Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  2. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    38756
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19123
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    6
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/06/24 in all areas

  1. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 வணக்கம், T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த வருடம் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைபெற உள்ளது. போட்டிகள் 01 ஜூன் 2024 அன்று முதல் சுற்று குழு நிலைகளில் ஆரம்பித்து 29 ஜூன் 2024 அன்று இறுதிப் போட்டியில் முடிவுறுகின்றது. முதல் சுற்று: முதல் சுற்றில் பங்கு பற்றும் 20 அணிகளும் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 5 அணிகள் விளையாடுகின்றன. அவை தரநிலைப்படி கீழே தரப்பட்டுள்ளன: குழு A: இந்தியா (IND) பாகிஸ்தான் (PAK) கனடா (CAN) அயர்லாந்து (IRL) ஐக்கிய அமெரிக்கா (USA) குழு B: இங்கிலாந்து (ENG) அவுஸ்திரேலியா (AUS) நமீபியா (NAM) ஸ்கொட்லாந்து (SCOT) ஓமான் (OMA) குழு C : நியூஸிலாந்து (NZ) மேற்கிந்தியத் தீவுகள் (WI) ஆப்கானிஸ்தான் (AFG) பபுவா நியூகினி (PNG) உகண்டா (UGA) குழு D : தென்னாபிரிக்கா (SA) சிறிலங்கா (SL) பங்களாதேஷ் (BAN) நெதர்லாந்து (NED) நேபாளம் (NEP) முதல் சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 1 ஜூன் முதல் 17 ஜூன் வரை நடைபெறவுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் தரநிலைகளில் முதலாவதாகவும் இரண்டாவதாகவும் வரும் இரு அணிகளும் சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறவுள்ளன. சுப்பர் 8 சுற்று: சுப்பர் 8 சுற்று போட்டிகளுக்குத் தேர்வாகும் அணிகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் சுற்றில் முதலாவதாக வரும் இரு அணிகளும், இரண்டாவதாக வரும் இரு அணிகளும் இடம்பெறுகின்றன. அவை கீழே உள்ளவாறு பிரிக்கப்படும். குழு 1: A1 B2 C1 D2 குழு 2: A2 B1 C2 D1 சுப்பர் 8 சுற்றில் விளையாடும் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் 19 ஜூன் முதல் 24 ஜூன் வரை நடைபெறவுள்ளன. நொக்கவுட் போட்டிகள் அரையிறுதிப் போட்டிகள்: அரையிறுதித் போட்டிகளில் குழு 1 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும், குழு 2 இல் முதல் இரு இடங்களில் வரும் அணிகளும் பின்வருமாறு மோதும். அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) முதலாவது அரையிறுதிப் போட்டி 26 ஜூன் அன்று ட்ற்னிடாட் & ரொபேகோவிலும், இரண்டாவது அரையிறுதிப் போட்டி 27 ஜூன் அன்று கயானாவிலும் நடைபெறவுள்ளன. இறுதிப் போட்டி: அரையிறுதிப் போட்டிகளில் வெல்லும் அணிகள் 29 ஜூன் அன்று பார்படோஸில் மோதவுள்ளன. கேள்விக்கொத்து பின்னர் வெளியிடப்படும்.
  2. சிட்னியில் வாங்கிய கத்தி Sydney Macquarie அங்காடியின் முதல் தளத்திலுள்ள மின்னூட்டும் தரிப்பிடத்தில் வாகனத்தை கொழுவிவிட்டு அங்காடிக்குள் நுழைந்தேன். வார விடுமுறைக்கு ஏற்ற வளமான கூட்டம். சிட்னியில் அண்மையில் இடம்பெற்ற கொடூரமான கத்திக்குத்து சம்பவங்களால், அங்காடிக்குப் போவதில் அதிகம்பேருக்கு அச்சமிருக்கலாம் என்று எண்ணினேன். ஆனால், அப்படித் தெரியவில்லை. Dymocks புத்தக் கடைக்குள் சென்று, நான் வாங்கவிருந்த புத்தகத்தை எவ்வாறு கேட்பது என்பதை ஓரளவுக்கு மனதுக்குள் தயார் படுத்திக்கொண்டேன். புத்தக விற்பனை நிலையத்திலும் நல்ல கூட்டம். வரிசையில் நின்று எனது முறை வந்ததும், "சல்மான் ருஷ்டி எழுதி வெளிவந்த அவரது கடைசி நூல் உள்ளதா" என்று கேட்டேன். மூன்று இஞ்ச் மூக்கின் இடப்பக்க நுனியில் வெள்ளைக் கல்லு மூக்குத்தி அணிந்த, மெழுகு அழகி அவள். சல்மான் ருஷ்டியை அறிந்திருக்கவில்லை. கணனியில் தேடுவதற்கு முயற்சித்தாள். பெயரை முழுமையாக அறிந்தால்தானே தேடமுடியும். தடுமாறினாள். அவள் தடுமாறுகிறாள் என்பதற்காக " Can I have a Knife" என்று கேட்பதற்கு நான் தயங்கியபடி நின்றேன். அவளால் முடியவில்லை என்பதை முழுதாக உணர்ந்த பிறகு, எனது தொலைபேசியில் Knife புத்தகத்தின் அட்டையை எடுத்துக் காண்பித்து, "இந்த நூல் உள்ளதா" என்று கேட்டேன். புத்தக இறாக்கைகளுக்குள் இறக்கை விரித்து ஓடினாள். அவளைப்போன்ற வெள்ளை அட்டை அணிந்த புத்தகத்தை ஏந்திவந்து என் கைகளில் ஒப்படைத்தாள். பொது இடங்களில் மது அருந்துபவர்கள், காகிதப் பையில் போத்தலை மறைத்துக்கொண்டு பதுங்குவதைப்போல, புத்தகத்தை ஒரு பையில் போட்டுக் கட்டிக்கொண்டு பத்திரமாக வந்து காரில் ஏறினேன். நியூயோர்க் நகரில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12 ஆம் திகதி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த "எழுத்தாளர்களை அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவது எப்படி" என்ற தொனிப்பொருளிலான அரங்கில் சிறப்பு பேச்சாளர்களில் ஒருவராக சல்மான் ருஷ்டி கலந்துகொண்டார். நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து மேடைக்குப் பாய்ந்தோடிச் சென்ற 24 வயது இளைஞன் ஒருவன், ருஷ்டியை சரமாரியாகக் கத்தியால் குத்திச் சல்லடை போட, அவர் இரத்தச் சகதியில் சரிந்தார். முதலில், இந்தத் தாக்குதல், பேச்சின் தொனிப்பொருள் சார்ந்த அரங்காற்றுகை என்று சந்தேகித்த பார்வையாளர்கள் உறைந்திருந்தனர். சில கணங்களில் உண்மையின் தீவிரத்தை உணர்ந்து, எழுந்து குழறினர். ருஷ்டியைக் கொன்றே தீருவதென்று கொலைவெறியாடியவனை, மேடையிலிருந்தவர்கள் பிடித்து மடக்கினார்கள். ருஷ்டி குற்றுயிராக வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். நார் நாராகக் குத்திக்கிழிக்கப்பட்ட 75 வயது முதிய ருஷ்டியை பெரியதொரு மருத்துவர்குழு - பெரும்போராட்டத்துக்குப் பிறகு - சாவிலிருந்து மீட்டெடுக்கிறது. இடக்கையில் பல குத்துகள், கண்ணில் பார்வை நரம்புவரைக்கும் பாய்ந்த கத்தியால் பயங்கரக்காயம், இவற்றைவிட மார்பில் - கழுத்தில் என்று ஏகப்பட்ட ஆழமாக வெட்டுகள். சம்பவம் தொடர்பிலான காணொலியை பின்னர் விசாரணை செய்ததன் அடிப்டையில், கிட்டத்தட்ட 27 செக்கன்கள், ருஷ்டி தன்னைத் தாக்கியவனின் கத்தியோடு மேடையில் நின்று போராடியிருக்கிறார். தான் நுகர்ந்த மரண நெடியையும் - நேர்ந்த அத்தனை அவலங்களையும் - ஒவ்வொரு காயத்திலுமிருந்து உயிர் மீண்ட அனுபவத்தையும் - அவற்றின் பின்னணியில் இடம்பெற்ற பல சம்பவங்களையும் வலிபெயர்த்து விவரிக்கம் அபுனைவுதான் Knife. ருஷ்டி எழுதிய 21 ஆவது நூலான Victory City வெளிவரவிருந்த நிலையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்று, அந்த வெளியீடு அவர் உயிர் மீண்ட பிறகு நடைபெற்றது. தற்போது, Knife வெளியாகி பல லட்சக்கணக்கான வாசகர்களிடம் சென்றடைந்திருக்கிறது. ஒரு எழுத்தாளன் மீதான தாக்குதலில் அவன் உயிர் தப்பினால், அந்த அனுபவத்தை அவன் எவ்வளவுக்கு எல்லைவரை சென்று தன் வாசகனுடன் பகிர்ந்துகொள்வான் என்பதற்கு இந்த நூல் செறிவான உதாரணம். ருஷ்டியின் இந்த நூலில் மிகக் கனிவோடும் இறுக்கமாகவும் பகிர்ந்துகொள்ளும் இரு விடயங்கள் முக்கியமானவை. ஒன்று - அன்பின் மீதான ருஷ்டியின் தீராத பற்றினால், காலம் அவருக்கு எலைஸா என்ற மனைவியை அருளியது. ருஷ்டி ஐந்தாவது தடவையாக எலைஸாவைத் திருமணம் செய்துகொண்டது, எழுத்தாளர் வட்டத்திலேயே அதிகம்பேருக்குத் தெரியாது. எலைஸாவும் அதனைப் பெரியளவில் விரும்பவில்லை. ருஷ்டி மீதான தாக்குதலுக்குப் பிறகு எலைஸா, பேரொளியாய் பெருக்கெடுக்கிறார். ருஷ்டியைத் தன் நிழலில் வைத்து ஏந்துகிறார். ருஷ்டி குறிப்பிடுவதைப்போல அவரளவுக்கு எலைஸாவும் காயமாகி வலி சுமக்கிறார். ருஷ்டிக்குக் கிடத்தட்ட எலைஸாதான் உயிரூட்டி மீட்கிறார். தன்னைவிட முப்பது வயது மூத்த கணவனின் மீது எலைஸா கொண்டுள்ள காதலும், காயம்பட்ட ருஷ்டியை எவ்வாறுப் போராடி வெல்கிறார் என்பதும் இந்த நூலில் மிகக்கனிவான பக்கங்களாக விரிந்திருக்கின்றன. அந்தக் காதலைப் பக்கத்துக்குப் பக்கம் ருஷ்டி கொண்டாடித் தீர்ப்பது மிகவும் நெகிழ்ச்சியானது. இரண்டு - ருஷ்டிக்குள்ளிருக்கும் இந்தக் கனிவான - அன்புக்கு ஏங்கும் - இதயத்துக்கு எதிர் அந்தத்தில் உள்ள அவரது எழுத்தினாலான தன்னகங்காரம். பதினைந்து தடவைகள் குத்திக் குதறப்பட்ட பிறகும், அந்த சல்லடையான உடலில் இருந்து மீண்டு வந்து, தன்னைக் குத்தியவனை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று விரும்புவதும், கடைசியில் அவன் அடைக்கப்பட்ட சிறைச்சாலைக்குச் சென்று அதனை வெளியிலிருந்து படம்பிடித்துவிட்டு "அவனிருந்த அந்தச் சிறையைக் கண்டதும் எனது கால்கள் நடமாடின" - என்று எழுதுவதும் அவரின் எழுத்து-நரம்புகளில் ஓடுகின்ற தன்னகங்காரம்தான். இந்த அகங்காரம்தான் அவரைச் சாவுக்கு எதிராகவும் போராடும் வல்லமையைக் கொடுத்தது. இந்த நூலில் அவர் எழுதாததும் - வாசகன் புரிந்துகொள்ளக்கூடியதுமான புள்ளி - "நான் வேறு எவ்வாறேனும் மரணிக்கத் தயார், ஆனால், இவனது தாக்குதலில் சாகமாட்டேன்" - என்று இறுதிவரை அவருக்குள்ளிருந்த ஓர்மம். இந்தத் திமிர்தான் பதினைந்து மாதங்களில் அவரை மீண்டும், அதே எழுத்தாளனாக அவரது கதிரையில் கொண்டுவந்து இருத்துகிறது. இந்தத் தாக்குதலினால் ருஷ்டி அடைந்த காயங்களும், அவற்றின் விளைவுகளும் ஒவ்வொன்றிலிருந்து வெளியேற அவர் அனுபவித்த - கதறிய - ஓலங்களும் நூலில் வாசகனையே பதறவைக்கக்கூடியவை. சகல காயங்களும் ஆறியபிறகும் அவருக்கு புற்றுநோயுள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட அறிவிப்பும் பிறகு, அது ஏனைய காயங்களின் தொற்றினால் ஏற்பட்டது என்று ஆறிப்போவதும் உள ரீதியாகவே ஒருவருட காலம் அவரை சிதைக்கிறது. தாக்குதல் ஏற்படுத்திய பழைய நினைவுகளினால் விளைந்த கொடும் கனவுகளால் பெருந்துயரடைகிறார். இந்தக் கூட்டு வாதையை ஒரு எழுத்தாளனாக - தனது கருத்தை உறுதியோடு எழுதியதற்காக - ருஷ்டி அனுபவித்து மீண்டிருக்கிறார். Knife நூலில் ருஷ்டிக்கு சமனாக அவரது மனைவி எலைஸாவின் காதலும் எந்த எல்லைவரையும் சென்று தனது கணவரைக் காப்பாற்றுவதற்காகப் போராடும் அவரது ஓர்மமும் வாசிப்பில் நிறைவுதந்தாலும், ருஷ்டியின் தன்னகங்காரமும் எழுத்தாளனுக்கு அந்தக்குணம் இருக்கவேண்டிய தேவையும் அதிகம் ஈர்க்கிறது. தன்னைத் தாக்கியவனைச் சிறையில் சென்று சந்திக்க விரும்பும் ருஷ்டிக்கு அவரது மனைவி மறுப்புச் சொல்கிறார். தாக்குதலாளியின் சார்பிலான சட்டத்தரணிகளே அதற்கு அனுமதிக்கமாட்டார்கள் என்று கூறி கணவனைத் தேற்றுகிறார். அதனை ருஷ்டியே பின்னர் உணர்ந்துகொண்டாலும், நூலின் ஒரு பகுதியை தனக்கும் தனது தாக்குதலாளிக்கும் இடையிலான கற்பனை உரையாடலாக ருஷ்டி எழுதுகிறார். அந்த உரையாடல், மிகவும் முதிர்ச்சியானது. இந்த உரையடலை, தன்னைப் பதினைந்து தடவைகள் குத்தியவனை திட்டித் தீர்ப்பதற்கு ருஷ்டிய பயன்படுத்தவில்லை. அவனுக்கு எதிராக தனது ஏளனங்களைப் பதிவுசெய்வதற்கும் - விலங்கணிந்த அவனது குற்றத்தை எள்ளி நகையாடுவதற்கும் நீட்டிக்கொள்ளவில்லை. மாறாக, அவனது தரப்பிலிருக்கக்கூடிய கொலை வாதங்களை சமமாக முன்வைக்கிறார். அவனது அடிப்படைவாத மனநிலையை அவனது கத்தியின் முனையிலிருந்து புரிந்துகொள்கிறார். லெபனானுக்குச் சென்று திரும்பியதிலிருந்து நான்கு வருடங்களாக வீட்டின் ஒரு மூலையிலிருந்து youtube பார்ப்பதையே முழுநேரமாகச் செய்துகொண்டிருந்தவன், அடிப்படைவாதத்திற்குள் ஈர்க்கப்பட்ட கோரத்தையும் - அதன் பரிதாபமான விளைவுகளையும் - தான் எந்த வகையில் அவனுக்கு எதிரியாகவேண்டும் என்ற நியாயமான கேள்வியையும் கனிவோடு முன்வைக்கிறார். சமூகவலைத்தளங்களில் algorithm உலகிற்குள் ஒருவன் தன்னை அறியாமல் வசீகரிக்கப்படக்கூடிய சீரழிவின் உச்சத்தையும் அதன் கோரமான விளைவையும் காயங்களின் பிரதிநியாக நின்று பகிர்ந்துகொள்கிறார். சுமார் ஏழாயிரம் மொழிகள் பேசப்படுகின்ற இவ்வுலகில், தன்னுடன் பேசுவதற்கு தனது தாக்குதலாளி, வன்முறையைத் தெரிவுசெய்த காரணத்தை திரும்பத் திரும்ப வெவ்வேறு தளங்களில் முன்வைத்து, இறுதியில் "நீ என்னைக் கொலைசெய்ய முயன்றாய், ஏனெனில், உனக்கு புன்னகைப்பது எப்படி என்று தெரியாது" - என்று நிறைவுசெய்கிறார். எழுத்தை எழுத்தால் - கருத்தைக் கருத்தால் - எதிர்கொள்ளமுடியாமல் வன்முறைகளை எதிர்கொண்ட எல்லா எழுத்தாளர்களும் இந்தக் கடைசிவரியில் கண்முன் வந்து போகிறார்கள். முன்னர் குறிப்பிட்டதைப்போல, ருஷ்டி போன்றோருக்கு இப்படியானதொரு நிகர் அனுபவம் ஏற்படும்போது, அதன் விளைவு இவ்வாறான மிகவும் எடைமிகுந்த நூலாகவே வெளியாகும் என்பதில் ஆச்சரியமில்லை. ருஷ்டியின் பலம் அவர் வரலாற்றின் மீதுகொண்ட ஆழமான புரிதலும் மொழியை லாவகமாக சுழற்றியெடுத்து, எழுத்தின் திசை வகுக்கும் வல்லமையும்தான். இந்தநூலிலும் அந்தக் கூட்டு-நகர்வு செறிவாக அமைந்துள்ளது. இரண்டாம் வாழ்வைப்போராடிப் பெற்ற ஒரு எழுத்தாளனின் இரத்த சாட்சியமாக இந்த நூலைப் படிப்பதற்கு அப்பால், நடப்பு உலகில் கூர்மையடையும் அடிப்படைவாதத்தின் இழிநிலையைப் புரிந்துகொள்வதற்கும் இன்றைய உலகம் முகங்கொடுக்கவேண்டிய புதிய அறம் சார்ந்த கேள்விகளையும் Knife பல்வேறு புள்ளிகளின் ஆழமாகப் பேசுகிறது. https://www.theivigan.co/post/10010?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR26MAPFw_SwSbeSdcMqt0SwsM_THBF_nVCimymF7EXIedky2UGZ4oUs2o0_aem_AXE9RuBkFXBf3oING05d-XBPJLRgiq8r3oBRnEND4_9ymHP_lHI861NcPqoy6HShFCCyx7VGrByFw3e7CrYXudc7
  3. இந்த டக்கிக்கு யாராவது விளங்கப்படுத்நுங்கோ.. இந்த தலைவர்தான் பலகட்சிகளை ஒருவ்கிணைத்து ஒரு கட்சியாக தமிழரி ன்ன்பாராளுமன்ற பிரதித்துவனத்தை அதிகரித்தவர். அவர் இல்லையென்றபின் அந்த பிரதிநித்துவம் கட்டெறும்பாய் தேய்ந்த கதைதான் எல்லாருக்கும் தெரியுமே.
  4. கொழும்பில் வெள்ளவத்தையில் ஒரு சாப்பாட்டு கடையில் இட்லி பொதி வாங்கியபோது அவிஞ்ச இட்லியுடன் ஒரு சிலந்தியின் அவிஞ்ச காலும் மூட்டுக்களுடன் வந்தது. சிலந்தி காலை ஒரு பக்கம் தூக்கிவீசிப்போட்டு இட்லியை மட்டும் முழுங்கிப்போட்டு பேசாமல் ஒரு சம்பவமும் இடம்பெறாதது போல் உள்ளார்கள். இதை எல்லாம் படம் எடுத்து செய்தி ஆக்குவதா? 😩
  5. https://www.facebook.com/ilanchellian சுற்றுல்லா பயணிகளுக்கு விருந்தினர் விசா வழங்கும் சேவை SLT Mobitel PLC நிறுவனத்திடமிருந்து VFS Global எனும் வெளிநாட்டு நிறுவனத்திற்கு கைமாற்றி உள்ளார்கள் அதாவது Mobitel எந்த இலாபமன்றி 12 ஆண்டுகளாக வழங்கிய online visa சேவையை VFS Global க்கு கைமாற்றி உள்ளார்கள் இது தொடர்பில் Tiran Alas முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு திரு ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது இதன் காரணமாக விசா சேவை கட்டணம் 2477% அதிகரிக்கப்பட்டள்ளது அதாவது வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு விசா சேவை கட்டணம் 1 டொலரிலிருந்து 25.77 டொலராக அதிகரித்துள்ளது ($18.5 + convenience) இதனூடாக VFS Global என்கிற வெளிநாட்டு நிறுவனம் இலங்கை சுற்றுல்லா பயணிகளிடம் ஆண்டு ஒன்றுக்கு 12.76 பில்லியன் ரூபா வருமானம் உழைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது அரச நடைமுறைகளுக்கு மாறாக குறிப்பாக எவ்விதமான கேள்விப்பத்திர நடைமுறைகளை பின்பற்றமால் இவ மாற்றங்களை செய்துள்ளார்கள் மேற்படி விசா சேவையை வழங்க VFS Global ரூபா 60 பில்லியன் முதலீடு செய்திருப்பதாக சொல்லப்படுகின்ற போதும் விசா சேவைக்காக 24 கரட் தங்கத்தில் கணினி வலைஅமைப்புகளை பயன்படுத்தினாலும் கூட ரூபா 60 பில்லியன் முதலிட வேண்டியதில்லை என்பதை நிபுணர்கள் அம்பலப்படுத்தியுள்ளார்கள் மறுபுறம்மேற்படி மாற்றங்கள்காரணமாகவெளிநாட்டு சுற்றலாபயணி ஒருவர் சுற்றலா விசா ஒன்றுக்கு 100.77 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது இதனால் 4 பேர்குடும்பம் விசாவிற்காக மட்டும் 400 அமெரிக்கா டொலர் செலவழிக்க வேண்டி ஏற்பட்டுள்ளது பொருளாதார சீரழிவிற்க்கு பிறகுஇலங்கை பொருளாதாரம் கடன், புலம்பெயர் இலங்கையர் அனுப்பும் பணம் மற்றும் சுற்றுல்லா பயணிகளிடம் மட்டுமே தங்கி இருக்கின்றது இவ் ஆண்டு 2.4 மில்லியன் சுற்றுல்லா பயணிகளை எதிர்பார்த்துள்ள நிலையில் இந்த மோசடியுடாக சுற்றுலா பயணிகளிடம் விசா சேவை கட்டணம் என்கிற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்க முயற்சிப்பதால் சுற்றுலா துறையை ஆபத்தில் தள்ளியுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது கெஹலிய ரம்புக்வெல்ல ரூபா 130 மில்லியன் பெறுமதியான தரமற்ற மருந்து இறக்குமதியில் சிக்கிய பொது அவரை காப்பாற்ற ரணில் விக்ரமசிங்கே முயற்சித்தார் ஜப்பான் நிறுவனத்திடம் லஞ்சம் கேட்ட நிமல் ஸ்ரீ பால டி சில்வா வை காப்பாற்றினார் டக்ளஸ் தேவானந்தாவின் கடற்தொழில் அமைச்சு எவ்வித முறையான கொள்முதல் நடவடிக்கையின்றி 12,000 கிலோவுக்கும் அதிகமான மீன்களை சீனாவிடமிருந்து இறக்குமதி செய்த பொது அமைகியாக இருந்தார் தற்போது அமைச்சர் Tiran Alas மத்திய வங்கி பிணை முறி மோசடிக்கு இணையான 12.76 பில்லியன் ரூபா விசா மோசடியில் சிக்கியுள்ளார் இதற்கு திரு ரணில் விக்கிரமசிங்கே தலைமையில் அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது இலங்கை தீவில் மோசடிகள் Normalize செய்யப்பட்டுள்ளது . இதனால் தான் பொருளாதார சீரழிவிற்கு பின்னரும் கூட கூச்சமில்லாமல் திருடுகின்றார்கள் நன்றி-இனமொன்றின் குரல்
  6. உணவகம் எந்த இனத்தவரால் நடத்தப்படுகிறது? இந்த டீடெய்ல் தெரிந்த பின்பே கண்டிப்பதா இல்லை கண்டும் காணாமல் போவதா என நாம் தீர்மானிக்க முடியும்🤣.
  7. நாட்டுக்கு பயணிகள் வராவிட்டால் பரவாயில்லை கமிசன் ஒழுங்கா வந்தா சரி.
  8. மகிந்த எனும் இனக்கொலையாளிக்குப் பாடம் கற்பிக்க எண்ணி பொன்சேக்கா எனும் இன்னொரு இனக்கொலையாளிக்கு வாக்குச் செலுத்தி, அவன் செய்த அக்கிரமங்களை நாம் நியாயப்படுத்தியதை விடவும் தமிழருக்கென்று பொதுவான வேட்பாளரை நிறுத்தி அவரை ஆதரிப்பது எவ்வளவோ மேல்.
  9. ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️இனிமேல்... மரத்தையும், மலையையும் வெட்ட மாட்டேன். ✍️ 😁
  10. என் மனதில் தோன்றும் வினாக்கள், உங்கள் மனதில் தோன்றும் வினாக்கள் இங்கு பகிரப்படலாம். வினாக்களுக்கு விடை அறிந்தவர்கள் பதில் பகருங்கள். நகைச்சுவையான வினாக்கள், அறிவுபூர்வமான வினாக்கள், அறுவை வினாக்கள் என பல தரப்பட்ட அம்சங்களை இங்கு காணலாம். பதில்களும் நகைச்சுவையாகவோ, அறிவுபூர்வமாகவோ அல்லது அறுவையாகவோ வரலாம். கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவாக இந்த உரையாடலில் எல்லோரும் பங்குபெறுவோம். நன்றி! ••••••• வினா: ஒரு செயலியில் (உ+ம்: வாட்ஸப்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அது தோன்றும் வரை காத்து இருப்பதற்கும் ஒரு இணையத்தளத்தில் (உ+ம்: யாழ்.கொம்) ஒரு படத்தையோ அல்லது காணொளியையோ சொடுக்கிய பின் அவை தென்படும்வரை காத்தல் செய்வதற்கும் உள்ள வேறுபாடு என்ன? ••••••• தொடரும் ♻️
  11. பௌத்த வினாவல் - ஹென்றி ஸ்டீல் ஆல்காட் பகுதி ஒன்று - புத்தரின் வாழ்க்கை புத்தர், பிட்சை கேட்பவராக - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 1. நீங்கள் எந்த மதத்தை(religion)* சேர்ந்தவர்? பௌத்தம் 2. பௌத்தம் என்றால் என்ன? புத்தர் என்ற மாபெரும் ஆளுமையால் வழங்கப்பட்ட போதனைகளை உள்ளடக்கியது. 3. இந்த போதனைகளுக்கு ‘பௌத்தம்’ (Buddhism) என்பது தான் சிறந்த பெயரா? இல்லை, அது (Buddhism) மேற்கத்திய சொல்வழக்கு, ‘புத்த தர்மம்’ என்பதுதான் அதற்கு சரியான பெயர். 4. பௌத்தத்தை பின்பற்றும் பெற்றோருக்கு ஒருவர் பிறந்ததால் அவரை பௌத்தர் என்று நீங்கள் அழைப்பீர்களா? நிச்சயமாக இல்லை. புத்தரை மிக உன்னதமான ஆசிரியர் என்றும், அவர் போதித்த போதனைகளின் மீதும், அர்ஹத்தர்களின் சகோதரத்துவத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையிலும் அவருடைய போதனைகளை பின்பற்றுபவரே பௌத்தர். 5. ஆண் ‘பௌத்தர்களை’ எவ்வாறு அழைப்பது? உபாசகர் 6. பெண்களை? உபாசகி 7. புத்தரின் போதனைகள் முதன்முதலில் எப்போது உரைக்கப்பட்டன? அந்த நாளை சரியாக குறிப்பிடுவதில் சில கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால் சிங்கள பௌத்த நூல்களின் படி அது கலியுகத்தின் (தற்போதைய யுகம்) 2513-ஆம் ஆண்டு ஆகும். 8. புத்தரின் கடைசி பிறவியில் முக்கியமான தினங்களை பற்றி சொல்லுங்கள். புத்தர் கலியுகம் 2478-ஆம் ஆண்டு விசாகா நக்ஷத்திரத்தில் வைகாச பௌர்ணமியும் செவ்வாய்கிழமையும் கூடிய நாளில் பிறந்தார். 2506-ஆம் ஆண்டு அரசை துறந்து காடேகினார், 2513-ல் ‘புத்தர்’ ஆனார். பிறகு 2558-ஆம் ஆண்டு தன்னுடைய எண்பதாவது வயதில் பிறவி சுழற்சியிலிருந்து விடுபட்டு பரிநிர்வானத்தில் நுழைந்தார். இந்த ஒவ்வொரு நிகழ்வுமே வைகாசி பௌர்ணமியில் நடந்ததால் பௌத்தர்கள் வைகாச பௌர்ணமியை பெரும் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். 9. புத்தர் கடவுளா? இல்லை, புத்த தர்மம் எந்த ”தெய்வீக” அவதாரத்தையும் போதிப்பதில்லை. 10. புத்தர் மனிதரா? ஆம். ஆனால் ஞானி, மேன்மையானவர், உன்னதமானவர். பிற எந்த உயிர்களை விடவும் எவற்றை விடவும் எண்ணற்ற பிறவிகள் வழியாக தன்னைத்தானே மேம்படுத்திக்கொண்டவர், அவருக்கு முந்தைய புத்தர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. 11. கௌதம புத்தருக்கு முன்பு வேறு புத்தர்கள் இருந்தனரா? ஆம், ஆனால் அதை பிறகு விளக்குகிறேன். 12.‘புத்தர்’ என்பது தான் இவரின் பெயரா? இல்லை, இது ஞானத்தின் உச்சத்தை அடைந்த பிறகு உள்ள நிலை அல்லது அந்த ஞான நிலையின் பெயர். 13. அப்படி என்றால்? ஞானம் அடைந்தவர், அல்லது முழுமையான ஞானம் கொண்டவர் என்று பொருள். பாலி மொழியில் ‘சப்பாண்ணு’, எல்லையில்லா அறிவுடையவன் என்று பொருள். சமஸ்கிருதத்தில் ஸர்வக்ஞன். 14. அப்போது புத்தரின் இயற்பெயர் என்ன? சித்தார்த்தன் என்பது அவரது இயற்பெயர், கௌதமர் அல்லது கோதமர் என்பது அவரது அரசகுடும்பப் பெயர். அவர் கபிலவஸ்துவின் இளவரசர் சூரிய வம்சத்தைச் சேர்ந்த ஒக்கக்காவின் புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்தவர். 15. அவருடைய தாய், தந்தையர்? தந்தை அரசர் சுத்தோதனர். அன்னை மாயா, மஹாமாயா என்றும் அழைப்பார்கள். 16. சுத்தோதனர் எந்ந நாட்டின் அரசர்? அரசர் சுத்தோதனர் க்ஷத்ரிய குலத்தைச் சேர்ந்தவர். சாக்கியர்களின் கபிலவஸ்துவிற்கு அரசராக இருந்தார். 17. கபிலவஸ்து எங்கிருந்தது? கபிலவஸ்து இந்தியாவின் நேபாள் பகுதியில் அமைந்திருந்தது. வாரணாசிக்கு வடகிழக்கே நூறு மைல் தொலைவிலும், இமயத்திலிருந்து நாற்பது மைல் தொலைவிலும் இருந்தது. இப்போது கபிலவஸ்துவின் எச்சங்கள் கூட அழிந்துவிட்டன. 18. கபிலவஸ்து எந்த நதிப்படுகையில் அமைந்திருந்தது? ரோஹினி நதி, இப்போது அதை கோஹனா என்று அழைக்கிறார்கள். 19. இளவரசர் சித்தார்த்தர் எப்போது பிறந்தார் என்பதை எனக்கு மீண்டும் ஒருமுறை சொல்லமுடியுமா? கிருஸ்து பிறப்பதற்கு 633 ஆண்டுகள் முன்பு சித்தார்த்தர் பிறந்தார். 20. புத்தர் சரியாக எந்த இடத்தில் பிறந்தார் என்று தெரியுமா? ஆம், அது இப்போது சந்தேகத்திற்கு இடமில்லாமல் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நேபாளத்தின் காட்டில், புத்தரை பின்பற்றிய புகழ்பெற்ற சக்ரவர்த்தி அசோகரின் ஸ்தூபி ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். அதில் புத்தர் பிறந்த இடம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் அந்த இடம் லும்பினி தோட்டம் என்று அழைக்கப்பட்டது. 21. சித்தார்த்தரும் அனைத்து இளவரசர்கள் மாதிரி ஆடம்பரமான ராஜபோக வாழ்க்கையில் தான் இருந்தாரா? ஆமாம், அவருக்கு அவர் தந்தையான அரசர் சுத்தோதனர், இந்தியாவின் மூன்று பருவகாலத்திலும் தங்குவதற்கு உகந்த அற்புதமான மூன்று மாளிகைகள் கட்டிக்கொடுத்திருந்தார். குளிர்கால மாளிகை ஒன்பது அடுக்குகளுடனும், வேனிற்கால மாளிகை ஐந்து அடுக்குகளும், மழைகால மாளிகை மூன்று அடுக்குகளும் கொண்டவையாக அவை அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. 22. அந்த மாளிகைகள் எவ்வாறெல்லாம் அலங்கரிக்கப்பட்டிருந்தது? ஒவ்வொரு மாளிகைகளிலும் பலவிதங்களில் அழகழகான வண்ணங்கள் நிறைந்த வாசனை பூந்தோட்டங்கள் நீர்வீழ்ச்சியுடன் அமைக்கப்பட்டிருந்தன. அங்கு உள்ள மரங்கள் அனைத்திலும் பறவைகள் பாடிக்கொண்டும் மயில்கள் நடனமிட்டுக்கொண்டும் இருந்தன. 23. அங்கு அவர் தனியாகவா வசித்தார்? இல்லை இல்லை. சித்தார்த்தர் தனது பதினாறாம் வயதில் அரசர் சுப்ரபுத்தாவின் மகள் யசோதரையை மணந்து அவருடன் வாழ்ந்தார். அதுமட்டுமல்லாமல் நடனத்திலும் இசையிலும் தேர்ச்சிபெற்ற பல அழகிய ஆடல்பெண்கள் அவரை மகிழ்விப்பதற்காவே மாளிகைக்கு வந்துகொண்டும் இருந்தனர். 24. எவ்வாறு அவர் யசோதரையை மணம்புரிந்தார்? யசோதரையின் தந்தை சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் பல நாட்டின் இளவரசர்கள் தங்களின் வீரத்தையும் திறமைகளையும் காட்டவந்திருந்தனர். தொன்மையான க்ஷத்ரியமுறைப்படி அவர்களை வென்று சித்தார்த்தன் யசோதரையை மணம்புரிந்தார். 25. எப்படி, இத்தனை சுகபோகங்களுக்கு நடுவில் இருந்த ஒரு இளவரசன் ஞானியாக முடியும்? குழந்தைப் பருவத்திலேயே எல்லாக் கலைகளையும் சாஸ்திரங்களையும் விரைவாக புரிந்துகொள்ளும் ஞானம் சித்தார்த்தனுக்கு இயல்பாக அமைந்திருந்தது. மிகச் சிறந்த ஆசிரியர்கள் அவருக்கு அமைந்தார்கள், ஆனாலும் அவரால் எளிதில் புரிந்துகொள்ளமுடியாத ஒன்றை அந்த ஆசிரியர்களால் அவருக்கு கற்றுக்கொடுக்கமுடியவில்லை. 26. அவர் தனது பிரம்மாண்டமான அழகிய மாளிகைகளில் இருந்துகொண்டே புத்த நிலையை அடைந்துவிட்டாரா? இல்லை. அவர் எல்லாவற்றையும் துறந்து, தனிமையில் காடேகினார். 27. அவர் ஏன் அவ்வாறு செய்தார்? நம் துயரங்களின் காரணங்களை கண்டறியவும், அவற்றிலிருந்து விடுதலை அடையவும். 28. இவ்வாறு அவரை செய்யவைத்தது அவருடைய சுயநலம் அல்லவா? இல்லை, உயிர்களின்மேல் கொண்ட எல்லையில்லா அன்பினால் அவற்றின் நன்மைக்காக தன்னை முழுமையாக இதில் ஈடுபடுத்திக்கொண்டார். 29. ஆனால் எவ்வாறு அவர் எல்லையில்லா அன்பை உணர்ந்துகொண்டார்? எண்ணற்ற பிறவிகள் பிறந்தும் பற்பல நூற்றாண்டுகளாகவும் அவர் இந்த அன்பை உணர்ந்து வந்திருக்கிறார், புத்தராகும் ஒரே லட்சியத்தோடு. 30. அவர் எதைத் துறந்து விலகிசென்றார்? அவருடைய அழகிய மாளிகைகள், செல்வம், ஆடம்பரம், சிற்றின்பம், மென்மெத்தைகள், நல்லாடைகள், உயர்தர உணவு அவரது அரசுரிமை ஆகியவற்றையும். தன்னுடைய காதல் மனைவி யசோதரை, அன்பு மகன் ராகுலாவையும் கூட அவர் விட்டுவிலகி சென்றார். 31. மனித குலத்தின் நன்மைக்காக வேறெவரேனும் இத்தகைய தியாகம் செய்திருக்கிறார்களா? இன்றுள்ள காலகட்டத்தில் யாருமில்லை. இதனால்தான் பௌத்தர்கள் அவரை மிகவும் நேசிக்கின்றனர், பௌத்தர்களில் சிறந்தவர்கள் அவரைப் போல வாழ முயற்சிக்கின்றனர். 32. ஆனால் பலர் இவரை போலவே உலக இன்பங்களையும், ஏன் தங்கள் உயிரையே கூட சக மக்களின் நன்மைக்காக துறந்திருக்கிறார்களே? உண்மைதான். எனினும் இவர் மனிதர்கள் மேல் கொண்ட சுயநலமற்ற பேரன்பினால் அவர்களுக்காக யுகயுகங்களுக்கு முன்பு தீபங்கர-புத்தரின் காலத்தில் தான் அடையவிருந்த அரிய நிர்வாண முக்தி நிலையை துறந்தார். அப்போது அவர் பிராமண சுமேதராக பிறந்தார். நிர்வாணத்தில் நுழைவதற்கான நிலையை அடைந்திருந்தார். மனிதர்கள் மீது அன்பில்லாமல் தன்னை மட்டுமே கருத்தில் கொண்டிருந்தால் அவர் நிர்வாணத்தில் நுழைந்திருப்பார் அல்லவா. விடுதலைக்கும் உலக அமைதிக்குமான வழியையும் அனைத்து உயிர்களுக்கும் பொதிப்பதற்காக நிர்வாணத்தை துறந்து, இப்பிறவியை எடுத்து, வலுகட்டாயமாக தன்னை உலக துயர்களில் ஆழ்த்திக்கொண்டார், புத்தனாக ஆகும்வரை. 33. அவர் கானகம் புகந்த போது அவருக்கு என்ன வயது? அப்போது அவருக்கு 29வது வயது. 34. எது அவரை தீர்க்கமாக மனிதர்கள் விரும்பும் அனைத்தையும் துறந்து கானகம் புக வைத்தது? அவர் தன் பல்லக்கில் வலம் சென்றபோது தேவன் ஒருவன் நான்கு வெவ்வேறு தருணங்களில் நான்கு விதமான ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தும் வடிவங்களில் காட்சி தந்தார். 35. அந்த வடிவங்கள் என்னென்ன? மிகவும் வயதாகி தளர்ந்த கிழவராக, நோய்வாய்பட்ட ஒருவராக, அழுகும் ஒரு பிணமாக, எல்லாம் துறந்த துறவியாக. 36. அவர் மட்டுமா அதை பார்த்தார்? இல்லை, அவர் சேவகன் சன்னாவும் அவைகளை பார்த்தான். 37. ஏன் சாதாரணமாக எல்லோரும் காணும் காட்சிகள் அவரை மட்டும் கானகம் செல்ல தூண்டியது? நாம் அடிக்கடி அத்தகைய காட்சிகளை காண்போம், ஆனால் அவர் கண்டதில்லை. ஆகையால் அவை அவர் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தின. 38. ஏன் அவர் அவற்றை இதற்கு முன்பு பார்க்கவில்லை? அவர் பிறந்த போது பிராமண நிமித்திகர்கள் அவர் ஒரு நாள் தன் அரசை துறப்பார் என்றும் பிறகு புத்தனாவார் என்று கணித்து கூறினார்கள். ஆகவே அரசர் அதாவது அவரது தந்தை தன் அரசை வழிநடத்தபோகும் ஒரே வாரிசு மனித துயர்களையும் இறப்புகளையும் காணும் சந்தர்பங்களை மிகவும் கவனத்துடன் தவிர்த்து வந்தார். இளவரசரிடம் அதை பற்றி பேசவும் யாருக்கும் அனுமதியில்லை. அவர் தனது அழகிய பெரிய மாளிகைகளிலும் பூந்தோட்டங்களிலும் ஒரு கைதிபோல வாழ்ந்துவந்தார். அவை பெரும் மதில்களால் சூழப்படிருந்தன, எத்தனை அழகு சாத்தியமோ அத்தனை அழகுடன் அவை அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆகவே இளவரசர் வெளியேயுள்ள துன்பங்களையும் வேதனைகளையும் சென்று பார்க்க விரும்பமாட்டார் என்று அவரது தந்தை நினைத்தார். 39. அவரின் தந்தை தன் மகன் உலக நன்மைக்காக எல்லாவற்றையும் துறந்து செல்வார் என எண்ணும் அளவிற்கு இளவரசர் அத்தனை அன்பு-உள்ளம் கொண்டவரா? ஆமாம். அவர் எல்லா உயிர்களிடமும் மிகுந்த அன்பும் கருணையும் கொண்டிருந்தார். 40. அவர் எங்ஙனம் துயரங்களுக்கான காரணத்தை கானகத்தில் அறியமுடியும் என எண்ணினார்? அனைத்திலிருந்தும் விலகி தொலைதூரத்திற்கு செல்வதனால் துயரங்களின் காரணத்தின் மீதும் மனித இயல்பு மீதும் ஆழ்ந்த சிந்தனையை செலுத்த இயலும். 41. எவ்வாறு அவர் மாளிகையிலிருந்து தப்பிசென்றார்? ஒருநாள் இரவில் அனைவரும் உறங்கியபின் அவர் விழித்துக்கொண்டார். தன் மனைவியையும் சிறு குழந்தையையும் ஒருமுறை பார்த்தார். பிறகு தனது சேவகன் சன்னாவை அழைத்தார். தன்னுடைய விருப்பமான வெள்ளை குதிரையான காந்தகாவில் சேணம் ஏற்றி மாளிகையின் வாயில்கதவருகே சென்றார். வாயில் காப்பாளர்கள் ஆழ்ந்த துயிலும்படி செய்தனர் தேவர்கள். ஆகையால் குதிரையின் குளம்பொலியைக்கூட அவர்கள் கேட்கவில்லை. சித்தார்த்தனின் புறப்பாடு - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 42. ஆனால் கதவு பூட்டித்தானே இருந்திருக்கும்? ஆம், ஆனால் தேவர்கள் சிறு ஒலிகூட எழாமல் கதவை திறக்கச்செய்தனர். பிறகு அவர் குதிரையில் இருட்டில் பாய்ந்து சென்றுவிட்டார். 43. அவர் எங்கு சென்றார்? ஆனோமா ஆற்றங்கரைக்கு. கபிலவஸ்துவிலிருந்து நெடுந்தொலைவில் இருப்பது. 44. பிறகு என்ன செய்தார்? குதிரையிலிருந்து கீழ் குதித்தார். அழகிய தலை முடியை வாளால் மழித்துக்கொண்டார். காவியுடை தரித்துகொண்டார். குதிரையையும் ஆபரணங்களையும் சன்னாவிடம் கொடுத்து தன் தந்தையிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார். 45. பிறகு? நடைப்பயணமாக ராஜகிரஹம் சென்றார். அது மகத அரசன் பிம்பிசாராவின் தலைநகரம். 46. அங்கு அவரை யார் சந்தித்தார்கள்? அரசன் தன் அமைச்சர்கள் அனைவருடனும் சென்று அவரை சந்தித்தார். 46a. அங்கிருந்து எங்கே சென்றார்? உருவெல்லா, தற்போது மஹாபோதி ஆலயமுள்ள புத்த கயாவிற்கு அருகில். 47. அவர் ஏன் அங்கே சென்றார்? அங்கிருந்த கானகத்தில் துறவிகளும் ஞானிகளும் இருந்தனர். தன்னுடைய தேடலுக்கான அறிவு கிடைக்கும் எனும் எதிர்பார்ப்பில் அவர்களிடம் சீடனாக சேர்ந்துகொண்டார். 48. அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்? இந்து மதம். அங்கிருந்தவர்கள் பிராமணர்கள். 49. அவர்கள் என்ன கற்றுக்கொடுத்தனர்? கடுமையான தவத்தின்மூலமும் உடலை வருத்திக்கொள்வதன் மூலமும் மனிதனால் சரியான ஞானத்தை அடையமுடியும் என்று. 50. இளவரசன் இதை சரியென்று உணர்ந்தாரா? இல்லை, அவர்களின் நியதிகளை கற்றுகொண்டார், கடும் தவங்களை பயிற்சிசெய்தார். ஆனால் அவரால் மனித துயரின் காரணங்களை, முழுமையான விடுதலைக்கான வழியை அறியமுடியவில்லை. 51. பிறகு என்ன செய்தார்? உருவெல்லா அருகேயுள்ள கானகத்துள் சென்றுவிட்டார். அங்கே அவர் ஆறு ஆண்டுகள் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். அழியக்கூடிய தன் உடலின் மீது தீவிரமான ஒழுக்க விதிகளை ஏற்றிக்கொண்டார். 52. அவர் தனியாக இருந்தாரா? இல்லை, ஐந்து பிராமணர்கள் உடனிருந்தனர். 53. அவர்கள் பெயரென்ன? கொண்டன்னா, பட்டியா, வப்பா, மஹானாம, அஸாஜி. 54. தனது மனதை திறந்து வைத்து முழு உண்மையை அறிய எந்த விதமான திட்ட விதிகளை அவர் கடைபிடித்தார்? அவர் ஓரிடத்தில் அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார். வாழ்வின் அதிஉச்ச சிக்கல்களில் மட்டும் தன் மனதை நிலைக்கச்செய்தார். தனது தியானத்தை குலைக்கும் எந்த காட்சிக்கும் ஒலிகளுக்கும் தன் கவனம் செல்லாது அடைத்துக்கொண்டார். 55. அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டாரா? ஆமாம், அந்த தியான காலம் முழுவதும் அவர் மேலும் மேலும் மிக சிறு அளவே உணவும் நீரும் உட்கொண்டார். அதன் உச்சமாக தினமும் ஒரு பருக்கை அரிசி அல்லது எள்ளு மட்டுமே உட்கொண்டார் என்று கூறப்படுகிறது. 56. இந்த கடும் தவம் அவர் தேடிய ஞானத்தை கொடுத்ததா? இல்லை. அவர் உடலளவில் மெலிந்துகொண்டே சென்றார். பலவீனமடைந்து கொண்டே இருந்தார். அப்போது ஒருநாள், மெல்ல நடந்து தியானம் செய்துகொண்டிருக்கும்போதே அவர் ஜீவ சக்தி சட்டென்று விலகி சுயநினைவிழந்து மண்ணில் விழுந்தார். 57. இதைப்பற்றி அவருடன் இருந்தவர்கள் என்ன நினைத்தனர்? அவர் இறந்துவிட்டார் என அவர்கள் நினைத்தனர். ஆனால் சிறிதுநேரம் கழித்து அவர் மீண்டும் விழித்துக்கொண்டார். 58. பிறகு என்ன ஆயிற்று? வெறும் உண்ணாவிரதத்தாலோ உடலை வருத்திக்கொள்வதாலோ அறிவு கிடைக்கப்போவதில்லை, திறந்த மனதுடன் இருப்பதாலேயே அது சாத்தியப்படும் என்னும் புரிதலை அடைந்தார். தன்னை வருத்திக்கொண்டதால் நூலிழையில் மரணம் வரை சென்று உயிர் திரும்பினார். எனினும் ஞானம் பெறவில்லை. ஆகவே ஞானம் அடையும் வரை வாழ்ந்தாக உணவு உட்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தார். 59. அவருக்கு உணவளித்தவர் யார்? சுஜாதா எனும் பெண்தான் அவருக்கு உணவளித்தாள். ஊர் தலைவரின் மகளான அவள் ஆலமரத்தின் அடியில் அமர்ந்திருந்த அவரை கண்டு உணவளித்தாள். அவர் எழுந்து உணவை பெற்றுக்கொண்ட பிட்சை பாத்திரத்துடன் நெரஞ்சரா ஆற்றங்கரைக்குச் சென்றார். ஆற்றில் குளித்துமுடித்து, உணவு உட்கொண்டு, கானகத்திற்குள் சென்றுவிட்டார். 60. அங்கு அவர் என்ன செய்தார்? நடந்த நிகழ்வுகளில் இருந்து உறுதியான முடிவை எடுத்துக்கொண்டு அந்திப்பொழுதில் ஒரு போதி (அஸ்வத்த) மரத்திற்கு சென்று சேர்ந்தார். அது தற்போதய மஹாபோதி ஆலயம் இருக்குமிடம். 61. அங்கு என்ன செய்தார்? சரியான ஞானம் கிடைக்கும்வரை அந்த இடத்தைவிட்டு விலகுவதில்லை என உறுதிகொண்டார். 62. மரத்தின் எந்த திசையில் அவர் அமர்ந்திருந்தார்? கிழக்குநோக்கி 63. அன்றிரவு அவர் அடைந்தது என்ன? அவரின் முற்பிறப்புகள், மறுபிறப்பிற்கான காரணங்கள், ஆசைகளை அழிப்பதற்கான வழிகள் ஆகியவற்றைப் பற்றிய ஞானத்தை அடைந்தார். விடியலுக்கு சற்று முன்பு அவரது மனம் முழுதும் மலர்ந்து விரிந்த தாமரை போல முழுமையாக திறந்துகொண்டது. உயர்நிலை அறிவொளி அல்லது நான்கு பெரும் உண்மைகள் அவர்மீது பொழிந்தன. அவர் புத்தரானார். எல்லாம் அறிந்த சர்வஞ்ஞர் ஆனார். 64. இறுதியாக அவர் மனித துன்பங்களின் காரணங்களை கண்டுகொண்டாரா? ஆம், இறுதியில் அவர் கண்டுகொண்டார். சூரியனின் காலைஒளி இருளை அகற்றி மரம், நிலம், பாறை, கடல், விலங்குகள், மனிதர்கள் மற்றும் பிற அனைத்தையும் காட்டுவதுபோல, அவர் உள்ளத்தில் உதித்த அறிவின் முழு வெளிச்சத்தால் ஒரே பார்வையில் மனித துன்பங்களுக்கான காரணங்களையும் அதிலிருந்து விடுபடுவதற்கான வழியையும் கண்டுகொண்டார். 65. இந்த சரியான ஞானத்தை அடைய அவர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டாரா? ஆமாம். மிக பிரம்மாண்டமான கடுமையான சிரமங்களை எதிர்கொண்டார். நாம் உண்மையை நோக்க தடைகளாக இருக்கும் இன்பங்களையும் ஆசைகளையும், உடலில் இயற்கையாக உள்ள குறைகளையும் அவர் தன் உடலால் வெல்லவேண்டியிருந்தது. தன்னைச் சுற்றியிருக்கும் பாவ உலகின் தீய தாக்கங்கள் அனைத்தையும் அவர் கடக்க வேண்டியிருந்தது. ஒரு வீரன் போர்க்களத்தின் பல எதிரிகளை எதிர்த்து தீவிரமாக போரிடுவது போல அவர் போராடினார். போரில் வென்ற நாயகன் போல தன் இலக்கை அவர் அடைந்தார், மனித துன்பங்களின் ரகசியத்தை கண்டறிந்தார். புத்தரின் வெற்றி - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 66. இவ்வாறு அடைந்த ஞானத்தை கொண்டு அவர் என்ன செய்தார்? முதலில் பெரும் மக்கள் திரளுக்கு அந்த ஞானத்தை அளிப்பதில் தயக்கம் கொண்டிருந்தார். 67. ஏன்? அதன் அதிமுக்கியத்துவமும் உன்னதமுமே அதற்கு காரணம். மிக சிலரே அதை உணர்ந்துகொள்வர் என அஞ்சினார். 68. அவரின் இந்த நிலைப்பாடு மாறியதற்கு எது காரணம்? தான் அறிந்ததை தெளிவாகவும் எளிதாகவும் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பது தன் கடமை என உணர்ந்துகொண்டார். தனிநபரின் கர்மத்திற்கு ஏற்ப மெய்மையின் தரிசனம் அவர்களுக்கு கிடைக்கக்கூடும் என நம்பினார். விடுதலைக்கான ஒரே வழி இது ஒன்றே. அதை தன்னிடம் கோரும் எல்லா உயிர்களுக்கும் உரிமையுண்டு என்றும் நம்பினார். அகவே அவர் கடும்பயிற்சிகள் எதுவும் உதவாது என்று விரதத்தை நிறுத்திக்கொண்ட போது அவரைவிட்டு விலகிய ஐந்து நண்பர்களிடமிருந்து இந்த ஞானப் பகிர்வை தொடங்கலாம் என தீர்மானித்தார். (பிரம்ம தேவன் புத்தரிடம் அவரின் ஞானத்தை உயிர்கள் அனைத்திற்கும் பகிருமாறு வேண்டிக்கொண்டதாக புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன). 69. அவர்களை எங்கே கண்டுகொண்டார்? பனாரஸ் அருகே மான்கள் நிறைந்த இசிபட்டானா என்னும் சோலையில். 70. அந்த இடத்தை இப்போது கண்டுகொள்ளமுடியுமா? முடியும். சிறிது சிதிலமடைந்த ஸ்தூபம் அல்லது டகோபா இன்னமும் அங்கே நிற்கிறது. 71. அந்த ஐந்து நண்பர்களும் அவர் சொல்வதைக் கேட்க தயாராக இருந்தார்களா? இல்லை, முதலில் தயங்கினார்கள். ஆனால் அவரின் வசீகரிக்கும் ஆன்மீக தோற்றமும், மிக இனிமையான உறுதியான போதனையும் அவர்களின் முழு கவனத்தையும் அவருக்கு கொடுக்கசெய்தது. 72. இந்த சொற்பொழிவு எவ்வகையான தாக்கத்தை அவர்களிடம் ஏற்படுத்தியது? வயதில் முதிர்ந்த ’கொண்டன்னா’ என்று அறியப்படுபவர்தான் முதலாவதாக தன் முன்முடிவுகளை விளக்கி புத்தரின் போதனைகளை ஏற்றுகொண்டார். அவரே முதல் சீடனும் ஆகி அர்ஹதரின் வழி சேரும் பாதையில் பயணிக்க முடிவுசெய்தார். மற்ற நால்வரும் விரைவிலேயே அவரை பின்தொடர்ந்தனர். 73. அடுத்து யார் அவரின் போதனைகளால் ஈர்க்கப்பட்டனர்? இளம் செல்வந்தனாகிய யாசாவும் அவனின் பணக்கார வணிகராகிய தந்தையும். மூன்றாம் மாத இறுதியில் சீடர்களின் எண்ணிக்கை அறுபதாக இருந்தது. 74. முதல் பெண் சீடர்கள் யாவர்? யாசாவின் தாயும் , துணைவியும். 75. அச்சமயம் புத்தர் என்ன செய்துகொண்டிருந்தார்? தன் சீடர்களை ஒன்றாக அழைத்து அவர்களுக்கு வழிமுறைகளை கூறி, தன் கொள்கையை போதிக்க எல்லா திசைகளுக்கும் அவர்களை அனுப்பி வைத்தார். 76. அந்த கொள்கையின் சாராம்சம் என்ன? விடுதலைக்கான வழி தூயவாழ்வை வாழ்வதிலும் நெறிகளை பின்பற்றுவதிலும் அடங்கியுள்ளது. அவற்றை பிறகு விளக்குகிறேன். 77. இவ்வகையான வாழ்க்கை முறைக்கு அவர் என்ன பெயர் சூட்டினார்? அஷ்டாங்க மார்க்கம் (உன்னத எண்வகை மார்கங்கள்) 78. பாலி மொழியில் அது எவ்வாறு அழைக்கப்படுகிறது? அரியோ அட்தங்கிகோ மக்கோ 79. பிறகு புத்தர் எங்கே சென்றார்? உருவெல்லா-விற்கு 80. அங்கு என்ன நடந்தது? ஜதிலர்களின் ஆசிரியரும் கல்விக்கு பெயர் பெற்றவருமான காஷ்யபரை தன் நெறிக்குள் உட்புகுதினார். அக்னியை வழிபடும் பெரும் குலமான ஜதிலர்கள் இதன் பிறகு புத்தரை பின்தொடர துவங்கினர். 81. இவரால் மாறுதலுக்கு உண்டான அடுத்த பெரும் நபர் யார்? மகத அரசன் பிம்பிசாரன். 82. அச்சமயத்தில் புத்தரால் மிகவும் விரும்பப்பட்ட நன்கு கற்ற எந்த இரண்டு சீடர்கள் அவரின் நெறிக்கு மாறினர்? சாரிபுத்திரர் மற்றும் மொகல்லானா. இதற்குமுன் இவர்கள் துறவி சஞ்சய்யாவின் தலைமை சீடர்களாக இருந்தனர். 83. எதனால் இவர்கள் இருவரும் மிகவும் அறியப்படுகிறார்கள்? சாரிபுத்திரர் அவருடைய ஆழ்ந்த கற்றலுக்காகவும் (பிரஜ்னா), மொகல்லான அவருடைய தனித்துவமான ஆன்மீக சித்திக்கும் அறியப்படுகின்றனர். 84. இத்தகைய அதிசய-சக்திகள் மாயஜாலவித்தைகளா? இல்லை. அனைவருக்கும் இயல்பாக கிடைக்கக்கூடியவைதான். முறையான பயிற்சியின்மூலம் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஆற்றல்கள் இவை. 85. புத்தர் தனது குடும்பத்தை விட்டு நீங்கியபின்பு அவர்களிடமிருந்து அழைப்பு வந்ததா? ஆம். ஏழு வருடம் கழிந்து அவர் ராஜக்ரஹத்தில் வசிக்கும்போது அவரது தந்தை சுத்தோதன மன்னனிடமிருந்து வந்தது. தந்தை தன் மரணத்திற்கு முன் தன் மகனை மீண்டும் ஒருமுறை காணவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். 86. புத்தர் சென்றாரா? ஆம். அவருடைய தந்தை தனது எல்லா சுற்றத்துடனும், அமைச்சர்களுடனும் சென்று மிகுந்த மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றார். 87. மீண்டும் இளவரசராக அவர் சம்மதம் தெரிவித்தாரா? இல்லை. அவர் மிக இனிமையாக தன் தந்தையிடம் சித்தார்த்தன் என்ற இளவரசன் தற்போது இல்லையென்றும், அவன் 'புத்தனாகி' அந்நிலையில் எல்லா உயிர்களையும் சமமாக அன்பாக பார்க்கிறார் என்றும் விளக்கினார். மண்ணுலக அரசனாக குறிப்பிட்டவொரு மக்களையோ நாட்டையோ ஆள்வதைவிட தன்னுடைய 'தம்மத்தால்' மக்கள் அனைவரின் மனதையும் வென்று அவர்களை தன் வழியே வரச்செய்வதே தன் விருப்பம் என்று கூறினார். 88. அவர் யசோதரையும் அவரது மகன் ராகுலாவையும் சந்தித்தாரா? ஆம். அவர் மீது ஆழ்ந்த அன்பு வைத்திருந்த அவரின் மனைவி அவரைகண்டதும் வேதனையில் அழுதாள். மேலும் இளவரசனின் மகன் என்னும் உரிமையில் ராகுலனை அவரிடம் சென்று தன் அரசஉரிமைகளை கேட்க செய்தார். 89. என்ன நடந்தது? அனைவருக்கும் தம்மத்தின் வழியே எல்லா துயர்களையும் களைவதற்கான பாதையை போதித்தார். அவரது தந்தை, மகன், மனைவி, ஆனந்தன் (சகோதரன்), தேவதத்தன் என அனைவரும் அவரின் சீடராயினர். இவர்களில் அனுருத்தன் மற்றும் உபாலி ஆகியோர் பின்னாலில் புகழ்பெற்றனர். அனுருத்தன் பெரும் தத்துவவாதி ஆனார். அரண்மனை நாவீதரான உபாலி வினய சாஸ்திரத்தில் பெரும் புலமை பெற்றார். 90. முதல் பிக்குணி யார்? மஹாபஜபதி(மஹாபிரஜாபதி) கோதமி. இவர் இளவரசர் சித்தார்த்தரின் அன்னையான மாயாதேவியின் இளைய சகோதரி, சித்தார்த்தரின் வளர்ப்பு அன்னையும் ஆவர். இவருடன் யசோதரை மற்றும் நிறைய பெண்கள் பிக்குணிகளாக ஆனார்கள். 91. தன் இரண்டு மகன்கள் சித்தார்த்தனும் ஆனந்தனும், சகோதரனின் மகன் தேவதத்தன், மருமகள் யசோதரை, பேரன் ராகுலா என அனைவரும் ஆன்மீக பாதையை தேர்வுசெய்த போது வயோதிக மன்னர் சுத்தோதனரின் மனதில் அவை எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியது? இது அவரை மிகவும் வருத்தமடைய செய்தது. புத்தரிடம் புகார் கூறினார். மேலும், பெற்றோர் உயிருடன் இருக்கும்பட்சத்தில் அவர்களின் ஒப்புதலின்றி இனி யாரும் துறவறம் ஏற்கக்கூடாது என்னும் ஆணையும் பிறப்பித்தார். 92. தேவதத்தனின் விதியை பற்றி கூறமுடியுமா? அவர் மிகுந்த அறிவுத்திறன் உடையவர். தம்மத்தின் ஞானத்தை மிக விரைவாக அறிந்துகொண்டார். ஆனால் அவரிடம் தீவிரமாக புகழுக்கான வேட்கையும் இருந்தது. அதுவே தேவதத்தனை புத்தரிடம் விரோதம் கொள்ளவும் அவரை வெறுக்கவும் தூண்டியது. கடைசியில் அவரை கொல்லவும் முயற்சிசெய்தார். மேலும், தேவதத்தன் மகத மன்னன் பிம்பிசாரரின் புதல்வன் அஜாதசத்ருவை தன் வசம் ஈர்த்து மன்னனை கொல்லத் தூண்டினார், அவனை தனது சீடனாக ஆக்கினார். 93. தேவதத்தன் புத்தருக்கு எதாவது காயம் ஏற்படுத்தினாரா? அது மட்டும் நிகழவில்லை. ஆனால் புத்தருக்கு எதிராக அவர் வகுத்த தீய செயல்கள் இறுதியாக அவரையே சூழ்ந்துகொண்டு துர்மரணம் அடைய செய்தது. 94. எத்தனை ஆண்டுகள் புத்தர் போதனையில் ஈடுபட்டுவந்தார்? நாற்பது ஆண்டுகள். இச்சமயத்தில் அவர் ஏராளமான பிரசங்கங்களும், வாதங்களும் நிகழ்த்தினார். புத்தரும் அவரது சீடர்களும் ஆண்டின் மழையில்லாத எட்டு மாதங்கள் முழக்க பயணித்து போதனை செய்வர். மழை காலங்களில் புத்த தர்மத்திற்கு மாறிய மன்னர்கள் மற்றும் செல்வந்தர்கள் அவருக்காக ஏற்படுத்திய பர்ணசாலைகளிலும் விகாரங்களிலும் தங்கிக்கொள்வர். 95. இவற்றில் புகழ் பெற்ற கட்டிடங்கள் யாவை? ஜெத்தாவனாரமா, வேலுவனரமா, புப்பரமா, நிக்ரோதரமா, இசிபட்டனரமா.(ஜேதவனமும் புப்பராமாவும் உத்தர பிரதேசத்தின் சிராவஸ்தியில் இருக்கும் புத்த மடங்கள். வேனுவனம் ராஜகிரஹத்தில் இருக்கிறது. இசிபத்தானா என்பது இன்றைய சாரநாத், நிக்ரோதராமா கபிலவஸ்துவில் உள்ளது) 96. எந்த வகையான மக்கள் அவராலும் அவரது சீடர்களாலும் புத்த தர்மத்திற்கு மாற்றப்பட்டனர்? எல்லா தரப்பினரும், எல்லா தேசத்து மக்களும், செல்வந்தர்கள் ஏழைகள், கூலிகள், மன்னர்கள், வலியவர் எளியவர், கல்லாதவர்கள், கற்றவர்கள் என அனைவரும். அவரது கொள்கை அனைவருக்குமானது 97. புத்தரின் இறப்பை பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்? தனது புத்த தன்மையை அடைந்து நாற்பத்தைந்து ஆண்டுகள் கழிந்த வைகாச மாதத்தின் முழு நிலவு நாளன்று தன் இறுதி அணுகுவதை உணர்ந்தார். ஒரு மாலை பொழுதில் வாரனாஸிலிருந்து 120 மைல்கள் தொலைவிலுள்ள குசிநகரம் என்னும் இடத்திற்கு வந்துசேர்ந்தார். அங்கே மல்லர்களின் சால மரதோப்பில் இரண்டு சால மரத்திற்கு இடையே தொல்வழக்கப்படி வடக்கில் தலை வைக்குமாறு படுக்கை அமைக்கப்பட்டிருந்தது. அதில் படுத்துக்கொண்டு முழு அமைதியான மனதுடன் தன் சீடர்களுக்கு கடைசி அறிவுரைகள் வழங்கி, இறுதியாக விடைபெற்றும் கொண்டார். 98. அவர் தனது இறுதி யாத்திரைகளிலும் மக்களை புத்த தர்மத்திற்குள் புகசெய்தாரா? ஆம், மிக முக்கியமான நபர் ஒருவர் தர்மத்திற்குள் நுழைந்தார். புகழ்பெற்ற பிராமண பண்டிதர் சுபத்ரா. மேலும் மல்யா இளவரசர்கள் மற்றும் அவர்களை பின்பற்றும் அனைவருக்கும் தம்மத்தை போதித்தார். 99. வைகறை பொழுதில் என்ன நடந்தது? அவர் சமாதி நிலையில் உள்ளடங்கி, பின் நிர்வாணத்தை அடைந்தார். நிர்வாணத்தை அடைதல் - ஓவியம் அபனீந்திரநாத் தாகூர் 100. தன்னுடைய சீடர்களுக்கு அவர் அருளிய இறுதி சொற்கள் என்ன? “பிக்குகளே! நான் உங்களிடம் அழுத்தமாக கூறுவது இதுதான், மனிதர்களின் அதிகாரத்திற்கான விழைவு களையப்படவேண்டும். உங்கள் மீட்சிக்கான முயற்சியில் பெரும் கவனத்துடன் இருக்கவேண்டும்.” என்று கூறினார். 101. புத்தர், அதற்குமுன் இளவரசர் சித்தார்த்தன் என வாழ்ந்த இவரின் இருப்புக்கான வரலாற்று ஆதாரம் உள்ளதா? அவரின் இருப்பு வேறெந்த வரலாற்று மனிதபாத்திரத்தை விடவும் மிக தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 102. சில ஆதாரங்களை கூறுங்கள்? அவரை நெருக்கமாக அறிந்தவர்களின் எழுத்துபூர்வ ஆதாரங்கள் உள்ளன. அவரது காலகட்டம் சார்ந்த கதைகளில் குறிப்பிடப்படும் ஊர்கள் மற்றும் எஞ்சிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவரது காலத்திற்கு நெருக்கமாக வாழ்ந்த மன்னர்கள் அவரின் நினைவாக பாறைகளின் செதுக்கிய கல்வெட்டுகள், நிறுவிய ஸ்தம்பங்கள் மற்றும் ஸ்தூபிகள் ஆகியவற்றைக் கொண்டு இவரின் வாழ்க்கை பற்றிய கதையை உறுதிசெய்ய முடிகிறது. அவர் நிறுவிய சங்கத்தின் அறுபடாத தொடர்ச்சி. மற்றும் அங்கிருந்தவர்கள் அவரது வாழ்க்கை பற்றிய நிஜ தகவல்களை தொடக்கம்முதல் தலைமுறை தலைமுறையாக பேணி வந்துள்ளனர். அவர் இறந்த அதே ஆண்டில் பல இடங்களில் சங்கத்தின் மகாசபைகளும் கூடுகைகளும் நிகழ்ந்துள்ளன. அது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவை அதன் நிறுவனரின் உண்மையான போதனைகளை உறுதிசெய்வதற்காக நிகழ்ந்தன. உறுதிசெய்யப்பட்ட போதனைகளை ஆசிரியரிடம் இருந்து மாணவருக்கு கடத்தப்படுகிறது. இது இன்றளவும் நிகழ்ந்து வருகிறது. அவரின் எரியூட்டத்திற்கு பிறகு எஞ்சிய அவரது உடல் பாகங்கள் எட்டு அரசர்களால் பங்கிடப்பட்டு ஒவ்வொன்றும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் ஸ்தூபங்கள் நிர்மாணிக்கப்பட்டன. அரசன் அஜாத சத்ரு தனக்கு கொடுக்கப்பட பாகத்தை ராஜகீரில் அடக்கம் செய்து அதன்மீது ஸ்தூபம் நிறுவியுள்ளார். இரண்டு நூற்றாண்டுகள் முடிவதற்குள் அப்பாகம் பேரரசர் அசோகரால் மீண்டும் எடுக்கப்பட்டு அவரது ராஜ்ஜியம் முழுதும் பகிரப்பட்டது. தொடக்கம் முதலே அது பாடலிபுத்திர அரச குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆகவே அந்த உடல்பாகம் புத்தருடையதா இல்லையா என அறிந்துகொள்வதற்கான எல்லா வழிகளும் அசோகரிடம் இருந்தது. புத்தரின் பல சீடர்கள் அர்ஹத்தர்கள் ஆயினர். இதன்வழியாக அவர்கள் தங்கள் உயிர் ஆற்றலை கட்டுக்குள் வைத்திருந்தனர், ஆகவே அவர்கள் நீண்ட வயது வாழ்ந்திருக்க வேண்டும். எனவே புத்தரின் இறப்பிற்கு பிறகு அசோகரின் காலத்தில் புத்தரின் நேரடி சீடர் மரபு இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறை மட்டுமே நீண்டிருக்கும். ஆகவே அசோகர் புத்தரின் வாழ்க்கை பற்றிய உண்மைகளை நேரடியாக அந்த சீடர்களிடமிருந்து அறிந்திருக்க முடியும். (இரண்டாம் மகாசபை கூட்டத்தில் ஆனந்தரின் இரு சீடர்கள் இருந்தனர், அவர்களுக்கு நூறுவயது இருந்திருக்கலாம். அசோகரின் சபையில் அவர்களின் மாணவர்கள் இருந்தனர்.) மஹாவம்சம் சிங்களர்களின் பழம்பெரும் வரலாற்று பதிவு நூல். நன்கு ஏற்கப்பட்ட நூல். இது அரசன் வினயாவின் ஆட்சிகாலம் வரை சிங்கள வரலாற்றை பதிவுசெய்துள்ளது - (பொ.மு 543), இது கிட்டத்தட்ட புத்தரின் காலம். இதில் புத்தரின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் பற்றி குறிப்புகள், பேரரசர் அசோகர் பற்றிய குறிப்புகள் மற்றும் பௌத்த வரலாற்றில் அறியப்பட்ட அணைந்து ஆட்சியாளர்களின் குறிப்புகளும் இந்நூலில் அடங்கியுள்ளன. 103. எந்தெந்த பெயர்களில் புத்தர் அழைக்கப்படுகிறார்? சாக்யமுனி (சாக்கிய முனிவர்), சாக்யசிம்ஹம் (சாக்கிய சிம்மம்), சுகதர் (ஆனந்தமானவர்), சத்த்தர் (ஆசிரியர்), ஜினர் (வென்றவர்), பகவத் (புனிதமானவர்), லோகநாதர் (உலகத்தின் அரசர்), சர்வஞ்யர் (சர்வமும் ஆன ஒருவர்), தர்மராஜர் (தர்மத்தின் அரசர்), ததாகதர் (மகத்தானவார்) போன்று, இன்னும் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அடிக்குறிப்பு: மதம் (religion) என்ற சொல்லை பௌத்தத்திற்கு பொருத்துவது சரியானது அல்ல. ஏனென்றால் அது மதம் அல்ல. அறதத்துவம், இதை நாம் பிறகு பார்க்கவிருக்கிறோம். பொதுவான பயன்பாட்டில், ஒரு குறிப்பிட்ட அற கொள்கையை பின்பற்றும் மக்களைக் கொண்ட குழுக்களுக்கு அச்சொல் பொருத்தப்படும். ஆனால் லத்தீன் வேரைக்கொண்ட ’religion’ என்ற சொல்லை ஐரோப்பியர்கள் எந்த அர்த்தத்தில் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றி சிங்கள பௌத்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். சிங்கள பௌத்தர்களிடம் கிறிஸ்துவத்தில் இருக்கும் ‘பந்தம்’ (binding) போன்ற எந்த கருத்துக்களும் இல்லை. பந்தம் என்றால் ’இறைவனிடத்தில் தான் சரணடைவது’, அல்லது ’இறைவனிடம் சேர்வது’. சிங்கள பௌத்தர்கள் தங்களுக்கும் பௌத்தம் மற்றும் புத்தருக்குமான தங்களது உறவை ’ஆகமா’ என குறிப்பிடுகின்றனர். இது சம்ஸ்க்ருத சொல், ‘அணுகுதல்’ அல்லது ’வருதல்’ என்று பொருள். ’புத்தர்’ என்பதற்கு ஞானம் அடைந்தவர் என்று பொருள். இந்த இரண்டு சொற்களின் கூட்டுச்சொல் புத்தாகமா, இந்த சொல்லால்தான் அவர்கள் பௌத்தத்தைக் குறிப்பிடுகின்றனர். இது ‘ஞானத்தை அணுகுதல்’ அல்லது ‘ஞானத்தை நோக்கி வருதல்’ என்ற அர்த்தத்தை கொண்டிருக்கலாம், அல்லது ‘சாக்கியமுனி’ என்ற கோட்பாட்டில் இருந்து வந்திருக்கலாம். கிறிஸ்துவ சமயப்பரப்பாளர்கள் ஏற்கனவே இருந்த சொல் ‘ஆகமா’-வை ‘religion’ என்ற சொல்லுக்கு இணையான சொல்லாக கையாண்டனர். கிறிஸ்துவத்தை ’கிறிஸ்டியனாகமா’ என எழுதினர். இது கிறிஸ்டியனிபந்தனா என ஆகியது. பந்தனா என்ற சம்ஸ்கிருத சொல் சொற்பிறப்பியலின் (etymology) படி religion என்ற சொல்லுக்கு இணையானது. பௌத்தர்களுக்கு ’விபாஜவாதி’ என்ற பெயருண்டு, இதற்கு பகுத்து-அறிபவன் என்று பொருள். அவர்களுக்கு ’அத்வயவாதி’ என்ற பெயரும் உண்டு. இந்த விளக்கம் பொதுவாசகர்களுக்காக அன்றாடதளத்தில் பயன்படுத்தப்படும் ‘மதம்’ (religion) என்ற சொல்லை பௌத்த தத்துவம் பற்றி பேசும் போதும் பயன்படுத்துவதற்கு எதிராகவே அளிக்கிறேன். ஹென்றி ஸ்டீல் ஆல்காட் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் தமிழில் - விஷ்ணுகுமார், தாமரைக்கண்ணன் அவிநாசி விஷ்ணுகுமார் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (ஆகஸ்டு 2, 1832 - பிப்ரவரி 17, 1909) எழுத்தாளர், தத்துவவாதி மற்றும் பிரம்மஞான சபையின் (Theosophical society) இணை நிறுவனர் ஆவார். பௌத்தை மீட்டுருவாக்கம் செய்தவர்களுள் முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஆல்காட் நியூயாரக் ட்ரைபியூன் (newyork tribune) செய்தித்தாளின் வேளாண்மை ஆசிரியராக 1858 முதல் 60 வரை பணிபுரிந்தார். பின்னர் கர்னல் பதவியுடன் அமெரிக்க போர் மற்றும் கடற்படை துறையில் சிறப்பு ஆணையராக 1863 - 66 வரை பணிபுரிந்தார். வழக்கறிஞராக 1966 முதல் பணிபுரிய தொடங்கினார். ஹெலனா பெட்ரோவ்னா பிளாவட்க்ஸ்கி (Helena petrovna blavatsky), வில்லியம் ஜட்ஜ் (William q Judge) மற்றும் சிலருடன் இணைந்து 1875-ல் பிரம்மஞான சபை நிறுவி அதன் தலைமை ஏற்றார். 1878-ல் அவரும் பிளாட்வஸ்கியும் இந்தியா வந்தனர். 1879 முதல் இந்தியாவிலேயே வசிக்க முடிவுசெய்தனர். 1882-ல் பிரம்மஞான சபையின் நிரந்தர தலைமையகமாக சென்னை அடையாறில் நிலைப்படுத்தினர். அன்னி பெசன்டுடன் (Annie Besant) இணைந்து வாரணாசியிலுள்ள பெனாரஸில் இந்து கல்லூரி நிறுவ உதவினார். பெசன்டுடன் இணைந்து பிரம்மஞான சபையின் கருதுகோள்களை இந்திய மற்றும் இலங்கையில் நேரில் சென்று விளக்கினார். இலங்கை பௌதர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஆல்காட் அவரது முயற்சியால் அங்கே மூன்று கல்லூரிகளும் முப்பதிமூன்று பள்ளிகளும் நிறுவ செய்தார். பௌதர்கள் மத்தியில் அவர் மிகுந்த செல்வாக்கும் வரவேற்பும் பெற்றார். கிழக்கத்திய தத்துவங்களுடன் நெருக்கமாக அறியப்பட்டாலும் இந்து தத்துவ புத்தூக்கத்திற்கும் தன் பங்களிப்பை அளித்துள்ளார். ஆல்காட் தனது 74-வது வயதில் சென்னையில் காலமானார். இக்கட்டுரை ஹென்றி ஸ்டீல் ஆல்காட் எழுதிய The Buddhist catechism (1891) என்ற உலக புகழ் பெற்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு. வெளிவந்த நாள் முதல் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. https://www.britannica.com/biography/Henry-Steel-Olcott https://en.wikipedia.org/wiki/Henry_Steel_Olcott https://scroll.in/magazine/1047687/how-an-american-helped-revive-buddhism-in-sri-lanka-after-moving-to-india Catechism என்பது கிறிஸ்துவத்தில் கேள்வி-பதில் வடிவில் மத நம்பிக்கைகளையும் அதன் கொள்கைகளையும் கற்பிப்பதற்கு பயன்படுத்தப்படும் நூல் வடிவம். இச்சொல் தமிழில் வினாவல் என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. https://www.kurugu.in/2024/04/buddhist catechism-tamil.html
  12. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதி கிழமைக்கு ஒன்றாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பதிவிட்ட "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / 82 பகுதி "Origins of Tamils? [Where are Tamil people from?]" / 82 parts மிக நீண்ட ஆய்வுக் கட்டுரையை, உடனடியாக எல்லோருக்கும் தேவைப்படாத விபரங்களைத் தவிர்த்து, உதாரணமாக - சுமேரிய & சிந்து வெளி மக்களின் வாழ்வு முறையின் அல்லது கண்டுபிடிப்புகளின் அல்லது நம்பிக்கைகளின், இலக்கியங்களின் நீண்ட அலசலைத் தவிர்த்து - தமிழ் மற்றும் தமிழருடன் நேரடியாகத் தொடர்புடையனவற்றை மட்டும் அலசி, சுருக்கமாக அண்ணளவாக 32 பகுதிகளாக ஒவ்வொரு செய்வாய்க் கிழமையும் தமிழில் பதியவுள்ளேன். சமகாலத்தில், இந்தக் கட்டுரை என் முகநூலிலும், வலைத்தளத்திலும் பதிவிடப் படும். நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  13. காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்திற்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ள சிவகங்கை adminMay 2, 2024 காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் நாகப்பட்டினத்திற்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவையை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக படகுசேவை தனியார் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் சோ.நிரஞ்சன் நந்தகோபன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக மையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவைகளை மீள ஆரம்பிக்கும் வகையில் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைத்தார். எனினும், இந்த சேவையைத் தொடர்வதில் இயற்கையான தொழில்நுட்ப விடயங்கள் சில தடைகளாக அமைந்திருந்தன. இந்நிலையில் தற்போது படகுசேவை எதிர்வரும் 13ஆம் திகதி முதல் மீளவும் தொடரவுள்ளது. நாகப்பட்டினத்துக்கும், காங்கேசன் துறைக்கும் இடையிலான கப்பல் சேவைக்காக ‘சிவகங்கை’ எனும் கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. 150 பயணிகள் பயணிப்பதற்கான வசதிகளை கொண்ட இந்த கப்பலில் பயணிப்பதற்கு இருவழி கட்டணமாக வரிகள் உள்ளடக்கப்பட்டு 34,200ரூபாவை (8400இந்திய ரூபா) அறவிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கப்பலில் பயணிக்கும் பயணியொருவர் 60 கிலோகிராம் எடையுடைய பொருட்களை எடுத்துச்செல்வதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. எவ்வாறாயும், பொதியொன்றின் எடை 20 கிலோகிராமுக்கு உட்பட்டதாக அமைய வேண்டியது வரையறுக்கப்பட்ட விடயமாக உள்ளது. இதேவேளை, கப்பலின் மேற்தளத்தில் கடற்பரப்பினை பார்த்து இரசித்துச் செல்லும் வகையில் பிரேமியர் ஆசன ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது விசேட அதிதிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மையப்படுத்தியதாகும். அதற்காக விசேட கட்டணமும் அறவிடப்படவுள்ளதோடு பயணி ஒருவரின் எடையிலும் மாற்றங்கள் காணப்படும். மேலும், இந்தப் படகுசேவையானது காலம் தாழ்த்தப்பட்டமைக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், உண்மையில் நாகப்பட்டினத் துறைமுகத்தினைப் பயன்படுத்துவதற்கான கட்டணத்தொகையை பயணிகளிடத்திலிருந்து அறவிடுவதற்கு தமிழக அரசாங்கம் முன்மொழிந்திருந்தது. எனினும் அத்தொகையை பயணிகளின் பயணத்தொகையுடன் இணைக்கின்றபோது அது மேலும் அதிகரிப்பதற்கான நிலைமைகளே காணப்பட்டன. இதனால் குறித்த விடயம் இந்திய மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் அவதானிப்புக்களுக்கு அமைவாக நாகைப்பட்டின துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணத்தை மத்திய அரசாங்கம் மானியமாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் மாதந்தோறும் 72இலட்சம் ரூபா துறைமுகப் பயன்பாட்டுக்கட்டணமாக மத்திய அரசாங்கம் 12மாதங்களுக்கு தமிழக அரசாங்கத்துக்கு வழங்கவுள்ளது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தின் மேற்படி செயற்பாட்டின் காரணத்தினாலேயே தற்போது கப்பல்சேவை சாத்தியமாகியுள்ளது. அதற்கு மத்திய அரசாங்கத்துக்கு விசேடமாக எமது நிறுவனம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது என்றார். https://globaltamilnews.net/2024/202323/
  14. இங்கே இலங்கை அனுபவம் கொண்ட வெளிநாட்டு பெரியவர்கள் பலரே பருப்பு கடலை உழுந்து செத்தல் மிளகாயில் முடிவு திகதிகள் பார்க்க வேவையில்லை அது பழுதாகாது என்று எனக்கு சொல்லியுள்ளார்கள் அது தவறு என்று எனக்கு தெரியும் ☹️
  15. இம்கூம் நம்ம கிட்ட இந்த பாட்ஸா எல்லாம் பலிக்காது ஊசி போடும் ரூமுக்குள் தள்ளி கொண்டு போனாலே காணும் விண்டோவுக்குள்ளால் பாய்ந்து பக்கத்தில் இருக்கும் வேப்ப மரத்து உச்சியில் இருந்து இரவு ஏழுமணிக்கு பின்தான் இறங்குவம் பகல் பொழுது மட்டும் வெள்ளை யூனிபோம் போட்ட பிசாசுகள் வேப்ப மரத்தை பார்த்து கத்தி கொண்டு இருப்பினம் .
  16. யாழ்ப்பாண சைவ உணவகம் மற்றும் நியாயம் அவர்களுக்கு வெள்ளவத்தையில் இட்லி கொடுத்தது இவைகளை பார்த்தால் சிங்கலவர்கள் நடத்தும் உணவகங்கள் போன்றே தெரிகின்றது.
  17. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK USA 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ WI 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN Select IRL Select IRL Select USA Select USA Select 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) INDIA #A2 - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM Select SCOT Select SCOT Select OMA Select OMA Select 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI AFG Select AFG Select PNG Select PNG Select UGA Select UGA Select 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI #C2 - ? (1 புள்ளிகள்) NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN Select NED Select NED Select NEP Select NEP Select 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA SA 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ ENG 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI INDIA WI 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS SL AUS 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG SA SA 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ NZ 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 INDIA SL INDIA 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS WI 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG ENG 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS INDIA INDIA 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI SL WI சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) INDIA Select INDIA INDIA AUS Select AUS Select WI Select WI WI SL Select SL Select 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) WI #அணி 1B - ? (2 புள்ளிகள்) INDIA 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK Select ENG Select ENG ENG NZ Select NZ Select SA Select SA SA 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) SA #அணி 2B - ? (1 புள்ளிகள்) ENG 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PAK அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) WI 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) ENG இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி WI உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) WI 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) RACHIN RAVINDRA 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JASON HOLDER 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) INDIA 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) TRAVIS HEAD 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) WI 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JOSH HAZLEWOOD 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SL 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) JOS BUTTLER 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) WI
  18. சேச்சே .......... மற்றவர்களுக்கு குத்தும்போது சிறிதும் பயம் கிடையாது.......! 😂
  19. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கேள்விக்கொத்து அதிகபட்ச புள்ளிகள் 208 போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. கூகிள் ஷீற்: https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM எதிர் OMA 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL எதிர் SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG எதிர் UGA 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG எதிர் SCOT 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED எதிர் NEP 8 ) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND எதிர் IRL 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG எதிர் UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS எதிர் OMA 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA எதிர் PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM எதிர் SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN எதிர் IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ எதிர் AFG 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL எதிர் BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED எதிர் SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS எதிர் ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI எதிர் UGA 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA எதிர் SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA எதிர் BAN 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK எதிர் CAN 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL எதிர் NEP 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS எதிர் NAM 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA எதிர் IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI எதிர் NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN எதிர் NED 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG எதிர் OMA 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG எதிர் PNG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA எதிர் IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA எதிர் NEP 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ எதிர் UGA 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND எதிர் CAN 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM எதிர் ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS எதிர் SCOT 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK எதிர் IRL 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN எதிர் NEP 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL எதிர் NED 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ எதிர் PNG 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI எதிர் AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND ?? PAK ?? CAN ?? IRL ?? USA ?? 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) #A2 - ? (1 புள்ளிகள்) 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG ?? AUS ?? NAM ?? SCOT ?? OMA ?? 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) #B2 - ? (1 புள்ளிகள்) 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ ?? WI ?? AFG ?? PNG ?? UGA ?? 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) #C2 - ? (1 புள்ளிகள்) 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA ?? SL ?? BAN ?? NED ?? NEP ?? 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) #D2 - ? (1 புள்ளிகள்) 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 A2 எதிர் D1 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 B1 எதிர் C2 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 C1 எதிர் A1 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 B2 எதிர் D2 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 B1 எதிர் D1 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 A2 எதிர் C2 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 A1 எதிர் D2 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 C1 எதிர் B2 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 A2 எதிர் B1 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 C2 எதிர் D1 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 B2 எதிர் A1 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 C1 எதிர் D2 சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A1 B2 C1 D2 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) #அணி 1B - ? (2 புள்ளிகள்) 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) A2 B1 C2 D1 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) #அணி 2B - ? (1 புள்ளிகள்) 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) வீரர்? 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி?
  20. T20 உலகக் கிண்ணப் போட்டியில் மோதும் அணிகளின் வீரர்களின் விபரங்கள் குழு A: இந்தியா (IND) BATTERS: Rohit Sharma (c), Yashasvi Jaiswal, Virat Kohli, Rishabh Pant, Sanju Samson, Suryakumar Yadav ALLROUNDERS: Hardik Pandya, Shivam Dube, Ravindra Jadeja, Axar Patel BOWLERS: Arshdeep Singh, Jasprit Bumrah, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Mohammed Siraj பாகிஸ்தான் (PAK) BATTERS: ALLROUNDERS: BOWLERS: கனடா (CAN) BATTERS: Navneet Dhaliwal, Aaron Johnson, Shreyas Movva, Ravinderpal Singh, Kanwarpal Tathgur ALLROUNDERS: Saad Bin Zafar(c), Dilpreet Bajwa, Junaid Siddiqui, Nicholas Kirton, Pargat Singh, Rayyan Pathan, Harsh Thaker BOWLERS: Jeremy Gordon, Dillon Heyliger, Kaleem Sana அயர்லாந்து (IRL) BATTERS: ALLROUNDERS: BOWLERS: ஐக்கிய அமெரிக்கா (USA) BATTERS: Monank Patel (c), Aaron Jones, Andries Gous, Nitish Kumar, Shayan Jahangir, Steven Taylor ALLROUNDERS: Corey Anderson, Harmeet Singh, Milind Kumar, Nisarg Patel, Shadley van Schalkwyk BOWLERS: Ali Khan, Jessy Singh, Nosthush Kenjige, Saurabh Netravalkar குழு B: இங்கிலாந்து (ENG) BATTERS: Jos Buttler (c), Jonny Bairstow, Harry Brook, Ben Duckett, Phil Salt ALLROUNDERS: Moeen Ali, Sam Curran, Will Jacks, Liam Livingstone BOWLERS: Jofra Archer, Tom Hartley, Chris Jordan, Adil Rashid, Reece Topley, Mark Wood அவுஸ்திரேலியா (AUS) BATTERS: Tim David, Travis Head, Josh Inglis, Matthew Wade, David Warner ALLROUNDERS: Mitchell Marsh (c), Cameron Green, Glenn Maxwell, Marcus Stoinis BOWLERS: Ashton Agar, Pat Cummins, Nathan Ellis, Josh Hazlewood, Mitchell Starc, Adam Zampa நமீபியா (NAM) BATTERS: ALLROUNDERS: BOWLERS: ஸ்கொட்லாந்து (SCOT) BATTERS: Richie Berrington (c), Matthew Cross, Michael Jones, George Munsey ALLROUNDERS: Michael Leask, Brandon McMullen, BOWLERS: Chris Greaves, Jack Jarvis, Safyaan Sharif, Chris Sole, Mark Watt, Brad Wheal, Oli Carter, Bradley Currie, Charlie Tear ஓமான் (OMA) BATTERS: Aqib Ilyas (c), Pratik Athavale, Khalid Kail, Mehran Khan, Naseem Khushi, Kashyap Prajapati, Shoaib Khan, Zeeshan Maqsood ALLROUNDERS: Ayaan Khan, Mohammad Nadeem BOWLERS: Bilal Khan, Fayyaz Butt, Kaleemullah, Shakeel Ahmed, Rafiullah குழு C : நியூஸிலாந்து (NZ) BATTERS: Kane Williamson (c), Finn Allen, Devon Conway ALLROUNDERS: Michael Bracewell, Mark Chapman, Daryl Mitchell, James Neesham, Glenn Phillips, Rachin Ravindra, Mitchell Santner BOWLERS: Trent Boult, Lockie Ferguson, Matt Henry, Ish Sodhi, Tim Southee மேற்கிந்தியத் தீவுகள் (WI) BATTERS: Rovman Powell (c), Johnson Charles, Shimron Hetmyer, Shai Hope, Brandon King, Nicholas Pooran, Sherfane Rutherford ALLROUNDERS: Roston Chase, Jason Holder, Andre Russell, Romario Shepherd BOWLERS: Akeal Hosein, Shamar Joseph, Alzarri Joseph, Gudakesh Motie ஆப்கானிஸ்தான் (AFG) BATTERS: Rahmanullah Gurbaz, Ibrahim Zadran, Mohammad Ishaq, Najibullah Zadran ALLROUNDERS: Rashid Khan (c), Azmatullah Omarzai, Gulbadin Naib, Karim Janat, Mohammad Nabi, Nangeyalia Kharote BOWLERS: Fareed Ahmad, Fazalhaq Farooqi, Mujeeb Ur Rahman, Naveen-ul-Haq, Noor Ahmad பபுவா நியூகினி (PNG) BATTERS: ALLROUNDERS: BOWLERS: உகண்டா (UGA) BATTERS: Fred Achelam ALLROUNDERS: Dinesh Nakrani, Alpesh Ramjani, Kenneth Waiswa BOWLERS: Brian Masaba (c), Bilal Hassan, Cosmas Kyewuta, Riazat Ali Shah, Juma Miyagi, Roger Mukasa, Frank Nsubuga, Robinson Obuya, Ronak Patel, Henry Ssenyondo, Simon Ssesazi குழு D : தென்னாபிரிக்கா (SA) BATTERS: Aiden Markram (c), Quinton de Kock, Reeza Hendricks, Heinrich Klaasen, David Miller, Ryan Rickelton, Tristan Stubbs ALLROUNDERS: Marco Jansen BOWLERS: Ottniel Baartman, Gerald Coetzee, Bjorn Fortuin, Keshav Maharaj, Anrich Nortje, Kagiso Rabada, Tabraiz Shamsi சிறிலங்கா (SL) BATTERS: ALLROUNDERS: BOWLERS: பங்களாதேஷ் (BAN) BATTERS: ALLROUNDERS: BOWLERS: நெதர்லாந்து (NED) BATTERS: ALLROUNDERS: BOWLERS: நேபாளம் (NEP) BATTERS: Aasif Sheikh, Dipendra Singh Airee, Kushal Bhurtel, Sundeep Jora, ALLROUNDERS: Rohit Paudel (c), Karan KC, Kushal Malla, Pratis GC, Anil Sah, Sompal Kami BOWLERS: Abinash Bohara, Gulsan Jha, Lalit Rajbanshi, Kamal Airee, Sagar Dhakal ஏழு அணிகளின் வீரர்களின் விபரங்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அவை வெளியானதும் அறிவிக்கப்படும்.
  21. "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி : 02 இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப் பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட - கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும், ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை அல்லது வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], திராவிடர்கள் இந்தியா முழுவதும் அதாவது வட கிழக்கு பகுதி உட்பட எல்லா இடங்களிலும் பரந்து வாழ்ந்தார்கள் என்று கூறுகிறது. சில பன்மொழி அறிஞர்கள், இந்திய - ஆரிய இனத்தவர்களின் இடப்பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந்தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள். திராவிட மொழிகளில் முக்கியமானவை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பனவாகும். இவை தவிர இன்னும் பல சிறிதும் பெரிதுமான திராவிட மொழிகள் தென்னிந்தியாவிலும், அதற்கு வெளியேயும் பேசப் பட்டு வருகின்றன. இவற்றுள் தமிழ் தவிர்ந்த ஏனையவை பெருமளவு வடமொழிச் செல்வாக்குக்கு உட்பட்டு மாற்றம் அடைந்து விட்டன. தமிழ் மட்டுமே பெருமளவுக்கு திராவிடச் சொற்களுடன் [அல்லது பழைய ஆரம்பகால தமிழ் சொற்களுடன்] பேசப்படக் கூடிய மொழியாக இன்னும் இருந்து வருகிறது. உலகெங்கும் 85 திராவிட மொழிகள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பொதுவாக இவர்கள் கரு நிறத் தோல் கொண்டவர்கள். நிலம், தீ, நீர், காற்று, விண் ஆகிய ஐம்பூதங்களும் கலந்ததொரு மயக்கமான நிலையில் உலகம் உண்டாயிற்று. மயக்கமான நிலை நாளடைவில் மங்கத் தொடங்கியது. சிறிது சிறிதாய் உலகத்தின் வெளிப்புறத் தோற்றம் பரிமாணங்கள் பெற்றுத் தெளிவு பெறத் துவங்கியது என்கிறார் தொல்காப்பியர் 3000-2500 ஆண்டுகளுக்கு முன் "நிலம் தீ நீர்வளி விசும் பொடைந்துங் கலந்த மயக்கம் உலகம் ஆதலின் இருதிணை ஐம்பால் இயனெறி வழாமைத் திரிவில் சொல்லோடு தழாஅல் வேண்டும்" இப்படி படிப்படியாக உருப் பெற்ற உலகில், எல்லா மனிதர்களும் ஆரம்பத்தில் தென் கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் தோன்றினார்கள். அங்கே தான் 'ஹொமினினே' [Homininae] என்கிற ஒரு வாலற்ற குரங்கு இனம் பரிணாம வளர்ச்சியில் உரு மாறிக் கொண்டே இருந்தது. மேலும் மேலும் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு, அது, இன்று இருக்கும் மனித இனமான 'ஹோமோ சேப்பியன்ஸ் சேப்பியன்ஸ். [homo sapiens sapiens ,Actually, the root "homo" means "man" and the root "sapien" means "being." So, human being.Modern humans are the subspecies Homo sapiens sapiens] என்கிற இனமாக உருவானது என்கிறார்கள் அறிஞர்கள். அத்துடன் இந்த மனித இனம் தென்கிழக்கு ஆஃப்ரிக்காவில் தான் முதல் முதல் தோன்றியது என்றும் கூறுகிறார்கள். இந்த மனித இனம் உணவு தேடி, நாடோடிகளாய் பல புதிய திறந்த வெளிகளை நோக்கி பயணித்தன. இந்த 'ஹோமோ சேப்பியன்' இனத்தவர் தான் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்படுகிறது. "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" [ஓரிடத் தோற்றக் கருதுகோள்] என்ற இந்த மாதிரி மிகவும் ஏற்றுக்கொள்ளப் பட்ட விளக்கம் ஆகும். வெவ்வேறு நிலவியற் பகுதிகளில் வாழும் மக்களில் இப்ப காணப்படும் வெவ்வேறு உருவ அமைப்பு, அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப கடைசி 60 ஆயிரம் வருடங்களாக படிப்படியாகத் தோற்றுவிக்கப் பட்டதாக நம்பப்படுகிறது [பரிணாமம் அடைந்தது என]. "பல்பிராந்திய"மாதிரி [பல்லிடத் தோற்றக் கருதுகோள்] இரண்டாவது ஆகும். இது மனிதர்களின் மூதையார்கள் ஆஃப்ரிக்காவில் இருந்து 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வெளியேறி, பரவி முற் காலத்துக்குரிய ஆஃப்ரிக்கா, ஆசிய, ஐரோப்பியா பிராந்திய குழுக்களாக தோற்றம் அடைந்தார்கள் என்கிறது. எனவே ஆசிய, ஐரோப்பியா நவீன மனிதர்கள் அதன் பின் ஒரே சமயத்தில் அந்தந்த இடங்களில் பரிணாமம் அடைந்ததாக கருதுகிறார்கள். [நவீன மனிதர்களாகக் கூர்ப்படைந்தனர் என] இதே மாதிரி, போட்டியிட்டுக் கொண்டு பல கருது கோள்கள், எங்கு, எப்போது தமிழன் அல்லது திராவிடன் தோன்றினான், பின் எவ்வாறு பரவினான் என பலதரப்பட்ட கல்விமான்களால் விளக்கம் கொடுக்கப் படுகின்றன. ஒரே மாதிரியான மொழியும் பண்பாடும் இரு வேறுபட்ட, ஒன்றோடு ஒன்று எந்த தொடர்பும் அற்ற இரு இடங்களில் வளர்ச்சி அடைய முடியாது என்பதால், நாம் ஒரு மாதிரியையே, - "ஆஃப்ரிக்காவில் இருந்து வெளியே" என்ற உதாரணம் மாதிரி ஒன்றையே - தெரிந்து எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே தமிழ் மொழியும் அதனுடன் இணைந்த பண்பாடும் தமிழ் நாட்டிலேயே அல்லது தமிழ் நாடு, இலங்கை ஆகியவற்றை ஒருமிக்க கொண்ட ஒரு நிலப்பரபிலோ அல்லது இவையை தவிர்ந்த வேறு ஒரு நிலப்பரப்பில் தோன்றி, வளர்ந்து 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் நாடு. இலங்கைக்கு வந்திருக்கலாம் என கருத இடம் உண்டு. ஆகவே பல அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளின் படி, பல சாத்தியம் இன்று உண்டு. அவை: [1] குமரிக் கண்டம் [2] சுமேரியா [3] சிந்து வெளி நாகரிகம் [4] ஆஃப்ரிக்கா ஆகும். திராவிட இனத்தின் தோற்றம் பற்றித் தெளிவான முடிவுக்கு வரக்கூடிய சான்றுகள் போதாமையால், இது தொடர்பான சர்ச்சைகள் மேலே கூறிய யோசனைகள் படி முடிவில்லாது தொடர்கின்றன. இந்தப் பின்னணியில் பல்வேறு வகையான கருத்துக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். திராவிடரும், வெளியிலிருந்தே இந்தியாவுக்குள் வந்தனர் என்பது ஒரு வகையான கருத்து. இவர்களுட் சிலர் திராவிடர் மத்திய தரைக் கடற் பகுதிகளிலிருந்தே இந்தியாவுக்குள் வந்ததாகக் கூறுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள், தென்னிந்தியா அல்லது அதற்குத் தெற்கே இருந்து கடல் கோளினால் அழிந்துபோன ஒரு நிலப்பகுதியே திராவிடர்களின் தாயகம் என்று வாதாடுகின்றனர். எப்படியாயினும், ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுவதிலும் திராவிடர் பரவியிருந்தார்கள் என்னும் கொள்கை பல ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப் படுகின்றது. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் 75 ஆயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கிழக்கு ஆஃப்ரிக்காவில் மிகப் பெரிய பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மாலவி ஏரி வற்றிப் போனதால் பெரும் பஞ்சம் ஏற்பட்டு ஆஃப்ரிக்கக் கண்டத்தைச் சேர்ந்த கிட்டத் தட்ட 95 சதவீதம் பேர் அங்கிருந்து இடம் பெயர்ந்துள்ளனர். அவர்கள் அந்தமான் நிக்கோபார் வழியாகத்தான் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. அதாவது அந்தமான், நிக்கோபார் மற்றும் தென்னிந்தியாவின் மூலமாக அவர்கள் பல்வேறு நாடுகளுக்கும் இடம் பெயர்ந்து சென்றுள்ளனர் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மனித பரிணாமம் என்பது குரங்கு போன்ற மூதாதையர்களிடமிருந்து மக்கள் தோன்றிய மாற்றத்தின் நீண்ட செயல்முறையாகும். இது ஏறக்குறைய ஆறு மில்லியன் ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சியடைந்ததாகவும் அறிவியல் சான்றுகள் காட்டுகின்றன. ஆரம்பகால வரையறுத்த மனிதப் பண்புகளில் ஒன்றான இரு கால்களில் நடக்கும் திறன் -- 4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. மற்ற முக்கியமான மனித குணாதிசயங்களான -- ஒரு பெரிய மற்றும் சிக்கலான மூளை, கருவிகளை உருவாக்கும் மற்றும் பயன்படுத்தும் திறன் மற்றும் மொழிக்கான திறன் போன்றவை [large and complex brain, the ability to make and use tools, and the capacity for language ] -- சமீபத்தில் உருவாக்கப்பட்டது. பல மேம்பட்ட பண்புகள் -- சிக்கலான குறியீட்டு வெளிப்பாடு, கலை மற்றும் விரிவான கலாச்சார பன்முகத்தன்மை [complex symbolic expression, art, and elaborate cultural diversity] -- முக்கியமாக கடந்த 100,000 ஆண்டுகளில் வெளிப்பட்டன. மனிதர்கள் முதலில் ஆஃப்ரிக்காவில் உருவாக்கி, மனித பரிணாமத்தின் பெரும்பகுதி அங்கேயே நிகழ்ந்தது உள்ளது. 6 முதல் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஆரம்பகால மனிதர்களின் புதைபடிவங்கள் முற்றிலும் இன்று ஆஃப்ரிக்காவில் இருந்து தான் கிடைக்கப் பெற்றுள்ளன. பெரும்பாலான விஞ்ஞானிகள் தற்போது 15 முதல் 20 வெவ்வேறு வகையான ஆரம்பகால மனிதர்களை அடையாளம் காண்கின்றனர். எவ்வாறாயினும், இந்த இனங்கள் எவ்வாறு தொடர்புடையவை அல்லது எவை வெறுமனே இறந்துவிட்டன என்பது பற்றி விஞ்ஞானிகள் அனைவருக்கும் இடையில் ஒரு உடன்படவில்லை. பல ஆரம்பகால மனித இனங்கள் -- நிச்சயமாக அவற்றில் பெரும்பாலானவை - வாழும் சந்ததியினரை விட்டுவிடவில்லை. ஆரம்பகால மனிதர்களின் குறிப்பிட்ட இனங்களை எவ்வாறு அடையாளம் கண்டு வகைப்படுத்துவது மற்றும் ஒவ்வொரு உயிரினத்தின் பரிணாமம் மற்றும் அழிவை எந்த காரணிகள் பாதித்தன என்பது பற்றியும் விஞ்ஞானிகள் இன்னும் விவாதிக்கின்றனர். ஆரம்பகால மனிதர்கள் முதன்முதலில் ஆஃப்ரிக்காவிலிருந்து ஆசியாவிற்கு 2 மில்லியன் முதல் 1.8 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு குடிபெயர்ந்தனர். 1.5 மில்லியன் மற்றும் 1 மில்லியன் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர்கள் ஐரோப்பாவிற்குள் நுழைந்தனர். என்றாலும் நவீன மனிதர்களின் இனங்கள் மிகவும் பிற்காலத்தில் தான் உலகின் பல பகுதிகளிலும் குடியேறின. உதாரணமாக, மக்கள் முதலில் ஆஸ்திரேலியாவிற்கு கடந்த 60,000 ஆண்டுகளுக்குள் வந்திருக்கலாம் மற்றும் கடந்த 30,000 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவிற்கு வந்திருக்கலாம். விவசாயத்தின் தொடக்கமும் முதல் நாகரிகங்களின் எழுச்சியும் கடந்த 12,000 ஆண்டுகளில் தான் நிகழ்ந்தன. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 03 தொடரும்
  22. உண்மை. அத்துடன் காங்கேசந்துறைக்கு கப்பல் சேவை, இராமர் பாலம் கட்டுவது, கச்சதீவை மீட்பது என்று…. வருடா வருடம் புது புருடா விட்டுக் கொண்டு இருப்பார்கள். நமக்குத்தான் கேட்டுக் கேட்டு காது புளிச்சுப் போச்சு.
  23. பழைய சாப்பாடு என்று நினைக்கிறேன்....உணவகத்தின் பெயரையும் சேர்த்தே செய்தியை பிரசூரிக்கலாம் தானே இந்த பத்திரிகை நிறுவனங்கள்..அப்பாவிச் சனங்களை ஏமமாற்றுபவர்களுக்கு இப்படித் தான் செய்ய வேணும்..
  24. நல்ல புரதச் சத்துள்ள உணவு, சீனர்களுக்காக தயாரிக்கப்பட்டிருக்கு, தெரியாமல் வாங்கியிருப்பார்
  25. உங்களுக்கு ஊசி என்றால் பயமோ அண்ணை?!
  26. கூத்தாடும் கொண்டையிலே ........! 😍
  27. வணக்கம், கடஞ்சா! இது போல அவுஸ் நீர்த்தேங்கங்களிலிம் இவ்வாறு நிகழ்வதுண்டு. நீரின் வெப்ப நிலை அதிகரிப்பதால், நீரில் கரைந்திருக்கும் பிராணவாயுவின் அளவு குறைவடையும். இது மீன்கள் இறக்கக் காரணமாக அமைகின்றது.
  28. இலங்கையின் தமிழர் தாயக பகுதியில் பாடசாலை மாணவர்களை போதையின் பிடியில் இருந்து விலத்தும் வகையில் யாழ் பல்கலை கழக முன்னாள் மருத்துவ பீட மாணவர்கள் அமைப்பு ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கிறது. இந்த வேலை திட்டத்துக்கும், Killi People அமைப்புக்குமாக சேர்த்து நிதி சேகரிக்கும் நோக்கில் டாக்டர் மதியழகன் பரமலிங்கம் ஸ்கொட்லாந்தின் எடின்பரோ மரதனில் ஓடுகிறார். அவரின் ஆங்கில செய்தியும், நன் கொடை பக்கமும் கீழே. OUR STORY: Dear all, Greetings! வணக்கம்! Deadly street drugs have become widely available with no shortage in Tamil-populated North-East Sri Lanka within the last few years. Innocent school students, are the main target of drug traffickers and every parent fears their children being drawn into drug addiction. In response to the soaring rates of drug use in the youth, JMFOA(Jaffna Medical Faculty Overseas Alumni), with doctors from the North and East, is implementing 'the substance use prevention program' for all schools and increasing rehabilitation facilities for those affected. This is a worldwide fundraising activity jointly by KILI PEOPLE and JMFOA. The money raised would be used ''SAY NO TO DRUGS'' and ''GO GREEN GLOBE'' projects. I am here to appeal for your generous help. RUN FOR A BETTER FUTURE MASSIVE THANK YOU!. மிக்க நன்றி. https://www.justgiving.com/page/mathiyalagan-paramalingam-1708085344630?utm_medium=fundraising&utm_content=page%2Fmathiyalagan-paramalingam-1708085344630&utm_source=copyLink&utm_campaign=pfp-share
  29. It makes sense. சிங்களவனுக்கு வாக்களிக்காமல் ( இரண்டாவதை போடாமல்), தமிழன் ஒருவருக்கு வாக்களித்து தமிழரின் சிங்கள எதிர்ப்பை ஒருமித்து காட்டலாம்.
  30. கனடாவின் (Canada) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைப் பாதுகாவலரும் செயற்பாட்டாளருமான ராதிகா சித்சபைசனின் ( Radhika Chitsabesan) புதிய ஆவணப்படமான ரே ஒப் ஹோப் (நம்பிக்கையின் ஒளிக்கீற்று) இன்றைய தினம் (05) ஸ்காப்ரோவில் (Scarborough) திரையிடப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு தனது ஐந்து வயதில் ராதிகா தமது குடும்பத்துடன் கனடாவுக்குத் தப்பிச் சென்றார். இந்தநிலையில் ரே ஒஃப் ஹோப், (Ray of Hope)ஆவணப்படமானது இலங்கையில் 26 ஆண்டுகால ஆயுதப் போராட்டம் மற்றும் தமிழ் மக்களின் இனப்படுகொலையின் தாக்கங்களையும், தமிழ் புலம்பெயர்ந்தவர்களின் தனிப்பட்ட கதைகளையும் அனுபவங்கள் மூலம் ஆராய்கிறது. புலம்பெயர்ந்த தமிழர்கள் பல கனடியர்கள், குறிப்பாக பெரிய பெருநகரங்களில் உள்ளவர்கள் ஒரு தமிழர் அல்லது அவரின் குடும்பத்தை அறிந்திருக்கிறார்கள் - அவர்கள் வாழ்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள், விளையாடுகிறார்கள் அல்லது ஒரு தமிழருடன் வேலை செய்கிறார்கள். இருப்பினும், இங்கு ஏன் இவ்வளவு தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள், என்பதற்கான உண்மையான காரணங்கள் பலருக்குத் தெரியாது என்று சித்சபேசன் தெரிவித்துள்ளார். எங்கள் மூதாதையர் தாயகமான தமிழ் ஈழம், ஏராளமான விளை நிலங்களையும், ஏராளமான கடற்கரைகளையும் கொண்ட அழகிய மற்றும் வளமான இடமாக அறியப்படுகிறது. எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கத்தின் வேண்டுமென்றே, திட்டமிட்ட மற்றும் நடந்துகொண்டிருக்கும் தமிழ் இனப்படுகொலையால், பல தமிழர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உலகின் பல பகுதிகளில் பாதுகாப்பைத் தேடிக்கொண்டனர், அந்த வகையில் கனடாவில் மிகப்பெரிய புலம்பெயர்ந்த மக்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் ரதிகா சித்சபேசன் தனது நண்பரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரியான் சிங்குடன் இணைந்து 11 வருடங்களாக இந்த படத்துக்காக பணியாற்றி வருகிறார். தமிழ் இனப்படுகொலை புதிய ஆவணப்படம் தொடர்பில் அவர் தெரிவித்ததாவது, “இனப்படுகொலையில் இருந்து உயிர் பிழைத்தவளாக தமக்கு கிடைத்திருக்கும் மகத்தான பாக்கியம், தமது கல்வி நிலைகள், தமது தளம் மற்றும் வலையமைப்பு, அத்துடன் எனது உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் கனேடியனாக, தமது பாதுகாப்பு உணர்வு ஆகியவற்றின் காரணமாக இந்தப் படத்தை உருவாக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். வரலாற்று உண்மைகளாக, தப்பித்தல், உயிர்வாழ்வது, பின்னடைவு போன்ற பலரின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மற்றும் கனடாவில் தமிழர்கள் எவ்வாறு செழித்து வருகிறார்கள் என்பதைக் இந்த ஆவணப்படத்தில் காண்பிப்பது முக்கியம் என்று நாங்கள் நினைத்தோம். படத்தின் தயாரிப்பின் போது, காணாமல் போன, அல்லது கொலைசெய்யப்பட்ட தங்கள் மகன்கள் மற்றும் கணவர்களைத் தேடும் போது, போராட்டத்தின் மூலம் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக தைரியமாக தொடர்ந்து போராடும் தாய்மார்களுடன் உரையாடல்களை நடத்தினோம். காசாவில் இடம்பெறும் மோதல் இந்த திரைப்படம், இலங்கை மோதல் மற்றும் காசாவில் தற்போதைய மோதலுக்கு இடையே காணப்படும் ஒற்றுமைகள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. காசாவில் இன்று பாலஸ்தீனியர்கள் வெகுஜன மற்றும் கண்மூடித்தனமான அழிக்கப்படுகின்றனர். இதுவே 2009 மே மாதம் இலங்கைத் தீவு நாட்டில் தமிழர்களுக்கு நடந்தது. முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் இரண்டு கிலோமீற்றர் நிலப்பகுதிக்குள் வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு 15 வருடங்கள் ஆகின்றன. காசா பகுதி 40 கிலோமீட்டர் நீளம் கொண்டது, பாலஸ்தீனியர்கள் இந்த மேற்குக் கரையுடன் பல ஆண்டுகளாகத் தள்ளப்பட்டுள்ளனர், ஆனால் படுகொலை இன்று நடக்கிறது எனினும் உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் பாலஸ்தீனியர்கள் மற்றும் தமிழர்கள் இருவருமே தத்தமது பூர்வீக நிலங்களில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று எப்போதும் விரும்புகின்றனர். அவர்கள் இருவருமே அரசால் இனப்படுகொலைகளுக்கு உள்ளாகியுள்ளனர். எனவே எங்கள் உண்மைகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும்” என்று ரதிகா சித்சபேசன் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/ray-of-hope-documentary-by-radhika-chitsabesan-1714862461?itm_source=parsely-api
  31. என்ன தில்லையர்! ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப நம்ம ரூட்டிலையே வாறியள். 😄 சந்தோசம்🙂 தொடருங்கள் 👍🏼
  32. இந்த படத்தை பற்றி ஒரு விளக்கம் தரவும். நம்பிக்கை தான் வாழ்க்கை.
  33. மலையை வெட்டாதீர்கள்,மரத்தை வெட்டாதீர்கள், குளம் குட்டைகளை தூர் வாருங்கள் இயற்கை படைத்ததை பாதுகாப்போம். இதையே தான் சீமானும் சொல்கின்றார். அது சிலருக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருப்பதை திரிக்கு திரி காணக்கூடியதாகவே இருக்கின்றது. எல்லாம் மைக்டோனால்ட்ஸ் கொம்பனியள் 🤣
  34. அரசவை உறுப்பினர்களுக்கும்,அரச உத்தியோகத்தர்களுக்கும் ஊதியத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தும் அரசுகள் இருக்கும் வரை பற்றாக்குறை வாழ்க்கைதான்.
  35. நன்றி. நாதக தம்பிகள் பலர் உண்மையானவர்கள் என்பதே என் நிலைப்பாடும்.
  36. எல்லாரும் க‌வுண்டு போய் கிட‌க்கிறோம் குஜ‌ர‌த் அணி அப்கானிஸ்தான் வீர‌ர்க‌ளை ந‌ம்பி கீழ் ம‌ட்ட‌த்துக்கு வ‌ந்து விட்டின‌ம்........................ குஜ‌ராத் அணி அதிக‌ம் ந‌ம்பின‌து ர‌சித் ஹானை அவ‌ரின் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத்தின‌ம் எதிர் அணியின‌ர் ஜ‌க்க‌ம்மா மேல் ச‌த்திய‌ம் மிட்டு சொல்லுறேன் நான் தான் க‌ட‌சி இட‌த்துக்கு வ‌ருவேன் , உங்க‌ளால் முடியுமா என் இட‌த்தை பிடிக்க‌ ஹா ஹா😁.......................................
  37. என்ன செய்வது எம்மைப் போன்றவர்களும், ஏன் பிக்குகளும் அவர்களால் ஆசீர்வதிக்கப் படுபவர்களும் கூட புத்தரின் 16 வதில் இருந்து அவர் வாழ்ந்த 29 வயதுக்குள்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்......அதைத் தாண்டி ஒரு வயது கூட எமக்கு ஏறவில்லை அதற்குள் மரணித்தும் விடுகின்றோம்........!
  38. இடத்தை தனிமடலில் போடுங்கோ, தெரிஞ்ச பொதுச் சுகாதார பரிசோதகர்கள் காதில போட்டுவிடுவம்.
  39. வணக்கம், யாழ் இணையம் 26 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 71 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 30 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். கதைக் களம் கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் போன்றவற்றை இணைக்கலாம். கவிதைக் களம் கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். ______________________________________________________________________________________ யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் பின்வரும் ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது. அக்காவின் அக்கறை......! (suvy) புதனும் புதிரும் ( Kavi arunasalam) பொருநைக் கரையினிலே ( சுப.சோமசுந்தரம்) (தீ) சுவடு (தனிக்காட்டு ராஜா) இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024. ( ஈழப்பிரியன்) மரணம் (ரஞ்சித்) களியாட்டத்தில் கலாட்டாவா ( putthan) அப்பா உள்ளே இருப்பது நீதானா? (Kavi arunasalam) பூமித்தாய்க்கு அடிக்குது குலப்பன். ( nedukkalapoovan) ஆண்டவனையும் கேட்க வேண்டும் ( Kavi arunasalam) மயிலம்மா. ( suvy) வல்வை மண்ணில் பிரித் (nedukkalapoovan) ஆதி அறிவு ( ரசோதரன்) இந்தின் இளம்பிறை ( ரசோதரன்) என்ன பார்ட்டி இது?? (விசுகு) முடிவிலி (ரசோதரன்) மழைப் பாடல்கள் (ரசோதரன்) மின் காற்றாலைத் தோட்டம். ( ஈழப்பிரியன்) இலை என்றால் உதிரும் (ரசோதரன்) ஜோசுவா மர தேசிய பூங்கா. (ஈழப்பிரியன்) ஆரோக்கிய நிகேதனம் (ரசோதரன்) இந்த ஏழு நாட்கள் (ரசோதரன்) தோற்கும் விளையாட்டு (ரசோதரன்) அன்றுபோல் இன்று இல்லையே! ( பசுவூர்க்கோபி) வாசலும் வீடும் (ரசோதரன்) வாழ்ந்து பார்க்க வேண்டும் (Kavi arunasalam) மேய்ப்பன் (ரசோதரன்) ஒரு கொய்யா மரத்தின் விவரம் (ரசோதரன்) தாயின்றி நாமில்லை.! (பசுவூர்க்கோபி) விழல் (ரசோதரன்) தம்பி நீ கனடாவோ..? (alvayan) என் இந்தியப் பயணம் (மெசொபொத்தேமியா சுமேரியர்) குற்றமே தண்டனை (ரசோதரன்) புளுகுப் போட்டி (ரசோதரன்) சிறந்த நடுவர் (ரசோதரன்) ஒரு பொய் (ரசோதரன்) நானும் ஒரு அடிவிட்டன் (alvayan) கண்டால் வரச் சொல்லுங்க… (alvayan) புலம் பெயர்ந்த புகை (ரசோதரன்) பிஞ்சுக் காதல்… (alvayan) கனத்தைப் பேய்க் கவிதை….. (alvayan) வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு…. (goshan_che) காந்தி கணக்கு (ரசோதரன்) சனாதன வருத்தம் (ரசோதரன்) அதிர்ஷ்ட லாபச் சீட்டு (ரசோதரன்) கடவுள் விற்பனைக்கு (theeya) தோற்ற வழு (ரசோதரன்) பாக்குவெட்டி (ரசோதரன்) வாழ்க்கை எல்லோர்க்கும் வரமல்ல (theeya) ஒரு ஈழ அகதியின் பெயரால் (theeya) Dangar Island- தனிமை விரும்பிகளுக்கு மட்டும் ( P.S.பிரபா) எனது பார்வையில் காடு என்னும் திரைப்படம்... (nochchi) ஒரே மழை (ரசோதரன்) தமன்னாவை... பார்க்க ஏறிய பனைமரம் வெட்டி வீழ்த்தப்பட்டது. (தமிழ் சிறி) அள்ளு கொள்ளை (ரசோதரன்) ஒரு கிலோ விளாம்பழம் (ரசோதரன்) ஒரே கல்லில் இரண்டு மாங்காய் (சுப.சோமசுந்தரம்) சிறிய விடயம் தான் ஆனால்....? (விசுகு) கடவுளின் பிரதிநிதிகள் (ரசோதரன்) நந்தவனத்தில் போட்டு உடைப்பவர்கள் (ரசோதரன்) உயிர்த்தெழுதல் (ரசோதரன்) குரு தட்சணை (ரசோதரன்) சூரிய கிரகணமும் ..சுப்பர் கிங்சும்.. (alvayan) "மனு தர்மம் / வினைப் பயன்கள்" (kandiah Thillaivinayagalingam) தேனும் விஷமும் (ரசோதரன்) சிவப்புக்கல் (ரசோதரன்) பிள்ளைகளின் முழுப் பொறுப்பில் ஓர் சுற்றுலா (விசுகு) நிலவே நிலவே கதை கேளு! (பசுவூர்க்கோபி) அப்பா உடனே வாங்கோ. (ஈழப்பிரியன்) நூலறிவு வாலறிவு (சுப.சோமசுந்தரம்) புதியன புகுதலே வாழ்வு! (பசுவூர்க்கோபி) பதியப்பட்ட 71 ஆக்கங்களில் புதிதாக இணைந்த உறுப்பினர் @ரசோதரன் 31 ஆக்கங்களை பதிந்துள்ளார். கள உறுப்பினர் ரசோதரன் அவர்களுக்கும், சுய ஆக்கங்களைப் பதிந்த மற்றைய உறுப்பினர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. குறிப்பு: யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள் பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது. நன்றி
  40. என்னதான் சொல்வது. ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு நாட்டை சூரையாடுகின்றார்கள். பணத்தை சுருட்டுவதற்கு பதவி தேவைப்படுகின்றது. பதவியை பிடிப்பதற்கு அரசியல் அவசியமாகின்றது.
  41. இது தானாம்! இங்க யாழ் இணையத்தில இவரவிட நான்கிற்கு மேற்பட்ட மொலிகழிள் (மொழிகளில்) பாண்டித்தியம் பெற்றவர்கள் இருக்கின்றனர். தான் போறதுக்கு மூஞ்சூறுக்கு வழியக் காணேல்லையாம் விளக்குமாத்தையும் சேத்து காவிக்கொண்டு போக வெளிக்கிட்டிச்சுதாம்! 👀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.