Leaderboard
Popular Content
Showing content with the highest reputation on 03/30/24 in Posts
-
யாழிணையம் 26 ஆவது அகவை
6 pointsஅன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு, மண்ணினதும் மக்களதும் விடிவிற்காய் தம்முயிர் ஈய்ந்தவர் நினைவுவோடு யாழ் இணையம் தனது 25ஆவது ஆண்டினை நிறைவு செய்துகொண்டு - இன்று (30.03.2024) 26ஆவது அகவைக்குள் காலடி எடுத்து வைக்கின்றது. கருத்தாளர்களே யாழ் இணையத்தின் மிகப் பெரும் பலம். அந்த வகையில் யாழ் இணையத்தின் கருத்தாளர்கள் ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு மற்றும் சகிப்புத் தன்மை இன்னும் மேலதிகமாக இருக்க வேண்டும் என்றும் யாழ் இணையம் விரும்புகின்றது. கருத்தாளர்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கருத்தாட வேண்டும் என்றும் அவ்வாறு நிபந்தனைக்கு உட்படும் போது கருத்தாடல்கள் ஆரோக்கியமாக அமையும் என்பதுடன் தேவையற்ற கசப்புணர்வுகள் தவிர்க்கப்படும் என்பது உங்களுக்கு சொல்லித் தெரியத் தேவையில்லை. தவிர மட்டுறுத்துனர்களும் மட்டுறுத்தலுக்கு பெரும் நேரம் தொடர்ந்தும் செலவழிக்க வேண்டிய தேவையிருக்காது. வெகுவிரைவில் இந்தியாவில் தேர்தல் வருகின்றது. முன் போலவே யாழ் இணையம் தமிழக மண்ணில் தேர்தலில் பங்கேற்கும் எந்த ஒரு கட்சி சார்ந்து சார்பானதான அல்லது எதிரான நிலைப்பாட்டினையோ எடுப்பதை முற்றாகத் தவிர்த்துக் கொள்கின்றது. தாய் தமிழகத்தினை எமக்கான பலமாக நாம் கருதி அந்த மக்களின் முடிவுக்கு கட்டுப்படுகின்றோம். கட்சி சார்பில்லாது அனைத்து தமிழக உறவுகளையும் நாம் நேசிக்கின்றோம் என்பதையும் இங்கு பதிவு செய்து கொள்கின்றோம். அதேவேளை ஈழத்தமிழர்களை தமது நலன் சார்ந்து போலிப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதை எதிர்ப்போம் என்பதையும் பதிவு செய்து கொள்கின்றோம். காலங்காலமாக எமது தமிழினம் மோசடியாக இலங்கை அரசினாலும் தமது நலன்சார்ந்த உலகத்தினாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வருவது எமக்குத் தெரிந்ததே. தற்போது கூட இருக்கும் சில தமிழர்களாலும் மாவீரர்களை அவமரியாதை செய்யும் வகையில் தவறான தகவல் பரப்புரைகள் மேற்கொள்ளப்டுவதுடன் அவை உண்மை என்று நிரூபிக்க கடும் முயற்சிகள் பரவலாக மேற்கொள்ளப்படுவதையும் அவதானத்துடன் இருந்து அவற்றை முறியடிக்க வேண்டிய தேவையுள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். இவைகளுக்கு துணைபோகாது நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவைகள் உள்ளது. மேலும் எமது மக்களின் நேர்மையான போராட்டங்களுக்கு ஒன்றுபட்டு எமது ஆதரவினை வழங்க வேண்டும் என்பதையும் எமது வேண்டுகோளாக உங்கள் முன் வைக்கின்றோம். யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் இந்நாளினைச் சிறப்பிக்கும் முகமாக முன்னைய வருடங்கள் போன்று யாழ் இணைய உறவுகள் பலரும் மிகவும் உற்சாகமாகச் சுயமான ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்துள்ளனர். எல்லோருக்கும் பாராட்டுக்களுடன் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம். யாழ் செழிப்புற வேண்டும் என பல்வேறு வகையில் ஆலோசனைகளைத் தந்து கொண்டு இருப்பவர்களுக்கும் மற்றும் காலநேரம் பாராது பல்வேறு சுமைகளுக்கு மத்தியிலும் களத்தினை வழிநடத்தும் அனைவருக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தொடர்ந்தும் உங்கள் ஆலோசனைகளை எமக்கு தெரியப்படுத்துங்கள். இந்த 26வருடத்தில் இன்னும் புதியவர்களை உள்வாங்க வேண்டும் என்று விரும்புகின்றோம். யாழ் இணையப் பாவனையாளர்கள் உங்களைச் சார்ந்தோருக்கு யாழ் இணையத்தினை அறிமுகம் செய்து வையுங்கள். கடந்த காலங்களில் கூறியது போன்றே எமது மண்ணோடும், எமது மக்களோடும் நாம் என்றும் இணைந்திருப்போம். உறுதுணையாய், துணையாய் ஒற்றுமையாய் பயணிப்போம். "நாமார்க்கும் குடியல்லோம்" நன்றி யாழ் இணைய நிர்வாகம்6 points
-
பாக்குவெட்டி
5 pointsவெற்றிலைத் தட்டம் இல்லாத வீடுகளே அன்று இல்லை எனலாம். இளம் பச்சை நிற கொழும்பு வெற்றிலை, ஊர்ப் பாக்கு, கும்பகோணம் ரோஸ் கலர் சுண்ணாம்பு தட்டத்தில் சுற்றிவர இருக்கும். அப்படியே ஒரு பாக்குவெட்டியும் தட்டின் நடுவில் இருக்கும். சீவல் பாக்கு பலருக்கும் பிடிப்பதில்லை. தாங்களே சீவி எடுத்தால் தான் திருப்தி. பாக்கை சீவுவதை விட இந்தப் பாக்குவெட்டியால் வேறு ஏதாவது பயன் இருக்கின்றதா? ********************************* பாக்குவெட்டி --------------------- எங்கள் வீட்டில் ஒரு பாக்குவெட்டி இருந்தது நான் பிறக்கு முன்னேயே அது அங்கே இருந்தது ஒரு தட்டத்தில் எப்போதும் பாக்கு, வெற்றிலை, சுண்ணாம்பு சுற்றி வர நல்ல ஒரு கண்டுபிடிப்பு சரசரவென்று பாக்கைச் சீவும் இது விரலை எப்போது சீவும் என்று நினைப்பேன் அப்பா ஆச்சி வந்தவர்கள் எவர் விரலையும் அது சீவவே இல்லை நான் ஒரு போதும் முயலவில்லை இன்று ஒரு செய்தி இலங்கையில் படுத்திருந்த கணவனை பாக்குவெட்டியால் வெட்டினார் மனைவி என்று நீங்கள் சரியாகவே வாசித்திருப்பீர்கள் சந்தேகமே இல்லை துண்டு இரண்டங்குலமாம் விரலை மட்டும் தான் இது வெட்டக் கூடும் என்று யோசித்திருந்தேன் செய்தியை பார்க்கும் வரை என்ன ஒரு கண்டுபிடிப்பு.5 points
-
தோற்ற வழு
4 points(குறுங்கதை) தோற்ற வழு ------------------- இது அவர்கள் இருவரும் இரண்டாவது முறையாக இங்கு பல்கலைக்கழகம் ஒன்றுக்கு செல்வது. அவர்கள் அங்கு மீண்டும் படிக்கவே போகின்றார்கள் என்ற ஒரு எண்ணம் உங்களுக்கு வந்தால், அந்த எண்ணத்தை தயவுடன் இங்கேயே விட்டுவிடவும். அவர்கள் அவ்வளவு ஆர்வமானவர்கள் கிடையாது. அவர்களின் மகள் தான் அங்கு படிக்கப் போகின்றார். அவர்களின் மகன் மூன்று வருடங்களின் முன் வேறொரு பல்கலைக்கழகத்திற்கு போயிருந்தார். அதுவே அவர்கள் முதன் முதலாக இங்கு ஒரு பல்கலைக்கு உள்ளே போனது. இங்கு எல்லா பல்கலைகளும் அங்கு படிக்கப் போகும் பிள்ளைகளுடன் பெற்றோர்களுக்கும் சேர்த்து ஒரு அறிமுக வகுப்பை இரண்டு நாட்கள் ஒழுங்கு செய்வார்கள். இது இலவசம் அல்ல, இதற்கு பெரிய கட்டணமும் வசூலித்துக் கொள்வார்கள். இங்கு பாடசாலைக் கல்வி இலவசம் தான், ஆனால், அதற்கு கந்து வட்டியும் சேர்த்து வாங்குவது போல பல்கலைக்கு கட்டணம் இருக்கும். பெரும்பாலும் கடன் எடுத்து தான் கட்டணம் கட்ட வேண்டும். எடுத்த கடனிலேயே அறிமுக வகுப்புகளுக்கும் கட்டணம் செலுத்த வேண்டியதுதான். மூழ்க நினைத்தால், நடுக்கடலில் மூழ்கினால் என்ன, இரண்டு பாக கடலில் மூழ்கினால் என்ன. உண்மையில் இந்த அறிமுக வகுப்புகளுக்கு போவதால், புதிதாக எதுவும் தெரிய வரும் என்றில்லை. முக்கியமாக முன்னர் ஒரு பிள்ளையுடன் போயிருந்தால், பின்னர் இன்னொரு பிள்ளையுடன், அது வெவ்வேறு பல்கலைகளாக இருந்தாலும், போக வேண்டும் என்றில்லை. எல்லா தகவல்களும் அவர்களின் இணையத்தில் கிடைக்கும். தகவல்களில் ஒரு புதுமையும் கிடையாது. ஆனாலும் மனம் விடாது, மணம் முடித்தவரும் விடார். முதல் நாள் அறிமுக வகுப்பு. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர். வகுப்பு ஆரம்பித்துவிட்டது. ஒரு அவசர நிலையில் அவசரப் போலீஸை எப்படித் தொடர்பு கொள்வது என்று வகுப்பு போய்க் கொண்டிருந்தது. அந்த நேரத்தில் ஒருவர் அவசரமாக வகுப்புக்குள் ஓடி வந்தார். வந்தவர் அவனின் அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தை எடுத்துக்கொண்டார். எந்த தயக்கமும் இல்லாமல், 'வகுப்புகள் ஆரம்பிச்சு எவ்வளவு நேரமாச்சு?' என்று தமிழிலேயே கேட்டார். இந்தக் கூட்டத்தில் இன்னுமொரு தமிழ் குடும்பம் இருக்கும் என்று அவன் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஆனால் இவர் தமிழிலேயே தொடங்குகின்றாரே என்று ஆச்சரியம் அவன் மனைவியின் முகத்திலும் தெரிந்தது. தமிழ் முகம் என்று ஒன்று இருக்கின்றது போல, அது அந்த நபருக்கு தெரிந்தும் இருக்கின்றது. பின்னர் அந்த நபர் அவனை விட்டுப் பிரியவேயில்லை. இடைவேளை, உணவு வேளை என்று எல்லா நேரமும் கூடவே வந்தார். வகுப்பில் அவர் எதையும் கவனிக்கவில்லை. இவனும் கவனிக்கவில்லை. இவனின் மனைவி தான் வகுப்பையும் கவனித்து, இவர்கள் இருவரையும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தார். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று அவர் சொல்லாமலேயே தெரிய வந்தது. அவன் கன்னியாகுமரி அல்லது நாகர்கோயில் என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அவரும் கேட்கவில்லை. இங்கு மருத்துவம் படித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும், அத்துடன் பெரும் செலவும் ஆகும் என்று சொன்னார். ஏன், இந்தியாவிலும் அதற்கு பெரும் செலவு தானே என்றான் அவன். இல்லை, இல்லை, இந்தியாவில் இலவசமாகவே படிக்கலாம் என்றார். கதை போதும், வகுப்பை கவனியுங்கள் என்று கண்ணாலேயே கடுமையான ஒரு அறிவுறுத்தல் அவனுக்கு அருகில் இருந்து வந்தது. இந்தியாவில் எப்படி இலவசமாகப் படிக்கலாம் என்ற கேள்வியை சேமித்து வைத்துக்கொண்டான் அவன். வகுப்புகள் முடிந்தது உடனேயே அவர் கிளம்பிவிட்டார். இரவு பெரிய விருந்திருக்குதே, நன்றாக இருக்குமே என்று இவன் சொல்லவும், அவர் நிற்காமல் போனார். போகும் பொழுது காலை உணவு கொடுப்பார்களா என்று கேட்டு விட்டுப் போனார். இது என்ன கணக்கு என்று இவன் முழித்தான். இப்ப பெரிய விருந்து வேண்டாம் என்கின்றார், ஆனால் காலையில் என்ன கொடுப்பார்கள் என்று கேட்கின்றார். அவரை காலையில் அவர் வீட்டிலிருந்து யாரோ ஒருவர் இங்கு வலுக்கட்டாயமாக அனுப்பி விடுகின்றார்களோ? அந்த ஆளை பார்த்தாலே ஒரு பைத்தியக்காரர் மாதிரி இருக்குது, நாளைக்கு நீங்கள் அவர் பக்கத்தில் இருக்கவே கூடாது என்று அவனின் மனைவி நல்லாகவே கடுமை காட்டினார். அவனா அந்த ஆளின் பக்கத்தில் போய் இருந்தான், அவர் தானாகவே வந்தாரே. நாளைக்கு அவரை எப்படி தவிர்ப்பது என்று அவனுக்கு தெரியவில்லை. மனைவியிடமே பின்னர் கேட்டு விடுவோம் என்று நினைத்தான். ஆலோசனைகளுக்கு அங்கு என்றும் குறைவு வருவதேயில்லை. அவரின் பெயரை அவன் கவனித்திருந்தான். பெயர்கள் எழுதப்பட்ட ஒரு துண்டை எல்லோரும் இடது பக்க நெஞ்சுப் பகுதியில் ஓட்டியிருந்தனர். ஏதோ ஒரு எண்ணத்தில் கூகிளில் அவரின் பெயரை அவன் அடித்து தேடினான். வந்த முதலாவது கூகிளின் முடிவிலேயே அவரின் பெயரும், படமும் இருந்தது. அவர் தான் அந்தப் பகுதியிலேயே மிகப் பிரபலமான மனநல மருத்துவர் என்றிருந்தது.4 points
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
3 points"புலிகளை, பிரபாகரனை முன்னிறுத்தும் ஒரே கட்சி" என்ற "நொண்டித் தியரி" யை நம்பி நீங்கள் கருத்துரைப்பது வீண். இது கபிதானின் ஒரிஜினல் தியரியும் அல்ல! தற்போது களத்தில் இல்லாத ஒரு உறவு, "தமிழ் நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபாகரனைக் கொண்டு சேர்த்தது நா.த.க!" என்று ஒரு உருட்டலை காலங்காலமாக செய்து வந்திருக்கிறார். புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை கொடுத்தது யார், பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் என்பன போன்ற வரலாறு தெரிந்தோர் இதைக் கேட்டுச் சிரித்துக் கடந்து போக வேண்டியது தான், சீரியசாக எடுக்க வேண்டியதில்லை!3 points
-
பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்.
3 points
- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
ஜேர்மனியில் எங்கு பார்த்தாலும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாடிகள் சுற்றிக்கொண்டிருப்பதை காணலாம். அத விட வெட்ட வெளியெங்கும் சோலார் தகடுகள் காட்சியளிக்கும். இருந்தாலும் மின்சார கட்டணம் குறைவதற்கு பதிலாக 5 மடங்கு விலை கூடியிருக்கின்றது. உலகத்திலேயே மிக பாதுகாப்பான அணுமின்சார நிலையங்களை மூடி விட்டு உலக சூழல் சுற்றாடல் சுகாதாரம் என மக்களை வாட்டி எடுக்கின்றார்கள்.3 points- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
எமது ஊர்களில் மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு வாழ்ந்தவர்கள் இருக்கின்றார்கள்.இது விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். தஸ்சு புஸ்சு ஆபீஸர்மார் நான் சொன்ன கருத்து பொருந்தாது. நான் அறிய / நான் உட்பட மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு தான் வளர்ந்தோம்.நவநாகரீக உணவுகள் உண்ணவில்லை. நவநாகரீக நோய்கள் வரவில்லை. பசிக்காமல் உண்ணவில்லை. ஆனால் பசியாற உண்டோம்.உடல் களைக்க வேலை செய்தோம். வியர்வை மணக்க வேலை செய்தோம். நோய்கள் அண்டவில்லை.பசுமதியை கண்டறியோம். வெள்ளை பச்சை அரியை கண்டால் விலகி ஓடினோம். ஆனால் இன்று.....? இன்றைய மானிடர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிவிட்டு ஐயோ குத்துது குடையுது என்றால் 24 மணி நேரமும் கதவை திறந்து வைத்திருப்பான் தானே அந்த வைத்தியன்....😎3 points- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024 வணக்கம், இந்த வருடம் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதால் முழுமையான போட்டிகளின் அட்டவணை போட்டிகள் ஆரம்பமாக முன்னர் வெளியிடப்படவில்லை. ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் ஆரம்பித்த பின்னர் முழுமையான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதால், யாழ் கள ஐபிஎல் போட்டியை ஆரம்பச் சுற்றுப் போட்டிகளைத் தவிர்த்து Playoff கட்டத்தில் இருந்து உள்ள நான்கு போட்டிகளுக்கும் நடாத்தலாமென்று தீர்மானித்துள்ளேன். எனினும் போட்டியாளர்கள் அனைவருக்கும் 70 புள்ளிகள் (ஆரம்பச் சுற்றில் 70 போட்டிகள்) முதலிலேயே வழங்கப்படும். கேள்விகளுக்கு சரியான பதில் வழங்கப்பட்டால் புள்ளிகள் கூட்டப்படும். தவறான பதிலாக இருந்தால் புள்ளிகள் குறைக்கப்படும்! போட்டி நடாத்துபவரைப் தவிர்த்து குறைந்தது பத்து பேராவது பங்குபற்றினால் மாத்திரமே போட்டி நடாத்தப்படும்! ஐபிஎல் 2024 போட்டிகள் பற்றிய விபரங்கள் 17வது ஐபிஎல் T20 கிரிக்கெட் திருவிழாவின் 2024 சீசன் மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கியுள்ளது. இறுதிப்போட்டி சென்னையில் மே 26ம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 10 அணிகள் பங்கு கொள்ளுகின்றன. CSK Chennai Super Kings (CSK) DC Delhi Capitals (DC) GT Gujarat Titans (GT) KKR Kolkata Knight Riders (KKR) LSG Lucknow Super Giants (LSG) MI Mumbai Indians (MI) PBKS Punjab Kings (PBKS) RR Rajasthan Royals (RR) RCB Royal Challengers Bangalore (RCB) SRH Sunrisers Hyderabad (SRH) 1. Chennai Super Kings BATTERS: Ruturaj Gaikwad (c), Aravelly Avanish, Devon Conway, MS Dhoni, Ajinkya Rahane, Shaik Rasheed, Sameer Rizvi ALLROUNDERS: Moeen Ali, Shivam Dube, Rajvardhan Hangargekar, Ravindra Jadeja, Ajay Mandal, Daryl Mitchell, Rachin Ravindra, Mitchell Santner, Nishant Sindhu BOWLERS: Deepak Chahar, Tushar Deshpande, Mukesh Choudhary, Mustafizur Rahman, Matheesha Pathirana, Simarjeet Singh, Prashant Solanki, Shardul Thakur, Maheesh Theekshana 2. Delhi Capitals BATTERS: Rishabh Pant (c), Abishek Porel, Ricky Bhui, Swastik Chikara, Yash Dhull, Jake Fraser-McGurk, Shai Hope, Kumar Kushagra, Prithvi Shaw, Tristan Stubbs, David Warner ALLROUNDERS: Lalit Yadav, Mitchell Marsh, Axar Patel, Sumit Kumar BOWLERS: Khaleel Ahmed, Praveen Dubey, Kuldeep Yadav, Mukesh Kumar, Anrich Nortje, Vicky Ostwal, Rasikh Salam, Jhye Richardson, Ishant Sharma 3. Gujarat Titans BATTERS: Shubman Gill (c), David Miller, Wriddhiman Saha, Sai Sudharsan, M Shahrukh Khan, BR Sharath, Matthew Wade, Kane Williamson ALLROUNDERS: Azmatullah Omarzai, Abhinav Manohar, Rashid Khan, Vijay Shankar, Manav Suthar, Rahul Tewatia BOWLERS: Spencer Johnson, Kartik Tyagi, Josh Little, Sushant Mishra, Darshan Nalkande, Noor Ahmad, Sai Kishore, Mohit Sharma, Jayant Yadav, Umesh Yadav 4. Kolkata Knight Riders BATTERS: Shreyas Iyer (c), Srikar Bharat, Manish Pandey, Angkrish Raghuvanshi, Rahmanullah Gurbaz, Ramandeep Singh, Nitish Rana, Sherfane Rutherford, Phil Salt, Rinku Singh ALLROUNDERS: Venkatesh Iyer, Sunil Narine, Anukul Roy, Andre Russell, BOWLERS: Vaibhav Arora, Dushmantha Chameera, AM Ghazanfar, Harshit Rana, Chetan Sakariya, Mitchell Starc, Suyash Sharma, Varun Chakravarthy, Sakib Hussain 5. Lucknow Super Giants BATTERS: KL Rahul (c), Ayush Badoni, Quinton de Kock, Devdutt Padikkal, Nicholas Pooran, Ashton Turner ALLROUNDERS: Krishnappa Gowtham, Deepak Hooda, Arshin Kulkarni, Prerak Mankad, Kyle Mayers, Krunal Pandya, Marcus Stoinis BOWLERS: Arshad Khan, Matt Henry, Shamar Joseph, Amit Mishra, Mohsin Khan, Naveen-ul-Haq, Ravi Bishnoi, Shivam Mavi, Manimaran Siddharth, Mayank Yadav, Yash Thakur, Yudhvir Singh 6. Mumbai Indians BATTERS: Tim David, Ishan Kishan, Naman Dhir, Shivalik Sharma, Rohit Sharma, Vishnu Vinod, Nehal Wadhera, Suryakumar Yadav ALLROUNDERS: Hardik Pandya (c), Dewald Brevis, Piyush Chawla, Shreyas Gopal, Anshul Kamboj, Mohammad Nabi, Shams Mulani, Romario Shepherd, Tilak Varma BOWLERS: Jasprit Bumrah, Gerald Coetzee, Kumar Kartikeya, Akash Madhwal, Kwena Maphaka, Arjun Tendulkar, Nuwan Thushara, Luke Wood 7. Punjab Kings BATTERS: Shikhar Dhawan (c), Jonny Bairstow, , Harpreet Singh, Prabhsimran Singh, Rilee Rossouw, Jitesh Sharma ALLROUNDERS: Sam Curran, Rishi Dhawan, Liam Livingstone, Ashutosh Sharma, Shashank Singh, Shivam Singh, Sikandar Raza, Atharva Taide, Chris Woakes BOWLERS: Arshdeep Singh, Rahul Chahar, Nathan Ellis, Harpreet Brar, Vidwath Kaverappa, Harshal Patel, Kagiso Rabada, Prince Choudhary, Vishwanath Singh, Tanay Thyagarajan 8. Rajasthan Royals BATTERS: Sanju Samson (c), Jos Buttler, Shubham Dubey, Shimron Hetmyer, Yashasvi Jaiswal, Dhruv Jurel, Tom Kohler-Cadmore, Riyan Parag, Rovman Powell, Kunal Singh Rathore ALLROUNDERS: Abid Mushtaq, Ravichandran Ashwin, Donovan Ferreira, Tanush Kotian BOWLERS: Avesh Khan, Trent Boult, Nandre Burger, Yuzvendra Chahal, Navdeep Saini, Sandeep Sharma, Kuldeep Sen 9. Royal Challengers Bangalore BATTERS: Faf du Plessis (c), Anuj Rawat, Saurav Chauhan, Dinesh Karthik, Virat Kohli, Rajat Patidar ALLROUNDERS: Akash Deep, Manoj Bhandage, Tom Curran, Cameron Green, Will Jacks, Mahipal Lomror, Glenn Maxwell, Suyash Prabhudessai BOWLERS: Mayank Dagar, Lockie Ferguson, Alzarri Joseph, Mohammed Siraj, Rajan Kumar, Himanshu Sharma, Karn Sharma, Swapnil Singh, Reece Topley, Vijaykumar Vyshak, Yash Dayal 10. Sunrisers Hyderabad BATTERS: Abdul Samad, Mayank Agarwal, Anmolpreet Singh, Travis Head, Heinrich Klaasen, Aiden Markram, Rahul Tripathi, Upendra Yadav ALLROUNDERS: Abhishek Sharma, Wanindu Hasaranga, Marco Jansen, Nitish Kumar Reddy, Glenn Phillips, Sanvir Singh, Shahbaz Ahmed, Washington Sundar BOWLERS: Pat Cummins (c), Akash Singh, Fazalhaq Farooqi, Bhuvneshwar Kumar, Mayank Markande, T Natarajan, Jhathavedh Subramanyan, Umran Malik, Jaydev Unadkat போட்டியில் கலந்துகொள்பவர்கள் வெற்றிக்கனியை எட்ட கடந்த வருடத் தரவுகள் கீழே. Rank Team M W L T N/R PTS Net RR 1 Gujarat Titans (Q) 14 10 4 0 0 20 0.809 2 Chennai Super Kings (Q) 14 8 5 0 1 17 0.652 3 Lucknow Super Giants (Q) 14 8 5 0 1 17 0.284 4 Mumbai Indians (Q) 14 8 6 0 0 16 -0.044 5 Rajasthan Royals 14 7 7 0 0 14 0.148 6 Royal Challengers Bangalore 14 7 7 0 0 14 0.135 7 Kolkata Knight Riders 14 6 7 0 0 12 -0.239 8 Punjab Kings 14 6 8 0 0 12 -0.304 9 Delhi Capitals 14 5 8 0 0 10 -0.808 10 Sunrisers Hyderabad 14 4 10 0 0 8 -0.590 Most runs[edit] Main article: Orange Cap Player Team Mat Inns Runs High score Shubman Gill Gujarat Titans 17 17 890 129 Faf du Plessis Royal Challengers Bangalore 14 14 730 84 Devon Conway Chennai Super Kings 16 15 672 92* Virat Kohli Royal Challengers Bangalore 14 14 639 101* Yashasvi Jaiswal Rajasthan Royals 14 14 625 124 Source: IPLT20.com Most wickets[edit] Main article: Purple Cap Player Team Mat Inns Wkts BBI Mohammed Shami Gujarat Titans 17 17 28 4/11 Mohit Sharma Gujarat Titans 14 14 27 5/10 Rashid Khan Gujarat Titans 17 17 4/30 Piyush Chawla Mumbai Indians 16 16 22 3/22 Yuzvendra Chahal Rajasthan Royals 14 14 21 4/17 Source: IPLT20.com End of season awards[edit] Player Team Award Prize David Warner Delhi Capitals Team fairplay award ₹10 lakh (US$13,000) Mohammed Shami Gujarat Titans Purple cap (most wickets) ₹10 lakh (US$13,000) Rashid Khan Gujarat Titans Catch of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Gamechanger of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Most fours ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Player of the season ₹10 lakh (US$13,000) and trophy Shubman Gill Gujarat Titans Orange cap (most runs) ₹10 lakh (US$13,000) Yashasvi Jaiswal Rajasthan Royals Emerging player of the season ₹10 lakh (US$13,000) Faf du Plessis Royal Challengers Bangalore Most sixes ₹10 lakh (US$13,000) and trophy Faf du Plessis Royal Challengers Bangalore Longest six ₹10 lakh (US$13,000) and trophy Glenn Maxwell Royal Challengers Bangalore Super striker ₹10 lakh (US$13,000), trophy and a car கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.2 points- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அரிசியின் வெவ்வேறு வகைகள் கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 29 மார்ச் 2024, 02:21 GMT உலக அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% இந்தியாவிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அதை விட உலகிலேயே அதிக அரிசியை உட்கொள்ளும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இந்தியா இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்களா? ஆம், ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் தரவுகளின்படி ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக 90 முதல் 100 மில்லியன் மெட்ரிக் டன் உணவுகளை இந்தியர்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. அதுவும், தென்னிந்தியாவின் பிரதான உணவுகளில் அரிசி முதன்மையானது என்பதை நாம் அறிவோம். அதற்கேற்றாற்போல் தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான அரிசி வகைகள் விளைவிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், உண்மையில் அரிசி நமக்கு சரியான உணவுதானா? அதனால் நமக்கு நன்மையா அல்லது தீமையா? எந்த அரிசியை சாப்பிடுவது மனிதர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உள்ளிட்ட அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகம் தேடப்பட்ட கேள்விகளுக்கு உணவு நிபுணர்களின் பதில் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். அரிசியின் வகைகள் என்னென்ன? தமிழர்களின் உணவு பாரம்பரியத்தில் தினை வகைகளே தொன்று தொட்டு தொடர்ந்து வரும் உணவுகள். ஆனால், இடையில் வந்த அரிசியும் தினைகளுக்கு இணையான இடத்தை பிடித்துக் கொண்டது. தற்போது இந்தியாவில் மட்டும் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட அரிசி வகைகள் இருப்பதாக உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் நாம் பெரும்பாலும் உட்கொள்வது வெள்ளை நிறத்தில் கிடைக்கும் பாலிஸ் செய்யப்பட்ட அரிசிதான். அதைத் தாண்டி ஒவ்வொரு நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு வகையான அரிசி வகை இருப்பதாக கூறுகிறார் சிவாலயா மருத்துவமனையின் இயற்கை மருத்துவரான மருதராஜ். அரிசியில் பாரம்பரிய அரசி மற்றும் ஹைபிரிட் அரிசி வகைகளும் கிடைக்கின்றன. பாரம்பரிய அரிசிகள் உடலுக்கு நல்லது என்றாலும், ஹைபிரிட் அரிசியை முழுமையாக கெடுதல் என்று சொல்ல முடியாது என்று கூறுகிறார் அவர். அதுவே இந்தியாவின் பெரும்பான்மையான உணவுத் தேவையை பூர்த்தி செய்வதாகவும் குறிப்பிடுகிறார் . இதில் எந்த அரிசியாக இருந்தாலும் பட்டை தீட்டப்படாத அரிசி என்பதே உடலுக்கு நல்லது என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். அரிசியின் சத்துக்கள் எப்படி காணாமல் போகிறது? தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் தரவுகளின்படி, அரிசியில் கலோரி, புரதம், மாவுச்சத்து (கார்போஹைட்ரேட்), நார்ச்சத்து, மினரல்கள், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் பி1, வைட்டமின் பி6, பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. "ஆனால், இந்த சத்துக்கள் அனைத்தும் அரிசியை பட்டைதீட்டும் போது வெளியேறி விடுகின்றன. உதாரணத்திற்கு ஒரு அரிசியில் மூன்று விதமான அடுக்குகள் இருக்கும். முதல் அடுக்கு நாம் மேலே பார்க்கும் உமி. அடுத்த அடுக்கு பிரான்(Bran) என்று அழைக்கப்படும் தவிடு. இதை நீக்காமல் கிடைக்கும் அரிசிதான் ப்ரவுன் அரிசி. மூன்றாவது அதுக்குதான் endosperm என்று அழைக்கப்படும் மாவுச்சத்து நிறைந்த நடுப்பகுதி. மற்ற அனைத்தையும் நீக்கிவிட்டு வெள்ளை நிறத்தில் நாம் உட்கொள்ளும் பகுதியும் இதுவே." "இப்படி மேலே இருக்கக்கூடிய புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் ஆகியவற்றை நீக்கும்போது மக்கள் அதிக மாவுச்சத்து நிறைந்த அரிசியை உண்ண வேண்டிய சூழல் வருகிறது. இதன் நீட்சியாக உடலில் சர்க்கரை நோய் உள்ளிட்டவை ஏற்பட வழிவகுக்கிறது" என்று கூறுகிறார் மருத்துவர் மருதராஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருப்புகவுனி அரிசி கருப்பு கவுனி அரிசி என்றால் என்ன? சமீப காலமாகவே பலரும் கருப்பு கவுனி அரிசி குறித்து சமூக வலைத்தளங்களில் பேசி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக இது தீர்க்காத நோயை கூட தீர்த்து விடும் என்பது போன்றெல்லாம் வீடியோக்கள் பரவி வருகின்றன. உண்மையில் அதன் பயன் என்ன என்று மருத்துவர் மருதராஜிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “கருப்பு கவுனி அரிசி அந்த நிறத்தில் இருக்க காரணம் ஒருவகை நிறமிதான். அதற்கு சாதாரண அரிசியை விட 15% கூடுதல் நலன்கள் இருக்கிறதே தவிர, அதன் மூலம் எந்த நோயையும் சரிப்படுத்த முடியாது. கருப்புகவுனி அரிசியில் கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அது உடலுக்கு ஒரு சில நன்மைகளை தரும் அவ்வளவுதான்” என்கிறார். மற்றபடி 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் இருக்கும் மாவுச்சத்தின் அளவில் இருந்து ஓரிரண்டு கிராம்களே கருப்பு கவுனி அரிசியில் குறைவாக இருக்கிறது என்று கூறுகின்றனர் நிபுணர்கள். அதே போல் 100 கிராம் பாலிஸ் செய்யப்பட்ட அரிசியில் 1-2 கிராம் நார்ச்சத்து இருந்தால், கருப்பு கவுனியில் 4-5 கிராம் நார்ச்சத்தே காணப்படுகிறது. பட மூலாதாரம்,AATHICHOODI படக்குறிப்பு, மருத்துவர் மருதராஜ் செறிவூட்டப்பட்ட அரிசி என்றால் என்ன? சமீப காலமாக அரிசி கொடுத்து தேடப்படும் முக்கியமான தகவல்களில் செறிவூட்டப்பட்ட அரிசியும் (Fortified rice) ஒன்று. இதுகுறித்து கேட்டபோது, “உணவுச்சந்தை என்பது மிகப்பெரிய கடல். இதில் உணவை விற்பதற்காக சொல்லப்படும் பல பரப்புரைகளில் இதுவும் ஒன்று” என்கிறார் மருத்துவர் மருதராஜ். அவரது கூற்றுப்படி, செறிவூட்டப்பட்ட அரிசி என்பது இயற்கையாகவே ஊட்டச்சத்துகளோடு விளைவிக்கப்படும் அரிசியில், செயற்கை முறையில் கூடுதல் ஊட்டச்சத்துக்களை சேர்க்கும் செயல்முறை ஆகும். இதில் ரசாயனம் அல்லது எந்த முறையில் ஊட்டச்சத்துக்கள் சேர்க்கப்படுகிறது என்று தெரியாததால் அது நல்ல அரிசியா என்று தீர்மானிப்பது கடினம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். சீரக சம்பா vs மாப்பிள்ளை சம்பா வித்யாசம் என்ன? தமிழ்நாட்டில் விளைவிக்கப்படும் அரிசி வகைகளில் இந்த சம்பா வகை அரிசிகளும் ஒன்று. இதில் இந்த சீரக சம்பா அரிசி அளவில் சிறியதாகவும் அதே சமயம் நறுமணம் வாய்ந்ததாகவும் இருக்கும். மாப்பிள்ளை சம்பாவை பொறுத்தவரை சிவப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கும் என்கிறார் மருதராஜ். அந்த காலங்களில் புதுமணம் முடிந்து வரும் மணமகனுக்கு இந்த அரிசி சோறுதான் பரிமாறப்படுமாம். அதனால் தான் இந்த பெயர் பெற்றதாகவும் கூறுகிறார் அவர். “இதன் நிறம் காரணமாக இதில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கும். ஆனால், இதை சமைக்கும் செயல்பாடு நீண்டதும், அதிக நேரம் எடுக்க கூடியதும் ஆகும்.” பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும் காட்டுயானம் அரிசி என்றால் என்ன? அது உடலுக்கு நல்லதா? பாரம்பரிய அரிசியை விரும்பி உண்பவர்களில் பலர் கூட இந்த காட்டுயானம் அரிசி குறித்து கேள்விப்பட்டிருப்பார்களா என்பது சந்தேகமே. இதன் உயரம் பெரிது என்பதால் காட்டுயானம் என்ற பெயர் பெற்ற இந்த அரிசி அடர்சிவப்பு நிறத்தில் காணப்படும். கருப்பு கவுனி அரிசியை போலவே இதையும் குறைந்தது 10 மணிநேரமாவது ஊற வைத்து சமைக்க வேண்டும். இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், இரும்பு சத்து மற்றும் இதர அரிசிகளில் காணப்படும் சத்துக்களும் உள்ளன. இதுவும் மலச்சிக்கல் தீர்வு, வயதான தோற்றத்தை தாமதப்படுத்தல், ரத்த சிவப்பணுக்களை அதிகப்படுத்துதல், ரத்த சர்க்கரையை உயராமல் பார்த்துக்கொள்ளுதல் போன்ற பலன்களை கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்கள் நீங்காமல் இருக்கும்” ரேஷன் அரிசி நல்லதா? பொதுவாகவே மக்கள் மத்தியில் அரசால் வழங்கப்படும் ரேஷன் அரிசி குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. காரணம் அதன் நிறம். ஆனால், அது பழுப்பு நிறத்தில் இருக்க காரணம் அதை பெரியளவு பட்டை தீட்டாததே காரணம் என்கிறார் மருத்துவர் மருதராஜ். “மக்கள் பெரும்பாலும் வெள்ளை அரிசிதான் நல்லது என்று வாங்கி உண்ணும் அரிசியில் பெரியளவு மாவுச்சத்து மட்டுமே உள்ளது. ஆனால், இது போன்ற பட்டைதீட்டப்படாத அரிசியில் தான் அதன் சத்துக்களும் நீங்காமல் இருக்கும்” என்கிறார் அவர். எனவே ரேஷன் அரிசி தரமானது தான். அதை மக்கள் தாராளமாக உண்ணலாம் என்கிறார் மருதராஜ். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம்" என்கிறார் மருதராஜ். எந்த அரிசியை தேர்வு செய்வது? இன்றைய காலகட்டத்தில் அரிசியிலும் வெவ்வேறு வகைகளில் தொடங்கி, வித விதமான கலப்படங்கள் வரை வந்துவிட்டன. இந்நிலையில் ஆரோக்கியமான வாழ்வை வாழ மக்கள் எந்த அரிசியை உண்ண வேண்டும் என்று மருதராஜிடம் கேட்டோம். இதற்கு பதிலளித்த அவர், “அரிசி என்பது புவிசார் உணவு. அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை சாப்பிடலாம். ஆனால், அளவாக உண்ண வேண்டும். அது கருப்பு கவுனியோ அல்லது எந்த வகை அரிசியாக இருந்தாலும் எல்லை மிகாமல் சாப்பிட வேண்டும்.” “அதில் பட்டை தீட்டப்படாத அரிசியாக இருந்தால் உடல் நலத்திற்கு கூடுதல் நல்லது. ஆனால், அதுவும் உங்களுக்கு கூடுதல் ஊட்டச்சத்துக்களை தருமே தவிர, உங்களது நோய்களை போக்காது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்” https://www.bbc.com/tamil/articles/c3gj24ql6x4o2 points- பைப்லைன் மூலம் கசிப்பு விநியோகம் : ஒருவர் கைது!
முல்லைத்தீவு முள்ளியவளையில் வீட்டு காணி ஒன்றில் பைப்லைன் மூலமாக சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்ட குடும்பஸ்தர் நேற்று பொலிஸாரால் கைது செய்யட்டுள்ளார். குறித்த பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெற்று வருவதாக முள்ளியவளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது வீட்டின் உரிமையாளர் ஒருவர், அவரது காணிக்குள் நீர் பொருத்தும் பைப்லைன் செய்வது போல், கசிப்பு உற்பத்தி செய்து சட்டவிரோத விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன்போது இரு பரல் கோடா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டின் உரிமையாளரை கைது செய்த முள்ளியவளை பொலிஸார், மீட்கப்பட்ட சான்று பொருட்களையும் சந்தேக நபரையும் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். குறித்த நபர் ஏற்கனவே வீட்டிற்குள் சுரங்கம் வெட்டி கசிப்பு காச்சிய நிலையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. https://thinakkural.lk/article/297642 அறிவியல் வளர்ச்சி?!!2 points- பாக்குவெட்டி
2 points2 points- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsபுண்ணுக்கு வலியா மருந்துக்கு வலியா? நீங்கள் உங்கள் நாட்டுப் பிரச்சனைக்கு போராடியது உங்கள் பிரச்சனை. அடுத்த நாட்டவரான அவர்கள் உதவினார்கள். தடா பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு மத்தியிலும் போராடினார்கள். உங்களுக்கு உதவ வந்ததால் அவர்களில் சிலரும் ராஜீவ் கொலை வழக்கில் தேவையற்று சிக்கினார்கள். அந்த நன்றியை இவ்வளவு எளிதாக உங்கள் சீமான் நாம் தமிழர் என்ற சுய நல கள்ளக் கும்பலுக்காக மறப்பது அழகல்ல. நீங்கள் கூறிய இந்த திராவிட கும்பல் அன்று தடுத்திரா விட்டால் 1982 இலேயே இந்திய அரசு பிரபாகரனை இலங்கையிடம் ஒப்படைத்தருக்கும். உங்கள் சீமானுக்கு அரசியலுக்கு கண்டென்டே கிடைத்திருக்காது.2 points- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsஎதுவாக இருந்தாலும் சீமானே தன் வாயால் கெட்டாலும் சீமானும் நாம் தமிழரும் இனி தமிழகத்தில் தவிர்க்கப்படமுடியாதவர்கள் தான் திராவிடக்கட்சிகள் தேய்வதும் நாம் தமிழர் வளர்வதும் இனி தொடரும்... (தமிழக மக்கள் சிலவற்றை பெரிது படுத்துவதில்லை) ஒரு தமிழனாக இதை நான் சாதகமாகத்தான் பார்ப்பேன் பார்க்கணும்2 points- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
2 pointsஅதெப்படி தள்ளி விட முடியும். நீங்கள் ஆயிரம் தரவுகளை ஆதாரபூர்வமாக திரட்டினாலும் ஒரு எளிய தமிழ்பிள்ளையில் Fake முகநூல் பதிவுக்கு அது ஈடாகுமா? 😂2 points- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
காலத்திற்கேற்ற பதிவு. சோறோ, பாணோ, புட்டு, இடியப்பமோ, மாச்சத்தை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்ளா விட்டால் வாழ்க்கை நலமாகும். மருத்துவர் சொல்லியிருப்பது போல, "எந்த அரிசி நல்ல அரிசி?" என்ற கேள்விக்கு ஒரேயொரு சரியான பதில் என்று இல்லை. இதனால் தான் நவீன மருத்துவ விஞ்ஞானம் செய்ய வேண்டிய விடயங்களை மிக இலகுவாக வடி கட்டிப் பட்டியல் இட்டு வைத்திருக்கிறது: 1. மாச்சத்துக் குறையுங்கள். எடுத்துக் கொள்ளும் மாச்சத்தையும் அதிகம் சுத்திகரித்ததாக (refined) இல்லாமல் எடுத்துக் கொள்ளுங்கள். 2. புரதம் போதியளவு எடுத்துக் கொள்ளுங்கள். 3. கொழுப்பை, ஆரோக்கியமான கொழுப்பு வடிவில் எடுத்துக் கொள்ளுங்கள். 4. ஒரு வாரத்தில், குறைந்தது 5 நாட்கள் மிதமான உடற் பயிற்சியாவது செய்யுங்கள் (இறுக்கக் கழிசான் போட்டுக் கொண்டு ஓடுவது சும்மா பைம்பலுக்கு அல்ல! - மிகச் சிறந்த aerobic உடற்பயிற்சி அது!😎) 5. தூங்க வேண்டிய நேரத்தில் தூங்கி எழுங்கள். இதெல்லாம் செய்தால் 100 வருடம் வாழ்வீர்களா? அதெல்லாம் உங்கள் கையில் இல்லை. அப்ப என்ன தான் நன்மை? வாழும் வருடங்கள் ஆரோக்கியமாக மருந்து மாத்திரையில்லாமல், கையில் ஊசிக் குத்தல் இல்லாமல் வாழலாம்!2 points- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
இது இருக்கிறது….ஆனால் targeted ஆக இருக்கிறது. இது மிகவும் தந்திரமாகவும், சிங்களத்தை பொறுத்த வரை வினைத்திறனாகவுக் கையாளப்படுகிறது. முன்னர் போல் பொத்தாம் பொதுவாக அன்றி. பாடசாலை மாணவர் முதல் முன்னாள் போராளிகள் வரை புலி ஆதரவு ஆட்கள் என இனம் கண்டு மிரட்டப்படுகிறனர். அலைக்கழிக்கப்படுகிறனர். ஒரு அளவுக்கு மேல் உயிரச்சமும் உண்டு. இதனால் - ஏனையோர் நான் புள்ளி 4 இல் சொன்னது போல் ஏனக்கேன் வம்பு என விலகி நடக்க, இயற்கையாகவே உணர்வு காயடிக்கப்படுகிறது. இப்போ உங்களையே எடுங்கள். நாளைக்கு இருபாலையில் போய் ஒரு மாசம் நிற்கிறீர்கள். ஒருவர் வந்து காணாமல் போனோர் போராட்டத்துக்கு அழைக்கிறார். அவர் ஏலவே புலனாய்வால் நோட்டட். நீங்கள் போவீர்களா? நீங்களே போனாலும் அருகில் உள்ள அங்கே வசிப்போர் என்ன சொல்வார்கள்? உங்களால் எமக்கும் தொல்லை என உங்கள் சகவாசத்தை வெட்டி விடுவார்கள் இல்லையா? இவ்வாறாக உண்மையில் இன விடிவை பற்றி யோசிப்பவர்களை, எமது மக்களே விட்டொதுங்கும் நிலையை மிக தந்திரமாக இலங்கை அமைத்துள்ளது. இப்படி ஒரு நிலையை 1995 க்கு பின்பே யாழிலும், 1990 க்கு பின்பே மட்டகளப்பு நகரிலும் உருவாக்கி விட்டனர். ஆனால் அப்போ இன்னொரு பிந்தளத்தில் புலிகள் இருந்த படியால்- இது முழு வெற்றி அளிக்கவில்லை. அவர்களின் தோல்விக்கு பின், இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளின் கூத்து அரசியல் பிண்ணனியில், இளையோர், புதிய சுவாரசியங்கள் அதிகமாக இந்த அணுகுமுறை இலங்கைக்கு கைமேல் பலன் கொடுக்கிறது. நான் நினைக்கிறேன் மிஞ்சி மிஞ்சி போனால் 5000 பேர் யாழில் புலனாய்வால் கண்காணிக்கப்படக்கூடும். மிகுதியை நம் மக்களே பார்த்து கொள்கிறார்கள். இன்னொரு தகவல்: 2009 க்கு பின் நான் இலங்கை அணிக்கு கிரிகெட்டில் சப்போர்ட் செய்வதில்லை. ஆனால் நான் யாழில் பேசிய 30 வயதுக்கு கீழ் பட்ட அனைவரும் (10 பேர் வரையில்) - இலங்கை அணியை, சி எஸ் கே யை ஆதரிக்கிறனர். நன்றி வசி, நீங்களும், மீராவும், சசியும் நான் சொன்னதை பிழையாக விளங்கி கொண்டுள்ளீர்கள். இலங்கையில் எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உள்ளது என நான் சொல்லவில்லை. எல்லாம் இருக்கிறது…விலை பல மடங்காகி உள்ள்து என்றே சொல்கிறேன்.2 points- நாடகங்கள், திரைப்படங்களில் நடிகர்கள் இடையே இடம்பெறும் திருமணம், உண்மையான திருமணமாக கருத்தப்படும் என பாகிஸ்தான் மத அறிஞர்கள் தெரிவிப்பு
ஆப்ரிக்காவில் ஒரு இஸ்லாமீய அறிஞர் அண்ணா அவர்கள், பெண்குழந்தைகளுக்கு பிறப்புறுப்பை தைத்துவிடவேண்டும் அப்போதான் ஆண்களுக்கு நிறைவான சுகத்தை கொடுப்பா என்று அறிவித்து உலக அளவில் பரபரப்பானது. பின்பு இந்தியாவிலிருந்துவிட்டு மலாசியாவுக்கு ஓடிபோய் வாழும் மற்றொரு மத அறிஞர் திலகம் மதத்துக்காக எதுவும் பண்ணிட்டு சொர்க்கத்துகு போனால் அங்கே 62 கன்னிகள் கிடைக்கும் என்றார், அப்போகூட சொர்க்கத்தில் எது முக்கியம் எதை எதிர்பார்க்கிறார்கள் இந்த அறிஞர் கூட்டம் என்பது சில்லிட வைக்கிறது. இன்னொரு அறிஞர் பெண்கள் பூப்பெய்துவிட்டால் அவள் திருமணத்திற்கு தயாராகிவிட்டாள் என்றே அர்த்தம் என்றார், பெண்பிள்ளைகள் இப்போதெல்லாம் 10, 11 வயதில்கூட பூப்பெய்துகிறார்கள் என்பது தற்கால நடைமுறை. பின்பு தலீபான் அறிஞர் கூட்டம் பெண்களுக்கு பிரசவம் பெண்களே பார்க்கவேண்டும் என்று புனித சட்டம் போட்டார்கள், ஆனால் பெண்கள் படிக்க கூடாது என்றும் சட்டம் போட்டார்கள், படிக்காமல் எப்படி டாக்டராகி பிரசவம் பார்ப்பதென்று கடைசிவரை அந்த அறிஞர் கூட்டம் சொல்லவேயில்லை. மத அறிவில் டாக்டர் பட்டம் பெற்ற இன்னொரு அறிஞர் கூட்டம் இஸ்லாமிய பெண்கள் ஆண் துணை இல்லாமல் வெளியே கடைதெருவுக்கு கூட போக கூடாது என்று சொல்லியிருந்தார் ஆனால் இஸ்லாமிய ஆண்கள் ஐரோப்பா அமெரிக்கா என்று போய் பணத்தை அள்ளியிறைத்து பெண்கள் மத்தியிலேயே பொழுது போக்கிட்டு ஊர் திரும்புவார்கள். கணவனுக்கு மட்டும் காட்டவேண்டிய அழகை பிறருக்கு காண்பிக்ககூடாது என்று அறிஞர்கள் அலுமாரியை அவ்டி காரை மூடி வைச்சமாதிரி எத்தனை டிகிரி வெய்யில் என்றாலும் வெப்பத்தை உறிஞ்சி வைத்திருக்கும் கருப்பு துணியால் முழுவதும் மூடி செல்லவேண்டுமென்று சொல்வார்கள் , ஆனால் ஆண்கள் மனைவிக்கு மட்டும் காட்டவேண்டியதை மத்த மதக்காரர் எவர் கிடைப்பா என்று நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு கணவனுடன் போகும் பெண்களைகூட பார்த்து ஜொள்ளுவிட்டு அலைவார்கள். மொத்தத்தில் அண்ணனோட சிந்தனைகளும் செயல்களும் பெண்ணை பற்றியே சுற்றிவரும். அதையெல்லாம் கூட மன்னிக்கலாம் ஆனால் எல்லாத்தையும் பண்ணிப்பிபோட்டு இறுதியாக ஒரு வரி சொல்வார்கள் பாருங்கள். அதை தாங்கிக்கொள்ள இன்னொரு இதயம் இறைவனிடம் கேட்டு வாங்க வேண்டும் ’எந்த மதத்திலும் இல்லாத அளவிற்கு இஸ்லாம் பெண்களை மதிக்க கற்று கொடுத்திருகிறது’2 points- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
அந்தந்த பகுதிகளில் எந்த அரிசி இயல்பாக கிடைக்கிறதோ அதை அளவாக சாப்பிடலாம் என்று சொல்லியிருப்பது அருமை.........👍 இவர்களில் பலர் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் சோறு சாப்பிடுகின்றனர், மதியமும் இரவும். அதுவே மாசத்து மிகுதியால் வரும் சில நோய்களுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகின்றது. சோற்றுடன் இவர்கள் சேர்க்கும் காய்களும் (அப்படித்தான் மரக்கறிகளை சொல்கின்றனர்) குறைவே. எங்கள் அளவிற்கு இவர்கள் மீன் சாப்பிடுவதும் இல்லை. இப்பொழுது வசதி உள்ளவர்கள் ராகி (குரக்கன்), கம்பு என்று சாப்பிடத் தொடங்கியிருக்கின்றனர். இது நெடுங்காலம் நீடிக்குமா என்று தெரியவில்லை.2 points- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
அவுஸ்ரேலியாவில் பெரும்பாலானோர் இந்த சூரிய மின்சக்க்தியினை பாவிக்கிறார்கள், இந்த மின் தகடுகளின் ஆயுள்காலம் சராசரியாக 15 ஆண்டுகள்,நேரோட்டமின் சக்தியினை ஆடலோட்டம் மின்சக்தியாக மாற்றும் மின் மாற்றியின் ஆயுள் காலம் கிட்டதட்ட 10 வருடங்கள். தனிப்பட்ட முறையில் நானும் பயன்படுத்துகிறேன், மிகவும் உபயோகமானது. 2007 இல் ஆட்சிக்கு வந்த இடது சாரி அரசு ஆட்சிக்கு வந்த போது பல சலுகைகளை வழ்ங்கி ஆதரித்தமையால் பலர் இந்த மின் சக்தியினை நாடியிருந்தார்கள், அந்த மின் தகடுகள் காலாவதியாகும் நிலையில் அவற்றினை மீழ்சுத்திகரிப்பு செய்வது கடினமான பணியாக இருப்பதால் அவற்றினை இலத்திரனியல் குப்பையாக (அதில் அலுமினிய உலோகமும் உள்ளது) வேறு நாடுகளூக்கு அனுப்புகிறார்கள்), எனது இந்தியாவில் இருக்கும் உறவினர் ஒருவர் அதனை இறக்குமதி செய்து அங்குள்ள மக்களின் தலையில் கட்டி விடுகிறார் இரண்டாம் உபயோக மலிவான மின் தகடாக. இந்த மாதிர்யானவர்கள் தொடர்பாக விழிப்பாக இருங்கள், உங்கள்காணொளியினை பின்னர் பார்க்கிறேன்.2 points- நடனங்கள்.
2 points- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointநாங்கதான் முகமுடி யில் இருக்கோமே முடிந்தால் நம்ம பிள்ளை என்ன படிக்குது என்று யார் கண்டு பிடிப்பான் என்ற கற்பனையில் சிலர் நினைக்கினம் சாமி .😀1 point- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
இனி சொந்த அனுபவங்களையும் எழுதேலாது போல கிடக்கு.....😂 ஒன்லி பிபிசி, சிஎன்என், கேம்பிறிச், ஒக்ஸ்வோர்ட் தரவுகள் தான் செல்லுபடியாகும் 😎1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 point✅ மேற்கு வங்காள முதலமைச்சர் பழைய இந்திய பிரதமரிடம் நீங்கள் இந்திய படையை பாக்கிஸ்தானுடன் போரிட அனுப்பகிறீர்களா அல்லது நான் எனது பொலிஸ்சை அனுப்பவா என்று கேட்டதாக பையன்26 முன்பு எனக்கும் சொல்லியிருந்தவர். அந்த முதலமைச்சர் அப்படி உண்மையில் சொல்லியிருந்தால் அது சீமான் பாணியிலான வெறும் வாய் சவால். அவரால் அனுப்பவும் முடியாது. அனுப்பினால் வங்காள பொலிஸ்சார் வேலையைவிட்டே ஓடிவிடுவார்கள். இந்தியா தொடர்புடைய விடயங்கள் நடந்தவை தெரியபடுத்தி நீங்கள் நல்ல விளக்கம் அளித்து வருகிறீர்கள் 👍1 point- அதிசயக்குதிரை
1 point- பாக்குவெட்டி
1 point- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
செர்னோபில் அணு உலை விபத்து சகல வழிகளிலும் தனித்துவமானது. உலையின் உள்ளே அழுத்தம் அதிகரித்து வெடிப்பு ஏற்பட்டது, யுரேனிய குச்சிகளை மூடி மேலே இருந்த கொங்கிரீட் சிம்னி தூளாகியது. ஓர் வால்வு சரியாக வேலை செய்யாமையால் ஏற்பட்டது. இதோ போன்ற ஒரு நிலை 1979 இல் பென்சில்வேனியாவின் 3-Mile Island என்ற இடத்தில் இருந்த அமெரிக்க அணு உலையிலும் ஏற்பட இருந்து, சரியான தொழில் நுட்ப வழிகாட்டல் இருந்தமையால் பேரனர்த்தம் தவிர்க்கப் பட்டது. பகிடி என்னவென்றால், செர்னோபில் அணு உலை வெடித்து மத்திய ஐரோப்பா வரை காற்றில் கதிர் வீச்சு மூலகங்கள் அதிகரித்ததை ஏனைய நாடுகள் கண்டு கொண்டன. சோவியத் அரசோ, தொழிலாளர் தின பேரணியை செர்னோபிலில் மக்களை வைத்து கட்டாயமாக நடத்தி முடித்த பின்னர் தான் அவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்தது.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஆம். இந்தியப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறி தமிழ் நாட்டில் வந்திறங்கிய போது வரவேற்கப் போகாமல் தவிர்த்தார் என்ற மத்திய அரசின் கோபமும் 1990 ஆட்சிக் கலைப்பிற்குக் காரணம். இவை பதிவில் இருக்கும் சரியான தகவல்கள், சம்பவங்கள். நீங்கள் இதை ஏன் பையனுக்குச் சொல்கிறீர்கள் என்பது தான் எனக்கு விளங்கவில்லை😂! அவர் தகவல்களை பெறும் இடம் வேறு, நம்பும் தரவுகள் வேறு. அது வேற உலகம், இல்லை பிரபஞ்சம்! உங்களுக்கு நேரம் பாழ்!1 point- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்திற்கு எதிராக அவ்வூர் மக்கள் அதன் ஆபத்து கருதியே அவ்வளவு போராடினார்கள். உதயகுமார் என்னும் ஒரு பேராசிரியர் என்று ஞாபகம். அமெரிக்காவில் பல்கலை ஒன்றில் இருந்தார். அவர் தமிழ்நாடு திரும்பி, இந்தப் போராட்டத்தில் முன்னால் நின்றார். அந்த அணு உலையில் விபத்து ஏதும் ஏற்பட்டால், இலங்கையின் கடற்கரை பக்கம் கூட பாதிக்கப்படும். ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தின் தாக்கம், 38 வருடங்களின் பின், இன்றும் வீரியம் குறையாமலேயே இருக்கின்றது. ரஷ்யா - உக்ரேன் போரிலும் அந்த இடத்தை தொடாமல் விட்டே வைத்திருக்கின்றார்கள். அங்கிருக்கும் சில விலங்குகள் மிக அதிகமான கதிர் வீச்சுக்கு எப்படி இயல்பாகி வாழ்கின்றன என்ற விவரணம் இங்கு போன வாரம் ஒரு தொலைக்காட்சியில் போனது. கூடங்குளத்திலும் ரஷ்யாவின் இதே தொழில்நுட்பமே என்று சொன்னார்கள். சூரிய ஒளி மின்கலங்கள் இங்கு இப்பொழுது கூரை ஓடுகளின் வடிவிலும் வந்துவிட்டன. என் அயலவர் ஒருவர் அதைப் போட்டிருக்கின்றார். இங்கு இந்த வருடம் சரியான மழை. சூரிய மின்கல ஓடுகள் போட்ட பின், அவரின் வீட்டில் மழை நீர் ஒழுகத் தொடங்கி, இப்பொழுது திருத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நேற்றிரவில் இருந்து திரும்பவும் நல்ல மழை.........😌1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointசீமான் என்றவுடன் துருவுத்துருவி ஆராய்ச்சி செய்து மணியடிக்கும் தாங்கள் நாடக மேடைகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட திராவிட கட்சிகளினது சொத்து சுகங்களின் சேகரிப்புகளை கண்டும் காணாமலும் இருப்பது ஏனோ? 😄1 point- கருத்து படங்கள்
1 point1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 point""புலிகளுக்கு ஆயுதம், பணம் முதல் படகுக்கு டீசல் வரை கொடுத்தது யார், பயிற்சி முகாம்கள் அமைக்க காணி பூமி யார் கொடுத்தார்கள், அதற்காக எவ்வளவு அல்லல் பட்டார்கள் "" அதனால் சில பல யாழ் களத்தினர் நன்றி உணர்ச்சியால் உந்தப்பட்டு நாம் தமிழரை எதிர்ப்பதுடன் மற்றைய திராவிடக் கட்சியினரை ஆதரிக்கிறார்கள்/வக்காலத்து வாங்குகிறார்கள்? 😁1 point- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
அவர் பல விடயங்களை அறியாமல் தானே வலுவான கருத்துக்களை வைத்திருக்கிறார்😂? மேலே சூரிய மின் தகடுகளின் அலுமினியம் கழிவாகச் சேர்வதையே பெரிய விடயமாகச் சுட்டிக் காட்டுகிறார்கள் (அலுமினியம் போன்ற உலோகங்கள் எண்ணற்ற தடவைகள் மீள் சுழற்சி செய்யக் கூடியவை என்பதையும் மறந்து விட்டார்கள்). அணு சக்தி மின் நிலையத்தில் பயன்படுத்திய யுரேனியம் கழிவை அலுமினியத்தின் இடத்தில் வைத்துப் பாருங்கள். அதை மீள் சுழற்சி செய்யப் பெரிய வழிகள் இல்லை. எங்காவது பூமியின் அடியில் புதைத்துத் தான் வைக்க வேண்டும். இந்த ஆழப் புதை குழிகளை அமைக்க பெரும் செலவாகும் என்பதால், சில நாடுகளில் நிலத்தின் மேலேயே வைத்திருக்கிறார்கள். ஒரு பாரிய இயற்கை அனர்த்தம் வந்தால், இந்த யுரேனியம் கழிவு சூழலில் கலந்து பெரும் அனர்த்தங்களை விளைவிக்கும். இதை விட மிகக் குறைவான வாய்ப்புள்ள ஒரு ஆபத்து, அணு உலையை குளிர்விக்கும் தண்ணீர் சூழலில் கலக்கும் ஆபத்து. பிரான்சில் நடந்திருக்கிறது. இன்னொரு அணு உலை தொடர்பான பேராபத்து ஜப்பானில் பூகம்பத்தினால் நடந்தே விட்டது. Fukushima நகரில் அணு உலையும், அதன் குளிர்விக்கும் பொறிமுறையும் சுனாமியால் சேதமாகி இன்னும் 50 ஆண்டுகளுக்கு சுத்தமாக்கும் வேலைகள் செய்ய வேண்டிய நிலை. இந்த ஆபத்துக்கள் எல்லாம் கணக்கிலெடுத்துத் தான், அணு உலை மின்சாரத்தை நாடுகள் குறைக்க முயல்கின்றன.1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointகலைஞர் சாய் பாபாவை தரிசிக்கப் போகவில்லை. பாபாதான் கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்குப் போனார். படத்தை போடாமலே கலைஞரை பக்திமான் என்று நம்பும் கூட்டம் யாழில் இருக்கின்றது😜 https://mumbaimirror.indiatimes.com/news/india/sai-baba-meets-cm/articleshow/15674967.cms Sri Sathya Sai Baba's visit to Chennai that started on Saturday had a surprise element in it. Contrary to the usual practice of people going to Baba for darshan, it was Baba who decided to call on Tamil Nadu Chief Minister M Karunanidhi at his residence in Gopalapuram in the city. It all happened suddenly. Around 4.00 p.m. word spread that Baba was visiting Karunanidhi's residence at 4.15 p.m. The meeting went on for close to 45 minutes, during which they discussed the repair works of Telugu Ganga canal, carried out with financial assistance from Sathya Sai Trust, for bringing Krishna river water from Andhra Pradesh to Chennai for meeting the city's drinking water needs. Karunanidhi also presented Baba two books, an English translation of ancient Thirukkural and a Tamil book written by himself.1 point- யாழ். போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு மாலை 6 மணி வரை செயற்படும் - வைத்தியர் சத்தியமூர்த்தி
1 point30 MAR, 2024 | 11:57 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார். வெள்ளிக்கிழமை (29) மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தீர்மானங்களை அறிவித்து கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வெளி மாவட்டங்களில் இருந்து வெளிநோயாளர் பிரிவில் அதிகளவில் சிகிச்சை பெறுவதற்கு வருகிறார்கள். அதன் காரணமாக வெளி நோயாளர் பிரிவை போயா தவிர்ந்த கிழமை நாட்களில் மாலை 6 மணி வரை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளோம். வைத்தியசாலையின் செயற்பாடுகளை விஸ்தரிப்பதற்கு இட வசதி மற்றும் ஆளணி எமக்குள்ள ஒரு பாரிய சவாலாக விளங்குகிறது. இருந்த போதும் எம்மிடம் காணப்படுகின்ற வளங்களை உரிய முறையில் பயன்படுத்தி சேவையாற்றி வருகிறோம். எமது தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைத்துள்ளோம் அவர் எமது தேவைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கூட்டத்திற்கு யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவர் வாழ்நாள் பேராசிரியர் பொன் பாலசுந்தரம் பிள்ளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா வைத்தியசாலை கணக்காளர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/1800141 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointஈழத்தேசிய விடுதலை முன்னணியின் உருவாக்கமும் அதில் இணைந்துகொள்வதில் புலிகள் காட்டிய தயக்கமும் 1985 ஆம் ஆண்டு சித்திரை 10 ஆம் திகதி யாழ் பொலீஸ் நிலையம் தரைமட்டமாக்கப்பட்டது. அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பதாக ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் போராளிகளின் கூட்டமைப்பிற்குள் புலிகளும் இணைந்துகொண்டனர். ஏனைய மூன்று அமைப்புக்களுமான ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் டெலோ ஆகியவை கருநாநிதியின் கோரிக்கைக்கு ஏற்ப இதில் இணைந்திருந்தனர். ஈழத் தேசிய விடுதலை முன்னணி - சிறி சபாரட்ணம், பிரபாகரன், பாலகுமார் மற்றும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவரான பத்மநாபாவின் முயற்சியினாலேயே இந்த கூட்டமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. சென்னையில் இயங்கிவந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலகத்தில் இக்கூட்டமைப்பின் முதலாவது சந்திப்பு சித்திரையில் இடம்பெற்றிருந்தது. மூன்று போராளி அமைப்புக்களான டெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியவற்றின் தலைவர்களும், மூத்த போராளிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். இச்சந்திப்பின் போது பின்வரும் முக்கிய விடயங்கள் தீர்மானிக்கப்பட்டிருந்தன, 1. கருநாநிதியினால் கருத்துருவாக்கம் கொடுக்கப்பட்ட இவ்வமைப்பின் ஸ்த்தாபக உறுப்பினர்களாக டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்புக்களே இருப்பர். 2. இக்கூட்டமைப்பிற்கு ஈழத் தேசிய விடுதலை முன்னணி என்று பெயரிடப்படும். 3. இக்கூட்டமைப்பின் அரசியல் நோக்கங்கள் விரிவாக ஆராயப்படும் 4. ஏனைய போராளி அமைப்புக்களையும் இக்கூட்டமைப்பில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பது . இச்சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் புலிகளையும் புளொட் அமைப்பையும் இக்கூட்டமைப்பிற்குள் இணைந்துகொள்ள கோரிக்கை விடுக்க வேண்டும் என்கிற கருத்தினைக் கொண்டிருந்தனர். அதன்படி, புளொட் அமைப்பையே முதலில் தொடர்புகொண்டனர். புலிகளை முதலில் தொடர்புகொண்டால், புளொட் அமைப்பு தம்முடன் இணைந்துகொள்ள விரும்பாது என்று அஞ்சியமையினாலேயே புலிகளைத் தொடர்புகொள்வதற்கு முன்னர், புளொட் அமைப்பினைத் தொடர்புகொள்ள எண்ணினர். இக்கூட்டமைப்பின் செயலாளராக ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் ரமேஷ் எனும் போராளி தெரிவுசெய்யப்பட்டார். இச்சந்திப்பில் கலந்துகொண்ட தலைவர்கள் இதுகுறித்து அறிக்கையொன்றினையும் தமிழில் வெளியிட்டிருந்தனர். தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுக்க தமிழ் போராளி அமைக்களுக்கிடையேயான ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்துகொண்ட டெலோ, ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய அமைப்புக்களின் தலைவர்கள் ஒருங்கிணைந்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி எனும் கூட்டமைப்பினை உருவாக்கியிருக்கிறோம். எமது அமைக்களின் தனித்துவத்தையும், அடையாளத்தையும் காத்துக்கொள்ளும் அதேவேளை எமது கூட்டமைப்பிற்குள் ஏனைய முக்கிய அமைப்புக்களையும் இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம். எமது அரசியல் நோக்கத்தையும் செயற்பாட்டுத் திட்டத்தையும் பின்வருமாறு வரையறை செய்கிறோம், நாம் வரிந்துகொண்டிருக்கும் அடிப்படை அரசியல் நோக்கங்களாக பின்வருவன அடையாளம் காணப்பட்டிருக்கின்றன, 1. சிறிலங்கா ஆக்கிரமிப்பிலிருந்து எமது தாய்நாட்டிற்கான சுதந்திரத்தை வென்றெடுப்பது. 2. முற்றான தமிழ் ஈழ சுதந்திரத்தை அன்றி வேறு எந்தத் தீர்விற்கும் உடன்படுவதில்லை. 3.அனைத்து மக்களையும் இணைத்த ஆயுதப் போராட்டத்தின் ஊடாக விடுதலையினை வென்றெடுப்பது. 4. ஒரு சோசலிச சமூகத்தை தமிழ் ஈழத்தில் உருவாக்குவது. 5. அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், நவ காலணித்துவத்தினதும் விலங்குகளில் இருந்தும் தமிழ் ஈழத்தை விடுவிப்பது. நாம் ஏற்றுக்கொண்டிருக்கும் குறைந்தபட்ச செயற்திட்டம் பின்வருமாறு அமையும், 1. சிறிலங்கா இராணுவத்திற்கெதிரான எமது ஆயுத நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பது. 2. வெளிநாடுகளில் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தினை முன்னெடுப்பது. 3. விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கான நிதியினை தனியாரிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்கு பொதுவான நிதியம் ஒன்றினை உருவாக்குவது. எமது மக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் அனைத்து விடுதலை இயக்கங்களையும் எம்முடன் இணைந்து விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்ல இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம். இவ்வறிக்கை சிறி சபாரட்ணம், பத்மநாபா மற்றும் பாலகுமார் ஆகியோரினால் கையொப்பம் இடப்பட்டிருந்தது. கருநாநிதிக்கு மிகவும் நெருக்கமானவராகத் திகழ்ந்த சிறி சபாரட்ணம் ஏனையவர்களை இக்கூட்டமைப்பில் இணையுமாறு வலியுறுத்தி வந்தார் என்பதுடன், கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது உடனடியாக அது குறித்து கருநாநிதிக்கும் அறியத் தந்தார். இக்கூட்டமைப்பின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கருநாநிதி, அமைப்பின் தலைவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மறுநாள் தி.மு.க வின் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் இப்புகைப்படம் வெளிவந்திருந்தது. தமிழ் போராளி அமைப்புக்களை ஒரு கூட்டமைப்பிற்குள் கொண்டுவர எடுத்த முடிவினை முதலில் விமர்சித்தவர் எம்.ஜி.ஆர். மறுநாள் புலிகளின் தூதுக்குழுவினைச் சந்தித்த எம்.ஜி.ஆர், பாலசிங்கத்திடம் பேசும்போது புலிகள் ஏன் இந்தக் கூட்டமைப்பில் இணைவதற்குத் தயக்கம் காட்டுகிறார்கள் என்று வினவினார். பதிலளித்த பாலசிங்கம் மூன்று காரணங்களை முன்வைத்து, இக்கூட்டமைப்பு ஏன் சாத்தியப்படாது என்பதை விளக்கினார். விடுதலைப் போராட்டத்தின் மீது முற்றான ஈடுபாடு கொண்டு இயங்குவதற்கான விருப்பம் இல்லாது போதல் : சில அமைப்புக்கள் செயற்பாடுகள் இன்றியே காணப்பட்டன. இன்னும் சில அமைப்புக்கள் கடிதத் தலைப்புகளுடன் தமது செயற்பாடுகளை மட்டுப்படுத்திக்கொண்டிருந்தனர். வேறு சில அமைப்புக்கள் அரசாங்கத்தின் இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களில் ஈடுபட விரும்பவில்லை. தமது இயலாமைக்கான காரணங்களை கண்டுபிடித்து விவாதிப்பதிலேயே அவர்களின் காலம் செலவிடப்பட்டு வந்தது. மேலும், புளொட் அமைப்புப் பேசிவரும் மக்கள்மயப்படுத்தப்பட்ட போராட்டமும், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் சமூகத்தின் அடித்தட்டு வர்க்கத்திலிருந்து போராட்டத்தினை வளர்ப்பது என்பதெல்லாம் தமது இயலாமையினை மறைக்க அவர்களால் முன்வைக்கப்பட்டு வரும் சாட்டுக்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். செயற்பாடுகளைத் திட்டமிடுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் காட்டும் அசமந்தமும், இயலாமையும்: பாலசிங்கம் பேசும்போது, ஏனைய அமைப்புக்கள் தமது செயற்பாடுகளை திட்டமிடுவதிலும், ஒருங்கிணைப்பதிலும் தோற்று வருவதாகக் கூறினார். தமது அமைப்பின் நிதி வளத்தினையே சரியாக முறையில் நிர்வகிக்கவும், தமது போராளிகளைப் பராமரிக்கவும் முடியாமல் இருப்பவர்கள் எவ்வாறு ஒருங்கிணைந்த வழியில் இதனைச் செய்வார்கள் என்று அவர் வினவினார்? ஏனைய போராளி அமைப்புகளில் காணப்பட்ட ஒழுக்கக் கேடான பழக்க வழக்கங்கள் : எம்.ஜி.ஆர் இடம் மேலும் பேசிய பாலசிங்கம், சில அமைப்புக்களில் காணப்படும் நிதிப்பற்றாக்குறையும், திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகிய விடயங்களில் காணப்படும் குறைபாடுகளும் அவ்வமைப்புக்களின் போராளிகளுக்கிடையே ஒழுக்கமின்மையினை ஊக்குவித்து வருவதாகக் கூறினார். மேலும், புலிகளின் போராளிகளிடையே கடுமையான ஒழுக்கத்தினையும், கட்டுப்பாட்டினையும் பேண பிரபாகரன் முன்னுரிமை கொடுத்துவருவதாகவும், பத்திரிக்கைகளில் வரும் போராளி அமைப்புக்களின் சமூகச் சீர்கேடுகள் ஏனைய போராளி அமைப்புக்களினால் செய்யப்பட்டவை என்றும் கூறினார். "தமிழ்நாட்டு மக்கள் தமிழ் ஈழத்தில் போராடி வரும் அனைத்து அமைப்புக்களையும் புலிகள் என்றே அழைத்து வருவதால், வேறு அமைப்புக்களால் செய்யப்பட்டு வரும் ஒழுக்கச் சீர்கேடுகள் புலிகளின் தலையில் வந்து வீழ்கிறது" என்று பாலசிங்கம் தொடர்ந்து கூறினார். 1984 சித்திரையில் எம்.ஜி.ஆர் போராளி அமைப்புக்களிடையே ஒற்றுமையினை வலியுறுத்தியபோதும் அதற்கான அரசியல்த் தேவை அப்போது இருக்கவில்லை. அவ்வாறே, 1982 ஆம் ஆண்டு பாண்டி பஜார் துப்பாக்கிச் சண்டையின்பின்னர் ஈரோஸ் அமைப்பின் அருளரால் முன்வைக்கப்பட்ட அமைப்புக்களுக்கிடையிலான ஒற்றுமை குறித்த கோரிக்கையும் அன்றைய அரசியல் நிலைமையினால் புறக்கணிக்கப்பட்டிருந்தது.1 point- ஒரு சித்தர் பாடல்
1 point1 point- மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, காட்டுயானம் ஆகியவற்றில் எந்த அரிசி உடலுக்கு நல்லது?
👍.... உடல் உழைப்பு இருந்தால், நீங்கள் சொல்வது மிகச் சரியே. இன்று இங்கு இவர்கள் பெரும்பாலும் கணினி தொழில்நுட்ப துறையில் நேரம் காலம் அற்று இருந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள். எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கின்றனர், அந்த விபரங்களுடனேயே நோய்களும் வருகின்றன........1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஎழுதிக்கொடுத்ததையே தடக்குப்பட்டு தடக்குப்பட்டு வாசிப்பவர்கள். ஆதாரமாக பல காணொளிகள் உள்ளது.அதை இங்கே இணைக்கமுடியாது. ஏனெனில் அவை யூரியுப் காணொளிகள். அந்த ஆதாரம் இங்கே செல்லாது.😂 கலைஞர் கருணாநிதியின் தமிழாற்றலும் தமிழறிவும் தமிழ் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் அவர் பிள்ளை மற்றும் பேரப்பிள்ளையிடம் அறவே இல்லாமல் போனது அந்த கட்சியின் துர்ப்பாக்கியமே.திராவிட கட்சிகள் கொள்கையால் வளரவில்லை. மாறாக அன்றைய திராவிட கட்சிகளில் இருந்தவர்களின் மேடைப்பேச்சாற்றல்களும் மக்களை கவரும் வீரவசனங்களும் சினிமா கவர்ச்சியுமே ஒழிய வேறொன்றுமில்லை. 👈🏽 திராவிடம் திராவிடம் என கூறிக்கொண்டு சாதிவாரியான தொகுதி பங்கீடும் சாமிகளிடம் ஆசி பெறுவதும், வாக்குகளுக்காக பணத்தை வாரி இறைப்பதும் எந்த கோட்பாட்டுக்குள் வருமென எனக்கு தெரியவில்லை.😎1 point- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House
உங்கள் சோலர் பனல்கள் பயன் பெறட்டும். மின்சார கட்டணங்கள் இனிமேல் குறைய சாத்தியமில்லை. கோடை அனல் காரணமாக இன்னும் பிரச்சனைகள் வரலாம். அதைவிட தேர்தல்கள் முடிய கட்டணங்கள் மேன்மேலும் அதிகரிக்கலாம். உலக நாட்டு குப்பைகளைப் போடத் தானே இலங்கை போன்ற நாடுகள் உள்ளன.1 point- கடவுள் விற்பனைக்கு
1 pointஅவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள் போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள் அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது 'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள் கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார் அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர் தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:201 point- கடவுள் விற்பனைக்கு
1 pointவிற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஅவர் குதித்து உங்களுக்கு காட்டினாலும் தனது மகனுக்கு ஆங்கில வழி கல்விதானே கற்ப்பிக்கின்றார். அவரது குதிப்புக்கு வெளிநாட்டு ஈழதமிழர்கள் இரசிகர்கள்1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointஉறவே, இப்படியே போனால் எம்மை இறுதியில் பச்சடி போட்டுவிடுவார்கள் என்பதை முன்னமே துல்லியமாக கணிப்பிட்டு உயிரைக் காப்பாற்ற ஓடி வந்த நீங்கள் உட்பட்ட நாம் அனைவரும் அறிவு ஜீவிகள் தான். 😂1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 pointநல்லது உறவே அப்படிபட்ட நீங்கள் தமிழ்நாட்டில் சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭 இலங்கையில் தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது. சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ? சீமானை பற்றி வந்த நல்ல செய்தி ஆங்கில மோகத்தால் தனது மகனுக்கு தமிழ்நாட்டில் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பது 🤣1 point- “நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
1 point1 point- ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை!
நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து, கசையடி விழ வாய்ப்புகள் உண்டு.1 point- அதிசயக்குதிரை
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய தந்திரக் கடிதமும், தெரிந்தே வலையில் வீழ்ந்த ரஜீவும் வட்டுவாகல் பெளத்த தூபி, முள்ளிவாய்க்கால் பிரதேசத்திற்கான நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் ஆக்கிரமிப்பின் சின்னம் ஐக்கிய தேசியக் கட்சியின் இனவன்மத்திற்கு நிகரான வெறுப்பினை எதிர்க்கட்சியான சுதந்திரக் கட்சியும் உமிழத் தொடங்கியது. தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வை அடைய எத்தனிக்காமைக்கும், பயங்கரவாதிகளை முற்றாக அழிக்க முடியாமற்போனமைக்காகவும் அரசாங்கத்தை எதிர்க்கட்சியின் தலைவரான சிறிமா கடுமையாகக் கண்டித்திருந்தார். "உங்களால் வடக்கில் ஒரு கூட்டத்தையோ அல்லது எந்தவொரு நிகழ்வையோ இன்று நடத்த முடியுமா?" என்று அவர் அரசிடம் வினவினார்.தனது தவறுகளை மறைக்கவே நாட்டினைக் கொதிநிலையில் வைத்திருக்க அரசாங்கம் முயல்கிறது என்றும் அவர் கண்டித்தார். எதிர்க்கட்சியினர் நாடு முழுவதும் மேற்கொண்டு வந்த அரசிற்கெதிரான பிரச்சாரத்தை மழுங்கடிக்க ஐக்கிய தேசியக் கட்சியினர் "பயங்கரவாதத்தை முறியடிக்க அரசிற்கு உதவுவோம்" எனும் தலைப்பில் தமது பிரச்சாரத்தை முடுக்கிவிட்டனர். "உன்னை விடவும் நானே தீவிரமான சிங்கள பெளத்தன்" எனும் தொனியில் ஒருவரையொருவர் விஞ்சும் வகையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிங்கள பெளத்தர்களின் நலன்களைக் காத்துக்கொள்ள தமது எதிரிகளை விடவும் தாமே சிறந்தவர்கள் எனும் பிரச்சாரத் தந்திரம் 1952 ஆம் ஆண்டு சிங்கள இனவாதத்தின் பிதாமகன் என்று என்று அறியப்பட்டவரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்த்தாபகருமான எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றைய பிரச்சாரங்கள் அரசாலும், சுதந்திரக் கட்சியினராலும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. நாட்டில் வலிந்து உருவாக்கப்பட்ட தமிழர்களுக்கெதிரான வன்மத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவும் பொறுப்புணர்வு மிக்க பொருத்தமான அரசியல்த் தலைவர் தானே என்று இந்தியாவுக்கும், சர்வதேசத்திற்கும் காட்டுவதற்கு இத்தருணத்தை ஜெயார் பாவித்துக்கொண்டார். பங்குனி 1 ஆம் திகதி ஜெயார் ரஜீவிற்கு எழுதிய கடிதத்தில் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக ஒரு அதிகாரியை இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அரசியல் ரீதியிலான தீர்விற்கு தான் விருப்பம் கொண்டிருப்பதாகவும் அக்கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.மேலும், மாகாணசபைகளை அமைப்பது தொடர்பிலும் தான் சாதகமான கருத்தினைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், இவை எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டையாக இருப்பது பயங்கரவாதம் என்றும், அதனை முற்றாக இல்லாதொழிக்க ரஜீவ் காந்தி தனக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். ஜெயார் ரஜீவுக்கு எழுதிய தந்திரக் கடிதம் "அன்பான ரஜீவிற்கு. 1978 ஆம் ஆண்டு இந்தியாவுக்கான எனது பயணத்தின்போது நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியுடன் இக்கடிதத்தை ஆரம்பிக்க அனுமதி கொடுங்கள். "நான் இந்தியாவினதும் அதன் மக்களினதும் நண்பன். அதன் கலாசார பாரம்பரியத்தை இரசிப்பவன். இந்தியாவின் மிகப்பெரும் மகனான மகாத்மா காந்தியின் சீடன்". நான் இலங்கையின் ஜனாதிபதி என்கிற ரீதியில் மட்டுமல்லாமல், நேரு குடும்பத்தின் நெருங்கிய நண்பன் என்கிற ரீதியிலும் இக்கடிதத்தை எழுதுகிறேன். உங்களின் பேரனாரை 1939 ஆம் ஆண்டு எனது இல்லத்தில் வரவேற்று விருந்தளித்தவன் என்கிற வகையில், உங்களின் குடும்பத்தை நன்றாக அறிந்துகொண்டவன் என்கிற வகையில், அந்தக் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த உங்களுக்கு இக்கடிதத்தை எழுதுகிறேன். உண்மைக்காக, அகிம்சை முறையில் இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய பல தலைவர்களில் ஒருவரான உங்களின் பேரனாரை நான் ஒரு வீரனாக ஏற்றுக்கொண்டிருக்கிறேன். இன்றும் அதே கொள்கைகளைக் கடைப்பிடிக்க நான் முயன்று வருகிறேன். 1941 ஆம் ஆண்டு இந்தியக் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற ராம்கார் நிகழ்வில் நான் பங்கேற்றபோது நேருவின் அலகாபாத் வீட்டிலேயே நான் தங்கியிருந்தேன். பின்னாட்களில் அவர் சிறையிலடைக்கப்பட்டபோது அவரோடு கடிதத் தொடர்பில் நான் இருந்தேன். எமக்கிடையிலான கடிதத் தொடர்பின் நகல்களை நேருவின் நினைவு ஆவணக் காப்பத்திற்கு நான் அனுப்பியிருக்கிறேன். அவற்றினை உங்களை நேரில் சந்திக்கும்போது உங்களுக்குக் காட்டுவதிலும் ஆர்வமாயிருக்கிறேன். 1942 இல் இந்தியாவை விட்டு வெளியேறு எனும் போராட்டத்தின்போது பொம்பேயில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியினரின் கூட்டத்திலும் நான் கலந்துகொண்டிருந்தேன். நான் அன்று தங்கியிருந்த திருமதி ஹூத்தி சிங் வீட்டில் உங்கள் பேரனாரும், உங்கள் தகப்பனாரும் தங்கியிருந்தனர். இக்கடிதத்தின் ஆரம்பத்தில் நான் எழுதிய வாக்கியங்களை நீங்கள் சந்தேகிக்கக் கூடாது, அவை எனது மனதில் ஆழமாகப் பதிந்துவிட்ட நிகழ்வுகளின் எண்ணங்களாகும். ஆனால் துரதிஷ்ட்டவசமாக, எமது நாடுகள் இரண்டிற்கும் இடையில் அண்மைக்காலமாக சில சிக்கல்கள் உருவாகியிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். எனது மனதில் இச்சிக்கல்கள் பலமான தாக்கத்தை ஏறபடுத்தியிருப்பதுடன், இவற்றினை மிக விரைவில் நாம் தீர்த்துக்கொள்ளமுடியும் என்றும் நம்புகிறேன். அந்த வகையில், சில வாரங்களுக்கு முன்னர் எனது அமைச்சருடனான உங்களின் கலந்துரையாடல்களில் நீங்கள் குறிப்பிட்ட சில விடயங்களுக்காக உங்களுக்கு நான் நன்றிகூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் இன்று எதிர்நோக்கும் முட்டுக்கட்டைகளை உடைத்துப்போட இந்தக் கலந்துரையாடல் உபயோகமாகியிருக்கிறது என்று நான் நம்புகிறேன். இதனைச் செய்வதற்கு, உங்களை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவது அவசியம் என்று கருதுகிறேன். ஆனபோதிலும், அவ்வாறான சந்திப்பொன்று நிகழ்வதற்கு முன்னோடியாக உங்களின் மூத்த இராஜதந்திரியொருவரை இங்கு அனுப்பி என்னுடன் பேச ஒழுங்குசெய்வது சாலப் பொறுத்தம் என்று எண்ணுகிறேன். இவ்வாறான ஒரு ஒழுங்கினை நான் மிகவும் வரவேற்பதோடு, உங்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னர், தீர்வுதொடர்பான உங்களின் மனவோட்டத்தினை என்னால் சரிவரப் புரிந்துகொள்ள இது உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். தற்போது நாம் முகம் கொடுக்கும் சில பிரச்சினைகளுக்கான ஒருமித்த தீர்வினை அடைந்துகொள்ள எம்மிருவருக்கும் இது துணைபுரியும் என்பது எனது நம்பிக்கை. எமது பாராளுமன்றத்தில் மாசி மாதம் 20 ஆம் திகதி நான் ஆற்றிய உரையில் காத்திரமான அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தேன். ஆனால், எனது கருத்துக்களை தவறான வழியில் சில வெளிநாட்டு ஊடகங்கள் வெளிக்கொண்டு வந்தன. ஆகையால், எனது பேச்சின் பிரதிகளை உங்களின் பார்வைக்காக இத்தாள் அனுப்பிவிடுகிறேன். எமது எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளை உங்களின் அண்மைய அறிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன. எனது பாராளுமன்ற உரையில் சில விடயங்கள் குறித்து நான் பேசியிருந்தேன். எமது நாட்டின் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் நடைபெற்றுவரும் அசம்பாவிதங்கள் உள்ளடக்கிய சூழ்நிலைக்கு ஒத்த சூழ்நிலையினை பஞ்சாப் போன்ற பகுதிகளில் இந்தியாவும் எதிர்நோக்கியிருக்கிறது. மேலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் பயங்கரவாதிகள் தமது அரக்க முகங்களை வெளியே நீட்டிக்கொண்டு வருகிறார்கள். இலங்கை போன்ற சிறிய நாட்டில் நடக்கும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்த நாட்டின்மீது கடுமையான தாக்கங்களை உண்டுபண்ணினாலும், இங்கிருந்து பல நூறு மைலகள் தொலைவில் இருக்கும் இந்தியாவின் தலைநகரான தில்லிக்கு எமது நாடு முகம்கொடுத்திருக்கும் பயங்கரமான சூழ்நிலை தெரிவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவானவையே. சர்வகட்சி மாநாட்டில் நான் ஆற்றிய பேச்சில் இருவிடயங்கள் குறித்த இணக்கப்பாடுகளை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருடன் என்னால் எட்ட முடியவில்லை. அதாவது, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த ஒரு அலகு மற்றும் இரண்டாவது சபைக்கான யோசனைகள் என்பனவே அவையாகும். ஆனால், ஒரு மகாணத்திற்குற்பட்ட மாகாணசபைகளை அமைக்கும் யோசனையினை நான் வரவேற்கிறேன். அரசியல்த் தீர்விற்கான முயற்சிகள் மேற்கொள்ளும் அதேவேளை, மாகாணசபையூடாக அதிகாராப் பரவலாக்கக் குறித்த பேச்சுக்களில் தொடர்ந்தும் ஈடுபட நான் தயார இருப்பதை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினருக்கும் நான் அறியத் தந்திருக்கிறேன். உங்களிடம் நான் கேட்பது மிகச்சிறிய விடயங்கள் மட்டுமே. இந்தியாவில் அமைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், அங்கிருந்து இலங்கைக்கெதிராக அவர்கள் முன்னெடுத்துவரும் நாசகார வேலைத்திட்டங்கள் குறித்து நாம் மறந்துவிடலாம். ஆனால், அங்கிருந்து எமது நாட்டிற்குள் ஆயுதங்களுடன் அவர்கள் நுழைவதைத் தடுக்க எமக்கு உதவும் அதேவேளை தமிழ் அகதிகள் உவ்விடம் வருவதை தடுக்கவேண்டாம் என்றும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். இதனைச் செய்வதற்கு எமது இரு நாடுகளினதும் கடற்படைகள் இணைந்து கண்காணிப்பில் ஈடுபடும் நடைமுறை ஒன்றினை உருவாக்குவதன் மூலம், வடக்குக் கிழக்கில் நிலைகொண்டிருக்கும் எமது இராணுவத்தினரை போரிடுவதில் இருந்து எம்மால் விலகியிருக்கச் செய்ய முடியும் என்பதோடு, நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தினை முடிவிற்குக் கொண்டுவரவும், வடக்குக் கிழக்குப் பகுதிகளை சுமூகமான சூழ்நிலைக்கு எம்மால் திருப்பிக்கொள்ளவும் முடியும் என்றும் நம்புகிறேன். உங்களின் அயலில் அமைந்திருக்கும் சிநேகபூர்வமான அயலாராகிய எங்களின் நாட்டில் இன்று நடைபெற்றுவரும் உயிரழிவுகளும், சொத்தழிவுகளும் நிறுத்தப்பட்ட நீங்கள் உண்மையாகவே அக்கறை கொண்டு செயற்படுவீர்கள் என்று நான் நம்புகிறேன். நாம் இருவரும் எமது மக்களின் பிரதிநிதிகள். இருவரும் பெரும்பான்மையான வாக்குகளைத் தேர்தலில் பெற்றுக்கொண்டவர்கள். நாட்டில் உள்ள வாக்காளர்களில் 50 வீதத்திற்கும் அதிகமானோர் எம் இருவருக்கும் வாக்களித்திருக்கிறார்கள். அத்துடன், பாராளுமன்றத்தில் இருவரும் ஆறில் ஐந்து பெரும்பான்மையினைப் பெற்றிருக்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் எமது நாடுகளின் ஜனநாயகத்திற்கு மிகவும் ஆபத்தானது. இனப்பிரச்சினைத் தீர்விற்குத் தடையாக இருக்கும் பல விடயங்களில் மிகமுக்கியமானதும், அழிக்கப்படவேண்டியதும் இந்தப் பயங்கரவாதமே என்பதில் எமது நாட்டின் அரசியற் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுத்திருக்கின்றன. இன்று நாம் முகம்கொடுக்கும் ஆபத்தினை உணர்ந்துகொண்டு, உங்களுக்கும் பிரச்சினையாக மாறியிருக்கும் எல்லை கடந்த தமிழ்ப் பயங்கரவாதத்தை அழிக்க எமக்கு உதவுவீர்களா?" ஆனால், இக்கடிதத்திற்குப் பின்னரான ரஜீவின் நடவடிக்கைகள் அவர் ஜெயார் விரித்த தந்திர வலையில் முற்றாக வீழ்ந்துவிட்டார் என்பதனையே காட்டியிருந்தது.1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சோலார் மின்சாரம் வீட்டிற்கு பாவிக்கலாமா? | Solar Power for House