்ளாகிறார் போல் தோன்றுகிறது. அரசியல் வாழ்வின் ஓரத்திற்குத் தள்ளப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களைப் பலப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கையும் சிங்களத் தேசியவாதிகளைக் கோபப்படுத்தக்கூடும். இத்தகைய நிலையில் நாட்டில் உண்…
-
- 1 reply
- 777 views
-
-
சமீபத்திய நாட்களாக இலங்கையில் ரயில் விபத்துக்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இலங்கை வரலாற்றில் மிகவும் கோரமான விபத்தாக கருதப்பட்ட குருணாநகல் பொல்ஹாவல விபத்தில் 65பேர் காயமடைந்தார்கள். இந்நிலையில் நேற்றிரவு பளை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் மாங்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் யானை ஒன்றுடன் மோதியதில் யானை உயிரிழ்ந்துள்ளது. இதனால் வடக்கிற்கான ரயில் சேவைகள் ஒன்றரை மணியத்தியாலம் தடைப்பட்டது. இதேவேளை களுத்துறை அளுத்கம ரயில் நிலையத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இதன்போது சாரதிக்கு காயங்கள் ஏற்பட்டதுடன் ரயில் பெட்டிகளும் தடம் புரண்டன. இதேவேளை நேற்றைய தினம் குருணாநகல் பொல்ஹாவல விபத்து தொடர்பான செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடந்தது. இந்த சந்திப்பை போக்குவரத்த…
-
- 0 replies
- 268 views
-
-
-
இலங்கையில் அலைக்கழிக்கப்படும் புலம்பெயர் முதலீட்டாளர்கள் December 8, 2021 — கருணாகரன் — நாடு பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது என்பது எல்லோரும் அறிந்ததே. இதை எப்படி எதிர்கொள்வது? எப்படிச் சீர்செய்வது என்பதே இன்றைய முதல் பிரச்சினை. ஏனென்றால், பொருளாதார நெருக்கடியை நாம் சரியான முறையில் எதிர்கொண்டு அதைக் கடக்கவில்லை என்றால் மிகமோசமான எதிர்விளைவுகளையே சந்திக்க வேண்டியிருக்கும். பஞ்சமும் பட்டியினும் கூடத் தலைவிரித்தாடத் தொடங்கி விடும். உற்பத்தித்துறைகள் வீழ்ச்சியடையும். ஆகவே இதற்கு பல வகையான மாற்றுத்திட்டங்கள் உடனடியாகத் தேவை. முக்கியமாக முதலீடுகளும் உற்பத்திகளும் மிகமிக அவசியமானவை. இதை மனதிற் கொண்டோ என்னவோ அரசாங்கமும் முதலீட்டாளர்களை அழைத்த…
-
- 2 replies
- 580 views
-
-
இலங்கையில் அவசரநிலை - இது எப்படியிருக்கும்? 300 வார்த்தைகளில் விளக்கம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொழும்பில் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் பற்றாக்குறைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தியிருந்தனர். நாள்: ஏப்ரல் 2, 2022 இலங்கையில் அவசரகால நிலைமை அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று சனிக்கிழமை (ஏப்ரல் 2) அமலாகும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, அவசர கால நிலையை ஜனாதிபதி பிரகடனப்படுத்தியுள்ளார். மிரிஹான பகுதியில் ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள இடத்தை நேற்று முன்தினம் இரவு பொதுமக்…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
2019-12-01@ 15:22:26 *10 லட்சம் மீனவர்களை பாதுகாக்குமா அரசுகள்? *5 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்படும் ராமேஸ்வரம்: இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே, பிரதமராக அவரது சகோதரர் மகிந்த ராஜபக்சே பொறுப்பேற்றுள்ளனர். இதனால், தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலில் எத்தகைய மாற்றங்கள், விளைவுகள் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மீனவர்கள் மட்டுமல்லாது, தமிழக மக்களிடையேயும் ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி வர்த்தகம் நடக்கும், 10 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலை அரசுகள் பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இந்தியா - இலங்கை நாடுகளின் 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தின் ஒரு பகுதியான கச்சத்தீவு…
-
- 2 replies
- 536 views
-
-
-
இலங்கையில் இந்த நிலைக்கு மாறி மாறி ஆப்படிக்கும் இந்தியனே காரணம் ஈழத்தமிழர்களை மீண்டும் பகடைக்காய்களாக்க ஈழத்தமிழர்கள் இந்தியாவிற்கு இடம் கொடுக்கக்கூடாது. இந்தியாவின் ஒரே ஒரு நோக்கம் சிங்கள அரசுகளைத் தன் கைக்குள் வைத்திருப்பதே. அதற்காக யாரை வேண்டுமானாலும் பலி கொடுக்கத் தயாராகி இருக்கும் இந்திய இராட்சியம். சிங்களம் தன் கட்டுக்குள் அகப்படாது போனால் மீண்டும் தமிழர் உரிமைப்போராட்டம் முடக்கிவிடலாம். இதற்கு யாரும் பலிக்கடாவாகக்கூடாது. தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தியாவிற்கு எள்ளளவும் விருப்பம் இல்லை. சுருங்கச்சொன்னால் அமெரிக்காவிற்கு பாலஸ்தீனம் எப்படியோ இது போலத்தான் இந்தியாவிற்கு இலங்கைத்தமிழர். இந்தியா இந்தியாவாக இருக்கும் வரைக்கும் நாங்கள் சிங்களத்துடன் சகோத…
-
- 0 replies
- 569 views
-
-
இனியொரு இணையத்தளத்தில் சபாநாவலன் எழுதி வெளிவந்த, முக்கிய செய்திக் கட்டுரை இது இவ் ஆக்கத்தின் உள்ளடக்க முக்கியத்துவம் கருதி, இந்தப் பகுதியில் மீள் பதிவு செய்யப்படுகின்றது. நன்றி: இனியொரு - இன்போ தமிழ் குழுமம் - இலங்கையில் இந்தியா மேற்குலக ஒழுங்கமைவானது ஒரு குறித்த தெளிவான வடிவத்திற்குள் உருவமைக்கப்பட்ட காலமான, 1949 இற்குப் பின்னர் இப்போது முதற் தடவையாக அதன் சர்வதேச வரிசைப்படுத்தலானது புதிய நிலைகளை நோக்கி நகரவாரம்பித்திருக்கிறது. இன்று மறுபடி உலகம் ஒழுங்கமைக்கப் படுகிறது.பெரும் மூலதனத்தைச் சொந்தமாக வைத்திருக்கும் ஆதிக்க வர்க்கத்தின் தனிப்பட்ட நலன்களை மட்டுமே அடிப்டையாக முன்வைத்து இந்த ஒழுங்கமைப்பு அரசியல் உலகப் படத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கிறத…
-
- 1 reply
- 714 views
-
-
இலங்கையில் இப்போது இந்தியா என்ன செய்ய முடியும்? : பைடனுக்கான தமிழர்கள் July 20, 2021 *கிழக்கு பாகிஸ்தானில் (இப்போது பங்களாதேஷ்) இந்தியா இதைச் செய்ய முடிந்தால், அது இலங்கையிலும் செய்யலாம். *இந்தியா அவ்வாறு செய்தால், தென்கிழக்கு ஆசியாவில் அதன் தலைமையை உலகம் வரவேற்கும். இந்தியா மகாத்மா காந்தியின் நாடு மற்றும் இந்து மதத்தின் பண்டைய மதம் தோன்றிய நாடு ; அண்டை நாடான இலங்கையில் பிரச்சினையை சரிசெய்ய அரசியல் மற்றும் தார்மீக அதிகாரம் அதற்கு உண்டு. முதலாவதாக, இந்தியா சீனாவை வடகிழக்கில் இருந்து வெளியேறச் சொல்லலாம், ஏனென்றால் தீவின் அந்த தமிழ் பிராந்தியத்தில் நில அதிகாரம் தமிழர்களுக்கு சொந்தமானது என்று இந்தோ-லங்கா ஒப்பந்தம் கூறுகிறது. இந்தியாவுக்கு இன்னும் இந்த அ…
-
- 6 replies
- 612 views
-
-
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-
-
இலங்கையில் இயங்கிய 'குழந்தைகள் பண்ணை' - ரூ. 1,500க்கு தத்துக்கொடுக்கப்பட்ட சிறார்கள் சரோஜ் பத்திரனா 13 மார்ச் 2021 பட மூலாதாரம், HANDOUT படக்குறிப்பு, ரணவீரா அராக்கிலகே யசாவதிக்கு ஜெகத் தத்துக்கொடுக்கப்பட்ட பிறகு அவரது படம் கிடைத்தது. அதுவே மீண்டும் அவரை எப்படியாவது பார்க்க அவரைத் தூண்டியிருக்கிறது. இலங்கையில் 1960-1980களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தத்துக் கொடுப்பதற்காக அளிக்கப்பட்டன. அதில் சிலர், 'குழந்தை சந்தைகள்' மூலம் ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டதாக குற்றசாட்டுகளும் உள்ளன. இதில் பல குழந்தைகளை நெதர்லாந்தில் தத்துக் கொடுக்கப்பட்டன. ஆனால், இது தொடர்பான…
-
- 0 replies
- 355 views
-
-
‘இலங்கைத் தீவில் தனிநாடு அமைவதற்கு அனைத்துலக சமூகம் ஆதரவு அளிக்கப்போவதில்லை. தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடங்களான வடக்கு, கிழக்குக்கு சுயாட்சித் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில், இந்தியாவின் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுயாட்சி அதிகாரங்களை ஒத்ததான அரசியல்த் தீர்வு வழங்கப்பட வேண்டுமென்பதில் அனைத்துலக மட்டத்தில் பெருமளவு ஆதரவு நிலவுகின்றது. அதே கருத்தினையே நானும் கொண்டிருக்கின்றேன்’ என நோர்வேயின் முன்னாள் அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கின்றார். போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளின் பின்னரான இலங்கைத்தீவு எனும் தலைப்பில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கிலேயே எரிக் சொல்ஹெய்ம் இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கின்றார்…
-
- 0 replies
- 508 views
-
-
(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்) நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்ரேல் இனத்தவர்களின் மதஸ்தலங்கள் அல்லது அவர்களின் கலாசார நிலையங்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வாங்கி அவை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை 24 மணி நேரம் பாதுகாப்பு வழங்கி அமைக்கப்படும் இந்த கட்டிடங்கள் என்ன? என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்வி நேரத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், எமது நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட சி…
-
- 4 replies
- 245 views
-
-
இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம் யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக காய்கறிகளின் விலைகள் இரண்டு, மூன்று மடங்கு அதிகரித்து விட்டன. சில்லறைச் …
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
இலங்கையில் உல்லாசப் பயணி தாக்கப்பட்டதன் விளைவு August 1, 2021 — வி. சிவலிங்கம் — * உல்லாசப் பயணத்துறை வளர்ச்சியடைய பாதுகாப்பு ஏற்பாடுகள் அவசியம். * பாதிப்படைந்த பெண்கள் மேலும் நீதிமன்றத்தில் அவமானப்படுத்தப்படும் அவலங்கள். * உல்லாச பயணத்துறை கம்பனிகளும் அவற்றின் பயணிகளின் பாதுகாப்பும் கடந்த வாரம் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு ஒன்றில் இலங்கையிலுள்ள பெந்தோட்ட (Bentota) உல்லாசப் பயண விடுதியில் பிரித்தானிய பெண்மணி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்பட்டது தொடர்பாக கடந்த 11 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் அப் பெண்மணிக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் மிகவும் பிரசித்தி வாய்ந்த உல்லாச பயண முகவர் நிறுவனம் ஒன்று இலங…
-
- 0 replies
- 400 views
-
-
இலங்கையில் ஐ.எஸ். தாக்குதலும் உலகநாடுகளின் அனுதாபங்களும் ! இலங்கையில் கடந்த 21 ஆம் திகதி உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் ஐ.எஸ் ஐ.எ.ஸ் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு உலக நாடுகள் பலவற்றில் அஞ்சலிகள் மற்றும் கட்டணங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் 8 இடங்களில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் சிறுவர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் உட்பட 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத் தற்கொலை தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் 5 நட்சத்திர ஹோட்டல்கள் என்பன குறிவைக்கப்பட்டு இத்தாக்குல்கள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இத்தாக்குதல்களை கண்டித்து உலக நாடுகளின் தலைவர்கள் ம…
-
- 0 replies
- 497 views
-
-
யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக இலங்கையின் அம்பாறை மாவட்டத்தின் கரையோர…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் கார்ட்டூனிஸ்டாக இருந்த தனது கணவர் காணாமல் போனது குறித்து உண்மையான விசாரணையை தொடங்க வைப்பதற்கு சந்தியா எக்னெலிகோடாவுக்கு பல ஆண்டுகள் தேவைப்பட்டது. ஆனால் கடந்த நவம்பரில் பெரும்பான்மை ஆதரவுடன் புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டதும், முக்கியமான விசாரணை அதிகாரி மாற்றப்பட்டதில், நிலைமைகள் மாறும் என்று அவர் உணர்ந்தார். அரசியல் பிரச்சனையின் மறுபக்கம் குறித்து பிபிசியின் அன்பரசன் எத்திராஜன் செய்தி அளிக்கிறார். கொழும்பு நகருக்கு வெளியே அவருடைய வீட்டில் ஒரு மணி நேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது சந்தியா எக்னெலிகோடா வெளியில் எட்டிப்பார்த்தார். ''நீங்கள் இங்கு வந்து என்னுடன் பேசிக் கொண்டிருப்பது குறித்து இந்நேரம் காவல் துறையினருக்கு தகவல் சென்றி…
-
- 0 replies
- 521 views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=yCqVoNTVkr0
-
- 1 reply
- 493 views
-
-
உண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக அண்மையில், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஜோன் லோகி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றுள்ளது. எம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது. அத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இர…
-
- 0 replies
- 315 views
-
-
இலங்கையில் கொரோனாவால் இறந்த முஸ்லிம்கள் உடல்கள் எரிப்பு: இனப்பாகுபாடு காட்டுகிறதா அரசு? சரேஜ் பத்திரானா பிபிசி சிங்கள சேவை Nikita Deshpande இஸ்லாமிய முறைப்படி உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்படும். உடலுக்கு எரியூட்டுவது இஸ்லாமியர்களின் வழக்கத்தில் இல்லை. ஆனால் இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் எரியூட்டப்படுகின்றன. இந்த கொரோனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி அதிகாரிகள் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்து தங்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுகின்றனர் என இலங்கை முஸ்லிம்கள் கூறுகின்றனர். மே 4ம் தேதி, மூன்று குழந்தைகளுக்கு தாயான, 44 வயது ஃபாத்திமா ரினோசா, கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்துடன் மருத்துவமனையில் அனுமதிக…
-
- 0 replies
- 427 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images கடந்த 21ஆம் தேதி இலங்கை தலைநகர் கொழும்பு உள்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்ட தினமான அன்று, இலங்கையிலுள்ள தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை மையமாக கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இலங்கை மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்த முறையான விசாரணையை துவங்குவ…
-
- 0 replies
- 551 views
-
-
துப்பிக்கப்பட்டது 35 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images இலங்கையில் பசுவதை தடைச் சட்டத்தை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானம் எட்ட இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு இந்து அமைப்புக்கள் பாராட்டுக்களை தெரிவித்தாலும், முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. மாடறுப்பு செயற்பாடுகளை தடுக்கும் வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தின் போது இந்த யோசனை நேற்றைய தினம் முன்வைக்கப்பட்டது. இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு, ஆளும் கட்சி உறுப்பினர்…
-
- 0 replies
- 914 views
-
-
இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ஒரு அமைதியை ஏற்படுத்தலாம். இலங்கையல் சிங்களவர், தமிழர் பிரச்சனைக்குத்தூபமிட்டு வளர்த்து அமைதியில்லா இலங்கையை உருவாக்கியவர்கள் முற்று முழுதாக இந்தியர்களே. சிங்களவர் தமிழர்களுக்கு உரிமையைக் கொடுக் விரும்பினாலும், இதை இப்படிச் செய் அப்படிச்செய் என்று சிங்களத்திற்கும், தமிழர்களுக்கு உரிமைக்காகப் போராடு என்ற ஆயுதத்தையும் அள்ளிக் கொடுத்து உரிமையை கேட்பது போன்று கொடுக்காதே என்ற சிங்களத்திற்கும் சொல்லி இரு இனங்களும் தொடர்ந்து பிர்சனைப்படுவதால் வேறு வல்லரசுகள் இலங்கையில் கால்பதிக்காது வைத்துக் கொள் இதுவே வழி என்ற ரீதியில் இலங்கையை நடத்தி வந்தது இந்தியாதான். மிரட்டல்களும் தட்டல்களும் எங்கே எப்போது போடவேண்டும் என்று அங்கே போட்டு இரு இனங்களையும் அமை…
-
- 2 replies
- 673 views
-