Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    12678
    Posts
  2. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    20018
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    38756
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/11/24 in Posts

  1. 17)பொன் ராதாகிருஷ்ணன் ( பிஜேபி) - 2 தொகுதிகள் சரியாக பதில் அளித்தவர்கள் - புரட்சிகர தமிழ்த்தேசியன், சுவி, கிருபன், நுணாவிலான், பிரபா, புலவர் 1)கிருபன் - 90 புள்ளிகள் 2)நிழலி - 88 புள்ளிகள் 3)பிரபா - 78 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 70 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 62 புள்ளிகள் 6)நுணாவிலான் - 61 புள்ளிகள் 7)கோஷான் சே - 60 புள்ளிகள் 8)பாலபத்ர ஓனாண்டி - 49 புள்ளிகள் 9)வாத்தியார் - 49 புள்ளிகள் 10)சுவி - 45 புள்ளிகள் 11)கந்தையா57 - 43 புள்ளிகள் 12)புலவர்- 36 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் போட்டியில் வெற்றி பெற்றவர் கிருபன் ( அ துவும் 100 க்கு 90 புள்ளிகள். இம்பீரியல் கல்லூரியில் படித்தவர் என்று மீண்டும் நீருபித்திருக்கிறார்). அதிவிசேட சித்தியில் போட்டியில் சித்தி(வெற்றி) பெற்ற கிருபன்,நிழலி, பிரபாவுக்கும் வாழ்த்துகள். இந்த பரீட்சையில் (போட்டியில்) பங்கு பெற்றி சித்தி பெற்ற ( சித்தி பெற 35 புள்ளிகள் எடுக்க வேணும்) அனைத்து போட்டியாளர்களுக்கும் பாராட்டுகள். வெற்றி பெற்றவர்களுக்கு தனது சொந்த செலவில்பரீசில்களை இந்த போட்டியில் அதிக கருத்துக்களை பகிர்ந்த வீரப்பையன் வழங்குவார். 😀
  2. முன்னரே சீமான் சொல்லும் போது எனக்கான வாக்கு இப்ப பாடசாலைகளுக்கு போய் கொண்டிருக்கிறார்கள். அது இப்போ தான் வெளிய வருது. பெற்றோர் சொல்லி பிள்ளைகள் திராவிடத்துக்கு வாக்கு போட்டார்கள். இனி பிள்ளைகள் சொல்ல பெற்றோர்கள் வாக்கு போடுவார்கள். திராவிடம் தான் வளர்வதற்கு பதிலாக நாம் தமிழரை எவ்வாறு வீழ்த்தலாம் என்று இப்பவிருந்தே சூழ்ச்சியில் ஈடுபடும். திராவிடக் கட்சிகள் சூழ்ச்சியாலேயே வளர்ந்து பழக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. வாழ்க நாம் தமிழர்.
  3. 22வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி ஆரொன் ஜோன்ஸனின் 52 ஓட்டங்களுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதியில் 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 22 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள் (மாற்றமில்லை): நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 38 2 பிரபா USA 36 3 ரசோதரன் 36 4 ஈழப்பிரியன் 34 5 சுவி 34 6 நந்தன் 34 7 வாதவூரான் 32 8 ஏராளன் 32 9 குமாரசாமி 30 10 தமிழ் சிறி 30 11 கிருபன் 30 12 கந்தப்பு 30 13 வாத்தியார் 30 14 எப்போதும் தமிழன் 30 15 நீர்வேலியான் 30 16 வீரப் பையன்26 28 17 நிலாமதி 28 18 தியா 28 19 புலவர் 28 20 P.S.பிரபா 28 21 நுணாவிலான் 28 22 அஹஸ்தியன் 28 23 கல்யாணி 28 குறைந்தது இன்னும் ஒரு கிழமைக்கு @goshan_che ஐ முதல் படியில் இருந்து விழுத்தமுடியாது!
  4. இந்த கேள்வியை நீங்கள் கேட்டதால் கூறுகிறேன். மிக பிந்திய முடிவு என்றாலும் கிளிநொச்சி விழுந்த உடனையாவது இனி ஆயுத போராட்டம் சரி வாராது தாம் பலவீனமாகி விட்டோம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டு அன்றே மக்களை செஞ்சிலுவை சங்கத்தின் மேற்பார்வையில் விடுவித்து ஆயுத போராட்டத்தை முடித்து அரசியல் போராட்டத்தை அன்றே ஆரம்பித்திருந்தால் பெருமளவு மக்களையும் அரசியல் போராளிகளையும் காப்பாற்றியிருந்திருக்கலாம். அதுவும் லேட்டான முடிவு தான். என்றாலும் ஏராளமான பொதுமக்களும் போராளிகளும் உயிரோடு தப்பியிருப்பர். இன்று அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டிக் தேவையில்லை. அரசியல் போராளிகளே போராட்டத்தை தொடர்ந்திருக்கலாம். பெருமளவான பொது மக்கள் கிளிநொச்சிக்கு பிறகு அந்த பிரதேசத்தில் இருந்து வெளியேறவே விரும்பினர். அவர்கள் வெளியேற விடாமல் தடுத்து ஒரு சிறிய பிரதேசத்துக்குள் கொண்டு சென்றது மாபெரும் தவறு தான். எவரலும் மறுக்க முடியாது.
  5. அமெரிக்காவின் நீதித்துறை பலமாக இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம். இது ஒரு "கறுப்பு வெள்ளை" போல தெளிவான வழக்கு. வழக்கு நடந்தது பைடன் குடும்பம் கோலோச்சும், பைடன் பல ஆண்டுகளாக செனற்றராக இருந்த டெலவேயார் மாநிலத்தில். ஆனால், இது ஒரு சமஷ்டி வழக்கு. எனவே பைடன் ஆட்சியை விட்டுப் போகும் போது ஹன்ரருக்கு மன்னிப்பு வழங்குவார் என்று பேசிக் கொண்டார்கள். போன வாரம், தான் "தண்டனை கிடைத்தாலும் ஹன்ரருக்கு மன்னிப்பு வழங்கப் போவதில்லை" என பைடன் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். மறு பக்கம், ட்ரம்ப் தன்னைத் தானே "சமஷ்டி வழக்குகளில் கிடைக்கக் கூடிய தண்டனைகளில் இருந்து மன்னித்துக் கொள்வாரா இல்லையா?" என்றால் எதுவும் சொல்ல மறுக்கிறார்😂.
  6. கொஞ்சகாலம் இந்திய கோமியத்தை மட்டுமே குடித்தார்கள். சிங்களவர்கள் போல சகல நாட்டு கோமியங்களையும் குடிக்க பழக வேண்டும்.
  7. பிரபாகரன் படத்தை வாக்குச் சீட்டில் போடவா போகிறார்கள் அதைப் பார்த்து அதன்மேல் புள்ளடியிடுவதற்கு? சுத்த கேனைத்தனமான கருத்து. நாதக பிரபாகரன் பெயரை உச்சரிப்பதுதான் பலருக்கு நாதக மீது கடுப்பை ஏற்படுத்துகிறது. ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. பிரபாகரன் என்கிற பெயரைக் கேட்டாலே பலருக்கு ரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது. 😁
  8. திமுக கூட்டணி 39 இடங்களை பிடிக்கும் என்ற பதிலை பார்த்ததும் நீங்கள் அல்லது நிழலிதான் வெல்லுவார்கள் என நினைத்தேன். இதனால் மற்றவர்கள் ( கோஷான், தமிழ்சிறி )கொஞ்ச காலம் முன்னிலையில் நிற்பதற்கு ஏற்றதாக கேள்விகளை தெரிவு செய்து புள்ளிகளை முதலில் வழங்கினேன். பிறகு உங்கள் இருவரில் நீங்கள்தான் வரப்போகிறீர்கள் எனத் தெரிந்தினால் நிழலி சரியாக சொன்ன பதிலுக்கு முதலில் புள்ளிகள் வழங்கினேன்.😀
  9. சகோத‌ர‌ர் எப்ப‌வும் அப்ப‌டி தான் த‌லைவ‌ரே அவ‌ர் தெரிவு செய்த‌ அணி நல்ல‌ நிலையில் நின்றால் , ந‌ல்லா வில்டாப் விடுவார் தான் யோசிச்சு பொறுமையா தான் இந்த‌ அணிய‌ தெரிவு செய்தேன் என்று ர‌சோதர‌ன் அண்ணா தெரிவு செய்த‌ அணி தோத்தா நொண்டி சாட்டை முன் கூட்டியே வைச்சு இருப்பார் ஹா ஹா.........................................
  10. முதலில் சுமா பொத்திக்கொண்டு இருப்பதே நல்லம் . ஒரு கோடாரிக்காம்பு .....
  11. பிரதமர் மோடி தனது ஆட்சிக்காலத்தில் இந்தியாவின் பாதுகாப்பினை, பாதுகாப்பு கட்டமைப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் முன்னெப்போதும் இல்லாதவாறு, பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியேறி இருப்பது இந்தியாவின் நலனுக்கு ஏற்றது.
  12. 2009 அழிவின் சூத்திரதாரி இந்தியா -சோனியா , ரணில் வந்தால் என்ன , மஹிந்த வந்தால் என்ன. அழிவு தான் முடிவு. சும்மா ரணிலுக்கு போற்றிந்தால் அழிவில் இருந்து தப்பியிருப்பம் என்பது , அரசியல் அறிவு இல்லாத வாதம். மஹிந்தவும் சண்டைக்கு போக மனதளவில் விரும்பவில்லை ஆனால் அவரை தன்வழிக்கு மாற்றியது இந்தியா .
  13. தேர்தலில் போட்டியிட ஒவ்வொரு குடிமகனுக்கும். உரிமை உண்டு” அதேநேரம் தேர்தலில் போட்டியிடாதே என்று சொல்ல எவருக்கும் உரிமையில்லை இந்த கூட்டம் ரணிலின் தேர்தல் பிரசாரக். கூட்டம் பெயர் தான் என்னவோ தமிழ் பொது வேட்பாளர. வேண்டாம் என்பது கொழும்பு வாழ் மக்களால் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படாத. ரணிலுக்கு சுமத்திரன். எப்படி தமிழ் மக்கள் மத்தியில் இது ரணிலின். பிரசாரக் கூட்டமென்று சொல்லி பிரசாரம் செய்ய முடியும்??. கொழும்பு வாழ் மக்கள் யார் சொல்லி ரணிலுக்கு வாக்கு போடவில்லை?? இது பற்றி சுமத்திரன். ஏன். பேசுவதில்லை?? ஆனால் 2005 இல் வாக்கு போடவில்லை என்று மிகவும் கவலைப்படுகிறார. ஏன்?? இன்றைக்குக்கூட ரணில் ஐனதிபதி தான் தமிழருக்கு சுயாட்சி வழங்கலாம் ஏன்? வழங்க இல்லை ?? அதாவது விருப்பமில்லை 2005 இவரை தெரிவு செய்திருந்தால் சுயாட்சி வழங்கி இருப்பாரா?? இந்த தேர்தலிலும் இவரை தெரிவு செய்தால் தமிழருக்கு சுயாட்சி வழங்குவாரா?? இல்லை இந்த ரணில் வாழ் நாள் அரசியல்வாதி. இதுவரை தமிழ் மக்களுக்கு செய்த நன்மைகள் ஏதாவது உண்டா??
  14. "தமிழக மக்கள் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்றவர்களை ஆதரித்தமை வருத்தமே" "ஈழத்தமிழர்களுக்காக தனி நாடு / தமிழீழம் அமைக்க வேண்டுமென பிரதமரிடம் நேரில் கோரிக்கை வைக்கவுள்ளேன்" எனக்கும் வேண்டாம்.
  15. நேபாள‌ம் இல‌ங்கைக்கு குருட் ல‌க்கில் அடிச்சாலும் அடிக்க‌ கூடும் அண்ணா விளையாட்டை பாடுங்கோ ஹா ஹா.......................................
  16. தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான். குற்றம் நிரூபிக்கப்பட்டு வழங்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
  17. எனக்கு வேகமகப் பழைய நிலைக்கு வருகிறது. வேறு யாருக்காவது இந்தப் பிரச்சனை உள்ளதா ? கணணியிலா தொலைபேசியிலா இப்படி வருகிறது. ஏராளன், Back மூலம் பழைய நிலைக்கு வருவதற்குப் பதிலாக மெனுவில் Activity என்பதை அழுத்தி வரலாமே.
  18. பருத்தி மூட்டை குடோனிலயே இருந்திருக்கலாம்.........🤣......மூன்று போட்டிகள் முடிவிலும் ஒரு மாற்றமும் இருக்காது.
  19. போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்பு அண்ணாவுக்கும் போட்டியில் வென்ற‌ பெரிய‌ப்புக்கும் வாழ்த்துக்க‌ள்..........................
  20. இல்லை தான் ஆனால் அவர் அதை எடுக்க முடியும் .....முதல் காரணமும்,.முக்கிய காரணமும். அந்த திறவுகோலை அவர் எடுக்க விரும்பவில்லை ...எப்படி என்றால்,..உதாரணமாக 1983 ஆண்டில் தமிழ் மக்களை தாக்கிய,வெட்டிய. ...கொன்ற,.எரித்த அனைத்து குற்றவாளிகளையும். தேடி கண்டு பிடித்து நண்பர்கள் உறவினர்கள் பணக்காரர் என்று பாராது சட்டம் தன் வேலையை செய்ய அனுமதிக்க வேண்டும் ...அதாவது ஈவு இரக்கமின்றி தண்டிக்கப்பட வேண்டும் ...இதன் மூலம் குற்றவாளிகள் குறைவு அடைவார்கள். குற்றவாளிகளின். சொத்துக்கள் பறிமுதல் செய்து பதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் இதனால் சிங்களவர் தமிழரை தாக்குதல் வெட்டுதல். கொல்லுதல் எரித்தால் என்பன. குறையும் அல்லது நடைபெறாது இன்று ஒரு நெருகடியான. நிலை இலங்கையில் தோன்றும் போது சிங்களவன். தமிழர்களை என்னவும் செய்யலாம் என்ற எழுதாப்படாத. சட்டம் உண்டு” இந்த நிலைமையை மாற்றி அமைத்தால். திறவுகோல். இவரிடம் வந்து விடும் 🙏
  21. பாகிஸ்தான் பந்து வீச்சை தெரிவு செய்துள்ளது. இந்தப் போட்டியிலிருந்து விளையாட ஆரம்பித்து, அப்படியே கோப்பையை வெல்லப் போவதாக பாகிஸ்தான் சொல்லுகின்றது......
  22. இன்றிலிருந்து மேற்கினதும் அமெரிக்காவினதும் கோமியத்தைக் குடியுங்கள்.
  23. வெற்றியீட்டிய கிருபன், நிழலி, பிரபாவுக்கு வாழ்த்துக்கள். போட்டியை திறம்பட நடாத்திய கந்தப்புவுக்கு நன்றி. பங்கு பற்றிய அனைவரும் மனம் தளராமல் மீண்டும் ஒரு போட்டியில் சந்திப்போம்.
  24. 😊 போட்டியைத் திறமாக நடாத்திய @கந்தப்பு வுக்குப் பாராட்டுக்கள்! பல கேள்விகளுக்கு பதிலளிக்க நிறைய வாசிக்கவேண்டி இருந்தது! நிறையத் தரவுகள் இணையத்தில் இருந்ததால், நம்பகமான தரவுகளை மின்னம்பலம் சேர்வேயில் இருந்தே எடுத்தேன். 24வது கேள்விக்கு மாத்திரம் தரவை மீறி விருப்பமான பதிலைப் போட்டேன்! புள்ளி கிடைக்கவில்லை! ஆகவே ஃபீலிங்ஸ்ஸை விட்டுவிட்டு data ஐ நம்மவேண்டும்! தொடர்ந்தும் முன்நிலையில் நின்ற @நிழலிக்கும், போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும் பாராட்டுக்கள்! 2026 தேர்தலில் கூட்டணி எப்படி அமைகின்றது என்பதை வைத்து போட்டியில் வெல்லலாம்😁
  25. தொராவிடக் கட்சிகள் தங்கள் தங்களை புனர்நிர்மாணம் செய்துகொள்ளாவிட்டால், புதுப்பித்துக்கொள்ளாவிட்டால் தமிழ்நாட்டில் அவர்களுக்கு மாற்றீடாக BJP யும் நாகதவும்,.......... வருவது தவிர்க்க முடியாதது. எனக்கென்னமோ ஸ்ராலினுக்குப் பின்னர் திமுக வின் கதை கந்தல்தான் எனத் தோன்றுகிறது. அவர்களுக்கு ஊழல் செய்யவே நேரம் போதவில்லை. தங்களை எப்படி சுயபரிசோதனை செய்துகொள்ளப் போகிறார்கள்?
  26. போட்டியை திறம்பட நடத்தி ஒப்பேற்றியதற்கு நன்றி கந்தப்பு.........! 👍 கிருபன், நிழலி, பிரபா வுக்கும் வாழ்த்துக்கள்......... பங்குபற்றிய அனைவருக்கும் பாராட்டுக்கள் ........!
  27. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆனால், மூன்று அடுக்குகளை கொண்டு பலப்படுத்தப்பட்ட ஜன்னல்களால் விமானத்திற்குள் ஆலங்கட்டி மழை ஊடுருவவில்லை. மணித்தியாலத்திற்கு நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் பயணிக்கும் போது ஆலங்கட்டி மழை அல்லது பிற கடினமான பொருட்களால் தாக்கப்பட்டால் உடைந்து போகாமல் இருப்தை உறுதிப்படுத்த விமானத்தின் கண்ணாடிகள் சோதனைக்குட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது இந்நிலையில், சேதத்தை பொருட்படுத்தாமல் விமானம் பத்திரமாக வியன்னாவில் தரையிறக்கப்பட்டுள்ளது. தற்போது விமானத்தை தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். விமானத்தில் பயணித்த எம்மேலி ஓக்லி என்ற பயணி சம்பவம் தொடர்பில் விபரிக்கையில் , "நாங்கள் தரையிறங்குவதற்கு சுமார் 20 நிமிடங்களில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய மேகத்திற்குள் நுழைந்தோம், விமானத்தில் கொந்தளிப்பு தொடங்கியது." என்றார். இதேவேளை 2017 ஆம் ஆண்டில், இதேபோன்ற ஒரு சம்பவத்தை எதிர்கொண்ட விமானம் பத்திரமாக தரையிறக்கிய பின்னர் விமானி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/185800
  28. நிஜமாகவே பெருத்த அபாயத்தில் இருந்து மீண்டிருக்கின்றார்கள்........விமானிகளைப் பாராட்டத்தான் வேண்டும்..........! 👍
  29. இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் இந்த மாற்றம் நிகழத்தொடங்கி இருக்கிறது.. கட்டற்ற குடியேற்ற கொள்கைகளால் பலநாடுகளின் கலாச்சாரம் பண்பாடு மொழி அடையாளங்கள் அவர்களின் பாரம்பரிய கொண்டாட்டங்கள் என்று எல்லாமே மாறி அவர்கள் வாழ்நாளில் பார்த்தறியாத வேறு ஒரு நாட்டின் சமய கலாச்சார பண்பாட்டு விழுமிய கொண்டாட்டங்கள் தமது நாட்டின் அடையாளமாக மெல்ல மெல்ல மாறுவதை பார்க்கும்போது கண்ணுக்கெட்டிய தூரத்தில் தமது இன்னும் ஒரு தலை முறையிலேயே தாம் தம் சொந்த மண்ணில் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிடுவோமோ என்று அஞ்சுகிறார்கள்.. ஆம் அவர்களின் அந்த அச்சம் நியாயமானது.. கரிசனைகொள்ளவேண்டியது.. பூர்வக்குடிகளாக வாழ்ந்த ஒரு மண்ணில் வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் எப்படி நாம் சிறுபான்மையினர் ஆக்கப்பட்டோம் அதன் பின் அதற்கு 50 வருடங்களுக்கு மேலாக நாம் இழந்தவற்றை மீளப்பெற நாம் இன்றும் கொடுத்துக்கொண்டிருக்கும் விலைகள்.. இத்தனை விலை கொடுத்தும் நம்மால் இழந்தவற்றை மீளப்பெற்றுக்கொள்ள முடியாத நிலை.. என்று எல்லாவற்றையும் கண்முன்னே சாட்சியாக பார்த்துக்கொண்டும் அனுபவித்துக்கொண்டும் இருக்கும் ஒரு இனத்தை சேர்ந்த நாம் எப்படி பாலஸ்த்தீனத்துக்கு ஆதரவு கொடுக்கிறோமோ அப்படி நியாயமான இந்த மக்களின் கோரிக்கைக்கு இனசுத்திகரிப்பு சாயம் பூசாமல் ஏற்றுக்கொள்ளவேண்டும்.. அதுதான் தார்மீகம்.. அண்மையில் ரிசிசுனக் அரசு ருவாண்டா பில் அமுலாக்கியபோது அதிலிருந்து தப்ப சாரை சாரையாக அயர்லாந்து வந்து இறங்கியவர்களை பார்த்து அயர்லாந்தே மிரண்டு போய் இருந்தது..அவர்கள் இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் நின்று பேசியும் பொழுதுபோக்கியும் நேரத்தை செலவழித்துக்கொண்டிருந்த போது ஜரிஸ்காரர் ஆகிய தாம் வீதிக்கு வர பயத்தில் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததாக எழுதுகிறார்கள்.. விடுமுறை நாட்களில் பார்க் முழுவதும் வேறு மொழி பேசும் வேறு கலாச்சார உடைகளை அணிந்திருந்த முஸ்லிம் ஆண் பெண்களால் நிரம்பி வழிந்த போது தாங்கள் யாரும் பயத்தில் வழமையாக உடற்பயிற்சி செய்யும் பார்க்கிற்க்கு கூட செல்கவில்லை என்று எழுதுகிறார்கள்.. உங்கள் ஊரில் உங்கள் மொழிபேசாத இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக வீதிகளில் பியர்குடித்துக்கொண்டும் புகைத்துக்கொண்டும் இருந்தால் இயல்பிலேயே உங்களிற்கு பயம் வரத்தானே செய்யும் என்கிறார்கள்.. என்னைக்கேட்டால் கண்டிப்பாக என் பெண் ஆண் பிள்ளைகளைக்கூட புதியவர்கள் நிற்குமிடத்தால் தனிய வெளிய அனுப்பமாட்டேன்.. இதே தங்கள் நாட்டு இளைஞர்கள் தம்மொழி பேசுபவர்கள் கூட்டமாக நிற்கும்போது நம்பிக்கையோடு ஒரு முகமன் கூறிவிட்டு கடந்து செல்ல முடிகிறது என்கிறார்கள்.. ஏனெனில் அவர்கள் ஊரவர்கள் தெரிந்தவர்கள் ஒரே மொழி பேசுபவர்கள்.. அவர்கள் சொல்வதில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ளமுடிகிறது.. ஒருவர் எழுதுகிறார் மெதுவாக தள்ளாடி தள்ளாடி நடந்துபோய் வெள்ளிக்கிழமைகளில் தபாலகங்களில் பென்சன் எடுக்கும் முதியவர்கள் கூட பயத்தில் தங்கள் ஊரில் பென்சன் எடுக்க வீட்டை விட்டு போகவில்லை ஏன் என்றால் அன்று பென்சன் எடுக்கும் நாள் என்பதால் பல முதியவர்களிடம் அடித்து தள்ளிவிழுத்தி பணத்தை பறித்திருக்கின்றனர்.. எந்த காலத்திலும் தம் ஊரில் இது நிகழ்ந்ததில்லை என்கின்றனர்.. யாராவது முதியவர் எடுத்த பணத்தை மறந்துபோய் விட்டுவிட்டாலும் அதை தேடிக்கொண்டுபோய் குடுக்கும் பழக்கம் உள்ளவர்கள் அந்த மக்கள்.. இத்தனைக்கும் ஜரோப்பாவிலேயே இனவெறி குறைவான நட்புடன் புன்னகைக்கும் குணமுள்ளவர்கள் ஜரிஸ் மக்கள்.. இன்று அவர்களாலேயே மூச்சுவிட முடியவில்லை குடியேற்ற தொல்லையால்.. ஏன் இந்த மக்கள் இப்படி மாறி இருக்கின்றனர் என்றால் ஏன் நாங்கள் இப்படி எல்லாவற்றையும் இழந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து பார்த்தால் விடைகிடைக்கும்.. ஒரே விடை உங்கள் சொந்த நாட்டிலேயே நீங்கள் சிறுபான்மையினர் ஆனால் அப்புறம் கதை முடிந்தது.. சிறிராம ஜெயம் சொல்லு என்று ஜரிஸ் வீதியில் ஒரு இந்திய சங்கி ஜரிஸ்காரனை போட்டு அடிப்பதை கூட நாம் கண்ணால் காணலாம்..
  30. ஆம் இனி இரட்டை இலையை பார்த்தேன் MGR தெரிந்தார் குத்தினேன் என்பதெல்லாம் நடக்காது
  31. நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இதற்கு மதவாதம் அல்லவா முன்னிறுத்துப்படுகிறது?? அங்கு தான் சிக்கலே.
  32. 76 வருடங்களாக தீர்க்கப்படாத பிரச்சினையினை தீர்க்கும் திற்வுகோல் ரணிலிடம் மட்டும் இருக்கிறதா? இந்த பிரச்சினை தொடர்ந்து செல்லும் கடைசியாக யாராவது இடையில் புகுந்து குரங்கு அப்பம் பிரித்தனை போல் பிரிப்பார்கள்.
  33. நான் சொல்லியது இனவாதிகள் தந்தை, மகள் லுபென் Vs ஊழல்வாதி நிகலோய் சார்கோசி போன்றோர் பற்றி. நீங்கள் எதை நினைத்தீர்கள்🤣. பிகு இந்த இன்வாதிகளின் நதிமூலம், ரிசி மூலத்தை நோண்டினால் அவர்களே “வந்தேறிகள்” ஆக இருப்பது வழமை. உதாரானமாக பிரெக்சிற் நாயகன் Nigel Farage. Farage என்ற பெயர் பிரஞ்-லக்சம்பேர்க் எல்லை பகுதியினரது. இவரின் மனைவியிம் ஜேர்மன்காரி. (எதையோ நினைத்து பூட்டை ஆட்ட வேண்டாம்🤣)
  34. கனதூரம் போகாது...🤣 அப்பிடியே 21....22....23 ல முட்டி மோதி நிக்கும். 😂
  35. 🤣 ச்...சா....ச்..சா இந்தா பார் சிங்கன் சிங்கிளாய் தேர் இழுத்து எங்கை கொண்டு வந்து நிப்பாட்டியிருக்கான் பார்....? 😜 உன்னால் முடியுமா தம்பி?
  36. மரின் லு பென்னுக்கும், அவரின் தந்தை லு பென்னுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், அவர் எல்லா இன-பிரான்சியர் அல்லாத, வெள்ளை தோல் அல்லாதவரையும் எதிர்த்து அரசியல் செய்தார். ஆனால் அது வெறி அவுட் ஆகாது என தெரிந்து கொண்டு - packaging மாத்தி, பிரெஞ்சு குடிகள் இல்லாதோருக்கு எதிரான அரசியல் செய்கிறார் மெரின். இது யூகே யில் வெற்றிகரமாக பரீட்சித்து பார்க்கப்பட்ட பாலிசிதான். எப்படி? இப்படி👇 1. 70, 80,90 களில் National Front, British National Party என சகல பிரித்தானியர், ஐரிஷ் அல்லாதோருக்கும் எதிரான வெளிப்படையான இனதுவேச அரசியல் செய்து மூக்குடைபட்டார்கள். 2. 2000 களில் நாம் இனத்துவேசிகள் அல்ல, ஐரோப்பிய மட்டற்ற குடிவரவு, ஐரோப்பிய யூனியனுக்கு எதிரானோர் மட்டுமே என UKIP ஐ ஆரம்பித்து - சிறுக சிறுக, கிழக்கு ஐரோப்பியர் மீது வெறுப்பை வளர்த்து - பிரெக்சிட்டை ஸ்தாபித்தார்கள். பிரெக்சிட் வாக்கு நேரம், இவர்கள் பல ஆசிய, ஆபிரிக்க வம்சாவழி வாக்காளரையும் கவர்ந்தார்கள். என்ன சொல்லி? நாம் உங்களுக்கு அல்ல, கிழக்கு ஐரோப்பியருக்கு மட்டுமே எதிரானோர். பிரெக்சிட்டின் பின் உங்களுக்கு சம்பளம் கூடும், உங்கள் நாட்டில் இருந்து ஆட்களை எடுப்பது இலகுவாகும் என பூச்சுற்றி. 3. இவ்வாறு பிரெக்சிட்டை நடத்தி முடித்த கையோடு, UKIP ஐ கலைத்து விட்டு, அடுத்து Reform UK என ஒரு பார்ட்டியை ஸ்தாபித்து இப்போ பழமைவாத கட்சியை hostile takeover செய்யும் நிலைக்கு வளர்ந்து விட்டார்கள். இப்போ இவர்களின் பிரதான எதிரி சட்ட, சட்டபூர்வமற்ற வகையில் நடக்கும் குடிவரவு. அதாவது ஆசிய, ஆபிரிக்க நாட்டில் இருந்து வருவோர், வந்து இன்னும் நிரந்தர வதிவுரிமை அடையாமல் இருப்போரே இப்போ இவர்களின் இலக்கு. 4. இதையும் பிரெக்சிட் போல் முடித்த பின் - அடுத்த இவர்களின் இலக்கு? இங்கே குடியேறி, பிரஜையும் ஆகி விட்ட வெள்ளை அல்லாதோர். அதாவது நீங்களும், நானும், ரிசி சுனாக்கும், சஜித் கானும்🤣. இங்கே படிமுறை 1 முதல் 4 வரை இந்த கட்சிகளை நடத்தியோர், பணம் கொடுத்தோர் எல்லாரும் ஒரே இனவாத சிந்தனை உள்ளோரே. காலத்துக்கேற்ப தம் packaging ஐ மாற்றி கொள்கிறனர். பிரான்சில், தந்தை லிபென் நின்றது படிமுறை 1 இல். மகள் மெரின் நிற்பது படிமுறை 2இல். ஆகவேதான் இந்த விஷ கிருமிகளை அது யூகே, பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா, தமிழ் நாடு, இலங்கை எங்கேயும் எந்த காரணத்துக்காகவும், அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஆதரிக்கவே கூடாது. இந்த இனவாத கிருமிகளை விட ஊழல் வாதிகள் பரவாயில்லை. ஓம்…நீங்கள் கூட கொஞ்சம் ஆவலுடன் யாழில் எழுதி இருந்தீர்கள். நான் கொஞ்சம் பயந்துதான் இருந்தேன். நல்லவேளையாக யாருக்கோ இவரை ஆப் செய்யும் ரகசியம் தெரிந்துள்ளது. அதனால் இத்தாலியும், ஐரோப்பாவும் கொஞ்சம் நிம்மதியாக உள்ளன. அல்லது இவர் வாக்குக்காக இனவாதம் பேசும் ஆளாகாவும் இருக்கலாம். ஆனால் எல்லாரும் இவரை போல் இருக்க மாட்டாகள். கிட்டதட்ட நூறு வருடம் முன் அடோல்ப் என்ற ஒருவருக்கு இதே வாய்ப்பு கிடைத்த போது நடந்ததை மறக்க கூடாது.
  37. அங்க மனுசன் போவானா.. அதிலும் போட்டில.. நாங்கள் ஏன்டா நடுராத்திரி சுடுகாட்டுக்கு போகோணும்..?
  38. தமிழ்நாட்டைத் தவிர வேறு எந்த இந்திய மாநிலங்களிலும் அந்த மாநிலத்தை சேராதா ஒருவர் ஒரு முக்கிய அரசியல்வாதி ஆவது சாத்தியம் இல்லாத ஒரு விடயம். வி.கே. பாண்டியன் உண்மையில் எதை நோக்கி போய்க் கொண்டிருந்தார் என்பது இப்பொழுது தெரியாமல் போய்விட்டது. திறமையான நிர்வாகியும், நிர்வாகத்தில் ஊழல், லஞ்சம் அற்றவர் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. மோடிஜீ கன்யாகுமரியில் இரண்டு நாட்கள் இடைவெளி இல்லாமல் தியானத்தில் இருந்ததே தொலைந்து போன புரி ஜெகன்நாதர் கருவூலச் சாவியை கண்டுபிடிக்கவே என்று ஒரு பகிடி ஓடிக் கொண்டிருந்தது. தமிழ்நாட்டிற்கு சாவி வந்து விட்டது என்றவர்கள் இப்பொழுது ஆட்சியை பிடித்து விட்டனர். இப்பொழுது சாவியை எடுத்துக் கொண்டு போய் கருவூலத்தை திறக்க வேண்டியது தானே.........
  39. 2005. இல் தமிழ் மக்கள் வாக்கு போட்டிருந்தால். ரணில் ஐனதிபதி ஆகி இருப்பார் என்ற உங்கள் கூற்று சரியாகும் ஆனால் தீர்வு நிச்சயமாக கிடைத்து இருக்காது மீண்டும் சொல்லுகிறேன். 2005 இல் 100% தமிழ் மக்கள் வாக்கு போட்டிருந்தாலும். தீர்வு கிடைத்திருக்காது நன்கு திட்டமிட்டவகையில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றாமால். செய்யும் அரசியல்வாதிகளில். இவர் ரணில் மிக முக்கியமான மனிதர் ஆகவே 2005 தேர்தல் முடிவு பற்றி எனக்கு ஒரு சிறுதுளி கவலையுமில்லை 2009 அழிப்பு இவரது ஆதரவுடன் நடத்தது இவர் தடுக்கவில்லை மாறாக பால் சோறு சாப்பிட்டார் இவருக்கு தமிழ் மக்கள் 50%,....70% என்று வாக்கு போடுவார்கள் என்றால் ஒரு தமிழன் பொது வேட்பாளரா நிற்பதை ஏன் தடுக்க வேண்டும்?? இன்றைய ஐனதிபதி ரணில் தமிழ் மக்களுக்கு தீர்வு தர விரும்பவில்லை ..நாளைய ஐனதிபதி ரணில் தீர்வு தருவாரா?? தமிழ் மக்கள் வாக்கு போடும் விதத்தை வைத்து ரணில் நல்லவர் தமிழ் மக்களுக்கு நல்லது செய்வார் தீர்வு வழங்குவார். என்று நிறுவ முடியாது ...கூடாது மாறாக கடந்த காலங்களில் ரணிலின். செயல்பாடுகளை வைத்து கணிக்க நிறுவ முயல வேண்டும் 2009 அழிப்புக்கு போராடியவர்கள் காரணம் இல்லை தீர்வு தாராமல். அழித்தவர்கள் தான் குற்றவாளிகள் அதில் ரணிலுக்கு முக்கிய பங்குண்டு
  40. மனிதர்களுக்கு தேவையானதும், பெறுமதிமிக்கதுமான உலோகங்களோ அல்லது மூலகங்களோ நிச்சயம் சந்திரனில் இருக்கும். அவற்றை அங்கே தேடிக் கண்டுபிடிக்கவும், பூமிக்கு எடுத்து வரவும் தேவையான தொழில்நுட்பங்களையும் நாங்கள் அடைந்துவிடுவோம். ஆனால், அங்கு போய் வரும் வசதியுள்ள வலிமையான பணக்கார நாடுகளே இவற்றால் இன்னும் வலிமை கூடியவையாக மாறப் போகின்றன.
  41. 21வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி4 விக்கெட்டுகளை 23 ஓட்டங்களிலேயே இழந்து தடுமாறினாலும், ஹென்றிக் க்ளாஸனதும் டேவிட் மில்லரினதும் நிதானமான ஆட்டத்தின் உதவியுடன் இறுதியில் 6 விக்கெட்டுக்களை இழந்து 113 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி குறைவான ஓட்ட இலக்கை அடைய நிதானமாக ஆடினாலும் இறுதி ஓவர்களில் வேகமாக ஓட்டங்களை எடுக்கமுடியவில்லை. இறுதி ஓவரில் 11 ஓட்டங்கள் வெல்வதற்கு எடுக்கவேண்டிய நிலையில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 6 ஓட்டங்களையே எடுத்து, இறுதியில் 7 விக்கெட் இழப்புக்கு 109 ஓட்டங்கள் என்ற நிலையை மட்டுமே அடைந்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 4 ஓட்டங்களால் வெற்றியீட்டியது அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 21 போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கோஷான் சே 36 2 பிரபா USA 34 3 ரசோதரன் 34 4 ஈழப்பிரியன் 32 5 சுவி 32 6 நந்தன் 32 7 வாதவூரான் 30 8 ஏராளன் 30 9 குமாரசாமி 28 10 தமிழ் சிறி 28 11 கிருபன் 28 12 கந்தப்பு 28 13 வாத்தியார் 28 14 எப்போதும் தமிழன் 28 15 நீர்வேலியான் 28 16 வீரப் பையன்26 26 17 நிலாமதி 26 18 தியா 26 19 புலவர் 26 20 P.S.பிரபா 26 21 நுணாவிலான் 26 22 அஹஸ்தியன் 26 23 கல்யாணி 26 இப்போதைக்கு @goshan_che முதல்வர் பதவியில் இருந்து இறங்குகின்ற திட்டத்தில் இல்லை!
  42. மத போதகர்களும் சாமியார்களும் சேரும் அரசியல் கூட்டுகளில் முற்றாக நம்பிக்கையில்லை. பல்வேறுபட்ட மதங்களைப் பிரதிபலிப்பவர்களின் ஒற்றுமை என்பதே பொய்யானது.
  43. எப்பிடி இருந்த ஜேர்மன் பொலிஸ், இப்பிடி ஆகீட்டுது. 😂 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.