Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. புங்கையூரன்

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    13683
    Posts
  2. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46808
    Posts
  4. உடையார்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    23926
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 03/21/21 in all areas

  1. பிலோமினாவின் தந்தையாருடன் அளவளாவிக் கொண்டிருந்த சந்திரன் ஒரு சிறுவன் வீட்டை நோக்கி ஓடி வருவதை அவதானித்தான்! அதே சுருண்ட முடியும், நீல நிறக் கண்களும்...! அந்தக் குழந்தை யாருடையது என்பதற்குப் பெரிய அறிமுகம் எதுவும் அவனுக்குத் தேவைப்படவில்லை! சந்திரனைக் கண்ட குழந்தையின் கண்களில் ஒரு மிரட்சி தெரிந்தது! அப்பன் பயப்பிடாதை...இவர் உனக்கு மாமா! வெளி நாட்டில இருந்து வந்திருக்கிறார்! குழந்தை தாத்தாவைக் கட்டிப் பிடித்த பிடித்த படி....அவனைக் கூர்ந்து கவனித்தபடியே இருந்தது! இருவரில் ஒருவருமே...பிலோமினாவைப் பற்றிய கதையை ஆரம்பிக்கவில்லை! நான் அப்ப போயிற்று...நாளைக்குக் காலமை வாறன்! பிலோமினா நிப்பா தானே எனச் சந்திரன் கேட்கவும், தந்தையார் ஓமோம்...நான் அவவிட்டைச் சொல்லி விடுகிறன் மகன் என்று கூறினார்! அவரது கண்களில் ஏதாவது செய்தி இருக்கின்றதா என்று உற்றுப் பார்த்த போதும் ஒரு வெறுமை மட்டுமே....அதில் தெரிந்தது! பின்னர் சைக்கிளை உழக்கும் போது கொஞ்சம் எதிர்க் காத்து வீசவே, சைக்கிளைத் தூக்கித் தோள்களில் வைத்த படி நடக்கலாமா என்று யோசித்தவன்...தான் இன்னும் சிறு பிள்ளையில்லை என்று நினைத்துச் சைக்கிளை உருட்டிய படியே நடக்கத் தொடங்கினான்! செல்லும் வழியில் சில வீட்டுத் தோட்டங்கள் தெரிந்தன! பொதுவாகச் சின்ன வெங்காயமும், மிளகாய், கத்தரி, வெண்டி போன்ற சில மரக்கறி வகைகளும் நடப்பட்டிருந்தன! அதன் பின்னால் உள்ள உழைப்பின் அளவை அவன் ஓரளவுக்குத் தெரிந்திருந்தான்! வெறும் கல் படர்ந்த நிலத்தின் மீது கொஞ்சம் மண்ணை உயர்த்தி..அதன் மீது தான் நாற்றுக்களை நட்டிருப்பார்கள்! தரவை நிலங்களில் நிறையக் காய்ந்த எருக்கள் கிடைக்கும்! அதையும் மழையையும் மட்டும் நம்பியே அந்தத் தோட்டங்கள் இருந்தன! வீட்டுக்கு வந்த பின்னரும் பிலோமினாவைப் பற்றிய சிந்தனை அவனை விட்ட பாடில்லை! இன்னும் நல்ல வெளிச்சம் இருந்ததால்...கால் போன திசையில் கொஞ்ச நேரம் நடக்கத் தொடங்கினான்! வீதிக்குக் கொஞ்சம் தார் காட்டியிருந்தார்கள்! இப்போதெல்லாம் வீட்டு நாய்களைக் காணும் போது...உள்ளுக்குள் கொஞ்சம் பயமாக இருந்தது! அந்த நாட்களில் நாய்கள் துரத்தும் போது, கால்களைத் தூக்கிச் சயிக்கிள் ஹாண்டிலில் வைத்து ஓடி, நாய்களுக்கே நிலாக் காட்டியதை நினைத்துப் பார்த்தான்! ஓரு இடத்தில் நிறைய ஆவரம் மரங்கள் சிறு..சிறு பற்றைகளாக இருந்தன! இவற்றின் காய்கள் சீயாக்காய் போல நீளமாக இருக்கும்! இவற்றைத் தலையில் வைத்துக் கழிகளில் குளித்ததும் நினைவுக்கு வந்தது! இப்போதும் அவ்வாறு குளிக்க வேண்டும் போல இருந்தது! இப்போது அவனுக்கு ஒரு உண்மை...ஓடி வெளித்தது! எவ்வளவு நாட்கள் பிற தேசங்களில் வசித்தாலும்...இளமைக் கால நினைவுகள் ஒரு போதும் அழிந்து போவதில்லை! அதே சூழலுக்குள் திரும்பப் போகின்ற போது...அந்த நினைவுகள் அப்படியே திரும்பவும் வரும்! இப்போது பிற் காலத்தில் இங்கு வந்து வசிக்க வேண்டும் என்ற அடி மனத்து ஆசை மேலும் வீறு கொண்டெழுந்தது! மறு நாள் காலையில் விடிந்தும் விடியாத வேளையிலேயே கண் விழித்தவன் இன்றைய நாளைப் பெரும் எதிர்பார்ப்புகளோடு வரவேற்றான்! அவனுக்கே பிடித்தமான பிட்டும், கப்பல் வாழைப்பழமும், சம்பலும் பெரியவர் அவனுக்காகச் செய்து வைத்திருந்தார்! பின்னர் காலையின் வாசனையை முகர்ந்த படியே சைக்கிளை எடுத்துக் கொண்டு அவன் புறப்படவும்....வெளியே யாரோ வருவது போல அரவம் கேட்கவே, பிலோமினாவும் அவளது குழந்தையைக் கையில் பிடித்த படியே நடந்து வந்து கொண்டிருந்தாள்! அவளையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் பெரியவரின் நினைவு திடீரென வந்ததும், அவளை வரவேற்பதற்காக வெளியே ஒடினான்! அதற்குள் பெரியவர் முந்திக்கொண்டார்! என்ன பிள்ளை இந்தப் பக்கம்? பேச்சு நடை விபரீதமாகப் போய் விடக் கூடாது என்பதற்காக, இவ எனது நண்பனின் உறவினர்...என்னிடம் தான் வந்திருக்கிறா என்று கூறியவன் பிலோமினாவை அழைத்துக் கொண்டு விறாந்தையில் கிடந்த கதிரையில் உட்காரச் சொன்னான்! அவனது கைகளில் தோன்றிய நடுக்கம்...வெளியே தெரிந்து விடுமோ என்று அவன் அஞ்சிய மாதிரித் தெரிந்தது! தான் எவ்வளவு கோழையாகிப் போனேன் என்று அவனுக்கே வெட்கமாக இருந்தது! பெரியவரிடம் இவள் என்னோடு ஒரே பாடசாலையில் படித்தவள் என்றோ....எனக்கு மிகவும் நெருக்கமானவள் என்றோ அறிமுகப் படுத்தியிருக்கலாமே என்று மனதுக்குள் புழுங்கிக் கொண்டான்! ஒரு ராஜதந்திரப் பார்வை ஒன்றை அவள் மீது வீசிய படியே பெரியவர் அப்பால் நகர்ந்து போனார்! பெரியவர் போன பின் அவளது கரங்களை இறுகப் பற்றிய படியே வெகு நேரம் நின்று கொண்டிருந்தவனை....எப்படி இருக்கின்றீர்கள் என்ற அவளது குரல் இவ்வுலகத்துக்கு அவனை திரும்பவும் கொண்டு வந்தது! ஓம்...ஓம்...சுகத்துக்கு ஒரு பிரச்சனையும் இல்லை! நான் உங்களை மறந்து போகேல்லை! ஆனாலும் வெளி நாடு சென்றதும் எதிர்பாராத எவ்வளவோ பிரச்சனைகள், படிப்பு...வேலை என்று சிந்திக்கவே நேரம் கிடைக்கேல்ல! தமிழனுக்கே உரித்தான தனித்துவமான பொறுப்புக்கள், எதையுமே நனைச்சுச் சுமக்க வைக்கும் எமது சமுதாய அமைப்பு எல்லாமே சேர்ந்து எனது வாழ்வைத் தின்று விட்டன! எல்லாம் முடிந்து கண்ணாடியைப் பார்த்த போது....காதோரத்தில் நரை முடி அரும்பிப் போயிருந்தது! அவன் சொல்லி முடிக்க, அவளும் சிரித்த படியே தனது புத்தம் புதிய நரை முடிகளைத் தடவிக் கொண்ட்டிருந்தாள்! இதையெல்லாம் பற்றி நீங்கள் கவலைப் படவே வேண்டாம்! எழுதிச் செல்லும் விதியின் கை, யாருக்காகவும் எழுதுவதை நிறுத்துவதில்லை! எப்படி உங்கள் குடும்பம் என்று அவள் விசாரித்த போது...அவனது மௌனமே அவளுக்கான பதிலாக அமைந்தது! அதன் பின்னர் அவளும் அந்தக் கேள்வியை மீண்டும் கேட்கவேயில்லை! வானத்துச் சந்திரனைப் போலவே.....நீங்கள் என்னிடமிருந்து வெகு தூரம் போய் விட்டீர்கள்! நீங்கள் அண்மையில் இருந்திருந்தாலும் இந்த உலகம் எம்மிருவரையும் சேர்ந்து வாழ ஒரு போதும் அனுமதித்திருக்க மாட்டாது! ஏன், இன்றும் கூட அது பெரிதாக மாறி விடவில்லை! நான் இந்த வீட்டின் படலையத் தாண்டி வந்த போது...அந்தப் பெரியவரின் முகத்தில் தோன்றிய கோடுகளை, நீங்களும் பார்த்தனீங்கள் தானே? நீங்கள் வெளி நாடு போய், ஐந்து வருடங்கள் ஆனதும், எங்களுடன் படித்த பீற்றர் என்னைக் கட்டித் தரும்படி அப்பாவிடம் கேட்க, நானும் கழுத்தை நீட்டினேன்! பீற்றரும் அவனது நண்பர்களும் சேர்ந்து ஒரு வள்ளம் வாங்கி வைத்திருந்தார்கள்! பிடிக்கும் மீன்களை எல்லோருமே பங்கிட்டுக் கொள்வார்கள்! ஒரு வருடத்துக்கு முன்பு வரை எல்லாமே நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது! ஒரு நாள் இந்திய இழுவைப்படகுகள் இவர்கள் போட்டிருந்த வலைகளை அப்படியே சேதப் படுத்தி விட்டுப் போய் விட்டன! இவர்களது வலைகள் மட்டுமல்ல, இன்னும் பலரது வலைகளுக்கும் அதே கதி தான்! இப்போதெல்லாம் இந்தியப் படகுகள் கரைக்கு அருகேயே வருகின்றன! நீங்கள் வந்து பார்த்தால் அவற்றின் எஞ்சின் சத்தத்தைக் கூடக் கரையிலிருந்தே நீங்கள் கேட்கலாம்! சந்திரன் நீண்ட நேரம் யோசித்து விட்டு....என்னால் ஓரளவுக்கு உதவ முடியும்! ஆனால் இதை நீங்கள் நிச்சயம் மறுக்கக் கூடாது என்றான்! இதைக் கேட்டுத் திடுக்கிட்ட பிலோமினா, சந்திரன் நீங்கள் எந்தப் பிராயச்சித்தமும் செய்ய வேண்டிய அவசியமில்லை! உங்கள் மீது எந்தத் தவறுகளும் இல்லையே என்று கூறினாள்! இல்லை, எனது ஆத்ம திருப்திக்காக என்னால் முடிந்த ஒரு உதவியை உனக்காகச் செய்ய என்னை அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தவே, அவளும் ஒரு நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டாள்! மறு நாள் வங்கிக்குச் சென்று பிலோமினா பெயரிலும், அவளது குழந்தையின் பெயரிலும், அவனது பெயரிலும் ஒரு வங்கிக்கணக்கு ஒன்றைத் திறந்து வலைகளுக்குத் தேவையான பணத்துடன் மேலதிகமாகக் கொஞ்சப் பணத்தை மேலதிகமாகவும் போட்டு, மாதம் ....மாதம் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை அந்தக் கணக்குக்குத் திரும்பக் கட்டுமாறு கூறியவன்...அந்தக் கடன் கட்டி முடியும் வரை...அந்த வங்கிப் புத்தகம் தன்னிடமேயிருக்கும் என்றும் கூறிய படியே, அந்தக் குழந்தையின் தலையை வருடிய படியே விடை பெற்றான்! சில நாட்களின் பின்னர்..அவனது வீட்டில் அவன் விடிகாலையில் நித்திரையால் கண் விழிக்கும் போது, அவனது மனைவி 'என்னப்பா...ராத்திரி முழுக்கப் பிலோ...பிலோ எண்டு பினாத்திக் கொண்டிருந்தீங்கள், தலைகணி விலகிப் போச்சோ என்று கேட்கவே, ம்ம்...தலையே விலகிப் போச்சுது என்ற படி....அன்றைய நாளுக்கான கடமைகளில் மூழ்கத் தொடங்கினான்! அடுத்த வருசம் இந்தப் பாஸ் புத்தகத்தை எப்படியாவது பிலோமினாவிடம் சேர்த்து விட வேண்டும்! இனிமேல் அவன் ஊருக்குப் போக மாட்டான்! முற்றும்....!
  2. முதல்ல அந்த பெண்ணுக்கு ஒழுங்கா ஒரு காற் சடடையை வேண்டி கொடுங்கோ .கிழிஞ்ச உடுப்பு போட்டிருக்கு. பிறகு பெண்ணை பார்க்கலாம் 😀
  3. கொக்குவில் பல்தொழில்நுட்ப்பக்கல்லுரிக்கு. எதிர் பக்கத்தில் 150-200 மீற்றர். தள்ளி பிலாவில் தண்ணீர் குடிதது விட்டு வீட்டைபோகும்போது ,வீட்டில் மணம் தெரியாமால் இருப்பதாற்க்காக. வழியிலுள்ள பூவரசமிலையை நன்றாக சப்பி துப்பியதை எழுத மறந்து போனார். எனவே ஈழப்பிரியனுக்காக நான் பதிந்துள்ளேன். மற்றதுயென்ன? நண்பனுக்காக கடிதம் கொடுக்க மாதக்கணக்கில் சந்தர்ப்பம் கடைக்காமால் , நண்பனே சந்தேகம் கொண்டு ..அட ..அட..காயை இவன மடக்கப் பார்க்கிறனே என்று நல்ல நட்பை இழந்திருப்பார்...😎 கிடைக்காமால்
  4. கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad......! கண்ணன் வருகின்ற நேரம் - Sivasri Skandaprasad கண்ணன் வருகின்ற நேரம் கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம் தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக் கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணையாதென தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்! (கண்ணன்) சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல் தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ் சொல்லிச் சொல்லி இசைபாடும்! (கண்ணன்) கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று கண்டதும் வண்டொன்றும் வர்லை இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள் கண்ணன் அன்றி வேறு இல்லேன்! (கண்ணன்) தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன செளக்கியமோ என்று கேட்கும் - அட மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின் முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே மெத்த மெத்தப் பேசி நேர்வோம்! (கண்ணன்)
  5. கோதாரி விழ கந்தையருக்கு வெறியிலை எதை கடிச்சு துப்பவேணுமெண்ட விவஸ்தையே இல்லாமல் போச்சு...😂 கந்தையருக்கு பூவரசம் இலை😎 குமாரசாமிக்கு நொச்சி இலை கட்டடிச்சு களவாய் கள்ளடிக்கிற இடத்திலை சுத்திவர நொச்சிமர காடு.🤩
  6. உன் மனைவியை நீ கொலை செய்ய ஜட்ஜ் தான் காரணமா?எப்படி? டைவர்ஸ் கேட்டேன்.2 பேருக்குள்ள எதும் பிரச்சனை எண்டால் பேசி தீர்த்திடு என்றார்.
  7. முருகா முருகா என்று உருகும் நெஞ்சம் கண்டு மயிலேறி வருவாயே வடிவேலனே பன்னிரு விழிகளால் பரிவுடன் காத்திடும் உன்னிரு கரங்களால் புவனமும் வாழ்ந்திடும் வேலிருக்க வினையேது எனக்கய்யனே நீயிருக்கும் தமிழ் கொண்டு உனைப் பாடுவேன் காலனும் கலங்குவான் வேலனை பார்க்கவே பக்தியின் முகம் காட்டி அருள்வாய் அய்யா தேவியர் இருவரை மார்பிலே தாங்கியே சக்தியின் வேல் கொண்டு காப்பாய் அப்பா அன்பரின் வாழ்விலே அருள்தந்த ஜோதியே என்னிடம் போதிலே என் முன் தோன்றியே கருணையைத் தந்து காத்திடும் தெய்வம் உனையன்றி விழியும் பார்த்ததில்லை கவிதையாய் நின்று கலந்திடும் உந்தன் தமிழினை நானும் வணங்கிடுவேன் கனலிலே வந்தவன் கதிர் முகம் கொண்டவன் கார்த்திகை பெண்ணோடு உறவானவன் சிவன் மகன் குகன் அவன் சிவனடி தொழுபவன் சிறகை விரித்தாடும் மயிலோன் அவன் சூரனை கொன்றொரு சுடர்க்கொடி கொண்டவன் சூழ்ந்திடும் தீவினை தீர்த்திடும் மாயன் உமையவள் தந்த வேலுடன் நின்று அடியவர் வணங்கிடும் வடிவிலே மழையென அருளைப் பொழிந்திடும் உள்ளம் முருகனே உந்தன் திருவருளே மருதமலை முருகனுக்கு நாங்க பாலாலே காவடிகள் ஏந்தி வந்தோம் வள்ளி வேலா உமை பாலா துள்ளி வாராய் துன்பம் தீராய் என சொல்லி உந்தன் திருவடியைக் காண வந்தோம் பால் காவடி பன்னீர் காவடி புஷ்பக் காவடி புள்ளி மயில் வேலனுக்கு சந்தனக் காவடி நாங்க பாலாலே காவடிகள் ஏந்தி வந்தோம் நீறோடும் திரு ஓடோடும் அன்று ஆண்டியென பழனியில் நின்றாயே வேலோடும் புள்ளி மயிலோடும் வந்து வள்ளியினைக் கள்ள மணம் புரிந்தாயே நிறைவான அருள் செய்யும் சிவகாமி குமரா நினைப்போரின் மனமாடும் சிவகாமி மைந்தா குலம் காத்து நலம் சேர்க்கும் கந்த வேலே என்றும் குறையாத அருள் செய்யும் உந்தன் வேலே ஞானமும் நீ திரு பழமும் நீ என சொன்னவர்க்கு சொந்தமென ஆவாயே தேரோடு நீ வரும் போது அந்த தேவர்களும் மூவர்களும் துணை சேரும் குமரா உன் திருநாமம் தினம் பாட வேண்டும் குன்றுதோர் ஆண்டியாய் புவியாள வேண்டும் உருகாதா மனம் யாவும் உனைக் காணும் வேளை உள்ளத்தில் விளையாட வடிவேலா வாராய்
  8. 1960களின் கடைசியில் யாழ் இந்துவில் இருந்து வெளியே தலைகாட்ட தொடங்கிய நேரம். முதலாவது பாடம் முடிந்ததும் ஆசிரியர் வெளியேற ஓரிரு நண்பர்களும் நானும் அவர் பின்னாலேயே வெளியேறிவிடுவோம். ஆரம்பத்தில் ஒரு பாடம் இரண்டு பாடமாக தொடங்கி நாளடைவில் அரைநாள் முழுநாளாக மாறிவிட்டது. பாடசாலைக்கு 2 வருடமாக வாகனத்திலேயே வந்து போனேன்.அப்போது மாதம் 10 ரூபா மட்டுமே.வீட்டிலிருந்து வாகனம் வந்துபோகும் பாதை மாத்திரமே தெரியும்.வேறு பாதை தெரியாது. ஒருநாள் படம் பார்க்க போகலாமா என்று நண்பர் கேட்டார்.அவர் மனோகரா திரையரங்குக்கு அருகாமையில் வசிப்பராகையால் யாழில் கூடுதலான இடங்கள் தெரியும். சரி நண்பன் தான் கேக்கிறானே ஆனால் ரிக்கற் எவ்வளவு அதுக்கு என்ன செய்வது என்று யோசிக்க உங்களிடம் காசில்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு தாங்கோ என்றான்.நானும் மற்ற நண்பனும் கோவில் மாடு போல தலையாட்டினோம். ஒரு நண்பனின் தலமையில் பின் தொடர்கிறோம்.பெருந் தெருக்களுக்கு போகாமல் சிறிய ஒழுங்கைகள் வழியாக 10.30 க்குத் தான் படம் தொடங்கும் 10.25 க்கு போனால் சரி என்றான்.நெஞ்சு திக்குதிக்கென்று இருந்தாலும் படம் பார்க்க போகிறோமே என்று சந்தோசமும் ஏதோ சாதனையுமாக இருந்தது. நாங்களும் உள்ளுக்கு போக முதலாவது மணியும் அடிக்கிறது.படம் தொடங்கிய பின் தான் ஒரு ஆங்கிலப் படத்துக்கு வந்திருக்கிறோமே என்று.முதன்முதலாக களவாக பார்த்த படம் ஜேமஸ் பாண்ட் நடித்த கோல் பிங்கர்(Gold Finger) படம் முடிந்து பிற்பகல் முதல்பாடம் இடாப்பு கூப்பிட முதல் போக வேண்டுமே என்று ஓட்டமும் நடையுமாக போய் சேர்ந்துவிட்டோம். அன்று வீட்டுக்குப் போனால் 65 சதம் கொடுக்க வேண்டுமே எப்படி கொடுப்பது?இரவுவரை ஒரு வழியும் தெரியவில்லை. காலையில் குளித்து சாமி கும்பிடும் போது தான் ஒவ்வொரு சாமிப்படத்தின் முன்பும் சில்லரை காசுகள்.ஆகா இதைவிட்டால் வேறு வழியே கிடையாது.பொறுக்கி எடுத்து காற்சட்டை பொக்கற்றுக்குள் போட்டு கிலிங்கி சத்தம் கேக்காமல் ஒரு நுhலாலும் கட்டி கடன் கொடுத்தாயிற்று. இது தான் பள்ளியிலும் வீட்டிலும் தொடங்கிய முதல் களவு.முதல் தவறு செய்வது தான் மிகவும் கஸ்டம்.அப்புறம் அதுவே பழக்கமாயிடும். பின்னர் வின்சர் ராஜா திரையரங்குகளில் 10.30 படம்.காசில்லை அல்லது புதுப்படம் வரவில்லை என்றால் எங்காவது சும்மா சுற்றுவது. ஒருநாள் கஸ்தூரியார் வீதி வழியாக வின்சர் திரையரங்கு நோக்கி போகும் போது நிறைய நேரமிருக்கு என்று அதற்கு முதல் சந்தியில் இடதுபக்கமாக திரும்பி போனால் சிறிய வாசிகசாலை பெயர் அண்ணா அறிவகம். வாசிகசாலை சிறிதாக இருந்தாலும் நிறைய புத்தகங்கள் குறைந்த சனம்.புத்தகங்களுடன் இருந்தில் நேரம் போனதே தெரியவில்லை.படத்துக்கும் நேரம் போய்விட்டது. இதுக்குப் பின் படம் இல்லாவிட்டால் அண்ணா அறிவகம் என்றாகிவிட்டது.நாளாந்தம் போகப் போக படத்துக்கு போகாவிட்டாலும் வாசிகசாலைக்கு போய்வந்தோம். இதுவரை யாழ் பொதுசன நுhலகத்திற்குப் போனதில்லை. ஆனாலும் அண்ணா அறிவகம் மாதிரி ஒரு வாசிகசாலையை இன்னமும் காணவில்லை.அனேகமாக சுவியருக்கு இந்த வாசிகசாலையும் இடங்களும் நன்கு தெரிந்திருக்கலாம்.
  9. வணக்கம் புங்கையர்! கதையும் எழுத்து நடையும் மிக பிரமாதம்.👍🏽 யாழ் களத்துக்கு கொடுத்த ஒரு கொடுப்பினை புங்கையரும் சுவியரும் தான். இவர்கள் இரண்டு பேரும் கதை எழுதினால் வாசிச்சுக்கொண்டே இருக்கலாம். ஊரோடு சேர்ந்து பயணம் செய்யலாம். கோப தாபங்கள் வராது. மனதுக்கு இதமாக இருக்கும். இவர்கள் இரண்டு பேரையும் சென்னைக்கு அனுப்பி தொலைக்காட்சி சீரியல்களுக்கு கதை வசனம் எழுத சொல்ல வேணும்.
  10. மலரும் நினைவுகளை மீள மலர வைத்து எங்களோடு பகிர்ந்துள்ளீர்கள். மழையாக குடையாக கண்ணீராக சிரிப்பாக கடந்து செல்லும் ஞாபகங்கள். அண்ணா அறிவாலயம் பற்றி அறியத் தந்தமைக்கு பாராட்டுகள் ஈழப்பிரியன். ஞாபகங்களை பகிர்தல் கூட உளவள ஆற்றுகை தான்.
  11. என்ன கந்தையர் எல்லாவற்றையும் அவுத்து போட்டு ஆடிலாமோ?வெட்கமாயிருக்கு. பெரியவர் சொல்லுறது 1)புகை 2)தண்ணி இதை எல்லாம் எழுத ஊரில ஒதுக்கி வைத்த மாதிரி யாழிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்களோ என்று ஒரு பயம். என்ன துல்பன் நீங்களும் சுற்றிசுற்றி சுப்பரின் கொல்லைக்குள் தான் நிற்கிறீர்கள். தம்பி எவ்வடம்? எந்த பள்ளி?
  12. ஈழப்பிரியன் உங்கள் இளமைகால நினைவுகள் அருமை. சிறப்பாக அதை எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள். நீராவியடி அதை சுற்றி வர இருக்கும் இடங்கள் யாழ் இந்துக்கல்லூரியின் சுற்றாடல் எனது பாடசாலை நினைவுகளையும் மீட்டிப்பார்க்க வைத்துவிட்டது. தமிழ்சிறியின் அனுபவம் எமக்கும் உண்டு என்றாலும் அவரை போல போகும் பாதையை மாற்ற வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படவில்லை. 😂
  13. எத்தனையோ சந்திப்புகள் பயணங்கள் பார்வைகள் தொடுகைகள் நினைவுகள் என்றுமே சுகமானவை முடிந்தளவு பிராயச்சித்தம் முடியாதது பல நெஞ்சுள் முள்ளாய். ஏதோ நாமே கடந்து வந்த பாதை போன்று?? நன்றி அண்ணா
  14. பூங்கொடியே பூங்கொடியே பூ இருந்தால் தருவாயோ......! 💕
  15. கையில் வைத்துக் கொண்டு தரமாட்டேன் தரமாட்டேன் என்று வேடிக்கை காட்டினால் விரக்தி வேதனையா வரும்??? வாழ்க மௌனம்......
  16. துரோகத்தின் நாட்காட்டி : நாள் 16, கார்த்திகை 2019 இந்த ஜனாதிபதித் தேர்தலில் இனக்கொலையாளி கோத்தாபய ராஜபக்ஷவுக்காக கிழக்கில் களம் இறங்கிய கருணா பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழுக்கள் கடந்த சனிக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கில் தமிழர்கள் பெருமளவில் கல்ந்துகொண்டு வாக்களித்ததுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. கருணா மற்றும் பிள்ளையான் துணைராணுவக் கொலைக்குழு ஆயுததாரிகளால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இனக்கொலையாளியுமான கோத்தாபயவுக்கு ஆதரவாக கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த பிரச்சாரத்தை நிராகரித்துள்ள மக்கள் தமதினத்தினை அழித்த ஒரு கொலையாளி மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லையென்பதை இத்தேர்தல்களில் அவர்கள் வாக்களித்த முறை காட்டுகிறதென்று தெரிவிக்கப்படுகிறது. இன்னொரு சிங்கள இனவாதியான சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்துள்ள தமிழர்கள், ஒரு இனக்கொலையாளியுடன் ஒப்பிடும்பொழுது சஜித்திற்கு வாக்களிக்கலாம் என்று கூறியிருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் ஆணையாளர் மகிந்த தேஷப்பிரியவின் கருத்துப்படி அண்மைய காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் வன்முறைகள் குறைவாகக் காணப்பட்ட தேர்தல் இதுவென்று குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், போர்க்காலத்தில் புத்தளம் மாவட்டத்தில் வசித்து வந்த முஸ்லீம்களை மன்னார் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களுக்கு அழைத்துவரும்போது கோத்தபாய ஆதரவாளர்களால் தாக்கப்பட்டுள்ளதாக முஸ்லீம்கள் பொலீஸில் முறையிட்டிருக்கின்றனர். கிழக்கிலும், வடமேற்கிலும் சிங்கள இனவாதிகளும், கருணா - பிள்ளையான் துணைராணுவக் கொலைக் குழுக்களும் முஸ்லீம்களுக்கெதிரான இன்வாதத்தினைக் காகிவந்ததாகவும், வெளிப்படையாகவே கோத்தபாயவுக்கு வாக்களிக்கவேண்டும் என்று தமிழர்களை இக்கொலைக் குழுக்கள் கிழக்கில் வற்புறுத்திவந்ததாகவும் கூறப்படுகிறது. அனைத்து எதிரணியினையும் ஒன்றிணைத்து பொதுவான வேட்பாளரை தெரிவுசெய்யும் முயற்சி இறுதியில் கைகூடாமல்ப்போனதென்பது குறிப்பிடத் தக்கது. தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் அன்றாட பிரச்சினைகள் குறித்து தெளிவான உத்தரவாதம் ஒன்றினை வழங்கும்வரை எந்தவொரு வேட்பாளருக்கும் தமது ஆதரவினை தெரிவிப்பதில்லையென்கிற முடிவினால் பொதுவான எதிரணியிலிருந்து தமிழரசுக்கட்சி விலகிக்கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. அதேவேளை தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி ஆதரிக்கும் முடிவினையும் தமிழ்க் கட்சிகளால் எடுக்கமுடியவில்லை. இத்தேர்தலில் போர்க்குற்றவாளிகளும் , இனக்கொலையாளிகளுமான ராஜபக்ஷ சகோதரர்களின் ஊரான அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே அதிகப்படியான வாக்கு வீதம் கணக்கிடப்பட்டிருக்கிறதென்பதும் குறிப்பிடத் தக்கது.
  17. இதய அன்பை அருளே அழகே ஆனந்த அன்னையே நீ எந்தன் தாயம்மா இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2) அருளே அழகே ஆனந்த அன்னையே நீ எந்தன் தாயம்மா இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2) 1. நிலவில்லா வானமும் நீரில்லா பூமியும் எல்லாம் வீண் தானே அழகில்லா கலைகளும் அருளில்லா நிலைகளும் எல்லாம் வீண் தானே அருளிலே நிறைந்த என் அன்னையே உன்னிலே நான் பெற்றேன் எல்லாமே - (2) அருளே அழகே ஆனந்த அன்னையே நீ எந்தன் தாயம்மா இருளே நிறைந்த குறைகள் மலிந்த நான் உந்தன் சேய்யம்மா-(2) 2. சுடர் இல்லா நாட்களும் சுவையில்லாத பாக்களும் எல்லாம் வீண் தானே பொருள் இல்லா வார்த்தையும் புகழ் இல்லா வாழ்க்கையும் எல்லாம் வீண் தானே அன்னையே கன்னியே உன் திருக் கருணையில் ஒளிர்ந்திடும் என் வாழ்வே
  18. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எல்லோருக்கும் சொந்தம் நபி நாயகம் இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார்-- நபி இருளில் நிலவாக பிறந்தார் இந்த இகத்தொரின் மனக்கதவை திறந்தார்... இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார் இறைதூதர் தாமென்று மொழிந்தார் நபி இங்கு எழியோரின் துணையாக இருந்தார் நபி இறைதூதர் தாமென்று மொழிந்தார் நபி இங்கு எழியோரின் துணையாக இருந்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார் இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி எங்கும் இன்பங்கள் பொங்கிடவே உழைத்தார் நபி இன பேதம் குலபேதம் மறுத்தார் நபி எங்கும் இன்பங்கள் பொங்கிடவே உழைத்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி பண்பு கெடுத்தோரைபலத்தோடு எதிர்த்தார் நபி பணத்தாசை பிடித்தோரை பழித்தார் நபி பண்பு கெடுத்தோரைபலத்தோடு எதிர்த்தார் நபி பழிவாங்கும் மனப்போக்கை வெறுத்தார் நபி பழிவாங்கும் மனப்போக்கை வெறுத்தார் நபி பாவம் செய்தோரை எதிர்த்துநின்று ஜொலித்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் இருளில் நிலவாக பிறந்தார் இருள் சூழ்ந்த உலகத்தை பார்த்தார் நபி இதயம் பொறுக்காமல் வழி காண நினைத்தார் நபி இருள் சூழ்ந்த உலகத்தை பார்த்தார் நபி இதயம் பொறுக்காமல் வழி காண நினைத்தார் நபி இறைவா நீ துணை என்று உழைத்தார் நபி இறைவா நீ துணை என்று உழைத்தார் நபி இன்ப இசுலாத்தை இகத்தொற்க்கு அழித்தார் நபி இன்ப இசுலாத்தை இகத்தொற்க்கு அழித்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார்---நபி இருளில் நிலவாக பிறந்தார் அதிகார மனத்திமிரை ஒழித்தார் நபி பெரும் சதிகாரர் முகத்திரையை கிழித்தார் நபி சான்றோர்கள் அறநோக்கை வளத்தார் நபி ஒரு சரியான சரித்திரத்தை படைத்தார் நபி மக்காவின் பொன் மண்ணில் மலர்ந்தார் நபி மக்கள் மத்தியிலே ஒன்றாக வளர்ந்தார் நபி மதினாவில் புகழோடு மறைந்தார் நபி மதினாவில் புகழோடு மறைந்தார் நபி மனித இதயத்துள் எழிதாக நிறைந்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் நபி இருளில் நிலவாக பிறந்தார் இந்த இகத்தொரின் மனக் கதவை திறந்தார் இருளில் நிலவாக பிறந்தார்.
  19. சிறப்பான பாடல் வரிகள், தொடர்ந்து செல்லுங்கள் !
  20. காதுகளும் கதவுகளுக்குமான விமர்சனங்கள் தந்து என் எழுத்துக்குப் பலம் சேர்த்த அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும். இது ஒரு உளவளம் சார்ந்த கதை, குறிப்பாக இப்பேரிடர் காலத்தின் பின்னர், ஒருவருக்கு ஏற்பட்ட சமூகம் சார்ந்த பயத்தின் அடிப்படையில், மக்களிடமிருந்து தள்ளியிருப்பதில் மகிழ்வடையும் மாந்தர்கள் பற்றியது. இவர்களுக்கு ஆற்றுப்படுத்துகை போன்ற ஆலோசனைகள் அவசியமாகின்றது.
  21. பாடல் வரிகளும் காட்சியமைப்பும் இசையும் குரலும் அருமையாக உள்ளன. பாராட்டுக்கள் கோபி.
  22. ஆகா அருமையான பாடலுக்கு நல்லதொரு குரல் பின்னனி இசையுடன் சுண்டி இழுக்கின்றது. பாராட்டுக்கள் உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும்
  23. பூனைகளின் புளுகம் .........! 😂
  24. ஆயிரம் பெண்மை மலரட்டுமே ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே .......! 👍
  25. இந்த வீடியோவில் வரும் பெண் முன்னால் நின்று ஆடியபோதும் எப்படி நீங்கள் பார்க்காமல் தவிர்த்தீர்களோ அதுபோல் உங்கள் வாழ்க்கையில் குறுக்கால வரும் பெண்களையும் கண்டுக்காமல் தவிருங்கள், பிரச்சினைகளே வராது......! 😂
  26. நியாயினி பெண்ணும் இல்லை ஆணும் இல்லை.ஓடிப்போயிடுங்க...🙊
  27. எகிறி குதித்தேன் வானம் இடித்தது .. பாதங்கள் இருந்தும் பறவையானது .. விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது .. புருவங்கள் இறங்கி மீசை ஆனது.. அலே அலே அலே அலே அலே அலே அலே அலே ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.