Jump to content

மாமிச கூழ்!


Recommended Posts

மாமிச கூழ்

dsc01509es7.jpg

dsc01511wf5.jpg

dsc01513xo8.jpg

தேவையான பொருட்கள்:

ஒடியல் மா அல்லது உருளைக்கிழங்கு மா அல்லது கோதுமை மா

மரக்கறி - மரவள்ளிக்கிழங்கு, பயற்றங்காய், பச்சைமிளகாய், பலாக்கொட்டை, பலாசுளை

மாமிசம்: நண்டு, மீன், இறால், கணவாய்

செய்முறை:

முதலில் காய்கறிகளை கழுவி சிறுதுண்டுகளாக வெட்டவேண்டும். இதேபோல் நண்டு, இறால், கணவாயை சிறு துண்டுகளாக வெட்டி கழுவ வேண்டும். பின் அனைத்தையும் ஒரு பெரிய சட்டியில் போட்டு நான்கு கோப்பை தண்ணீர் விட்டு, தேவையானளவு உப்பும் இட்டு அவியவிடவேண்டும். மீன் பாவிக்க விரும்பினால் அதை சிறுதுண்டுகளாக வெட்டி கழுவியபின் இன்னொரு சட்டியில் அவிக்க வேண்டும். அவிந்த மீனை செதில், முட்களை அகற்றி சுத்தம் செய்யவேண்டும். இதன்பின் இதை மரக்கறிகள் உள்ள பாத்திரத்தில் கொட்டி கலக்கவேண்டும்.

இன்னொரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை விட்டு அதனுள் மாவையும், தேவையானளவு புளி, தனி மிளகாய்த்தூள் (இடித்த மிளகாய்த்தூள்) இவற்றை ஒன்றாக சேர்த்து கலக்க (கரைக்க) வேண்டும்.

இறுதியில் அவிந்த காய்கறி, மாமிசம் உள்ள பாத்திரத்தினுள் இந்த கலவையை ஊற்றவேண்டும். பின் சுமார் பத்து நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்தபின் இறக்கவேண்டும்.

உண்ணும் முறை:

dsc01514os5.jpg

dsc01518xd6.jpg

dsc01521zf4.jpg

ஊரில் என்றால் பலா இலையில் கூழை ஊற்றி தேங்காய் சொட்டுடன் சேர்த்து குடிக்க முடியும். தேங்காய் சொட்டுடன் சேர்த்து கூழை குடித்தால் ருசியாக இருக்கும்.

இங்கு எவ்வளவு மா பாவிப்பது, எவ்வளவு புளி இடுவது, எவ்வளவு நீர் சேர்ப்பது போன்றவை நீங்கள் எவ்வளவு கூழ் செய்யப்போகின்றீர்கள் என்பதை பொறுத்து உள்ளது. இன்று நாம் காய்ச்சிய கூழிற்கு ஒரு தேசிக்காய் அளவு (சைஸ்) புளிவிடப்பட்டது என அறிந்தேன். மேலே உள்ள படங்கள் இன்று நாம் வீட்டில் கூழ் குடித்தபோது எடுக்கப்பட்டவை. அரை மணி நேரத்தில் கூழை நாம் குடித்து காலிபண்ணிவிட்டோம்.

செய்முறையில் பிழைகள் இருந்தால் அறியத்தரவும். கூழ் எப்படி செய்வது என்று கேட்டு நான் அம்மாவையும், அக்காவையும் கரைச்சல்படுத்தி, பேச்சுக்கள் வாங்கி பெற்ற விபரங்கள் இவை. இந்த செய்முறையை இன்னும் விளக்கமாக/ திருத்தமாக கூறக்கூடியவர்கள் கூறவும். இந்த கூழ் காய்ச்சும் செய்முறை என்னைப்போன்ற புலத்தில் வாழும் சமைக்கத்தெரியாத இளம் சமுதாயத்திற்கு சமர்ப்பணம்! நன்றி!

Link to comment
Share on other sites

குருவே கூழை போட்டு வாயூற பண்ணி போட்டீங்க நல்லா தான் இருக்கு படத்தில பார்க்க........அது சரி ஒரு படத்தில கூழை பார்த்து கொண்டு ஒருவர் இருக்கிற மாதிரி இருக்கு அது தாங்களோ குருவே..........போன கிழமை தான் குடித்தனாங்கள் இப்படி எல்லாம் செய்து திருப்பியும் குடிக்க வேண்டும் போல இருக்கு ஆனா எனக்கு நண்டு சாப்பிட ஏலாது அலர்ஜி அதானால் நண்டு போடாமல் தான் குடிகிறது அதை சேர்ந்தால் இன்னும் ருசியா இருக்கும் என்றூ சொல்லுறவை.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாவ்!! படங்களையும் போட்டு கலக்கிட்டீங்களே கலைஞா,

இன்னும் சுத்த சைவமாக மாறாமல் இருக்கக் காரணம், இந்தக்கூழின் மேல் உள்ள காதலே.

நாங்கள், கணவாய், பச்சை மிளகாய் போடுவதில்லை,அதே போல் பலாச்சுளையும் போடுவதில்லை தேங்காய்ச்சொட்டுச் சேர்த்து இந்தக்கூழை குடிப்பது என்று இன்றுதான் கேள்விப்படுகின்றேன்.

'புளிப்பும் உறைப்பும் நிறைய்ய இருக்க வேண்டும்!!..

விரைவில் வந்து எங்கள் வீட்டு செய்முறையை ஒப்பிக்கின்றேன்.

நன்றி....

Link to comment
Share on other sites

அரிசி போட்டிருக்கிறிங்கள் போல சொல்லமறந்திட்டிங்கள் போல , பார்க்கும் போது குடிக்க வேணும்போல இருக்கு என்ன நான் தான் செய்து சாப்பிடவேணும் , யாரும் செய்து தந்து சாப்பிடுறதில இருக்கிற சுவை நானே செய்து சாப்பிடுறதிலை இருக்காது :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் நினைவுபடுத்தியதற்கு நன்றி மாப்பு.கூழுக்கு ஒடியல் மாவும் பழப்புளியும் விஷேசமானது.அத்துடன் மாதமொருமுறை கூழ் குடித்தால் வயிற்றுப்பிரச்சனைகள் அதிகம் தீருமென கேள்விப்பட்டுள்ளேன்.எனது ஊரிலும் தேங்காய்ச்சொட்டுடன் கூழ் குடிப்பார்கள், குடிப்போம்.முக்கியமாக பனுவிலால் குடிப்போம்.அதன் சுவாரசியமே தனியானது.அனுபவித்தவர்களுக்க

Link to comment
Share on other sites

யமுனா, படத்தில் இருப்பது நானல்ல. அது எனது மருமகள்... உங்களுக்கு நண்டு அலர்ஜியா?, எனக்கு கத்தரிக்காய் ஒத்துவராது... :huh:

செவ்வந்தி, நீங்கள் சொல்வது சரி. நான் அரிசியை குறிப்பிட மறந்துவிட்டேன். அரிசியை மரக்கறியுடன் அதே பாத்திரத்தில் போட்டு, சேர்த்து அவிக்க வேண்டும்.

தமிழ் தங்கை, குமாரசாமி உங்கள் கருத்துக்களிற்கு நன்றி!

Link to comment
Share on other sites

அருமையான செய்முறை

விளக்கம்

படங்கள்

கலக்கல் :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையக் காணேல்ல, கூழ் காய்ச்சிப் பேய்க்காட்டிக் கொண்டிருக்கு இந்தாள்..எல்லாரும் வாயப் பிளந்தொண்டு நிக்கிறியள் (அது சரி, இந்த நண்டு இங்க எங்க கிடைக்குது? அப்பிடியே ஊர் நண்டு மாதிரி இருக்கு? ;) )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப்பார்க்க உடனே கூழ் குடிக்கனும் போல இருக்கு.எனக்கும் தேங்காய் சொட்டுடன் சேர்த்து கூழ் குடிப்பது புதுசுதான்.ஆனால் இங்கு ஒருவர் வீட்டில் தேங்காய் சொட்டுடன் கூழ் குடிக்க தருவார்கள்.ஒவ்வொரு இடத்துக்கிடம் வித்தியாசம் போல. இதுல இருந்து மாப்புவும் கு.சாவும் சாவகச்சேரியோ :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நண்டில பாருங்கோ நண்டு பூச்சி என்று சரியான குட்டி நண்டுகள் இருக்கு அதை கூழுக்கு போட்டுவிட்டு எடுத்து அப்படியே கடித்து சாப்பிட்டால் சூப்பரா இருக்கும். :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் தமிழர் விளையாட்டுப் போட்டியில் இந்தக் கூழ் காச்சுவார்கள். அத்துடன் எனக்குத் தெரிந்த வீடு ஒன்றில் அடிக்கடி காச்சுவார்கள். என்னை மறக்காமல் குடிப்பதற்கு கூப்பிடுவார்கள். அதன் சுவையே ஒரு தனி சுவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்களைப்பார்க்க உடனே கூழ் குடிக்கனும் போல இருக்கு.எனக்கும் தேங்காய் சொட்டுடன் சேர்த்து கூழ் குடிப்பது புதுசுதான்.ஆனால் இங்கு ஒருவர் வீட்டில் தேங்காய் சொட்டுடன் கூழ் குடிக்க தருவார்கள்.ஒவ்வொரு இடத்துக்கிடம் வித்தியாசம் போல. இதுல இருந்து மாப்புவும் கு.சாவும் சாவகச்சேரியோ :P :P :P :P

நீங்களும் அந்தப்பக்கமோ?அப்பெடியெண்டால் நாங்களும் எங்களுக்குள்ளை ஒரு கட்சி அமைப்பமே :D

Link to comment
Share on other sites

கூழைப் பார்க்க ஆசையாயிருக்கு...... ஹிஹி...... படங்களுடன் போட்டு எல்லாரையும் வாயூற வச்சிட்டீங்க <_< ;)

Link to comment
Share on other sites

நன்றி கலைஞன் உங்கள் புண்ணியத்தில் நேற்று நான் கூழ் செய்து குடித்தேன். வாவ் என்ன ஒரு ருசி. ம் இருந்தாலும் அம்மா கையால் ஊரில் குடித்ததுபோல் இல்லை.

Link to comment
Share on other sites

பரணி, ஆஹா... கேட்க சந்தோசமா இருக்கு... அப்ப இன்னும் பல ஐட்டங்கள கொஞ்சம் கொஞ்சமா யாழ் சாப்பாட்டு மேசையில இறக்கிறன்... கருத்துக்கள் கூறிய அனைவருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

ம் கலைஞன் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் சமையல் குறிப்புத்தந்தால் நன்றாக இருக்கும். அன்றைக்குத்தானே வீட்டுச்சாப்பாடு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் அந்தப்பக்கமோ?அப்பெடியெண்டால் நாங்களும் எங்களுக்குள்ளை ஒரு கட்சி அமைப்பமே :o

இல்லை நான் அந்தப்பக்கம் இல்லை.நான் வலி மேற்க்கு.ஏன் இருக்கிற கட்ச்சிகள் காணாதோ :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.