Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளுக்கு எதிரான படம்: மெட்ராஸ் கஃபே படத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது - தடை செய்ய ராமதாஸ் கோ‌ரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜான் ஆபிரஹாம் தயா‌ரித்து நடித்திருக்கும் மெட்ராஸ் கஃபே படத்துக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுக்கிறது. ஏற்கனவே நாம் தமிழர் கட்சி படத்தை தடை செய்ய வேண்டும் என கோ‌ரியிருந்த நிலையில், ராமதாஸும் படத்தை தடை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி அறிக்கை ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

ஹிந்தி திரைப்பட நடிகர் ஜான் ஆபிரகாம் 'மெட்ராஸ் கஃபே' என்ற பெயரில் ஹிந்தித் திரைப்படம் ஒன்றை தயாரித்து நடித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து அப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கு ஈழ ஆதரவாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. ஈழ ஆதரவாளர்களின் ஐயங்களுக்கு இதுவரை தெளிவான விளக்கம் எதையும் அளிக்காத நடிகர் ஜான் ஆபிரகாம் இப்போது மெட்ராஸ் கஃபே திரைப்படம் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வரும் 23ஆம் தேதி தமிழகத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்தப்படத்தில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகளாக சித்தரித்திருக்கிறீர்களா? என்று அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "விடுதலைப்புலிகளை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை" என்று மழுப்பலாக பதிலளித்திருக்கிறார். ஆனால், இந்தத் திரைப்படத்தின் பெரும்பகுதி இலங்கையில் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது; இலங்கையில் இராஜபக்சே அரசின் ஆதரவுடன் அதிக திரை அரங்குகளில் திரையிடப்பட உள்ளது என்பதிலிருந்தே இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை யூகிக்க முடியும்.

1980-களின் இறுதியில் இந்திய அமைதிப்படை இலங்கைக்கு சென்றது முதல் 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஈழப்போர் வரை விவரிக்கும் இப்படத்தில் விடுதலைப் புலிகள் மோசமானவர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில் இலங்கை அரசின் பிரச்சாரப் படத்தைப் போன்று இது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

 

FILE

இலங்கையில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என உலகம் முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், இலங்கைப் படையினரை உத்தமர்களாக காட்டி, அவர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களையும், எதிர்ப்புகளையும் நீர்த்து போகச் செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் இந்தத் திரைப்படத்தை தயாரிக்க இலங்கை அரசு பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. ஏற்கனவே, இந்தியாவில் ஈழத் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மத்தியப் பிரதேசம், பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில் திரைப்படங்களின் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக இந்திய மக்களிடையே நச்சு விதைகளைத் தூவுவதற்காகவே, இராஜபக்சே ஏற்பாட்டில் இப்படம் எடுக்கப்பட்டிருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இலங்கையில் நடைபெற்ற ஈழப்போர், இழந்த நாட்டை மீட்பதற்காக தமிழர்கள் நடத்திய போராட்டம்; இது மிகவும் உன்னத வரலாறு ஆகும். இத்தகைய ஒரு விடுதலை இயக்கத்தை கொச்சைப் படுத்தும் வகையில் திரைப்படம் தயாரித்திருப்பது உலகம் முழுவதும் உள்ள 10 கோடி தமிழர்களை அவமதிக்கும் செயலாகும். இதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். பொதுவாக கருத்து சுதந்திரம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும், திரைப்படங்கள் நல்ல விசயங்களை துணிச்சலாக எடுத்துக் கூற வேண்டும் என்பதுதான் எனது நிலைப்பாடு ஆகும். ஆனாலும், ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட படத்தை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மெட்ராஸ் கஃபே திரைப்படத்தின் அனைத்து மொழிப் பதிப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மெட்ராஸ் கஃபேயில் ஜான் ஆபிரஹாம் இந்திய உளவுப்பி‌ரிவு அதிகா‌ரியாகவும், நர்கீஸ் பக்‌ரி பத்தி‌ரிகையாளராகவும் நடித்துள்ளனர்.

ஆகஸ்ட் 23ஆம் தேதி படத்தை தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 

http://tamil.webdunia.com/entertainment/film/featuresorarticles/1308/08/1130808033_2.htm

  • கருத்துக்கள உறவுகள்

இப்படம் சிட்னியிலும் திரையிடப்படவுள்ளதாக ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. நிச்சயம் எதிர்ப்பு இப்படத்துக்கு கிடைக்கவுள்ளது.

தமிழினப் படுகொலைகாரர்களின் அனுசரணையில் தயாரிக்கப்பட்ட படத்தை உலகெங்கும் தடுக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

தடுப்போம்...

பார்த்து விட்டு தடுப்போம் .

பொதுவாக அரசியல் பேசும் எந்த சினிமாவையும், கலை வெளிப்பாடுகளையும், படைப்புகளையும் வெளியீடுகளையும் தடை செய்யும் என்ற விடயத்தில் துளியளவும் எனக்கு உடன்பாடு இல்லை. 

 

வெளிநாடுகளில் உயர் தர தொழில்நுட்பங்களை படிக்க வசதி இருக்கும் நாம், எமக்கு எதிராக பேசும் சினிமாவின் அரசியலுக்கு பதில் சொல்லக்கூடிய ஏராளமான சினிமாக்களை எடுக்க முடியும். அதற்குரிய பொருளாதாரம் கூட எம்மிடம் உண்டு. அவ்வாறு செய்வது மட்டுமே சரியான பதிலாக இருக்க முடியும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக அரசியல் பேசும் எந்த சினிமாவையும், கலை வெளிப்பாடுகளையும், படைப்புகளையும் வெளியீடுகளையும் தடை செய்யும் என்ற விடயத்தில் துளியளவும் எனக்கு உடன்பாடு இல்லை. 

 

உங்களது   கருத்து

புலம்  பெயர்  தமிழருக்கு  என்றால்  சரி

ஆனால் தமிழகத்தைப்பொறுத்தவரை

அவர்கள் எடுத்த படங்கள் வெளியில் வரத்தடை

எடுக்கவும்  தடை

எனவே இப்படியான  படங்களுக்கு அவர்கள் எதிர்ப்பைக்காட்டுவது  மட்டும் தானே  முடியும்??? :( 

 

வெளிநாடுகளில் உயர் தர தொழில்நுட்பங்களை படிக்க வசதி இருக்கும் நாம், எமக்கு எதிராக பேசும் சினிமாவின் அரசியலுக்கு பதில் சொல்லக்கூடிய ஏராளமான சினிமாக்களை எடுக்க முடியும். அதற்குரிய பொருளாதாரம் கூட எம்மிடம் உண்டு. அவ்வாறு செய்வது மட்டுமே சரியான பதிலாக இருக்க முடியும்.

 

விசுகு,

 

இப்படங்களுக்கு எதிராக இத்தகைய எதிர்ப்புகளை காட்டுவதை விட, எமக்கு ஆதரவாக எடுத்த படங்களுக்கு தடையும், காட்சிகளுக்குத் தடையும் கொண்டு வரும் போது அவ் நடவடிக்கைகளுக்கு எதிராக காட்டி இருந்தால் பல மடங்கு பிரயோசனமாக இருந்து இருக்கும். 

 

இன்றும் புலம்பெயர் தேசங்களில் எடுக்கப்படும் ஈழ ஆதரவு படங்களை இந்தியாவில் திரையிட பல முட்டுக்கட்டைகளும் தடைகளும் உள்ளன. முதலில் இவர்கள் இவ் போக்குக்கு கடுமையான எதிர்ப்பினை காட்ட வேண்டும்.

 

இல்லாவிடின், இவர்களின் இன்றைய தடை கோரும் எதிர்ப்பு, எமக்கு ஆதரவான படைப்புகள் மீதான தடைகளை சமன் செய்கின்றது.

 

பி.கு:

 

விசுகு ஒருவரின் கருத்தினை quote பண்ணி அதனுள்ளேயே எழுதும் போது வேறு நிறத்திலான எழுத்துருவை பயன்படுத்தினால் நன்று. அல்லது, எழுதியவரே தன் கருத்தினை bold பண்ணி வைத்துள்ளார போன்ற தோற்ற மயக்கத்தினை உருவாக்கும்.

பொதுவாக அரசியல் பேசும் எந்த சினிமாவையும், கலை வெளிப்பாடுகளையும், படைப்புகளையும் வெளியீடுகளையும் தடை செய்யும் என்ற விடயத்தில் துளியளவும் எனக்கு உடன்பாடு இல்லை. 

 

வெளிநாடுகளில் உயர் தர தொழில்நுட்பங்களை படிக்க வசதி இருக்கும் நாம், எமக்கு எதிராக பேசும் சினிமாவின் அரசியலுக்கு பதில் சொல்லக்கூடிய ஏராளமான சினிமாக்களை எடுக்க முடியும். அதற்குரிய பொருளாதாரம் கூட எம்மிடம் உண்டு. அவ்வாறு செய்வது மட்டுமே சரியான பதிலாக இருக்க முடியும்.

வெளிநாடுகளில் உயர் தர தொழில்நுட்பங்களை படிக்க வசதி இருக்கும் நாம், எமக்கு எதிராக பேசும் சினிமாவின் அரசியலுக்கு பதில் சொல்லக்கூடிய ஏராளமான சினிமாக்களை எடுக்க முடியும். அதற்குரிய பொருளாதாரம் கூட எம்மிடம் உண்டு. அவ்வாறு செய்வது மட்டுமே சரியான பதிலாக இருக்க முடியும்.

ஏன் யாழ் கள உறவுகள் அதை துவக்கி வைக்க கூடாது ?

கதை ,தொழில் நுட்பம் ,நடிக ,நடிகைகள் எல்லாம் பெரிய பிரச்சனை இல்லை .

பிரச்சனை ? காசு பணம் துட்டு .

ராமதாஸ் ஒரு ரவுடி அவர்சொல்லுறதை எல்லாம் பெரிசா எடுத்துகிட்டு...இப்போ அவர்

எதையாவது செய்து தமிழ்நாட்டில் தனது பெயரை பத்திரிகைகளில் அடிகடி வரணும்னு முயல்கிறார்

....கூடிய சீக்கிரம் JJ அவருக்கு ஆப்பு வைப்பது நல்லது

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.