நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
கீழே எழுதப்பட்ட கடிதம் கனடாவில் குடியுரிமை பெற்று இப்பொழுது சிங்கள நாட்டில் வசிக்கும் தமிழரால் எழுதப்பட்டது. இரண்டு ஊடகங்களில் வெளியாகி உள்ளது, Lankaweb.com and Srilankawatch.com . கனடாவில் உள்ள கனேடிய தமிழர் பேரவையின் தலைவர் உமாசுதன் மற்றும் பேச்சாளர் பூபாலபிள்ளையையும் சந்தித்ததாகவும் அவர்களை 'நல்லிணக்க' நோக்கத்தில் வன்னியில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நண்பர் ஒருவரின் கருத்துப்படி இந்த நபர் கீழ்வரும் மின்னஞ்சல்கள் மூலம் தொடர்புகள் கொள்ளுகிறார். rdkserendeepam@gmail.com, bishopthiagarajah@gmail.com and cfjrilr@yahoo.com கடிதத்தில் தனது பெயரை Victor annai விக்டர் அண்ணை அல்லது Richards Karunairajan என எழுதியுள்ளார். …
-
- 1 reply
- 1.2k views
-
-
எண்ணக்கரு: உள்ளூர்வாசி | ஓவியம்: உள்ளூர் வாசி (ஓவியரல்ல) * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம். நன்றி!
-
- 1 reply
- 2.8k views
-
-
தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது. கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது. சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்ப…
-
- 1 reply
- 466 views
-
-
ஒருபக்கம் "நரேந்தி்ர மோடி" மறுபக்கம் "நவநீதம் பிள்ளை"- மகிந்த அரசை சூழும் சவால்கள் வரப்போகும் நாட்களில் இலங்கை அரசாங்கம் முக்கியமான இரண்டு பிரச்சினைகளை எதிர்கொள்ளப்போகிறது. முதலாவது பிரச்சினை சர்வதேச அளவில் ஐக்கிய நாடுகளின் ஒரு அங்கமான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிலிருந்து வரப்போகிறது. இரண்டாவது பிரச்சினை இந்தியாவிடமிருந்து வரப்போகிறது. என்கின்றார் இன்போ தமிழின் கொழும்பு செய்தி ஆய்வாளரான சஞ்சயன் அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, இலங்கையில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கான குழு அடுத்த சில நாட்களுக்குள் நியமிக்கப்படவுள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம…
-
- 1 reply
- 696 views
-
-
http://xa.yimg.com/kq/groups/16842064/806306129/name/FeTNA%20response%20to%20NCCT.pdf
-
- 1 reply
- 498 views
-
-
தமிழீழ விடுதலைக்காக தமிழகம் தழுவிய மாணவர்களின் தொடர் போராட்டங்கள் 39 நாட்களையும் தாண்டி சென்று சென்று கொண்டிருக்கிறது. இந்த போராட்டங்கள் மூலம் இனப்படுகொலைக்கு ஆளான ஈழத்தமிழர்களுக்கு தனித் தமிழீழமே ஒரே தீர்வு என்ற் கோரிக்கையை தமிழகம் முழுவதும் சென்று சேர்த்து மக்கள் மனதில் அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர் மாணவர்கள். தமிழீழ விடுதலையின் பாதையில் தடைகற்களாக பல அரசியல், பொருளாதார சிக்கல்கள் வழி நிற்கின்றன. தொடர்ந்து ஐ.நா மன்றத்தினை வலியுறுத்தியும், தமிழர் விரோத அமெரிக்காவின் அயோக்கிய தீர்மானத்தை எதிர்த்தும் அறப்போராட்டங்களை முன்னெடுத்து வந்த மாணவர்களாகிய நாம் சரியான புரிதலும் திட்டமிடலும் இருந்தால் மட்டுமே வரவிருக்கும் நாட்களில் தமிழீழ விடுதலையை ஒரு படி முன்னெடுத்து ச…
-
- 1 reply
- 603 views
-
-
-
தேர்தலைத் திரும்பிப் பார்ப்போம்: கமல்ஹாசன் தரும் அரசியல் படிப்பினை! மின்னம்பலம் ராஜன் குறை தேர்தல் முடிந்து ஒரு மாதம் வாக்கு எண்ணிக்கைக்குக் காத்திருந்தோம். அது முடிந்து திமுக பதவியேற்றதும் கவனம் முழுவதும் புதிய ஆட்சியின் மீது குவிந்தது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாட்டில் பெரும்புயலாக வீசியது. மோடியின் ஒன்றிய அரசாங்கத்தின் அலட்சியத்தால் தடுப்பூசி தயாரிப்பு தாமதமாகி, நாட்டின் பல பகுதிகளில் பிணக்குவியல்களைக் காண நேர்ந்தது. தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்ற திமுக அரசு, அதன் தலைவர்களின், குறிப்பாக மு.க.ஸ்டாலினின் நீண்ட நாள் நிர்வாக அனுபவம் காரணமாக உடனடியாக முழு வேகத்தில் செயல்பட்டு, கொரோனோ பரவலைச் சிறப்பாக எதிர்கொண்டு மக்கள் மனதில் நம்பிக்கையையும், தைரியத்த…
-
- 1 reply
- 606 views
-
-
இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவையே மக்கள் விடுதலை முன்னணி ஆதரிக்கிறது. அக்கட்சி அதனை நேரடியாக கூறாவிட்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய ஆட்சியை சர்வாதிகார ஆட்சி என்று கூறுவதனாலும் அவ் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருவதனாலும் அவ்வாறு தான் முடிவு செய்ய வேண்டியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலின் போது தேற்கடிக்க வேண்டுமாயின் நடைமுறை சாத்தியமான ஒரே வழி, மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்வதே. ஆனால், மக்கள் விடுதலை முன்னணி அதனை நேரடியாக மக்களுக்கு கூற தயங்குகிறது. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்ய வேண்டும் என்பதே இந் நாட்களில் மக்கள் விடுதலை …
-
- 1 reply
- 668 views
-
-
சிங்களம் நல்ல தெரிஞ்ச யாரவது இந்த மொழிபெயர்ப்பு உண்மையானதா எண்டு சொளுங்கூ http://www.youtube.com/watch?v=b1TavoV4eFI "ஐடென்டிடி காட் ஐடென்டிடி காட்.. ஐடென்டிடி காட் இங்க வை இங்க காட்டு தம்பி இந்தபக்கம் கொஞ்சம் திருப்பு , இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் (பலரது பேச்சுகள் கேட்கின்றன ) யாரோடதோ தெரியல்ல கிடைச்சது அடிச்சதுதான் ( இது அடிச்ச ஆயுதத்தை குறிக்கிறதோ அடிபட்ட நபரை குறிக்கிறதோ தெரிய வில்லை ) இவன் பேசினான் (ஏசினான் ) பாதையால் போறவங்களுக்கு (அதாவது ஆமிக்காரனுகளுக்கு ) யாரு பேசினான் ? இவன்தான். தலைக்கு அடிச்சது யாரு ? ஆ ...? தலைக்கு யாரு அடிச்சது ? நாங்கதான் அடிச்சது ...........(மற்றைய சொல் விளங்கவில்லை ) …
-
- 1 reply
- 2.3k views
-
-
யாழில் இருந்து நீதிபதி இளஞ்செழியன் இடமாற்றம்? கிளம்பும் கடும் கண்டனங்கள் By Nithiyaraj - May 2, 2018 4 யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் வேறு ஒரு மேல் நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக கிளையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் யாழ். மேல் நீதிமன்றின் நீதிபதியாக மாணிக்கவாசகர் இளஞ்செழியன் நியமிக்கப்பட்ட பின்னரே யாழ். மாவட்டம் ஓரளவு அமைதியான சூழலில் …
-
- 1 reply
- 685 views
-
-
சனல்- 4 வீடியோ : உண்மையா- பொய்யா? இன்றைய நிலையில் இலங்கை அரசாங்கத்தின் முதல் நிலை எதிரி யார் என்றால், அது விடுதலைப் புலிகளாக இருக்க முடியாது. சனல்-4 தொலைக்காட்சி தான் அந்த இடத்தைப் பிடித்துள்ளது என்பது மிகைப்பட்ட கருத்தல்ல. வளைகுடாப் போரின் பின்னர் தான் அல்-ஜெஸீரா தொலைக்காட்சி உலகெங்கும் அறிமுகமானது. அதற்கு முன்னர் அரபு நாடுகளைக் கடந்து அதன் புகழ் பரவியிருக்கவில்லை. வளைகுடாப் போர் பற்றிய வீடியோ காட்சிகளை அல்- ஜெஸீரா வெளியிட்டபோது தான் உலகம் அந்தப் போரின் பரிமாணம் எத்தகையது என்று உணர்ந்து கொண்டது. அமெரிக்காவின் படை வலிமையையும் போராயுதங்களின் கோரத்தையும் அது உலகின் முன் கொண்டு சென்றது. அதேபோலத் தான் பிரித்தானியாவின் சனல்- 4 தொலைக்காட்சியை முன்னர் அறிந்த…
-
- 1 reply
- 868 views
-
-
நெருப்பில் பூத்த மலர் - சாய்ந்தமருது நகர சபை முகம்மது தம்பி மரைக்கார் / 2020 பெப்ரவரி 18 சாய்ந்தமருது பிரதேச மக்கள், பல வருடங்களாகக் கோரி வந்த உள்ளூராட்சி சபையை, அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபை அந்தஸ்தை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீகம், அரசியல் வழிமுறைகளிலான போராட்டங்கள் மூலமாகவே, தமது கோரிக்கையை, சாய்ந்தமருது மக்கள் வென்றெடுத்து உள்ளார்கள். 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த கரைவாகு தெற்கு (இப்போதைய சாய்ந்தமருது பிரதேசம்), கரைவாகு மேற்கு, கரைவாகு வடக்கு ஆகிய மூன்று கிராம சபைகளையும்…
-
- 1 reply
- 423 views
-
-
‘வெளிக்கிடடி விசுவமடுவுக்கு’ காரை துர்க்கா / 2019 ஜூலை 02 செவ்வாய்க்கிழமை, மு.ப. 09:43 Comments - 0 “நான் பிறந்தது யாழ் நகரப் பகுதியிலுள்ள ஒரு பிரதேசம்; கல்வி கற்றது, யாழ். நகரில் உள்ள கல்லூரி; உயர்கல்வி கற்றது, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடம்; பணியாற்றியது, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையும் அதனை அண்மித்த வைத்தியசாலைகளிலும் தான்” என வைத்தியர் ஒருவர் கூறினார். யாழ்ப்பாண இடம்பெயர்வு (30.10.1995) இடம்பெற்றிருக்காது விட்டால், நாவற்குழிக்கு அப்பால், என்ன நிறமென்றே பலருக்குத் தெரிந்திருக்காது என்று, நம்மவர்கள் நகைச்சுவையாகக் கதைப்பது வழமை. இவ்வாக்கியம், இவ்வைத்தியர் விடயத்தில் அப்படியே, அச்சொட்டாகப் பொருந்துகிறது அல்லவா? ஆயுதப் போரும் அதனால் ஏற்பட்ட வல…
-
- 1 reply
- 790 views
-
-
-
- 1 reply
- 589 views
-
-
தலாய் லாமாவை வரவேற்பதை கடுமையாக எதிர்க்கும் சீனா திபெத்தின் ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா, இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டும் என்ற வேண்டுகோள், இலங்கையில் உள்ள பௌத்தமதத் தலைவர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. பௌத்த மதத்தின் பாராம்பரிய சிறப்புகள் மிகுந்த இலங்கையில் இருந்து இவ்வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை கவனத்தில் கொள்ளப்படவேண்டும். தலாய் லாமா இலங்கைக்கு வருகைத்தருவாராயின் அது இங்கு வாழும் பௌத்த மக்களுக்கு பெரும்பேறாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமாதிரமன்றி, உலகில் பௌத்த மதத்தைப் பின்பற்றுகின்ற நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் மத மற்றும் பௌத்த கலாசார நல்லுறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்பு ஏற்படுமென்று பௌத்தமதத் தலைவர்கள் சில கருத்துக்களைத் தெர…
-
- 1 reply
- 360 views
-
-
அரசியல் மற்றும் பொது கொள்கைக்கான ‘தி இந்து’ மையம் சார்பில் ‘இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம்’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் சென்னையில் நாளை நடக்கிறது. சென்னை ராயப்பேட்டை டிடிகே சாலையில் உள்ள மியூசிக் அகாடமி கஸ்தூரி னிவாசன் அரங்கில் மாலை 6.30 மணிக்கு நடக்கும் ஆய்வரங்கத்தில், இலங்கைத் தமிழ் அகதிகளின் எதிர்காலம் குறித்து ஃபிரன்ட்லைன் முதுநிலை துணை ஆசிரியர் ஆர்.கே.ராதா கிருஷ்ணன் உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து நடைபெறும் கலந்துரையாடலில் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோச கரும், மேற்கு வங்க மாநில முன் னாள் ஆளுநருமான எம்.கே.நாராய ணன், ஈழ அகதிகள் மறுவாழ்வு நிறுவன பொருளாளர் எஸ்.சி.சந்திர ஹாசன், ‘இந்து’ என்.ராம் ஆகியோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …
-
- 1 reply
- 336 views
-
-
வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்படுகிறது. அந்த அளவுக்கு, அவற்றிடமிருந்து பல்வேறு வைரஸ் தொற்று நோய்கள் மனிதர்கள் மத்தியில் பரவியுள்ளன. பீட்டர் டஸ்ஸாக் என்ற சீன ஆய்வாளர், கடந்த 15 ஆண்டுகளாக விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் தொற்றுநோய்கள் குறித்து ஆய்வுசெய்துகொண்டிருக்கிறார். தான் செய்த ஆய்வுகளின் அடிப்படையில், "கொரோனா வைரஸுக்கான ஆதாரம் என்னவென்று 100 சதவிகிதம் உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும், அது சைனீஸ் ஹார்ஸ்ஷூ (Chinese horseshoe bat) என்ற ஒருவகை வௌவால்களிடமிருந்துதான் பரவியது என்பதற்கு மிகவும் வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளன" என்று கூறியுள்ளார். வௌவால்களுக்கு, 'வைரஸ்களின் கூடாரம்' என்ற பெயர் சமீபகாலமாக சூட்டப்பட்டுவருகி…
-
- 1 reply
- 322 views
-
-
அம்பலமாகிய அக்கினிக் குஞ்சு “சிறுமியைப் பாலியல் செயற்பாடுகளுக்கு விற்பனை செய்த நபர் கைது” கடந்த ஜூன் மாத நடுப்பகுதியில் நாட்டின் அனேக அனேக ஊடகங்களில் அவ்வப்போது பேசப்பட்ட செய்தியொன்று, நாளடைவில் தலைப்புச் செய்தியாகும் அளவுக்குப் பிரபல்யமானது. இவ்வாரத்தின் ஆரம்பத்தில், இலங்கையின் அயல்நாடுகளான மாலைதீவு மற்றும் இந்திய நாட்டு ஊடகங்களும் இச்செய்திக்கு முன்னுரிமை அளித்திருந்தமையைக் காண முடிந்தது. அது மாத்திரமல்லாமல், இவ்விடயம் தற்போதும் சமூகவலைத்தளங்களுக்குத் தீனி போட்டு வருகின்றது. சரி, சம்பவத்துக்கு வருவோம்; 15 வயதுச் சிறுமியைப் பாலியல் நடவடிக்கைளுக்காக, இணையத்தளம் ஊடாக விற்பனை செய்த குற்றச்சாட்டில், 35 வயதான நபரொருவர், கடந்த ஜூன் மாதம் 9ஆம் தி…
-
- 1 reply
- 357 views
-
-
ரஸ்ஸிய ஆக்கிரமிப்பை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் வேர்ல்ட் சோஷலிஸ்ட் வெப்சைட் எனப்படும் உலக சோசலிச இணையம் இந்த இணையத்தில் தமிழர் தொடர்பான செய்திகளும் அவ்வப்போது இடம்பெறுவதுண்டு. அச்செய்திகளைத் தாண்டி இந்த இணையம் தொடர்பாக நான் அதிகம் தேடியதில்லை. ஆனால், மிக அண்மையில் இந்த இணையத்தில் உக்ரேன் மீதான ரஸ்ஸிய ஆக்கிரமிப்புத் தொடர்பாக என்னதான் சொல்கிறார்கள் என்று அறிய விரும்பினேன். விளைவு, இந்த இணையம் முற்று முழுதாக ரஸ்ஸியா உக்ரேனில் நடத்திஒவரும் ஆக்கிரமிப்புப் போரினை ஆதரிப்பதோடு, இப்போர் ரஸ்ஸியா மீது மேற்குலகால் திணிக்கப்பட்ட ஆக்கிரமிப்புப் போர் என்றும் நிறுவ முயல்வது தெரிந்தது. சரி, பரவாயில்லை, ரஸ்ஸியாவின் இரு யுத்தங்களால் கொன்றொழிக்கப்பட்ட செச்சன் மக்கள் பற…
-
- 1 reply
- 466 views
-
-
உலக தமிழ் மாநாடு குறித்து விரைவில் அறிவிப்பு அடிமைகள் மாநாடு நடத்தினால் அது முதலாளிகள் மாநாடாத்தானே இருக்க முடியும்? ரெல் மீ கிளியர்லி டிஸ்கி : போகட்டும் தலையில் இடியே விழுந்தாலும் யாரும் வர வேண்டாம் என அன்போடு கேட்டு கொள்ளபடுகிறார்கள் !!
-
- 1 reply
- 301 views
-
-
புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கின்றதா இலங்கை அரசு March 23, 2019 இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களை மெளனிக்கச் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக இயங்குவதற்கும் நிதிகளை ஒதுக்கி அதற்கென ஆட்களையும் திரட்டி வருகின்றது இலங்கை அரசு. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் திட்டமிடலிலும் பல அமைச்சர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் கடந்த காலங்களின் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்கி வந்தவர்கள் இலங்கை அரசின் இவ் இரகசிய நட…
-
- 1 reply
- 726 views
-
-
கீர்த்தி துபே பதவி,பிபிசி நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மாணவர்கள் போராட்டம் உச்சத்தை அடைந்த போது, ஷேக் ஹசீனா ஆகஸ்ட் 5 ஆம் தேதி வங்கதேசத்தில் இருந்து டெல்லியை வந்தடைந்தார், அவர் ஏன் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தார் என்பதை யூகிப்பது சுலபம் தான். வங்கதேசத்தில் 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த போது, ஷேக் ஹசீனா இந்தியாவுடனான தனது உறவை பெரிதும் வலுப்படுத்தினார். அதே சமயம் பல துறைகளில் வங்கதேசம் இந்தியாவைச் சார்ந்திருப்பதும் அதிகரித்தது. வங்கதேசம் உணவுப் பொருட்கள் முதல் மின்சாரம் வரை அனைத்தையும் இந்தியாவிலிருந்து பெறுகிறது. இந்தியா வங்கதேசத்தில் உள்கட்டமைப்பு மற்றும் வர்த்தகத் துறையில் பெரும் முதலீடுகளை செய்துள்ளத…
-
- 1 reply
- 294 views
-
-
கடல் நீர் நடுவே பயணம்போனால் குடிநீர் தருபவர் யாரோ.. ஒரு நாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொருநாளும் துயரம்.. அலைகடல் மேலே அலையாய் அலைந்து உயிரைக்கொடுப்பவர் இங்கே.. வெள்ளிநிலாவே விளக்காய எரியும் கடல்தான் எங்கள் வீடு...”. 1964ஆம் ஆண்டு கவிஞர்வாலி எழுதி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையமைப்பில் ரி.எம்.செளந்தரராஜன் பாடி எம்.ஜி.ஆரின் படகோட்டி திரைப்படத்தில் வந்த “தரைமேல் பிறக்கவைத்தான்“ என்ற பாடலின் சிலவரிகள்.. கடற்றொழில் செய்யும் மீனவரின் அன்றாடவாழ்க்கையை தத்ருபபமாக எடுத்துக்காட்டும் அற்புதமான பாடல் அது. “வெள்ளிநிலாவே விளக்காய் எரியும் கடல்தான் எங்கள் வீடு“ என்று உரிமையுடன் மகிழ்ச்சியோடு கூறும் அவர்கள் வாழ்க்கையில் அவ்வப்போது மறக்கமுடியாத சில துன்பியல…
-
- 1 reply
- 653 views
-
-
-
- 1 reply
- 2.1k views
-