Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருத்துகள குழுமங்கள் குறித்த உதவிகள்

Featured Replies

என்னால் சிரிப்பு பகுதிக்குள் எழுத முடியவில்லையே. ஏன்? நான் ரொம்ப தடவை முயற்சி பண்ணினேன். இப்படி தான் வருகின்றது ஏன்? :icon_idea::blink:

post-89-1176158342_thumb.jpg

அனைத்து கள உறுப்பினர்களும் கருத்துகள் குழுமங்கள் குறித்த தங்கள் கருத்துகளை எழுத வசதியாக தலைப்பை மாற்றியுள்ளேன். - மதன்

Edited by Mathan

  • Replies 111
  • Views 24.3k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஓஹோ! இதுவா பிரச்சனை. ஓகே ஓகே நன்றி அத்ஸ் :lol: :P

ஆ... என்னாலும் எழுத முடியவில்லை... அஞ்சலோட்ட போட்டிக்கு களத்தில் குழுக்கள் பிரிக்கபடுகின்றன போல இருக்கின்றது?

நானும் எனது மாப்பிளை என்ற லொள்ளுப் பெயரை கலைஞன் என்று மாற்றிவிட்டேன், மாப்பு/மாப்பி/மாப்ஸ் என அன்புடன் நம்மை அழைக்கவிரும்புவர்கள் தொடர்ந்தும் என்னை அவ்வாறே அழைக்கவும். கலைஞன் என்று அழைக்க விரும்புபவர்கள் கலைஞன் என்று அழைக்கவும். பலருக்கு முக்கியமாக புதியவர்கள், உறுப்பினர்கள் அல்லாத விருந்தினர்களிற்கு சில வேளைகளில் மாப்பிளை எனும் பெயர் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் எனது பெயரை கலைஞன் என மாற்றிவிட்டேன், நன்றி! :lol:

கலைஞன்,

இனி உங்களால் கருத்துக்களத்தில வழமைபோல் எழுதமுடியும்.

வேறு யாருக்காவது

கருத்துக்களத்தில் எழுதமுடியாது இருப்பின் அறியத்தரவும்.

நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன்,

இனி உங்களால் கருத்துக்களத்தில வழமைபோல் எழுதமுடியும்.

வேறு யாருக்காவது

கருத்துக்களத்தில் எழுதமுடியாது இருப்பின் அறியத்தரவும்.

நன்றி

என்னால் எழுத முடியவில்லை

நன்றி

பண்டிதர்,

இனி உங்களாலும் வழமைபோல் எழுதமுடியும்.

நன்றி

கருத்துக்கள உறுப்பினர்கள், கருத்துக்கள உறவுகள் என்று இரண்டு பிரிவுகள் காணப்படுகின்றது போல உள்ளது, இவை இரண்டிற்குமான வித்தியாசம் என்ன? :lol:

அளவுக்கு மிஞ்சி அரட்டை அடித்து, லொள்ளுகள் செய்து, களத்தில் குழப்படி செய்பவர்கள் கருத்துக்கள உறவுகள் பிரிவினுள் அடக்கப்பட்டுள்ளார்கள் போல இருக்கின்றது? :lol:

மேலும், பெயர் மாற்றம் பகுதியில் என்னால் பதில் கருத்து இட முடியவில்லை, இதற்கான காரணம் என்ன?

கருத்துக்கள உறுப்பினர்கள் (Members)--> கருத்துக்களத்தில் இணையும்/இணைந்துள்ள அனைவருமே கருத்துக்கள உறுப்பினர்கள் தான். இருப்பினும், எந்தவித அங்கத்துவ நிலையும் / குழும உறுப்பு நிலையும் இல்லாத புதிய உறுப்பினர்களையே இங்கே குறிப்பிடுகிறோம்.

கருத்துக்கள உறவுகள் --> புதிய உறுப்பினர்களாக இணைந்து, "யாழ் இனிது" பகுதியில் தமது அறிமுகத்தை எழுதிய பின், கருத்துக்கள நிர்வாகத்தால் அவர்களின் கருத்துக்கள் ஆராயப்பட்டு, அதன்பின் "கருத்துக்கள உறவுகள்" என்கிற குழும உறுப்பு நிலை வழங்கப்படும்.

"யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் முரசம்" என்கிற பிரிவு கருத்துக்கள நிர்வாகத்துக்கான பிரிவு. நிர்வாகம் சார்ந்த விளக்கங்களுக்கும், அறிவித்தல்களுக்குமான பிரிவு. எனவே பொறுப்பாளர்களும், மட்டுறுத்துனர்களும் மட்டுமே அப்பகுதியில் புதிய தலைப்பினைத் தொடங்கவும், பதிலளிக்கவும் முடியும். (இதுபற்றிய மேலதிக விபரம் விரைவில் இணைக்கப்படும்)

"பெயர் மாற்றங்கள்" தலைப்பு "யாழ் உறவோசை" என்கிற பிரிவுக்குள் நகர்த்தப்பட்டுள்ளது. இனி நீங்கள் எழுதலாம்.

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் குழுமப் பிரிப்பு அவசியம் தானா..??!

கருத்துக்களத்தில் ஒரு தலைப்பிடுவதற்கும் களப் பொறுப்பாளரை அணுக வேண்டும் என்பது கட்டாயமானால் கருத்து எழுதுபவர்களுக்கு உள்ள உரிமைதான் என்ன..??! வெறும் கருத்து எழுதுவதுதானா..??!

செய்திகள் கிடைக்கும் வேகத்துக்கு ஏற்ப பல தரப்பட்டவர்களாலும் முதன்மை அளித்து இணைக்கப்பட்டு வருகின்றன. வெகுசிலரே பிறமொழியில் வரும் செய்திகளை மொழிபெயர்த்து வழங்குகின்றனர். பலர் அடுத்த தளங்களில் உள்ள தமிழ் செய்திகளை ஒட்டுகின்றனர். இந்தக் குழுமப் பிரிப்பு தன்னார்வச் செயற்பாட்டுக்கு மேலும் தடையாகலாம்..! செய்திகள் கிடைக்கும் வேகத்தைத் தடுக்கலாம்..! கேட்டுப்பெற்று சேவை செய்யென்பது கொஞ்சம் ஓவரா தெரியுது..!

எம்மைப் பொறுத்தவரை பழைய நடைமுறை சிறந்தது..என்றே எண்ணுகின்றோம். இது என்னவோ ஆட்களை தேவைக்கு யூஸ் பண்ணுறது போல இருக்குது..! எம்மைப் பொறுத்தவரை கேட்டுப்பெற்று தலைப்பிடுவதிலும் எல்லோருக்கும் அனுமதிக்கப்படும் உரிமையை அனுபவிப்பதில் மட்டுமே நாட்டம் இருக்கிறது..! :lol::lol::lol:

Edited by nedukkalapoovan

நான் வழமையாகப் பதியும் இளைப்பாற்றுக்களம், நான் நடாத்தும் யாழ்களப் போட்டிக்கும் பதில் எழுத முடியாமல் இருக்கிறது

  • கருத்துக்கள உறவுகள்

'செய்திக்களக் குழுமம்: உறுப்பினர்கள்' பகுதியில் எனது பெயர் இல்லை. என்றாலும் என்னால் புதிய தலைப்பில் செய்திகள் இட முடிகிறது & பதில் அனுப்பவும் முடிகிறது.

கந்தப்பு உங்கள் பேட்டி படித்தோன். நன்றாக பதில் எழுதி உள்ளீர்கள். வாழ்த்துக்கள். ஆனலும், யாழ்கவியை பற்றிய கருத்துகளுக்கு நான் விளக்கம் அழிக்க கடமைப் பட்டுள்ளொன். அவர் கவிதை எழுத மாட்டார். பலர் அவரைப் பற்றி கவிதை எழுதியாகக் கோள்வி? அவர் கவிதையின் கருப் பொருள். அவரையா, கவிதை எழுத சொல்லுவது. தப்பு.

அடுத்தது, உங்கள் குந்தல். எனது ஜாயா, இப்படிதான் திண்ணையில் இருக்கிறவர். ஏனொன்றால், வேட்டி ஊத்தையாகி விடுமாம். உங்களுக்கும் அதே பிரச்சனையோ. யார் உடுப்பு தோய்க்கிறது? குச்சாச்சியோ?

அதெல்லாம் சரி இந்த வானவில் எதுக்குள்ள இருக்கேன் என்டு கொஞ்சம் பாத்து சொல்லுங்கோ ஏனென்டா வந்து என்னும் 50நாள் ஆகல

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி இந்த வானவில் எதுக்குள்ள இருக்கேன் என்டு கொஞ்சம் பாத்து சொல்லுங்கோ ஏனென்டா வந்து என்னும் 50நாள் ஆகல

நீங்கள் கருத்துக்கள உறவுகள் ஆக இருக்கிறீர்கள். என்னை கருத்துக்கள உறுப்பினர்களில் ஒருவராக குறிப்பிட்டிருந்தாலும், என்னால் எல்லாப்பகுதியிலும் தலைப்புக்கள் இட முடிகிறது,

யாழ் களத்தில் தமிழில் பல பாரிய பெயர் மாற்றங்கள் இடம்பெற்றுள்ளதால், எங்கெங்கு நாம் எழுதமுடியும், எங்கெங்கு நாம் எழுதமுடியாது என்று சரியாக விளங்கவில்லை, அவரவர் தம் தம் அனுபவங்களினூடு எங்கே தாம் எழுத முடியாது, எங்கே தாம் எழுத முடியும் என்பதை மெல்ல, மெல்ல கண்டுகொள்ள வேண்டியதுதான்! :lol:

மாப்பி காக்கி நாம எல்லா இடத்திலேயும் எழுதலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து ஆர்வக் கோளாறினால் இதற்கு மேலும் புதிய களப்பிரிவுகளை ஆரம்பிக்காதீர்கள்..! ஏலவே பல பிரிவுகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன..! ஓரிரண்டு தலைப்புகளுக்காக ஒரு பிரிவை ஆரம்பிப்பதன் மூலம் களம் நீண்டு பல தலைப்புக்கள் கவனயீர்ப்புக் குறைந்து செல்கின்றன..!

யாழ் களத்தை செய்திகள் படிக்கவே அதிகம் பேர் பயன்படுத்துகின்றனர். காரணம் அது செய்தித் திரட்டை ஒரே இடத்தில் கொண்டிருப்பதால்..

உலகச் செய்திகள் தொடர்பில் வெட்டி ஒட்டுதலை விட ஆங்கில மொழி மூல செய்தி இணையங்களில் இருந்து செய்திகளை எடுத்து மொழிபெயர்த்து இட முன்வர வேண்டும். இந்தியத் தளங்கள் மொழிபெயர்ந்து வெளியிட அதை நோகாமல் வெட்டி ஒட்டி அதையே பின்பற்றிக் கொண்டிருக்காமல்.. (உலகச் செய்திகளில் இந்திய இணையங்களில் வரும் செய்திகளே அதிகம் உள்ளன..!). செய்திப் பிரிவுக்குரியவர்களாக உள்ளவர்கள் இக்களத்திற்கு என்று தனித்துவமா செய்திகளை தமிழில் தரவும் முனைய வேண்டும்..!

செய்திப் பிரிவில் அதிகம் செய்தி இணைக்காதவர்களை.. களத்துக்கு வாறதைக் குறைத்துள்ளவர்களை அதற்குள் இடுவதன் மூலம் செய்திகள் கிடைக்கத் தாமதமாகின்றன. செய்திகளை பிரசுரிப்பதில் ஆர்வமுள்ளவர்களை அதற்குள் இணைக்கலாம்..! தனிமடல் மூலம் இன்றி களத்தில் பகிரங்கமாகவே கள உறுப்பினர்களின் விருப்பங்களைக் கோருவது அவர்களை உற்சாகம் ஊட்டும் செயலாக அமையும்..! :lol:

செய்திகளின் முக்கியத்துவம் ஆளாளுக்கு வேறுபடும்... இதனால் சில செய்திகள் உடனுக்குடன் வருவது இல்லாது ஆகிறது. எனவே செய்திகள் விடயத்தில் ( அது ஊர்ப் புதினம் ஆகினும்.. உலகமாகினும்.. புகலிடம் ஆகினும்) முதன்மையும் தெளிவான நிலையும் உற்சாகமூட்டலும் அவசியம்..!

யூட் என்பவர் கூட ஒரு செய்தியை யாழ் இனிதுக்குள் இணைத்துவிட்டுச் சென்றுள்ளார்..! அதை யாரும் சரியான இடத்துக்கு நகர்த்துவதாக இல்லை..!

கள உறுப்பினர்கள்.. கள உறவுகள் என்ற குழும நிலை கள உறவுகள் மத்தியில் பாகுபாட்டை காட்டுவதாக அமைவது விரும்பத்தக்கதல்ல..! அது அவர்களிடையே உள்ள எழுதும் ஆர்வத்தைப் பாதிக்கலாம்..! சில உறுப்பினர்கள் வெகு சில கருத்துக்களுடன் நீண்ட காலம் இருக்கின்றனர். அவசியம் என்று கருதுபனவற்றில் மட்டும் கருத்துரைப்பர்..! இன்னும் சிலர் தினமும் சராசரியாக கருத்துரைப்பர்..! இன்னும் சிலர் களத்தில் கருத்தெழுதாமல் இருக்கமாட்டார்கள்..! எனவே இந்தக் குழும நிலைகள் அவர்களின் ஆர்வத்தைக் குறைக்காத வகைக்குள் அமைய வேண்டும் அது சிரமம் என்றால் குழும நிலை வழங்குதலை தவிர்த்தல் நன்று..! :lol:

இவை நிகழ்கால மாற்றங்கள் தொடர்பில் எமது பார்வைகளின் வெளிப்பாடுகள் மட்டுமே..!

நன்றி.

Edited by nedukkalapoovan

கருத்துக்கள குழுமங்கள் பற்றிய விளக்கங்களை இவ் இணைப்பில் பார்த்துக் கொள்ளுங்கள். http://www.yarl.com/forum3/index.php?showtopic=22030

மேலும் கருத்துக்கள குழுமங்கள் பிரிப்பில் சில விடயங்கள் இன்னமும் சீர் செய்ய வேண்டியுள்ளது. விரைவில் மேலதிக விபரங்கள் தருகின்றோம்.

என்னால் ல்லா இடமும் எழுத முடிகிறது அதுக்காக எல்லா இடமும் நிப்பாட்டி விடுறதில்லை

என்னால் எல்லா இடமும் எழுத முடியவில்லை :lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், என்னைக் கருத்துக்கள உறுப்பினர்கள் பகுதியில் சேர்க்கப்பட்டுள்ளதினை யாழில் பார்த்தேன். கருத்துக்கள உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களைத் தான் குறிப்பதுண்டு. கருத்துக்கள உறுப்பினர்கள், கருத்துக்கள உறவுகள் போல எல்லாப்பகுதியிலும் கருத்துக்கள் எழுத முடியாது. என்றாலும் என்னால் எல்லாப் பகுதியிலும் இலகுவாக முடிகிறது. செய்திக்குழுவிலும் எனது பெயரைக்காணவில்லை. என்றாலும் என்னால் புதிய தலையங்கத்தில் செய்திகள் பதியக்கூடியதாக இருக்கிறது. அப்படியானால் தவறுதலாக எனது பெயர் கருத்துக்கள உறுப்பினர்கள் பகுதியில் வந்ததா? அல்லது கருத்துக்கள உறுப்பினராக என்னை தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கருத்துக்கள உறவுகள் போலவும், செய்திக்குழுக்களில் இருப்பவர்கள் போலவும் தவறுதலாக எனக்கு எழுத உரிமை வழங்கப்பட்டுள்ளதா?

என்னை இப்பொழுது கருத்துக்கள உறவுகளாகச் சேர்ந்துள்ளதினால் நானும் வழமையாகப் பதியும் பதிவுகளில் பதியக்கூடியதாக இருக்கிறது. நிர்வாகத்தினருக்கு நன்றிகள்

ஊரடங்கு வேளையில் நடைபெறும் கொடுரம்... எனும் தலைப்பின் கீழ் எனது கருத்தை எழுதி முடிக்காமல் விட்டுவிட்டேன் காரணம் மோகன் அண்ணாவிற்கு அனுப்பி வைத்துள்ளேன். அதை இப்போது தொடர முடியவில்லை அதுமட்டுமல்லாது ஊர்ப்புதினம் பகுதியில் எதுவும் எழுத முடியவில்லை.

காரணம் அறியலாமா?

என்ன நடக்குது யாழ் நிவாகத்தில்?

ஈழவன் யாழ்களத்தில் தடைசெய்யப்பட்டார் என்ற துன்பச் செய்தி அறிந்தேன்.

. ஏன் தடை செய்யப்பட்டுள்ளார்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.