Jump to content

பாடுக மனமே -- வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

பாடுக மனமே

வ.ஐ.ச.ஜெயபாலன்

எரிந்த புல்வெளிகளில்

இனி வரவுள்ள மழையையும்

பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான்

கலங்காதே தாய்மண்ணே.

என் அன்னையின் திருவுடல் புதைத்த

பூமியைக் காத்து

வீழ்ந்த பெண்களின்மீது

சிங்கள பைலா பாடியும் ஆடியும்

பேய்கள் புணரும் கொடும் பொழுதினிலும்

நாளைய வசந்தப் பரணியே பாடுக மனமே.

வணக்கத்துக்குரிய நம் மூதாதையர்களின்

எலும்புகள்மீது

எந்தத் தீயும் நிலைக்காது ஆதலினால்

கருமேகமாய் விரியும் சாம்பல் வெளியில் நின்று

இனி வானவில்லாகவுள்ள பூக்களையே பாடுக மனமே.

உறவுகளின் ஓலங்களை அமுக்கும்

தோழ தோழியரின் போர்முரசுகளே

என் வசந்தப் பரனிக்கு இசையுங்கள்.

அம்மா

தமிழ் மண்ணெடுத்து

இன்பப் பொழுதொன்றில்

நீயும் எந்தையும்

அழகுற என்னை வனைந்தீர்களே.

இதோ என் ஐம்பூதங்களால்

உனக்கு வனைவேன் ஒர் அரண்.

உன்னை உதைக்கிற

அன்னியனின் காலை ஒடிக்காமல்

என்ன மசிருக்கு இந்த வாழ்வு.

வன்னிப் பெருந்தாயே

உன் கூப்பிட்ட குரலுக்கு

ஏழு சமுத்திரங்களிலும்

தமிழர் விழிக்கின்றார்.

பாஞ்சாலம் குறிச்சியும்

சிவகங்கைச் சீமையும்கூட விழிக்கிறது.

உலகக் கோடியின் கடைசித் தமிழனுக்கும்

உன் விடுதலைக் கனவுதான் தாயே.

மொழியில் வேரூன்றி

நினைவுகளில் படர்ந்து

கனவுகளில் பூக்கிற

புலம்பெயர்ந்த தமிழன்நான்.

சிறைப்பட்ட என் தாயே

தப்பி ஓடலில்லையம்மா.

ஒடுக்கப்படுகிற ஒரு இனத்தின் புலப் பெயர்வு

பின் போடப் பட்ட விடுதலைப்போர்

வீரமரணம் அல்லது

வெற்றி வாழ்வுதான் தாயே.

நினைவிருக்கிறதா தாயே

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்" என

வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.

என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று

அப்பாடலையே பாடுக மனசே.

Link to comment
Share on other sites

அருமை கவிஞரே, மொழியில் வேரூன்றி நினைவுகளில் படர்ந்து கனவுகளில் பூக்கிற கவிஞரான உங்களின் ஒவ்வொரு வரியும் மண்ணில் புதைந்து இருக்கும் எம் மூதாதையரின் எலும்புகளையும் உயிர்க்க செய்யும்.

எரிந்த புல்வெளிகளில்

இனி வரவுள்ள மழையையும்

பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான்

கலங்காதே தாய்மண்ணே.

தாய் மண் முழுதும் எதிரிகளின் காலடியில் உழழ்கின்ற நேரத்திலும் இனி வரவுள்ள மழை எரிந்து போன புல்வெளிகளை மீண்டும் மீட்டுத் தரும் என்ற நம்பிக்கையில் தான் வன்னிப் பெருந்தாயின் கூப்பிட்ட குரலுக்கு ஏழு சமுத்திரங்களிலும் தமிழர்கள் விழிக்கின்றார்கள், பாஞ்சாலம் குறிச்சியும் சிவகங்கைச் சீமையும்கூட விழிக்கிறது.. உலகக் கோடியின் கடைசித் தமிழனினதும் சுமரியாதை காப்பாற்ற வன்னி மண்தானே சிலுவை சுமக்கின்றது

------------

உங்களின் இந்த கவிதையில் ஆப்பிரிக்க கவிதைகளின் பாதிப்பு கொஞ்சம் தெரிகின்றது. உங்களின் வழக்கமான இயற்கை சார்ந்த காட்சி படிமங்களில் இருந்தும், emotional feeling இல் இருந்தும் விலகி நம்பிக்கையை அடிப்படையாக வரிகள் அமைந்து இருக்கின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மண் மீது மழை விழும் போது அது

ஆனந்தம் அடையுமாம்

உங்கள் கவிதை இங்கு வரும் போது நாங்கள் ஆனந்த மடைகிறோம்

வாழ்த்துக்கள் அண்ணா :o

Link to comment
Share on other sites

உங்களுக்கு ஒரு அறிவுரை அண்ணா

கவிதை எழுதுங்கள் - தாலாட்டாக இருக்கிறது

கதைக்காதீர்கள் - தடியெடுக்க வைக்கிறது

Link to comment
Share on other sites

  • 1 month later...

உங்களுக்கு ஒரு அறிவுரை அண்ணா

கவிதை எழுதுங்கள் - தாலாட்டாக இருக்கிறது

கதைக்காதீர்கள் - தடியெடுக்க வைக்கிறது

Either I am blind or you are blind my dearest advaisor.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்" என

வியட்னாம் எரிகையில் நான் பாடிய பாடல்.

என் அன்னை மண்ணில் நெருப்பிடை நின்று

அப்பாடலையே பாடுக மனசே.

கவிஞரே ..... உங்கள் நம்பிக்கையூட்டும் வரிகள் தெம்பூட்டுகின்றன .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதை பார்த்தேன்

நம்பிக்கையான வரிகள்

Link to comment
Share on other sites

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் கவிதை பார்த்தேன்

நம்பிக்கையான வரிகள்

Dear Nizali, Thamisri, Thalaivan, Munivar ji, Theya.

I only shareing your anger, feelings and task with you in my own way. We shall win.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Dear Nizali, Thamisri, Thalaivan, Munivar ji, Theya.

I only shareing your anger, feelings and task with you in my own way. We shall win.

இன்று பாரதிதி ராஜா தலைமையிலான திரையுலக பேரணிக்குப் போயிருந்தேன். பேரெழுச்சியுடன் மக்கள் கலந்து கொண்டனர். தமிழ் நாட்டு மக்களுக்கு நான் என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறோம். என்னுடன் பேசிய திரையுலக நண்பர்களுக்கு "

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ பூத்துக் குலுங்கும்" என்பதையே சொல்லிக் கொண்டிருந்தேன். தலைவர்கள் சுற்றி வழைப்பை விட்டு வெளியேறிவிட்டதாக உறுதிப்படுத்தாத செய்தி ஒன்று கேட்டேன். நாம் விடுதலையை வென்று எப்போதும் நிலைப்போம் என்பதில் சந்தேகமில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் செய்தி உண்மையாக இருந்தால் ....... :icon_mrgreen: , மிக்க நன்றி , ஜெயபாலன் . :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

""பிரபாகரன் சரணடைய 24 மணிநேரம் சிங்களம் கெடு விதித்துள்ளது. களநிலையை உள்ளுணர்வோடு யூகிக்க மட்டுமே முடிகிறது. பிரபாகரன் முல்லைத்தீவில் இல்லை என்பதே என் கணிப்பு. படையணிகளும் எதிர்காலப் போராட்டத்திற்காய் பல திசைகளிலும் பிரிந்து சென்றுள்ளார்கள்...........................

..இவ்வாறு ,,,,,,,,ஜெகத் கஸ்பார் அடிகளின் பந்தியில் கூறபட்டுள்ளது .

காலத்தின் தேவையும் அதுவே ..........தொலை நோக்கோடு சிந்திக்கும் அந்த தலைவனுக்கே வெளிச்சம்.

Link to comment
Share on other sites

""பிரபாகரன் சரணடைய 24 மணிநேரம் சிங்களம் கெடு விதித்துள்ளது. களநிலையை உள்ளுணர்வோடு யூகிக்க மட்டுமே முடிகிறது. பிரபாகரன் முல்லைத்தீவில் இல்லை என்பதே என் கணிப்பு. படையணிகளும் எதிர்காலப் போராட்டத்திற்காய் பல திசைகளிலும் பிரிந்து சென்றுள்ளார்கள்...........................

..இவ்வாறு ,,,,,,,,ஜெகத் கஸ்பார் அடிகளின் பந்தியில் கூறபட்டுள்ளது .

காலத்தின் தேவையும் அதுவே ..........தொலை நோக்கோடு சிந்திக்கும் அந்த தலைவனுக்கே வெளிச்சம்.

தோழமைக்குரிய தம்மிழ்சிறிக்கும் நிலாமதிக்கும்ம், நன்றி வரலாற்றில் பாடுக மனமே எனது முக்கியமான கவிதையாக பதிவு செய்யப் படும் என நினைக்கிறேன்.

தமிழகத்தில் இரவு நச்சுப்புகை அடிக்க மகிந்த அனுமதி கொடுதிருப்பதாக செய்திகள் பரவுகிறது. ஆனால் கிடைத்த சேய்திகள் எதற்க்கும்தயார் நிலையில் போர்குணம் குன்றாமல் எங்கள் பிள்ளைகள் இருக்கிறதாக சொல்கின்றன. மேல் மாகானத்தை விட்டுவிட்டு ஏனைய தென் இலங்கையை சீர்குலைக்க முடியுமானால் இன்னும் பெரிய யூத்தங்களை வன்னியில் நடத்த முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நம்பிக்கை தருகின்றன உங்கள் இறுதி வார்த்தைகள்.

பாராட்டும் அளவிற்கு வளரவில்லை. வாசிப்பில் பிடித்து போயிற்று. வழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

மிகவும் நம்பிக்கை தருகின்றன உங்கள் இறுதி வார்த்தைகள்.

நன்றி மருதங்கேணியான். சுனாமிக்குப் ப்பின்னர் உங்கள் ஊருக்குப் போயிருந்தேன்

பாராட்டும் அளவிற்கு வளரவில்லை. வாசிப்பில் பிடித்து போயிற்று. வழ்த்துக்கள்!

எரிக் சொல்கைம் வாசிங்டன் போயிருப்பதாகத் தெரிகிறது. இந்தவாரம் பல முக்கிய வரலாற்று

. நிகழ்வுகளின் களமாகப் போகிறது என்று தெரிகிறது. நமது இளைய தலைமுறை புலம் பெயர்ந்தவர்களது ஜனனாயக ரீதியான குரல்கள் வலியது;

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனம் மிக நொந்த போயிருக்கிறேன். உன் நம்பிக்கை போலவே நானும் சுமந்து கொண்டு எனது பூமியில் என் மாமரத்தின் கீழ் இருந்து அந்த காற்றை சுவாசிப்பதற்கு.

Link to comment
Share on other sites

மனம் மிக நொந்த போயிருக்கிறேன். உன் நம்பிக்கை போலவே நானும் சுமந்து கொண்டு எனது பூமியில் என் மாமரத்தின் கீழ் இருந்து அந்த காற்றை சுவாசிப்பதற்கு.

அனஸ், கண்ணீரரும் இரத்தமும் சிந்துகிறவர்கள் பாக்கிய வான்கள் ஏனேனில் அவர்களது கனவுள் நனவாகும். காலம் மாறும். எங்கள் மக்கள் வெற்றி பெறுவார்கள். மீண்டும் எங்கள் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மணிஓசையும் பள்ளிவாசல்களில் பாங்கொலியும் எங்களை துயில் எழுப்பும் காலம் விரைவில் அமையும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் எங்கள் கோவில்களிலும் தேவாலயங்களிலும் மணிஓசையும் பள்ளிவாசல்களில் பாங்கொலியும் எங்களை துயில் எழுப்பும் காலம் விரைவில் அமையும்.

பன்சலையில்(புத்த கோயில்)பிரீத் ஒதுவதும் நாங்கள் கேட்க வேண்டுமாம் என்று சிங்களம் நினக்குது

Link to comment
Share on other sites

பன்சலையில்(புத்த கோயில்)பிரீத் ஒதுவதும் நாங்கள் கேட்க வேண்டுமாம் என்று சிங்களம் நினக்குது

நன்றி புத்தன். உரிய தீவு வரும். அப்போது எங்களோடு தொடர்ந்து வாழ விரும்பும் சிங்கள சிறுபாண்மைக்கு முழு உரிமையும் உறுதிப் படுத்தப் படுமல்லவா? தீர்வுக்குப் பின்னர் பன்சாலையும் பிரித்தும் ஒரு பிரச்சினையா?

Link to comment
Share on other sites

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்"...............................................

... எப்போது ? எம் இனத்துக்கு இன்னும் தாங்கும் சக்தி இல்லை........இளையர்களின் உணர்வுகள் உலகமெலாம் .

.பிரவாகமெடுக்கிறது ........தாக்குதல் உடனே நிறுத்தப்படவேண்டும் ...

Link to comment
Share on other sites

"எத்தனை காட்டுத் தீகளும் அணைந்தே போகும்

முகம் கொடுக்கும் புல்வெளிகளோ

பூத்துக் குலுங்கும்"...............................................

... எப்போது ? எம் இனத்துக்கு இன்னும் தாங்கும் சக்தி இல்லை........இளையர்களின் உணர்வுகள் உலகமெலாம் .

.பிரவாகமெடுக்கிறது ........தாக்குதல் உடனே நிறுத்தப்படவேண்டும் ...

கவிதாயினி நிலாமதி அவர்களுக்கு,

வரலாறு நைல் நதி போல. பாலை வாழ்வென்று நொந்தபோது நுங்கும் நுரையுமாக பொங்கிவரும். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கலாகாது. எனது கவிதை சிறுபராயத்துச் சிங்கள நண்பனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு என்னுடைய நேர்காணலுடன் சிபிசி வானொலியில் இடம்பெற்றது. கவிதை மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் செல்வநாயகத்தால் வாசிக்கப் பட்டது. இத்துடன் இணைத்துள்ளேன். உங்கள் கருத்தை வரவேற்க்கிறேன்.

http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html

Link to comment
Share on other sites

கவிதாயினி நிலாமதி அவர்களுக்கு,

வரலாறு நைல் நதி போல. பாலை வாழ்வென்று நொந்தபோது நுங்கும் நுரையுமாக பொங்கிவரும். நாங்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்கலாகாது. எனது கவிதை சிறுபராயத்துச் சிங்கள நண்பனுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு என்னுடைய நேர்காணலுடன் சிபிசி வானொலியில் இடம்பெற்றது. கவிதை மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் செல்வநாயகத்தால் வாசிக்கப் பட்டது. இத்துடன் இணைத்துள்ளேன். உங்கள் கருத்தை வரவேற்க்கிறேன்.

[]

புதைந்துபோன எமது ஆன்மாவுக்கு நம்பிக்கைதான் மழை, நம்பிக்கைதான் புது வசந்தம். இந்த கவிதையின் முன்னம் எழுதிய கவிதையில் எதிரியின் ராங்கிகளைப் பிடிக்க, வரண்ட ஆறுகள் என்ற கைத்தறியில் மழைநீரால் வலை பின்னுகிறாள் என் வன்னித் தாய் என்று எழுதினேன். நேரடி யுத்த உபாயத்தில் பெருமழையில் எதிரியின் வாகனங்கள் முடங்கிக் கிடக்கும் குறுங்காலத்தில் தெற்க்கை சீர்குலைத்துக் கொண்டு முற்றுகையை அடித்து உடப்பது மட்டுமே சாத்தியமான உபாயமாக இருந்தது. அதையே நானும் போராளிகளுக்கு இடித்துரைத்து வந்தேன். இறுதியில் இறைவன் கொடுத்த வரம்போல வளமைக்கு மாறாக தை மாதத்திலும் மழை வெள்ளம் போட்டது. அப்பொழுது இதுதான் இறுதிச் சந்தர்ப்பம் என்பதை வலியுறுத்தினேன். 1996ல் இருந்து போராளிகளுடன் இடித்துரைத்து விவாதித்து வந்ததால் ஊடகங்களுக்கு அரசிய இராணுவ ஆய்வுகள் எழுதுவதில்லை என முடிவு செய்திருந்தேன். இனி அந்த முடிவைத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்கிறேன்.

தைமாதமே முடிவு தெளிவாகிவிட்டது. எதிரியின் முற்றுகை இறுக முன்னம் இந்தியாவுடன் அல்லது அமரிக்காவுடன் இறங்கிப் போவது ஒன்றே இருந்த ஒரே மார்க்கமாக இருந்தது. இந்தியாவில் இருந்து ஏற்றுக்கொள்ள சற்றுக் கடினமான அவர்களது நிபந்தனை பரிமாறப் பட்டது. அமரிக்காவின் கடைசி நிபந்தனைபோல மூன்றாவது தரப்பிடம் ஆயுதத்தைக் கையளியுங்கள் என்கிற கோரிக்கை வந்தது. துர் அதிஸ்டவசமாக அந்தச் சந்தர்ப்பமும் நழுவிப் போனது. அதன் பின்னர் யார் தலையிட்டாலும் களமுனையில் உள்ள சிங்களத் தளபதிகள் தங்களது இறுதி நோக்கத்தைக் கைவிட ஒப்ப மாட்டார்கள் என்கிற சூழல் உருவானது. இறுதிக் கட்டத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு எதுவும் நடக்காத சூழல். ஜனாதிபதியின் தம்பி அழிப்பு என்பதில் ஒற்றைக் காலில் நின்றதாகச் சேதிகள் சொல்கின்றன. இறுதி தருண இயலாமைக்காக சர்வதேச சமூகத்தைக் கடிந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தற்காப்பு யுத்தம் தற்கொலை யுத்தம் என்கிறது அடிப்படை இராணுவ கோட்பாடாகும். இரண்டு நாடுகளின் படைகளை நம் போராளிகள் வெற்றிபெற்றது எத்தனை பலமான இராணுவமாக இருந்தாலும் மக்கள் ஆதரவு உள்ளவரை விரும்பி யுத்தத்துக்கு வந்த தேர்ந்த கெரிலாக்களை ஒருபோதும் வென்றுவிட முடியாது என்பதை வரலாற்றில் பொறித்து விட்டது. 4வது ஈழப்போரின் முடிவு மகத்தான கெரிலா போராளிகளானாலும் கெரிலா உத்திகள் முதன்மைபெறாத ஒரு தந்திரோபாயத்தைக் கொண்டு நேரடி இராணுவத்தை தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்பதை ஒரு கொட்ப்பாடாகவே பொறித்துவிட்டது.

url="http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html"]http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html[/url

Link to comment
Share on other sites

புதைந்துபோன எமது ஆன்மாவுக்கு நம்பிக்கைதான் மழை, நம்பிக்கைதான் புது வசந்தம். இந்த கவிதையின் முன்னம் எழுதிய கவிதையில் எதிரியின் ராங்கிகளைப் பிடிக்க, வரண்ட ஆறுகள் என்ற கைத்தறியில் மழைநீரால் வலை பின்னுகிறாள் என் வன்னித் தாய் என்று எழுதினேன். நேரடி யுத்த உபாயத்தில் பெருமழையில் எதிரியின் வாகனங்கள் முடங்கிக் கிடக்கும் குறுங்காலத்தில் தெற்க்கை சீர்குலைத்துக் கொண்டு முற்றுகையை அடித்து உடப்பது மட்டுமே சாத்தியமான உபாயமாக இருந்தது. அதையே நானும் போராளிகளுக்கு இடித்துரைத்து வந்தேன். இறுதியில் இறைவன் கொடுத்த வரம்போல வளமைக்கு மாறாக தை மாதத்திலும் மழை வெள்ளம் போட்டது. அப்பொழுது இதுதான் இறுதிச் சந்தர்ப்பம் என்பதை வலியுறுத்தினேன். 1996ல் இருந்து போராளிகளுடன் இடித்துரைத்து விவாதித்து வந்ததால் ஊடகங்களுக்கு அரசிய இராணுவ ஆய்வுகள் எழுதுவதில்லை என முடிவு செய்திருந்தேன். இனி அந்த முடிவைத் தொடர்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை உணர்கிறேன்.

தைமாதமே முடிவு தெளிவாகிவிட்டது. எதிரியின் முற்றுகை இறுக முன்னம் இந்தியாவுடன் அல்லது அமரிக்காவுடன் இறங்கிப் போவது ஒன்றே இருந்த ஒரே மார்க்கமாக இருந்தது. இந்தியாவில் இருந்து ஏற்றுக்கொள்ள சற்றுக் கடினமான அவர்களது நிபந்தனை பரிமாறப் பட்டது. அமரிக்காவின் கடைசி நிபந்தனைபோல மூன்றாவது தரப்பிடம் ஆயுதத்தைக் கையளியுங்கள் என்கிற கோரிக்கை வந்தது. துர் அதிஸ்டவசமாக அந்தச் சந்தர்ப்பமும் நழுவிப் போனது. அதன் பின்னர் யார் தலையிட்டாலும் களமுனையில் உள்ள சிங்களத் தளபதிகள் தங்களது இறுதி நோக்கத்தைக் கைவிட ஒப்ப மாட்டார்கள் என்கிற சூழல் உருவானது. இறுதிக் கட்டத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு எதுவும் நடக்காத சூழல். ஜனாதிபதியின் தம்பி அழிப்பு என்பதில் ஒற்றைக் காலில் நின்றதாகச் சேதிகள் சொல்கின்றன. இறுதி தருண இயலாமைக்காக சர்வதேச சமூகத்தைக் கடிந்து கொள்வதில் எந்த அர்த்தமும் இல்லை. தற்காப்பு யுத்தம் தற்கொலை யுத்தம் என்கிறது அடிப்படை இராணுவ கோட்பாடாகும். இரண்டு நாடுகளின் படைகளை நம் போராளிகள் வெற்றிபெற்றது எத்தனை பலமான இராணுவமாக இருந்தாலும் மக்கள் ஆதரவு உள்ளவரை விரும்பி யுத்தத்துக்கு வந்த தேர்ந்த கெரிலாக்களை ஒருபோதும் வென்றுவிட முடியாது என்பதை வரலாற்றில் பொறித்து விட்டது. 4வது ஈழப்போரின் முடிவு மகத்தான கெரிலா போராளிகளானாலும் கெரிலா உத்திகள் முதன்மைபெறாத ஒரு தந்திரோபாயத்தைக் கொண்டு நேரடி இராணுவத்தை தொடர்ந்து வெற்றி பெற முடியாது என்பதை இராணுவக் கோட்ப்பாடாகவே பொறித்துவிட்டது. சர்வதேசத்தை விமர்சிப்பதோ அவர்களுக்கு வெறுப்பேற்றுவதோ எந்தவகையிலும் மீழ் எழிற்ச்சிக்கு உதவாது. சீனா தவிர்ந்த சர்வதேச அணிகளுடன் நல்லுறவும் ஒரு அணிக்குப் பின்னே உறுதியாக நிற்பதையும்தவிர வேறு மார்க்கமில்லை. விடுதலைக்கான ஜனநாயகமும் சுயவிமர்சனமும் இல்லாவிட்டால் பழைய தோல்வியின் பாதைளையே மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுப்போம். நாம் மிக சின்னம் சிறிய குறுணி இனம். மேற்குலகத்துக்கோ அமரிக்காவுக்கோ முன்னர் கொடுக்கத் தவறிய விலைகளில் எதையாவது கொடுத்துத்தான் எங்களால் மீண்டு எழ முடியும். என்ன விலை கொடுத்தும் களத்தில் கொலையுண்ணக் காத்திருக்கும் இளையவர்கலைக் காப்பாற்றுவதும் சரணாகதியை தடுப்பதுதான் இன்றைய தேவை. என்னுடய பாடுக மனஏ நேரவுள்ள அனர்த்தத்தை முன்னுணர்ந்தே எழுதப் பட்ட கவிதை. இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. வழி தவறி நிற்க்கும் எங்களுக்கு வரலாறு வழிகாட்டும்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=58867

http://www.cbc.ca/thecurrent/2009/200905/20090514.html

Link to comment
Share on other sites

எரிந்த புல்வெளிகளில்

இனி வரவுள்ள மழையையும்

பூத்திடும் கனவுகளையும் பாடுகிற கவிஞனடி நான்

கலங்காதே தாய்மண்ணே.

கடவுள் தந்த கடைசிச் சந்தர்ப்பம்போல தைமாதத்தில் பெரும் வெள்ளம்போட்டு எதிரியின் வாகனங்கள் கனரக ஆயுதங்கள் முடக்கப் பட்டது. தென்னிலங்கையைச் சீர்குலைத்தபடி முற்றுகையை உடைத்து போராளிகள் காடுகளை மீண்டும் கைப்பற்றி வெளியேறுவார்களென நான் நம்பினேன். எனது கடைசி அறிக்கையை நான் எழுதினேன். மார்ச் மாதமளவில் போராளிகள் காடுகளைவிட்டு கடற்கரை வெளியை நோக்கி பின்வாங்கிச் செல்ல ஆரம்பித்தபோது மனமுடைந்துபோனேன். சென்னைப் பல்கலைக் களக விருந்தினர் விடுதியில் என்னைச் சந்தித்த கவிஞர் அறிமதி தை இதழுக்கு கவிதை கேட்டார். பாடுகமனமே கவிதையை அவருக்குக் கொடுத்தேன். கடந்தவாரம் குமுதம் ஆசிரியர் குழுவினர் மேற்படி கவிதையை "கலங்காதே தாய் மண்ணே" என்ற கவிதையின் நாலாவது அடியை தலைப்பாக இட்டு வெளியிட அனுமதி கேட்டனர். இவ்வாரக் குமுதத்தில் மேற்படி கவிதை வெளிவருகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
    • ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை கடைசியில் கட்டுப்பாடான ஓவர்களினால் வெற்றிபெற்றது Published By: VISHNU    19 APR, 2024 | 06:04 AM (நெவில் அன்தனி) மொஹாலி, மல்லன்பூர் மகாராஜா யாதவேந்த்ர சிங் சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (18) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 33ஆவது போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 9 ஓட்டங்களால் மும்பை இண்டியன்ஸ் வெற்றிகொண்டது. போட்டியின் ஒரு கட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியதால் மும்பை இண்டியன்ஸ் சற்று திகிலடைந்தது. எவ்வாறாயினும் கடைசிக்கு முந்தைய 3 ஓவர்களை ஜஸ்ப்ரிட் பும்ரா, ஜெரால்ட் கோட்ஸீ, ஹார்திக் பாண்டியா ஆகியோர் கட்டுப்பாட்டுடன் வீசியதால் மும்பை இண்டியன்ஸ் வெற்றியை உறுதிசெய்துகொண்டது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் சிறு சவாலுக்கு மத்தியில் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 192 ஓட்டங்களைப் பெற்றது. இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கத் தவறிவரும் இஷான் கிஷான் இ ந்தப்  போட்டியிலும் 3ஆவது ஓவரில் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் ரோஹித் ஷர்மாவும் சூரியகுமார் யாதவ்வும் 2ஆவது விக்கெட்டில் 81 ஓட்டங்களைப் பகிர்ந்து சரிவை சீர் செய்தனர். ரோஹித் ஷர்மா 36 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்த பின்னர் சூரியகுமார் யாதவ்வுடன் இணைந்த திலக் வர்மா 3ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மறு பக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சூரியகுமார் யாதவ் 53 பந்துகளில் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 78 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தொடர்ந்து அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (20), டிம் டேவிட் (14) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் வெளியேறினர். கடைசிப் பந்தில் மொஹமத் நபி ஓட்டம் பெறாமல் ரன் அவுட் ஆனார். திலக் வர்மா 18 பந்துகளில் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஹர்ஷால் பட்டேலின் 4 ஓவர்களில் 42 ஓட்டங்கள் பெறப்பட்டது. அவரை விட சாம் கரன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். 193 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 183 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது. முதல் 3 ஓவர்களுக்குள் ப்ரப்சிம்ரன் சிய் (0), ரைலீ ரூசோவ் (1), பதில் அணித் தலைவர் சாம் கரன் (6), லியாம் லிவிங்ஸ்டோன் (1) ஆகிய நால்வரும் 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். (14 - 4 விக்.) எனினும் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா, ஷஷாங்க் சிங் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 35 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் ஹார்ப்ரீட் சிங் பாட்டியா 13 ஓட்டங்களுடனும் அவரைத் தொடர்ந்து ஜிட்டேஷ் சிங் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (77 - 6 விக்.) இதன் காரணமாக பஞ்சாப் கிங்ஸ் 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது. ஆனால், ஷஷாங்க் சிங், அஷுட்டோஷ் சிங் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 110 ஓட்டங்களைக் கடக்க உதவினர். வழமையான அதிரடியில் இறங்கிய ஷஷாங்க் சிங் 25 பந்துகளில் 3 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 41 ஓட்டங்களைப் பெற்றார். அதன் பின்னர் அஷுட்டோஷ் ஷர்மா அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 28 பந்துகளில் 7 சிக்ஸ்கள், 2 பவுண்டறிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று அணியை கௌரவமான நிலையில் இட்டு ஆட்டம் இழந்தார். அஷுட்டோஷ் ஷர்மாவும் ஹார்ப்ரீட் ப்ராரும் 8ஆவது விக்கெட்டில் 30 பந்துகளில் பகிர்ந்த 57 ஓட்டங்களே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது. (168 - 8 விக்.) மொத்த எண்ணிக்கை 174 ஓட்டங்களாக இருந்தபோது ஹார்ப்ரீட் ப்ரார் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். எனினும் கடைநிலை ஆட்டக்காரர் கெகிசோ ரபாடா தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிக்ஸையும் அடுத்த பந்தில் ஒற்றையையும் பெற்று கடைசி ஓவரில் வெற்றி இலக்கை 12 ஓட்டங்களாக குறைத்தார். எனினும் கடைசி ஓவரில் இல்லாத ஒரு ஓட்டத்தை நோக்கி ஓடிய ரபாடா 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க, மும்பை இண்டியன்ஸ் மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜெரால்ட் கோட்ஸீ 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/181411
    • 17 APR, 2024 | 05:42 PM (நெவில் அன்தனி) ஓக்லஹோமா, ரமோனாவில் ஞாயிறன்று நடைபெற்ற ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் லிதுவேனியாவின் மெய்வல்லுநர் மிக்கோலாஸ் அலெக்னா நம்பமுடியாத 74.35 மீட்டர் தூரத்துக்கு தட்டை எறிந்து தட்டெறிதலுக்கான முன்னைய  சாதனையை    முறியடித்தார். முன்னைய உலக சாதனை கிட்டத்தட்ட 38 வருடங்கள் நிலைத்திருந்தது. இயூஜினில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மிக்கோலாஸ் அலெக்னா, புடாபெஸ்டில் கடந்த வருடம் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். அவர் ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் பழைமையான சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தார். ஒக்லஹோமா, ரமோனாவில் நடைபெற்ற எறிதல் தொடர் உலக அழைப்பு போட்டியில் தனது 5ஆவது முயற்சியில் தட்டை 74.35 மீட்டர் தூரத்திற்கு எறிந்ததன் மூலம் உலக சாதனையை 21 வயதான மிக்கோலாஸ் அலெக்னா முறியடித்தார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி வீரர் ஜேர்ஜன் ஷூல்ட்ஸ் 1986ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் திகதி தட்டெறிதல் போட்டியில் நிலைநாட்டிய 74.08 மீட்டர் என்ற உலக சாதனையையே மிக்கோலாஸ் அலெக்னா கடந்த ஞாயிற்றுக்கிழமை முறியடித்தார். பேர்லின் 1936 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் ஜெசே ஓவென்ஸினால் ஆண்களுக்கான நீளம் பாய்தலில் நிலைநாட்டப்பட்ட 8.13 மீட்டர் என்ற உலக சாதனை 25 ஆண்டுகள் மற்றும் 79 நாட்களுக்கு நீடித்தது. ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் இது இரண்டாவது பழைமையான சாதனையாகும்.  எவ்வாறாயினும் பெண்களுக்கான மெய்வல்லுநர் போட்டியில் நிலைநாட்டப்பட்ட சாதனை ஒன்றே இன்றும் மிகவும் பழைமையான சாதனையாக இருந்துவருகிறது. செக்கோஸ்லவாக்கியாவைச் செர்ந்த ஜர்மிலா க்ராட்டோச்விலோவா என்பவரால் 1983ஆம் ஆண்டு பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1:53.28 செக்கன்களில் நிறைவு செய்து நிலைநாட்டிய உலக சாதனையே மிகவும் பழைமை வாய்ந்த உலக சாதனையாகும். https://www.virakesari.lk/article/181320
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.