Leaderboard
-
Kavi arunasalam
கருத்துக்கள உறவுகள்29Points3034Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points88824Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்8Points3126Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points39344Posts
Popular Content
Showing content with the highest reputation on 06/17/24 in all areas
-
பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
9 points
- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
9 points- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
கடந்த வருட ஆரம்பத்தில், யேர்மனியில், இரயிலில் பயணிப்பதற்காக, இணையமூலமாக ஒருவர் ரிக்கெற் பதிவு செய்ய விரும்பி யேர்மனி இரயில் திணைக்களத்தின் இணையத்தளத்தில் முயன்றிருக்கிறார். இணையத்தில் இருந்த படிவத்தில், நீங்கள் ஆணா? பெண்ணா? என்ற கேள்வியில் எங்கே ‘ஆம்’ என்று போடுவதில் அவருக்குச் சிக்கல் வந்தது. காரணம் அவர் ஆணும், பெண்ணும் இல்லாத மூன்றாம் பால். கோபத்துடன் அவர் இரயில் திணைக்களத்துக்கு இது விடயமாக மின்னஞ்சல் அனுப்பி வைத்தார். பதில் அவருக்கு அனுகூலமாக இல்லாததால், நீதிமன்றத்துக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்றார். இரயில் திணைக்களம் அவருடன் சமரசம் செய்ய முயற்சித்தது. அவருக்கேற்பட்ட மன அழுத்தத்துக்கான நட்ட ஈடாக 1000 யூரோக்களைத் தருவதாகவும் கேட்டுப் பார்த்தது. அவர் உடன் படவில்லை. “இது ஒருவரது தனிப்பட்ட விடயம் அல்ல. பொதுவானது. ஆகவே உங்கள் (இரயில் திணைக்களம்) படிவங்களில் மாற்றங்களைச் செய்யுங்கள். அதுவும் ஆறு மாதங்களுக்குள்” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆறு மாதங்கள் குறைவானது ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறோம் என இரயில் திணைக்களம் கேட்டுக் கொண்டது. பின்னர் அவர் குறிப்பிட்ட படிவத்தில் மட்டுமல்ல, எங்களது முழு ‘சிஸ்ரத்திலும் மாற்றம் செய்ய வேண்டும். அதற்குப் பெரும் பணமும், கால அவகாசமும் தேவை என்றார்கள். இப்பொழுது மாற்றம் செய்து விட்டார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை. இந்தப் பிரச்சினை இன்று யேர்மனியில் உள்ள சகல நிறுவனங்களுக்கும் இருக்கிறது. திரு,திருமதி என்று விழிக்காமல் எல்லோருக்கும் பொதுவாக ‘ஹலோ” என்றே அழைக்கலாமா? என குளம்பிப் போய் இருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர்களின் குடும்ப வாழ்வை யேர்மனியும் அங்கீகரிக்கிறது. அவர்கள் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதில் எந்தச் சிக்கல்களும் இல்லை. யேர்மனியில் வளரும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களே பாலியல் சம்பந்தப்பட்ட விபரங்களை சொல்லித் தருகிறார்கள். பாடசாலைகளிலும் பாலியல் சம்பந்தமான விடயங்களை ஆசிரியர்கள் விளக்குகிறார்கள். ஆகவே ஓரினச் சேர்க்கையாளர்களின் பிள்ளைகளும் தங்கள் பாதுகாவலர்கள் போல் மாறி விடுவார்களோ என்ற அச்சம் தேவையற்றது. தவறாக ஏதும் நடந்தாலும்,பாடசாலையில் பிள்ளைகளின் நடத்தையை ஆசிரியர்கள் அவதானித்து அது சம்பந்தமான திணைக்களத்துக்கோ (Jugendamt), பாடசாலை அதிபருக்கோ அறிவித்து விடுவார்கள். ஓரினச் சேர்ககையாளர்களும் எங்களைப் போன்று வாழப் பிறந்தவர்கள். அவர்களுக்கான உரிமையையும், மதிப்பையும் தருவதுதான் முறையானது.5 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
39வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி ஆரம்பத்திலிருந்தே விக்கெட்டுகளை பறிகொடுத்து இறுதியில் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 79 ஓட்டங்கள் பெற்று அடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமைதால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. 39வது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 பிரபா USA 64 2 ரசோதரன் 64 3 கோஷான் சே 64 4 ஈழப்பிரியன் 62 5 நந்தன் 62 6 சுவி 60 7 தமிழ் சிறி 58 8 ஏராளன் 58 9 கிருபன் 58 10 கந்தப்பு 58 11 வாத்தியார் 58 12 எப்போதும் தமிழன் 58 13 நீர்வேலியான் 58 14 வீரப் பையன்26 56 15 நிலாமதி 56 16 குமாரசாமி 56 17 தியா 56 18 வாதவூரான் 56 19 அஹஸ்தியன் 56 20 புலவர் 54 21 P.S.பிரபா 54 22 கல்யாணி 54 23 நுணாவிலான் 524 points- God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
நன்றி ஏராளன். அனேகமாக நான் மற்றைய திரியில் சொல்ல முனைந்த தகவல்களை எளிமையாகச் சொல்லியிருக்கிறார். இதை செவி மடுத்து பதில் எழுத வேண்டியது இதற்கான எதிர் நிலையை எடுத்திருக்கும் ஏனைய உறவுகளின் தெரிவு. ஆனால், இங்கே சுருக்கமாகச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது: 1. ஓரினக் கவர்ச்சி என்பது ஒரு நோய் நிலை (pathology) அல்ல. 1970 இற்கு முன்னர், அமெரிக்க மனநல வைத்தியர்களின் அமைப்பு (American Psychiatric Association) இது நோய் நிலை என்ற தவறான புரிதலில் இருந்த போது, ஓரினக்கவர்ச்சி உடையோருக்கு பாலுணர்வை குறைக்கும் மருந்துகள் (chemical castration) மூலம் சிகிச்சை அளிக்க முயன்றார்கள். சிகிச்சையின் பின்விளைவாகச் சிலர் தற்கொலை செய்து கொண்டனர். பலர் மறைந்து வாழப் பழகிக் கொண்டனர். 70 களின் பின் நிலைமை மாறியது. வெளிப்படையாக இருக்க ஆரம்பித்தனர். 2. ஆனால் இன்னும் பல நாடுகளில், திருமணம் செய்து வாழ சட்டத்தில் இடம் இல்லை. 2015 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் அமெரிக்கா முழுவதும் ஓரினத் திருமணத்தை சட்ட பூர்வமாக்கித் தீர்ப்பளித்தது. கொஞ்சம் அமெரிக்காவில் கெடு பிடி குறைந்தது இதன் பின்னர். 3. "LGBTQ இனை சமமாக மதித்து அங்கீகரித்தால், சமூக சீரழிவு, சமநிலை குறைந்து விடும்" என்று வாதிடுவோருக்கு முகத்தில் அறையும் சாட்சிகளாக 80 களிலேயே ஓரினக் கவர்ச்சி, ஓரினச் சேர்க்கை என்பவற்றை சட்டபூர்வமாக்கிய ஸ்கண்டினேவியன் நாடுகள் விளங்குகின்றன. டென்மார்க், ஐஸ்லாந்து, பின்லாந்து, சுவீடன், நோர்வே ஆகிய இந்த நாடுகளின் வாழ்க்கைத் தரமும், சமூக சமநிலையும் உலகமறிந்தது. ஒரு ஒப்பீட்டிற்கு, ஓரினச் சேர்க்கையாளர்களை "பின் பக்கத்தில் உதைத்துத் துரத்தும்" 😎ரஷ்யாவில் பிறப்பு வீதமும் குறைவு, வாழ்க்கைத் தரமும் இந்த ஸ்கண்டினேவிய நாடுகளை விட மிகக் குறைவு. 4. "ஓரின இணைவை திருமணம் என்று அழைக்கக் கூடாது" என்று @kandiah Thillaivinayagalingam வாதிடுவதும் கூட "நீங்க வேற, நாங்க வேற" என்று பிரித்து ஒதுக்கி வைக்கும் ஒரு discrimination அணுகுமுறையின் வெளிப்பாடு தான் என நினைக்கிறேன். திருமணம் என்றால் என்னவென்று மணம் செய்து கொள்ளும் நபர்கள் தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படை உண்மையான, நீடித்த, பரஸ்பர அர்ப்பணிப்புத் தான் என்றால் அது திருமணம் தான். இதை வேறு பெயர் கொண்டு அழைக்க வேண்டியதில்லை.4 points- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
உடலுறவை மட்டுமே அடிப்படையாக வைத்து இந்தவிடயம் ஆராயப்படுவதால் வரும் மயக்கமேயன்றி வேறில்லை இது. இயற்கையாக ஆணும் பெண்ணும் மட்டுமே ஒரு குழந்தையை உருவாக்கமுடியும் என்கிற நியதி இருப்பது உண்மைதான். ஆனால், இரு பெண்கள் இணைந்தும் குழந்தையை உருவாக்க முடியும் என்றும், ஆண்களும் கருத்தரிக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. இவை இயற்கைக்கு முரணானவையா? ஆம், ஏனென்றால் இயற்கையாக இவை நடக்கச் சாத்தியமில்லை இப்போதுவரைக்கும். ஆனால், இருவர் உறவில் இணைவதற்கு உடலுறவு மட்டுமே இருந்தால்ப் போதுமானதா? இதைத்தவிரவும் வேறு என்ன விடயங்கள் இருவர் இணையும் உறவில் இருக்கின்றன? புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, பிடித்தவிடயங்களில் ஈடுபாடு, ஆறுதல், துணை....இப்படிப் பல விடயங்கள் இருக்கின்றனவே? ஆணும் பெண்ணும் இருக்கும் உறவில் இப்பிரச்சினைகள் எவ்வளவு தூரத்திற்குத் தீர்க்கப்பட்டிருக்கின்றன? எத்தனை ஆண்கள் அல்லது பெண்கள் தமது எதிர்ப்பால் துணையினைக் கைவிட்டு விட்டு ஓரினத் துணையினைத் தேடியிருக்கின்றனர்? ஒருவர் தன்னை ஆணாகவோ பெண்ணாகவோ நினைப்பதற்கு உணர்வதற்கு அவரில் காணப்படும் ஹோர்மோன்களே காரணமாவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். எவருமே வேண்டுமென்று தமது பிறப்பில் இருந்த பாலினை விட்டு எதிர்ப்பாலிற்கு மாறுவதில்லை என்று நினைக்கிறேன். அது இயற்கையாக அவர்களில் நடக்கும் உளவியல், ஹோர்மோன் மாற்றங்களால் ஏற்படுகின்றது என்றுதான் தான் நினைக்கிறேன். பாப்பாணடவர் ஓரினச் சேர்க்கையாளர் குறித்து அவதூறாகப் பேசுவதற்குக் காரணம் இருக்கிறது. தனது சபையில் இவர்கள் சேர்ந்துவிட்டால், தாம் இற்றைவரை போதித்துவரும் ஓரினச் சேர்க்கைக்கெதிரான பிரச்சாரத்தை அது பாதித்துவிடும் என்று அவர் பயந்திருக்கலாம். ஆனால், ஓரினச் சேர்க்கையென்பது கிறிஸ்த்துவிற்கு முன்னைய காலத்திலிருந்து இருப்பதாக வேதாகமத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைவிட, கத்தோலிக்க மதகுருக்களில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், ஓரினச் சேர்க்கை போன்றவை பல நூற்றாண்டுகளாக பழக்கத்தில் இருப்பவை. அவைகுறித்துப் பேசுவதைத் தவிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பாப்பாணடவர் பேசுவது தவறு. முதலில் உள்ளுக்குள் இருக்கும் பிரச்சினைகள் குறித்து அவர் வெளிப்படையாகப் பேசட்டும். பின்னர் ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து கருத்துக் கூறலாம். ஒருவர் தன்னை ஆணாகவோ, பெண்ணாகவோ அல்லது இவை இரண்டிற்கு இடையில் இன்னொரு இனமாகவோ நினைப்பதும், உணர்வதும், அதற்கேற்றாற்போல் நடந்துகொள்வதும் அவரது விருப்பம். இதில் மற்றையவர்கள் கருத்துக் கூறவோ, கட்டுப்பாடுகள் விதிக்கவோ முடியாது.3 points- God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கிருபன் இரக்கப்பட்டு ஓமென்று புள்ளி தந்தாலும், நீங்கள் விடமாட்டீர்கள் போல இருக்கு2 points- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
மிகவும் தெளிவான கருத்து. ஓரின இணைகளில் மட்டுமல்ல, எதிர்ப்பால் இணைகளிடையேயும் கூட பாலியல் உறவு என்பது ஒரு மிகச்சிறு வீதத்தில் தான் அவர்களது பிணைப்பைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கிறது. அதுவும் பிள்ளைகள், குடும்பம் என்று உண்மையான பயணம் (அதுவும் கஷ்டமான பகுதி) சூடு பிடிக்கும் போது, செக்ஸ் என்பதை நினைக்காமலே பிணைப்பிலும், பாசத்திலும் இருக்கும் நிலை இருக்கிறது. ஆனால், "ஓரினச் சேர்க்கையாளர்" என்றவுடனேயே, பல எதிர்ப்பாளர்களின் மனதில் அவர்கள் எப்படி உடலுறவு செய்வர் என்ற கேள்வியும், அது பற்றிய நக்கல்களும் தான் முதல் துலங்கலாக இருக்கின்றன. இது பார்ப்பவன் கண்ணின் குறையேயன்றி, பார்க்கப் படுபவனின் பிரச்சினை அல்ல😂! வந்திறங்கிய நாள் முதல், அமெரிக்காவின் நீல மாநிலங்களில் தொடர்ந்து வாழ்ந்த அனுபவத்தில், இரண்டு அம்மாக்கள், இரண்டு அப்பாக்கள் கொண்ட குடும்பங்கள் சிலவற்றைக் கண்டு பழகிய அனுபவம் இருக்கிறது. எனக்குப் புரிந்த வரை, இவர்கள் சாதாரணமான மனிதர்கள். சில விடயங்களில், சாதாரணத்தைத் தாண்டி, வேறு காரணங்களுக்காக ஒதுக்கப் படும் மக்களின் பக்கம் நிற்கும் நல்ல மனிதர்கள். இவர்களை நாம் ஒதுக்கி வைக்க ஒத்துழைத்தால், குடியேறிகளின் வம்சாவழியினராக வாழப் போகும் எங்கள் குழந்தைகளின் பாதுகாப்பாக இருக்கக் கூடிய ஒரு தரப்பைப் பகைத்து எமக்கு நாமே ஆப்பு வைத்துக் கொள்ளும் முட்டாள்களாக இருப்போம்!2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
ஐயா சும்மா இருங்கள், நான் உகாண்டாவை தெரிவுசெய்துள்ளேன், இதாவது எனக்கு சரியாக அமையட்டும்2 points- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Hasaranga ~ இந்த மெட்சயாவது வென்றால்தான் உள்ள போக முடியும் Mendis~ சுப்பர் 8 உள்ளயா.? Hasaranga ~ சுப்பர் 8 உள்ளயா...? நாட்டுக்குள்ளடா..... 😂 Vijay Vj2 points- குமாரசாமி அண்ணையுடன் சந்திப்பு
2 points- தந்தையர் தின வாழ்த்துக்கள்
2 pointsதந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா ஒரு அதிசய புத்தகம் தோளில்தாங்கிய சுகமான சுமைதாங்கி இருக்கும் போது பலருக்கு அருமை தெரிவதில்லை விதையாகி விருட்ஷமாக நிழலாக நிற்பவர் வேராக நீ இருந்தாய் நான் வீழ்ந்து விடாதிருக்க மெளன மான சுமைதாங்கி ஒரு பார்வையாலே வீடடை ஆளும் ராஜா அம்மாவின் மந்திரி எதையும் தனக்கென தேடாத ஜீவன் காடு மலை தாண்டி ஓடாய்.உழைக்கும் தலைவன் தன் உயிர் தந்து என்னை உருவாக்கிய ஜீவன். என் உறக்கத்திலும் முத்தமிடும் நேசமுள்ள பாசம் கண்ணின் மணியாக காத்திடும் பொறுப்புள்ள அப்பா நன்றி எனும் ஒரு வார்த்தையில் எழுத முடியாத புத்தகம். . யாழ் கள தந்தையர்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள். தினம் தினம் தந்தையர் தினமே இன்று கனடாவில் தந்தையர் தினம் கொண்டாடும் ஒரு நாள்2 points- கருத்து படங்கள்
2 points2 points- இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points- யூரோ கிண்ண கால்பந்துப் போட்டி இன்று முதல் ஜெர்மனியில் கோலாகல ஆரம்பம்
இன்றைய போட்டி முடிவுகள் போலந்து 1 நெதர்லாந்து 2 ------------------ ஸ்லொவேனியா 1 டென்மார்க் 1 ----------------------- சேர்பியா 0 இங்கிலாந்து 12 points- பிரபாகரனுக்கு நன்றி கூறவேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
புலம்பெயர்ந்தவர்கள் மட்டுமல்ல தமிழ் அரசியல்வாதிகள், எதிர்கட்சிகள், இணக்க அரசியல் என்போர் கூட அவருக்குத்தான் நன்றி கூறவேண்டும். அவரை வைத்துத்தான் பலர் பிரபல்யமடைகிறார்கள்.2 points- ஹால் சிரோவிட்ஸ் கவிதைகள்
1 point'அகழ்' இணைய இதழில் ஹால் சிரோவிட்ஸின் கவிதைகள் சிலவற்றை க.மோகனரங்கன் மொழியாக்கம் செய்துள்ளார். நாங்கள் சாதாரணமாக சொல்லிக் கொள்ளும் சில பகிடிகளை கவிதையாக எழுதியது போன்றுள்ளது. இலகுவான வாசிப்புக்கு ஏற்ற இந்தக் கவிதைகள் வாசிக்கும் போது புன்னகைக்க வைக்கின்றன. அங்கிருந்த இரண்டு கவிதைகளை இங்கு இணைத்துள்ளேன். மிகுதிக்கான இணைய இணைப்பு அடியில் உள்ளது. ************************************************************************* 1. புகழ் விளையாட்டு ------------------- உங்களுக்கு பிரபலமாக இருக்க வேண்டும் என்கிற தேவை உள்ளது என் சிகிச்சையாளர் கூறினார், ஆனால் முதலில் உங்களுக்கு ஒரு வேலை கிடைக்க வேண்டும் என நான் எண்ணுகிறேன் எல்லா பிரபலமான நபர்களையும் நீங்கள் பார்த்தீர்களானால் அவர்கள் அனைவருக்கும் வேலை இருக்கிறது. ஜார்ஜ் புஷ், அவர் வேலை எதுவும் செய்வது போல் தெரியவில்லை ஆனால் அவர் ஒருமுறை ஜனாதிபதியாக இருந்தார். நீங்கள் எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். அல்லாது போனால் உங்கள் சொந்த தலைக்கு உள்ளேதான் நீங்கள் பிரபலமாக இருப்பீர்கள் ஆனால் எல்லோருமே அப்படித்தான். *************************** 2. புத்தகங்களை இரல் தருவது --------------------------- நீங்கள் எப்போதும் தருபவராக இருக்கிறீர்கள், பெறுவது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமென என் உளநல சிகிச்சையாளர் கூறினார். ஒரு பெண்ணைச் சந்திக்கும் போதெல்லாம், நீங்கள் முதலில் செய்வது உங்கள் புத்தகங்களைக் இரவலாகத் தருவதுதான். அவற்றைத் திருப்பித் தருவதற்காக அவள் திரும்பவும் உங்களைப் பார்க்க வருவாள் என்று எண்ணுகிறீர்கள். ஆனால் என்ன நடக்கிறது? அவற்றைப் படிக்க அவளுக்கு நேரம் இல்லை, அவள் உங்களை மீளவும் பார்த்தால் அவற்றைப் பற்றி பேசவேண்டியிருக்குமோ என்று அஞ்சுகிறாள் தவிரவும் நீங்கள் இன்னும் அதிகமாக நூல்களை இரவல் தரவும் கூடும். அதனால் அச் சந்திப்பையே அவள் ரத்து செய்துவிடுகிறாள். நீங்கள் நிறைய புத்தகங்களை இழப்பதோடு அது முடிகிறது. மாறாக நீங்கள் அவளிடம் இரவல் பெறுபவராக வேண்டும். https://akazhonline.com/?p=75751 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
🤣....... குஷ்புவின் 'கோவில்' என்று தான் இன்றும் சொல்கின்றனர்.......சமீபத்தில் கூட செய்திகளில் அடிபட்டது..... 'அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பிச்சைக் காசு........' என்று குஷ்பு தெய்வம் சொன்ன விவகாரத்தில் என்று நினைக்கின்றேன்...... தவளைக்கும் தவளைக்கும் நடந்தாலும் அது திருமணமே... கழுதைக்கும் கழுதைக்கும் நடந்தாலும் அது கல்யாணமே...... இல்லாவிட்டால்.......மழை பெய்யாது, வானம் பொய்க்கும்....அந்த அந்த ஊர் மக்களையே கேட்டும் பார்க்கலாம்............😜.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சும்மா சொல்லக்கூடாது... பூந்தி லட்டு ஒவ்வொரு கடிக்கும் சொர்க்க உலகம் தெரிஞ்சிருக்குமே? 😀அந்த மாதிரி ரேஸ்ற் என்ன....😂 பூந்தி லட்டு உருட்டின கைக்கு மோதிரமே போடலாம் 😎 போற போக்கைப் பார்த்தால் சாமியார் மோதிரம் போடமாட்டார்… மோதிரம் மாத்திப்போடுவர் போலத் தெரிகிறது.😋1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
23 நுணாவிலான் 52 ஆ-ஆ-ஆ-ஆ ஆ-ஆ-ஆ-ஆ-ஆ தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான் போல வந்தவனே யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? யாரடிச்சாரோ? வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே...😂1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
1 point- God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
தத்து எடுப்பது என்பது இலகுவான விடயம் அல்ல. மேற்குநாடுகளில் தத்து எடுப்பதற்கு கூர்மையான ஆராய்ச்சி (vetting process) எல்லாம் உண்டு. வாதத்தில் வெல்லவேண்டும் என்று கருத்தாடுவது எப்போதும் வீண்வேலை. அதை குருவிகள், நெடுக்காலபோவன் காலத்தில் இருந்தே யாழில் பார்க்கின்றோம்😂 ஜனநாயக நாடுகளில் வரும் சட்டங்கள் எல்லாம் பாராளுமன்றில், அரசசபையில் நீண்ட விவாதங்களுக்கு உள்ளாகித்தான் சட்டங்கள் ஆகின்றன. ஒருபால் திருமணங்களையும் “திருமணம்” (marriage) என்று சட்டரீதியாகச் சொல்ல பல காரணங்கள் உள்ளன. ஆனால் திருமணத்திற்கு அடிமுடி தேடினால் லெமூரியன் காலத்தில் “திருமணம்” என்றுதான் சொல்லப்பட்டது என்றும் வாதாடலாம்!1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நியூசிலாந்து எப்படியும் மடக்கும் என்று எதிர்பார்த்தேன். ஏமாற்றிவிட்டார்கள். உகண்டாவும் ஓமானும் சமநிலையாக கடைசியில் நிற்பதால் புள்ளிகள் குறைக்கப்படுமென்று தலைவர் @கிருபன் சொல்லுகிறார். நியூயோர்க்கில் நின்றிருந்தால் கழட்டி பூட்டுற வேலையாவது செய்திருக்கலாம்.1 point- God vs Brain vs Science | LGBTQ சரியா தவறா? | Dr.Shalini | Mr.GK
அன்பு Justin க்கு சில தம்பதியர் பிள்ளைகள் இல்லாமல் இருப்பது, சில தம்பதியர் பிள்ளை வேண்டாம் என்று இருப்பது, சில தம்பதியர் வயது போய் இருப்பது போன்ற சந்தர்ப்பங்களில் அடுத்த தலைமுறை எப்படி வரும் என்று சிலர் வாதாடலாம், ஆனால் இவை எல்லாவற்றிலும் அதற்கான சந்தர்ப்பம் இருக்கிறது என்பதை சிந்திக்க தவறி விடுகிறார்கள். கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன. நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது என்பதில் ஐயம் இல்லை ஆனால் அவை எல்லாவற்றிலும் ஒரு பொது இயல்பு மாறவில்லை, ஆக நீங்கள் இன்றைய வசதியை பொறுத்து அதை தங்கள் விருப்பம் படி சரிபண்ணுகிறீர்கள் . அவ்வளவுதான். ஆனால் அடிப்படை மாறவில்லை ?? அது கூட புரியவில்லை என்றால், நான் இனி எழுதுவத்துக்கு ஒன்றும் இல்லை தத்தெடுத்து குழந்தை வளர்ப்போர் திருமணத்தில் இல்லையென்றும், வாடகைத் தாய் மூலம் பிள்ளை வரம் பெறுவோர் திருமணத்தில் இல்லையென்றும் வியாக்கியானம் கொடுப்பீர்களா? இதற்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு ?? அது அவர்களின் உடலின் சில குறைபாடுகளால், அல்லது அவர்களின் தனிப்பட்ட எண்ணங்களால் அதை இன்னும் அல்லது இன்றைய விஞ்ஞானத்தால் சரிபண்ண முடியாத சூழலில், அப்படியான ஒன்றுக்கு போகிறார்கள் . அவ்வளவு தான் சிந்திக்க தெரிந்தால், அது புரியும். குழப்பத் தேவை இல்லை ?? பிள்ளை வேண்டாமென்று இருப்போர் திருமணத்தில் இல்லை என்பீர்களா? "பிள்ளை பெறும் சாத்தியம் (natural potential) இருக்கிறது, அதனாலேயே அது திருமணமாகக் கொள்ளலாம்" என்ற வாதத்தின் அர்த்தம் இந்த நவீன கால ஆண்-பெண் இணைகளின் தெரிவுகளின் முன்னால் அடிபட்டுப் போகிறதே? ஆமாம், அது தெரிவு, இயற்கை அல்ல?? தெரிவு அறிவியல் வளர்ச்சியுடனும், நவீனமாக்களுடனும் வளரும் ஒன்று!! அவ்வளவு தான். அதற்கும் திருமணம் என்ற சொல்லுக்கும், செயலுக்கும் ஏன் முடிச்சு போடுகிறீர்கள் ?? உங்கள் கருத்தை நீங்கள் எப்படியும் சொல்லலாம். அது உங்கள் சுதந்திரம் . அவ்வளவுதான் !! ஆனால் அதில் அடிப்படை இருக்கவேண்டுமே ?? நன்றி1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ அசோசியேட் மெம்பர்ஸை மட்டும் தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா அவர்கள் திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே இந்த மெம்பேஸ் இலங்கையில் போய் இறங்கும் போது நடக்கும் வரவேற்பைப் பார்க்க மிகவும் ஆவலாக உள்ளேன்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
🤣........ அசோசியேட் மெம்பர்ஸை மட்டும் தான் ஹசரங்க அடிப்பார் என்று சொல்லியிருந்தவர்கள்........ அதுவும் சரிதான், ஃபுல் மெம்பர்ஸை அடிச்சா அவர்கள் திருப்பி அதிகமா அடிக்கிறாங்களே....1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point- போர் நிறுத்தத்திற்கு தயார் : உக்ரேனுக்கு நிபந்தனைகளை விதித்த புடின்!
ரஸ்யாவின் மற்றும் யூகோசிலாவியாவின் உடைவு(உடைப்பு) என ஒரு தொடர் செயற்பாட்டு நிரலுள் நடைபெறும் பூகோள மற்றும் கனியவளச் சுரண்டலாதிக்கக் கொள்கைகளே போருக்கான முதன்மைக் காரணிகளாக விளங்குகின்றமை யாவரும் அறிந்த ஒன்று. மிகையில் கோபர்சேவின் நடவடிக்கையால் உதிர்ந்த சோவியத் ஒன்றியமும் இணைந்த யேர்மனியும் புதின் போன்ற கடும் போக்குத் தலைமைகளால் சாத்தியமாகியிருக்காது அல்லது பழைய போக்கிலேயே ஒரு பனிப்போர்காலம் போல் தொடர்ந்திருக்கும். ஆனால் உலகம் மாற்றங்களை ஏதோ ஒரு வகையில் சந்தித்தே வருகிறது. அது(போர் அல்லது இராசதந்திரப்போர்) வன்வலு மற்றும் மென்வலு என அழைக்கப்படும் இரு வழிகளூடாகவும் உலகு தொடர் மனித உயிரிழப்பைச் சந்தித்தே வருகிறதென்று கொள்ளலாம். இதற்கு அடிப்படையாக இருப்பது உலகத் தலைவர்களின் நேர்மையீனமே.அவர்கள் செய்துகொள்ளும் ஒப்பந்தங்களையோ வாக்குறுதிகளையோ கடைப்பிடித்துச் செல்பவர்களாக இல்லை. அதன் விளைவாகவே போர்கள் தோற்றம் பெறுகின்றன. போர் நாகரீகமற்றது என்று போதித்தவாறு காசாவின் படுகொலைகளை இந்த உலகு பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதாபிமான உதவிகள், போர் நிறுத்தக் கோரல்கள், பயங்கரவாதத்தைத் தடுக்கும் உரிமை என்ற சொல்லாடல்கள் வழியாகப் போரைத் தொடர்கிறது. இதனையே முழு உலகிலும் தமது தேவைக்கேற்ப செய்கிறார்கள். ஆனால், ஒரு வல்லரசான ரஸ்யா ஏன் நேட்டோவைக் கண்டு அஞ்சுகிறது. அது தனது எல்லைகளைப் பலப்படுத்திப் பாதுகாப்பை வலுப்படுத்தியிருக்கலாமே. இவளவு மனிதவள, பொருண்மிய இழப்புகள் தேவையா? தோல்வியை ஏற்காதுவிடின் வெற்றியைப் பெறும்வரை போரை நடாத்தி இன்னும் அழிவுகளை விதைத்து எதைக்காணப் போகிறார்கள்? அணுஆயுத வல்லரசு தோல்வியை ஏற்குமா என்பதை இனிவரும் நாட்களே முடிவுசெய்யும். எதற்காகப் புதின் திடீரென நிபந்தனைகளோடு போர்நிறுத்தத்தைக் கோருகிறார்? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- தந்தையர் தின வாழ்த்துக்கள்
1 point1 point- இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை - அருட்தந்தை மா.சத்திவேல்
Published By: DIGITAL DESK 3 17 JUN, 2024 | 09:29 AM இனப்படுகொலையாளிகள் மீது நம்பிக்கை வைக்க தமிழர்கள் தயார் இல்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (17) திங்கட்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு ஜனாதிபதி தேர்தலை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் தெற்கின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளோரில் பிரதானமானவர்களாக கருதப்படுவோர் தமது தேர்தல் களச் சந்தையை வடக்கிலும் விரித்து தமது முகவர்களோடு இரகசிய பேச்சு வார்த்தை நடத்துவதோடு திறந்த வெளியில் ஊடக சந்திப்புகள் நடாத்தி வடக்கு கிழக்கு தமிழ் மக்களை மதி மயங்கச் செய்யவும் வாக்கு சாவடிக்குள் அனுப்பவும் முயலுவதாக தோன்றுகிறது. இவர்களின் சதி வலைக்குள் சிக்க வேண்டாம் என தமிழ் தேச உணர்வாளர்களை கேட்டுக் கொள்கின்றோம். வடகிழக்கில் தமிழர்கள் மத்தியில் பேரினவாத கட்சிகளின் நேரடி முகவர்களாக செயற்படுவோரை மக்கள் அறிவர். தமிழர் தேசத்தில் தேசியத்தின் ஊற்று என்றும் தாமே சுயநிர்ணயத்தின் தோற்றுவாய் எனவும் பகிரங்கமாக மேடையமைத்து கொக்கரிக்கும் கூட்டம் தற்போது இனப்படுகொலையாளர்களுக்கு துணை முகவர்களாக பொதுவெளியில் செயற்பட தொடங்கி விட்டனர். அத்தோடு கூட்டாக ஊடகங்களில் தோன்றி இது நட்பு ரீதியான பேச்சு வார்த்தை, சுமூக பேச்சு வார்த்தை, நம்பிக்கை தருகின்ற பேச்சு வார்த்தை, தொடர வேண்டிய பேச்சு வார்த்தை என கூறுவது யாரை ஏமாற்றுவதற்கு? தமிழ் பொது வேட்பாளர் தொடர்பிலான கலந்துரையாடல்கள் வலுப்பெற்று வரும் களச்சூழலில் அதற்கு "எதிராக பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரச்சாரம் செய்வேன்" என சூளுரைத்தவரும் அவரின் கட்சியினரும் தமிழர் வாக்குகளை இரண்டாவது தெரிவிற்கு விட்டு தள்ளுவதற்கு நேரடியாகவே முயற்சி எடுப்பதாக தோன்றுகின்றது. இது தோற்கடிக்கப்படல் வேண்டும். தெற்கில் ஜனாதிபதி வேட்பாளர்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ள அத்தனை பேரும் பேரினவாதிகளே. யுத்த குற்றவாளிகளே. இவர்களே தமிழர்களை முள்ளிவாய்க்கால் வரை இழுத்து வந்து இனப்படுகொலை செய்தவர்கள். இனியும் இவர்களில் நம்பிக்கை வைக்க முடியாது. தமிழர்கள் நாம் சுயநிர்ணய உரிமையுடையவர் இதனை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் யுத்த குற்றங்களுக்கு இந்த குற்றங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு தண்டனை கொடுக்க வேண்டும் அதுவே அரசியல் நீதி என ஒட்டுமொத்த தமிழர்களின் சிந்தித்துக் கொண்டிருக்கையில் "வடகிழக்கு தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை எம்மிடமே கொடுத்துள்ளார்கள்" எனக் கூறுவோர் இனப்படுகொலையாளர்களுடன் சல்லாபம் புரிவது எவ்வாறு? இதற்காக உங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள்? தமிழர்களின் வாக்குகளால் நாடாளுமன்றம் சென்று தமிழர்களின் அரசியலுக்கு துரோகம் செய்து கொண்டிருப்பவர்கள் உங்கள் நாடாளுமன்ற நட்பு அரசியலை நாடாளுமன்றத்தில் மட்டும் வைத்துக்கொள்ளுங்கள் கொழும்பின் நட்சத்திர ஹோட்டல்களுக்கும் விடுதிகளுக்கும் மட்டுப்படுத்தி கொள்ளுங்கள் தமிழர்களின் தேச அரசியலுக்கு நீங்கள் ஏற்கனவே அடையாளப்படுத்தி விட்டோம் அதற்கான தீர்ப்பினை ஜனாதிபதி தேர்தலிலும் அதற்கு அடுத்து பொதுத் தேர்தலிலும் ஜனநாயக ரீதியில் வெளிப்படுத்துவோம். வடக்கிற்கு அரசியல் நச்சு சுற்றுலா மேற்கொண்டுள்ள பிரதான வேட்பாளர்கள் மூவரும் 13 அமுல்படுத்துவோம் எனக் கூறி உள்ளனர். ரணில் ஜனாதிபதி அதிகாரத்தில் நின்று அதற்கான அனுமதி தொடர்பில் நாடகமாடியவர். தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார "13 போதாது என்பதே நாம் அறிவோம். அதற்கு அப்பால் தொடர்ந்து பேசுவோம்" எனக் கூறியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் "சர்வதேச விளையாட்டரங்கை அன்பளிப்புகள் மூலம் உருவாக்கி தருவேன்" என சபதம் எடுத்து உள்ளார். தமிழர்கள் இவற்றை எல்லாம் கேட்கவில்லை என்று மீண்டும் கூறுகின்றோம் எமக்கு எதிரான கருத்தை எமக்கு இடையே மீண்டும் மீண்டும் கூறி சிதைக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் தெளிவாக கூறுகின்றோம். வடகிழக்கு தமிழர்கள் இனப்படுகொலைக்கு முகம் கொடுத்து அதன் வலிகளோடு சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் முன்வைக்கையில் இவர்கள் 13 என்பதும் 13 பிளஸ் என்பதெல்லாம் தமிழர்களின் வாக்குகளை சிதறிப்பதறடிப்பதற்கே. அது மட்டுமல்ல இந்தியாவை அமைதிபடுத்தி அவர்களின் கைக்கூலிகளை தமதாக்கி தமது அரசியலை தமிழ் மண்ணில் தொடரவே முயற்சிக்கின்றனர். நாம் கேட்கின்றோம் கூறும் 13 கருத்தினை உங்ளுடைய பொது மேடைகளிலும் நீங்கள் ஆதரவு தேடும் சிங்கள பௌத்த பிக்குகள் இடமும் பகிரங்கமாக கூறுங்கள். தமிழகத்தில் உள்ள அரசியல் கூத்தாடிகள் சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் உங்களை பின் தொடரலாம் ஆனால் தமிழ் மக்கள் சலுகைகளுக்கும் நிவாரணங்களுக்கும் பாட்டு வார்த்தைகளுக்கும் சோகம் போக மாட்டார் யுத்தம் பாதிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15 வருட காலமாக எம்மை ஏமாற்றியது போதும் இம்முறை தேர்தல் தேர்தலில் சர்வதேசம் கண் திறக்க வேண்டும். அதற்கான அரசியல் உறுதியே மக்கள் சக்தி. தமிழர்கள் மத்தியில் காணப்படும் அரசியல் புல்லுருவிகள் அகற்றப்பட வேண்டும்.தெற்கின் பேரினவாத இனப்படுகொலையாளர்களின் அரசியல் முகவர்கள் அரசியலில் இருந்து வரும் நீக்கப்பட்டு அவர்களின் முகாம்களும் தமிழரின் தேசத்திற்கு வெளியே தள்ள வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி தேர்தல் மட்டுமல்ல எதிர்காலமே முள்ளிவாய்க்காலாக அமையலாம். இதற்கு ஜனாதிபதி தேர்தலுக்கான பொது கட்டமைப்பு மட்டும் போதாது. அதற்கப்பால் மக்களை அரசியல் மயமாக்கி அரசியலில் தொடர்ந்து பயணிப்பதற்கான தெளிவான வழி வரைபடம் உருவாக்கி முன்வைக்க வேண்டும். உருவாக்குவாக்கிகள் தொடர்பில் மக்களுக்கு நம்பிக்கையும் ஏற்பட வேண்டும். கடந்த பதினைந்து வருட காலத்தில் அத்தகைய நம்பிக்கைகள் எல்லாம் சீரழிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை. https://www.virakesari.lk/article/1862361 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
ஆட்டையை போடுவதில் நான் வல்லவன். ‘ஒரு சிங்கத்தின் சிந்தனை’ உங்களின் சிந்தனையாகவும் இருந்திருக்கிறது. எங்களுக்குள் பேசி ஒரு சமரசத்துக்கு வருவோமா?😀1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பங்களாதேஷ் கலங்குது..... இலங்கையும் பங்களாதெஷூம் தான் இப்ப பரம எதிரிகளாம் கிரிக்கெட்டில். பரம எதிரியை கவிழ்க்க இலங்கைக்கு இது ஒரு சந்தர்ப்பம்....😉1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நேபாளம் கலக்குது. உண்மை தான் ஏனென்றால் வீரர்கள் எல்லோரும் இந்தியர்களாக இருப்பார்கள். 1 பிரபா USA 58 முதல்வருக்கு வாழ்த்துக்கள்.1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
மேற்கிந்தியா தீவு ஆப்கானிஸ்தான் போட்டியில் நான் மேற்கிந்தியா தீவுதான் வெற்றி பெரும் என்று பதில் எழுதியிருந்தேன். ஆனால் ஆப்கானிஸ்தான் வென்றால் , அவர்கள் விளையாடும் குழுவில் (C)மேற்கிந்திய தீவு இரண்டாம் இடத்தினை பிடிக்கும். நீங்கள் கேட்ட கேள்விகள் போல group C இல் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களின் போட்டிகள் நடக்கும்1 point- இலங்கை வரும் இந்திய பிரதமர்
1 point- தந்தையர் தின வாழ்த்துக்கள்
1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உங்களுக்கு சிரமம் குறைந்த வழியை தேர்ந்தெடுங்கள், கிருபன். முடிவு எதுவானாலும் நல்லதே. மிக்க நன்றி கிருபன்.1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- பொலீஸ் அதிகாரிக்கு சிவசேனை அமைப்பு பொன்னாடை போர்த்திக் கௌரவிப்பு 16.06.2024
From the album: கிறுக்கல்கள்
1 point- ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
இங்கு கலிபோர்னியாவில் இரண்டில் ஒரு திருமணம் விவாகரத்தில் முடிகின்றது என்று சொல்கின்றனர். அதை விட விவாகரத்து என்று சட்டப்படி போகாமலேயே 'ஒரு பெற்றோர்' தலைமையில் இருக்கும் குடும்பங்களும் மிக அதிகம். இவை இரண்டும் சேர்ந்தால், அது இங்குள்ள ஒரு பால் பெற்றோர்களை விட பல மடங்குகள் அதிகம். இதை வைத்துப் பார்த்தால், இரு பால் திருமணத்தால் குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பான, முழு உலகமும் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் அமைகின்றது என்று எப்படிச் சொல்ல முடியும்? கோவில் கட்டுவதற்கு என்று ஆகம விதிகள் இருக்கின்றன. அன்றிலிருந்தே இருக்கின்றன. கோவில் என்றால் என்ன, ஏன் கோவில் வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருக்கின்றன. இந்த என்றோ எழுதப்பட்ட விதிகளை மீறி யாரோ சிலர் அவர்களின் சுய விருப்பத்தில் ஒன்றைக் கட்டி, ஒரு கடவுளை உருவாக்கி வழிபடுகின்றனர் என்று வைப்போம். அதை அவர்கள் தங்கள் கோவில் என்றும் சொல்கின்றனர். 'நீங்கள் உங்கள் சுய விருப்பில் செய்வதற்கு இங்கு தடையில்லை, ஆனால் இதை நீங்கள் கோவில் என்று சொல்லக் கூடாது, கோவில் என்றால் விதிகள் வேறு, வழிகள் வேறு. வேணும் என்றால் உங்களின் இடத்தை 'கும்பிடும் இடம்' என்று சொல்லிக் கொள்ளுங்கள்' என்று மற்றயோர் சொல்வது சரியா?1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பால்யத்தில் பக்தியில் பரிநிர்வாணமடைந்தவர் .......... ஜெய் ஆஞ்சனேயா .......! 🙏1 point- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
இது தான் குமரன்சாமி அண்ணையோ? மேலே கவி இணைத்த படம் யாருடையது?? கவி அருணசலம். என்று நினைக்கிறேன்! இவர் தான் ஈழத்து அரவிந்த சாமி புரிய வில்லையா? குமாரசாமியரைப் பார்க்க சில களத்து உறவுகள் படும்பாடு,,,,, அங்கலாய்ப்புத் தாங்க முடியவில்லை. தம்பி என்கிறார்கள், அண்ணன் என்கிறார்கள், குமரன் என்கிறார்கள், தாத்சாதா என்கிறார்கள், சாமி என்கிறார்கள்….. நான் நினைக்கிறேன் அவரது குடும்பப் படத்தை எப்படியோ இந்தச் சிலர்பார்த்து விட்டதால்!!! “மாமா” என்று அழைக்க முண்டியடிக்கிறார்களோ தெரியவில்லை. குமாரசாமி அவர்களின் குடும்பப் படத்தை நான் யாருக்குமே அனுப்பியதில்லை. “நானும் அனுப்பியதில்லை” தமிழ்சிறி தம்பியும் என் தலைமேல் அடிக்காத குறையாகச் சத்தியம் பண்ணுகிறார். அப்போ எப்படி??????😟🤪1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
அவசரமாய் வெளிக்கிட்டு கொஞ்ச தூரம் போய்க்கொண்டிருந்த போது என்ரை மனுசி பிள்ளைகளிடம் ஏதோ குசுகுசுத்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தாலும் தாய் பிள்ளை பிரச்சனை என எனக்குள் நினைத்தபடி கார் ஓடிக்கொண்டிருக்கும் போது பிழையான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என வழி காட்டியாள் எச்சரித்து திரும்பி போகுமாறு எச்சரிக்க எனது மகள் சொன்னார் அம்மா மொய் பார்சலை மறந்து போய் விட்டு வந்திட்டாவாம் என சொல்லி காரை ஹொட்டலுக்கு விடுங்கோ என்றார். ரெஞ்சன் உச்சியில இடிக்க மறு வார்த்தை பேசாமல் ஹொட்டலுக்கு போய் பார்சலை எடுத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க கொண்டாட்ட மண்டபத்தை வந்தடைந்தோம். அப்போது 11 மணியிருக்கும் என நினைக்கிறேன். சிறித்தம்பி சொன்ன நேரத்துக்கு முதல் வந்திட்டம் எண்ட மனக்கொழுப்புடன்😂 ஹோலுக்குள் உள்ளே நுழைந்தோம். பெரிய ஆடம்பரம் இல்லாமல் ஹோலை சோடித்து இருந்தார்கள்.நாங்களும் இன்னுமொரு குடும்பமும் ஒரு மேசையை இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டோம். பலகார தட்டும் கோப்பித்தண்ணியும் வர ஒரு பிடி பிடித்து விட்டு ....சிறித்தம்பியர் சொன்ன மாதிரி ரெலிபோனை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன். இருந்தாலும் அந்த மேளக்கச்சேரி சத்தத்தில் எதுவுமே கேட்காது என நினைத்து ரெலிபோனை மேசையிலையே வைத்திருந்தேன். உண்மையில் நான் பெண்கள் கைப்பை கொண்டு திரிவது போல் ரெலிபோனை கையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் அன்றைய தினம் அது நடந்துவிட்டது.😎 பட உபயம் சிறித்தம்பி.1 point- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
உண்மை தான் சனமெல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தது. ஏன் பார்த்ததுகள்? வந்தவன் என்னடா பலகாரத் தட்டை எல்லாம் கொண்டு போகிறானே என்று தான் பார்த்ததுகள். ஆறு மாதம் செல்லும் வீடியோ வர அதைப் பார்த்திட்டு தானே இருக்கு விளையாட்டு.1 point- யுத்தம் முடிவுக்கு பின் இருண்ட யுகங்களை பேசும் ஊழி திரைப்படம்
சினிமா இன்று தேக்கத்தில் இருக்கிறது என்பதை தொடர்ந்து அத்தகைய படங்களைப் பார்த்து வந்திருப்போர் அறிவர். இதன் அரசியல், பொருளியல், கலாச்சாரப் பரிமாணத்தை அதில் ஈடுபட்டிருப்போர்தான் அனுபவங்களுடன் பேசமுடியும். என்றாலும், அண்மைக்காலத்தில் குறிப்பிடத்தக்க இரு படங்கள் வந்திருக்கின்றன. மதிசுதாவின் 'வெந்து தணிந்தது காடு' மற்றும் ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' அப்படங்கள். 2009 மே மாதத்தின் இறுதிப் போர்காலத்தின் அனுபங்களை மதிசுதாவின் படம் பேச, ரஞ்ஜித் ஜோசப்பின் 'ஊழி' 2009குப் பின் துவங்கி இன்றுவரையிலுமான ஈழத்து வாழ்வின் இருண்ட நினைவுகளைப் பேசுகிறது. ஈழத்தின் முதல் நான்லீனியிர் வெகுஜனப் படம் என 'ஊழி'யைக் குறிப்பிடலாம். ரஞ்ஜித்தின் முதல் படமான 'சினம்கொள்' மிகமிக நேரடியான கதைசொல்லல் கொண்ட படம். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான ஈழத்தில் 'நிலம், கல்வி, காதலுறவு' போன்ற பிரச்சினைகள் குறித்த மிகுந்த இருண்ட சித்திரங்கள் மூன்று சமாந்தரக் கதைகளாக படத்தில் விரிகிறது. இருண்ட காலத்திலும் துளிர்விடும் 'நம்பிக்கை' என்பதை நான்காவது பிரச்சினையாக அல்லது கதையாக எடுத்துக் கொள்ளும் 'ஊழி' அதனிலும் இருண்மையே விரவியிருக்கிறது என்பதையே சுட்டுகிறது. துயர இசை படமெங்கும் ஒலிக்கும் ஊழி ஈழத்தின் இருண்ட சமகாலம் குறித்த முகாரி ராகம். சினிமாவைப் பிரச்சாரமாக அல்லாமல், கலையாக அணுகும் அக்கறையுள்ள ஒருவர் ரஞ்ஜித் ஜோசப் என்பதை ஊழி மெய்ப்பிக்கிறது. நேர்மறை எதிர்மறை சமநிலை அலசல் விமர்சனத்திற்கு இது தருணம் அல்ல. பலரும் படத்தைப் பார்த்தபின் அதனைச் செய்யலாம் எனக் கருதுகிறேன். யமுனா ராஜேந்திரன் Yamuna Rajendran1 pointImportant Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.