Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. putthan

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    14676
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    87997
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    33600
    Posts
  4. Sasi_varnam

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    2167
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/15/22 in Posts

  1. முள்ளி வலி முள்ளி வாய்க்கால் - இனவாதம் ஆடிய வெறியாட்டம் மனிதம் மடிந்துபோனது. சிறிய வாய்க்கால் செந்நிறமானது முன்தோன்றிய மூத்த குடி -பெயரளவில்மட்டுமே. இலங்கையின் வடதிசையும் பாரதத்தின் தென்திசையும் கலங்கி நின்றது, அடிவருடிகளைத்தவிர. வலி தமிழனுக்கு மட்டுமே தரணிக்கு இல்லை. பல பத்தாண்டுகள் அழுது கிடந்தோம் முள்ளி வாய்க்கால் நாம் கடைசியாய் அழுதது அழுவதுக்கு எம்மிடம் கண்ணீரும் இல்லை வலி மட்டும் நெஞ்சில் உயிருள்ளவரையில் பிஞ்சுக்குழந்தைக்கும் நெஞ்சினில் குண்டு கூடி இருந்தவரே குழி பறித்தனர்- கொலைக்கும்பலுக்கு ஆணை கொடுத்தனர். மீண்டும் ஒரு உணர்வு உருவாக்கா வண்ணம் தாயக கவிஞனையும் காணாமல் செய்தனர் ஆடு நனைந்ததுக்கு ஓநாய் அழுதது போல் துரோகத்தின் வழி வந்தோர் இன்றும் அழுதபடி போலிக் கண்ணீரால் பொறி வைக்கிறார்கள். புலம் பெயர் பலத்தை உடைத்திட வேண்டி போலியாய் அழும் எட்டப்பர் கூட்டம் பாடலைக்கேட்டே பதறி அழுவார்கள். கொடியை ஏந்தி, கொள்கையை விற்பவர்! நோக்கம் ஒன்றே - ஒற்றுமையை குலைப்பது விழித்துக்கொள் தமிழா! ஒற்றுமை மட்டுமே துரோகத்தை துரத்தும் குனிந்த தலையை மீண்டும் நிமிர்த்து சாவு நமக்கு புதியது அல்ல தளத்திலும் புலத்திலும் ஒற்றுமை வேண்டும் எம்மண்ணை நாமே ஆழவும் வேண்டும் இந்தத் தலைமுறை போனதன் பின்பு விடியலின் தூரமும் தூரமாகும்… - காவலூரான்.
  2. புல்வெளியில் தூங்கும் நிழல்கள்! நீண்ட பயணத்தின் இடையிடையே பாலங்களைக் கடப்பதுபோல, என் கடந்தகால நினைவுகளை மீட்டபடி என்னைக் கடந்து செல்கின்றன. ஒரு நிழலில் இருந்து இன்னொரு நிழலுக்கு, மாறிமாறி நான் பயணப்பட்டேன் . மகிழ்ந்து தூங்கும் மரங்களின் கீழ் கருமையின் ஒளியால் சூழப்பட்ட நிழல்கள். ஆளுறக்கம் கொள்கின்றன. பயங்கர சூறாவளி வீசுகிறது மரங்கள் வேருடன் குடைசாய்ந்து நிழல்களுடன் சல்லாபித்தபடி, மண்ணில் புரண்டன. என் நினைவுகள் ஒரு நிழல் வெறுமையின் பாத்திரம் தூக்கி வீசப்பட்டது. -தியா-
  3. ஆர்பாட்டம் கப்புடு ....கா ....கா ......! 😂
  4. நீண்ட நாட்களாக சன்பிரான்ஸ்சிஸ்கோவில் இருந்து லாஸ் அங்கிலஸ் கடற்கரை ஓரமாக உள்ள ஒற்றையடிப் பாதையில் (அனேகமான இடங்கள்)போக வேண்டுமென்று ஒரு கனவு இருந்தது. ஒரேஒரு முறை ஒரு 50 மைல் தூரம்வரை குடும்பமாக ஒரு நிகழ்வுக்கு போயிருந்தோம்.அப்போதே இந்த பாதையின் மகத்துவம் பற்றி சொன்னார்கள்.அப்போதே எல்லாவற்றையும் கேட்ககேட்க கடற்கரையையும் பார்க்க ஒருமுறை இந்த பாதையில் போனால் என்ன என்று யோசித்தேன். அதன் பின் 2012-14 (சரியாக ஆண்டு நினைவில் இல்லை)ஆண்டளவில் அவுசிலிருந்து அண்ணனின் மகன் நண்பியுடன் வந்திருந்தான்.அவனும் இந்த பாதையை கேள்விப்பட்டோ ஏதோ இதே பாதையில் கொன்வேட்டர் கார் வாடகைக்கு எடுத்து அதுவும் கோடை காலத்தில் மேலே துறந்துவிட்டுட்டு அவ்வளவு தூரமும் இருவரும் பயணம் செய்தனர்.பயணம் முடிந்து அடுத்தநாள் தூக்கத்தால் எழும்பினால் முகம் முழுக்க தோலுரிந்து இருந்தது வேறுகதை. ஏற்கனவே எனக்குள் இருந்த ஆசை இவனும் போன அனுபவங்களை சொல்லசொல்ல இன்னும் வேகம் கூடியது.ஆனாலும் நடக்குமா இல்லையா பத்தோடு பதினொன்றாக இதுவும் போயிடுமா என்று எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில்த் தான் இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதுவும் முழு தூரமும் நானே கார் ஓடிக் கொண்டு போவேன் என்று நினைத்திருக்கவில்லை. ஒருநாள் காலை 9 மணிபோல புறப்பட்டோம்.ஆங்காங்கே தங்கிதங்கி இடங்கள் பார்த்து போவதற்காக மகளும் மருமகனும் முக்கியமான இடங்கள் என்று 8 இடங்கள் வரை படத்தில் அடையாளமிட்டிருந்தனர்.இந்த பாதையில் பல இடங்களில் கைபேசி வேலை செய்யாது.எனவே வரைபடத்தையும் முன்னரே சேமித்துக் கொண்டேன். வழமை போன்று போகும் பாதையை தேடினால் நெடுஞ்சாலையையே காட்டும்.நெடுஞ்சாலை ஐந்தரை மணிநேரமும் 101 ஆறரை மணிநேரமும் ஆகும்.ஆனால் நான் விரும்பிய பாதையில் தொடர்ந்து ஓடினால் 9 மணிநேரமாகும். இதுதான் நாங்கள் போனபாதை மிகுதி தொடரும்.
  5. பயணிக்கத் தூண்டும் படங்கள். நன்றி.
  6. தலை நகரின் பிரதான மையத்தில் அமைந்து இருந்தது அந்த அந்தோனியார் கோவில். செவ்வாய்க் கிழமைகளில் மத வேற்றுமை பாராது மக்கள் தம் வேண்டுதலுக்காக அங்கு கூடுவர். சில இளையோர் தம் சோடிகளுடனும் , வேலை தேடும் இளையவர் தமக்கு வேலை கிடைத்துவிட வேண்டும் எனும் வேண்டுதலுடனும் , இளம் பெண்கள் தங்களுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளை அமைந்துவிட வேணுமென்றும் வேளையில் இளையோர் வெளிநாட்டுப்பயணம் அமைந்து விட வேணுமெனவும் இன்னும் பல தேவைகளுக்கு நேர்த்தி வைத்து அங்கு கும்பிட வருவார்கள். அந்த வாயிலில் மெழுகு திரிக்க கடை கச்சான் கடலைக் கடை குளிர் பானக கடை என்பன கடைவிரித்து காத்திருப்பார்கள். அவர்களுக்கு அண்மையில் வறுமைப்பட்டோர் சில ர் யாசகம் செய்யவும் கூடி இருப்பார்கள். அங்கு அவர்களுக்கிடையில் வயது முதிர்ந்த , நீண்ட தா டியும் பரடடைத் தலையும் கையில் ஒரு ஊன்று கொள்ளும் , தோளில் ஒரு துணி மூடடையும் கொண்ட முருகேசனும் உட்கர்ந்திருந்தார் . அவரூ க்கு பழக்கமான சிலர் என்ன முருகேசா! நீ வேதமா ? சைவமா? எனக் கேட்ப்பார்கள். அவரும் அப்பா வேதம் அம்மா சைவம் அதனால் நான் முருகேசனானேன். என்பார் ... அப்போது அங்கு ஒரு வெண்ணிறக் காரில் ஒரு வயதான அம்மாள் , தன உதவி பெண்ணுடன் கும்பிட வந்திருந்தார். வாயிலின் அருகே இருந்த முருகேசனின் தட்டில் இருபது ரூபாய் ...வந்து விழுந்த்து ...ஏற்கனவே சில சில்லறைகளை வைத்திருந்தார் . அந்த இருபது ரூபாயை எடுத்து தனியே பாத்திரம் பண்ணி வைத்தார் . இரண்டு நாளாக உணவு சாப்பிட வில்லை . வெறும் தேநீர் மட்டும் அருந்தி பேசிக் களையை போக்கி இருந்தார். . மதிய வெயில் பசி மயக்கம் கண்ணைக் கட்டிடவே மெது வாக அருகில் இருந்த சாப்பாட்டுக்கு கடையை நோக்கி சென்றார் . இவர் தோற்றத்தை பார்த்த்தும் வாயிலில் நிற பையன் ... அப்பாலே போ என விரட்டினான் . தம்பி ..நான் சாப்பிட வந்திருக்கிறேன் என்றதும் ஒரு ஓரமான பலகை யைக் காட்டி அங்கு உட்க்கார்ந்து கொள் என்றான். பணியாளர் (வெயிட்டர் ) அருகே வரவே ..தம்பி எனக்கு ஒரு பார்சல் ..எவ்வ்ளவு என்றான். "மீன் சாப்பாட்டு பார்சல் ஐம்பது ரூபாய்" ..."மரக்கறி பார்சல் முப்பது ரூபாய் " என்றான். அருகே அமர்ந்திருந்த ஒரு இளைஞன் .. அவர் வைத்திருந்த இருபது ரூபாயைக் கண்டு ...தம் பி அவருக்கு ஒரு மீன் பார்சல் கொடு என்றான். பின் அந்த முதியவருடன் பேசத்தொடங்கினான். "ஐயா உங்களுக்கு என்ன ஆனது என் இந்த நிலமை ? என்று கேட்ட்க அவர் கண் கலங்கியது .. அவர் தன்னைப்பற்றி கூறத்தொடங்கினார் . தம்பி நான் கனடா நாட்டுக்கு சென்று ..மனைவி இருமகன்களுடன் வாழ்ந்து வந்தேன் . கஷ்ட பட்டு வேலை செய்தேன். இராப்பகலாய் கண் விழித்து இரண்டு வேலைகள்செய்து பிள்ளை களைப் படிக்க வைத்து ஆளாக்கி கலியாணம் கட்டி வைத்தேன். பின் நானும் மனைவியும் ..முதுமை காரணமாக தாய் நாட்டுக்கு வந்து வாழ ஆசைப்பட்டு . வீடடை விற்று மக்களுக்கு கொடுத்து விட்டு ,மீதிகாசுடன் ..சில வருடங்கள் நலமாக வாழ்த்து வந்தோம். எனக்கு ஓய்வூதியம் பணம் வந்தது ...அதில் சேமித்து ஒரு வீடடை வாங்கினேன். எமக்கு துணையாக ஒரு பையனை வளர்த்தோம். காலம் மிக வேகமாக ஓடியது என் மனைவிக்கு வ யிற்றில் புற்று நோய் வந்து அவதிப்பட்டு, வைத்ய சாலையும் வீடுமாக அலைந்தேன். வளர்ப்பு மகனையும் படிப்பித்து ஒரு வேலையில் யில் அமர்ந்ததும் ..ஒருகலியாணம் கட்டி வைத்தேன். அவனுக்கு இரு பெண் குழந்தைகள் . காலப்போக்கில் மனைவி இறந்து விடடாள் . வந்த மருமகள் மிகவும் கர்வம் பிடித்தவள் . என் முதுமை காரணமாய் .ஒரு கண் பார்வையை இழந்தேன். மற்றையது ஓரளவு பார்வை தெரிகிறது .. ..மனைவி இல்லாத அருமை புரிந்தது .. என்னை கவனிக்கவே மாடடாள் மருமகள். குளிக்க உடைமாற்ற எனக்கு உதவி தேவைப்பட்ட்து ...கை நடுங்க ஆரம்பித்து விட்ட்து ஆதர வின்றி ..கோவிலைக் காட்டி ..இந்த கோவிலே தஞ்சம் என் வாழ்கிறேன். என உணவை மெல்ல மெல்ல உண்டுகொண்டே சொல்லி முடித்தார். இளைஞனும் அவருக்கும் தனக்குமான உணவுக்கு காசைக் கட்டி விட்டு இருவரும் வெளியேறினார். அவர் மீண்டும் கோவிலை நோக்கி புறப்பட ...அந்த இளைஞன் .சற்று பொறுங்கோ என் சொல்லி ...அருகில் இருந் காரை எடுத்து வந்து ..இதில் ஏறுங்கோ என சொல்ல தாத்தா மறுத்தார் . வற்புறுத்தி .. எற வைத்து சில மணி நேர ஓட்ட்த்தின் பின் ...ஒரு கருணை இல்லத்தின் முன்னே நின்றது ...இறங்கி இவரையும் அழைத்து கொண்டு இவரும் முன் வாயிலில் இருந்தா காரியாலயத்தில் ..எதோ ...பேசி விட்டு திரும்ப வந்து தாத்தா இனி இது தான் உங்கள் வீடு என சொல்லி அவருக்கு தேவையான சகல வசதிகளையும் செய்து கொடுக்கும்படி பணித்தான். அங்குள்ள உதவியாளர் அவருக்கு குளித்து புத்தாடை உடுத்தி முக சவரம் தலைமுடி கத்தரித்து .. அவருக்கு ஒரு தனியான அடைக்க படட அறை ஒழுங்குபடுத்தி ...ஆதரவளித்தனர் . சில மணி நேர இடைவேளையின் பின் ...அந்த இளைஞன் மீண்டும் வந்து இவரை பார்த்தன். அவரது இருப்பிடமும் வசதியும் திருப்பி அளிக்கவே. மீண்டும் மேலிடத்தில் உள்ள காரியாலயத்தில் சென்று . இன்னும் சில வசதிகள் அவருக்கு தேவைப்படுவதாகி சொல்லி ...ஏற்பாடு செய்து வீடு திரும்ப இருளாகி விட்ட்து . தன் காரை பின்னோக்கி ரெவெர்ஸ் செய்யும் போது ,முன் முகப்பு வெளிச்சத்தில் மின்னியது "அம்மா கருணை இல்லம் :" வீடு சென்று உணவு உண்டு ... மனைவி குழந்தைகளுடன் உரையாடி விட்டு ... உறங்க சென்று தாயின் படத்தை நோக்கி கும்பிட ஒரு வெண்ணிற பூ ..உதிர்ந்தது அவன் முன்னே. "மகனே ஒரு நல்ல காரியம் செய்தாய் " எனும் மலர்ந்த புன்னகையுடன் அவர் அம்மா படத்தில் புன்னகைத்தாள். ஒரு தாயின் கருவில் உருவாகி பூமில் வாழும் மனிதன் ஒரு மரத்துக்கு இணையாகிறான். ஒரு விதை மரமாகி, கிளைபரப்பி பூத்து காய்த்து கனிந்து மீண்டும் விதையாகி மண்ணில் சருகாகி வீழ்கிறான். விதைகளுக்கு தெரிவதில்லை இலைச் சருகுகள் தான் தம்மை வளர்த்த விளை நிலங்கள் என்று.
  7. இவ்வருட 'துபை எக்ஸ்போ 2020-இளையராஜா கலந்துகொண்டு இசைக் கச்சேரி செய்யவிருக்கிறார்' என சென்ற வாரம் அறிந்தவுடன் எனக்கு இருப்பு கொள்ளவில்லை.😉 சுமார் 12 வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரகுமான் இசைக் கச்சேரியை துபையில் பார்த்த இனிய அனுபவத்தால், இம்முறை இசைஞானி கச்சேரி என்பதால் '80களில் வந்த இனிய பாடல்களை நேரில் கேட்கலாம்' என்ற எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.😎 சென்ற வாரமே 'எக்ஸ்போ-2020' தளத்திற்கு சென்று கச்சேரி நடக்கப்போகும் இடத்தை பார்வையிட்டு வந்துவிட்டேன். மிக அருமையான எற்பாடுகள்..! ஜூப்ளி பார்க் இன்று அலுவலக திட்டப்பணிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பிற்பகல் 2 மணிக்கே சென்றுவிட்டேன்.. பல நாடுகளின் காட்சிதளங்களை(Pavilions) பார்வையிட்டுவிட்டு மாலை 5 மணிக்கு இளையராஜா கச்சேரி நடைபெறப்போகும் ஜூப்ளி பார்க்கிற்கு வந்து பார்த்தால் அப்பொழுதே பலர் கூடிவிட்டனர். இரவு 9 மணிக்கு நடைபெறப்போகும் நிகழ்ச்சிக்கு மாலை 5 மணிக்கே ரசிகர்கள் கூட்டமா..? வேறு வழியின்றி அங்கே, அப்பொழுதே அமர்ந்துவிட்டேன்.. 4 மணிநேர காத்திருப்பிற்கு பின், இளையராஜா மேடையில் கலைஞர்களுடன் தோன்றினார்..! அரங்கமே இசை ஒலியாலும், கரகோசத்தாலும், திரையில் ஒளி வெள்ளத்தாலும் அதிர்ந்தது.. சும்மா சொல்லக்கூடாது.. மேடையின் இசை அமைப்பு, ஒலி சாதனங்களின் துல்லியம் மிக அற்புதம்..ஒவ்வொரு 'ட்ரம் பீட்'களும் நம் நெஞ்சை தாக்கி அதிர வைத்தன. இளமை இதோ இதோ.. ராக்கம்மா கையைத் தட்டு.. மடை திறந்து.. தண்ணித் தொட்டி தேடி வந்த.. ஆத்தா ஆத்தோரமா.. பொதுவாக எம்மனசு தங்கம்.. மேலே குறிப்பிட்ட பாடல்களுக்கு ரசிகர்கள் நடனமாடி மகிழ்ந்தனர். இளையராஜா குழுவினர் மிக அற்புதமாக பாடினர்..ஒலியால் இசையால் அக்களமே நனைந்தது.. பலநாட்டு ரசிகர்களும் ஆரவாரித்து ரசித்தனர்.. முடிவில் மேடையின் ஒலி, ஒளியமைப்பை பலரும் பாராட்டினர்.. சில பிறமொழி பாடல்களை தவிர அனைத்துமே அருமை. 3 மணிநேரம் போனதே தெரியவில்லை. இனிய இரவாக அமைந்து, இசையில் நனைந்து, அதிகாலை வீடு வந்து சேர்ந்தேன்..! படங்கள் உதவி: என்னுடைய ஐபோன் 13. 😍
  8. வன்னியன் நீங்கள் இன்னும் ஊரை நினைத்து கொண்டு இருக்கிறியள் போல......அங்குதான் ஒரு மனிசன் சாகும்வரை உழைக்க வேணும்......இங்கு ஆளை காணேல்லை என்றால் மனிசிக்கு மாதம் 100 ஈரோ கூட கிடைக்கும்.....மனிசிக்கு அந்த சந்தர்ப்பத்தை குடுக்கக் கூடாது என்று தான் நான் இன்னும் கூடவே இருக்கிறன் .......! 😢
  9. இது மூட்டைப் பூச்சிகள் பற்றியது இல்லை. ஆகவே இறுதிவரை வாசியுங்கள். 2019 ஒக்டோபர் மாதம் நானும் மகளும் கம்போடியா போயிருந்தோம். அங்கே விலை மலிவு என்பதால் பத்து நாட்களும் ஐந்து நட்சத்திர தங்குவிடுதியை முற்பதிவு செய்திருந்தாள் மகள். இரண்டு கட்டில்கள் கொண்ட பெரிய அறை அனைத்து வசதிகளுடனும் இருந்தது. முதல் நாள் மாலை வரை சுற்றிப் பார்த்துவிட்டுக் களைப்புடன் வந்து கட்டிலில் படுத்தால் ஒரு அரை மணிநேரம்தான் நின்மதியாகப் படுக்க முடிந்தது. முதுகு கால் கை எங்கும் ஒரே கடி. எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தால் கன்னத்திலும் கடிக்க மின்விளக்கைப் போட்டுவிட்டு எழும்ப, “என்ன அம்மா நித்திரை வரேல்லையா” என்று மகளும் தூக்கம் கலைந்து கேட்கிறாள். “சரியான மூட்டைக் கடி” என்கிறேன். மகள் நம்பாமல் “எனக்கு ஒன்றும் கடிக்கவில்லையே. உங்களுக்குச் சும்மா நினைப்பு” என்றுவிட்டு படுக்க, நானும் வேறு வழியின்றித் தூங்கிவிட்டேன். அடுத்தநாள் பார்த்தால் கால்களில் முதுகில் எல்லாம் தடித்தபடி இருக்க, மூட்டைப் பூச்சிகள்தான் கடித்திருக்கு என்று முடிவெடுத்து மகளுக்குக் காட்ட, “எனது கட்டிலில் ஒன்றும் கடிக்கவில்லை. இன்று நீங்கள் நான் படுத்த கட்டிலில் படுங்கள். நான் உங்கள் கட்டிலில் படுக்கிறேன்” என்று கூற, கடி வாங்கினால்தான் தெரியும் என்று மனதில் நினைத்தாலும் சிலநேரம் மகளுக்கு இளரத்தம். கடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற யோசனையும் ஓடியது. அந்தன்றும் சுற்றிப் பார்த்த களைப்புடன் வந்து கட்டில் மாறிப் படுக்கிறோம். காலையில் அலாம் அடிக்கும் மட்டும் நான் எழும்பவே இல்லை. “என்ன நல்ல நித்திரை போல” என்று மகள் கேட்க, நக்கலாகக் கேட்கிறாளோ என நினைத்து “ஓம் நல்ல நின்மதியான நித்திரை” என்றேன். இரவு முழுதும் “ஒரே மூட்டைக் கடி” என்று அவள் சொல்ல எனக்குள் மகிழ்ச்சியில் விளக்குகள் எரிகின்றன. காலையில் வரவேற்புப் பெண்ணிடம் சென்று முறையிட்டு வேறு அறை வேண்டும் என்று கேட்க, அடுத்த பத்தாவது நிமிடமே அதேபோன்ற வேறு அறை ஒன்றும் தந்துவிட்டார்கள். அதன்பின் மூட்டை கடிக்காவிட்டாலும் எங்கள் உடைகள், பயணப் பொதிகளுடன் மூட்டையும் வந்துவிடுமோ என்னும் பயம் எனக்கு இருந்துகொண்டே வந்ததில் லண்டன் திரும்பிய பிறகு எல்லா ஆடைகளையும் துவைத்துக் காயவைத்து சூட்கேசை வெயிலில் காயவைத்துப் பின்னர் உள்ளே எடுத்து வைத்தபின் தான் நின்மதி வந்தது. ஒரு மூன்று மாதம் போயிருக்கும். தூங்கிக்கொண்டு இருக்கும் போது முதுகில் மூட்டை கடிப்பது போல ஒரு உணர்வு. சிலநேரம் எனக்குத்தான் நினைப்போ என்று திரும்பிப் படுத்தபின் கடியே இல்லை. அடுத்த நாளும் அப்பிடித்தான். என்னடா கோதாரி காசு குடுத்து கம்போடியா போய் இதையும் கொண்டவந்து சேர்த்தாச்சோ என்னும் நினைப்பு எழ, சீச்சீ இருக்காது என்று மனம் சமாதானம் கொள்ள, உடன ஒருத்தருக்கும் சொல்ல வேண்டாம். பொறுத்திருந்து பார்ப்பம் என்று விட்டால்……. ஒரு வாரம் எந்தவித அசுமாத்தமும் இல்லை. அடுத்த வாரம் மீண்டும் இன்னொரு இடத்தில் கடி. கடித்த இடம் கடுப்பது போல் இருந்து மீண்டும் காலையில் மறந்துபோக, எனக்கு அந்த மூட்டைப் பூச்சி தினமும் கடித்துக் கரைச்சல் தரவில்லைத் தானே. இருந்திட்டுப் போகட்டும் என்ற எண்ணம் வந்ததும் எனக்குள் ஒருவித நின்மதி பரவ ஆரம்பிக்க, எப்ப அது கடிக்கும் என்று நான் எதிர்பார்க்கும் அளவுக்கு எனக்கு அதைப் பிடித்துப்போய் விட்டது என்றால் நீங்களே நம்ப மாட்டீர்கள். இந்தப் பெரிய உடலில் வாரம் ஒருதடவை அது இரத்தம் குடிப்பதால் என்ன கெட்டுவிட்டது என்னும் அளவுக்கு என மனம் வந்துவிட்டது. ஒரு இரண்டு மூன்று மாதானக்கள் செல்ல “உங்களுக்கு ஏதும் கடிக்கிதோ” என்று மனிசனிட்டைக் கேட்க, “உன்னை மீறி என்னட்டை எது வரப்போகுது, அதோடை ஏன்ர ரத்தம் நல்ல சுத்தம்” என்ற நக்கல் வேறு. ஒரே ஒரு மூட்டை தான் ஒட்டிக்கொண்டு வந்திட்டிது. நல்லகாலம் என்ற ஒரு ஆறுதல். இரண்டு வந்திருந்தாலே பெருகியிருக்கும். ஒண்டே ஒண்டு எண்டதாலதான் தப்பிச்சன் என மனதைத் தேற்றிய படி இருக்க, அடுத்த வாரம் கால் பகுதியில் கடி. முதுகில் கடிக்காததால் இவர்தான் இரே இடம் அலுத்துப்போய் இடம்பெயர்ந்திருக்கிறார் என்று நம்பியபடி நானும் என்பாட்டில் இருக்க, ஒரு ஆண்டு கோவிட் குழப்பங்களும் பயமும், பயமுறுத்தும் செய்திகளுமாய் இருக்க, அதுவும் மனிசனின் கட்டிலுக்கு இடம்மாறிச்சிதோ என்னவோ நானும் மூட்டை இருக்கிறதையே மறந்துபோனன். இன்னும் வரும்
  10. உ பார்வை ஒன்றே போதுமே கண்கள் பேசும் காதல் மொழிக்கு வார்த்தைகள் வெறும் சுமையே. இருநாட்கள் தொடர்ந்து பெய்த மழையால் அந்த மண்சாலை குண்டும் குழியும் சேறும் சகதியுமாக இருந்தது.இரு மருங்கிலும் வயல்கள். கதிர்கள் அலைபோல் அசைய பச்சைபசேல் என்று குளிர்ச்சியாக இருந்தது. கதிர்களைத் தழுவிவரும் காற்றில் மண்மணம் கமழ்ந்து உடலுக்கு புத்துணர்சியைத் தருகின்றது. அந்தப் பாதையில் ஒரு மனிதர் தனது வீட்டை விட்டு வெளியேறி பல நாட்களாக இலக்கின்றி நடந்து கொண்டே இருக்கின்றார்.நாளும் கிழமையும் கூட அவருக்கு மறந்து விட்டது.தான் வாழ்ந்த நகரத்தையும் தனது சொகுசான வீடு, ஆடம்பரமான கார்கள்,அன்பான மனைவி வளர்ந்துவிட்ட அழகழகான ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள் எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்தாயிற்று. மேலே அண்ணாந்து பார்க்கையில் சூரியன் மதியத்தை நெருங்கி வந்து கொண்டிருந்தது.இவ்வளவு நாளும் பசியும்,களைப்பும் தெரியவில்லை.ஆனால் இப்பொழுது வயிறு பசி பசி என்று ஓலமிடுகின்றது.பசி ஒன்றும் அவருக்கு புதிதல்ல.சிறுவயது மற்றும் இளமைப் பருவங்களில் பசியோடு பங்காளியாக இருந்தவர்தான்.கடந்த பதினைந்து இருபது வருடங்களுக்கும் மேலாக அவரது இடைவிடாத உழைப்பின் பயனாக அது அவரை விட்டு வெகுதூரம் விலகியே இருந்தது.ஆனால் இப்பொழுது அவருக்கு பசித்ததும் கூடவே சிரிப்பும் வந்தது. இப்பொழுதுதான் உடல் உபாதையும் தொடர்ந்து நன்றாகத் தோய்ந்து குளிக்கவேண்டும் என்ற எண்ணமும் வந்தது.எங்காவது வாய்க்காலோ, குளமோ தென்படுகின்றதா என்று சுற்றிவரப் பார்த்துக்கொண்டே நடக்கின்றார்.அவர் எதிர்பார்த்த படியே அங்கு ஒரு குளத்தைக் கண்டதும் ஸ்நானம் செய்வதற்காக தனது கோட்சூட் சேர்ட் பூட்ஸ் எல்லாவற்றையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு அருகில் இருந்த பற்றைக்குள் ஒதுங்கிவிட்டு வந்து குளத்தில் அலுப்புத்தீர நன்றாக முங்கி முங்கி தோய்ந்து விட்டு வெளியே வந்தார். அங்கே பார்த்தால் அவர் கரையில் கழட்டிவைத்த ஆடைகள், பொருட்கள் எதுவும் அங்கில்லை.யாரோ வீதியால் சென்றவர்கள் அவற்றை எடுத்து சென்றிருக்க வேண்டும். அவரது கைபேசி மட்டும் கீழே புல்லுக்குள் கிடந்தது. அவர்கள் அவசரத்தில் எடுக்கும்போது இது நழுவி கீழே விழுந்திருக்க வேண்டும். எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டார். இவ்வளவு நாளும் கோபத்தில் மழுங்கிக் கிடந்த மூளை இப்பொழுதுதான் தன் உணர்வடைந்திருந்தது. தான் இப்பொழுது எங்கிருக்கிறோம் என்பது கூட அவருக்குத் தெரியவில்லை.தன்னை ஒருமுறை நன்றாகப் பார்த்துக் கொண்டதும் மீண்டும் அவருக்கு சிரிப்பு வந்தது. இடுப்பில் ஒரு ஜட்டி, கழுத்தில் டாலருடன் கூடிய தடிமனான தங்கச் சங்கிலி,கையில் தங்கச் செயின் போட்ட கடிகாரம்,விரல்களில் வகைக்கொன்றாக நாலு மோதிரங்கள் இப்படி இருந்தால் யாருக்குத்தான் சிரிப்பு வராது. அப்படியே வயலுக்குள் இறங்கி வரப்புகளில் மேல் வெறுங் கால்களுடன் யாராவது தென்படுகினமா எனப் பார்த்துக் கொண்டு நடந்து போகிறார்......! பார்வை .....(1) 👁️ பார்ப்போம் இனி ......! ✍️
  11. Samayal Karan M S Viswanathan T.M. Soundararajan Samayal Karan
  12. எவர் ஏற்றுக்கொண்டாலும் இல்லாவிட்டாலும் இலங்கைத் தீவின் தலை யாழ்ப்பாணம் தான். என்றைக்கு பேரினவாதிகள் தலையிலை கைவைத்தார்களோ அன்றிலிருந்து தீவுக்குப் பிடித்தது நசல். இப்பவும் எமக்கான நியாயமான தீர்வு ஒன்றை வழங்கினால் மட்டுமே இந்தப்பிணி தீரும்.
  13. நலம் தருவாய் தாயே மீனாட்சி ........புத்தாண்டை முன்னிட்டு விதிவிலக்காக இந்த வண்ணப் பாடல் இடம் பெறுகின்றது.......! 🌹
  14. அண்ணை, உங்களோட இன்னொரு வாதத்திற்கு வருகிற நோக்கம் எனக்கு இல்லை. அப்பாவிகள் கொல்லப்படுவதால் அதனை எழுதுகிறேன். நீங்கள் கூறியபடி, அப்பாவிகள் எங்கு கொல்லப்பட்டாலும் அதுபற்றி நாம் பேச வேண்டும். ஆகவே, நான் இதுவரை சிரியாவிலோ, பாலஸ்த்தீனத்திலோ, ஈராக்கிலோ, ஆப்கானிஸ்த்தானிலோ கொல்லப்பட்ட லட்சக்கனக்கான மக்களின் அவலங்கள் தொடர்பாக குரல் கொடுக்காமைக்காக வருந்துகிறேன். இனி அந்தத் தவறைச் செய்யப்போவதில்லை. எமக்கு நடந்த இனவழிப்புப் போன்று இனி எங்கு நடந்தாலும் நாம் பேசவேண்டும். அவ்வளவுதான் நான் உங்களுக்குக் கூறவிரும்புவது. உங்களுடனோ, இன்னும் இங்கு எழுதும் இன்னும் சிலருடனோ இன்னொரு கசப்பான வாதத்திற்கு வரும் நோக்கம் எனக்கு சற்றும் இல்லை. உங்களுக்குக் காட்டமாகப் பதில் எழுதும் நோக்கம் கூட எனக்கில்லை. எனது உணர்வின் பால் உந்தப்பட்டே இதனைச் செய்கிறேன். உலக அரசியல் பற்றி நான் கவலைப்படவில்லை. வணக்கம்.
  15. இன்றைய இரவுச்செய்தி- குமாரசாமி இன்றிரவு 22.35 அளவில் கோசான் அவர்களால் தாக்கப்பட்டார். 😎 கோசான் :- புத்தகம் வாசிக்காத மனிதனும், புதிதா யோசிக்காத இனமும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை 🤣 குமாரசாமி:- வாவ்.....உவாவ்......உவாவ் இன்றைய இரவு மறக்க முடியாத இரவு 🤣
  16. இந்தமுறையில் நீங்கள் குஸ்குஸ்ஸை தயாரித்து விட்டு .......... இந்த முறையில் கறிசெய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்....அதிக நேரம் எடுக்காது....! 👍
  17. மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்? இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும். புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது. அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார நாடா மாற்றி, தமது சொத்துக்களை பெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?
  18. முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது குறித்து இங்கே வாதங்களை முன் வைப்பவர்கள் பற்றி என்னாலும் உணர முடிகிறது அதே ஆதங்கம் எனக்கும் இருப்பதால். அதேவேளை மரியுபோலுக்கு கிடைக்கும் ஆதரவை அல்லது தீர்ப்பை எமக்கும் சாதகமாக பயன்படுத்தி அடுத்த கட்டங்களுக்கு நாமும் நகர முடியும் என்றால் யார் குற்றி அரிசியானால் சரி என்பதற்கமைய ......? தொடருங்கள் ரகு...
  19. மேலே உள்ளது தான் நெடுஞ்சாலையின் பெயர்.பெயர் தான் நெடுஞ்சாலை ஆனால் ஒற்றையடிப் பாதையே.வேகமும் ஒரு சில இடங்கள் 55 மைல்கள்.கூடிய தூரம் 15-20-25 இப்படியாகவே இருந்தது.நாங்கள் விரும்பினால்க் கூட வேகமாக ஓட முடியாது. படங்கள் எடுக்கக் கூடிய இடங்கள் இருந்தன.ஆனாலும் எமது கைபேசியினால் பரந்த தேசங்களை எடுக்க முடியாது.ஆரம்பத்தில் இருந்து முடியும்வரை மிகவும் ரசிக்கக் கூடிய இடமாக இருந்தது.நின்றுநின்று போகிறபடியால் தொடர்ந்து கார் ஓட வேண்டாமென்று பிள்ளைகள் இடையில் ஒரு கொட்டேலும் போட்டிருந்தனர். பிற்பகல் 6 மணிபோல் கொட்டலை சென்றடைந்தோம்.இரவு நல்ல சாப்பாடு நல்ல தூக்கம்.நீண்ட தூரம் கார் ஓடுவதானால் நிறைய சாப்பிடுவதில்லை.காலை சாப்பாடு கொட்டேலில் மீண்டும் பகல் 9.30 போல புறப்பட்டோம்.அன்றைய தினம் அதிகம் நின்று செல்லவில்லை.ஒரேஒரு இடம் தான் பார்க்க திட்டமிட்டிருந்தோம்.வேறோன்றுமில்லை வண்ணாத்தி பூச்சிகளே. குறிப்பிட்ட ஒரு அரைமைல் சுற்றளவில் தேனீக்கள் எப்படி இருக்குமோ அதே மாதிரி வண்ணாத்தி பூச்சிகள்.மிகவும் ஆச்சரியமாக இருந்தது.படமெடுக்கலாம் என்று கைபேசியில் பார்த்தா எல்லா வண்ணாத்தி பூச்சிகளும் சிறிய தேனீக்கள் போல தெரிந்தன. அங்கிருந்கு நேராக மகளாக்கள் நின்ற இடத்துக்கு போய் சேர்ந்தோம். அடுத்த நாள் கொலிவூட் என்ற பெரிய எழுத்துக்கள் உள்ள விளம்பரத்தை பார்க்க போனோம். நான் நினைத்திருந்தது வேறு.கண்ட காட்சியோ வேறு. இதுவரை நான் நினைத்தது கொலிவூட் நடிகர் நடிகைகள் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களே அந்தப் பகுதியில் இருப்பார்கள்.உள்ளே போய் பார்க்க கட்டணம் அறவிடுவார்களோ பெரிய கட்டுப்பாடுகள் இருக்கும் என்று கனக்க எண்ணியிருந்தேன்.நான் தான் இதை ஒருதரமாவது பார்க்க வேண்டும் என்று சொல்ல பிள்ளைகள் சிரிக்கிறார்கள்.இதைப்போய் என்னத்தை பார்க்க போறீங்கள் என்று. ஒரு மலைப் பிரதேசத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.காரில் போக பல பாதைகள் இருக்கும் என எண்ணுகிறேன்.நாங்கள் போன பாதை மலையில் கொஞ்ச தூரம் போனபின் குடிமனைகள் உள்ள இடத்தால் ஒரு கார் மட்டுமே போக கூடியவாறு வீதிகள் இருந்தன.அங்குள்ள மக்கள் இதை பார்க்க வருபவர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்த றோட்டால் போக கூடாது தனியார் றோட்டு வாகனம் நிறுத்தக் கூடாது என்று பலவாறு எச்சரிக்கை பலகைகள் தொங்கவிட்டிருந்தனர். ஓரளவுக்கு மேல் எமக்கும் யோசனை.ஏதோ கிடைத்த இடத்தில் நிறுத்திவிட்டு மலையில் சிறிது தூரம் ஏறி போய் பார்த்தோம்.வழமையில் நல்ல காலநிலையாக இருந்த இடம் நாங்கள் போனகிழமை மிகவும் குளிராக இருந்தது.காலநிலை நன்றாக இருந்தால் நிறைய கூட்டம் அந்த கொலிவூட் என்ற விளம்பர பலகையிலேயே ஏறி படங்களெல்லாம் எடுப்பார்களாம். இதனிடையே நீர்வேலியானை சந்தித்தது பற்றி எழுதியிருந்தேன். கடைசியாக ஒரு கோவிலுக்கு போய் தரிசனத்துடன் எமது லாஸ் அங்கிலஸ் சுற்றுலாவை முடித்துக் கொண்டு புறப்பட்டோம். வரும்போது நெடுஞ்சாலை 5 வழியாக 6 மணிநேரத்தில் வீடு வந்து சேர்ந்தோம். நன்றி. இனிவராது. யாராவது கலிபோர்ணியா போனால் நிச்சயம் இந்த பாதையில் பயணித்து பாருங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.