Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    18
    Points
    46808
    Posts
  2. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    8910
    Posts
  3. Kavallur Kanmani

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    1061
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/17/21 in all areas

  1. லொக்டவுண் வதனிக்கு அதிகாலையிலேயே விழிப்பு வந்து விட்டது. பக்கத்தில் தூங்கிக்கொண்டிருந்த நந்தனை திரும்பிப் பார்த்தாள் நல்ல தூக்கம். இன்று சனிக்கிழமை வேலையில்லாததால் அசந்து தூங்கிக்கொண்டிருந்தான். இப்பொழுதெல்லாம் இந்த லொக்டவுணால் வீட்டில் இருந்தேதான் வேலை செய்கிறார்கள். வீட்டில் வேலை செய்வதென்பது இலேசான காரியமில்லை. வேலையிடத்துக்கு போனோமா வேலை செய்தோமா நாலு நண்பர்களுடன் அரட்டை அடித்து வெளி உலகம் பார்த்து கடைக்கு போய் மாலையில் பிள்ளைகளுடன் விளையாடி என்று இருந்த காலம் மாறி இப்பொழுதெல்லாம் வீடே கதி என்று வீட்டின் சுவர்களுக்குள்ளேயே முட்டி மோதி பேசிக்கொண்டு சீ இதென்ன வாழ்க்கை? அடிக்கடி மனதுக்குள் அங்கலாய்ப்;பு ஏற்பட்டாலும் இதுவும் கடந்து போகும் என்று மனதைத் தேற்றிக்கொண்டனர். வதனியும் வீட்டில் வேலை செய்தாலும் இப்பவெல்லாம் விதவிதமாகச் சமையல் செய்வதும் பழைய நண்பிகளையெல்லாம் தேடிப்பிடித்து கதைப்பதுமாக ஒன்லைன் வட்ஸ்அப் என்று ஒருமாதிரி பொழுதைப் போக்கிக் கொண்டாள். இந்த வருடம் நந்தனின் 50வது பிறந்த நாளை பெரிய மண்டபம் எடுத்து விமரிசையாகக் கொண்டாட வேண்டுமென்ற அவளது கற்பனைகளெல்லாம் கனவாகிப் போகுமென்று யார் நினைத்தார்கள். இத்தனை வருடமாக அவர்களது வாழ்க்கையில் எத்தனையோ மேடு பள்ளங்கள் வந்தபோதும் இருவரும் மனம் ஒத்த தம்பதிகளாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பிள்ளைகள் இருவரும் படித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் படித்து முடிக்கும்வரை தம் பொறுப்புக்களை உணர்ந்து தம் பிள்ளைகளை வளர்ப்பதிலேயே அவர்களது இத்தனை ஆண்டுகளும் கழிந்து விட்டன. நேற்று நந்தனுக்கு 50வது பிறந்தநாள். நாள் முழுவதும் தொலைபேசியிலும் வட்ஸ்சப்புக்களிலுமாக வாழ்த்துக்கள் குவிந்து கொண்டிருந்தன. வதனியும் தன் பங்கிற்கு கேக் இனிப்புவகைகள் பிரியாணி என்று செய்து அசத்தியிருந்தாள். இருந்தாலும் வதனி நந்தனுக்குத் தெரியாமல் பிள்ளைகளுடன் சேர்ந்து நந்தனின் பிறந்தநாளை வீட்டிலாவது பெரிதாகக் கொண்டாட வேண்டுமென்று திட்டமிட்டாள்;. அந்த திட்டத்திற்கு ஆப்பு வைப்பதுபோல் “வீட்டிற்குள் இருங்கள் வெளியே திரியாதீர்கள்” என்று மேஜர் முதல் பிரதமமந்திரி வரை தொலைக் காட்சிகளில் அறிவித்து மக்களின் நலனைப் பாதுகாக்கும்படி அறிவுறுத்தியது மட்டுமன்றி வீட்டிலும் 5 பேருக்கு மேல் ஒன்றுகூடுவது தண்டனைக்குரிய குற்றமாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வதனிக்கோ எப்படியாவது சேப்பிரைஸ் பாட்டி வைத்து நந்தனை பிரமிக்க வைக்க வேண்டுமென மனம் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. புது வீடு வாங்கியபின் வீட்டில் எந்த கொண்டாட்டமும் வைக்க அவளுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. உறவுகளைச் சந்தித்தும் பல மாதங்களாகி விட்டன. எனவே நெருங்கிய உறவுகளை நந்தனுக்குத் தெரியாமல் ரகசியமாக சனிக்கிழமை வீட்டிற்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தாள். அத்துடன் நந்தனை மகிழ்விப்பதற்காக அவனது நண்பர்கள் தனது நெருங்கிய நண்பிகள் என்று ஒவ்வொன்றாக சொல்லி 20-25 பேர் ஆகி விட்டது. சனிக்கிழமை மதியம் வரை வீட்டில் எந்த மாறுதலும் தெரியாதபடி ரகசியமாகவே அனைத்து ஆயத்தங்களும் நடந்தன. வீடும் என்றும் போல் அமைதியாக இருந்தது. மத்தியானத்துக்கு மேல் ஒரு நண்பன் மூலம் நந்தனை வெளியே அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்திருந்தபடி அனைத்து திட்டங்களும் சரியாக நடைபெற்றுக்கொண்டிருக்கவும் வதனி பூரண திருப்தியுடன் மளமளவென்று காரியங்களை மேற்கொண்டாள். அவசர அவசரமாக வீட்டை அலங்கரித்து ஓடர் பண்ணியிருந்த கேக்கை மேசையில் வைத்து அலங்கரித்து மற்றைய ஒழுங்குகளையெல்லாம் சரிவர செய்து முடித்தாள். திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றன. மத்தியானத்துக்குமேல் ஒரு நண்பனின் மூலம் நந்தனை வெளியே வெளியே அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தாள்; நீண்ட நாட்களின் பின் சந்தித்த நெருங்கிய நண்பனுடன் தத்தமது 50 வயது அனுபவங்களை மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டே சுற்றியதில் நேரம் போனது தெரியவில்லை. மாலை மங்கத் தொடங்கியதும் வீட்டிற்கு போகலாம் என நந்தன் கேட்கவும் சரி என்ற நண்பனும் வதனிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு நந்தனுடன் வீட்டிற்கு வந்தான். வீடு அமைதியாகத்தான் இருந்தது. தன்னுடன் வந்த நண்பனை வீட்டிற்குள் அழைப்பதா விடுவதா என நந்தன் சிந்தித்த மறுகணம் நந்தன் தன்னை பின் தொடர்வதைக் கவனித்து “ வா வா வந்து ரீ குடிச்சிற்றுப் போகலாம்” என அழைத்தான். வீட்டின் கதவைத் திறக்கவும் “சேப்பிரைஸ்” என்று அனைவரும் கூக்குரலுடன் கைதட்டி நந்தனை வரவேற்கவும் நந்தன் திகைப்பில் திக்குமுக்காடிப் போனான். என்ன இது? லொக்டவுண் காலத்தில் இப்படிச் செய்கிறார்களே என மனம் அங்கலாய்த்தாலும் நீண்ட நாட்களாகச் சந்திக்காத நண்பர்களையும் உறவுகளையும் சந்தித்த சந்தோசத்தில் மனம் குதூகலமாகி மகிழ்ச்சியில் மூழ்கிப் போனான். வீட்டிற்குள் கலகலப்பும் சிரிப்பும் கும்மாளமுமாக இருந்தது. எங்கட ஆக்களின்ர பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் சும்மாவா? ஏல்லோரும் வண்ண வண்ண உடைகளுடனும் விதவிதமான அலஙகாரங்களுடனும் வந்து இறங்கி வீட்டிற்குள் செல்வதையும் வீட்டிற்குள் நடந்த குதூகலத்தையும் அவதானித்த யாரோ காவல் துறைக்கு செய்தி அனுப்பி விட்டார்களோ அல்லது தற்செயலாக அந்த வீதியில் பயணித்த காவல் துறையினருக்கு மூக்கில் வியர்த்து விட்டதோ யாரறிவார்? மக்களின் நலனுக்காகத்தானே சட்டங்களும் ஒழுங்குகளும் என்று சிந்திக்காமல் மனம் போல திட்டமிட்ட வதனி கதவைத் தட்டிய காவல் துறையினரைக் கண்டதும் திகைத்து விட்டாள். வீதியில் நிறைய வாகனங்களைக் கண்ட காவல் துறையினர் சந்தேகத்தில் ஒவ்வொரு வீடாக தட்டி சோதித்ததில் இவர்கள் வீட்டில் அதிகம் பேர் நின்றது கையும் மெய்யுமாக பிடிபட்டு விட்டது. என்ன செய்வது என்ற தெரியாமல் சிலர் மேல் அறைகளுக்குள்ளும், சிலர் நிலக்கீழ் அறைகளுக்குள்ளும் ஓடி ஒழிந்தனர். இருந்தும் யாராலும் காவல் துறையினரை ஏமாற்ற முடியவில்லை. அனைவருக்கும் குற்றப் பணமாக ஆளுக்கு ஆயிரம் டொலர் ரிக்கற் எழுதி கொடுக்கப்பட்டது. உறவுகள் நட்புக்கள் அனைவரும் திகைத்து என்ன செய்வது என்று அறியாது வருத்தத்துடனும் ஏமாற்றத்தடனும் நிற்க வதனியோ பலமுறை காவல் துறையினரிடம் மன்னிப்புக் கேட்டும் அவர்கள் எதற்கும் செவிசாய்க்கவில்லை. தமது கடமையில் கண்ணாயிருந்த காவல்துறையினர் இறுதியில் நந்தனின் கையிலும் பத்தாயிரம் டொலருக்கான குற்றப்பணத்திற்கான ரிக்கற்றை திணிக்கவும்; நந்தன் வெலவெலத்துப் போனான். காவல் துறையினர் தமது கடமையை முடித்து விட்டு வெளியே போய் நின்று அனைவரையும் வெளியேறும்படி பணித்து விட்டு தம் வாகனத்தினுள் காத்திருந்தனர். நந்தன் வதனியை திரும்பிப் பார்த்த பார்வையில் வதனி எரிந்து போகாத குறை. வந்திருந்த அனைவரும் தலையைத் தொங்கப் போட்டபடி வெளியேற வதனியோ கையைப் பிசைந்தபடி கண்கலங்க பார்த்துக்கொண்டு நின்றாள். உறவுகள் சிலர் “அவள் வதனிதான் கூப்பிட்டாள் என்றால் எங்களுக்கு எங்கே அறிவு போனது” என்று தம்மை நோவது போல வதனியை திட்டியபடி வெளியேறினர். ஆசைஆசையாக பார்த்துப் பார்த்து செய்த அலங்காரங்கள் கேக் இனிப்பு பலகாரங்கள் உணவுகள் அனைத்தும் தேடுவாரற்று கிடந்தது. இத்தனை ஆண்டு வாழ்வில் இதுவரை நந்தனின் இந்தமாதிரியான கோபத்தைப் பார்த்தறியாத வதனிகூட ஒருகணம் திண்டாடிப் போனாள். மெதுவாக பக்கத்தில் போய்” என்ன நந்தன் நான் உங்கட பிறந்தநாளை வடிவாகக் கொண்டாட வேணுமெண்டுதானே இப்படிச் செய்தனான்” என்ற ஆரம்பிக்கவும் நந்தன் கட்டுக்கடங்காத கோபத்துடன் “உன்னை நான் கேட்டனானா பிறந்தநாள் கொண்டாடச் சொல்லி அறிவு கெட்ட ஜென்மம்”என்று ஆவேசத்துடன் அவளைப் பிடித்து தள்ளி விட்டான். இந்த தாக்குதலை எதிர் பார்க்காத வதனி நிலை தடுமாறி பக்கத்தில் இருந்த மேசையைப் பிடிக்க முயற்சித்தும் பிடி நழுவிப் போக அவளுக்கிருந்த மனக் குழப்பமும் சோர்வும் அவளை பெலவீனப்படுத்த தட்டுத் தடுமாறி அருகிலிருந்த சுவரில் மோதி கீழே விழுந்து விட்டாள். சத்தம் கேட்டு பிள்ளைகள் ஓடி வந்தனர். நந்தனும் ஒருகணம் திகைத்தாலும் ஆத்திரம் அடங்காமல் விறைப்புடன் நின்றான். வதனியின் தலையிலிருந்து இரத்தம் கொட்டியதை கண்ட பின்தான் நந்தனுக்கு நிலமையின் தீவிரம் மனதை உறுத்தியது. உடனடியாக அவளைத் தூக்கி செற்றியில் படுக்கவைத்துவிட்டு அம்புலன்சுக்கு அழைத்தனர். இந்த கொரோனா காலத்தில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் அதிக வேலைப் பழுவுடன் இருப்பதால் சிறிது தாமதித்தே உதவி கிடைத்தது. வதனியை அம்புலன்சில் ஏற்ற, நந்தனை கைது செய்து பொலிஸ் விசாரணைக்காக கொண்டு சென்றனர். நந்தன் இதை எதிர்பார்க்கவில்லை. நந்தன் திட்டமிட்டு எதுவும் செய்யா விட்டாலும் குற்றவாளியாகத்தான் பார்க்கப்பட்டான். நந்தன் பயத்திலும் திகைப்பிலும் உறைந்து போனான். தன் பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்டு வதனிக்கு இப்படி ஆகிவிட்டதே என்று நினைக்க வேதனையில் துவண்டு போனான். நிறைய இரத்தம் இழந்து விட்டதால் வதனியும் மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாள். நந்தனையும் விசாரணை முடியும்வரை பொலிஸ் காவலில் வைத்து விட்டார்கள். பிள்ளைகளோ என்ன செய்வதென்று தெரியாத நிலையில் . இதில் யாரை நோவது? கணவனது பிறந்தநாள் கொண்டாட ஆசைப்பட்ட வதனியையா? ஆத்திரப்பட்ட நந்தனையா? அல்லது அவனது 50வது பிறந்த நாளையா? லோக்டவுணையா? எதை?
  2. தினமும் சைக்கிள் ஓட்டுபவனால் இந்தியா மட்டுமல்ல உலக பொருளாதாரமே சீரழியும்... ஆச்சரியமா இருக்கா? தொடர்ந்து படிங்க..... ஏன்னா அவன் கார் வாங்க மாட்டான்... அதற்காக கடன் வாங்கவும் மாட்டான்... வட்டியும் கட்ட மாட்டான்... பேங்க் பைனான்ஸ் கம்பெனிக்கு சல்லி பைசாவுக்குகூட பிரயோஜனம் இல்லாதவன்... கார் இன்சூரன்ஸ் பண்றதுக்கு வர மாட்டான்... இந்த பெட்ரோல் டீசல்..... ம்ஹூம்... வாய்ப்பே இல்ல... இவனால அமெரிக்கா, சவுதி அரேபியாவுக்கும் கூட எந்த பயனும் இல்ல... சர்வீஸ் ஸ்பேர் பார்ட்ஸ் எதற்கும் இவன் செலவு செய்யறது இல்ல... பார்க்கிங் கட்டணம்னு பெருசா எங்கேயும் செலுத்த மாட்டான்... இதெல்லாம் போய்த் தொலையட்டும்னு உட்டா... இவனுக்கு சுகர் வராது... இதய நோய் வராது... குண்டாகவும் மாட்டான்... ஆஸ்பத்திரி, டாக்டர் , மருந்து கடை இதெல்லாம் இவனுக்குத் தேவையே இல்லை... உலக பொருளாதாரம் வளர இவன் எதுவும் செய்ய மாட்டான்... அதே சமயம் ஒரே ஒரு பீட்ஸா கடை ஊர்ல உள்ள எல்லா டாக்டரையும் வாழ வைக்கும்... 10 இதய டாக்டர்... 10 பல் டாக்டர்... 10 டயட்டீசியன்... இன்னும் ஒரு 50 மெடிக்கல் ஷாப்க்கு தேவையான பொருளாதாரம் அதனால கிடைக்கும்... உடனே முடிவெடுங்க சைக்கிளா? காரா? இந்திய பொருளாதாரமா??? உங்க உடல் நலமா??? நன்றிகளும் பிரியங்களும். FB
  3. நண்பர் குமாரசாமி , சுவி , உடையார் ஆகியோருக்கு சமர்ப்பணம்.
  4. இதைத்தான் மொக்குச்சனம் என்று சொல்வது😖 இங்கிலாந்திலும் பல பார்ட்டிகள் இப்படிக் கள்ளமாக நடக்கின்றன. பெரும் பணக்காரர்கள் வாழும் இலண்டனின் மத்திய பகுதியிலும் ஆங்கிலேய கனவான்களும், சீமாட்டிகளும், பல இளவயதினரும் லொக்டவுனை மதிக்காமல் நடந்துகொள்கின்றார்கள். நம்மவர்களும் தங்கள் பங்குக்கு செய்கின்றார்கள்தான். ஒரு சிலர் பிடிபடுகின்றனர். பிடிபடாதவர்கள் பெரிய சாதனை படைத்த பெருமையுடன் மீண்டும் பார்ட்டிகளுக்கு திட்டம் போடுகின்றார்கள்.
  5. மறக்க முடியாத பிறந்தநாள்.
  6. இறைவனே இறைவனே God is great
  7. துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆடி 21, 2012 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை மிரட்டிவரும் துணைராணுவக்குழு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேதலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புச் சார்பாக போட்டியிடும் உறுப்பினர்களை அரச ராணுவத்தின் வழிகாட்டலில் இயங்கும் துணைராணுவக் குழுவொன்று அச்சுருத்திவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த செவ்வாயன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய வேட்பாளர்களான துரைராஜசிங்கம் மற்றும் இந்திரகுமார் பிரசண்ணா ஆகியோரின் வீடுகள் துணைராணுவக்குழுவினரால் வெளியிலிருந்து பூட்டுப் போடப்பட்டு அடைக்கப்பட்டிருந்ததாக இவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். இவர்களால் பொலீஸாருக்கு இந்தவிடயம் தெரிவிக்கப்பட்டபின்னர், பொலீஸாரே கதவுகளை திறந்துவிட்டதாகத் தெரிகிறது. துரைராஜசிங்கம் என்பவர் முன்னாள் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் என்பதுடன் வழக்கறிஞராகவும் பதவி வகித்தவர். அவரது வீடு மட்டக்களப்பு வாவிவீதியில் , முன்னாள் கிழக்கு முதலமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையானின் அலுவலகத்திலிருந்து சுமார் 15 மீட்டர்கள் தொலைவிலேயே இருக்கின்றதென்பதும் குறிப்பிடத் தக்கது. இந்திரக்குமாரின் வீடு மட்டக்களப்பு இரண்டாம் குறுக்குத் தெருவில் அமைந்திருக்கிறது. இவ்விரு வீடுகளுமே நகரின் அதியுயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்திருக்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்ட பின்னர், துணைராணுவக்குழு உறுப்பினர்கள் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்கள் மீது துன்புறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
  8. இந்த கதை இன்னும் இந்த வருட பிறப்பு XMAS க்கு முதல் வந்திருந்தால் கொஞ்ச தமிழ் சனம் நோய் வராமல் தப்பி இருக்கும்கள் .
  9. துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆடி 03, 2012 கல்குடா கல்வி வலயத்தின் செயற்பாடுகளை கட்டுப்படுத்திவரும் துணைராணுவக் குழு கல்குடா கல்வி வலயத்தின் அதிகார நிலையம் துணைராணுவக் குழுவினரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கிவருவதாக இவ்வலயத்தின் ஆசிரியர்களும், பாடசாலை அதிபர்களும் புகார் அளித்துள்ளனர். துணைராணுவக் குழுவினரின் அத்துமீறல்களாலும், அச்சுருத்தல்களாலும் மாணவர்களுக்கான கல்விநடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறுகின்றன்ர். கல்குடா கல்வி வலயமானது மாகாண ரீதியில் 9 ஆவது இடத்தினை 2007 இல் பெற்றிருந்தது. ஆனால், துணைராணுவக்குழுவினரின் கட்டுப்பாட்டின் கீழ் அக்கல்வி வலயம் செயற்படத் தொடங்கியதன் பின்னர் அது 16 ஆம் இடத்திற்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அத்துடன், இவ்வலயத்தின் கல்விசார் நடவடிக்கைகளுக்கென்று ஒதுக்கப்படும் பெருமளவு பணமும் துணைராணுவக்குழுவினரால் களவாடப்பட்டு வருகிறதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். கல்குடா கல்வி வலயத்தில் 85 பாடசாலைகள் அடங்குகின்றன. இவற்றுள் 35 பாடசாலைகள் மிகவும் பிந்தங்கிய பிரதேசங்களில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 26 பாடசாலைகள் குறைந்தளவு அபிவிருத்தியடைந்த பகுதிகளிலும் மீதி 20 பாடசாலைகள் ஓரளவு அபிவிருத்தியடைந்த பகுதிகளிலும் அமைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மகிந்த சிந்தனையின் கீழ் கிழக்கின் வெளிச்சம் திட்டத்தின் மூலம் இவ்வலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பாடசாலைகளின் அபிவிருத்திக்கென்று ஒருபங்கு நிதி ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்கு மேலதிகமாக சில அரச சார்பற்ற நிறுவனங்கள் இப்பாடசாலைகளில் கழிவறைகளுக்கான உதவித்தொகையாக சுமார் பத்து லட்சம் ரூபாய்களை நன்கொடையாக வழங்கியிருந்தன. ஆனால், இந்த அபிவிருத்திகளுக்கான டென்டர்கள் துணைராணுவக் குழுவினருக்கே வழங்கப்பட்டிருக்கின்றன. இக்கல்வி வட்டாரத்தின் நிர்வாக அதிகாரி, சுயமாகச் செயற்பட முடியாமல், துணைராணுவக் குழுவினரின் நேரடிக் கட்டளையின் கீழேயே செயற்பட்டு வருவதாக அறியமுடிகிறது. முன்னாள் கிழக்கு மாகாண முதல்வரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான பிள்ளையான் அண்மையில் இக்கல்வி வட்டார ஆசிரியர்களையும் அதிபர்களையும் அழைத்துப் பேசியபோது, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனக்கே வாக்களிக்குமாறு அச்சுருத்தியுள்ளதாக இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
  10. கால நேரம் பற்றிய முன் யோசனையின்றி அழைத்த வதனியைத் தான் குற்றம் சொல்ல வேண்டும் . அடுத்ததாக பின் விளைவை யோசியாத உறவுகளை குற்றம்சொல்ல வேண்டும் . கதை வேடிக்கையாக இருந்தாலும் உண்மையானதாக இருந்தால் ரொம்பவே வலிக்கும். இப்படி வேற்று இன சமூகத்தில் நடந்ததாக கேள்விப்பட்ட்துண்டு
  11. துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 30, 2012 படுவான்கரையில் மீளக் குடியேறிவரும் மக்களின் வாழ்வாதாரத்தினைத் தட்டிப் பறிக்கும் கருணா துணைராணுவக் குழு நன்னீர் மீன்பிடியில் தமது வாழ்வாதாரத்தை ஓட்டிக்கொண்டிருக்கும், படுவான்கரையில் மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது மீன்களை அரசின் துணையமைச்சரும், துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணாவின் சகாக்கள் பறித்துச் செல்வதாக முறைப்பாடு செய்துள்ளனர். சிங்கள ராணுவத்தால் இயக்கப்பட்டுவரும் கருணாவின் துணைக்குழு இப்பகுதியில் மக்கள் பிடிக்கும் மீன்களைக் கருவாடு போடுவதனைத் தடுத்து வருவதாகவும், சந்தையில் குறைந்தது 1,100 ரூபாய்களுக்கு விற்கப்படக் கூடிய கருவாட்டினை தமக்கு மீன்களாகவே வெறும் 50 ரூபாய்களுக்குத் தரவேண்டும் என்று அச்சுருத்திப் பறித்துச் செல்வதாகவும் முறையிடப்பட்டிருக்கிறது. குடும்பிமலையின் அமைவிடம் இலங்கை ராணுவத்தின் ராணுவ நடவடிக்கையினால் இடம்பெயர்ந்து வாழ்ந்துவந்த 439 குடும்பங்கள் மீண்டும் படுவான்கரையின் பெரிய நுரைச்சோலை மற்றும் சின்ன நுரைச்சோலை ஆகிய பகுதிகளில் மீளக் குடியேறியுள்ளன. மீளக்குடியேறிய இம்மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக குடும்பிமலையினை அண்மித்த மீரான்கடவைக்குளம், ஆத்திக் காட்டுக்குளம் ஆகிய நீர்த்தேக்கங்களில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இவ்வாறு மீளக்குடியேறிய மக்களால் பிடிக்கப்படும் நன்னீர் மீன்கள் சந்தைப்பகுதியில் ஓரளவு நல்ல விலைக்கு விற்கப்பட்டு வந்தன. ஆனால், கருணா துணைராணுவக் கொலைக்குழுவினரால் அச்சுருத்தப்பட்டிருக்கும் இம்மக்கள் தமது மீன்களை மிகக் குறைந்த விலைக்கு இவர்களுக்கு விற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இதேவேளை அரச சார்பற்ற நிறுவனங்களாலும் சர்வதேச தொண்டர் நிறுவனங்களாலும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான உதவிகள் என்கிற பெயரில் வழங்கப்படும் பணம் கருணா தலைமையிலான துணைராணுவக் குழுவினருக்கே பகிர்ந்தளிக்கப்பட்டுவருவதாக இம்மக்கள் மேலும் கூறுகின்றார்கள். மக்களுக்கான நிதியில் களவடால்களைப் புரியும் கருணாவின் சகாக்களிடம் இதுபற்றிக் கேட்ட அதிகாரிகள் பயமுருத்தலுக்கு ஆளானதோடு, வேறிடங்களுக்கும் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மிக அண்மையில் கல்லடிப் பாலத்திற்கென்று ஒதுக்கப்பட்ட நிதியில் தமக்கு ஒரு பங்கு தரப்படவேண்டும் என்று கருணா அதிகாரிகளை வற்புறுத்தியிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை இன்னொரு துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான், ராணுவத்தினரினதும், பொலீஸாரினதும் ஆதரவுடன் சந்தனமடு ஆற்றிலிருந்து சட்டத்திற்குப் புறம்பான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டுவருவது நாம் அறிந்ததே.
  12. துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 28, 2012 மாகாணசபைத் தேர்தல்களில் தமக்குச் சார்பாக தமிழர்களை பயமுறுத்த இனியபாரதியை இறக்கியிருக்கும் மகிந்த ராஜபக்ஷ. கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில் தனது கட்சி சார்பாக மக்களை அச்சுருத்தி தனக்கு வாக்களிக்கப் பண்ணுதல் முதல் பல தேர்தல் முறைகேடுகளுக்காக தனது அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், கருணா துணைராணுவக் கொலைக்குழுவின் முக்கிய ஆயுததாரியுமான இனியபாரதி என்பவரை மகிந்த ராஜபக்ஷெ நியமித்திருப்பதாகத் தெரிகிறது. கருணாவின் நெருங்கிய சகாவான இனியபாரதி பல கொலைச்சம்பவங்களிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் இலங்கை நீதிமன்றத்திலேயே வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில் மகிந்தவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்னர் சந்திரநேரு சந்திரகாந்தன் எனும் பாராளுமன்ற உறுப்பினருக்கு நேரடியாகக் கொலைமிரட்டலினை விடுத்ததற்காக இனியபாரதி மீது கல்முனை நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட இனியபாரதிக்கு இருவருடங்கள் கடூழியச் சிறைத்தண்டனையினை நீதிபதி சந்திரமணி விசுவலிங்கம் விதித்திருந்தார். ஆனால், இந்தத் தீர்ப்பு 10 வருடங்களுக்கு தடைசெய்யப்பட்டு வெறும் 25,000 ரூபாய்கள் தண்டப்பணத்துடனும், மக்களை மிரட்டக் கூடாது எனும் நிபந்தனையோடும் இனியபாரதி விடுவிக்கப்பட்டார். மக்களுக்கெதிரான வன்முறைகளான கடத்துதல், சட்டத்திற்குப் புறம்பான வகையில் படுகொலை செய்தல், கப்பம் பெறுதல் போன்ற குற்றச்செயல்கள் தொடர்பாக இனியபாரதியின் பெயர் பல்வேறு மக்களாலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் நடத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கக் கொமிஷனின் முன்னால் தெளிவாக முறையிடப்பட்டிருந்தது. சுமார் 20 பெயர்கள் அடங்கிய முதன்மை மனிதவுரிமை மீறல்க் குற்றவாளிகளில் இனியபாரதியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல சர்வதேச மனிதவுரிமை அமைப்புக்கள் 2006 முதல் 2007 காலப்பகுதியில் பல சிறுவர்களையும், பொதுமக்களையும் கடத்திச் சென்றது, படுகொலை புரிந்தது போன்ற குற்றச்செயல்களில் இனியபாரதி ஈடுபட்டிருந்தார் என்று அறிக்கைகளை வெளியிட்டிருந்தன. 2008 மாகாணசபைத் தேர்தல்களில், மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடனான கட்சிக்கு கிழக்கில் மக்கள் வாக்களிக்குமாறு இனியபாரதி மக்களைக் கொடுமைப்படுத்தியதுடன், பாரிய தேர்தல் கால வன்முறைகளிலும் இறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு புதிதாகத் தேர்தல்கள் வருகிற புரட்டாதி மாதம் நடைபெறவுள்ளதையடுத்து மிகக் கொடூரமான ஆயுததாரியான இனியபாரதியை மீண்டும் கிழக்கில் அரசாங்கம் களமிறக்கியுள்ளது. இனியபாரதியைப் போன்றே, அரசால் முன்னைய தேர்தல்களில் களமிறக்கப்பட்ட பல முன்னாள் துணைக்குழு ஆயுததாரிகளும் இம்முறை தேர்தல்களில் அரசிற்காக வேலைசெய்ய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக மவட்ட செயலகத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
  13. ரஜினி ஸ்டைலில் அசத்தும் மும்பை தோசைவாலா ......! 🤣
  14. வணக்கம் வாத்தியார்........! ஆண் : அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள் இதழோரம் சிாிப்போடு கேட்டு கொண்டே நின்றேன் அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சக்கரை நிமிடம் ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே கண்டேனே கண்டேனே ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : பாா்த்து பழகிய நான்கு தினங்களில் நடை உடை பாவணை மாற்றி விட்டாள் சாலை முனைகளில் துாித உணவுகள் வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள் கூச்சம் கொண்ட தென்றலா --- ஒரு மாலை இளவெயில் நேரம்---
  15. கடவுள் தந்த இரு மலர்கள் ........! 😊
  16. பிரமிப்பூட்டும் பாரஊர்தி தொடர் வண்டிகள்.......! 😉
  17. குடும்பிமலையின் அமைவிடமும், புதிதாக அல்லை ஓடை மற்றும் மாவட்டான் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் ராணுவச் சோதனைச் சாவடிகளும். இனவழிப்பு அரசின் ராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் லால் பெரேரா என்பவன் ஆடி மாதத்திற்கிடையில் இத்திட்டத்தைனைப் பூர்த்தியாக்குவேன் என்று சூளுரைத்திருக்கும் நிலையில், அரசின் மீள்குடியேற்ற, இணக்கப்பாட்டு துணையமைச்சரும் துணைராணுவக் கொலைக்குழுவின் தலைவருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் இப்பகுதியிலிருந்து மக்களை ராணுவத்தின் சொற்படி உடனடியாக வெளியேற வேண்டும் என்று வற்புறுத்திவருகிறார். ராணுவத்தால் அமைக்கப்படும் புதிய வீதிகள் இப்பகுதியை அபிவிருத்தி செய்யவே என்று கூறப்பட்டாலும், இவ்வீதிகளை தமிழ் மக்கள் பாவிப்பதை ராணுவம் தடுத்துவருவதாக மக்கள் முறையிட்டிருக்கிறார்கள். மக்களுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளற்ற இப்பகுதியில் மக்கள் கால்நடையாகவே நெடுந்தூரம் பயணித்துக்கொண்டிருக்கையில், இவ்வீதிகள் ஊடாக ராணுவமும், உல்லாசப் பயணிகளும் சொகுசு வாகனங்களிலும், கனரக டிரக் வண்டிகளிலும் பவணிவருவதாகத் தெரிவிக்கும் மக்கள், இவ்வீதியூடாக நடந்துசெல்வதற்குக் கூட வெலிக்கந்தைப் பகுதியிலுள்ள ராணுவச் சோதனைச் சாவடியில் அனுமதிபெற்றபின்பே முடியும் என்றும் தெரிவிக்கிறார்கள். ஆக்கிரமிப்பு ராணுவத்தினருக்கு அடுத்தபடியாக சிங்கள ஆக்கிரமிப்பிற்கு நேரடியாக உதவிவரும் தெற்கின் அரச சார்பற்ற நிறுவனங்களின் முகவர்களும் இவ்வீதிகளை பாவித்துவருவதாகத் தெரிகிறது. இரு வருடங்களுக்கு முன்னர், ஜனாதிபதி மகிந்தவின் சகோதரரும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் உல்லாசப் பயணத்துறை அபிவிருத்தி என்கிற பெயரில் மாவட்டத்தின் எழுவான்கரைப்பகுதியின் பெருமளவு கரையோரக் காணிகளை அபகரித்து, மூலிகைக் காடுகள் உட்பட பாரிய காடழிப்பில் ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது. இதேவேளை சிங்கள ராணுவத்தினதும், கடற்படையினதும் உதவியுடன் பெருமளவு சிங்கள மீனவர்கள் தமிழ்ப் பகுதிகளில் மீன்பிடிக்கத் தொடங்கியிருப்பதுடன், கரையோரக் கிராமங்களான கோரளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மண்முனைப்பற்று வடக்கு ஆகிய பகுதிகளில் குடியேறிவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இனவழிப்புப் போரினால் இவ்விடங்களிலிருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் இன்றுவரை அகதிமுகாம்களில் வாழ்ந்துவரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் காணிகளில் உல்லாசப்பயண விடுதிகளையும், புத்த தாதுகோபங்களையும் கட்ட அரசிற்கு எங்கிருந்து நிதிவருகிறதென்றும் இம்மக்கள் கேட்கின்றனர். அபிவிருத்தி என்கிற பெயரில் இனவழிப்பு அரசுக்கு பண உதவிகளை வழங்கும் சர்வதேச நாணைய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய முதலீட்டாளர்கள் இதுபற்றிப் பதிசொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று கிழக்கின் புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.
  18. துரோகத்தின் நாட்காட்டி : நாள் ஆனி 15, 2012 படுவான்கரையில் சிங்களக் குடியேற்றத்தில் ஈடுபட்டுவரும் ராணுவம், மக்களை ராணுவம் சொல்வதைக் கேட்குமாறு வலியுறுத்தும் கருணா. தமிழர்களின் தாயகப்பகுதியான படுவான்கரையினை கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஆக்கிரமித்துக்கொண்ட சிங்கள ராணுவம், இயற்கை மழையினால் செழிப்புற்ற நெல்வயல்ப் பகுதிகளான மீரான் கடவை, நுரைச்சேனை மற்றும் பெரியவெளி ஆகிய கிராமங்களை உல்லாசப் பயணத்துறைக்காக அபிவிருத்திசெய்யப்போவதாக அறிவித்து அப்பகுதியில் வாழ்ந்துவரும் தமிழர்களை வெளியேறுமாறு பணித்திருக்கிறது. இப்பகுதியில் அபிவிருத்திவேலைகளுக்கென்று தென்பகுதியிலிருந்து சிங்கள வேலையாட்களை வரவழைத்திருக்கும் ராணுவம், தமது கட்டளையினை ஏற்று இதுவரையில் இடம்பெயராதிருக்கும் தமிழர்களை விரட்ட கருணா துணைராணுவக்குழுவினை ஏவிவிட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இப்பகுதிக்கு வீதிகளை புதிதாக அமைத்துவரும் ஆக்கிரமிப்பு ராணுவத்தில் அதிகாரி கேணல் பெரேரா, யுத்தத்தினால் இன்றுவரை இடம்பெயர்ந்து வேறிடங்களில் அல்லற்பட்டுவாழும் தமிழர்களுக்கான நன்னீர் வசதிகள் உட்பட ஏனைய அடிப்படை வசதிகளைச் செய்துதர தொடர்ந்தும் மறுத்து வருகிறார் என்று இம்மக்கள் தெரிவிக்கின்றனர். குடும்பிமலைப் பகுதியும், வாழைச்சேனை மற்றும் மட்டக்களப்பிலிருந்து அதன் அமைவிடமும் இப்பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருக்கும் மக்கள் கூறுகையில், தமது வயற்காணிகளை கருணா குழுவின் உதவியுடன் பறித்திருக்கும் இலங்கை ராணுவம் அபிவிருத்தி என்கிற பெயரில் புதிய சிங்களக் குடியேற்றம் ஒன்றினை அங்கு உருவாக்கிவருவதாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். புலிகளிடமிருந்து 2007 இப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பல வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடமே சில தமிழர்கள் இப்பகுதியில் மீளக் குடியேற அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அடிப்படை வசதிகளேதுமின்றி நிர்க்கதியாக விடப்பட்ட இம்மக்களுக்கான அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைப்பதை இப்பகுதியில் நிலைகொண்டிருக்கும் ஆக்கிரமிப்பு ராணுவம் தடுத்துவிட்டது. சில அரச சார்பற்ற நிறுவனங்களால் 2007 இற்கு முன்னர் மக்களுக்கு வழங்கப்பட்ட தகரக் கொட்டகைகளிலும், மரங்களின் கீழ் கொட்டகைகள் அமைத்துமே இம்மக்கள் இன்னமும் வாழ்ந்துவருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்றில் அமைந்திருக்கும் குடும்பிமலை கடல் மட்டத்திலிருந்து 534 அடி உயரத்திலமைந்திருக்கும் குடும்பிமலை, தன்னைச் சுற்றி ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் மிகச்செழிப்பான வயற்காணிகளையும், உயர்நிலத்தில் செழித்து வளரக்கூடிய தாவரங்களையும் கொண்டதுடன், தன்னைச்சுற்றி சில நீர்த்தேக்கங்களையும் கொண்ட ஒரு பகுதியாகும். இப்பகுதியைச் சுற்றியிருக்கும் மீரான் ஓடை, நுரைச்சேனை, பெரியவெளி ஆகிய கிராமங்களின் பலநூற்றுக்கணக்கான ஏக்கர்கள் வயற்காணிகள் இந்தத் திட்டத்தின்மூலம் பறிக்கப்பட்டுள்ளதுடன், குறைந்தது 5000 ஏக்கர்கள் வயற்காணிகளும், குறைந்தது ஆயிரம் ஏக்கர்கள் விளைச்சல் நிலங்களும் சிங்களமயமாக்கப்பட்டுவருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். உல்லாசப் பயணத்துறைக்கான அபிவிருத்தி என்கிற பெயரில் ஆக்கிரமிப்பு ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த நில அபகரிப்பு உண்மையிலேயே தமிழர்களை கலாசார ரீதியில் இனவழிப்புச் செய்வதனை நோக்கமாகக் கொண்டதென்றும், காணிகளைப் பறிப்பதுடன் நின்றுவிடாத இத்திட்டம், தமிழரின் வாழ்வாதாரத்தையும் நாசப்படுத்தும் நோக்குடனும் முன்னெடுக்கப்பட்டு வருகிறதென்றும் கிழக்கின் கல்விமான்களும் சமூகவியலாளர்களும் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
  19. எம் (நிழல்) அரசு காலத்தின் பொக்கிசங்களில் ஒன்று.
  20. புலிகள் காலம் நவீன காலம்.
  21. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 வல்லோனின் தூதர் வான்மதியே யா ரசூலல்லாஹ்
  22. அகஸ்தியனுக்கும்,நுணாவிற்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
  23. நுணா , அகஸ்தியன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🎂
  24. நுணாவிலானுக்கும், அகஸ்தியனுக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
  25. தோழர்கள் நுணா , அகஸ்தியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..💐..🎂
  26. அகஸ்தியனுக்கும் நுணாவிலானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  27. நுணாவுக்கும் , அகஸ்தியனுக்கும் எனதினிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!
  28. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அகஸ்தியன் & நுணாவிலான்
  29. அகஸ்தியன், நுணாவிலான் ஆகியோருக்கு.. உளம் கனிந்த, இனிய... பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
  30. உங்கள் நாட்டில் ஒரு நாள் பிந்தியா வலன்ரைன்ஸ் டே வருகிறது அண்ணா...🤔
  31. வாழையினால் ஆன சறுக்கு மரம் ஏறுதல் செம ஜோக்.........! 😂
  32. "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்"......! 😂
  33. மாமாவும்... மருமகனும்.
  34. தாராகுஞ்சுகளின் அணிவகுப்பு......செமையாய் இருக்கு.....! 🦢
  35. வாழ்க்கையில் 'பிடிவாதம்' முக்கியமானது..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.