Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மன்னாரில் முன்நகர்வு முறியடிப்பு: 25 படையினர் பலி- 45 பேர் படுகாயம்

Featured Replies

மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளால் பெருமளவிலான படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இனிப்பான செய்தி.

மன்னாரில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: கடும் மோதலில் 25 படையினர் பலி

Friday, 30 May 2008

மன்னார் மாவட்டத்தில் இன்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைத் தரப்பினருக்கும் இடையில் வெடித்த கடும் மோதல் சம்பவத்தில் 25 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 45 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினரின் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபோதே இந்த மோதல் வெடித்தது...

தொடர்ந்து வாசிக்க

தலைப்பு திருத்தப்பட்டுள்ளது. தவறுக்கு வருந்துகிறோம்!

-அஜீவன்

Edited by AJeevan

அஜிவன் அண்ணா யாழ்கள உறவுகளுக்காக செய்தி இனைக்கிறாரா?

45 பலியா?

தங்களையே நம்பாதவர்கள்

தங்கள் தரப்பு செய்திகளையும் நம்புவதில்லை வினித்.

பலர் இங்கே நடிப்பு

உண்மைகளைகளைக் கூட நம்புவதில்லை.

காலம் தாழ்த்தி மற்றவர்களுக்கு வரும்.

செய்தி உண்மை!

Edited by AJeevan

  • கருத்துக்கள உறவுகள்

மோதல் இன்னும் தொடர்வதாக கேள்வி உண்மையா அஜீவன் அண்ணா?

மோதல் இன்னும் தொடர்வதாக கேள்வி உண்மையா அஜீவன் அண்ணா?

இலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிடவில்லை.

அங்கிருந்து கிடைத்த தகவல் இது மட்டுமே சுண்டல்.

மேலதிக தகவல்கள் வந்தால் இணைக்கிறேன்.

வேறு சொல்லத் தெரியவில்லை?

நன்றி!

தங்களையே நம்பாதவர்கள்

தங்கள் தரப்பு செய்திகளையும் நம்புவதில்லை வினித்.

பலர் இங்கே நடிப்பு

உண்மைகளைகளைக் கூட நம்புவதில்லை.

காலம் தாழ்த்தி மற்றவர்களுக்கு வரும்.

செய்தி உண்மை!

45 பேர் காயம் என்பதை தவறாக நீங்கள் இனைத்து விட்டிர்களோ என்றும் நினைத்தேன் ,,, மற்றும் படி செய்தி நம்பகத்தனமை பற்றி சொல்லவில்லை சிலநேரம் சில உறவுகளுக்காக அப்படி தவறாக எழுதி இருப்பிர்களா என்றும் சின்ன உறுத்தலில் தான் கேட்டேன் :wub:

45 பேர் காயம் என்பதை தவறாக நீங்கள் இனைத்து விட்டிர்களோ என்றும் நினைத்தேன் ,,, மற்றும் படி செய்தி நம்பகத்தனமை பற்றி சொல்லவில்லை சிலநேரம் சில உறவுகளுக்காக அப்படி தவறாக எழுதி இருப்பிர்களா என்றும் சின்ன உறுத்தலில் தான் கேட்டேன் :wub:

கருத்துகளை எடுத்துள்ளேன்.

உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் வினித்!

Edited by AJeevan

உண்மைதான் அஜீவன் அண்ணா

முழுவதும் உண்மை

ஒரு பொல்லாப்பும் இல்லை

எப்பவோ முடிந்த காரியம்

:icon_mrgreen:

என்னதான் பிரச்சனை, செய்தி ஏதோ, கருத்தாடல் ஏதோ போகிறது அன்பானவர்களே நாங்கள் ஒரு குடும்பமாக இருக்க வேண்டும் எம்மில் ஏன் இந்த வேட்டு வைக்கும் குணம்

நான் பொதுவாக கூறுகிறேன்....

என்ன கிருபா இது தெரியாதா?

மழை விட்டும் தூவானம் தொடர்ரமாதிரிதான் இதுவும்... 25 கும் 45 கும் இடையில 20 வித்தியாசம்....

இதை கண்டுகோள்ளாமல் இருக்கவேனுமெண்டா.. குழப்பவேணும்..

அங்க மன்னாரில சண்டைமுடிஞ்சு ஓஞ்சாலும் இஞ்ச தூவாணம் நிக்காது... அப்பிடி இனம் தான்நாங்கள்.

மன்னாரில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: கடும் மோதலில் 25 படையினர் பலி

Friday, 30 May 2008

மன்னார் மாவட்டத்தில் இன்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைத் மன்னார் மாவட்டத்தில் இன்று விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா படைத் தரப்பினருக்கும் இடையில் வெடித்த கடும் மோதல் சம்பவத்தில் 25 க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டு 45 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளார்கள். மன்னார் தேனுடையான் பகுதியில் சிறிலங்காப் படையினர், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கி பெருமெடுப்பிலான முன்நகர்வு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டபோதே இந்த மோதல் வெடித்தது.

படையினரின் இந்தப் பாரிய முன்னகர்வு புலிகளின் கடுமையான எதிர்த் தாக்குதலால் முறியடிக்கப்பட்டது. இதில் 25-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 45-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர் என வன்னியில் விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. பெருமளவிலான இராணுவ உபகரணங்களும் இந்த மோதலின் போது விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னாரின் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத்திடல் பகுதியிலிருந்து தேனுடையான் நோக்கி இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் மிகச்செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் இந்த முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். இன்று நண்பகல் வரை நடைபெற்ற படையினரின் பெரும் முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த்தாக்குதலை நடத்தினர்.

நண்பகல் ஓய்வின் பின்னர் மீண்டும் பிற்பகல் 12:30 மணியளவில் படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகர்வு நடவடிக்கையை மேற்கொண்டனர். விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து மாலை 6:00 மணியளவில் பலத்த இழப்புகளுடன் படையினர் பின் வாங்கியுள்ளனர் என வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் மன்னார் பெரியமடுவுக்கு வடக்காகவும் தென்கிழக்காகவும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

மன்னார் மோதல் சம்பவம் தொடர்பாக இராணுவத் தரப்பு இதுவரையில் செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. இருந்தபோதிலும், பூநகரிப் பகுதியில் கல்முனைத் துறைப் பகுதியை நோக்கி சிறிலங்கா விமானப் படையின் யுத்த விமானங்கள் இன்று பிற்பகல் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியிருப்பதாக இராணுவ நடவடிக்கைகள் தொடர்பிலான மத்திய தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதல் நிலைகளை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் சிறிலங்கா படை வட்டாரங்கள் தெரிவித்தன. நண்பகல் 1.20 மணியளவில் இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

http://www.ajeevan.ch/content/view/3044/1/

தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்.

25 படையினர் பலி என்பது தவறுதலாக 45 படையினர் பலி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நன்றி!

-அஜீவன்

Edited by AJeevan

என்ன கிருபா இது தெரியாதா?

மழை விட்டும் தூவானம் தொடர்ரமாதிரிதான் இதுவும்... 25 கும் 45 கும் இடையில 20 வித்தியாசம்....

இதை கண்டுகோள்ளாமல் இருக்கவேனுமெண்டா.. குழப்பவேணும்..

அங்க மன்னாரில சண்டைமுடிஞ்சு ஓஞ்சாலும் இஞ்ச தூவாணம் நிக்காது... அப்பிடி இனம் தான்நாங்கள்.

எனக்கு விளங்கிவிட்டது சூறாவளி ஆனால் இது சுழன்று அடிப்பதற்கு இது அவ்வளவு பெரிய பிரச்சனையா

அஜிவன் அண்ணா யாழ்கள உறவுகளுக்காக செய்தி இனைக்கிறாரா?

45 பலியா?

மன்னிக்கவும் வினித்!

ஏற்பட்ட தவறுக்கு...............மன்னிக்கவும்!

மன்னாரில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: கடும் மோதலில் 25 படையினர் பலி

Friday, 30 May 2008

தலைப்பில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகிறோம்.

25 படையினர் பலி என்பது தவறுதலாக 45 படையினர் பலி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

நன்றி!

-அஜீவன்

என்ன அஜீவன் அண்ணா பிழைவிடுவது எல்லோரிடமும் உள்ளது மனம் நோகாது தொடருங்கள்..... வாழ்த்துக்கள் உங்கள் பிழைதிருத்தும் பண்பிற்கு..

என்ன அஜீவன் அண்ணா பிழைவிடுவது எல்லோரிடமும் உள்ளது மனம் நோகாது தொடருங்கள்..... வாழ்த்துக்கள் உங்கள் பிழைதிருத்தும் பண்பிற்கு..

இல்லை கிருபா

வினித்தை நோக வைத்து விட்டேன்

அது என்னை உறுத்துகிறது!

அதற்காக அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளேன்.

இருந்தாலும் நான் செய்தது தவறு!

  • கருத்துக்கள உறவுகள்

அஜீவன், உங்களுடைய பெரும் தன்மையை கண்டு வியந்தேன்.

உண்மைதான் கிருபா

மனிசரா பிறந்திட்டா பிழைவிடாமல் இருகேலாது, பிழைகளை குறையக்காமல் அனுசரிச்சு திருத்தாட்டி மனுசராவும் வாழமுடியாது.

நாங்களும் பிழைவிடுவோம், என்று நினைத்தால் விமர்சனங்களைக்கண்டு கலங்க வேண்டியதில்லை... அதுவே ஊண்டுகோலா அமையும் என்றுகூறி எல்லாம் வல்ல இறைவனின் பெயரால் விடை பெறுகின்றேன்..

நன்றி

வணக்கம்.

என்ன இது விடைபெறுகிறது அழகில்ல வேறுகருத்துக்களில் சந்திப்பம் வாருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை கிருபா

வினித்தை நோக வைத்து விட்டேன்

அது என்னை உறுத்துகிறது!

அதற்காக அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளேன்.

இருந்தாலும் நான் செய்தது தவறு!

இவ்வளவு நல்ல விஷயம் நடந்திருக்கு, அதையெல்லாம் விட்டு விட்டு இப்படி ஆளாளுக்கு கதை சொல்லுறதும், பின்னர் வருந்துகிறதும்....தேவையா.

விட்டுப்போட்டு 25 எதிரி செத்ததைக் கொண்டாடுவோமா ?!!!

அஜீவன், வினித்...விடுங்கள், நல்லதை மட்டுமே நினைப்போம்.

மன்னார் சண்டையில் 25 ராணுவ வீரர்கள் பலி

சனிக்கிழமை, மே 31, 2008

இலவச நியூஸ் லெட்டர் பெற

மன்னார்: மன்னார் மேற்குப் பகுதியில் நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகள் தாக்கியதில், 25 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இன்று மன்னார் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத் திடல் என்ற இடத்தில் கடும் சண்டை நடந்தது.

ராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ராணுவத்தினர் 25 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

புலிகளின் ஆவேசத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் ஆயுதங்கள், துப்பாக்கிகளைப் போட்டு விட்டு தப்பி ஓடினர். ராணுவத்தினர் போட்டு விட்டுச் சென்ற ஆயுதங்களை விடுதலைப் புலிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்றைக்கு தட்ஸ்தமிழ் இப்படி செய்தி போட்டு இருக்கிறார்கள் ஆனால் சில நேரம் கிழக்கு மாகானத்தில் உள்ள காங்கேசந்துறையில் கடும் சமர் என்றும் போடுவார்கள்

இல்லை கிருபா

வினித்தை நோக வைத்து விட்டேன்

அது என்னை உறுத்துகிறது!

அதற்காக அவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளேன்.

இருந்தாலும் நான் செய்தது தவறு!

விடுங்கள் அஜீவன் அண்ணா நீங்கள தவறாக இனைத்திர்கள் என்ற என்னதில் தான் சொனேன் தெரியும் தானே நான் செத்த வீட்டிலும் நகைச்சுவையாக பேசு பழக்கம் உள்ளவன் :wub: அது போக என் மனம் நோகவில்ல அது என்னிடம் இல்லை :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இறந்த படையினரின் எண்ணிக்கை 28 - பதிவு

இத்தாக்குதலில் 28 படையினர் கொல்லப்பட்டும் 52 படையினர் காயமடைந்துள்ளதாகவும் பெருமளவு ஆயுததளபாடங்களும் விடுதலைப்புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

மன்னார் சண்டையில் 25 ராணுவ வீரர்கள் பலி

சனிக்கிழமை, மே 31, 2008

இலவச நியூஸ் லெட்டர் பெற

மன்னார்: மன்னார் மேற்குப் பகுதியில் நடந்த கடும் சண்டையில் விடுதலைப் புலிகள் தாக்கியதில், 25 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இன்று மன்னார் மேற்குப் பகுதியில் உள்ள மாளிகைத் திடல் என்ற இடத்தில் கடும் சண்டை நடந்தது.

ராணுவத்திற்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ராணுவத்தினர் 25 பேர் கொல்லப்பட்டனர். 45 பேர் படுகாயமடைந்தனர்.

புலிகளின் ஆவேசத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் ஆயுதங்கள், துப்பாக்கிகளைப் போட்டு விட்டு தப்பி ஓடினர். ராணுவத்தினர் போட்டு விட்டுச் சென்ற ஆயுதங்களை விடுதலைப் புலிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

இன்றைக்கு தட்ஸ்தமிழ் இப்படி செய்தி போட்டு இருக்கிறார்கள் ஆனால் சில நேரம் கிழக்கு மாகானத்தில் உள்ள காங்கேசந்துறையில் கடும் சமர் என்றும் போடுவார்கள்

விடுங்கள் அஜீவன் அண்ணா நீங்கள தவறாக இனைத்திர்கள் என்ற என்னதில் தான் சொனேன் தெரியும் தானே நான் செத்த வீட்டிலும் நகைச்சுவையாக பேசு பழக்கம் உள்ளவன் :D அது போக என் மனம் நோகவில்ல அது என்னிடம் இல்லை :)

நல்ல மனித நேயம் இருப்பவர்கள் மட்டுமே களத்தில் கருத்து எழுதுகிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.